حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَعَمْرَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبُعِ دِينَارٍ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கால் தீனார் (அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருளை) திருடியதற்காக திருடனின் கை துண்டிக்கப்பட வேண்டும்."
ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கும் அதிகமான பெறுமானத்திற்காக அன்றி திருடனின் கை வெட்டப்படக்கூடாது.
ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கும் மேற்பட்ட (மதிப்புக்காக) அன்றி திருடனின் கை வெட்டப்படக்கூடாது.
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا .
ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: "கால் தீனார் அல்லது அதற்கும் அதிகமான (மதிப்புள்ள பொருளைத் திருடியதற்காக) திருடனின் கை துண்டிக்கப்பட வேண்டும்."
ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:
"கால் தீனார் அல்லது அதற்கும் அதிகமான (மதிப்புள்ள பொருளுக்காக) திருடனின் கை துண்டிக்கப்பட வேண்டும்."
ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அறிவித்தார்கள்:
"கால் தீனார் அல்லது அதற்கு மேற்பட்ட (மதிப்புள்ள பொருளைத் திருடினாலேயன்றி), திருடனின் கை துண்டிக்கப்படாது."
ஆயிஷா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
"ஒரு கேடயம் அல்லது அதன் மதிப்புக்குச் சமமானதைத் தவிர (வேறு எதற்காகவும் திருடனின்) கை துண்டிக்கப்படக் கூடாது."
சுலைமான் பின் யஸார் அவர்கள் கூறினார்கள்: 'ஐந்து (விரல்கள் கொண்ட கை) ஐந்து (தினார் அல்லது அதற்குச் சமமான மதிப்புள்ள பொருளைத் திருடியதற்காக) அன்றி துண்டிக்கப்படாது.'
ஹம்மாம் அவர்கள் கூறினார்கள்: 'நான் அப்துல்லாஹ் அத்-தானஜ் அவர்களைச் சந்தித்தேன், சுலைமான் பின் யஸார் அவர்கள், 'ஐந்து (விரல்கள் கொண்ட கை) ஐந்து (தினார் அல்லது அதற்குச் சமமான மதிப்புள்ள பொருளைத் திருடியதற்காக) அன்றி துண்டிக்கப்படாது' என்று கூறியதாக அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.'
ஐமன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு கேடயத்தின் விலைக்காக திருடனின் (கை) துண்டிக்கப்பட வேண்டும். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு கேடயத்தின் விலை ஒரு தீனாராக அல்லது பத்து திர்ஹம்களாக இருந்தது.