"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவருக்கு இரவு உணவு பரிமாறப்பட்டு, (தொழுகைக்கு) இகாமத்தும் சொல்லப்பட்டுவிட்டால், இரவு உணவைக் கொண்டே ஆரம்பியுங்கள்; அதை முடிக்கும் வரை அவசரப்பட வேண்டாம்.'"
இப்னு உமர் (ரழி) அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால், இமாம் ஓதுவதை அவர்கள் செவியுற்றுக் கொண்டிருந்தாலும், உணவை முடிக்கும் வரை தொழுகைக்கு வரமாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு இரவு உணவு பரிமாறப்படும்போதும், தொழுகையும் ஆரம்பமாகும்போது, (அத்தகைய நிலையில்) முதலில் இரவு உணவை உண்ணுங்கள், மேலும் நீங்கள் (உணவை) உண்டு முடிக்கும் வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்.