அபூ மூஸா (ரலி) அவர்கள் மயக்கமடைந்தார்கள். அப்போது அவர்களுடைய ‘உம்மு வலத்’ (அடிமைப் பெண்) ஒருவர் அழுதார். அவர்கள் மயக்கம் தெளிந்தபோது அந்தப் பெண்ணிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது உனக்கு எட்டவில்லையா?” என்று கேட்டார்கள். எனவே நாங்கள் அப்பெண்ணிடம் (அது குறித்துக்) கேட்டோம். அதற்கு அவர் கூறினார்: “(துக்கத்திற்காகச் சப்தமிட்டு) அழுபவரும், (தலையை) மழித்துக்கொள்பவரும், (ஆடையைக்) கிழித்துக்கொள்பவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர் (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்).”