(அபூ சலமா வழியாக அறிவிக்கும் முஹம்மத் பின் அம்ர் கூறுகிறார்:) நான் இதை ஃபாத்திமா பின்த் கைஸ் அவர்களின் வாயிலிருந்து நேரடியாக எழுதிக்கொண்டேன். அவர் கூறினார்: 'நான் பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன். அவர் என்னை (திரும்பப் பெற முடியாதவாறு) அறுதியிட்டு தலாக் கூறிவிட்டார். ஆகவே, நான் ஜீவனாம்சம் கேட்டு அவருடைய குடும்பத்தாருக்கு ஆளனுப்பினேன்.'