وعنه عن النبي صلى الله عليه وسلم الله عليه وسلمى الله عليه وسلم الله عليه وسلم في الصلاة علي الجنازة: “اللهم أنت ربها، وأنت خلقتها، وأنت هديتها للإسلام، وأنت قبضت روحها، وأنت أعلم بسرها وعلانيتها، جئناك شفعاء له، فاغفر له” ((رواه أبو داود)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பிரார்த்தனை செய்தார்கள்: "அல்லாஹும்ம அன்த ரப்புஹா, வ அன்த கலஃக்தஹா, வ அன்த ஹதய்தஹா லில்-இஸ்லாம், வ அன்த கபள்த்த ரூஹஹா, வ அன்த அஃலமு பிஸிர்ரிஹா வ அலானிய்யதிஹா, ஜிஃனாக ஷுஃபஆஅ லஹு இறந்தவர் ஆணாக இருந்தால் அல்லது இறந்தவர் பெண்ணாக இருந்தால் லஹா, ஃபஃக்ஃபிர் லஹு அல்லது லஹா, அவர் பெண்ணாக இருந்தால் (யா அல்லாஹ், நீயே அதன் இரட்சகன்; நீயே அதைப் படைத்தாய்; நீயே அதற்கு இஸ்லாத்தின் பால் வழிகாட்டினாய்; நீயே அதன் உயிரைக் கைப்பற்றினாய்; அதன் இரகசியத்தையும் வெளிப்படையான நிலையையும் நீயே நன்கறிந்தவன். நாங்கள் அவனுக்காகப் பரிந்துரைப்பவர்களாக உன்னிடம் வந்துள்ளோம், எனவே, அவனை மன்னிப்பாயாக)."