இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4061சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ فَإِنَّهَا خَيْرُ ثِيَابِكُمْ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ وَإِنَّ خَيْرَ أَكْحَالِكُمُ الإِثْمِدُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வெண்ணிற ஆடைகளை அணியுங்கள், ஏனெனில் அவை உங்கள் ஆடைகளில் சிறந்தவையாகும். மேலும், அவற்றில் உங்கள் இறந்தவர்களையும் கஃபனிடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் சுர்மா வகைகளில் மிகச் சிறந்தது இத்மித் (அஞ்சனக்கல்) ஆகும். ஏனெனில் அது பார்வையைத் தெளிவாக்கி, (இமை) முடிகளை வளரச் செய்யும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)