அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக, மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தால் மக்களில் மிகவும் மோசமானவன், தன் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டு, அவளும் அவனுடன் அவ்வாறு உறவு கொண்ட பின்னர், அவளுடைய இரகசியத்தை பரப்பிவிடுபவன் ஆவான்."