இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4653ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ السُّلَمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ أَخْبَرَنِي الزُّبَيْرُ بْنُ خِرِّيتٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ ‏{‏إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ‏}‏ شَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ حِينَ فُرِضَ عَلَيْهِمْ أَنْ لاَ يَفِرَّ وَاحِدٌ مِنْ عَشَرَةٍ، فَجَاءَ التَّخْفِيفُ فَقَالَ رالآنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضُعْفًا فَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ‏}‏‏.‏ قَالَ فَلَمَّا خَفَّفَ اللَّهُ عَنْهُمْ مِنَ الْعِدَّةِ نَقَصَ مِنَ الصَّبْرِ بِقَدْرِ مَا خُفِّفَ عَنْهُمْ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

'(முஸ்லிம்களான) உங்களில் உறுதியுள்ள இருபது பேர் இருந்தால், அவர்கள் (முஸ்லிம் அல்லாதவர்களில்) இருநூறு பேரை வெல்வார்கள்.' என்ற வசனம் வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்பட்டபோது, ஒரு முஸ்லிம் (போரில்) பத்து (முஸ்லிம் அல்லாதவர்களுக்கு) முன் புறமுதுகிட்டு ஓடக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டதால் அது முஸ்லிம்களுக்குக் கடினமாக இருந்தது. எனவே அல்லாஹ், '(ஆனால்) இப்பொழுது அல்லாஹ் உங்கள் (பணியை) இலகுவாக்கியுள்ளான், ஏனெனில் உங்களில் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் நூறு பேர் உறுதியுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் (இருநூறு (முஸ்லிம் அல்லாதவர்களை)) வெல்வார்கள்.' (8:66) என்பதை வஹீ (இறைச்செய்தி)யாக அருளியதன் மூலம் அந்த உத்தரவை இலகுவாக்கினான். எனவே முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டிய எதிரிகளின் எண்ணிக்கையை அல்லாஹ் குறைத்தபோது, அவர்களது பணி அவர்களுக்கு இலகுவாக்கப்பட்ட அளவுக்கு எதிரிக்கு எதிரான அவர்களின் பொறுமையும் உறுதியும் குறைந்தது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح