`அப்துல்லாஹ் பின் அம்ர்` (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "நான் ஜிஹாதில் பங்கேற்கலாமா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உமக்கு பெற்றோர்கள் இருக்கிறார்களா?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "ஆம்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "அப்படியாயின், அவ்விருவரிட(த்திற்குப் பணிவிடை செய்வத)லிலேயே நீர் ஜிஹாத் செய்வீராக" என்றார்கள்.