இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் வேதத்தின்படி (குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) ஃபராயிள் உடையவர்களுக்கு (பாகம் நிர்ணயிக்கப்பட்ட வாரிசுகளுக்கு) மத்தியில் செல்வத்தைப் பங்கிடுங்கள். ஃபராயிள் உடையவர்களின் பங்குகள் போக மீதமிருப்பவை, மிக நெருங்கிய ஆண் வாரிசுக்குச் (அஸபாவுக்கு) சேரும்."