அபூ தர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்: எதைக் கொடுத்தாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்காத கொடையாளி, பொய் சத்தியம் செய்து தனது பொருட்களை விற்பனை செய்பவர், மற்றும் தனது கீழாடையைக் கணுக்காலுக்குக் கீழே இறக்கிக் கட்டியவர்.