இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1542 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ، بِشْرٍ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُزَابَنَةِ بَيْعِ ثَمَرِ النَّخْلِ بِالتَّمْرِ كَيْلاً وَبَيْعِ الْعِنَبِ بِالزَّبِيبِ كَيْلاً وَبَيْعِ الزَّرْعِ بِالْحِنْطَةِ كَيْلاً ‏.‏
அப்துல்லாஹ் (இப்னு உமர்) (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘முஸாபனா’வைத் தடை செய்தார்கள். (முஸாபனா என்பது) மரத்திலுள்ள (பசுமையான) பேரீச்சம்பழங்களை (உலர்ந்த) பேரீச்சம்பழங்களுக்குப் பகரமாக அளவின் அடிப்படையில் விற்பதும், திராட்சைப் பழங்களை உலர்ந்த திராட்சைகளுக்குப் பகரமாக அளவின் அடிப்படையில் விற்பதும், (வயலிலுள்ள) பயிரைக் கோதுமைக்குப் பகரமாக அளவின் அடிப்படையில் விற்பதும் ஆகும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح