حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَزَلَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ فَلَدَغَتْهُ نَمْلَةٌ، فَأَمَرَ بِجَهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا، ثُمَّ أَمَرَ بِبَيْتِهَا فَأُحْرِقَ بِالنَّارِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فَهَلاَّ نَمْلَةً وَاحِدَةً .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நபிமார்களில் ஒரு நபி (அலை) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, ஓர் எறும்பு அவரைக் கடித்துவிட்டது. ஆகவே, அவர்கள் தமது பயணப் பொருட்களை அம்மரத்தின் கீழிருந்து அகற்றிவிடும்படியும், பிறகு எறும்புகளின் வசிப்பிடத்திற்குத் தீ வைத்துவிடும்படியும் கட்டளையிட்டார்கள்; (அவ்வாறே) அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, '(உம்மைக் கடித்த) ஓர் எறும்பை மட்டும் (நீர் தண்டித்திருக்க) வேண்டாமா?' என்று வஹீ (இறைச்செய்தி) அனுப்பினான்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
"நபிமார்களில் ஒருவர் ஒரு மரத்தின் கீழ் தங்கினார்கள். அப்போது ஓர் எறும்பு அவர்களைக் கடித்தது. உடனே அவர்கள் தங்களது உடைமைகளை அந்த மரத்தின் கீழிருந்து அகற்றுமாறு கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவை (அங்கிருந்து) வெளியேற்றப்பட்டன. பிறகு அவர்கள் (அந்த எறும்புப் புற்றை எரிக்கக்) கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அது எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவர்களுக்கு, '(உங்களைக் கடித்த) அந்த ஓர் எறும்பை மட்டும் (கொன்றிருக்க) கூடாதா?' என்று வஹீ (இறைச்செய்தி) அறிவித்தான்."
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ
هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَزَلَ نَبِيٌّ مِنَ الأَنْبِيَاءِ تَحْتَ شَجَرَةٍ فَلَدَغَتْهُ نَمْلَةٌ فَأَمَرَ
بِجِهَازِهِ فَأُخْرِجَ مِنْ تَحْتِهَا وَأَمَرَ بِهَا فَأُحْرِقَتْ فِي النَّارِ - قَالَ - فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فَهَلاَّ
نَمْلَةً وَاحِدَةً .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நபிமார்களில் ஒரு நபி ஒரு மரத்தின் கீழ் தங்கினார். அப்போது ஓர் எறும்பு அவரைக் கடித்தது. உடனே அவர் தமது பயணப் பொதிகளை மரத்தின் கீழிருந்து அகற்றுமாறு கட்டளையிட்டார்; அவ்வாறே அவை அதனடியில் இருந்து வெளியேற்றப்பட்டன. பிறகு அவர் (அந்த எறும்புப் புற்றை) எரிக்கக் கட்டளையிட்டார்; அவ்வாறே அது நெருப்பிலிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, ‘(உம்மைக் கடித்த) ஓர் எறும்பை மட்டுல்லவா (நீர் தண்டித்திருக்க வேண்டும்)?’ என்று வஹி (இறைச்செய்தி) அறிவித்தான்.”