அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர், 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை எங்கே இருக்கிறார்?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நரகத்தில்' என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது, அவரை (நபி (ஸல்) அவர்கள்) அழைத்து, 'நிச்சயமாக என் தந்தையும் உங்கள் தந்தையும் நரகத்தில் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள்.