அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் நபி (ஸல்) அவர்களிடம், 'தங்களின் பெரிய தந்தையாகிய, வழிதவறிய அந்த முதியவர் இறந்துவிட்டார். அவரை யார் அடக்கம் செய்வார்?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீர் சென்று உமது தந்தையை அடக்கம் செய்வீராக, பிறகு என்னிடம் வரும் வரை வேறு எதையும் செய்யாதீர்' என்று கூறினார்கள். ஆகவே, நான் அவரை அடக்கம் செய்துவிட்டு வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை குஸ்ல் செய்யுமாறு கூறி, எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். மேலும் அவர்கள் ஒரு பிரார்த்தனையைக் குறிப்பிட்டார்கள், அது எனக்கு நினைவில் இல்லை."