حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمِقْدَامِ، - وَهُوَ
ابْنُ شُرَيْحِ بْنِ هَانِئٍ - عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ
صلى الله عليه وسلم قَالَ إِنَّ الرِّفْقَ لاَ يَكُونُ فِي شَىْءٍ إِلاَّ زَانَهُ وَلاَ يُنْزَعُ مِنْ شَىْءٍ إِلاَّ
شَانَهُ .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மென்மையானது எந்தவொன்றில் இருந்தாலும், அது அதற்கு அழகூட்டாமல் இருப்பதில்லை; மேலும், அது எந்தவொன்றிலிருந்து நீக்கப்பட்டாலும், அது அதனை குறைபாடுள்ளதாக்காமல் இருப்பதில்லை.
மிக்தாத் பின் ஷுரைஹ் தனது தந்தையிடமிருந்து அறிவித்தார். நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம், (அல்லாஹ்வை தனிமையில் வணங்குவதற்காக) பாலைவனத்தில் தங்குவது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) இந்த பெருவெள்ள ஓடைகளுக்குச் செல்வார்கள். ஒருமுறை அவர்கள் (அல்லாஹ்வை வணங்குவதற்காக) பாலைவனத்திற்குச் செல்ல நாடினார்கள். அவர்கள், ஸதகா ஒட்டகங்களிலிருந்து, சவாரிக்குப் பழக்கப்படுத்தப்படாத ஒரு பெண் ஒட்டகத்தை எனக்கு அனுப்பினார்கள். என்னிடம், “ஆயிஷா! மென்மையாக இரு. ஏனெனில், மென்மையானது எப்பொருளிலும் அதனை அலங்கரிக்கிறது. அது எப்பொருளிலிருந்தாவது நீக்கப்பட்டுவிட்டால் அதனை அலங்கோலப்படுத்திவிடுகிறது” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் முஸ்லிம், 'அத்திலாஉ' எனும் வாசகம் இன்றி (அல்பானி)