وعن أم المؤمنين صفية بن حيي رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم معتكفاً، فأتيته أزوره ليلاً، فحدثته ثم قمت لأنقلب، فقام معي ليقلبني، فمر رجلان من الأنصار رضي الله عنهما ، فلما رأيا النبي صلى الله عليه وسلم أسرعا، فقال صلى الله عليه وسلم : على رسلكما إنها صفية بنت حيي فقالا: سبحان الله يا رسول الله! :"إن الشيطان يجري من ابن آدم مجرى الدم، وإني خشيت أن يقذف في قلوبكما شراً أو قال: شيئاً” ((متفق عليه)).
நம்பிக்கையாளர்களின் அன்னையான ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃபில் இருந்தபோது, நான் இரவில் அவர்களைச் சந்திக்க வந்தேன். அவர்களுடன் பேசிய பிறகு, நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தேன். நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து, என்னை வழியனுப்புவதற்காக வந்தார்கள். அப்போது அன்சாரித் தோழர்கள் இருவர் அவ்வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவசரப்படாதீர்கள்! இவர் ஹுயையின் மகள் ஸஃபிய்யா" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் குறைகளற்றவன்)! அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுவதைப் போல் ஓடுகின்றான். உங்கள் உள்ளங்களில் அவன் ஏதேனும் தீங்கையோ அல்லது (ஏதேனும்) ஒன்றையோ போட்டு விடுவானோ என்று நான் அஞ்சினேன்" என்று கூறினார்கள்.