حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ دَاوُدَ بْنِ حُصَيْنٍ، عَنْ أَبِي سُفْيَانَ، مَوْلَى أَبِي أَحْمَدَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْعِ الْعَرَايَا بِخَرْصِهَا مِنَ التَّمْرِ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ أَوْ فِي خَمْسَةِ أَوْسُقٍ، شَكَّ دَاوُدُ فِي ذَلِكَ.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஐந்து ‘அவ்சுக்’குகளுக்குக் குறைவாகவோ அல்லது ஐந்து ‘அவ்சுக்’குகள் என்ற அளவிலோ, ‘அரயா’ (மரத்திலுள்ள) பேரீச்சம்பழங்களை காய்ந்த பேரீச்சம்பழங்களுக்குப் பகரமாக மதிப்பிட்டு விற்பனை செய்ய அனுமதியளித்தார்கள்.
(இவ்விரண்டில் எது என்பதில் அறிவிப்பாளர்) தாவூத் அவர்களுக்குச் சந்தேகம் இருந்தது.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஐந்து வஸ்க்குகளுக்கும் குறைவான அல்லது ஐந்து வஸ்க்குகள் வரையிலான, மதிப்பீட்டின் அடிப்படையிலான 'அராயா' விற்பனைக்கு விலக்களித்ததாக அறிவித்தார்கள். (அறிவிப்பாளர் தாவூத் அவர்கள், அது ஐந்து வஸ்க்குகளா அல்லது ஐந்துக்கும் குறைவானதா என்பதில் சந்தேகப்படுகிறார்கள்).