ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்-கந்தக் 1 அன்று, குறைஷி மனிதன் ஒருவன் ஸஅத் (ரழி) அவர்களின் புஜத்தின் நடு நரம்பில் அம்பெய்தியதால் அவர்கள் காயமடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை அருகிலிருந்து நலம் விசாரிக்க வசதியாக மஸ்ஜிதில் அவருக்காக ஒரு கூடாரத்தை (கைமா) அமைத்தார்கள்."
1 அல்-கந்தக் என்பதன் பொருள் அகழி ஆகும். இது ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டில் நடைபெற்ற அகழ்ப்போரைக் குறிக்கிறது.