இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
பனூ அந்நதீர் மற்றும் பனூ குறைழா ஆகியோர் போரிட்டனர். எனவே நபி (ஸல்) அவர்கள் பனூ அந்நதீரையும் நாடு கடத்தினார்கள்; பனூ குறைழா கிளையினர் (மீண்டும்) போரிடும் வரையில், அவர்களை (நாடு கடத்தாமல்) அங்கேயே இருக்கச் செய்து, அவர்களுக்குக் கருணை காட்டினார்கள். (இறுதியில் அவர்களும்) போரிட்டபோது, அவர்களுடைய ஆண்களைக் கொன்றார்கள்; அவர்களுடைய பெண்களையும், பிள்ளைகளையும், உடைமைகளையும் முஸ்லிம்களிடையே பங்கிட்டார்கள். அவர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்துகொண்டதைத் தவிர; அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்பு அளித்தார்கள்; அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். (மேலும்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்த யூதர்கள் அனைவரையும் நாடு கடத்தினார்கள். அவர்கள்: பனூ கைனுகா கூட்டத்தினர் -இவர்கள் அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரழி) அவர்களின் குலத்தாராவர்-, பனூ ஹாரிஸா யூதர்கள் மற்றும் மதீனாவிலிருந்த ஏனைய யூதர்கள் அனைவரும் ஆவர்.
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا وَقَالَ، إِسْحَاقُ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّالله عليه وسلم فَأَجْلَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَنِي النَّضِيرِ وَأَقَرَّ قُرَيْظَةَ وَمَنَّ عَلَيْهِمْ حَتَّى حَارَبَتْ قُرَيْظَةُ بَعْدَ ذَلِكَ فَقَتَلَ رِجَالَهُمْ وَقَسَمَ نِسَاءَهُمْ وَأَوْلاَدَهُمْ وَأَمْوَالَهُمْ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ أَنَّ بَعْضَهُمْ لَحِقُوا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَآمَنَهُمْ وَأَسْلَمُوا وَأَجْلَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَهُودَ الْمَدِينَةِ كُلَّهُمْ بَنِي قَيْنُقَاعَ - وَهُمْ قَوْمُ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ - وَيَهُودَ بَنِي حَارِثَةَ وَكُلَّ يَهُودِيٍّ كَانَ بِالْمَدِينَةِ .
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
பனூ நளீர் மற்றும் பனூ குறைழா யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராகப் போரிட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ நளீரை வெளியேற்றினார்கள்; பனூ குறைழாவினரை அங்கேயே தங்க அனுமதித்து, அவர்கள் தங்களுக்கு எதிராகப் போரிடும் வரை அவர்களுக்குக் கருணை காட்டினார்கள். பின்னர் (அவர்கள் போரிட்டபோது), அவர்களின் ஆண்களைக் கொன்று, அவர்களின் பெண்களையும், குழந்தைகளையும், உடைமைகளையும் முஸ்லிம்களிடையே பங்கிட்டார்கள். அவர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து கொண்டதைத் தவிர. அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாதுகாப்பு அளித்தார்கள்; அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். (இறுதியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த யூதர்கள் அனைவரையும் வெளியேற்றினார்கள். அவர்கள்: அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களின் கூட்டத்தாரான பனூ கைனுகா, பனூ ஹாரிதா யூதர்கள் மற்றும் மதீனாவில் இருந்த மற்ற எல்லா யூதர்களுமாவர்.