26. ஸூரத்துஷ்ஷுஃரா(கவிஞர்கள்)

மக்கீ, வசனங்கள்: 227

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ ۟
تِلْكَஇவைاٰيٰتُவசனங்கள்الْكِتٰبِவேதத்தின்الْمُبِيْنِ‏தெளிவான
தில்க ஆயாதுல் கிதாBபில் முBபீன்
இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ اَلَّا یَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟
لَعَلَّكَ بَاخِعٌநீர் அழித்துக் கொள்வீரோ!نَّـفْسَكَஉம்மையேاَلَّا يَكُوْنُوْاஅவர்கள் மாறாததால்مُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொள்பவர்களாக
ல'அல்லக Bபாகி'உன் னFப்ஸக அல்லா யகூனூ மு'மினீன்
(நபியே!) அவர்கள் (அல்லாஹ்வை) விசுவாசம் கொள்பவர்களாக இல்லாததின் காரணமாக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!
اِنْ نَّشَاْ نُنَزِّلْ عَلَیْهِمْ مِّنَ السَّمَآءِ اٰیَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خٰضِعِیْنَ ۟
اِنْ نَّشَاْநாம் நாடினால்نُنَزِّلْநாம் இறக்குவோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துاٰيَةًஒரு அத்தாட்சியைفَظَلَّتْஆகிவிடும்اَعْنَاقُهُمْஅவர்களது கழுத்துகள்لَهَاஅதற்குخٰضِعِيْنَ‏பணிந்தவையாக
இன் னஷா னுனZஜ்Zஜில் 'அலய்ஹிம் மினஸ் ஸமா'இ ஆயதன் Fபளல்லத் அஃனாகுஹும் லஹா காளி'ஈன்
நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
وَمَا یَاْتِیْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِیْنَ ۟
وَمَا يَاْتِيْهِمْஅவர்களிடம் வருவதில்லைمِّنْ ذِكْرٍஅறிவுரை எதுவும்مِّنَ الرَّحْمٰنِரஹ்மானிடமிருந்துمُحْدَثٍபுதிதாகاِلَّا كَانُوْاஅவர்கள் இருந்தே தவிரعَنْهُஅதைمُعْرِضِيْنَ‏புறக்கணிப்பவர்களாக
வமா யாதீஹிம் மின் திக்ரிம் மினர் ரஹ்மானி முஹ்ததின் இல்லா கானூ 'அன்ஹு முஃரிளீன்
இன்னும், அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமலிருப்பதில்லை.
فَقَدْ كَذَّبُوْا فَسَیَاْتِیْهِمْ اَنْۢبٰٓؤُا مَا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
فَقَدْதிட்டமாகكَذَّبُوْاஇவர்கள் பொய்ப்பித்தனர்فَسَيَاْتِيْهِمْஆகவே, அவர்களிடம் விரைவில் வரும்اَنْۢـبٰٓــؤُاசெய்திகள்مَاஎதுكَانُوْاஇருந்தனர்بِهٖஅதைيَسْتَهْزِءُوْنَ‏பரிகாசம் செய்பவர்களாக
Fபகத் கத்தBபூ Fபஸ யாதீஹிம் அம்Bபா'உ மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.
اَوَلَمْ یَرَوْا اِلَی الْاَرْضِ كَمْ اَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِیْمٍ ۟
اَوَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்க வேண்டாமா?اِلَىபக்கம்الْاَرْضِபூமியின்كَمْஎத்தனைاَنْۢبَتْنَاநாம் முளைக்க வைத்தோம்فِيْهَاஅதில்مِنْ كُلِّஎல்லாவற்றிலிருந்தும்زَوْجٍஜோடிகள்كَرِيْمٍ‏அழகிய
அவ லம் யரவ் இலல் அர்ளி கம் அம்Bபத்னா Fபீஹா மின் குல்லி Zஜவ்ஜின் கரீம்
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاٰيَةً‌  ؕஓர் அத்தாட்சிوَّمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
அன்றியும் (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன்; மிக்க கிருபை உடையவன்.
وَاِذْ نَادٰی رَبُّكَ مُوْسٰۤی اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۙ
وَاِذْ نَادٰىஅந்நேரத்தை நினைவு கூருங்கள்! / அழைத்தான்رَبُّكَஉமது இறைவன்مُوْسٰۤىமூசாவைاَنِ ائْتِநீர் வருவீராக!الْقَوْمَமக்களிடம்الظّٰلِمِيْنَۙ‏அநியாயக்காரர்கள்
வ இத் னாதா ரBப்Bபுக மூஸா அனி'-தில் கவ்மள் ளாலிமீன்
உம் இறைவன் மூஸாவிடம் “அநியாயக்கார சமூகத்திடம் செல்க” என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக.)
قَوْمَ فِرْعَوْنَ ؕ اَلَا یَتَّقُوْنَ ۟
قَوْمَமக்களிடம்فِرْعَوْنَ‌ؕஃபிர்அவ்னின்اَلَا يَتَّقُوْنَ‌‏அவர்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா!
கவ்ம Fபிர்'அவ்ன்; அலா யத்தகூன்
“ஃபிர்அவ்னின் சமூகத்தாரிடம்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டார்களா?
قَالَ رَبِّ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّكَذِّبُوْنِ ۟ؕ
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!اِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اَنْ يُّكَذِّبُوْنِؕ‏அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று
கால ரBப்Bபி இன்னீ அகாFபு அய் யுகத்திBபூன்
(இதற்கு அவர்) “என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
وَیَضِیْقُ صَدْرِیْ وَلَا یَنْطَلِقُ لِسَانِیْ فَاَرْسِلْ اِلٰی هٰرُوْنَ ۟
وَيَضِيْقُஇன்னும் நெருக்கடிக்குள்ளாகிவிடும்صَدْرِىْஎன் நெஞ்சம்وَلَا يَنْطَلِقُஇன்னும் பேசாதுلِسَانِىْஎன் நாவுفَاَرْسِلْஆகவே, நீ அனுப்புاِلٰى هٰرُوْنَ‏ஹாரூனுக்கு
வ யளீகு ஸத்ரீ வலா யன்தலிகு லிஸானீ Fப அர்ஸில் இலா ஹாரூன்
“என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது; ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!
وَلَهُمْ عَلَیَّ ذَنْۢبٌ فَاَخَافُ اَنْ یَّقْتُلُوْنِ ۟ۚۖ
وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَلَىَّஎன் மீதுذَنْۢبٌஒருகுற்றம்இருக்கிறதுفَاَخَافُஆகவே, நான் பயப்படுகிறேன்اَنْ يَّقْتُلُوْنِ‌ۚ‏அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று
வ லஹும் 'அலய்ய தம்Bபுன் Fப அகாFபு அய் யக்துலூன்
“மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது; எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்” (என்றும் கூறினார்).
قَالَ كَلَّا ۚ فَاذْهَبَا بِاٰیٰتِنَاۤ اِنَّا مَعَكُمْ مُّسْتَمِعُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்كَلَّا‌ ۚஅவ்வாறல்ல!فَاذْهَبَاநீங்கள் இருவரும் செல்லுங்கள்بِاٰيٰتِنَآ‌எனது அத்தாட்சிகளை கொண்டுاِنَّا مَعَكُمْநிச்சயமாக நாம் உங்களுடன்مُّسْتَمِعُوْنَ‏செவியேற்பவர்களாக
கால கல்லா Fபத்ஹBபா Bபி ஆயாதினா இன்னா ம'அகும் முஸ்தமி'ஊன்
(அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்” எனக் கூறினான்.
فَاْتِیَا فِرْعَوْنَ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
فَاْتِيَاஆகவே, நீங்கள் இருவரும் வாருங்கள்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்فَقُوْلَاۤநீங்கள் இருவரும் கூறுங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்رَسُوْلُதூதராக இருக்கிறோம்رَبِّஇறைவனுடையالْعٰلَمِيْنَۙ‏அகிலங்களின்
Fபாதியா Fபிர்'அவ்ன Fபகூலா இன்னா ரஸூலு ரBப்Bபில் 'ஆலமீன்
ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்: “நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள்.
اَنْ اَرْسِلْ مَعَنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
اَنْ اَرْسِلْநிச்சயமாக அனுப்பிவிடுمَعَنَاஎங்களுடன்بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏இஸ்ரவேலர்களை
அன் அர்ஸில் ம'அனா Bபனீ இஸ்ரா'ஈல்
“எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு!” (எனவும் கூறுங்கள்.)
قَالَ اَلَمْ نُرَبِّكَ فِیْنَا وَلِیْدًا وَّلَبِثْتَ فِیْنَا مِنْ عُمُرِكَ سِنِیْنَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்اَلَمْ نُرَبِّكَநாம் உம்மை வளர்க்கவில்லையா?فِيْنَاஎங்களில்وَلِيْدًاகுழந்தையாகوَّلَبِثْتَஇன்னும் தங்கியிருந்தாய்فِيْنَاஎங்களுடன்مِنْ عُمُرِكَஉமது வாழ்க்கையில்سِنِيْنَۙ‏ஆண்டுகள்
கால அலம் னுரBப்Bபிக Fபீனா வலீத(ன்)வ் வ லBபித்த Fபீனா மின் 'உமுரிக ஸினீன்
(ஃபிர்அவ்ன்) கூறினான்: நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.)
وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِیْ فَعَلْتَ وَاَنْتَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
وَفَعَلْتَஇன்னும் நீ செய்துவிட்டாய்فَعْلَتَكَஉனது செயலைالَّتِىْஎதுفَعَلْتَசெய்தாய்وَاَنْتَநீயோ இருக்கிறாய்مِنَ الْكٰفِرِيْنَ‏நன்றியறியாதவர்களில்
வ Fப'அல்த Fபஃலதகல் லதீ Fப'அல்த வ அன்த மினல் காFபிரீன்
“ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்” (என்றும் கூறினான்).
قَالَ فَعَلْتُهَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّیْنَ ۟ؕ
قَالَஅவர் கூறினார்فَعَلْتُهَاۤஅதை நான் செய்தேன்اِذًاஅப்போதுوَّاَنَاநானோمِنَ الضَّآلِّيْنَؕ‏அறியாதவர்களில்
கால Fப'அல்துஹா இத(ன்)வ் வ அன மினள் ளாலீன்
(மூஸா) கூறினார்: “நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்.
فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِیْ رَبِّیْ حُكْمًا وَّجَعَلَنِیْ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
فَفَرَرْتُநான் ஓடிவிட்டேன்مِنْكُمْஉங்களை விட்டுلَمَّا خِفْتُكُمْஉங்களை நான் பயந்தபோதுفَوَهَبَஆகவே,வழங்கினான்لِىْஎனக்குرَبِّىْஎன் இறைவன்حُكْمًاதூதுவத்தைوَّجَعَلَنِىْஇன்னும் என்னை ஆக்கினான்مِنَ الْمُرْسَلِيْنَ‏தூதர்களில் ஒருவராக
FபFபரர்து மின்கும் லம் மா கிFப்துகும் FபவஹBப லீ ரBப்Bபீ ஹுக்ம(ன்)வ் வ ஜ'அலனீ மினல் முர்ஸலீன்
“ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَیَّ اَنْ عَبَّدْتَّ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
وَتِلْكَஅதுنِعْمَةٌஓர் உபகாரம்தான்تَمُنُّهَاநீ சொல்லிக் காட்டுகின்றாய்/அதைعَلَىَّஎன் மீதுاَنْ عَبَّدْتَّஅடிமையாக்கி வைத்திருக்கிறாய்بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏இஸ்ரவேலர்களை
வ தில்க னிஃமதுன் தமுன் னுஹா 'அலய்ய அன் 'அBப்Bபத்த Bபனீ இஸ்ரா'ஈல்
“பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?”
قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِیْنَ ۟ؕ
قَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்وَمَا رَبُّஇறைவன் யார்?الْعٰلَمِيْنَؕ‏அகிலங்களின்
கால Fபிர்'அவ்னு வமா ரBப்Bபுல் 'ஆலமீன்
அதற்கு ஃபிர்அவ்ன்: “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான்.
قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِیْنَ ۟
قَالَகூறினார்رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَاؕஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّوْقِنِيْنَ‏உறுதிகொள்பவர்களாக
கால ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா இன் குன்தும் மூகினீன்
அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார்.
قَالَ لِمَنْ حَوْلَهٗۤ اَلَا تَسْتَمِعُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்لِمَنْ حَوْلَهٗۤதன்னை சுற்றி உள்ளவர்களிடம்اَلَا تَسْتَمِعُوْنَ‏நீங்கள் செவிமடுக்கிறீர்களா?
கால லிமன் ஹவ்லஹூ அலா தஸ்தமி'ஊன்
தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி: “நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?” என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான்.
قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبُّكُمْஉங்கள் இறைவன்وَرَبُّஇன்னும் இறைவன்اٰبَآٮِٕكُمُஉங்கள் மூதாதைகளின்الْاَوَّلِيْنَ‏முன்னோர்களான
கால ரBப்Bபுகும் வ ரBப்Bபு ஆBபா'இகுமுல் அவ்வலீன்
(அப்பொழுது மூஸா) “உங்களுக்கும் இறைவன்; உங்கள் முன்னவர்களான மூதாதையருக்கும் (அவனே) இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
قَالَ اِنَّ رَسُوْلَكُمُ الَّذِیْۤ اُرْسِلَ اِلَیْكُمْ لَمَجْنُوْنٌ ۟
قَالَஅவன் கூறினான்اِنَّநிச்சயமாகرَسُوْلَـكُمُஉங்கள் தூதர்الَّذِىْۤஎவர்اُرْسِلَஅனுப்பப்பட்டاِلَيْكُمْஉங்களிடம்لَمَجْنُوْنٌ‏கண்டிப்பாக ஒரு பைத்தியக்காரர்
கால இன்ன ரஸூலகுமுல் லதீ உர்ஸில இலய்கும் லமஜ்னூன்
(அதற்கு ஃபிர்அவ்ன்:) “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக் காரரே ஆவார்” எனக் கூறினான்.
قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَیْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبُّஇறைவன்الْمَشْرِقِகிழக்கு திசைوَالْمَغْرِبِஇன்னும் மேற்கு திசைوَمَا بَيْنَهُمَا ؕஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْقِلُوْنَ‏சிந்தித்துபுரிபவர்களாக
கால ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிBபி வமா Bபய்ன ஹுமா இன் குன்தும் தஃகிலூன்
(அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
قَالَ لَىِٕنِ اتَّخَذْتَ اِلٰهًا غَیْرِیْ لَاَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُوْنِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்لَٮِٕنِ اتَّخَذْتَநீர் எடுத்துக் கொண்டால்اِلٰهًاஒரு கடவுளைغَيْرِىْஎன்னைஅன்றிவேறுلَاَجْعَلَـنَّكَஉம்மையும் ஆக்கி விடுவேன்مِنَ الْمَسْجُوْنِيْنَ‏சிறைப்படுத்தப்பட்டவர்களில்
கால ல'இனித் தகத்த இலாஹன் கய்ரீ ல அஜ்'அலன்னக மினல் மஸ்ஜூனீன்
(அதற்கு ஃபிர்அவ்ன்:) “நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்” எனக் கூறினான்.
قَالَ اَوَلَوْ جِئْتُكَ بِشَیْءٍ مُّبِیْنٍ ۟ۚ
قَالَஅவர் கூறினார்اَوَلَوْ جِئْتُكَநான் உம்மிடம் கொண்டு வந்தாலுமா?بِشَىْءٍ مُّبِيْنٍ‌ۚ‏தெளிவான ஒன்றை
கால அவலவ் ஜி'துக Bபிஷய்'இம் முBபீன்
(அதற்கு அவர்) “நான் உனக்குத் தெளிவான (அத்தாட்சிப்) பொருளை கொண்டு வந்தாலுமா?” எனக் கேட்டார்.
قَالَ فَاْتِ بِهٖۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்فَاْتِ بِهٖۤஅதைக் கொண்டுவாரீர்اِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
கால Fபாதி Bபிஹீ இன் குன்த மினஸ் ஸாதிகீன்
“நீர் உண்மையாளராக இருப்பின் அதை நீர் கொண்டு வாரும்” என (ஃபிர்அவ்ன்) பதில் கூறினான்.
فَاَلْقٰی عَصَاهُ فَاِذَا هِیَ ثُعْبَانٌ مُّبِیْنٌ ۟ۚۖ
فَاَ لْقٰىஆகவே அவர் எறிந்தார்عَصَاهُதனது கைத்தடியைفَاِذَاஉடனேهِىَஅதுثُعْبَانٌமலைப் பாம்பாகمُّبِيْنٌ‌ ۖ ۚ‏தெளிவான
Fப அல்கா 'அஸாஹு Fப இதா ஹிய துஃBபானும் முBபீன்
ஆகவே அவர் தம் தடியைக் கீழே எறிந்தார்; அது தெளிவானதொரு மலைப்பாம்பாகி விட்டது.
وَّنَزَعَ یَدَهٗ فَاِذَا هِیَ بَیْضَآءُ لِلنّٰظِرِیْنَ ۟۠
وَّنَزَعَஅவர் வெளியே எடுத்தார்يَدَهٗதனது கையைفَاِذَاஉடனேهِىَஅது ஆகிவிட்டதுبَيْضَآءُவெண்மையாகلِلنّٰظِرِيْنَ‏பார்ப்பவர்களுக்கு
வ னZஜ'அ யதஹூ Fப-இதா ஹிய Bபய்ளா'உ லின்னா ளிரீன்
இன்னும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார்; உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیْمٌ ۟ۙ
قَالَஅவன் கூறினான்لِلْمَلَاِபிரமுகர்களிடம்حَوْلَهٗۤதன்னை சுற்றியுள்ளاِنَّநிச்சயமாகهٰذَاஇவர்لَسٰحِرٌஒரு சூனியக்காரர்தான்عَلِيْمٌۙ‏நன்கறிந்த
கால லில்மல-இ ஹவ்லஹூ இன்ன ஹாதா லஸாஹிருன் 'அலீம்
(ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி “இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே!” என்று கூறினான்.
یُّرِیْدُ اَنْ یُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهٖ ۖۗ فَمَاذَا تَاْمُرُوْنَ ۟
يُّرِيْدُஅவர் நாடுகிறார்اَنْ يُّخْرِجَكُمْஉங்களை வெளியேற்றمِّنْ اَرْضِكُمْஉங்கள் பூமியிலிருந்துبِسِحْرِهٖதனது சூனியத்தால்ۖ  فَمَاذَاஆகவே, என்ன?تَاْمُرُوْنَ‌‏நீங்கள் கருதுகிறீர்கள்
யுரீது அய் யுக்ரிஜகும் மின் அர்ளிகும் Bபிஸிஹ்ரிஹீ Fபமாதா தாமுரூன்
“இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன?” (என்று கேட்டான்.)
قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினர்اَرْجِهْஅவருக்கும் அவகாசம் அளி!وَاَخَاهُஅவரது சகோதரருக்கும்وَابْعَثْஇன்னும் அனுப்புفِى الْمَدَآٮِٕنِநகரங்களில்حٰشِرِيْنَۙ‏அழைத்து வருபவர்கள்
காலூ அர்ஜிஹ் வ அகாஹு வBப்'அத் Fபில்மதா'இனி ஹாஷிரீன்
அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
یَاْتُوْكَ بِكُلِّ سَحَّارٍ عَلِیْمٍ ۟
يَاْتُوْكَஅவர்கள் உன்னிடம் கொண்டு வருவார்கள்بِكُلِّஎல்லோரையும்سَحَّارٍபெரிய சூனியக்காரர்கள்عَلِيْمٍ‏கற்றறிந்தவர்(கள்)
யாதூக Bபிகுல்லி ஸஹ் ஹாரின் 'அலீம்
(அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
فَجُمِعَ السَّحَرَةُ لِمِیْقَاتِ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟ۙ
فَجُمِعَஆகவே, ஒன்று சேர்க்கப்பட்டனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்لِمِيْقَاتِகுறிப்பிட்ட தவணையில்يَوْمٍஒரு நாளின்مَّعْلُوْمٍۙ‏அறியப்பட்ட
Fப ஜுமி'அஸ் ஸஹரது லிமீகாதி யவ்மிம் மஃலூம்
சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.
وَّقِیْلَ لِلنَّاسِ هَلْ اَنْتُمْ مُّجْتَمِعُوْنَ ۟ۙ
وَّقِيْلَகூறப்பட்டதுلِلنَّاسِமக்களுக்குهَلْ اَنْـتُمْ مُّجْتَمِعُوْنَۙ‏நீங்கள் ஒன்று சேருவீர்களா?
வ கீல லின்னாஸி ஹல் அன்தும் முஜ்தமி'ஊன்
இன்னும் மக்களிடம் “(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா?” என்று கேட்கப்பட்டது.
لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ اِنْ كَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟
لَعَلَّنَا نَـتَّبِعُநாம் பின்பற்றலாம்السَّحَرَةَசூனியக்காரர்களைاِنْ كَانُوْا هُمُஅவர்கள் ஆகிவிட்டால்الْغٰلِبِيْنَ‏வெற்றியாளர்களாக
ல'அல்லனா னத்தBபி'உஸ் ஸஹரத இன் கானூ ஹுமுல் காலிBபீன்
ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றக் கூடும் (என்றுங் கூறப்பட்டது).
فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَىِٕنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟
فَلَمَّا جَآءَவந்த போதுالسَّحَرَةُசூனியக்காரர்கள்قَالُوْاகூறினர்لِفِرْعَوْنَஃபிர்அவ்னிடம்اَٮِٕنَّ لَـنَاஎங்களுக்கு உண்டாلَاَجْرًاதிட்டமாக கூலிاِنْ كُنَّاநாங்கள் ஆகிவிட்டால்نَحْنُநாங்கள்الْغٰلِبِيْنَ‏வெற்றியாளர்களாக
Fபலம்மா ஜா'அஸ் ஸஹரது காலூ லி Fபிர்'அவ்ன அ'இன்ன லனா ல அஜ்ஜ்ரன் இன் குன்னா னஹ்னுல் காலிBபீன்
ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லவா ?” என்று கேட்டார்கள்.
قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ الْمُقَرَّبِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்نَعَمْஆம்وَاِنَّكُمْஇன்னும் நிச்சயமாக நீங்கள்اِذًاஅப்போதுلَّمِنَ الْمُقَرَّبِيْنَ‏நெருக்கமானவர்களில்
கால ன'அம் வ இன்னகும் இதல் லமினல் முகர்ரBபீன்
“ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்” என்று அவன் கூறினான்.
قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟
قَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குمُّوْسٰۤىமூசாاَلْقُوْاஎறியுங்கள்مَاۤஎதைاَنْتُمْநீங்கள்مُّلْقُوْنَ‏எறியப் போகிறீர்களோ
கால லஹும் மூஸா அல்கூ மா அன்தும் முல்கூன்
மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்.
فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِیَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَنَحْنُ الْغٰلِبُوْنَ ۟
فَاَلْقَوْاஆகவே, அவர்கள் எறிந்தனர்حِبَالَهُمْதங்கள் கயிறுகளைوَعِصِيَّهُمْஇன்னும் தங்கள் தடிகளைوَقَالُوْاஇன்னும் அவர்கள் கூறினர்بِعِزَّةِகௌரவத்தின் மீது சத்தியமாக!فِرْعَوْنَஃபிர்அவ்னுடையاِنَّا لَـنَحْنُநாங்கள்தான் நிச்சயமாகالْغٰلِبُوْنَ‏வெற்றியாளர்கள்
Fப அல்கவ் ஹிBபாலஹும் வ 'இஸிய்யஹும் வ காலூ Bபி'இZஜ்Zஜதி Fபிர்'அவ்ன இன்னா லனஹ்னுல் காலிBபூன்
ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்” என்று கூறினார்கள்.
فَاَلْقٰی مُوْسٰی عَصَاهُ فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚۖ
فَاَ لْقٰىஆகவே அவர் எறிந்தார்مُوْسٰىமூசாعَصَاهُதனது தடியைفَاِذَاஆகவே, உடனேهِىَஅதுتَلْقَفُவிழுங்கியதுمَا يَاْفِكُوْنَ‌ ۖ ۚ‏அவர்கள் வித்தைகாட்டிய அனைத்தையும்
Fப அல்கா மூஸா 'அஸாஹு Fப இதா ஹிய தல்கFபு மா யாFபிகூன்
பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.
فَاُلْقِیَ السَّحَرَةُ سٰجِدِیْنَ ۟ۙ
فَاُلْقِىَஉடனே, விழுந்தனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்سٰجِدِيْنَۙ‏சிரம் பணிந்தவர்களாக
Fப உல்கியஸ் ஸஹரது ஸாஜிதீன்
(இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்.
قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினர்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِرَبِّஇறைவனைالْعٰلَمِيْنَۙ‏அகிலங்களின்
காலூ ஆமன்னா Bபி ரBப்Bபில் 'ஆலமீன்
அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம்.
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
رَبِّஇறைவனைمُوْسٰىமூஸாوَهٰرُوْنَ‏இன்னும் ஹாரூனுடைய
ரBப்Bபி மூஸா வ ஹாரூன்
“அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.” என்று கூறினர்.
قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ۚ اِنَّهٗ لَكَبِیْرُكُمُ الَّذِیْ عَلَّمَكُمُ السِّحْرَ ۚ فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ؕ۬ لَاُقَطِّعَنَّ اَیْدِیَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُوصَلِّبَنَّكُمْ اَجْمَعِیْنَ ۟ۚ
قَالَஅவன் கூறினான்اٰمَنْتُمْநீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா?لَهٗஅவரைقَبْلَமுன்اَنْ اٰذَنَநான் அனுமதியளிப்பதற்குلَـكُمْ‌ۚஉங்களுக்குاِنَّهٗநிச்சயமாக அவர்لَـكَبِيْرُமூத்தவர்كُمُஉங்கள்الَّذِىْஎவர்عَلَّمَكُمُஉங்களுக்கு கற்பித்தார்السِّحْرَ‌ۚசூனியத்தைفَلَسَوْفَ تَعْلَمُوْنَ ۙஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள்لَاُقَطِّعَنَّதிட்டமாக நான் வெட்டுவேன்اَيْدِيَكُمْஉங்கள் கைகளைوَاَرْجُلَـكُمْஉங்கள் கால்களைمِّنْ خِلَافٍமாறுகை மாறுகால்وَّلَاُصَلِّبَنَّكُمْஇன்னும் உங்களை கழுவேற்றுவேன்اَجْمَعِيْنَ‌ۚ‏அனைவரையும்
கால ஆமன்தும் லஹூ கBப்ல அன் ஆதன லகும் இன்னஹூ லகBபீருகுமுல் லதீ 'அல்ல மகுமுஸ் ஸிஹ்ர Fபலஸவ்Fப தஃலமூன்; ல உகத்தி'அன்ன அய்தியகும் வ அர்ஜுலகும் மின் கிலாFபி(ன்)வ் வ ல உஸல்லிBபன்ன கும் அஜ்ம'ஈன்
(அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுகொடுத்த உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.
قَالُوْا لَا ضَیْرَ ؗ اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۟ۚ
قَالُوْاஅவர்கள் கூறினர்لَا ضَيْرَ‌பிரச்சனை இல்லைاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلٰى رَبِّنَاஎங்கள் இறைவனிடம்مُنْقَلِبُوْنَ‌ۚ‏திரும்பக்கூடியவர்கள் ஆவோம்
காலூ ல ளய்ர இன்னா இலா ரBப்Bபினா முன்கல்லிBபூன்
“(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்” எனக் கூறினார்கள்.
اِنَّا نَطْمَعُ اَنْ یَّغْفِرَ لَنَا رَبُّنَا خَطٰیٰنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ الْمُؤْمِنِیْنَ ۟ؕ۠
اِنَّاநிச்சயமாக நாங்கள்نَطْمَعُஆசிக்கிறோம்اَنْ يَّغْفِرَமன்னிப்பதைلَـنَاஎங்களுக்குرَبُّنَاஎங்கள் இறைவன்خَطٰيٰـنَاۤஎங்கள் குற்றங்களைاَنْ كُنَّاۤநாங்கள் இருந்ததால்اَوَّلَமுதலாமவர்களாகالْمُؤْمِنِيْنَؕ‏நம்பிக்கை கொள்பவர்களில்
இன்னா னத்ம'உ அய் யக்Fபிர லனா ரBப்Bபுனா கதா யானா அன் குன்னா அவ்வலல் மு'மினீன்
“(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றுங் கூறினார்கள்).
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَسْرِ بِعِبَادِیْۤ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟
وَاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلٰى مُوْسٰٓىமூஸாவிற்குاَنْ اَسْرِஇரவில் அழைத்துச் செல்லுங்கள்بِعِبَادِىْۤஎனது அடியார்களைاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مُّتَّبَعُوْنَ‏பின்தொடரப்படுவீர்கள்
வ அவ்ஹய்னா இலா மூஸா அன் அஸ்ரி Bபி'இBபாதீ இன்னகும் முத்தBப'ஊன்
மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்.
فَاَرْسَلَ فِرْعَوْنُ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۚ
فَاَرْسَلَஆகவே அனுப்பினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்فِى الْمَدَآٮِٕنِநகரங்களில்حٰشِرِيْنَ‌ۚ‏ஒன்று திரட்டுபவர்களை
Fப அர்ஸல Fபிர்'அவ்னு Fபில்மதா'இனி ஹாஷிரீன்
(அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான்.
اِنَّ هٰۤؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِیْلُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகهٰٓؤُلَاۤءِஇவர்கள்لَشِرْذِمَةٌகூட்டம்தான்قَلِيْلُوْنَۙ‏குறைவான
இன்ன ஹா'உலா'இ லஷிர் திமதுன் கலீலூன்
“நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான்.
وَاِنَّهُمْ لَنَا لَغَآىِٕظُوْنَ ۟ۙ
وَاِنَّهُمْஇன்னும் , நிச்சயமாக இவர்கள்لَـنَاநமக்குلَـغَآٮِٕظُوْنَۙ‏ஆத்திரமூட்டுகின்றனர்
வ இன்னஹும் லனா லகா'இளூன்
“நிச்சயமாக இவர்கள் நம்மை(ப் பெருங்) கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
وَاِنَّا لَجَمِیْعٌ حٰذِرُوْنَ ۟ؕ
وَاِنَّاஇன்னும் நிச்சயமாக நாம்لَجَمِيْعٌஅனைவரும்حٰذِرُوْنَؕ‏தயாரிப்புடன் இருப்பவர்கள்தான்
வ இன்னா லஜமீ'உன் ஹாதிரூன்
“நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்.”
فَاَخْرَجْنٰهُمْ مِّنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
فَاَخْرَجْنٰهُمْஆகவே அவர்களை நாம் வெளியேற்றினோம்مِّنْ جَنّٰتٍதோட்டங்களிலிருந்தும்وَّعُيُوْنٍۙ‏ஊற்றுகளிலிருந்தும்
Fப அக்ரஜ்னாஹும் மின் ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம்.
وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ
وَّكُنُوْزٍஇன்னும் பொக்கிஷங்களிலிருந்தும்وَّمَقَامٍஇடத்திலிருந்தும்كَرِيْمٍۙ‏கண்ணியமான
வ குனூZஜி(ன்)வ் வ ம காமின் கரீம்
இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).
كَذٰلِكَ ؕ وَاَوْرَثْنٰهَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
كَذٰلِكَؕஇப்படித்தான்وَاَوْرَثْنٰهَاஇன்னும் அவற்றை சொந்தமாக்கினோம்بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏இஸ்ரவேலர்களுக்கு
கதாலிக வ அவ்ரத்னாஹா Bபனீ இஸ்ரா'ஈல்
அவ்வாறு தான் (அவர்களை நடத்தினோம்); அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசுகளாகவும் நாம் ஆக்கினோம்.
فَاَتْبَعُوْهُمْ مُّشْرِقِیْنَ ۟
فَاَ تْبَعُوْஅவர்கள் பின்தொடர்ந்தனர்هُمْஅவர்களைمُّشْرِقِيْنَ‏காலைப் பொழுதில்
Fப அத்Bப'ஊஹும் முஷ்ரிகீன்
பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰۤی اِنَّا لَمُدْرَكُوْنَ ۟ۚ
فَلَمَّا تَرَآءَஒருவரை ஒருவர் பார்த்தபோதுالْجَمْعٰنِஇரண்டு படைகளும்قَالَகூறினர்اَصْحٰبُதோழர்கள்مُوْسٰٓىமூஸாவின்اِنَّاநிச்சயமாக நாங்கள்لَمُدْرَكُوْنَ‌ۚ‏பிடிக்கப்பட்டோம்
Fபலம்மா தரா'அல் ஜம்'ஆனி கால அஸ் ஹாBபு மூஸா இன்னா லமுத்ரகூன்
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.
قَالَ كَلَّا ۚ اِنَّ مَعِیَ رَبِّیْ سَیَهْدِیْنِ ۟
قَالَஅவர் கூறினார்كَلَّا‌ ۚஅவ்வாறல்லاِنَّநிச்சயமாகمَعِىَஎன்னுடன் இருக்கின்றான்رَبِّىْஎன் இறைவன்سَيَهْدِيْنِ‏அவன் எனக்கு விரைவில் வழிகாட்டுவான்
கால கல்லா இன்ன ம'இய ரBப்Bபீ ஸ யஹ்தீன்
அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்;.
فَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِیْمِ ۟ۚ
فَاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلٰى مُوْسٰٓىமூஸாவிற்குاَنِ اضْرِبْஅடிப்பீராக! என்றுبِّعَصَاكَஉமது தடியைக் கொண்டுالْبَحْرَ‌ؕகடலைفَانْفَلَقَஆக, அது பிளந்ததுفَكَانَஇருந்ததுكُلُّஒவ்வொருفِرْقٍபிளவும்كَالطَّوْدِமலைப் போன்றுالْعَظِيْمِ‌ۚ‏பெரிய
Fப அவ்ஹய்னா இலா மூஸா அனிள்ரிBப் Bபி'அஸாகல் Bபஹ்ர Fபன்Fபலக Fபகான குல்லு Fபிர்கின் கத்தவ்தில் 'அளீம்
உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
وَاَزْلَفْنَا ثَمَّ الْاٰخَرِیْنَ ۟ۚ
وَاَزْلَـفْنَاநாம் நெருக்க மாக்கினோம்ثَمَّபின்الْاٰخَرِيْنَ‌ۚ‏மற்றவர்களை
வ அZஜ்லFப்னா தம்மல் ஆகரீன்
(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.
وَاَنْجَیْنَا مُوْسٰی وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۚ
وَاَنْجَيْنَاநாம் பாதுகாத்தோம்مُوْسٰىமூசாவையும்وَمَنْ مَّعَهٗۤஇன்னும் , அவருடன் இருந்தவர்களைاَجْمَعِيْنَ‌ۚ‏அனைவரையும்
வ அன்ஜய்னா மூஸா வ மம் ம'அஹூ அஜ்ம'ஈன்
மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِیْنَ ۟ؕ
ثُمَّபிறகுاَغْرَقْنَاமூழ்கடித்தோம்الْاٰخَرِيْنَ‌ؕ‏மற்றவர்களை
தும்ம அக்ரக்னல் ஆகரீன்
பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاَيَةً  ؕஓர் அத்தாட்சிوَمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயாஹ்; வமா கான அக்தரு ஹு மு'மினீன்
நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
(நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ اِبْرٰهِیْمَ ۟ۘ
وَاتْلُஓதுவீராக!عَلَيْهِمْஅவர்கள் மீதுنَبَاَசெய்தியைاِبْرٰهِيْمَ‌ۘ‏இப்ராஹீமுடைய
வத்லு 'அலய்ஹிம் னBப-அ இBப்ராஹீம்
இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ ۟
اِذْ قَالَகூறிய சமயத்தைلِاَبِيْهِதனது தந்தைக்கும்وَقَوْمِهٖதனது மக்களுக்கும்مَا تَعْبُدُوْنَ‏நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்?
இத் கால லி அBபீஹி வ கவ்மிஹீ மா தஃBபுதூன்
அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது,
قَالُوْا نَعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்نَـعْبُدُநாங்கள் வணங்குகின்றோம்اَصْنَامًاசிலைகளைفَنَظَلُّநாங்கள் இருப்போம்لَهَاஅதற்குعٰكِفِيْنَ‏பூஜை செய்பவர்களாகவே
காலூ னஃBபுது அஸ்னாமன் Fபனளல்லு லஹா 'ஆகிFபீன்
அவர்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ هَلْ یَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَ ۟ۙ
قَالَஅவர் கூறினார்هَلْ يَسْمَعُوْنَكُمْஅவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?اِذْ تَدْعُوْنَۙ‏நீங்கள் அழைக்கும்போது
கால ஹல் யஸ்ம'ஊன கும் இத் தத்'ஊன்
(அதற்கு இப்ராஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?
اَوْ یَنْفَعُوْنَكُمْ اَوْ یَضُرُّوْنَ ۟
اَوْஅல்லதுيَنْفَعُوْنَكُمْநன்மை தருகின்றனவா?اَوْஅல்லதுيَضُرُّوْنَ‏தீங்கு தருகின்றவர்
அவ் யன்Fப'ஊனகும் அவ் யளுர்ரூன்
“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)
قَالُوْا بَلْ وَجَدْنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ یَفْعَلُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்بَلْஅவ்வாறல்லوَجَدْنَاۤநாங்கள் கண்டோம்اٰبَآءَنَاஎங்கள் மூதாதைகளைكَذٰلِكَஅப்படியேيَفْعَلُوْنَ‏செய்பவர்களாக
காலூ Bபல் வஜத்னா ஆBபா 'அனா கதாலிக யFப்'அலூன்
(அப்போது அவர்கள்) “இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
قَالَ اَفَرَءَیْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۟ۙ
قَالَஅவர் கூறினார்اَفَرَءَيْتُمْநீங்கள் சொல்லுங்கள்مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏நீங்கள் வணங்கிக் கொண்டு இருப்பவற்றை
கால அFபர 'அய்தும் மா குன்தும் தஃBபுதூன்
அவ்வாறாயின், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கூறினார்.
اَنْتُمْ وَاٰبَآؤُكُمُ الْاَقْدَمُوْنَ ۟ؗۖ
اَنْـتُمْநீங்களும்وَاٰبَآؤُكُمُஉங்கள் மூதாதைகளும்الْاَقْدَمُوْنَ ۖ ‏முந்தி(யவர்கள்)
அன்தும் வ ஆBபா'உகுமுல் அக்தமூன்
“நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).”
فَاِنَّهُمْ عَدُوٌّ لِّیْۤ اِلَّا رَبَّ الْعٰلَمِیْنَ ۟ۙ
فَاِنَّهُمْஏனெனில், நிச்சயமாகعَدُوٌّஎதிரிகள்لِّىْۤஎனக்குاِلَّاஆனால், தவிரرَبَّஇறைவனைالْعٰلَمِيْنَۙ‏அகிலங்களின்
Fப இன்னஹும் 'அதுவ்வ்வுல் லீ இல்லா ரBப்Bபல் 'ஆலமீன்
“நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).”
الَّذِیْ خَلَقَنِیْ فَهُوَ یَهْدِیْنِ ۟ۙ
الَّذِىْஎவன்خَلَقَنِىْஎன்னைப்படைத்தான்فَهُوَஆகவே, அவன்يَهْدِيْنِۙ‏எனக்கு நேர்வழி காட்டுவான்
அல்லதீ கலகனீ Fப ஹுவ யஹ்தீன்
“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
وَالَّذِیْ هُوَ یُطْعِمُنِیْ وَیَسْقِیْنِ ۟ۙ
وَ الَّذِىْ هُوَஎவன்/அவன்يُطْعِمُنِىْஎனக்கு உணவளிக்கிறான்وَيَسْقِيْنِۙ‏இன்னும் , எனக்கு நீர் புகட்டுகிறான்
வல்லதீ ஹுவ யுத்'இமுனீ வ யஸ்கீன்
“அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”
وَاِذَا مَرِضْتُ فَهُوَ یَشْفِیْنِ ۟
وَاِذَا مَرِضْتُநான் நோயுற்றால்فَهُوَஅவன்தான்يَشْفِيْنِ ۙ‏எனக்கு சுகமளிக்கிறான்
வ இதா மரிள்து Fபஹுவ யஷ்Fபீன்
“நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
وَالَّذِیْ یُمِیْتُنِیْ ثُمَّ یُحْیِیْنِ ۟ۙ
وَالَّذِىْ يُمِيْتُنِىْஅவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான்ثُمَّ يُحْيِيْنِۙ‏பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்
வல்லதீ யுமீதுனீ தும்ம யுஹ்யீன்
“மேலும் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”
وَالَّذِیْۤ اَطْمَعُ اَنْ یَّغْفِرَ لِیْ خَطِیْٓـَٔتِیْ یَوْمَ الدِّیْنِ ۟ؕ
وَالَّذِىْۤஇன்னும் , எவன்اَطْمَعُநான் ஆசிக்கிறேன்اَنْ يَّغْفِرَஅவன் மன்னிக்க வேண்டும் என்றுلِىْஎனக்குخَطِیْٓــٴَــتِىْஎன் பாவங்களைيَوْمَநாளில்الدِّيْنِ ؕ‏விசாரணை
வல்லதீ அத்ம'உ அய் யக்Fபிர லீ கதீ' அதீ யவ்மத் தீன்
“நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.
رَبِّ هَبْ لِیْ حُكْمًا وَّاَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ۟ۙ
رَبِّஎன் இறைவா!هَبْவழங்கு!لِىْஎனக்குحُكْمًاதூதுத்துவத்தைوَّاَلْحِقْنِىْஇன்னும் என்னை சேர்ப்பாயாக!بِالصّٰلِحِيْنَۙ‏நல்லவர்களுடன்
ரBப்Bபி ஹBப் லீ ஹுக்ம(ன்)வ் வ அல்ஹிக்னீ Bபிஸ் ஸாலிஹீன்
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”
وَاجْعَلْ لِّیْ لِسَانَ صِدْقٍ فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
وَاجْعَلْஎற்படுத்து!لِّىْஎனக்குلِسَانَ صِدْقٍநற்பெயரைفِى الْاٰخِرِيْنَۙ‏பின்னோர்களில்
வஜ்'அல் லீ லிஸான ஸித்கின் Fபில் ஆகிரீன்
“இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”
وَاجْعَلْنِیْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِیْمِ ۟ۙ
وَاجْعَلْنِىْஎன்னை ஆக்கிவிடு!مِنْ وَّرَثَةِவாரிசுகளில்جَنَّةِசொர்க்கத்தின்النَّعِيْمِۙ‏இன்பமிகு
வஜ்'அல்னீ மி(ன்)வ் வரததி ஜன்ன்னதின் ன'ஈம்
“இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”
وَاغْفِرْ لِاَبِیْۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّیْنَ ۟ۙ
وَاغْفِرْமன்னிப்பளி!لِاَبِىْۤஎன் தந்தைக்குاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்مِنَ الضَّآلِّيْنَۙ‏வழி தவறியவர்களில்
வக்Fபிர் லி அBபீ இன்னஹூ கான மின ளால்லீன்
“என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.”
وَلَا تُخْزِنِیْ یَوْمَ یُبْعَثُوْنَ ۟ۙ
وَلَا تُخْزِஇழிவுபடுத்திவிடாதே!نِىْஎன்னைيَوْمَநாளில்يُبْعَثُوْنَۙ‏அவர்கள் எழுப்பப்படும்
வ லா துக்Zஜினீ யவ்ம யுBப்'அதூன்
“இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”
یَوْمَ لَا یَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَ ۟ۙ
يَوْمَநாளில்...لَا يَنْفَعُபலனளிக்காதمَالٌசெல்வமும்وَّلَا بَنُوْنَۙ‏ஆண் பிள்ளைகளும்
யவ்ம லா யன்Fப'உ மாலு(ன்)வ் வலா Bபனூன்
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
اِلَّا مَنْ اَتَی اللّٰهَ بِقَلْبٍ سَلِیْمٍ ۟ؕ
اِلَّاஎனினும்مَنْயார்اَتَىவந்தாரோاللّٰهَஅல்லாஹ்விடம்بِقَلْبٍஉள்ளத்தோடுسَلِيْمٍؕ‏சந்தேகப்படாத
இல்லா மன் அதல் லாஹ Bபிகல்Bபின் ஸலீம்
“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”
وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِیْنَ ۟ۙ
وَاُزْلِفَتِசமீபமாக்கப்படும்الْجَـنَّةُசொர்க்கம்لِلْمُتَّقِيْنَۙ‏இறையச்சமுள்ளவர்களுக்கு
வ உZஜ்லிFபதில் ஜன்னது லில்முத்தகீன்
“பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்.”
وَبُرِّزَتِ الْجَحِیْمُ لِلْغٰوِیْنَ ۟ۙ
وَبُرِّزَتِவெளிப்படுத்தப்படும்الْجَحِيْمُநரகம்لِلْغٰوِيْنَۙ‏வழிகேடர்களுக்கு
வ Bபுர்ரிZஜதில் ஜஹீமு லில்காவீன்
“வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்.”
وَقِیْلَ لَهُمْ اَیْنَ مَا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۟ۙ
وَقِيْلَஇன்னும் கேட்கப்படும்لَهُمْஅவர்களிடம்اَيْنَمَاஎங்கே?كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏நீங்கள்வணங்கிக் கொண்டிருந்தவை
வ கீல லஹும் அய்ன மா குன்தும் தஃBபுதூன்
“இன்னும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்கே?” என்று.
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ هَلْ یَنْصُرُوْنَكُمْ اَوْ یَنْتَصِرُوْنَ ۟ؕ
مِنْ دُوْنِஅன்றிاللّٰهِؕஅல்லாஹ்வைهَلْ يَنْصُرُوْنَكُمْஅவை உங்களுக்கு உதவுமா?اَوْஅல்லதுيَنْتَصِرُوْنَؕ‏தமக்குத் தாமே உதவிக் கொள்ளுமா?
மின் தூனில் லாஹி ஹல் யன்ஸுரூனகும் அவ் யன்தஸிரூன்
“அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,”
فَكُبْكِبُوْا فِیْهَا هُمْ وَالْغَاوٗنَ ۟ۙ
فَكُبْكِبُوْاஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறியப்படுவர்فِيْهَاஅதில்هُمْஅவையும்وَالْغَاوٗنَۙ‏வழிகேடர்களும்
FபகுBப்கிBபூ Fபீஹா ஹும் வல்காவூன்
பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் - அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் -
وَجُنُوْدُ اِبْلِیْسَ اَجْمَعُوْنَ ۟ؕ
وَجُنُوْدُஇன்னும் , ராணுவம்اِبْلِيْسَஇப்லீஸின்اَجْمَعُوْنَؕ‏அனைவரும்
வ ஜுனூது இBப்லீஸ அஜ்ம'ஊன்
“இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்).”
قَالُوْا وَهُمْ فِیْهَا یَخْتَصِمُوْنَ ۟ۙ
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்وَهُمْஅவர்கள்فِيْهَاஅதில்يَخْتَصِمُوْنَۙ‏அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க
காலூ வ ஹும் Fபீஹா யக்க்தஸிமூன்
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:
تَاللّٰهِ اِنْ كُنَّا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟ۙ
تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகاِنْ كُنَّاநிச்சயமாக நாம்لَفِىْ ضَلٰلٍவழிகேட்டில்தான் இருந்தோம்مُّبِيْنٍۙ‏தெளிவான
தல்லாஹி இன் குன்னா லFபீ ளலாலிம் முBபீன்
“அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்.”
اِذْ نُسَوِّیْكُمْ بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
اِذْ نُسَوِّيْكُمْஉங்களை சமமாக ஆக்கியபோதுبِرَبِّஇறைவனுக்குالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
இத் னுஸவ்வீகும் Bபி ரBப்Bபில் 'ஆலமீன்
“உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது);
وَمَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الْمُجْرِمُوْنَ ۟
وَمَاۤ اَضَلَّنَاۤஎங்களை வழி கெடுக்கவில்லைاِلَّاதவிரالْمُجْرِمُوْنَ‏குற்றவாளிகளை
வ மா அளல்லனா இல்லல் முஜ்ரிமூன்
இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்.
فَمَا لَنَا مِنْ شَافِعِیْنَ ۟ۙ
فَمَا لَـنَاஆகவே, யாரும் எங்களுக்கு இல்லைمِنْ شٰفِعِيْنَۙ‏பரிந்துரையாளர்களில்
Fபமா லனா மின் ஷா Fபி'ஈன்
ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை.
وَلَا صَدِیْقٍ حَمِیْمٍ ۟
وَلَا صَدِيْقٍஇன்னும் நண்பர்களில் யாரும் இல்லைحَمِيْمٍ‏உற்ற
வ லா ஸதீகின் ஹமீம்
அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை.
فَلَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
فَلَوْ اَنَّஆகவே,முடியுமாயின்لَـنَاஎங்களுக்குكَرَّةًஒருமுறை திரும்பச்செல்வதுفَنَكُوْنَநாங்கள் ஆகிவிடுவோம்مِنَ الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களில்
Fபலவ் அன்ன லனா கர்ரதன் Fபனகூன மினல் மு'மினீன்
நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகி விடுவோமே! (என்றுங் கூறுவார்கள்.)
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاٰيَةً‌  ؕஓர் அத்தாட்சிوَّمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயத(ன்)வ் வமா கான அக்தருஹும் மு'மினீன்
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
மேலும், நிச்சயமாக உமது இறைவன் (யாவரையும்) மிகைத்தோனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتْ قَوْمُ نُوْحِ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُமக்கள்نُوْحِநூஹூடையۨالْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏தூதர்களை
கத்தBபத் கவ்மு னூஹினில் முர்ஸலீன்
நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ نُوْحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَஅவர் கூறியபோதுلَهُمْஅவர்களுக்குاَخُوْசகோதரர்هُمْஅவர்களதுنُوْحٌநூஹ்اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?
இத் கால லஹும் அகூஹும் னூஹுன் அலா தத்தகூன்
அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது: “நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?”
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குرَسُوْلٌதூதர் ஆவேன்اَمِيْنٌۙ‏ஒரு நம்பிக்கையான
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரிய தூதன் ஆவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُوْاஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِيْعُوْنِ‌ۚ‏இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல்லாஹ வ அதீ'ஊன்
ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۚ
وَمَاۤ اَسْــٴَــلُكُمْநான் உங்களிடம் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍ‌ۚஎவ்வித கூலியையும்اِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلٰى رَبِّஇறைவனிடமேالْعٰلَمِيْنَ‌ۚ‏அகிலங்களின்
வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
இதற்காக, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடம் இருக்கிறது.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ؕ
فَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ ؕ‏இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள் (என்று நூஹ் கூறியபோது),
قَالُوْۤا اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَ ۟ؕ
قَالُوْۤاஅவர்கள் கூறினர்اَنُؤْمِنُநாம் நம்பிக்கை கொள்வோமாلَكَஉம்மைوَاتَّبَعَكَஉம்மை பின்பற்றி இருக்கالْاَرْذَلُوْنَؕ‏சாதாரணமானவர்கள்
காலூ அனு'மினு லக வத்தBப 'அகல் அர்தலூன்
அவர்கள்: “தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா,” என்று கூறினார்கள்.
قَالَ وَمَا عِلْمِیْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟ۚ
قَالَஅவர் கூறினார்وَمَا عِلْمِىْஎனக்கு ஞானம் இல்லைبِمَاஎதைப் பற்றிكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‌ۚ‏செய்கின்றனர்
கால வமா 'இல்மீ Bபிமா கானூ யஃமலூன்
அவர் கூறினார்: அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறியமாட்டேன்.
اِنْ حِسَابُهُمْ اِلَّا عَلٰی رَبِّیْ لَوْ تَشْعُرُوْنَ ۟ۚ
اِنْ حِسَابُهُمْஅவர்களது விசாரணை இல்லைاِلَّاதவிரعَلٰىமீதேرَبِّىْ‌என் இறைவன்لَوْ تَشْعُرُوْنَ‌ۚ‏நீங்கள் உணரவேண்டுமே!
இன் ஹிஸாBபுஹும் இல்லா 'அலா ரBப்Bபீ லவ் தஷ்'உரூன்
நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின், அவர்களுடைய கேள்வி கணக்கு (பற்றிய விசாரணை) என்னுடைய இறைவனிடம்தான் இருக்கிறது.
وَمَاۤ اَنَا بِطَارِدِ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
وَمَاۤ اَنَاநான் இல்லைبِطَارِدِவிரட்டக்கூடியவன்الْمُؤْمِنِيْنَ‌ۚ‏நம்பிக்கையாளர்களை
வ மா அன Bபிதாரிதில் மு'மினீன்
முஃமின்களை நான் விரட்டி விடுபவன் அல்லன்.
اِنْ اَنَا اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ؕ
اِنْ اَنَاநான் இல்லைاِلَّاதவிரنَذِيْرٌஎச்சரிப்பாளராகவேمُّبِيْنٌؕ‏தெளிவான
இன் அன இல்லா னதீரும் முBபீன்
நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி வேறில்லை.
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰنُوْحُ لَتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِیْنَ ۟ؕ
قَالُوْاஅவர்கள் கூறினர்لَٮِٕنْ لَّمْ تَنْتَهِநீர் விலகவில்லை என்றால்يٰـنُوْحُநூஹே!لَـتَكُوْنَنَّநிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்مِنَ الْمَرْجُوْمِيْنَؕ‏ஏசப்படுபவர்களில்
காலூ ல'இல் லம் தன்தஹி யா னூஹு லதகூனன்ன மினல் மர்ஜூமீன்
அதற்கவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.
قَالَ رَبِّ اِنَّ قَوْمِیْ كَذَّبُوْنِ ۟ۚۖ
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!اِنَّநிச்சயமாகقَوْمِىْஎன் மக்கள்كَذَّبُوْنِ‌ ۖ‌ۚ‏என்னை பொய்ப்பித்து விட்டனர்
கால ரBப்Bபி இன்ன கவ்மீ கத்தBபூன்
அவர் கூறினார்: “என் இறைவனே! என்னுடைய சமூகத்தார்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.
فَافْتَحْ بَیْنِیْ وَبَیْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِیْ وَمَنْ مَّعِیَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
فَافْتَحْஆகவே, நீ தீர்ப்பளி!بَيْنِىْஎனக்கும் இடையில்وَبَيْنَهُمْஇன்னும் அவர்களுக்கும் இடையில்فَتْحًاதெளிவானوَّنَجِّنِىْஎன்னை(யும்) பாதுகாத்துக்கொள்وَمَنْ مَّعِىَஎன்னுடன் உள்ளவர்களையும்مِنَ الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களில்
FபFப்தBப் Bபய்னீ வ Bபய் னஹும் Fபத் ஹ(ன்)வ் வ னஜ்ஜினீ வ மம் ம'இய மினல் மு'மினீன்
ஆகவே, நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!” (என்று பிரார்த்தித்தார்.)
فَاَنْجَیْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۚ
فَاَنْجَيْنٰهُஆகவே, அவரையும் பாதுகாத்தோம்وَمَنْ مَّعَهٗஅவருடன் உள்ளவர்களையும்فِى الْـفُلْكِகப்பலில்الْمَشْحُوْنِ‌ۚ‏நிரம்பிய
Fப அன்ஜய்னாஹு வ மம்ம'அஹூ Fபில் Fபுல்கில் மஷ்ஹூன்
ஆகவே, நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் நிறைந்திருந்த கப்பலில் இரட்சித்தோம்.
ثُمَّ اَغْرَقْنَا بَعْدُ الْبٰقِیْنَ ۟ؕ
ثُمَّபிறகுاَغْرَقْنَاநாம் அழித்தோம்بَعْدُபின்னர்الْبٰقِيْنَؕ‏மீதம் இருந்தவர்களை
தும்ம அக்ரக்னா Bபஃதுல் Bபாகீன்
அதன் பிறகு, எஞ்சியிருந்தவர்களை நாம் மூழ்கடித்தோம்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاَيَةً‌  ؕஓர் அத்தாட்சிوَّمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயாஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் ஈமான் கொள்வதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَ اِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتْ عَادُ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்عَادُஆது சமுதாய மக்கள்اۨلْمُرْسَلِيْنَ ۖ ۚ‏தூதர்களை
கத்தBபத் 'ஆதுனில் முர்ஸலீன்
ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூருவீராக!لَهُمْஅவர்களுக்குاَخُوْசகோதரர்هُمْஅவர்களதுهُوْدٌஹூதுاَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் பயந்துகொள்ள மாட்டீர்களா?
இத் கால லஹும் அகூஹும் ஹூதுன் அலா தத்தகூன்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூத் : “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது:
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குرَسُوْلٌஒரு தூதர்اَمِيْنٌ‌ۙ‏நம்பிக்கையான
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‌ ۚ‏எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல்லாஹ வ அதீ'ஊன்
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَمَاۤ اَسْــٴَــلُكُمْநான் உங்களிடம் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍ‌ۚஎவ்வித கூலியையும்اِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلٰى رَبِّஇறைவனிடமேالْعٰلَمِيْنَ ؕ‏அகிலங்களின்
வமா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
اَتَبْنُوْنَ بِكُلِّ رِیْعٍ اٰیَةً تَعْبَثُوْنَ ۟ۙ
اَتَبْنُوْنَகட்டிடத்தை கட்டுகிறீர்களா?بِكُلِّ رِيْعٍஒவ்வொருஇடத்திலும்اٰيَةًஒரு கட்டிடத்தைتَعْبَثُوْنَۙ‏விளையாடுகிறீர்கள்
அதBப்னூன Bபிகுல்லி ரீ'இன் ஆயதன் தஃBபதூன்
“நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?
وَتَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ ۟ۚ
وَ تَتَّخِذُوْنَஇன்னும் நீங்கள் எற்படுத்துகிறீர்கள்مَصَانِعَபெரியகோட்டைகளைلَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌ۚ‏நீங்கள் நிரந்தரமாக இருப்பதைப் போன்று
வ தத்தகிதூன மஸானி'அ ல'அல்லகும் தக்லுதூன்
இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?
وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِیْنَ ۟ۚ
وَاِذَا بَطَشْتُمْநீங்கள் யாரையும் தாக்கினால்بَطَشْتُمْதாக்குகிறீர்கள்جَبَّارِيْنَ‌ۚ‏அநியாயக்காரர்களாக
வ இதா Bபதஷ்தும் Bபதஷ்தும் ஜBப்Bபாரீன்
“இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆக, அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‌ ۚ‏இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
“எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
وَاتَّقُوا الَّذِیْۤ اَمَدَّكُمْ بِمَا تَعْلَمُوْنَ ۟ۚ
وَاتَّقُوْاஅஞ்சிக் கொள்ளுங்கள்!الَّذِىْۤ اَمَدَّஉதவியவனைكُمْஉங்களுக்குبِمَا تَعْلَمُوْنَ‌ۚ‏நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு
வத்தகுல் லதீ அமத் தகும் Bபிமா தஃலமூன்
“மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.
اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِیْنَ ۟ۚۙ
اَمَدَّஉதவினான்كُمْஉங்களுக்குبِاَنْعَامٍகால்நடைகளைக் கொண்டுوَّبَنِيْنَ ۚۙ‏இன்னும் ஆண் பிள்ளைகளை
அமத்தகும் Bபி அன்'ஆ மி(ன்)வ் வ Bபனீன்
“அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.
وَجَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۚ
وَجَنّٰتٍஇன்னும் தோட்டங்களைوَّعُيُوْنٍ‌ۚ‏இன்னும் ஊற்றுகளை
வ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
“இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).
اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟ؕ
اِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَதண்டனையைيَوْمٍநாளின்عَظِيْمٍؕ‏பெரிய
இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
“நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்” (எனக் கூறினார்).
قَالُوْا سَوَآءٌ عَلَیْنَاۤ اَوَعَظْتَ اَمْ لَمْ تَكُنْ مِّنَ الْوٰعِظِیْنَ ۟ۙ
قَالُوْاஅவர்கள் கூறினர்سَوَآءٌசமம்தான்عَلَيْنَاۤஎங்களுக்குاَوَعَظْتَநீர் உபதேசிப்பதும்اَمْஅல்லதுلَمْ تَكُنْஇல்லாததும்مِّنَ الْوٰعِظِيْنَۙ‏உபதேசிப்பவர்களில்
காலூ ஸவா'உன் 'அலய்னா அவ 'அள்த அம் லம் தகும் மினல் வா'இளீன்
(இதற்கு) அவர்கள்: “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்” எனக் கூறினார்கள்.
اِنْ هٰذَاۤ اِلَّا خُلُقُ الْاَوَّلِیْنَ ۟ۙ
اِنْ هٰذَاۤஇது இல்லைاِلَّاதவிரخُلُقُவழக்கமேالْاَوَّلِيْنَۙ‏முன்னோரின்
இன் ஹாதா இல்லா குலுகுல் அவ்வலீன்
“இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
وَمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟ۚ
وَمَا نَحْنُநாங்கள் இல்லைبِمُعَذَّبِيْنَ‌ۚ‏தண்டிக்கப்படுபவர்களாக
வமா னஹ்னு Bபிமு 'அத்தBபீன்
“மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.”
فَكَذَّبُوْهُ فَاَهْلَكْنٰهُمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
فَكَذَّبُوْهُஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்فَاَهْلَـكْنٰهُمْ‌ؕஆகவே, அவர்களை நாம் அழித்தோம்.اِنَّநிச்சயமாகفِىْ ذٰلِكَஇதில் இருக்கிறதுلَاَيَةً‌ ؕஓர் அத்தாட்சிوَ مَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
Fபகத்தBபூஹு Fப அஹ்லக்னாஹும்; இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
(இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்ثَمُوْدُஸமூது மக்கள்الْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏தூதர்களை
கத்தBபத் தமூதுல் முர்ஸலீன்
ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூருங்கள்لَهُمْஅவர்களுக்குاَخُوْهُمْஅவர்களது சகோதரர்صٰلِحٌஸாலிஹ்اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா?
இத் கால லஹும் அகூஹும் ஸாலிஹுன் அலா தத்தகூன்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குرَسُوْلٌஒரு தூதர்اَمِيْنٌۙ‏நம்பிக்கையான
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُوْاஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‌ۚ‏இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَمَاۤ اَسْــٴَــلُكُمْநான் உங்களிடம் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍ‌ۚஎவ்வித கூலியையும்اِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلٰى رَبِّஇறைவனிடமேالْعٰلَمِيْنَؕ‏அகிலங்களின்
வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
اَتُتْرَكُوْنَ فِیْ مَا هٰهُنَاۤ اٰمِنِیْنَ ۟ۙ
اَتُتْرَكُوْنَநீங்கள் விடப்படுவீர்களா?فِىْ مَا هٰهُنَاۤஇங்கு இருப்பவற்றில்اٰمِنِيْنَۙ‏நிம்மதியானவர்களாக
அதுத்ரகூன Fபீ மா ஹாஹுனா ஆமினீன்
“இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா?
فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
فِىْ جَنّٰتٍதோட்டங்களிலும்وَّعُيُوْنٍۙ‏ஊற்றுகளிலும்
Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
“தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்-
وَّزُرُوْعٍ وَّنَخْلٍ طَلْعُهَا هَضِیْمٌ ۟ۚ
وَّزُرُوْعٍஇன்னும் விவசாய விளைச்சல்களிலும்وَّنَخْلٍபேரிச்ச மரங்களிலும்طَلْعُهَاஅதன் குலைகள்هَضِيْمٌ‌ۚ‏மென்மையாக
வ Zஜுரூ இ(ன்)வ் வ னக்லின் தல் 'உஹா ஹளீம்
“வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,
وَتَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُیُوْتًا فٰرِهِیْنَ ۟ۚ
وَتَـنْحِتُوْنَஇன்னும் குடைந்து கொள்கிறீர்கள்مِنَ الْجِبَالِமலைகளில்بُيُوْتًاவீடுகளைفٰرِهِيْنَ‌ۚ‏மதிநுட்ப மிக்கவர்களாக
வ தன்ஹிதூன மினல் ஜிBபாலி Bபுயூதன் Fபாரிஹீன்
“மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்களா?)
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆக, அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‌ ۚ‏இன்னும் எனக்கு கீழ்ப் படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
وَلَا تُطِیْعُوْۤا اَمْرَ الْمُسْرِفِیْنَ ۟ۙ
وَلَا تُطِيْعُوْۤاகீழ்ப்படியாதீர்கள்اَمْرَகாரியத்திற்குالْمُسْرِفِيْنَۙ‏வரம்பு மீறிகளின்
வ லா துதீ'ஊ அம்ரல் முஸ்ரிFபீன்
“இன்னும், நீங்கள், வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிப்படாதீர்கள்.
الَّذِیْنَ یُفْسِدُوْنَ فِی الْاَرْضِ وَلَا یُصْلِحُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்يُفْسِدُوْنَகுழப்பம்செய்கின்றனர்فِى الْاَرْضِபூமியில்وَ لَا يُصْلِحُوْنَ‏அவர்கள் சீர்திருத்துவதில்லை
அல்லதீன யுFப்ஸிதூன Fபில் அர்ளி வலா யுஸ்லிஹூன்
“அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்” என்றுங் கூறினார்).
قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِیْنَ ۟ۚ
قَالُوْۤاஅவர்கள் கூறினர்اِنَّمَاۤ اَنْتَநீரெல்லாம்مِنَ الْمُسَحَّرِيْنَ‌ۚ‏சூனியம் செய்யப்பட்ட ஒருவர்தான்
காலூ இன்னமா அன்த மினல் முஸஹ்ஹரீன்
அதற்கு அவர்கள்: “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்” என்று சொன்னார்கள்.
مَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ۖۚ فَاْتِ بِاٰیَةٍ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
مَاۤ اَنْتَநீர் இல்லைاِلَّاதவிரبَشَرٌமனிதராகவேمِّثْلُـنَا ۖۚஎங்களைப் போன்றفَاْتِஆகவே கொண்டு வாரீர்بِاٰيَةٍஅத்தாட்சியைاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
மா அன்த இல்லா Bபஷரும் மித்லுனா Fபா'தி Bபி ஆயதின் இன் குன்த மினஸ் ஸாதிகீன்
“நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை; எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்றனர்).
قَالَ هٰذِهٖ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَّلَكُمْ شِرْبُ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟ۚ
قَالَஅவர் கூறினார்هٰذِهٖஇது ஒருنَاقَةٌபெண் ஒட்டகைلَّهَاஇதற்குشِرْبٌநீர் அருந்துவதற்குரிய ஒரு பங்குوَّلَـكُمْஇன்னும் உங்களுக்கும்شِرْبُநீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளதுيَوْمٍநாளில்مَّعْلُوْمٍ‌ۚ‏குறிப்பிட்ட
கால ஹாதிஹீ னாகதுல் லஹா ஷிர்Bபு(ன்)வ் வலகும் ஷிர்Bபு யவ்மிம் மஃலூம்
அவர் சொன்னார்: “இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு; உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.”
وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابُ یَوْمٍ عَظِیْمٍ ۟
وَلَا تَمَسُّوْهَاஅதை தொட்டு விடாதீர்கள்!بِسُوْٓءٍதீங்கைக் கொண்டுفَيَاْخُذَபிடித்துக்கொள்ளும்كُمْஉங்களைعَذَابُதண்டனைيَوْمٍநாளின்عَظِيْمٍ‏பெரிய
வ லா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப யாகுதகும் 'அதாBபு யவ்மின் 'அளீம்
“இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.”
فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِیْنَ ۟ۙ
فَعَقَرُوْهَاஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள்فَاَصْبَحُوْاஆகவே ஆகிவிட்டனர்نٰدِمِيْنَۙ‏கைசேதப்பட்டவர்களாக
Fப'அகரூஹா Fப அஸ்Bபஹூ னாதிமீன்
அவர்கள் அதன் கால் நரம்பைத் துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
فَاَخَذَهُمُ الْعَذَابُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
فَاَخَذَபிடித்ததுهُمُஅவர்களைالْعَذَابُ‌ؕதண்டனைاِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاٰيَةً‌  ؕஓர் அத்தாட்சிوَمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
Fப அகதஹுமுல் 'அதாBப்; இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
ஆகவே, வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது - நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும், அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتْ قَوْمُ لُوْطِ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُமக்கள்لُوْطٍலூத்துடையاۨلْمُرْسَلِيْنَ ۖ ۚ‏தூதர்களை
கத்தBபத் கவ்மு லூதினில் முர்ஸலீன்
லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَகூறிய சமயத்தைلَهُمْஅவர்களுக்குاَخُوْசகோதரர்هُمْஅவர்களதுلُوْطٌலூத்துاَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் அஞ்ச வேண்டாமா?
இத் கால லஹும் அகூஹும் லூதுன் அலா தத்தகூன்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது,
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குرَسُوْلٌஒரு தூதர்اَمِيْنٌۙ‏நம்பிக்கையான
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
“நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‌ۚ‏இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَمَاۤ اَسْــٴَــلُكُمْநான் உங்களிடம் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍ‌ۚஎவ்வித கூலியையும்اِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلٰى رَبِّஇறைவனிடமேالْعٰلَمِيْنَ ؕ‏அகிலங்களின்
வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
اَتَاْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِیْنَ ۟ۙ
اَتَاْتُوْنَநீங்கள் வருகிறீர்களா?الذُّكْرَانَஆண்களிடம்مِنَ الْعٰلَمِيْنَۙ‏படைப்பினங்களில்
அதாதூனத் துக்ரான மினல் 'ஆலமீன்
“உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்ட நோக்கோடு) நெருங்குகின்றீர்களா?
وَتَذَرُوْنَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ عٰدُوْنَ ۟
وَ تَذَرُوْنَஇன்னும் விட்டு விடுகிறீர்கள்مَاஎதைخَلَقَபடைத்தான்لَـكُمْஉங்களுக்குرَبُّكُمْஉங்கள் இறைவன்مِّنْ اَزْوَاجِكُمْ‌ؕஉங்கள் மனைவிகளைبَلْமாறாகاَنْـتُمْநீங்கள்قَوْمٌமக்கள்عٰدُوْنَ‏வரம்பு மீறிய
வ ததரூன மா கலக லகும் ரBப்Bபுகும் மின் அZஜ்வாஜிகும்; Bபல் அன்தும் கவ்முன் 'ஆதூன்
“இன்னும், உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவிமார்களை விட்டு விடுகிறீர்கள்; இல்லை, நீங்கள் வரம்பு கடந்த சமூகத்தாராக இருக்கின்றீர்கள்.”
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰلُوْطُ لَتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்لَٮِٕنْ لَّمْ تَنْتَهِநீர் விலகவில்லை என்றால்يٰلُوْطُலூத்தே!لَـتَكُوْنَنَّநிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்مِنَ الْمُخْرَجِيْنَ‏வெளியேற்றப்பட்டவர்களில்
கலூ ல'இல் லம் தன்தஹி யா லூது லதகூனன்ன மினல் முக்ரஜீன்
அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர்.
قَالَ اِنِّیْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِیْنَ ۟ؕ
قَالَஅவர் கூறினார்اِنِّىْநிச்சயமாக நான்لِعَمَلِكُمْஉங்கள் செயலைمِّنَ الْقَالِيْنَؕ‏வெறுப்பவர்களில்
கால இன்னீ லி'அமலிகும் மினல் காலீன்
அவர் கூறினார்: “நிச்சயமாக நான் உங்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறேன்.
رَبِّ نَجِّنِیْ وَاَهْلِیْ مِمَّا یَعْمَلُوْنَ ۟
رَبِّஎன் இறைவா!نَجِّنِىْஎன்னையும் பாதுகாத்துக்கொள்!وَاَهْلِىْஇன்னும் என் குடும்பத்தாரை(யும்)مِمَّا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்வதிலிருந்து
ரBப்Bபி னஜ்ஜ்ஜினீ வ அஹ்லீ மிம்ம்மா யஃமலூன்
“என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (எனப் பிரார்த்தித்தார்.)
فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۙ
فَنَجَّيْنٰهُஆக, அவரை(யும்) பாதுகாத்தோம்وَ اَهْلَهٗۤஇன்னும் அவருடைய குடும்பத்தாரை(யும்)اَجْمَعِيْنَۙ‏அனைவரையும்
Fபனஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ அஜ்ம'ஈன்
அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம்.
اِلَّا عَجُوْزًا فِی الْغٰبِرِیْنَ ۟ۚ
اِلَّاதவிரعَجُوْزًاஒரு மூதாட்டியைفِى الْغٰبِرِيْنَ‌ۚ‏மிஞ்சியவர்களில்
இல்லா 'அஜூZஜன் Fபில்காBபிரீன்
(அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கிவிட்ட கிழவியைத் தவிர
ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِیْنَ ۟ۚ
ثُمَّபிறகுدَمَّرْنَاநாம் அழித்தோம்الْاٰخَرِيْنَ‌ۚ‏மற்றவர்களை
தும்ம தம்மர்னல் ஆ கரீன்
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِیْنَ ۟
وَاَمْطَرْنَاஇன்னும் பொழிவித்தோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுمَّطَرًا‌ۚஒரு மழையைفَسَآءَ مَطَرُஅது மிக கெட்ட மழையாகும்الْمُنْذَرِيْنَ‏எச்சரிக்கப்பட்டவர்களுடைய மழைகளில்
வ அம்தர்னா 'அலய்ஹிம் மதரன் Fபஸா'அ மதருல் முன்தரீன்
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاَيَةً‌  ؕஓர் அத்தாட்சிوَمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّ رَبَّكَ لَهُوَநிச்சயமாக உமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَ اَصْحٰبُ لْـَٔیْكَةِ الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَபொய்ப்பித்தனர்اَصْحٰبُ لْئَيْكَةِதோட்டக்காரர்கள்الْمُرْسَلِيْنَ ۖ‌ۚ‏தூதர்களை
கத்தBப அஸ் ஹாBபுல் அய்கதில் முர்ஸலீன்
தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள்.
اِذْ قَالَ لَهُمْ شُعَیْبٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூருங்கள்لَهُمْஅவர்களுக்குشُعَيْبٌஷுஐபுاَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் அஞ்ச வேண்டாமா?
இத் கால லஹும் ஷு'அய்Bபுன் அலா தத்தகூன்
ஷுஐப் அவர்களிடம்: “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது:
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குرَسُوْلٌதூதர் ஆவேன்اَمِيْنٌۙ‏நம்பிக்கையான
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‌ۚ‏இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
“ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَمَاۤ اَسْــٴَــــلُكُمْநான் உங்களிடம் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍ‌ۚஎவ்வித கூலியையும்اِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلٰى رَبِّஇறைவனிடமேالْعٰلَمِيْنَ ؕ‏அகிலங்களின்
வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
اَوْفُوا الْكَیْلَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُخْسِرِیْنَ ۟ۚ
اَوْفُواமுழுமைப்படுத்துங்கள்الْـكَيْلَஅளவையைوَلَا تَكُوْنُوْاஆகிவிடாதீர்கள்مِنَ الْمُخْسِرِيْنَ‌ۚ‏நஷ்டம் ஏற்படுத்துபவர்களில்
அவ்Fபுல் கய்ல வலா தகூனூ மினல் முக்ஸிரீன்
“அளவையை நிறைவாக அளவுங்கள்; (அளவையைக்) குறைப்பவர்களாக இராதீர்கள்.
وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِیْمِ ۟ۚ
وَزِنُوْاநிறுங்கள்!بِالْقِسْطَاسِதராசைக் கொண்டுالْمُسْتَقِيْمِ‌ۚ‏நேரான
வ Zஜினூ Bபில்கிஸ்தாஸில் முஸ்தகீம்
“நேரான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள்.
وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟ۚ
وَلَا تَبْخَسُواகுறைக்காதீர்கள்النَّاسَமக்களுக்குاَشْيَآءَபொருள்களைهُمْஅவர்களுடையوَلَا تَعْثَوْاஇன்னும் கடும் குழப்பம் செய்யாதீர்கள்!فِى الْاَرْضِபூமியில்مُفْسِدِيْنَ‌ۚ‏கலகம்செய்தவர்களாக
வ லா தBப்கஸுன் னாஸ அஷ்யா 'அஹும் வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
“மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்.
وَاتَّقُوا الَّذِیْ خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْاَوَّلِیْنَ ۟ؕ
وَاتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்!الَّذِىْ خَلَقَكُمْஉங்களைப் படைத்தவனைوَالْجِـبِلَّةَபடைப்பினங்களையும்الْاَوَّلِيْنَؕ‏முன்னோர்களான
வத்தகுல் லதீ கலககும் வல்ஜிBபில்லதல் அவ்வலீன்
“அன்றியும், உங்களையும், உங்களுக்கு முன்னாலிருந்த படைப்புகளையும் படைத்த அவனுக்கே அஞ்சுங்கள்” (எனக் கூறினார்.)
قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினர்اِنَّمَاۤ اَنْتَநீரெல்லாம்مِنَ الْمُسَحَّرِيْنَۙ‏சூனியம் செய்யப்பட்ட படைப்புகளில் ஒருவர்தான்
காலூ இன்னமா அன்த மினல் முஸஹ்ஹரீன்
அவர்கள் சொன்னார்கள்: “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்.
وَمَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَاِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكٰذِبِیْنَ ۟ۚ
وَمَاۤ اَنْتَநீர் இல்லைاِلَّاதவிரبَشَرٌமனிதராகவேمِّثْلُـنَاஎங்களைப் போன்றوَ اِنْ نَّظُنُّكَநிச்சயமாக உம்மை நாங்கள் கருதுகிறோம்لَمِنَ الْكٰذِبِيْنَ‌ۚ‏பொய்யர்களை சேர்ந்தவராகவே
வ மா அன்த இல்லா Bபஷரும் மித்லுனா வ இன்னளுன்னுக லமினல் காதிBபீன்
“நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி (வேறு) இல்லை; உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே நிச்சயமாக நாங்கள் எண்ணுகிறோம்.
فَاَسْقِطْ عَلَیْنَا كِسَفًا مِّنَ السَّمَآءِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟ؕ
فَاَسْقِطْவிழ வைப்பீராகعَلَيْنَاஎங்கள் மீதுكِسَفًاசில துண்டுகளைمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்اِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَؕ‏உண்மையாளர்களில்
Fப அஸ்கித் 'அலய்னா கிஸFபம் மினஸ் ஸமா'இ இன் குன்த மினஸ் ஸாதிகீன்
“எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால், வானத்திலிருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படிச் செய்யும்.”
قَالَ رَبِّیْۤ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّىْۤஎன் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்வதை
கால ரBப்Bபீ அஃலமு Bபிமா தஃமலூன்
“நீங்கள் செய்து கொண்டிருப்பதை என் இறைவன் நன்கறிவான்” என்று அவர் கூறினார்.
فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ یَوْمِ الظُّلَّةِ ؕ اِنَّهٗ كَانَ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
فَكَذَّبُوْهُஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர்فَاَخَذَஆகவே, பிடித்ததுهُمْஅவர்களைعَذَابُதண்டனைيَوْمِநாளின்الظُّلَّةِ‌ؕமேகம்اِنَّهٗநிச்சயமாக அதுكَانَஇருக்கிறதுعَذَابَதண்டனையாகيَوْمٍஒரு நாளின்عَظِيْمٍ‏பெரிய
Fபகத்தBபூஹு Fப அகதஹும் 'அதாBபு யவ்மிள் ளுல்லஹ்; இன்னஹூ கான 'அதாBப யவ்மின் 'அளீம்
பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது; நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاَيَةً  ؕஓர் அத்தாட்சிوَمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
மேலும், நிச்சயமாக உம் இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
وَاِنَّهٗ لَتَنْزِیْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக இதுلَـتَنْزِيْلُஇறக்கப்பட்டرَبِّஇறைவனால்الْعٰلَمِيْنَؕ‏அகிலங்களின்
வ இன்னஹூ லதன்Zஜீலு ரBப்Bபில் 'ஆலமீன்
மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِیْنُ ۟ۙ
نَزَلَ بِهِஇதை இறக்கினார்الرُّوْحُரூஹ்الْاَمِيْنُۙ‏நம்பிக்கைக்குரியவரான
னZஜல Bபிஹிர் ரூஹுல் அமீன்
ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.
عَلٰی قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِیْنَ ۟ۙ
عَلٰى قَلْبِكَஉமது உள்ளத்தில்لِتَكُوْنَநீர் ஆகவேண்டும் என்பதற்காகمِنَ الْمُنْذِرِيْنَۙ‏எச்சரிப்பவர்களில்
'அலா கல்Bபிக லிதகூன மினல் முன்திரீன்
(நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) -
بِلِسَانٍ عَرَبِیٍّ مُّبِیْنٍ ۟ؕ
بِلِسَانٍமொழியில்عَرَبِىٍّஅரபிمُّبِيْنٍؕ‏தெளிவான
Bபிலிஸானின் 'அரBபிய்யிம் முBபீன்
தெளிவான அரபி மொழியில்.
وَاِنَّهٗ لَفِیْ زُبُرِ الْاَوَّلِیْنَ ۟
وَاِنَّهٗநிச்சயமாக இதுلَفِىْ زُبُرِவேதங்களில் கூறப்பட்டுள்ளதுالْاَوَّلِيْنَ‏முன்னோர்களின்
வ இன்னஹூ லFபீ ZஜுBபுரில் அவ்வலீன்
நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது.
اَوَلَمْ یَكُنْ لَّهُمْ اٰیَةً اَنْ یَّعْلَمَهٗ عُلَمٰٓؤُا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
اَوَلَمْ يَكُنْஇல்லையா?لَّهُمْஇவர்களுக்குاٰيَةًஓர் அத்தாட்சியாகاَنْ يَّعْلَمَهٗஇதை அறிவதேعُلَمٰٓؤُاஅறிஞர்கள்بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏இஸ்ரவேலர்களின்
அவலம் யகுல் லஹும் ஆயதன் அய் யஃலமஹூ 'உலமா'உ Bபனீ இஸ்ரா'ஈல்
பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை(ப் பற்றி நன்கு) அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா?
وَلَوْ نَزَّلْنٰهُ عَلٰی بَعْضِ الْاَعْجَمِیْنَ ۟ۙ
وَلَوْ نَزَّلْنٰهُஇதை நாம் இறக்கி இருந்தால்عَلٰى بَعْضِசிலவற்றின் மீதுالْاَعْجَمِيْنَۙ‏வாயற்ற பிராணிகள்
வ லவ் னZஜ்Zஜல்னாஹு 'அலா Bபஃளில் அஃஜமீன்
இன்னும், நாம் இதனை அரபி (மொழி) அல்லாதவர்களில் ஒருவர் மீது இறக்கி வைத்திருப்போமாயின்;
فَقَرَاَهٗ عَلَیْهِمْ مَّا كَانُوْا بِهٖ مُؤْمِنِیْنَ ۟ؕ
فَقَرَاَهٗஅவர் அதை ஓதி இருந்தாலும்عَلَيْهِمْஇவர்கள் மீதுمَّا كَانُوْاஆகி இருக்க மாட்டார்கள்بِهٖஅதைمُؤْمِنِيْنَؕ‏நம்பிக்கை கொண்டவர்களாக
Fபகர அஹூ 'அலய்ஹிம் மா கானூ Bபிஹீ மு'மினீன்
அவரும் இதை அவர்களுக்கு ஓதிக் காட்டி இருப்பாராயின் அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொண்டோராக இருக்க மாட்டார்கள்.
كَذٰلِكَ سَلَكْنٰهُ فِیْ قُلُوْبِ الْمُجْرِمِیْنَ ۟ؕ
كَذٰلِكَஇவ்வாறுதான்سَلَكْنٰهُநாம் இதை நுழைத்தோம்فِىْ قُلُوْبِஉள்ளங்களில்الْمُجْرِمِيْنَؕ‏குற்றவாளிகளின்
கதாலிக ஸலக்னாஹு Fபீ குலூBபில் முஜ்ரிமீன்
இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனை புகுத்துகிறோம்.
لَا یُؤْمِنُوْنَ بِهٖ حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟ۙ
لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்بِهٖஇதைحَتّٰىவரைيَرَوُاஅவர்கள் பார்க்கின்றالْعَذَابَதண்டனையைالْاَلِيْمَۙ‏வலி தரும்
லா யு'மினூன Bபிஹீ ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
நோவினை செய்யும் வேதனையைக் காணும் வரை, அவர்கள் அதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
فَیَاْتِیَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
فَيَاْتِيَهُمْஆக, அது அவர்களிடம் வரும்بَغْتَةًதிடீரெனوَّهُمْஅவர்களோلَا يَشْعُرُوْنَۙ‏உணராதவர்களாக இருக்க
Fபயாதியஹும் Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
எனவே, அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில், அ(வ் வேதனையான)து திடீரென அவர்களிடம் வரும்.
فَیَقُوْلُوْا هَلْ نَحْنُ مُنْظَرُوْنَ ۟ؕ
فَيَـقُوْلُوْاஅப்போது அவர்கள் கூறுவார்கள்هَلْ نَحْنُ مُنْظَرُوْنَؕ‏நாங்கள் அவகாசம் அளிக்கப்படுவோமா?
Fப யகூலூ ஹல் னஹ்னு முன்ளரூன்
அப்பொழுது அவர்கள்: “எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?” என்று கேட்பார்கள்.
اَفَبِعَذَابِنَا یَسْتَعْجِلُوْنَ ۟
اَفَبِعَذَابِنَا?/ஆகவே, நமது தண்டனையைيَسْتَعْجِلُوْنَ‏அவர்கள் அவசரப்படுகிறார்கள்
அFபBபி 'அதாBபினா யஸ்தஃஜிலூன்
நமது வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
اَفَرَءَیْتَ اِنْ مَّتَّعْنٰهُمْ سِنِیْنَ ۟ۙ
اَفَرَءَيْتَநீர் கவனித்தீரா!اِنْ مَّتَّعْنٰهُمْநாம் அவர்களுக்கு சுகமளித்தால்سِنِيْنَۙ‏பல ஆண்டுகள்
அFபர'அய்த இம் மத்தஃனாஹும் ஸினீன்
நீர் பார்த்தீரா? நாம் அவர்களை(ப் பல)ஆண்டுகள் வரை (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருக்கச் செய்தாலும்,
ثُمَّ جَآءَهُمْ مَّا كَانُوْا یُوْعَدُوْنَ ۟ۙ
ثُمَّபிறகுجَآءَவந்தால்هُمْஅவர்களிடம்مَّاஎதைكَانُوْاஇருந்தனர்يُوْعَدُوْنَۙ‏எச்சரிக்கப்படுவார்கள்
தும்ம ஜா'அஹும் மா கானூ யூ'அதூன்
பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்-
مَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یُمَتَّعُوْنَ ۟ؕ
مَاۤ اَغْنٰىதடுக்காதுعَنْهُمْஅவர்களை விட்டும்مَّا كَانُوْا يُمَتَّعُوْنَؕ‏அவர்கள் சுகமளிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது
மா அக்னா 'அன்ஹும் மா கானூ யுமத்த'ஊன்
அவர்கள் (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குப் பயன்தராது.
وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ اِلَّا لَهَا مُنْذِرُوْنَ ۟
وَمَاۤ اَهْلَكْنَاநாம் அழிக்கவில்லைمِنْ قَرْيَةٍஎந்த ஊரையும்اِلَّاதவிரلَهَاஅதற்குمُنْذِرُوْنَ‌ ۛ ۖ ‏எச்சரிப்பாளர்கள்
வ மா அஹ்லக்னா மின் கர்யதின் இல்லா லஹா முன்திரூன்
இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை.
ذِكْرٰی ۛ۫ وَمَا كُنَّا ظٰلِمِیْنَ ۟
ذِكْرٰى‌ۛஅறிவுரையாகும்وَمَا كُنَّاநாம் இல்லைظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
திக்ரா வமா குன்னா ளாலிமீன்
ஞாபக மூட்டுவதற்காகவே (நபிமார்கள் வந்தார்கள்) - நாம் அநியாயம் செய்பவராக இருக்கவில்லை.
وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّیٰطِیْنُ ۟
وَمَا تَنَزَّلَتْஇறக்கவில்லைبِهِஇதைالشَّيٰطِيْنُ‏ஷைத்தான்கள்
வமா தனZஜ்Zஜலத் Bபிஹிஷ் ஷயாதீன்
இன்னும், ஷைத்தான்கள் இ(வ் வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை.
وَمَا یَنْۢبَغِیْ لَهُمْ وَمَا یَسْتَطِیْعُوْنَ ۟ؕ
وَمَا يَنْۢبَغِىْதகுதியானதும்இல்லைلَهُمْஅவர்களுக்குوَمَا يَسْتَطِيْعُوْنَؕ‏அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்
வமா யம்Bபகீ லஹும் வமா யஸ்ததீ'ஊன்
மேலும், அது அவர்களுக்கு தகுதியுமல்ல; (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.
اِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُوْلُوْنَ ۟ؕ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்عَنِ السَّمْعِகேட்பதிலிருந்துلَمَعْزُوْلُوْنَؕ‏தூரமாக்கப்பட்டவர்கள்
இன்னஹும் 'அனிஸ் ஸம்'இ லமஃZஜூலூன்
நிச்சயமாக ஷைத்தான்கள் (இதைக்) கேட்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِیْنَ ۟ۚ
فَلَا تَدْعُஆக, அழைக்காதீர்مَعَ اللّٰهِஅல்லாஹ்வுடன்اِلٰهًاஒரு கடவுளைاٰخَرَவேறுفَتَكُوْنَநீர் ஆகிவிடுவீர்مِنَ الْمُعَذَّبِيْنَ‌ۚ‏தண்டிக்கப்படுபவர்களில்
Fபலா தத்'உ ம'அல் லாஹி இலாஹன் ஆகர Fபதகூன மினல் மு'அத்தBபீன்
ஆதலின் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்.
وَاَنْذِرْ عَشِیْرَتَكَ الْاَقْرَبِیْنَ ۟ۙ
وَاَنْذِرْஎச்சரிப்பீராகعَشِيْرَتَكَஉமது உறவினர்களைالْاَقْرَبِيْنَۙ‏மிகநெருங்கிய(வர்கள்)
வ அன்திர் 'அஷீரதகல் அக்ரBபீன்
இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
وَاخْفِضْதாழ்த்துவீராக!جَنَاحَكَஉமது புஜத்தைلِمَنِ اتَّبَعَكَஉம்மை பின்பற்றியவர்களுக்குمِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏நம்பிக்கையாளர்களுக்கு
வக்Fபிள் ஜனாஹக லிமனித் தBப 'அக மினல் மு'மினீன்
மேலும், உம்மைப் பின்பற்றி நடக்கும் முஃமின்களிடத்தில் தோள்தாழ்த்தி(க் கனிவுடன்) நடந்துகொள்வீராக!.
فَاِنْ عَصَوْكَ فَقُلْ اِنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۟ۚ
فَاِنْ عَصَوْكَஅவர்கள் உமக்கு மாறு செய்தால்فَقُلْகூறுவீராகاِنِّىْநிச்சயமாக நான்بَرِىْٓءٌநீங்கியவன்مِّمَّا تَعْمَلُوْنَ‌ۚ‏நீங்கள் செய்வதிலிருந்து
Fப இன் அஸவ்க Fபகுல் இன்னீ Bபரீ'உம் மிம்ம்மா தஃமலூன்
ஆனால், அவர்கள் உமக்கு மாறு செய்வார்களாயின்: “நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன்” என்று கூறிவிடுவீராக!
وَتَوَكَّلْ عَلَی الْعَزِیْزِ الرَّحِیْمِ ۟ۙ
وَتَوَكَّلْநம்பிக்கை வைப்பீராகعَلَىமீதுالْعَزِيْزِமிகைத்தவனானالرَّحِيْمِۙ‏பெரும் கருணையாளன்
வ தவக்கல் அலல் 'அZஜீZஜிர் ரஹீம்
இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக!
الَّذِیْ یَرٰىكَ حِیْنَ تَقُوْمُ ۟ۙ
الَّذِىْஅவன்தான்يَرٰٮكَஉம்மை பார்க்கிறான்حِيْنَபோதுتَقُوْمُۙ‏நீர் நிற்கின்ற
அல்லதீ யராக ஹீன தகூம்
அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.
وَتَقَلُّبَكَ فِی السّٰجِدِیْنَ ۟
وَتَقَلُّبَكَபுரலுவதையும்فِى السّٰجِدِيْنَ‏இன்னும் , சிரம் பணிபவர்களுடன்
வ தகல்லுBபக Fபிஸ் ஸாஜிதீன்
இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)
اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்السَّمِيْعُநன்கு செவி ஏற்பவன்الْعَلِيْمُ‏நன்கு அறிந்தவன்
இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; மிக அறிபவன்.
هَلْ اُنَبِّئُكُمْ عَلٰی مَنْ تَنَزَّلُ الشَّیٰطِیْنُ ۟ؕ
هَلْ اُنَبِّئُكُمْஉங்களுக்கு நான் அறிவிக்கவா?عَلٰىமீதுمَنْயார்تَنَزَّلُஇறங்குகிறார்கள்الشَّيٰـطِيْنُؕ‏ஷைத்தான்கள்
ஹல் உனBப்Bபி'உகும் 'அலா மன் தனZஜ்Zஜலுஷ் ஷயாதீன்
எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?
تَنَزَّلُ عَلٰی كُلِّ اَفَّاكٍ اَثِیْمٍ ۟ۙ
تَنَزَّلُஇறங்குகின்றனர்عَلٰى كُلِّஎல்லோர் மீதும்اَفَّاكٍபெரும் பொய்யர்கள்اَثِيْمٍۙ‏பெரும் பாவிகள்
தனZஜ்Zஜலு 'அலா குல்லி அFப்Fபாகின் அதீம்
பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள்.
یُّلْقُوْنَ السَّمْعَ وَاَكْثَرُهُمْ كٰذِبُوْنَ ۟ؕ
يُّلْقُوْنَகூறுகின்றனர்السَّمْعَகேட்டதைوَاَكْثَرُهُمْஅவர்களில் அதிகமானவர்கள்كٰذِبُوْنَؕ‏பொய்யர்கள்
யுல்கூனஸ் ஸம்'அ வ அக்தருஹும் காதிBபூன்
தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே.
وَالشُّعَرَآءُ یَتَّبِعُهُمُ الْغَاوٗنَ ۟ؕ
وَالشُّعَرَآءُகவிஞர்கள்يَتَّبِعُهُمُஅவர்களை பின்பற்றுவார்கள்الْغَاوٗنَؕ‏வழிகேடர்கள்தான்
வஷ்ஷு 'அரா'உ யத்தBபி 'உஹுமுல் காவூன்
இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
اَلَمْ تَرَ اَنَّهُمْ فِیْ كُلِّ وَادٍ یَّهِیْمُوْنَ ۟ۙ
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்فِىْ كُلِّ وَادٍஒவ்வொரு பள்ளத்தாக்கிலும்يَّهِيْمُوْنَۙ‏அலைகின்றனர்
அலம் தர அன்னஹும் Fபீ குல்லி வாதி(ன்)ய் யஹீமூன்
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
وَاَنَّهُمْ یَقُوْلُوْنَ مَا لَا یَفْعَلُوْنَ ۟ۙ
وَاَنَّهُمْஇன்னும் , நிச்சயமாக அவர்கள்يَقُوْلُوْنَகூறுகின்றனர்مَا لَا يَفْعَلُوْنَۙ‏தாங்கள் செய்யாததை
வ அன்னஹும் யகூலூன ம லா யFப்'அலூன்
இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِیْرًا وَّانْتَصَرُوْا مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا ؕ وَسَیَعْلَمُ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَیَّ مُنْقَلَبٍ یَّنْقَلِبُوْنَ ۟۠
اِلَّاதவிரالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُوا الصّٰلِحٰتِநன்மைகளை செய்தனர்وَذَكَرُواநினைவு கூர்ந்தனர்اللّٰهَஅல்லாஹ்வைكَثِيْرًاஅதிகம்وَّانْتَصَرُوْاஇன்னும் பழிவாங்கினார்கள்مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا‌ ؕதங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர்وَسَيَـعْلَمُவிரைவில் அறிவார்கள்الَّذِيْنَ ظَلَمُوْۤا اَىَّஅநியாயம் செய்தவர்கள்/எந்தمُنْقَلَبٍதிரும்பும் இடத்திற்குيَّـنْقَلِبُوْنَ‏திரும்புவார்கள்
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ தகருல் லாஹ கதீர(ன்)வ் வன்தஸரூ மின் Bபஃதி மா ளுலிமூ; வ ஸயஃலமுல் லதீன ளலமூ அய்ய முன்கலBபி(ன்)ய் யன்கலிBபூன்
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.