அல்-மிஸ்வர் பின் மக்ரமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் ஒரு கனமான கல்லைச் சுமந்துகொண்டு (ஓரிடத்திற்கு) வந்தேன். என் மீது ஒரு மெல்லிய கீழாடை இருந்தது. அப்போது என் கீழாடை அவிழ்ந்துவிட்டது. என்னிடம் அந்தக் கல் இருந்ததால், அதை உரிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் வரை என்னால் அதை கீழே வைக்க முடியவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது ஆடைக்குத் திரும்பிச் சென்று, அதை எடுத்துக்கொள்வீராக! நிர்வாணமாக நடக்காதீர்கள்" என்று கூறினார்கள்.