44. ஸூரத்துத் துகான் (புகை)

மக்கீ, வசனங்கள்: 59

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ
وَالْكِتٰبِஇந்த வேதத்தின் மீது சத்தியமாக!الْمُبِيْنِ  ۛ‌ۙ‏தெளிவான(து)
வல் கிதாBபில் முBபீன்
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةٍ مُّبٰرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِیْنَ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنٰهُஇதை இறக்கினோம்فِىْ لَيْلَةٍஓர் இரவில்مُّبٰـرَكَةٍ‌அருள்நிறைந்த(து)اِنَّاநிச்சயமாக நாம்كُنَّاஇருந்தோம்مُنْذِرِيْنَ‏அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக
இன்னா அன்Zஜல்னாஹு Fபீ லய்லதிம் முBபாரகஹ்; இன்னா குன்னா முன்திரீன்
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
فِیْهَا یُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِیْمٍ ۟ۙ
فِيْهَاஇதில்தான்يُفْرَقُமுடிவு செய்யப்படுகின்றனكُلُّ اَمْرٍஎல்லாக்காரியங்களும்حَكِيْمٍۙ‏ஞானமிக்க(து)
Fபீஹா யுFப்ரகு குல்லு அம்ரின் ஹகீம்
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
اَمْرًا مِّنْ عِنْدِنَا ؕ اِنَّا كُنَّا مُرْسِلِیْنَ ۟ۚ
اَمْرًاகட்டளையின்படிمِّنْ عِنْدِنَا‌ؕநம்மிடமிருந்துاِنَّاநிச்சயமாக நாம்كُنَّاஇருந்தோம்مُرْسِلِيْنَ‌ۚ‏தூதராக அனுப்பக்கூடியவர்களாகவே
அம்ரம் மின் 'இன்தினா; இன்னா குன்னா முர்ஸிலீன்
அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.
رَحْمَةً مِّنْ رَّبِّكَ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟ۙ
رَحْمَةًஓர் அருளாகمِّنْ رَّبِّكَ‌ؕஉமது இறைவனிடமிருந்துاِنَّهٗநிச்சயமாகهُوَஅவன்தான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُۙ‏நன்கறிந்தவன்
ரஹ்மதம் மிர் ரBப்Bபிக்; இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
(அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۘ اِنْ كُنْتُمْ مُّوْقِنِیْنَ ۟
رَبِّஇறைவனாவான்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَا‌ۘஇன்னும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏நீங்கள் உறுதி கொள்பவர்களாக இருந்தால்
ரBப்Bபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா; இன் குன்தும் மூகினீன்
நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).
لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ یُحْیٖ وَیُمِیْتُ ؕ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைيُحْىٖஉயிர்ப்பிக்கின்றான்وَيُمِيْتُ‌ؕஇன்னும் மரணிக்க வைக்கிறான்رَبُّكُمْஉங்கள் இறைவனும்وَرَبُّஇறைவனும்اٰبَآٮِٕكُمُஉங்கள் மூதாதைகளின்الْاَوَّلِيْنَ‏முன்னோர்களான
லா இலாஹ இல்லா ஹுவ யுஹ்யீ வ யுமீது ரBப்Bபுகும் வ ரBப்Bபு ஆBபா'இகுமுல் அவ்வலீன்
அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
بَلْ هُمْ فِیْ شَكٍّ یَّلْعَبُوْنَ ۟
بَلْமாறாகهُمْஅவர்கள்فِىْ شَكٍّசந்தேகத்தில்يَّلْعَبُوْنَ‏விளையாடுகின்றனர்
Bபல் ஹும் Fபீ ஷக்கி(ன்)ய் யல்'அBபூன்
ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
فَارْتَقِبْ یَوْمَ تَاْتِی السَّمَآءُ بِدُخَانٍ مُّبِیْنٍ ۟ۙ
فَارْتَقِبْஆகவே, எதிர்ப்பார்ப்பீராக!يَوْمَநாளைتَاْتِىவருகின்ற(து)السَّمَآءُவானம்بِدُخَانٍபுகையைக் கொண்டுمُّبِيْنٍۙ‏தெளிவான(து)
Fபர்தகிBப் யவ்ம த'திஸ் ஸமா'உ Bபி துகானின் முBபீன்
ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
یَّغْشَی النَّاسَ ؕ هٰذَا عَذَابٌ اَلِیْمٌ ۟
يَغْشَىஅது சூழ்ந்துகொள்ளும்النَّاسَ‌ؕமக்களைهٰذَاஇதுعَذَابٌவேதனையாகும்اَلِيْمٌ‏வலி தரக்கூடிய(து)
யக்ஷன் னாஸ ஹாதா 'அதாBபுன் அலீம்
(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; “இது நோவினை செய்யும் வேதனையாகும்.”
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ ۟
رَبَّنَاஎங்கள் இறைவா!اكْشِفْஅகற்றி விடுவாயாகعَنَّاஎங்களை விட்டுالْعَذَابَவேதனையைاِنَّاநிச்சயமாக நாங்கள்مُؤْمِنُوْنَ‏நம்பிக்கையாளர்கள்
ரBப்Bபனக் ஷிFப் 'அன்னல் 'அதாBப இன்னா மு'மினூன்
“எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்” (எனக் கூறுவர்).
اَنّٰی لَهُمُ الذِّكْرٰی وَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مُّبِیْنٌ ۟ۙ
اَنّٰىஎப்படி?لَهُمُஅவர்களுக்குالذِّكْرٰىநல்லறிவு பெறுவதுوَقَدْதிட்டமாகجَآءَவந்தார்هُمْஅவர்களிடம்رَسُوْلٌஒரு தூதர்مُّبِيْنٌۙ‏தெளிவான(வர்)
அன்னா லஹுமுத் திக்ரா வ கத் ஜா'அஹும் ரஸூலும் முBபீன்
நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.
ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌ ۟ۘ
ثُمَّபிறகுتَوَلَّوْاஅவர்கள் விலகிவிட்டனர்عَنْهُஅவரை விட்டுوَقَالُوْاஇன்னும் , கூறினர்مُعَلَّمٌகற்பிக்கப்பட்டவர்مَّجْنُوْنٌ‌ۘ‏பைத்தியக்காரர்
தும்மா தவல்லவ் 'அன்ஹு வ காலூ மு'அல்லமும் மஜ்னூன்
அவர்கள் அவரை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) “கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்” எனக் கூறினர்.
اِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِیْلًا اِنَّكُمْ عَآىِٕدُوْنَ ۟ۘ
اِنَّاநிச்சயமாக நாம்كَاشِفُواநீக்குவோம்الْعَذَابِஇந்த வேதனையைقَلِيْلًاகொஞ்சம்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்عَآٮِٕدُوْنَ‌ۘ‏திரும்புவீர்கள்
இன்னா காஷிFபுல் 'அதாBபி கலீலா; இன்னகும் 'ஆ'இதூன்
நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.
یَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرٰی ۚ اِنَّا مُنْتَقِمُوْنَ ۟
يَوْمَநாளில்نَبْطِشُதாக்குவோம்الْبَطْشَةَதாக்குதல்الْكُبْـرٰى‌ۚபெரியاِنَّاநிச்சயமாக நாம்مُنْتَقِمُوْنَ‏பழிவாங்குவோம்
யவ்ம னBப்திஷுல் Bபத்ஷ தல் குBப்ரா இன்னா முன்தகிமூன்
ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.
وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُوْلٌ كَرِیْمٌ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகفَتَنَّاசோதித்தோம்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمَமக்களைفِرْعَوْنَஃபிர்அவ்னுடையوَ جَآءَهُمْஅவர்களிடம் வந்தார்رَسُوْلٌஒரு தூதர்كَرِيْمٌۙ‏கண்ணியமான(வர்)
வ லகத் Fபதன்னா கBப்லஹும் கவ்ம Fபிர்'அவ்ன வ ஜா'அஹும் ரஸூலுன் கரீம்
அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.
اَنْ اَدُّوْۤا اِلَیَّ عِبَادَ اللّٰهِ ؕ اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اَنْ اَدُّوْۤاஒப்படைத்துவிடுங்கள்!اِلَىَّஎன்னிடம்عِبَادَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் அடியார்களைاِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குرَسُوْلٌதூதர்اَمِيْنٌۙ‏நம்பிக்கைக்குரிய(வர்)
அன் அத்தூ இலய்ய 'இBபாதல் லாஹி இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
அவர் (கூறினார்:) “என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
وَّاَنْ لَّا تَعْلُوْا عَلَی اللّٰهِ ؕ اِنِّیْۤ اٰتِیْكُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۚ
وَّاَنْ لَّا تَعْلُوْاஅழிச்சாட்டியம் செய்யாதீர்கள்عَلَى اللّٰهِ‌ۚஅல்லாஹ்விற்கு முன்اِنِّىْۤநிச்சயமாக நான்اٰتِيْكُمْஉங்களிடம் வருவேன்بِسُلْطٰنٍஆதாரத்தைக் கொண்டுمُّبِيْنٍ‌ۚ‏தெளிவான(து)
வ அல் லா தஃலூ 'அலல் லாஹி இன்னீ ஆதீகும் Bபிஸுல்தானிம் முBபீன்
அன்றியும், “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.
وَاِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ اَنْ تَرْجُمُوْنِ ۟ؗ
وَاِنِّىْநிச்சயமாக நான்عُذْتُபாதுகாவல் தேடினேன்بِرَبِّىْஎனது இறைவனிடம்وَرَبِّكُمْஇன்னும் உங்கள் இறைவனிடம்اَنْ تَرْجُمُوْنِ ۚநீங்கள் என்னை கொல்வதில் இருந்து
வ இன்னீ 'உத்து Bபி ரBப்Bபீ வ ரBப்Bபிகும் அன் தர்ஜுமூன்
அன்றியும், “என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِیْ فَاعْتَزِلُوْنِ ۟
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِىْநீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்فَاعْتَزِلُوْنِ‏என்னை விட்டு விலகிவிடுங்கள்
வ இல் லம் து'மினூ லீ FபஃதZஜிலூன்
“மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்).
فَدَعَا رَبَّهٗۤ اَنَّ هٰۤؤُلَآءِ قَوْمٌ مُّجْرِمُوْنَ ۟
فَدَعَاஅவர் அழைத்தார்رَبَّهٗۤதனது இறைவனைاَنَّநிச்சயமாகهٰۤؤُلَاۤءِஇவர்கள்قَوْمٌமக்கள்مُّجْرِمُوْنَ‏‏குற்றம் செய்கின்றவர்கள்
Fபத'ஆ ரBப்Bபஹூ அன்ன ஹா'உலா'இ கவ்மும் முஜ்ரிமூன்
(அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). “நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்” என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
فَاَسْرِ بِعِبَادِیْ لَیْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟ۙ
فَاَسْرِநீங்கள் அழைத்துச் செல்லுங்கள்بِعِبَادِىْஎன் அடியார்களைلَيْلًاஇரவில்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مُّتَّبَعُوْنَۙ‏பின்தொடரப்படுவீர்கள்
Fப அஸ்ரி Bபி'இBபாதீ லய்லன் இன்னகும் முத்தBப'ஊன்
“என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” (என்று இறைவன் கூறினான்.)
وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ؕ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ ۟
وَاتْرُكِவிட்டுவிடுங்கள்!الْبَحْرَகடலைرَهْوًا‌ؕஅமைதியாகاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்جُنْدٌராணுவம்مُّغْرَقُوْنَ‏மூழ்கடிக்கப்படுகின்ற
வத்ருகில் Bபஹ்ர ரஹ்வன் இன்னஹும் ஜுன்தும் முக்ரகூன்
“அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி” இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).
كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
كَمْஎத்தனையோتَرَكُوْاவிட்டுச் சென்றார்கள்مِنْ جَنّٰتٍதோட்டங்களையும்وَّعُيُوْنٍۙ‏ஊற்றுகளையும்
கம் தரகூ மின் ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?
وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ
وَّزُرُوْعٍவிவசாய நிலங்களையும்وَّمَقَامٍஇடங்களையும்كَرِيْمٍۙ‏கண்ணியமான
வ Zஜுரூ'இ(ன்)வ் வ மகா மின் கரீம்
இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).
وَّنَعْمَةٍ كَانُوْا فِیْهَا فٰكِهِیْنَ ۟ۙ
وَّنَعْمَةٍவசதிகளையும்كَانُوْاஇருந்த(னர்)فِيْهَاஅவற்றில்فٰكِهِيْنَۙ‏இன்புற்றவர்களாக
வ னஃமதின் கானூ Fபீஹா Fபாகிஹீன்
இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).
كَذٰلِكَ ۫ وَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟
كَذٰلِكَ‌இப்படித்தான்وَاَوْرَثْنٰهَاஇவற்றை சொந்தமாக்கினோம்قَوْمًاமக்களுக்குاٰخَرِيْنَ‏வேறு
கதாலிக வ அவ்ரத்னாஹா கவ்மன் ஆகரீன்
அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.
فَمَا بَكَتْ عَلَیْهِمُ السَّمَآءُ وَالْاَرْضُ وَمَا كَانُوْا مُنْظَرِیْنَ ۟۠
فَمَا بَكَتْஅழவில்லைعَلَيْهِمُஅவர்கள் மீதுالسَّمَآءُவானமும்وَالْاَرْضُபூமியும்وَمَا كَانُوْاஅவர்கள் இருக்கவில்லைمُنْظَرِيْنَ‏தவணைத் தரப்படுபவர்களாக(வும்)
Fபமா Bபகத் 'அலய்ஹிமுஸ் ஸமா'உ வல் அர்ளு வமா கானூ முன்ளரீன்
ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை; (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.  
وَلَقَدْ نَجَّیْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنَ الْعَذَابِ الْمُهِیْنِ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகنَجَّيْنَاநாம் காப்பாற்றினோம்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களைمِنَ الْعَذَابِவேதனையிலிருந்துالْمُهِيْنِۙ‏இழிவுபடுத்தும்
வ லகத் னஜ்ஜய்னா Bபனீ இஸ்ரா'ஈல மினல்'அதாBபில் முஹீன்
நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
مِنْ فِرْعَوْنَ ؕ اِنَّهٗ كَانَ عَالِیًا مِّنَ الْمُسْرِفِیْنَ ۟
مِنْ فِرْعَوْنَ‌ؕஃபிர்அவ்னிடமிருந்துاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்عَالِيًاஅழிச்சாட்டியம் செய்பவனாக(வும்)مِّنَ الْمُسْرِفِيْنَ‏வரம்புமீறிகளில்
மின் Fபிர்'அவ்ன்; இன்னஹூ கான 'ஆலியம் மினல் முஸ்ரிFபீன்
ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்); நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான்.
وَلَقَدِ اخْتَرْنٰهُمْ عَلٰی عِلْمٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۚ
وَلَقَدِ اخْتَرْنٰهُمْதிட்டவட்டமாக அவர்களை நாம் தேர்ந்தெடுத்தோம்عَلٰى عِلْمٍஅறிந்தேعَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏அகிலத்தாரை விட
வ லகதிக் தர்னாஹும் 'அலா 'இல்மின் 'அலல் 'ஆலமீன்
நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.
وَاٰتَیْنٰهُمْ مِّنَ الْاٰیٰتِ مَا فِیْهِ بَلٰٓؤٌا مُّبِیْنٌ ۟
وَاٰتَيْنٰهُمْஅவர்களுக்கு நாம் கொடுத்தோம்مِّنَ الْاٰيٰتِஅத்தாட்சிகளில்مَاஎதுفِيْهِஅதில்بَلٰٓؤٌاசோதனைمُّبِيْنٌ‏தெளிவான(து)
வ ஆதய்னாஹும் மினல் ஆயாதி மா Fபீஹி Bபலா'உம் முBபீன்
அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.
اِنَّ هٰۤؤُلَآءِ لَیَقُوْلُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகهٰٓؤُلَاۤءِஇவர்கள்لَيَقُوْلُوْنَۙ‏கூறுகின்றனர்
இன்ன ஹா'உலா'இ ல யகூலூன்
நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்:
اِنْ هِیَ اِلَّا مَوْتَتُنَا الْاُوْلٰی وَمَا نَحْنُ بِمُنْشَرِیْنَ ۟
اِنْ هِىَஇது இல்லைاِلَّا مَوْتَتُنَاநமது மரணமே தவிரالْاُوْلٰىமுதல்وَمَا نَحْنُஇன்னும் நாங்கள் இல்லைبِمُنْشَرِيْنَ‏எழுப்பப்படுபவர்களாக
இன் ஹிய இல்லா மவ்ததுனல் ஊலா வமா னஹ்னு Bபிமுன் ஷரீன்
“எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை; நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்.”
فَاْتُوْا بِاٰبَآىِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
فَاْتُوْا بِاٰبَآٮِٕنَاۤஎங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்!اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
Fப'தூ Bபி ஆBபா'இனா இன்குன்தும் ஸாதிகீன்
“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்.”
اَهُمْ خَیْرٌ اَمْ قَوْمُ تُبَّعٍ ۙ وَّالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ اَهْلَكْنٰهُمْ ؗ اِنَّهُمْ كَانُوْا مُجْرِمِیْنَ ۟
اَهُمْ خَيْرٌஇவர்கள் சிறந்தவர்களாاَمْ قَوْمُமக்களா?تُبَّعٍۙதுப்பஃ உடையوَّ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕஇன்னும் இவர்களுக்கு முன்னுள்ளவர்களா?اَهْلَكْنٰهُمْ‌அவர்களை நாம் அழித்துவிட்டோம்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்مُجْرِمِيْنَ‏குற்றவாளிகளாக
அஹும் கய்ருன் அம் கவ்மு துBப்Bப'இ(ன்)வ் வல்லதீன மின் கBப்லிஹிம்; அஹ்லக்னாஹும் இன்னஹும் கானூ முஜ்ரிமீன்
இவர்கள் மேலா? அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.
وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ ۟
وَمَا خَلَقْنَاநாம் படைக்கவில்லைالسَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَபூமியையும்وَمَا بَيْنَهُمَاஅவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும்لٰعِبِيْنَ‏விளையாட்டாக
வமா கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்ன ஹுமா லா'இBபீன்
மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.
مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
مَا خَلَقْنٰهُمَاۤஅவ்விரண்டையும் நாம் படைக்கவில்லைاِلَّا بِالْحَقِّஉண்மையான காரணத்திற்கே தவிரوَلٰكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
மா கலக்னாஹுமா இல்லா Bபில்ஹக்கி வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
اِنَّ یَوْمَ الْفَصْلِ مِیْقَاتُهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
اِنَّ يَوْمَ الْفَصْلِநிச்சயமாக தீர்ப்பு நாள்مِيْقَاتُهُمْ اَجْمَعِيْنَۙ‏இவர்கள் அனைவரின் நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்
இன்ன யவ்மல் Fபஸ்லி மீகாதுஹும் அஜ்ம'ஈன்
நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
یَوْمَ لَا یُغْنِیْ مَوْلًی عَنْ مَّوْلًی شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ۙ
يَوْمَஅந்நாளில்لَا يُغْنِىْதடுக்க மாட்டான்مَوْلًىநண்பன்عَنْ مَّوْلًىநண்பனை விட்டுشَيْــٴًــاஎதையும்وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ‏இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
யவ்ம லா யுக்னீ மவ்லன் 'அம் மவ்லன் ஷய்'அ(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
اِلَّاதவிரمَنْஎவர்கள் (மீது)رَّحِمَகருணை புரிந்தான்اللّٰهُ‌ؕஅல்லாஹ்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏மகா கருணையாளன்
இல்லா மர் ரஹிமல் லாஹ்' இன்னஹூ ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
(எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.  
اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِ ۟ۙ
اِنَّ شَجَرَتَநிச்சயமாக மரம்الزَّقُّوْمِۙ‏ஸக்கூம்
இன்ன ஷஜரதZஜ் Zஜக்கூம்
நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
كَالْمُهْلِ ۛۚ یَغْلِیْ فِی الْبُطُوْنِ ۟ۙ
كَالْمُهْلِ ۛۚஉருக்கப்பட்ட செம்பைப் போல் இருக்கும்يَغْلِىْஅது கொதிக்கும்فِى الْبُطُوْنِۙ‏வயிறுகளில்
கல்முஹ்லி யக்லீ Fபில்Bபுதூன்
அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰی سَوَآءِ الْجَحِیْمِ ۟ۗۖ
خُذُوْهُஅவனைப் பிடியுங்கள்!فَاعْتِلُوْهُஅவனை இழுத்து வாருங்கள்!اِلٰى سَوَآءِநடுவில்الْجَحِيْمِ   ‏நரகத்தின்
குதூஹு Fபஃதிலூஹு இலா ஸவா'இல் ஜஹீம்
“அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
ثُمَّ صُبُّوْا فَوْقَ رَاْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِیْمِ ۟ؕ
ثُمَّபிறகுصُبُّوْاஊற்றுங்கள்فَوْقَமேல்رَاْسِهٖஅவனது தலைக்குمِنْ عَذَابِவேதனையைالْحَمِيْمِؕ‏கொதிக்கின்ற நீரின்
தும்ம ஸுBப்Bபூ Fபவ்க ர'ஸிஹீ மின் 'அதாBபில் ஹமீம்
“பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.
ذُقْ ۙۚ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْكَرِیْمُ ۟
ذُقْ ۖۚநீ சுவை!اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْعَزِيْزُகண்ணியமானவன்الْكَرِيْمُ‏மதிப்பிற்குரியவன்
துக் இன்னக அன்தல் 'அZஜீZஜுல் கரீம்
“நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!
اِنَّ هٰذَا مَا كُنْتُمْ بِهٖ تَمْتَرُوْنَ ۟
اِنَّ هٰذَاநிச்சயமாக இதுதான்مَاஎதுكُنْتُمْஇருந்தீர்கள்بِهٖஅதைتَمْتَرُوْنَ‏சந்தேகிப்பவர்களாக
இன்ன ஹாதா மா குன்தும் Bபிஹீ தம்தரூன்
“நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்” (என்று அவர்களிடம் சொல்லப்படும்).
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ مَقَامٍ اَمِیْنٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِيْنَஇறையச்சமுள்ளவர்கள்فِىْ مَقَامٍஇடத்தில்اَمِيْنٍۙ‏பாதுகாப்பான
இன்னல் முத்தகீன Fபீ மகாமின் அமீன்
பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.
فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۚۙ
فِىْ جَنّٰتٍசொர்க்கங்களில்وَّعُيُوْنٍ ۙ ۚ‏இன்னும் ஊற்றுகளில் இருப்பார்கள்
Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).
یَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِیْنَ ۟ۚۙ
يَّلْبَسُوْنَஅணிவார்கள்مِنْ سُنْدُسٍமென்மையான பட்டுوَّاِسْتَبْرَقٍஇன்னும் தடிப்பமான பட்டு ஆடைகளைمُّتَقٰبِلِيْنَۚ ۙ‏ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
யல்Bபஸூன மின் ஸுன்துஸி(ன்)வ் வ இஸ்தBப்ரகிம் முதகாBபிலீன்
ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
كَذٰلِكَ ۫ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟ؕ
كَذٰلِكَஇவ்வாறுதான்وَزَوَّجْنٰهُمْஇன்னும் அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம்بِحُوْرٍவெண்மையான கண்ணிகளைعِيْنٍؕ‏கண்ணழகிகளான
கதாலிக வ Zஜவ்வஜ்னாஹும் Bபிஹூரின் 'ஈன்
இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
یَدْعُوْنَ فِیْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِیْنَ ۟ۙ
يَدْعُوْنَகேட்பார்கள்فِيْهَاஅதில்بِكُلِّஎல்லாفَاكِهَةٍபழங்களையும்اٰمِنِيْنَۙ‏நிம்மதியானவர்களாக
யத்'ஊன Fபீஹா Bபிகுல்லி Fபாகிஹதின் ஆமினீன்
அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.
لَا یَذُوْقُوْنَ فِیْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰی ۚ وَوَقٰىهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟ۙ
لَا يَذُوْقُوْنَசுவைக்க மாட்டார்கள்فِيْهَاஅதில்الْمَوْتَமரணத்தைاِلَّا الْمَوْتَةَமரணத்தை தவிரالْاُوْلٰى‌ ۚமுதல்وَوَقٰٮهُمْஇன்னும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்عَذَابَவேதனையை விட்டும்الْجَحِيْمِۙ‏நரகத்தின்
லா யதூகூன Fபீஹல் மவ்தா இல்லல் மவ்ததல் ஊலா வ வகாஹும் 'அதாBபல் ஜஹீம்
முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
فَضْلًا مِّنْ رَّبِّكَ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
فَضْلًاஅருளினால்مِّنْ رَّبِّكَ ؕஉமது இறைவனின்ذٰ لِكَ هُوَஇதுதான்الْفَوْزُ الْعَظِيْمُ‏மகத்தான வெற்றி
Fபள்லம் மிர் ரBப்Bபிக்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
(இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும்.
فَاِنَّمَا یَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَஇதை நாம் இலேசாக்கினோம்/உமது மொழியில்لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
Fப இன்னமா யஸ்ஸர்னாஹு Bபிலிஸானிக ல'அல்லஹும் யததக்கரூன்
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ ۟۠
فَارْتَقِبْஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராக!اِنَّهُمْநிச்சயமாக அவர்களும்مُّرْتَقِبُوْنَ‏எதிர்பார்க்கின்றார்கள்
Fபர்தகிBப் இன்னஹும் முர்த கிBபூன்
ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.