ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அவர்களுக்குச் சொந்தமான ஒரு போர்வை திருடப்பட்டது. உடனே அவர்கள் அதைத் திருடியவரை சபிக்கத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அவருக்கு (அவர் செய்த பாவத்தின் சுமையை) இலேசாக்காதீர்கள்."
அபூ தாவூத் அவர்கள் கூறினார்கள்: 'லா தஸ்பிகீ அன்ஹு' (لاَ تُسَبِّخِي عَنْهُ) என்பதற்கு "அவருக்கு (பாவச் சுமையை) இலேசாக்காதீர்கள்" என்று பொருளாகும்.