அர்ஃபஜா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்: "நிச்சயமாக, (விரைவில்) பல்வேறு குழப்பங்களும் தீமைகளும் தோன்றும். இந்த உம்மத் (சமுதாயம்) ஒன்றுபட்டிருக்கும் நிலையில், எவர் இதன் பொது விவகாரத்தைப் (அதாவது, அதன் ஒற்றுமையையும், தலைமைத்துவத்தையும்) பிரித்துவிட நாடுகிறாரோ - அவர் யாராக இருந்தாலும் சரியே - அவரை வாளால் வெட்டுங்கள்."