இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்கு இரவு உணவு (முன்)வைக்கப்பட்டு, தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டுவிட்டால், இரவு உணவைக் கொண்டே (முதலில்) ஆரம்பியுங்கள். அதை (முழுமையாக) முடிக்கும் வரை அவசரப்பட வேண்டாம்."
இப்னு உமர் (ரழி) அவர்களுக்கு உணவு (முன்)வைக்கப்பட்டு, தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால், இமாம் ஓதுவதை அவர்கள் செவியுற்றுக் கொண்டிருந்தாலும், (உணவை) முடிக்கும் வரை தொழுகைக்கு வரமாட்டார்கள்.
இப்னு உமர் (ரழி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு இரவு உணவு பரிமாறப்படும்போதும், தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும்போதும், (அத்தகைய நிலையில்) முதலில் இரவு உணவை உண்ணுங்கள், மேலும் நீங்கள் (உணவை) உண்டு முடிக்கும் வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்.