என் சகோதரர் தன் செல்வத்தில் ஒரு பகுதியை (தர்மம் செய்யுமாறு) என்னிடம் வஸிய்யத் செய்தார். எனவே நான் அபுத் தர்தா (ரழி) அவர்களைச் சந்தித்துக் கூறினேன்: "என் சகோதரர் தன் செல்வத்தில் ஒரு பகுதியை என்னிடம் வஸிய்யத் செய்துள்ளார். அதை நான் எதில் சேர்ப்பது (சிறந்தது) என்று நீங்கள் கருதுகிறீர்கள்? ஏழைகளுக்கா, தேவையுடையோருக்கா அல்லது அல்லாஹ்வின் பாதையில் உள்ள முஜாஹித்களுக்கா?" அதற்கு அவர்கள் கூறினார்கள்: "என்னைப் பொறுத்தவரை, நான் (உங்கள் இடத்தில்) இருந்தால் முஜாஹித்களுக்கு (வேறெவரையும்) நிகராகக் கருத மாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் செவியுற்றுள்ளேன்: 'மரணத் தறுவாயில் (ஓர் அடிமையை) விடுதலை செய்பவரின் உதாரணம், வயிறு நிரம்பிய பின் அன்பளிப்புச் செய்பவரின் உதாரணத்தைப் போன்றதாகும்.'"