حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا مَنْصُورٌ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَمَّنْ حَلَقَ قَبْلَ أَنْ يَذْبَحَ وَنَحْوِهِ. فَقَالَ لاَ حَرَجَ، لاَ حَرَجَ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(ஹஜ்ஜின் கிரியைகளில்) பலிப்பிராணியை அறுப்பதற்கு முன்பே தலையை மழித்துக்கொண்டவர் பற்றியும், இது போன்ற (கிரியைகளின் வரிசை மாற்றங்கள்) குறித்தும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "குற்றமில்லை; குற்றமில்லை" என்று பதிலளித்தார்கள்.