அப்துல் வாஹித் பின் ஹம்ஸாவிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது, அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்-ஸுபைர் அவர்கள் தன்னிடம் ஆயிஷா (ரழி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் பின் பைளா (ரழி) அவர்களின் ஜனாஸா தொழுகையை மஸ்ஜிதிற்குள் அன்றி வேறு எங்கும் தொழவில்லை” என்று கூறியதாகத் தெரிவித்தார்கள்.