இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6242ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ ـ أَوْ بِمَشَاقِصَ ـ فَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخْتِلُ الرَّجُلَ لِيَطْعُنَهُ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் எட்டிப் பார்த்தார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் அகன்ற அம்பு முனையைக் (அல்லது பல அகன்ற அம்பு முனைகளைக்) கையில் பிடித்தவாறு அவரை நோக்கி எழுந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மனிதரைக் குத்துவதற்காகப் பதுங்கிச் சென்றதை நான் இப்போதும் காண்பது போன்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6900ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، اطَّلَعَ فِي بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ بِمِشْقَصٍ أَوْ بِمَشَاقِصَ وَجَعَلَ يَخْتِلُهُ لِيَطْعُنَهُ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் எட்டிப் பார்த்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகலமான முனை கொண்ட ஓர் அம்பை (அல்லது பல அம்புகளை) எடுத்துக்கொண்டு அவரை நோக்கி எழுந்தார்கள். அவரைக் குத்துவதற்காக (அவரது கண்ணைக் குத்துவதற்காக) தந்திரமாக சந்தர்ப்பம் பார்த்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2157ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ - وَاللَّفْظُ
لِيَحْيَى وَأَبِي كَامِلٍ - قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ،
اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه
وسلم فَقَامَ إِلَيْهِ بِمِشْقَصٍ أَوْ مَشَاقِصَ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
يَخْتِلُهُ لِيَطْعُنَهُ ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு நபர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் (ஒரு துவாரத்தின் வழியாக) எட்டிப் பார்த்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ஓர் அகலமான அம்பு முனையையோ அல்லது பல அம்பு முனைகளையோ எடுத்துக்கொண்டு அவரை நோக்கிச் சென்றார்கள். (அம்மனிதரைக்) குத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவன் அறியாத விதத்தில்) பதுங்கிச் செயல்படுவதை நான் பார்ப்பதைப் போன்று இருக்கிறது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح