இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உலர் திராட்சைகள் தண்ணீரில் ஊறவைக்கப்படும். அதை அவர்கள் (ஸல்) அன்றைய தினமும், மறுநாளும், மூன்றாம் நாள் மாலை வரையிலும் குடிப்பார்கள். பின்னர், அவர்கள் (ஸல்) அதை, (மற்றவர்கள்) அருந்துமாறும் அல்லது கொட்டிவிடுமாறும் உத்தரவிடுவார்கள்.