இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1896 dஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ،
عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي سَعِيدٍ، مَوْلَى الْمَهْرِيِّ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ،
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ إِلَى بَنِي لَحْيَانَ ‏"‏ لِيَخْرُجْ مِنْ كُلِّ رَجُلَيْنِ رَجُلٌ
‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ لِلْقَاعِدِ ‏"‏ أَيُّكُمْ خَلَفَ الْخَارِجَ فِي أَهْلِهِ وَمَالِهِ بِخَيْرٍ كَانَ لَهُ مِثْلُ نِصْفِ أَجْرِ
الْخَارِجِ ‏"‏ ‏.‏
அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ லிஹ்யான் கூட்டத்தாரிடம் (ஒரு படையை) அனுப்பினார்கள். "ஒவ்வொரு இரண்டு ஆண்களிலிருந்தும் ஒருவர் புறப்படட்டும்" என்று கூறினார்கள். பிறகு (போருக்குச் செல்லாமல்) தங்கியிருந்தவர்களிடம், "உங்களில் எவர் (போருக்குப்) புறப்பட்டுச் சென்றவருக்குப் பகரமாக அவருடைய குடும்பத்தையும் செல்வத்தையும் நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறாரோ, அவருக்குப் புறப்பட்டுச் சென்றவர் பெறும் நன்மையில் பாதியளவுக்கு நிகரானது கிடைக்கும்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح