அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் ஆடைகளில் வெண்ணிற ஆடைகளை (அணியப்) பயன்படுத்துங்கள், ஏனெனில் அவை உங்கள் ஆடைகளில் சிறந்தவையாகும். மேலும், அவற்றில் உங்கள் இறந்தவர்களையும் கஃபனிடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் சுர்மா வகைகளில் மிகச் சிறந்தது இத்மித் (அஞ்சனக்கல்) ஆகும். ஏனெனில் அது பார்வையைத் தெளிவாக்கி, (கண்) முடிகளை வளரச் செய்யும்.