26. ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)

மக்கீ, வசனங்கள்: 227

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ ۟
تِلْكَஇவைاٰیٰتُவசனங்கள்الْكِتٰبِவேதத்தின்الْمُبِیْنِதெளிவான
தில்க ஆயாதுல் கிதாBபில் முBபீன்
இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ اَلَّا یَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟
لَعَلَّكَஒருவேளை நீர்بَاخِعٌஅழித்துக் கொள்வீர்نَّفْسَكَஉம்மையேاَلَّاஇல்லை என்பதற்காகیَكُوْنُوْاஅவர்கள் ஆகمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
ல'அல்லக Bபாகி'உன் னFப்ஸக அல்லா யகூனூ மு'மினீன்
(நபியே!) அவர்கள் (அல்லாஹ்வை) விசுவாசம் கொள்பவர்களாக இல்லாததின் காரணமாக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!
اِنْ نَّشَاْ نُنَزِّلْ عَلَیْهِمْ مِّنَ السَّمَآءِ اٰیَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خٰضِعِیْنَ ۟
اِنْநாம்نَّشَاْநாடினால்نُنَزِّلْஇறக்குவோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்اٰیَةًஓர் அத்தாட்சியைفَظَلَّتْஆகிவிடும்اَعْنَاقُهُمْஅவர்களின் கழுத்துகள்لَهَاஅதற்குخٰضِعِیْنَபணிந்தவையாக
இன் னஷா னுனZஜ்Zஜில் 'அலய்ஹிம் மினஸ் ஸமா'இ ஆயதன் Fபளல்லத் அஃனாகுஹும் லஹா காளி'ஈன்
நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
وَمَا یَاْتِیْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِیْنَ ۟
وَ مَاமேலும் இல்லைیَاْتِیْهِمْஅவர்களிடம் வருவதுمِّنْஎந்த ஒருذِكْرٍஅறிவுரையும்مِّنَஇருந்துالرَّحْمٰنِஅளவற்ற அருளாளன்مُحْدَثٍபுதிதாகاِلَّاதவிரكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்عَنْهُஅதனைمُعْرِضِیْنَபுறக்கணிப்பவர்களாக
வமா யாதீஹிம் மின் திக்ரிம் மினர் ரஹ்மானி முஹ்ததின் இல்லா கானூ 'அன்ஹு முஃரிளீன்
இன்னும், அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமலிருப்பதில்லை.
فَقَدْ كَذَّبُوْا فَسَیَاْتِیْهِمْ اَنْۢبٰٓؤُا مَا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
فَقَدْஆகவே நிச்சயமாகكَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தார்கள்فَسَیَاْتِیْهِمْஎனவே விரைவில் அவர்களுக்கு வந்து சேரும்اَنْۢبٰٓؤُاசெய்திகள்مَاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோبِهٖஅதைக் கொண்டுیَسْتَهْزِءُوْنَபரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ
Fபகத் கத்தBபூ Fபஸ யாதீஹிம் அம்Bபா'உ மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.
اَوَلَمْ یَرَوْا اِلَی الْاَرْضِ كَمْ اَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِیْمٍ ۟
اَوَ لَمْமேலும், இல்லையாیَرَوْاஅவர்கள் பார்த்தார்கள்اِلَیநோக்கிالْاَرْضِபூமியைكَمْஎத்தனையோاَنْۢبَتْنَاநாம் முளைக்கச் செய்தோம்فِیْهَاஅதில்مِنْஇருந்துكُلِّஒவ்வொருزَوْجٍஜோடியைكَرِیْمٍசிறந்த
அவ லம் யரவ் இலல் அர்ளி கம் அம்Bபத்னா Fபீஹா மின் குல்லி Zஜவ்ஜின் கரீம்
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِیْஇதில்ذٰلِكَஅதிலேلَاٰیَةً ؕஓர் அத்தாட்சிوَ مَاஆனால் இல்லைكَانَஇருந்தார்கள்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்مُّؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَهُوَஅவனேالْعَزِیْزُமிகைத்தவன்الرَّحِیْمُ۠மிக்க கிருபையுடையவன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
அன்றியும் (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன்; மிக்க கிருபை உடையவன்.
وَاِذْ نَادٰی رَبُّكَ مُوْسٰۤی اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۙ
وَ اِذْஇன்னும் (நினைவுகூருவீராக)نَادٰیஅழைத்ததைرَبُّكَஉமது இறைவன்مُوْسٰۤیமூஸாவைاَنِஎன்றுائْتِநீர் செல்வீராகالْقَوْمَசமூகத்தாரிடம்الظّٰلِمِیْنَۙஅநியாயக்காரர்களான
வ இத் னாதா ரBப்Bபுக மூஸா அனி'-தில் கவ்மள் ளாலிமீன்
உம் இறைவன் மூஸாவிடம் “அநியாயக்கார சமூகத்திடம் செல்க” என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக.)
قَوْمَ فِرْعَوْنَ ؕ اَلَا یَتَّقُوْنَ ۟
قَوْمَகூட்டத்தார்فِرْعَوْنَ ؕஃபிர்அவ்னுடையاَلَاஅவர்கள்یَتَّقُوْنَஅஞ்சமாட்டார்களா
கவ்ம Fபிர்'அவ்ன்; அலா யத்தகூன்
“ஃபிர்அவ்னின் சமூகத்தாரிடம்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டார்களா?
قَالَ رَبِّ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّكَذِّبُوْنِ ۟ؕ
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اَنْஎன்றுیُّكَذِّبُوْنِؕஅவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள்
கால ரBப்Bபி இன்னீ அகாFபு அய் யுகத்திBபூன்
(இதற்கு அவர்) “என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
وَیَضِیْقُ صَدْرِیْ وَلَا یَنْطَلِقُ لِسَانِیْ فَاَرْسِلْ اِلٰی هٰرُوْنَ ۟
وَ یَضِیْقُமேலும் சுருங்குகிறதுصَدْرِیْஎனது நெஞ்சம்وَ لَاமேலும் இல்லைیَنْطَلِقُசரளமாகிறதுلِسَانِیْஎனது நாவுفَاَرْسِلْஎனவே அனுப்புவாயாகاِلٰیஇடம்هٰرُوْنَஹாரூன்
வ யளீகு ஸத்ரீ வலா யன்தலிகு லிஸானீ Fப அர்ஸில் இலா ஹாரூன்
“என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது; ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!
وَلَهُمْ عَلَیَّ ذَنْۢبٌ فَاَخَافُ اَنْ یَّقْتُلُوْنِ ۟ۚۖ
وَ لَهُمْமேலும் அவர்களுக்குعَلَیَّஎன் மீதுذَنْۢبٌஒரு குற்றம்فَاَخَافُஎனவே நான் அஞ்சுகிறேன்اَنْஎன்றுیَّقْتُلُوْنِۚஅவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்
வ லஹும் 'அலய்ய தம்Bபுன் Fப அகாFபு அய் யக்துலூன்
“மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது; எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்” (என்றும் கூறினார்).
قَالَ كَلَّا ۚ فَاذْهَبَا بِاٰیٰتِنَاۤ اِنَّا مَعَكُمْ مُّسْتَمِعُوْنَ ۟
قَالَ(இறைவன்) கூறினான்كَلَّا ۚஅவ்வாறில்லைفَاذْهَبَاஆகவே நீங்கள் இருவரும் செல்லுங்கள்بِاٰیٰتِنَاۤநம்முடைய அத்தாட்சிகளுடன்اِنَّاநிச்சயமாக நாம்مَعَكُمْஉங்களுடன்مُّسْتَمِعُوْنَசெவியேற்பவர்களாக இருக்கிறோம்
கால கல்லா Fபத்ஹBபா Bபி ஆயாதினா இன்னா ம'அகும் முஸ்தமி'ஊன்
(அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்” எனக் கூறினான்.
فَاْتِیَا فِرْعَوْنَ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
فَاْتِیَاஆகவே நீங்கள் இருவரும் செல்லுங்கள்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்فَقُوْلَاۤஎனவே கூறுங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்رَسُوْلُதூதர்رَبِّஇறைவனின்الْعٰلَمِیْنَۙஅகிலங்களின்
Fபாதியா Fபிர்'அவ்ன Fபகூலா இன்னா ரஸூலு ரBப்Bபில் 'ஆலமீன்
ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்: “நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள்.
اَنْ اَرْسِلْ مَعَنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
اَنْஎன்றுاَرْسِلْஅனுப்பி விடுவீராகمَعَنَاஎங்களுடன்بَنِیْۤசந்ததியினரைاِسْرَآءِیْلَؕஇஸ்ராயீல்
அன் அர்ஸில் ம'அனா Bபனீ இஸ்ரா'ஈல்
“எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு!” (எனவும் கூறுங்கள்.)
قَالَ اَلَمْ نُرَبِّكَ فِیْنَا وَلِیْدًا وَّلَبِثْتَ فِیْنَا مِنْ عُمُرِكَ سِنِیْنَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்اَلَمْஇல்லையாنُرَبِّكَநாம் உன்னை வளர்க்கفِیْنَاஎங்களிடையேوَلِیْدًاஒரு குழந்தையாகوَّ لَبِثْتَமேலும் நீ தங்கினாய்فِیْنَاஎங்களிடையேمِنْஇருந்துعُمُرِكَஉனது ஆயுளில்سِنِیْنَۙபல ஆண்டுகள்
கால அலம் னுரBப்Bபிக Fபீனா வலீத(ன்)வ் வ லBபித்த Fபீனா மின் 'உமுரிக ஸினீன்
(ஃபிர்அவ்ன்) கூறினான்: நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.)
وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِیْ فَعَلْتَ وَاَنْتَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
وَ فَعَلْتَமேலும் நீ செய்தாய்فَعْلَتَكَஉனது செயலைالَّتِیْஎதைفَعَلْتَநீ செய்தாயோوَ اَنْتَமேலும் நீمِنَஒருவனாகالْكٰفِرِیْنَநன்றிகெட்டவர்களில்
வ Fப'அல்த Fபஃலதகல் லதீ Fப'அல்த வ அன்த மினல் காFபிரீன்
“ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்” (என்றும் கூறினான்).
قَالَ فَعَلْتُهَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّیْنَ ۟ؕ
قَالَஅவர் கூறினார்فَعَلْتُهَاۤநான் அதைச் செய்தேன்اِذًاஅப்பொழுதுوَّ اَنَاமேலும் நான்مِنَஉள்ளவனாகالضَّآلِّیْنَؕவழிதவறியவர்களில்
கால Fப'அல்துஹா இத(ன்)வ் வ அன மினள் ளாலீன்
(மூஸா) கூறினார்: “நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்.
فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِیْ رَبِّیْ حُكْمًا وَّجَعَلَنِیْ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
فَفَرَرْتُஎனவே நான் தப்பியோடினேன்مِنْكُمْஉங்களிடமிருந்துلَمَّاபோதுخِفْتُكُمْநான் உங்களை அஞ்சியفَوَهَبَபின்னர் வழங்கினான்لِیْஎனக்குرَبِّیْஎன் இறைவன்حُكْمًاஞானத்தைوَّ جَعَلَنِیْமேலும் என்னை ஆக்கினான்مِنَஒருவனாகالْمُرْسَلِیْنَதூதர்களில்
FபFபரர்து மின்கும் லம் மா கிFப்துகும் FபவஹBப லீ ரBப்Bபீ ஹுக்ம(ன்)வ் வ ஜ'அலனீ மினல் முர்ஸலீன்
“ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَیَّ اَنْ عَبَّدْتَّ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
وَ تِلْكَமேலும் அதுنِعْمَةٌஓர் உபகாரம்تَمُنُّهَاநீ அதைச் சொல்லிக் காட்டுகிறாய்عَلَیَّஎன் மீதுاَنْஎன்னவென்றால்عَبَّدْتَّநீ அடிமைப்படுத்தினாய்بَنِیْۤசந்ததியினரைاِسْرَآءِیْلَؕஇஸ்ராயீல்
வ தில்க னிஃமதுன் தமுன் னுஹா 'அலய்ய அன் 'அBப்Bபத்த Bபனீ இஸ்ரா'ஈல்
“பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?”
قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِیْنَ ۟ؕ
قَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்وَ مَاமேலும் என்னرَبُّஇறைவன்الْعٰلَمِیْنَؕஅகிலங்களின்
கால Fபிர்'அவ்னு வமா ரBப்Bபுல் 'ஆலமீன்
அதற்கு ஃபிர்அவ்ன்: “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான்.
قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِیْنَ ۟
قَالَகூறினார்رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ مَاமேலும் எவைبَیْنَهُمَا ؕஅவையிரண்டிற்கும் இடையில் (உள்ளனவோ அவற்றிற்கும்)اِنْ(இதனை)كُنْتُمْநீங்கள்مُّوْقِنِیْنَஉறுதியாக நம்புபவர்களாக இருந்தால்
கால ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா இன் குன்தும் மூகினீன்
அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார்.
قَالَ لِمَنْ حَوْلَهٗۤ اَلَا تَسْتَمِعُوْنَ ۟
قَالَகூறினான்لِمَنْஎவர்களிடம்حَوْلَهٗۤஅவனைச் சுற்றிاَلَاநீங்கள்تَسْتَمِعُوْنَசெவிமடுக்க மாட்டீர்களா
கால லிமன் ஹவ்லஹூ அலா தஸ்தமி'ஊன்
தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி: “நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?” என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான்.
قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبُّكُمْஉங்கள் இறைவன்وَ رَبُّமேலும் இறைவன்اٰبَآىِٕكُمُஉங்கள் முன்னோர்களின்الْاَوَّلِیْنَமுந்தைய
கால ரBப்Bபுகும் வ ரBப்Bபு ஆBபா'இகுமுல் அவ்வலீன்
(அப்பொழுது மூஸா) “உங்களுக்கும் இறைவன்; உங்கள் முன்னவர்களான மூதாதையருக்கும் (அவனே) இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
قَالَ اِنَّ رَسُوْلَكُمُ الَّذِیْۤ اُرْسِلَ اِلَیْكُمْ لَمَجْنُوْنٌ ۟
قَالَகூறினான்اِنَّநிச்சயமாகرَسُوْلَكُمُஉங்கள் தூதர்الَّذِیْۤஎவர்اُرْسِلَஅனுப்பப்பட்டாரோاِلَیْكُمْஉங்களிடம்لَمَجْنُوْنٌநிச்சயமாக ஒரு பைத்தியக்காரரே
கால இன்ன ரஸூலகுமுல் லதீ உர்ஸில இலய்கும் லமஜ்னூன்
(அதற்கு ஃபிர்அவ்ன்:) “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக் காரரே ஆவார்” எனக் கூறினான்.
قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَیْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟
قَالَகூறினார்رَبُّஇறைவன்الْمَشْرِقِகிழக்குوَ الْمَغْرِبِமற்றும் மேற்குوَ مَاமேலும் எவைبَیْنَهُمَا ؕஅவ்விரண்டிற்கும் இடையில்اِنْஎனில்كُنْتُمْநீங்கள்تَعْقِلُوْنَசிந்திப்பவர்களாக
கால ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிBபி வமா Bபய்ன ஹுமா இன் குன்தும் தஃகிலூன்
(அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
قَالَ لَىِٕنِ اتَّخَذْتَ اِلٰهًا غَیْرِیْ لَاَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُوْنِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்لَىِٕنِநிச்சயமாகاتَّخَذْتَநீர் ஆக்கிக்கொண்டால்اِلٰهًاஒரு இறைவனைغَیْرِیْஎன்னைத் தவிரلَاَجْعَلَنَّكَநிச்சயமாக உம்மை ஆக்குவேன்مِنَஒருவராகالْمَسْجُوْنِیْنَசிறைப்பட்டவர்களில்
கால ல'இனித் தகத்த இலாஹன் கய்ரீ ல அஜ்'அலன்னக மினல் மஸ்ஜூனீன்
(அதற்கு ஃபிர்அவ்ன்:) “நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்” எனக் கூறினான்.
قَالَ اَوَلَوْ جِئْتُكَ بِشَیْءٍ مُّبِیْنٍ ۟ۚ
قَالَஅவர் கூறினார்اَوَ لَوْஇருந்தாலுமா?جِئْتُكَநான் உமக்குக் கொண்டு வந்தால்بِشَیْءٍஒரு பொருளைمُّبِیْنٍۚதெளிவான
கால அவலவ் ஜி'துக Bபிஷய்'இம் முBபீன்
(அதற்கு அவர்) “நான் உனக்குத் தெளிவான (அத்தாட்சிப்) பொருளை கொண்டு வந்தாலுமா?” எனக் கேட்டார்.
قَالَ فَاْتِ بِهٖۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالَகூறினான்فَاْتِஅப்படியானால் கொண்டு வாரும்بِهٖۤஅதைاِنْஎன்றால்كُنْتَநீர் இருப்பீர்مِنَஇருந்துالصّٰدِقِیْنَஉண்மையாளர்களில்
கால Fபாதி Bபிஹீ இன் குன்த மினஸ் ஸாதிகீன்
“நீர் உண்மையாளராக இருப்பின் அதை நீர் கொண்டு வாரும்” என (ஃபிர்அவ்ன்) பதில் கூறினான்.
فَاَلْقٰی عَصَاهُ فَاِذَا هِیَ ثُعْبَانٌ مُّبِیْنٌ ۟ۚۖ
فَاَلْقٰیஉடனே அவர் எறிந்தார்عَصَاهُதம் கைத்தடியைفَاِذَاஅப்பொழுதுهِیَஅதுثُعْبَانٌஒரு பெரும் பாம்பாகمُّبِیْنٌۚۖதெளிவானதாக
Fப அல்கா 'அஸாஹு Fப இதா ஹிய துஃBபானும் முBபீன்
ஆகவே அவர் தம் தடியைக் கீழே எறிந்தார்; அது தெளிவானதொரு மலைப்பாம்பாகி விட்டது.
وَّنَزَعَ یَدَهٗ فَاِذَا هِیَ بَیْضَآءُ لِلنّٰظِرِیْنَ ۟۠
وَّ نَزَعَமேலும் அவர் வெளியே எடுத்தார்یَدَهٗதம் கையைفَاِذَاஉடனேهِیَஅதுبَیْضَآءُவெண்மையாகلِلنّٰظِرِیْنَ۠பார்ப்பவர்களுக்கு
வ னZஜ'அ யதஹூ Fப-இதா ஹிய Bபய்ளா'உ லின்னா ளிரீன்
இன்னும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார்; உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیْمٌ ۟ۙ
قَالَகூறினார்لِلْمَلَاِதலைவர்களிடம்حَوْلَهٗۤதன்னைச் சுற்றியிருந்தاِنَّநிச்சயமாகهٰذَاஇவன்لَسٰحِرٌசூனியக்காரன்عَلِیْمٌۙநன்கு அறிந்தவன்
கால லில்மல-இ ஹவ்லஹூ இன்ன ஹாதா லஸாஹிருன் 'அலீம்
(ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி “இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே!” என்று கூறினான்.
یُّرِیْدُ اَنْ یُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهٖ ۖۗ فَمَاذَا تَاْمُرُوْنَ ۟
یُّرِیْدُஅவன் நாடுகிறான்اَنْஎன்றுیُّخْرِجَكُمْஉங்களை வெளியேற்றمِّنْஇருந்துاَرْضِكُمْஉங்கள் பூமியில்بِسِحْرِهٖ ۖۗதன் சூனியத்தால்فَمَا ذَاஎனவே என்னتَاْمُرُوْنَநீங்கள் ஆலோசனை கூறுகிறீர்கள்
யுரீது அய் யுக்ரிஜகும் மின் அர்ளிகும் Bபிஸிஹ்ரிஹீ Fபமாதா தாமுரூன்
“இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன?” (என்று கேட்டான்.)
قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَرْجِهْஅவருக்குத் தவணையளிப்பீராகوَ اَخَاهُமேலும் அவருடைய சகோதரரையும்وَ ابْعَثْமேலும் நீர் அனுப்புவீராகفِیஉள்ளالْمَدَآىِٕنِநகரங்களுக்குحٰشِرِیْنَۙஒன்று திரட்டுவோரை
காலூ அர்ஜிஹ் வ அகாஹு வBப்'அத் Fபில்மதா'இனி ஹாஷிரீன்
அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
یَاْتُوْكَ بِكُلِّ سَحَّارٍ عَلِیْمٍ ۟
یَاْتُوْكَஅவர்கள் உம்மிடம் கொண்டு வருவார்கள்بِكُلِّஒவ்வொருسَحَّارٍசூனியக்காரரையும்عَلِیْمٍநன்கு அறிந்தவரையும்
யாதூக Bபிகுல்லி ஸஹ் ஹாரின் 'அலீம்
(அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
فَجُمِعَ السَّحَرَةُ لِمِیْقَاتِ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟ۙ
فَجُمِعَஎனவே ஒன்று சேர்க்கப்பட்டனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்لِمِیْقَاتِகுறிப்பிட்ட நேரத்திற்காகیَوْمٍஒரு நாளின்مَّعْلُوْمٍۙஅறியப்பட்ட
Fப ஜுமி'அஸ் ஸஹரது லிமீகாதி யவ்மிம் மஃலூம்
சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.
وَّقِیْلَ لِلنَّاسِ هَلْ اَنْتُمْ مُّجْتَمِعُوْنَ ۟ۙ
وَّ قِیْلَமேலும் கூறப்பட்டதுلِلنَّاسِமக்களிடம்هَلْஎன்னاَنْتُمْநீங்கள்مُّجْتَمِعُوْنَۙஒன்று கூடுபவர்களா
வ கீல லின்னாஸி ஹல் அன்தும் முஜ்தமி'ஊன்
இன்னும் மக்களிடம் “(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா?” என்று கேட்கப்பட்டது.
لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ اِنْ كَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟
لَعَلَّنَاஒருவேளை நாம்نَتَّبِعُபின்பற்றுவோம்السَّحَرَةَசூனியக்காரர்களைاِنْஎன்றால்كَانُوْاஅவர்கள் இருந்தால்هُمُஅவர்களேالْغٰلِبِیْنَவெற்றியாளர்கள்
ல'அல்லனா னத்தBபி'உஸ் ஸஹரத இன் கானூ ஹுமுல் காலிBபீன்
ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றக் கூடும் (என்றுங் கூறப்பட்டது).
فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَىِٕنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟
فَلَمَّاஆகவே எப்போதுجَآءَவந்தார்களோالسَّحَرَةُசூனியக்காரர்கள்قَالُوْاகூறினார்கள்لِفِرْعَوْنَஃபிர்அவ்னிடம்اَىِٕنَّநிச்சயமாகவாلَنَاஎங்களுக்குلَاَجْرًاதக்க கூலிاِنْஒருவேளைكُنَّاநாங்கள் ஆகிவிட்டால்نَحْنُநாங்களேالْغٰلِبِیْنَவெற்றியாளர்களாக
Fபலம்மா ஜா'அஸ் ஸஹரது காலூ லி Fபிர்'அவ்ன அ'இன்ன லனா ல அஜ்ஜ்ரன் இன் குன்னா னஹ்னுல் காலிBபீன்
ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லவா ?” என்று கேட்டார்கள்.
قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ الْمُقَرَّبِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்نَعَمْஆம்وَ اِنَّكُمْமேலும் நிச்சயமாக நீங்கள்اِذًاஅப்படியானால்لَّمِنَநிச்சயமாகالْمُقَرَّبِیْنَநெருக்கமானவர்கள்
கால ன'அம் வ இன்னகும் இதல் லமினல் முகர்ரBபீன்
“ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்” என்று அவன் கூறினான்.
قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟
قَالَகூறினார்لَهُمْஅவர்களிடம்مُّوْسٰۤیமூஸாاَلْقُوْاஎறியுங்கள்مَاۤஎதைاَنْتُمْநீங்கள்مُّلْقُوْنَஎறியப்போகிறீர்களோ
கால லஹும் மூஸா அல்கூ மா அன்தும் முல்கூன்
மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்.
فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِیَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَنَحْنُ الْغٰلِبُوْنَ ۟
فَاَلْقَوْاஆகவே அவர்கள் எறிந்தார்கள்حِبَالَهُمْதங்கள் கயிறுகளைوَ عِصِیَّهُمْமேலும் தங்கள் தடிகளையும்وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்بِعِزَّةِவல்லமையின் மீது சத்தியமாகفِرْعَوْنَஃபிர்அவ்னுடையاِنَّاநிச்சயமாக நாம்لَنَحْنُஉறுதியாக நாமேالْغٰلِبُوْنَவெற்றியாளர்கள்
Fப அல்கவ் ஹிBபாலஹும் வ 'இஸிய்யஹும் வ காலூ Bபி'இZஜ்Zஜதி Fபிர்'அவ்ன இன்னா லனஹ்னுல் காலிBபூன்
ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்” என்று கூறினார்கள்.
فَاَلْقٰی مُوْسٰی عَصَاهُ فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚۖ
فَاَلْقٰیஉடனே எறிந்தார்مُوْسٰیமூஸாعَصَاهُதம் கைத்தடியைفَاِذَاஅப்போதுهِیَஅதுتَلْقَفُவிழுங்கியதுمَاஎவற்றைیَاْفِكُوْنَۚۖஅவர்கள் பொய்யாகப் புனைந்தார்களோ
Fப அல்கா மூஸா 'அஸாஹு Fப இதா ஹிய தல்கFபு மா யாFபிகூன்
பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.
فَاُلْقِیَ السَّحَرَةُ سٰجِدِیْنَ ۟ۙ
فَاُلْقِیَஉடனே வீழ்ந்தார்கள்السَّحَرَةُசூனியக்காரர்கள்سٰجِدِیْنَۙஸஜ்தா செய்தவர்களாக
Fப உல்கியஸ் ஸஹரது ஸாஜிதீன்
(இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்.
قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اٰمَنَّاநாங்கள் ஈமான் கொண்டோம்بِرَبِّஇறைவனைالْعٰلَمِیْنَۙஅகிலங்களின்
காலூ ஆமன்னா Bபி ரBப்Bபில் 'ஆலமீன்
அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம்.
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
رَبِّஇறைவன்مُوْسٰیமூஸாوَ هٰرُوْنَமற்றும் ஹாரூன்
ரBப்Bபி மூஸா வ ஹாரூன்
“அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.” என்று கூறினர்.
قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ۚ اِنَّهٗ لَكَبِیْرُكُمُ الَّذِیْ عَلَّمَكُمُ السِّحْرَ ۚ فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ؕ۬ لَاُقَطِّعَنَّ اَیْدِیَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُوصَلِّبَنَّكُمْ اَجْمَعِیْنَ ۟ۚ
قَالَ(அவன்) கூறினான்اٰمَنْتُمْநீங்கள் நம்பிக்கை கொண்டீர்களாلَهٗஅவருக்குقَبْلَமுன்னதாகاَنْநான்اٰذَنَஅனுமதி அளிப்பதற்குلَكُمْ ۚஉங்களுக்குاِنَّهٗநிச்சயமாக அவர்لَكَبِیْرُكُمُநிச்சயமாக உங்கள் தலைவர்الَّذِیْஎவர்عَلَّمَكُمُஉங்களுக்குக் கற்றுக்கொடுத்தாரோالسِّحْرَ ۚசூனியத்தைفَلَسَوْفَஎனவே விரைவில்تَعْلَمُوْنَ ؕ۬நீங்கள் அறிந்துகொள்வீர்கள்لَاُقَطِّعَنَّநான் நிச்சயமாகத் துண்டிப்பேன்اَیْدِیَكُمْஉங்கள் கைகளைوَ اَرْجُلَكُمْஉங்கள் கால்களையும்مِّنْஇருந்துخِلَافٍமாறிமாறிوَّ لَاُصَلِّبَنَّكُمْமேலும் உங்களை நிச்சயமாகச் சிலுவையில் அறைவேன்اَجْمَعِیْنَۚஅனைவரையும்
கால ஆமன்தும் லஹூ கBப்ல அன் ஆதன லகும் இன்னஹூ லகBபீருகுமுல் லதீ 'அல்ல மகுமுஸ் ஸிஹ்ர Fபலஸவ்Fப தஃலமூன்; ல உகத்தி'அன்ன அய்தியகும் வ அர்ஜுலகும் மின் கிலாFபி(ன்)வ் வ ல உஸல்லிBபன்ன கும் அஜ்ம'ஈன்
(அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுகொடுத்த உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.
قَالُوْا لَا ضَیْرَ ؗ اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۟ۚ
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَاஇல்லைضَیْرَ ؗபாதிப்புاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلٰیநோக்கிرَبِّنَاஎங்கள் இறைவனைمُنْقَلِبُوْنَۚதிரும்பிச் செல்பவர்கள்
காலூ ல ளய்ர இன்னா இலா ரBப்Bபினா முன்கல்லிBபூன்
“(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்” எனக் கூறினார்கள்.
اِنَّا نَطْمَعُ اَنْ یَّغْفِرَ لَنَا رَبُّنَا خَطٰیٰنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ الْمُؤْمِنِیْنَ ۟ؕ۠
اِنَّاநிச்சயமாக நாங்கள்نَطْمَعُநாங்கள் ஆசைப்படுகிறோம்اَنْஎன்றுیَّغْفِرَமன்னிப்பான்لَنَاஎங்களுக்குرَبُّنَاஎங்கள் இறைவன்خَطٰیٰنَاۤஎங்கள் தவறுகளைاَنْஏனெனில்كُنَّاۤநாங்கள் ஆகிவிட்டோம்اَوَّلَமுதலாமவர்களாகالْمُؤْمِنِیْنَؕ۠நம்பிக்கையாளர்களில்
இன்னா னத்ம'உ அய் யக்Fபிர லனா ரBப்Bபுனா கதா யானா அன் குன்னா அவ்வலல் மு'மினீன்
“(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றுங் கூறினார்கள்).
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَسْرِ بِعِبَادِیْۤ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟
وَ اَوْحَیْنَاۤமேலும் நாம் வஹீ அறிவித்தோம்اِلٰیநோக்கிمُوْسٰۤیமூஸாاَنْஎன்றுاَسْرِஇரவில் செல்லுங்கள்بِعِبَادِیْۤஎனது அடியார்களுடன்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مُّتَّبَعُوْنَபின்தொடரப்படுவீர்கள்
வ அவ்ஹய்னா இலா மூஸா அன் அஸ்ரி Bபி'இBபாதீ இன்னகும் முத்தBப'ஊன்
மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்.
فَاَرْسَلَ فِرْعَوْنُ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۚ
فَاَرْسَلَஎனவே அனுப்பினார்فِرْعَوْنُஃபிர்அவ்ன்فِیஉள்ளேالْمَدَآىِٕنِநகரங்களில்حٰشِرِیْنَۚதிரட்டுபவர்களை
Fப அர்ஸல Fபிர்'அவ்னு Fபில்மதா'இனி ஹாஷிரீன்
(அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான்.
اِنَّ هٰۤؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِیْلُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகهٰۤؤُلَآءِஇவர்கள்لَشِرْذِمَةٌஒரு சிறு கூட்டத்தினர்قَلِیْلُوْنَۙசொற்பமானவர்கள்
இன்ன ஹா'உலா'இ லஷிர் திமதுன் கலீலூன்
“நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான்.
وَاِنَّهُمْ لَنَا لَغَآىِٕظُوْنَ ۟ۙ
وَ اِنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்لَنَاநமக்குلَغَآىِٕظُوْنَۙகோபமூட்டுபவர்கள்
வ இன்னஹும் லனா லகா'இளூன்
“நிச்சயமாக இவர்கள் நம்மை(ப் பெருங்) கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
وَاِنَّا لَجَمِیْعٌ حٰذِرُوْنَ ۟ؕ
وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَجَمِیْعٌஒரு பெரும் கூட்டத்தினர்حٰذِرُوْنَؕஎச்சரிக்கையாக இருப்பவர்கள்
வ இன்னா லஜமீ'உன் ஹாதிரூன்
“நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்.”
فَاَخْرَجْنٰهُمْ مِّنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
فَاَخْرَجْنٰهُمْஎனவே அவர்களை நாம் வெளியேற்றினோம்مِّنْஇருந்துجَنّٰتٍதோட்டங்கள்وَّ عُیُوْنٍۙஇன்னும் நீரூற்றுகள்
Fப அக்ரஜ்னாஹும் மின் ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம்.
وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ
وَّ كُنُوْزٍபுதையல்களையும்وَّ مَقَامٍஇருப்பிடத்தையும்كَرِیْمٍۙமேன்மையான
வ குனூZஜி(ன்)வ் வ ம காமின் கரீம்
இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).
كَذٰلِكَ ؕ وَاَوْرَثْنٰهَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
كَذٰلِكَ ؕஅவ்வாறேوَ اَوْرَثْنٰهَاமேலும் அவற்றை நாம் வாரிசாக்கினோம்بَنِیْۤசந்ததியினருக்குاِسْرَآءِیْلَؕஇஸ்ராயீல்
கதாலிக வ அவ்ரத்னாஹா Bபனீ இஸ்ரா'ஈல்
அவ்வாறு தான் (அவர்களை நடத்தினோம்); அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசுகளாகவும் நாம் ஆக்கினோம்.
فَاَتْبَعُوْهُمْ مُّشْرِقِیْنَ ۟
فَاَتْبَعُوْهُمْஎனவே அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்مُّشْرِقِیْنَசூரிய உதயத்தின்போது
Fப அத்Bப'ஊஹும் முஷ்ரிகீன்
பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰۤی اِنَّا لَمُدْرَكُوْنَ ۟ۚ
فَلَمَّاபின்னர், எப்போதுتَرَآءَஒருவரையொருவர் கண்டனரோالْجَمْعٰنِஇரு கூட்டங்களும்قَالَகூறினார்கள்اَصْحٰبُதோழர்கள்مُوْسٰۤیமூஸாவின்اِنَّاநிச்சயமாக நாம்لَمُدْرَكُوْنَۚநிச்சயமாகப் பிடிபட்டுவிடுவோம்
Fபலம்மா தரா'அல் ஜம்'ஆனி கால அஸ் ஹாBபு மூஸா இன்னா லமுத்ரகூன்
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.
قَالَ كَلَّا ۚ اِنَّ مَعِیَ رَبِّیْ سَیَهْدِیْنِ ۟
قَالَஅவர் கூறினார்كَلَّا ۚஒருபோதும் இல்லைاِنَّநிச்சயமாகمَعِیَஎன்னுடன்رَبِّیْஎன் இறைவன்سَیَهْدِیْنِஅவன் எனக்கு வழிகாட்டுவான்
கால கல்லா இன்ன ம'இய ரBப்Bபீ ஸ யஹ்தீன்
அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்;.
فَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِیْمِ ۟ۚ
فَاَوْحَیْنَاۤஎனவே நாம் அறிவித்தோம்اِلٰیநோக்கிمُوْسٰۤیமூஸாاَنِஎன்றுاضْرِبْஅடிப்பீராகبِّعَصَاكَஉமது கைத்தடியால்الْبَحْرَ ؕகடலைفَانْفَلَقَஉடனே அது பிளந்ததுفَكَانَஅப்பொழுது ஆனதுكُلُّஒவ்வொருفِرْقٍபகுதியும்كَالطَّوْدِமலையைப் போலالْعَظِیْمِۚமிகப்பெரிய
Fப அவ்ஹய்னா இலா மூஸா அனிள்ரிBப் Bபி'அஸாகல் Bபஹ்ர Fபன்Fபலக Fபகான குல்லு Fபிர்கின் கத்தவ்தில் 'அளீம்
உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
وَاَزْلَفْنَا ثَمَّ الْاٰخَرِیْنَ ۟ۚ
وَ اَزْلَفْنَاமேலும் நாம் நெருங்கச் செய்தோம்ثَمَّஅங்கேالْاٰخَرِیْنَۚமற்றவர்களை
வ அZஜ்லFப்னா தம்மல் ஆகரீன்
(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.
وَاَنْجَیْنَا مُوْسٰی وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۚ
وَ اَنْجَیْنَاமேலும் நாம் காப்பாற்றினோம்مُوْسٰیமூஸாவைوَ مَنْமேலும் எவர்مَّعَهٗۤஅவருடன்اَجْمَعِیْنَۚஅனைவரையும்
வ அன்ஜய்னா மூஸா வ மம் ம'அஹூ அஜ்ம'ஈன்
மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِیْنَ ۟ؕ
ثُمَّபின்னர்اَغْرَقْنَاநாம் மூழ்கடித்தோம்الْاٰخَرِیْنَؕமற்றவர்களை
தும்ம அக்ரக்னல் ஆகரீன்
பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةً ؕஓர் அத்தாட்சிوَ مَاமேலும் இல்லைكَانَஇருந்தார்கள்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்مُّؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயாஹ்; வமா கான அக்தரு ஹு மு'மினீன்
நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَهُوَஅவனேالْعَزِیْزُமிகைத்தவன்الرَّحِیْمُ۠மிக்க கிருபையுடையவன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
(நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ اِبْرٰهِیْمَ ۟ۘ
وَ اتْلُமேலும் ஓதிக்காட்டுவீராகعَلَیْهِمْஅவர்களுக்குنَبَاَசெய்தியைاِبْرٰهِیْمَۘஇப்ராஹீமின்
வத்லு 'அலய்ஹிம் னBப-அ இBப்ராஹீம்
இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ ۟
اِذْஅப்போதுقَالَஅவர் கூறினார்لِاَبِیْهِதன் தந்தையிடம்وَ قَوْمِهٖதன் சமுதாயத்தினரிடமும்مَاஎதைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்கள்
இத் கால லி அBபீஹி வ கவ்மிஹீ மா தஃBபுதூன்
அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது,
قَالُوْا نَعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَعْبُدُநாங்கள் வணங்குகிறோம்اَصْنَامًاசிலைகளைفَنَظَلُّஎனவே நாங்கள் நிலைத்திருக்கிறோம்لَهَاஅவற்றிற்குعٰكِفِیْنَவழிபடுபவர்களாக
காலூ னஃBபுது அஸ்னாமன் Fபனளல்லு லஹா 'ஆகிFபீன்
அவர்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ هَلْ یَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَ ۟ۙ
قَالَஅவர் கூறினார்هَلْஎன்னیَسْمَعُوْنَكُمْஉங்களை அவை செவியுறுகின்றனவாاِذْபோதுتَدْعُوْنَۙநீங்கள் அழைக்கிறீர்கள்
கால ஹல் யஸ்ம'ஊன கும் இத் தத்'ஊன்
(அதற்கு இப்ராஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?
اَوْ یَنْفَعُوْنَكُمْ اَوْ یَضُرُّوْنَ ۟
اَوْஅல்லதுیَنْفَعُوْنَكُمْஉங்களுக்குப் பயனளிக்கிறார்களாاَوْஅல்லதுیَضُرُّوْنَதீங்கிழைக்கிறார்களா
அவ் யன்Fப'ஊனகும் அவ் யளுர்ரூன்
“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)
قَالُوْا بَلْ وَجَدْنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ یَفْعَلُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்بَلْமாறாகوَجَدْنَاۤநாங்கள் கண்டோம்اٰبَآءَنَاஎங்கள் முன்னோர்களைكَذٰلِكَஇவ்வாறேیَفْعَلُوْنَஅவர்கள் செய்வதை
காலூ Bபல் வஜத்னா ஆBபா 'அனா கதாலிக யFப்'அலூன்
(அப்போது அவர்கள்) “இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
قَالَ اَفَرَءَیْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۟ۙ
قَالَஅவர் கூறினார்اَفَرَءَیْتُمْநீங்கள் கவனித்தீர்களா?مَّاஎதனைكُنْتُمْநீங்கள்تَعْبُدُوْنَۙவணங்கிக் கொண்டிருந்தீர்களோ
கால அFபர 'அய்தும் மா குன்தும் தஃBபுதூன்
அவ்வாறாயின், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கூறினார்.
اَنْتُمْ وَاٰبَآؤُكُمُ الْاَقْدَمُوْنَ ۟ؗۖ
اَنْتُمْநீங்கள்وَ اٰبَآؤُكُمُஉங்கள் மூதாதையர்களும்الْاَقْدَمُوْنَؗۖமுந்தையவர்களான
அன்தும் வ ஆBபா'உகுமுல் அக்தமூன்
“நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).”
فَاِنَّهُمْ عَدُوٌّ لِّیْۤ اِلَّا رَبَّ الْعٰلَمِیْنَ ۟ۙ
فَاِنَّهُمْஆகவே நிச்சயமாக அவர்கள்عَدُوٌّபகைவர்கள்لِّیْۤஎனக்குاِلَّاதவிரرَبَّஇறைவனைالْعٰلَمِیْنَۙஅகிலங்களின்
Fப இன்னஹும் 'அதுவ்வ்வுல் லீ இல்லா ரBப்Bபல் 'ஆலமீன்
“நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).”
الَّذِیْ خَلَقَنِیْ فَهُوَ یَهْدِیْنِ ۟ۙ
الَّذِیْஎவன்خَلَقَنِیْஎன்னைப் படைத்தானோفَهُوَஅவனேیَهْدِیْنِۙஎனக்கு நேர்வழி காட்டுகிறான்
அல்லதீ கலகனீ Fப ஹுவ யஹ்தீன்
“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
وَالَّذِیْ هُوَ یُطْعِمُنِیْ وَیَسْقِیْنِ ۟ۙ
وَ الَّذِیْமேலும் எவன்هُوَஅவன்یُطْعِمُنِیْஎனக்கு உணவளிக்கிறான்وَ یَسْقِیْنِۙமேலும் எனக்குப் பருகத் தருகிறான்
வல்லதீ ஹுவ யுத்'இமுனீ வ யஸ்கீன்
“அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”
وَاِذَا مَرِضْتُ فَهُوَ یَشْفِیْنِ ۟
وَ اِذَاமேலும் எப்போதுمَرِضْتُநான் நோயுற்றால்فَهُوَஅவனேیَشْفِیْنِ۪ۙஎனக்குக் குணமளிக்கிறான்
வ இதா மரிள்து Fபஹுவ யஷ்Fபீன்
“நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
وَالَّذِیْ یُمِیْتُنِیْ ثُمَّ یُحْیِیْنِ ۟ۙ
وَ الَّذِیْமேலும் எவன்یُمِیْتُنِیْஎன்னை மரணிக்கச் செய்கிறானோثُمَّபின்னர்یُحْیِیْنِۙஎன்னை உயிர்ப்பிப்பான்
வல்லதீ யுமீதுனீ தும்ம யுஹ்யீன்
“மேலும் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”
وَالَّذِیْۤ اَطْمَعُ اَنْ یَّغْفِرَ لِیْ خَطِیْٓـَٔتِیْ یَوْمَ الدِّیْنِ ۟ؕ
وَ الَّذِیْۤமேலும் எவன்اَطْمَعُநான் ஆதரவு வைக்கிறேன்اَنْஎன்றுیَّغْفِرَஅவன் மன்னிப்பான்لِیْஎனக்குخَطِیْٓـَٔتِیْஎனது குற்றத்தைیَوْمَநாளில்الدِّیْنِؕதீர்ப்பு
வல்லதீ அத்ம'உ அய் யக்Fபிர லீ கதீ' அதீ யவ்மத் தீன்
“நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.
رَبِّ هَبْ لِیْ حُكْمًا وَّاَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ۟ۙ
رَبِّஎன் இறைவாهَبْஅருள்வாயாகلِیْஎனக்குحُكْمًاஞானத்தைوَّ اَلْحِقْنِیْமேலும் என்னைச் சேர்த்தருள்வாயாகبِالصّٰلِحِیْنَۙநல்லோர்களுடன்
ரBப்Bபி ஹBப் லீ ஹுக்ம(ன்)வ் வ அல்ஹிக்னீ Bபிஸ் ஸாலிஹீன்
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”
وَاجْعَلْ لِّیْ لِسَانَ صِدْقٍ فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
وَ اجْعَلْமேலும் ஆக்குவாயாகلِّیْஎனக்குلِسَانَபுகழைصِدْقٍஉண்மையானفِیமத்தியில்الْاٰخِرِیْنَۙபிற்காலத்தவர்கள்
வஜ்'அல் லீ லிஸான ஸித்கின் Fபில் ஆகிரீன்
“இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”
وَاجْعَلْنِیْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِیْمِ ۟ۙ
وَ اجْعَلْنِیْஎன்னை ஆக்குவாயாகمِنْஒருவனாகوَّرَثَةِவாரிசுகளில்جَنَّةِசுவனத்தின்النَّعِیْمِۙஇன்பம் நிறைந்த
வஜ்'அல்னீ மி(ன்)வ் வரததி ஜன்ன்னதின் ன'ஈம்
“இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”
وَاغْفِرْ لِاَبِیْۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّیْنَ ۟ۙ
وَ اغْفِرْமேலும் மன்னிப்பாயாகلِاَبِیْۤஎன் தந்தைக்குاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கின்றார்مِنَஒருவராகالضَّآلِّیْنَۙவழிகெட்டவர்களில்
வக்Fபிர் லி அBபீ இன்னஹூ கான மின ளால்லீன்
“என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.”
وَلَا تُخْزِنِیْ یَوْمَ یُبْعَثُوْنَ ۟ۙ
وَ لَاமேலும்تُخْزِنِیْஎன்னை இழிவுபடுத்தாதேیَوْمَநாளில்یُبْعَثُوْنَۙஅவர்கள் எழுப்பப்படுவார்கள்
வ லா துக்Zஜினீ யவ்ம யுBப்'அதூன்
“இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”
یَوْمَ لَا یَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَ ۟ۙ
یَوْمَஅந்நாளில்لَاஇல்லைیَنْفَعُபயனளிக்கும்مَالٌசெல்வம்وَّ لَاமேலும் இல்லைبَنُوْنَۙபிள்ளைகள்
யவ்ம லா யன்Fப'உ மாலு(ன்)வ் வலா Bபனூன்
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
اِلَّا مَنْ اَتَی اللّٰهَ بِقَلْبٍ سَلِیْمٍ ۟ؕ
اِلَّاதவிரمَنْஎவர்اَتَیவந்தாரோاللّٰهَஅல்லாஹ்விடம்بِقَلْبٍஉள்ளத்துடன்سَلِیْمٍؕதூய்மையான
இல்லா மன் அதல் லாஹ Bபிகல்Bபின் ஸலீம்
“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”
وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِیْنَ ۟ۙ
وَ اُزْلِفَتِமேலும் நெருக்கமாக்கப்படும்الْجَنَّةُசுவனம்لِلْمُتَّقِیْنَۙஇறையச்சமுடையோருக்கு
வ உZஜ்லிFபதில் ஜன்னது லில்முத்தகீன்
“பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்.”
وَبُرِّزَتِ الْجَحِیْمُ لِلْغٰوِیْنَ ۟ۙ
وَ بُرِّزَتِமேலும் வெளிப்படுத்தப்படும்الْجَحِیْمُநரகம்لِلْغٰوِیْنَۙவழிகெட்டவர்களுக்கு
வ Bபுர்ரிZஜதில் ஜஹீமு லில்காவீன்
“வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்.”
وَقِیْلَ لَهُمْ اَیْنَ مَا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۟ۙ
وَ قِیْلَமேலும் கூறப்படும்لَهُمْஅவர்களுக்குاَیْنَஎங்கேمَاஎவற்றைكُنْتُمْநீங்கள்تَعْبُدُوْنَۙவணங்கிக் கொண்டிருந்தீர்களோ
வ கீல லஹும் அய்ன மா குன்தும் தஃBபுதூன்
“இன்னும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்கே?” என்று.
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ هَلْ یَنْصُرُوْنَكُمْ اَوْ یَنْتَصِرُوْنَ ۟ؕ
مِنْதவிரدُوْنِஅன்றிاللّٰهِ ؕஅல்லாஹ்வைهَلْஎன்னیَنْصُرُوْنَكُمْஅவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்களாاَوْஅல்லதுیَنْتَصِرُوْنَؕஅவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்வார்களா
மின் தூனில் லாஹி ஹல் யன்ஸுரூனகும் அவ் யன்தஸிரூன்
“அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,”
فَكُبْكِبُوْا فِیْهَا هُمْ وَالْغَاوٗنَ ۟ۙ
فَكُبْكِبُوْاஆகவே அவர்கள் தலைகீழாகத் தள்ளப்படுவார்கள்فِیْهَاஅதில்هُمْஅவர்கள்وَ الْغَاوٗنَۙமேலும் வழிகெட்டவர்களும்
FபகுBப்கிBபூ Fபீஹா ஹும் வல்காவூன்
பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் - அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் -
وَجُنُوْدُ اِبْلِیْسَ اَجْمَعُوْنَ ۟ؕ
وَ جُنُوْدُமற்றும் படைகளும்اِبْلِیْسَஇப்லீஸின்اَجْمَعُوْنَؕஅனைவரும்
வ ஜுனூது இBப்லீஸ அஜ்ம'ஊன்
“இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்).”
قَالُوْا وَهُمْ فِیْهَا یَخْتَصِمُوْنَ ۟ۙ
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்وَ هُمْஅவர்கள்فِیْهَاஅதில்یَخْتَصِمُوْنَۙதர்க்கம் செய்து கொண்டிருப்பார்கள்
காலூ வ ஹும் Fபீஹா யக்க்தஸிமூன்
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:
تَاللّٰهِ اِنْ كُنَّا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟ۙ
تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகاِنْdeedநிச்சயமாகكُنَّاநாம் இருந்தோம்لَفِیْநிச்சயமாகவேضَلٰلٍவழிகேட்டில்مُّبِیْنٍۙதெளிவான
தல்லாஹி இன் குன்னா லFபீ ளலாலிம் முBபீன்
“அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்.”
اِذْ نُسَوِّیْكُمْ بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
اِذْபோதுنُسَوِّیْكُمْஉங்களை நாங்கள் சமமாக்கியبِرَبِّஇறைவனுடன்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
இத் னுஸவ்வீகும் Bபி ரBப்Bபில் 'ஆலமீன்
“உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது);
وَمَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الْمُجْرِمُوْنَ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَضَلَّنَاۤஎங்களை வழிகெடுத்தவர்கள்اِلَّاதவிரالْمُجْرِمُوْنَகுற்றவாளிகள்
வ மா அளல்லனா இல்லல் முஜ்ரிமூன்
இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்.
فَمَا لَنَا مِنْ شَافِعِیْنَ ۟ۙ
فَمَاஆகவே இல்லைلَنَاஎங்களுக்குمِنْஎந்தவொருشَافِعِیْنَۙபரிந்துரைப்பவர்களும்
Fபமா லனா மின் ஷா Fபி'ஈன்
ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை.
وَلَا صَدِیْقٍ حَمِیْمٍ ۟
وَ لَاமேலும் இல்லைصَدِیْقٍநண்பன்حَمِیْمٍநெருங்கிய
வ லா ஸதீகின் ஹமீம்
அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை.
فَلَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
فَلَوْஎனவே ஒருவேளைاَنَّநிச்சயமாகلَنَاஎங்களுக்குكَرَّةًதிரும்புதல்فَنَكُوْنَநாங்கள் ஆகிவிடுவோம்مِنَஇருந்துالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களில்
Fபலவ் அன்ன லனா கர்ரதன் Fபனகூன மினல் மு'மினீன்
நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகி விடுவோமே! (என்றுங் கூறுவார்கள்.)
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِیْஇதில்ذٰلِكَஅதிலேلَاٰیَةً ؕஓர் அத்தாட்சிوَ مَاமேலும் இல்லைكَانَஇருந்தார்கள்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்مُّؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயத(ன்)வ் வமா கான அக்தருஹும் மு'மினீன்
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَهُوَஅவனேالْعَزِیْزُமிகைத்தவன்الرَّحِیْمُ۠மிக்க கிருபையுடையவன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
மேலும், நிச்சயமாக உமது இறைவன் (யாவரையும்) மிகைத்தோனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتْ قَوْمُ نُوْحِ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُசமூகத்தார்نُوْحِநூஹ்لْمُرْسَلِیْنَۚۖதூதர்களை
கத்தBபத் கவ்மு னூஹினில் முர்ஸலீன்
நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ نُوْحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْஅப்போதுقَالَகூறினார்لَهُمْஅவர்களிடம்اَخُوْهُمْஅவர்களின் சகோதரர்نُوْحٌநூஹ்اَلَاநீங்கள்تَتَّقُوْنَۚஅஞ்சமாட்டீர்களா
இத் கால லஹும் அகூஹும் னூஹுன் அலா தத்தகூன்
அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது: “நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?”
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّیْநிச்சயமாக நான்لَكُمْஉங்களுக்குرَسُوْلٌதூதர்اَمِیْنٌۙநம்பிக்கைக்குரியவர்
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரிய தூதன் ஆவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆகவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِیْعُوْنِۚமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
Fபத்தகுல்லாஹ வ அதீ'ஊன்
ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۚ
وَ مَاۤமேலும் இல்லைاَسْـَٔلُكُمْநான் உங்களிடம் கேட்கிறேன்عَلَیْهِஅதற்காகمِنْஎந்தவொருاَجْرٍ ۚகூலியையும்اِنْஇல்லைاَجْرِیَஎன் கூலிاِلَّاதவிரعَلٰیமீதேرَبِّஇறைவன்الْعٰلَمِیْنَۚஅகிலங்களின்
வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
இதற்காக, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடம் இருக்கிறது.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ؕ
فَاتَّقُواஆகவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِیْعُوْنِؕமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள் (என்று நூஹ் கூறியபோது),
قَالُوْۤا اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَ ۟ؕ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَنُؤْمِنُநாங்கள் நம்பிக்கை கொள்வோமாلَكَஉமக்குوَ اتَّبَعَكَஉம்மைப் பின்பற்றியவர்களோالْاَرْذَلُوْنَؕமிகத் தாழ்ந்தவர்கள்
காலூ அனு'மினு லக வத்தBப 'அகல் அர்தலூன்
அவர்கள்: “தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா,” என்று கூறினார்கள்.
قَالَ وَمَا عِلْمِیْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟ۚ
قَالَஅவர் கூறினார்وَ مَاமேலும் என்னعِلْمِیْஎனது அறிவுبِمَاஎதைப் பற்றிكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَۚசெய்து கொண்டிருந்தார்கள்
கால வமா 'இல்மீ Bபிமா கானூ யஃமலூன்
அவர் கூறினார்: அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறியமாட்டேன்.
اِنْ حِسَابُهُمْ اِلَّا عَلٰی رَبِّیْ لَوْ تَشْعُرُوْنَ ۟ۚ
اِنْஇல்லைحِسَابُهُمْஅவர்களின் கணக்குاِلَّاதவிரعَلٰیமீதுرَبِّیْஎன் இறைவன்لَوْஎன்றால்تَشْعُرُوْنَۚநீங்கள் உணர்வீர்கள்
இன் ஹிஸாBபுஹும் இல்லா 'அலா ரBப்Bபீ லவ் தஷ்'உரூன்
நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின், அவர்களுடைய கேள்வி கணக்கு (பற்றிய விசாரணை) என்னுடைய இறைவனிடம்தான் இருக்கிறது.
وَمَاۤ اَنَا بِطَارِدِ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
وَ مَاۤமேலும் இல்லைاَنَاநான்بِطَارِدِவிரட்டுபவனாகالْمُؤْمِنِیْنَۚநம்பிக்கையாளர்களை
வ மா அன Bபிதாரிதில் மு'மினீன்
முஃமின்களை நான் விரட்டி விடுபவன் அல்லன்.
اِنْ اَنَا اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ؕ
اِنْஇல்லைاَنَاநான்اِلَّاஅன்றிنَذِیْرٌஎச்சரிப்பவன்مُّبِیْنٌؕதெளிவான
இன் அன இல்லா னதீரும் முBபீன்
நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி வேறில்லை.
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰنُوْحُ لَتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِیْنَ ۟ؕ
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَىِٕنْஎன்றால்لَّمْவில்லைتَنْتَهِநீ விலகிக்கொள்ளیٰنُوْحُநூஹேلَتَكُوْنَنَّநிச்சயமாக நீ ஆகிவிடுவாய்مِنَஇருந்துالْمَرْجُوْمِیْنَؕகல்லால் எறியப்பட்டவர்கள்
காலூ ல'இல் லம் தன்தஹி யா னூஹு லதகூனன்ன மினல் மர்ஜூமீன்
அதற்கவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.
قَالَ رَبِّ اِنَّ قَوْمِیْ كَذَّبُوْنِ ۟ۚۖ
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவனேاِنَّநிச்சயமாகقَوْمِیْஎன் சமூகத்தினர்كَذَّبُوْنِۚۖஎன்னைப் பொய்ப்பிக்கின்றனர்
கால ரBப்Bபி இன்ன கவ்மீ கத்தBபூன்
அவர் கூறினார்: “என் இறைவனே! என்னுடைய சமூகத்தார்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.
فَافْتَحْ بَیْنِیْ وَبَیْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِیْ وَمَنْ مَّعِیَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
فَافْتَحْஎனவே தீர்ப்பளிப்பாயாகبَیْنِیْஎனக்கும்وَ بَیْنَهُمْஅவர்களுக்கும் இடையேفَتْحًاஒரு தீர்ப்பைوَّ نَجِّنِیْமேலும் என்னைக் காப்பாற்றுவாயாகوَ مَنْமற்றும் எவர்مَّعِیَஎன்னுடன்مِنَஇருந்துالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களில்
FபFப்தBப் Bபய்னீ வ Bபய் னஹும் Fபத் ஹ(ன்)வ் வ னஜ்ஜினீ வ மம் ம'இய மினல் மு'மினீன்
ஆகவே, நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!” (என்று பிரார்த்தித்தார்.)
فَاَنْجَیْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۚ
فَاَنْجَیْنٰهُஎனவே நாம் அவரைக் காப்பாற்றினோம்وَ مَنْமேலும் எவர்مَّعَهٗஅவருடன்فِیஇல்الْفُلْكِகப்பல்الْمَشْحُوْنِۚநிரப்பப்பட்ட
Fப அன்ஜய்னாஹு வ மம்ம'அஹூ Fபில் Fபுல்கில் மஷ்ஹூன்
ஆகவே, நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் நிறைந்திருந்த கப்பலில் இரட்சித்தோம்.
ثُمَّ اَغْرَقْنَا بَعْدُ الْبٰقِیْنَ ۟ؕ
ثُمَّபின்னர்اَغْرَقْنَاநாம் மூழ்கடித்தோம்بَعْدُஅதன் பிறகுالْبٰقِیْنَؕஎஞ்சியவர்களை
தும்ம அக்ரக்னா Bபஃதுல் Bபாகீன்
அதன் பிறகு, எஞ்சியிருந்தவர்களை நாம் மூழ்கடித்தோம்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةً ؕஓர் அத்தாட்சிوَ مَاமேலும் இல்லைكَانَஇருந்தார்கள்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்مُّؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயாஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் ஈமான் கொள்வதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَهُوَநிச்சயமாக அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الرَّحِیْمُ۠மிக்க கிருபையுடையவன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتْ عَادُ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்عَادُஆதுلْمُرْسَلِیْنَۚۖதூதர்களை
கத்தBபத் 'ஆதுனில் முர்ஸலீன்
ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْபோதுقَالَகூறினார்لَهُمْஅவர்களிடம்اَخُوْهُمْஅவர்களின் சகோதரர்هُوْدٌஹூத்اَلَاநீங்கள்تَتَّقُوْنَۚஅஞ்சமாட்டீர்களா
இத் கால லஹும் அகூஹும் ஹூதுன் அலா தத்தகூன்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூத் : “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது:
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّیْநிச்சயமாக நான்لَكُمْஉங்களுக்குرَسُوْلٌதூதர்اَمِیْنٌۙநம்பிக்கைக்குரியவர்
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஎனவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِیْعُوْنِۚமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
Fபத்தகுல்லாஹ வ அதீ'ஊன்
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَ مَاۤமேலும் இல்லைاَسْـَٔلُكُمْநான் உங்களிடம் கேட்கிறேன்عَلَیْهِஅதற்காகمِنْஎந்தவொருاَجْرٍ ۚகூலியையும்اِنْஇல்லைاَجْرِیَஎனது கூலிاِلَّاதவிரعَلٰیமீதுرَبِّஇறைவன்الْعٰلَمِیْنَؕஅகிலங்களின்
வமா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
اَتَبْنُوْنَ بِكُلِّ رِیْعٍ اٰیَةً تَعْبَثُوْنَ ۟ۙ
اَتَبْنُوْنَநீங்கள் கட்டுகிறீர்களாبِكُلِّஒவ்வொருرِیْعٍமேட்டிலும்اٰیَةًஓர் அடையாளத்தைتَعْبَثُوْنَவீணாக
அதBப்னூன Bபிகுல்லி ரீ'இன் ஆயதன் தஃBபதூன்
“நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?
وَتَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ ۟ۚ
وَ تَتَّخِذُوْنَமேலும் நீங்கள் அமைத்துக் கொள்கிறீர்கள்مَصَانِعَமாளிகைகளைلَعَلَّكُمْநீங்கள் (என்றெண்ணி)تَخْلُدُوْنَۚநிரந்தரமாக வாழ்வீர்கள்
வ தத்தகிதூன மஸானி'அ ல'அல்லகும் தக்லுதூன்
இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?
وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِیْنَ ۟ۚ
وَ اِذَاமேலும், (எப்போது)بَطَشْتُمْநீங்கள் பிடித்தால்بَطَشْتُمْநீங்கள் பிடிக்கிறீர்கள்جَبَّارِیْنَۚகொடுமைக்காரர்களாக
வ இதா Bபதஷ்தும் Bபதஷ்தும் ஜBப்Bபாரீன்
“இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆகவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِیْعُوْنِۚமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
“எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
وَاتَّقُوا الَّذِیْۤ اَمَدَّكُمْ بِمَا تَعْلَمُوْنَ ۟ۚ
وَ اتَّقُواமேலும் அஞ்சுங்கள்الَّذِیْۤஎவன்اَمَدَّكُمْஉங்களுக்கு வழங்கினானோبِمَاஎவற்றைக் கொண்டுتَعْلَمُوْنَۚநீங்கள் அறிகிறீர்களோ
வத்தகுல் லதீ அமத் தகும் Bபிமா தஃலமூன்
“மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.
اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِیْنَ ۟ۚۙ
اَمَدَّكُمْஉங்களுக்கு வழங்கினான்بِاَنْعَامٍகால்நடைகளைوَّ بَنِیْنَۚۙமேலும் புதல்வர்களை
அமத்தகும் Bபி அன்'ஆ மி(ன்)வ் வ Bபனீன்
“அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.
وَجَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۚ
وَ جَنّٰتٍதோட்டங்களையும்وَّ عُیُوْنٍۚநீரூற்றுகளையும்
வ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
“இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).
اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟ؕ
اِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்عَلَیْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைیَوْمٍஒரு நாளின்عَظِیْمٍؕமகத்தான
இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
“நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்” (எனக் கூறினார்).
قَالُوْا سَوَآءٌ عَلَیْنَاۤ اَوَعَظْتَ اَمْ لَمْ تَكُنْ مِّنَ الْوٰعِظِیْنَ ۟ۙ
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்سَوَآءٌசமமேعَلَیْنَاۤஎங்களுக்குاَوَ عَظْتَநீர் அறிவுரை கூறினாலும்اَمْஅல்லதுلَمْஇல்லைتَكُنْநீர் ஆகாவிட்டாலும்مِّنَஇருந்துالْوٰعِظِیْنَۙஅறிவுரை கூறுபவர்கள்
காலூ ஸவா'உன் 'அலய்னா அவ 'அள்த அம் லம் தகும் மினல் வா'இளீன்
(இதற்கு) அவர்கள்: “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்” எனக் கூறினார்கள்.
اِنْ هٰذَاۤ اِلَّا خُلُقُ الْاَوَّلِیْنَ ۟ۙ
اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاஅன்றிخُلُقُவழக்கம்الْاَوَّلِیْنَۙமுன்னோர்களின்
இன் ஹாதா இல்லா குலுகுல் அவ்வலீன்
“இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
وَمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟ۚ
وَ مَاமேலும் இல்லைنَحْنُநாங்கள்بِمُعَذَّبِیْنَۚதண்டிக்கப்படுபவர்கள்
வமா னஹ்னு Bபிமு 'அத்தBபீன்
“மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.”
فَكَذَّبُوْهُ فَاَهْلَكْنٰهُمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
فَكَذَّبُوْهُஎனவே அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்فَاَهْلَكْنٰهُمْ ؕஆகவே நாம் அவர்களை அழித்தோம்اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةً ؕஓர் அத்தாட்சிوَ مَاமேலும் இல்லைكَانَஇருந்தார்கள்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
Fபகத்தBபூஹு Fப அஹ்லக்னாஹும்; இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
(இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَهُوَஅவன்தான்الْعَزِیْزُமிகைத்தவன்الرَّحِیْمُ۠மிக்க கிருபையுடையவன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்ثَمُوْدُஸமூதுالْمُرْسَلِیْنَۚۖதூதர்களை
கத்தBபத் தமூதுல் முர்ஸலீன்
ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْஅப்போதுقَالَகூறினார்لَهُمْஅவர்களிடம்اَخُوْهُمْஅவர்களின் சகோதரர்صٰلِحٌஸாலிஹ்اَلَاநீங்கள்تَتَّقُوْنَۚஅஞ்சமாட்டீர்களா
இத் கால லஹும் அகூஹும் ஸாலிஹுன் அலா தத்தகூன்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّیْநிச்சயமாக நான்لَكُمْஉங்களுக்குرَسُوْلٌதூதர்اَمِیْنٌۙநம்பிக்கைக்குரியவர்
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆகவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِیْعُوْنِۚமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَ مَاۤமேலும் இல்லைاَسْـَٔلُكُمْநான் உங்களிடம் கேட்கிறேன்عَلَیْهِஅதற்காகمِنْஎந்தவொருاَجْرٍ ۚகூலியையும்اِنْஇல்லைاَجْرِیَஎனது கூலிاِلَّاதவிரعَلٰیமீதுرَبِّஇறைவன்الْعٰلَمِیْنَؕஅகிலங்களின்
வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
اَتُتْرَكُوْنَ فِیْ مَا هٰهُنَاۤ اٰمِنِیْنَ ۟ۙ
اَتُتْرَكُوْنَநீங்கள் விட்டு வைக்கப்படுவீர்களா?فِیْஇல்مَاஎவற்றில்هٰهُنَاۤஇங்கேاٰمِنِیْنَۙஅச்சமற்றவர்களாக
அதுத்ரகூன Fபீ மா ஹாஹுனா ஆமினீன்
“இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா?
فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
فِیْஇல்جَنّٰتٍசோலைகளில்وَّ عُیُوْنٍۙமேலும் நீரூற்றுகளில்
Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
“தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்-
وَّزُرُوْعٍ وَّنَخْلٍ طَلْعُهَا هَضِیْمٌ ۟ۚ
وَّ زُرُوْعٍபயிர்களும்وَّ نَخْلٍபேரீச்ச மரங்களும்طَلْعُهَاஅதன் பாளைகள்هَضِیْمٌۚமென்மையானவை
வ Zஜுரூ இ(ன்)வ் வ னக்லின் தல் 'உஹா ஹளீம்
“வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,
وَتَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُیُوْتًا فٰرِهِیْنَ ۟ۚ
وَ تَنْحِتُوْنَமேலும் நீங்கள் செதுக்குகிறீர்கள்مِنَஇருந்துالْجِبَالِமலைகளில்بُیُوْتًاவீடுகளைفٰرِهِیْنَۚதிறமையுடன்
வ தன்ஹிதூன மினல் ஜிBபாலி Bபுயூதன் Fபாரிஹீன்
“மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்களா?)
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஎனவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِیْعُوْنِۚமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
وَلَا تُطِیْعُوْۤا اَمْرَ الْمُسْرِفِیْنَ ۟ۙ
وَ لَاமேலும் வேண்டாம்تُطِیْعُوْۤاகீழ்ப்படியاَمْرَகட்டளைக்குالْمُسْرِفِیْنَۙவரம்பு மீறுபவர்களின்
வ லா துதீ'ஊ அம்ரல் முஸ்ரிFபீன்
“இன்னும், நீங்கள், வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிப்படாதீர்கள்.
الَّذِیْنَ یُفْسِدُوْنَ فِی الْاَرْضِ وَلَا یُصْلِحُوْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்یُفْسِدُوْنَகுழப்பம் செய்கிறார்களோفِیஇல்الْاَرْضِபூமிوَ لَاமேலும் இல்லைیُصْلِحُوْنَசீர்திருத்தம் செய்கிறார்களோ
அல்லதீன யுFப்ஸிதூன Fபில் அர்ளி வலா யுஸ்லிஹூன்
“அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்” என்றுங் கூறினார்).
قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِیْنَ ۟ۚ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّمَاۤநிச்சயமாகاَنْتَநீர்مِنَஇருந்துالْمُسَحَّرِیْنَۚசூனியம் செய்யப்பட்டவர்கள்
காலூ இன்னமா அன்த மினல் முஸஹ்ஹரீன்
அதற்கு அவர்கள்: “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்” என்று சொன்னார்கள்.
مَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ۖۚ فَاْتِ بِاٰیَةٍ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
مَاۤஇல்லைاَنْتَநீர்اِلَّاஅன்றிبَشَرٌஒரு மனிதர்مِّثْلُنَا ۖۚஎங்களைப் போன்றفَاْتِஎனவே கொண்டு வாரும்بِاٰیَةٍஓர் அத்தாட்சியைاِنْஎன்றால்كُنْتَநீர் இருப்பீர்مِنَஉள்ளவர்களில்الصّٰدِقِیْنَஉண்மையாளர்கள்
மா அன்த இல்லா Bபஷரும் மித்லுனா Fபா'தி Bபி ஆயதின் இன் குன்த மினஸ் ஸாதிகீன்
“நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை; எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்றனர்).
قَالَ هٰذِهٖ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَّلَكُمْ شِرْبُ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟ۚ
قَالَஅவர் கூறினார்هٰذِهٖஇதுنَاقَةٌஒரு பெண் ஒட்டகம்لَّهَاஇதற்குشِرْبٌதண்ணீர் பங்குوَّ لَكُمْமேலும் உங்களுக்கும்شِرْبُதண்ணீர் பங்குیَوْمٍஒரு நாள்مَّعْلُوْمٍۚகுறிப்பிட்ட
கால ஹாதிஹீ னாகதுல் லஹா ஷிர்Bபு(ன்)வ் வலகும் ஷிர்Bபு யவ்மிம் மஃலூம்
அவர் சொன்னார்: “இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு; உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.”
وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابُ یَوْمٍ عَظِیْمٍ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تَمَسُّوْهَاஅதனைத் தீண்டبِسُوْٓءٍஎந்தத் தீங்கைக் கொண்டும்فَیَاْخُذَكُمْஉங்களைப் பிடித்துக் கொள்ளும்عَذَابُவேதனைیَوْمٍஒரு நாளின்عَظِیْمٍமகத்தான
வ லா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப யாகுதகும் 'அதாBபு யவ்மின் 'அளீம்
“இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.”
فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِیْنَ ۟ۙ
فَعَقَرُوْهَاஎனவே அவர்கள் அதனை அறுத்துக் கொன்றார்கள்فَاَصْبَحُوْاபிறகு அவர்கள் ஆகிவிட்டார்கள்نٰدِمِیْنَۙகைசேதப்பட்டவர்களாக
Fப'அகரூஹா Fப அஸ்Bபஹூ னாதிமீன்
அவர்கள் அதன் கால் நரம்பைத் துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
فَاَخَذَهُمُ الْعَذَابُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
فَاَخَذَهُمُஎனவே அவர்களைப் பிடித்துக்கொண்டதுالْعَذَابُ ؕவேதனைاِنَّநிச்சயமாகفِیْஇதில்ذٰلِكَஅ(ந்)தச் சம்பவத்தில்لَاٰیَةً ؕஓர் அத்தாட்சிوَ مَاஇன்னும் இல்லைكَانَஇருந்தார்கள்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்مُّؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களாக
Fப அகதஹுமுல் 'அதாBப்; இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
ஆகவே, வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது - நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும், அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَهُوَநிச்சயமாக அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الرَّحِیْمُ۠நிகரற்ற அன்புடையவன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتْ قَوْمُ لُوْطِ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُமக்கள்لُوْطِலூத்துடையلْمُرْسَلِیْنَۚۖதூதர்களை
கத்தBபத் கவ்மு லூதினில் முர்ஸலீன்
லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْஅப்போதுقَالَகூறினார்لَهُمْஅவர்களிடம்اَخُوْهُمْஅவர்களின் சகோதரர்لُوْطٌலூத்اَلَاநீங்கள்تَتَّقُوْنَۚஅஞ்சமாட்டீர்களா
இத் கால லஹும் அகூஹும் லூதுன் அலா தத்தகூன்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது,
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّیْநிச்சயமாக நான்لَكُمْஉங்களுக்குرَسُوْلٌதூதர்اَمِیْنٌۙநம்பிக்கைக்குரியவர்
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
“நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆகவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِیْعُوْنِۚமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَ مَاۤமேலும் இல்லைاَسْـَٔلُكُمْநான் உங்களிடம் கேட்கிறேன்عَلَیْهِஇதற்காகمِنْயாதொருاَجْرٍ ۚகூலியும்اِنْஇல்லைاَجْرِیَஎனது கூலிاِلَّاதவிரعَلٰیமீதுرَبِّஇறைவன்الْعٰلَمِیْنَؕஅகிலங்களின்
வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
اَتَاْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِیْنَ ۟ۙ
اَتَاْتُوْنَசெல்கிறீர்களாالذُّكْرَانَஆண்களிடம்مِنَஇருந்துالْعٰلَمِیْنَۙஉலகத்தாரில்
அதாதூனத் துக்ரான மினல் 'ஆலமீன்
“உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்ட நோக்கோடு) நெருங்குகின்றீர்களா?
وَتَذَرُوْنَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ عٰدُوْنَ ۟
وَ تَذَرُوْنَமேலும் நீங்கள் விட்டுவிடுகிறீர்கள்مَاஎவற்றைخَلَقَபடைத்தானோلَكُمْஉங்களுக்காகرَبُّكُمْஉங்கள் இறைவன்مِّنْஆகியاَزْوَاجِكُمْ ؕஉங்கள் மனைவியரைبَلْமாறாகاَنْتُمْநீங்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்عٰدُوْنَவரம்பு மீறுபவர்கள்
வ ததரூன மா கலக லகும் ரBப்Bபுகும் மின் அZஜ்வாஜிகும்; Bபல் அன்தும் கவ்முன் 'ஆதூன்
“இன்னும், உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவிமார்களை விட்டு விடுகிறீர்கள்; இல்லை, நீங்கள் வரம்பு கடந்த சமூகத்தாராக இருக்கின்றீர்கள்.”
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰلُوْطُ لَتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَىِٕنْநிச்சயமாகلَّمْஇல்லைتَنْتَهِநீ விலகிக்கொள்ளாவிட்டால்یٰلُوْطُலூத்தே!لَتَكُوْنَنَّநிச்சயமாக நீ ஆகிவிடுவாய்مِنَஇருந்துالْمُخْرَجِیْنَவெளியேற்றப்பட்டவர்களில்
கலூ ல'இல் லம் தன்தஹி யா லூது லதகூனன்ன மினல் முக்ரஜீன்
அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர்.
قَالَ اِنِّیْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِیْنَ ۟ؕ
قَالَஅவர் கூறினார்اِنِّیْநிச்சயமாக நான்لِعَمَلِكُمْஉங்களுடைய செயலைمِّنَவெறுப்பவர்களில்الْقَالِیْنَؕஒருவன்
கால இன்னீ லி'அமலிகும் மினல் காலீன்
அவர் கூறினார்: “நிச்சயமாக நான் உங்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறேன்.
رَبِّ نَجِّنِیْ وَاَهْلِیْ مِمَّا یَعْمَلُوْنَ ۟
رَبِّஎன் இறைவாنَجِّنِیْஎன்னைக் காப்பாற்றுவாயாகوَ اَهْلِیْஎன் குடும்பத்தாரையும்مِمَّاஎதிலிருந்துیَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்களோ
ரBப்Bபி னஜ்ஜ்ஜினீ வ அஹ்லீ மிம்ம்மா யஃமலூன்
“என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (எனப் பிரார்த்தித்தார்.)
فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۙ
فَنَجَّیْنٰهُஎனவே நாம் அவரைக் காப்பாற்றினோம்وَ اَهْلَهٗۤஅவருடைய குடும்பத்தாரையும்اَجْمَعِیْنَۙஅனைவரையும்
Fபனஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ அஜ்ம'ஈன்
அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம்.
اِلَّا عَجُوْزًا فِی الْغٰبِرِیْنَ ۟ۚ
اِلَّاதவிரعَجُوْزًاஒரு கிழவிفِیஇல்الْغٰبِرِیْنَۚபின்தங்கியவர்கள்
இல்லா 'அஜூZஜன் Fபில்காBபிரீன்
(அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கிவிட்ட கிழவியைத் தவிர
ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِیْنَ ۟ۚ
ثُمَّபின்னர்دَمَّرْنَاநாம் அழித்தோம்الْاٰخَرِیْنَۚமற்றவர்களை
தும்ம தம்மர்னல் ஆ கரீன்
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِیْنَ ۟
وَ اَمْطَرْنَاமேலும் நாம் பொழியச் செய்தோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுمَّطَرًا ۚஒரு மழையைفَسَآءَஆகவே மிகக் கெட்டதாக இருந்ததுمَطَرُமழைالْمُنْذَرِیْنَஎச்சரிக்கப்பட்டவர்களின்
வ அம்தர்னா 'அலய்ஹிம் மதரன் Fபஸா'அ மதருல் முன்தரீன்
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةً ؕஓர் அத்தாட்சிوَ مَاமேலும் இல்லைكَانَஇருந்தார்கள்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்مُّؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَهُوَநிச்சயமாக அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الرَّحِیْمُ۠மிக்க கிருபையுடையவன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَ اَصْحٰبُ لْـَٔیْكَةِ الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَபொய்ப்பித்தனர்اَصْحٰبُவாசிகள்لْـَٔیْكَةِதோப்புالْمُرْسَلِیْنَۚۖதூதர்களை
கத்தBப அஸ் ஹாBபுல் அய்கதில் முர்ஸலீன்
தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள்.
اِذْ قَالَ لَهُمْ شُعَیْبٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْஅப்போதுقَالَகூறினார்لَهُمْஅவர்களிடம்شُعَیْبٌஷுஐப்اَلَاநீங்கள்تَتَّقُوْنَۚஅஞ்சமாட்டீர்களா
இத் கால லஹும் ஷு'அய்Bபுன் அலா தத்தகூன்
ஷுஐப் அவர்களிடம்: “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது:
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّیْநிச்சயமாக நான்لَكُمْஉங்களுக்குرَسُوْلٌஒரு தூதர்اَمِیْنٌۙநம்பிக்கைக்குரியவர்
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆகவே அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِیْعُوْنِۚமேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
“ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَ مَاۤமேலும் இல்லைاَسْـَٔلُكُمْநான் உங்களிடம் கேட்கிறேன்عَلَیْهِஇதற்காகمِنْஎந்தவொருاَجْرٍ ۚகூலியையும்اِنْஇல்லைاَجْرِیَஎனது கூலிاِلَّاதவிரعَلٰیமீதுرَبِّஇறைவன்الْعٰلَمِیْنَؕஅகிலங்களின்
வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
اَوْفُوا الْكَیْلَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُخْسِرِیْنَ ۟ۚ
اَوْفُواநிறைவாக்குங்கள்الْكَیْلَஅளவையைوَ لَاமேலும் வேண்டாம்تَكُوْنُوْاநீங்கள் ஆகிவிடمِنَஇருந்துالْمُخْسِرِیْنَۚநஷ்டப்படுத்துபவர்கள்
அவ்Fபுல் கய்ல வலா தகூனூ மினல் முக்ஸிரீன்
“அளவையை நிறைவாக அளவுங்கள்; (அளவையைக்) குறைப்பவர்களாக இராதீர்கள்.
وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِیْمِ ۟ۚ
وَزِنُوْاஎடை போடுங்கள்بِالْقِسْطَاسِதராசைக் கொண்டுالْمُسْتَقِیْمِۚசரியான
வ Zஜினூ Bபில்கிஸ்தாஸில் முஸ்தகீம்
“நேரான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள்.
وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟ۚ
وَ لَاமேலும்تَبْخَسُواகுறைத்து விடாதீர்கள்النَّاسَமக்களுக்குاَشْیَآءَهُمْஅவர்களுடைய பொருட்களைوَ لَاமேலும்تَعْثَوْاகுழப்பம் செய்யாதீர்கள்فِیஇல்الْاَرْضِபூமியில்مُفْسِدِیْنَۚவிஷமிகளாக
வ லா தBப்கஸுன் னாஸ அஷ்யா 'அஹும் வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
“மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்.
وَاتَّقُوا الَّذِیْ خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْاَوَّلِیْنَ ۟ؕ
وَ اتَّقُواமேலும் அஞ்சுங்கள்الَّذِیْஎவன்خَلَقَكُمْஉங்களைப் படைத்தானோوَ الْجِبِلَّةَஇன்னும் தலைமுறையினரையும்الْاَوَّلِیْنَؕமுந்தைய
வத்தகுல் லதீ கலககும் வல்ஜிBபில்லதல் அவ்வலீன்
“அன்றியும், உங்களையும், உங்களுக்கு முன்னாலிருந்த படைப்புகளையும் படைத்த அவனுக்கே அஞ்சுங்கள்” (எனக் கூறினார்.)
قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّمَاۤநிச்சயமாகاَنْتَநீمِنَஇருந்துالْمُسَحَّرِیْنَۙசூனியம் செய்யப்பட்டவர்களில்
காலூ இன்னமா அன்த மினல் முஸஹ்ஹரீன்
அவர்கள் சொன்னார்கள்: “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்.
وَمَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَاِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكٰذِبِیْنَ ۟ۚ
وَ مَاۤஇன்னும் இல்லைاَنْتَநீர்اِلَّاஅன்றிبَشَرٌஒரு மனிதர்مِّثْلُنَاஎங்களைப் போன்றوَ اِنْமேலும் நிச்சயமாகنَّظُنُّكَஉம்மை நாங்கள் கருதுகிறோம்لَمِنَநிச்சயமாகالْكٰذِبِیْنَۚபொய்யர்களில்
வ மா அன்த இல்லா Bபஷரும் மித்லுனா வ இன்னளுன்னுக லமினல் காதிBபீன்
“நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி (வேறு) இல்லை; உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே நிச்சயமாக நாங்கள் எண்ணுகிறோம்.
فَاَسْقِطْ عَلَیْنَا كِسَفًا مِّنَ السَّمَآءِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟ؕ
فَاَسْقِطْஎனவே விழச்செய்வீராகعَلَیْنَاஎங்கள் மீதுكِسَفًاதுண்டுகளைمِّنَஇருந்துالسَّمَآءِவானம்اِنْஎன்றால்كُنْتَநீர் இருந்தால்مِنَஒருவராகالصّٰدِقِیْنَؕஉண்மையாளர்களில்
Fப அஸ்கித் 'அலய்னா கிஸFபம் மினஸ் ஸமா'இ இன் குன்த மினஸ் ஸாதிகீன்
“எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால், வானத்திலிருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படிச் செய்யும்.”
قَالَ رَبِّیْۤ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّیْۤஎன் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎதைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
கால ரBப்Bபீ அஃலமு Bபிமா தஃமலூன்
“நீங்கள் செய்து கொண்டிருப்பதை என் இறைவன் நன்கறிவான்” என்று அவர் கூறினார்.
فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ یَوْمِ الظُّلَّةِ ؕ اِنَّهٗ كَانَ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
فَكَذَّبُوْهُஎனவே அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்فَاَخَذَهُمْஆகவே அவர்களைப் பிடித்துக்கொண்டதுعَذَابُவேதனைیَوْمِநாளின்الظُّلَّةِ ؕமேகக்கூட்டத்தின்اِنَّهٗநிச்சயமாக அதுكَانَஇருந்ததுعَذَابَவேதனையாகیَوْمٍஒரு நாளின்عَظِیْمٍமகத்தான
Fபகத்தBபூஹு Fப அகதஹும் 'அதாBபு யவ்மிள் ளுல்லஹ்; இன்னஹூ கான 'அதாBப யவ்மின் 'அளீம்
பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது; நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةً ؕஓர் அத்தாட்சிوَ مَاமேலும் இல்லைكَانَஇருந்தனர்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்مُّؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَهُوَஅவனேالْعَزِیْزُயாவரையும் மிகைத்தவன்الرَّحِیْمُ۠மிக்க கிருபையுடையவன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
மேலும், நிச்சயமாக உம் இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
وَاِنَّهٗ لَتَنْزِیْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக இதுلَتَنْزِیْلُஅருளப்பட்டதாகும்رَبِّஇறைவனிடமிருந்துالْعٰلَمِیْنَؕஅகிலங்களின்
வ இன்னஹூ லதன்Zஜீலு ரBப்Bபில் 'ஆலமீன்
மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِیْنُ ۟ۙ
نَزَلَஇறங்கினார்بِهِஅதைக் கொண்டுالرُّوْحُரூஹ்الْاَمِیْنُۙநம்பிக்கைக்குரியவர்
னZஜல Bபிஹிர் ரூஹுல் அமீன்
ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.
عَلٰی قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِیْنَ ۟ۙ
عَلٰیமீதுقَلْبِكَஉமது உள்ளத்தின்لِتَكُوْنَநீர் ஆவதற்காகمِنَஒருவராகالْمُنْذِرِیْنَஅச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களில்
'அலா கல்Bபிக லிதகூன மினல் முன்திரீன்
(நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) -
بِلِسَانٍ عَرَبِیٍّ مُّبِیْنٍ ۟ؕ
بِلِسَانٍமொழியில்عَرَبِیٍّஅரபுمُّبِیْنٍؕதெளிவான
Bபிலிஸானின் 'அரBபிய்யிம் முBபீன்
தெளிவான அரபி மொழியில்.
وَاِنَّهٗ لَفِیْ زُبُرِ الْاَوَّلِیْنَ ۟
وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அதுلَفِیْநிச்சயமாகزُبُرِவேதங்களில்الْاَوَّلِیْنَமுன்னோர்களின்
வ இன்னஹூ லFபீ ZஜுBபுரில் அவ்வலீன்
நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது.
اَوَلَمْ یَكُنْ لَّهُمْ اٰیَةً اَنْ یَّعْلَمَهٗ عُلَمٰٓؤُا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
اَوَ لَمْஇது இல்லையாیَكُنْஇருக்கلَّهُمْஅவர்களுக்குاٰیَةًஓர் அத்தாட்சிاَنْஎன்பதுیَّعْلَمَهٗஅதனை அறிந்திருப்பதுعُلَمٰٓؤُاஅறிஞர்கள்بَنِیْۤசந்ததியினர்اِسْرَآءِیْلَؕஇஸ்ராயீல்
அவலம் யகுல் லஹும் ஆயதன் அய் யஃலமஹூ 'உலமா'உ Bபனீ இஸ்ரா'ஈல்
பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை(ப் பற்றி நன்கு) அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா?
وَلَوْ نَزَّلْنٰهُ عَلٰی بَعْضِ الْاَعْجَمِیْنَ ۟ۙ
وَ لَوْமேலும், ஒருவேளைنَزَّلْنٰهُநாம் இதனை இறக்கியிருந்தாலும்عَلٰیமீதுبَعْضِசிலர்الْاَعْجَمِیْنَۙஅரபியல்லாதவர்கள்
வ லவ் னZஜ்Zஜல்னாஹு 'அலா Bபஃளில் அஃஜமீன்
இன்னும், நாம் இதனை அரபி (மொழி) அல்லாதவர்களில் ஒருவர் மீது இறக்கி வைத்திருப்போமாயின்;
فَقَرَاَهٗ عَلَیْهِمْ مَّا كَانُوْا بِهٖ مُؤْمِنِیْنَ ۟ؕ
فَقَرَاَهٗஅவர் அதை ஓதிக்காட்டினாலும்عَلَیْهِمْஅவர்களுக்குمَّاஇல்லைكَانُوْاஅவர்கள் இருந்திருக்கبِهٖஅதன் மீதுمُؤْمِنِیْنَؕநம்பிக்கை கொண்டவர்களாக
Fபகர அஹூ 'அலய்ஹிம் மா கானூ Bபிஹீ மு'மினீன்
அவரும் இதை அவர்களுக்கு ஓதிக் காட்டி இருப்பாராயின் அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொண்டோராக இருக்க மாட்டார்கள்.
كَذٰلِكَ سَلَكْنٰهُ فِیْ قُلُوْبِ الْمُجْرِمِیْنَ ۟ؕ
كَذٰلِكَஇவ்வாறேسَلَكْنٰهُஅதனை நாம் புகுத்தினோம்فِیْஇல்قُلُوْبِஉள்ளங்கள்الْمُجْرِمِیْنَؕகுற்றவாளிகளின்
கதாலிக ஸலக்னாஹு Fபீ குலூBபில் முஜ்ரிமீன்
இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனை புகுத்துகிறோம்.
لَا یُؤْمِنُوْنَ بِهٖ حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟ۙ
لَاமாட்டார்கள்یُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்ளبِهٖஅதனைحَتّٰیவரைیَرَوُاஅவர்கள் காணும்الْعَذَابَவேதனையைالْاَلِیْمَۙநோவினைமிக்க
லா யு'மினூன Bபிஹீ ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
நோவினை செய்யும் வேதனையைக் காணும் வரை, அவர்கள் அதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
فَیَاْتِیَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
فَیَاْتِیَهُمْஆகவே அது அவர்களிடம் வரும்بَغْتَةًதிடீரென்றுوَّ هُمْமேலும் அவர்கள்لَاஇல்லைیَشْعُرُوْنَۙஉணர்வார்கள்
Fபயாதியஹும் Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
எனவே, அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில், அ(வ் வேதனையான)து திடீரென அவர்களிடம் வரும்.
فَیَقُوْلُوْا هَلْ نَحْنُ مُنْظَرُوْنَ ۟ؕ
فَیَقُوْلُوْاஅப்போது அவர்கள் கூறுவார்கள்هَلْஎன்னنَحْنُநாங்கள்مُنْظَرُوْنَؕஅவகாசம் அளிக்கப்படுவோமா
Fப யகூலூ ஹல் னஹ்னு முன்ளரூன்
அப்பொழுது அவர்கள்: “எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?” என்று கேட்பார்கள்.
اَفَبِعَذَابِنَا یَسْتَعْجِلُوْنَ ۟
اَفَبِعَذَابِنَاஎமது வேதனையையாیَسْتَعْجِلُوْنَஅவர்கள் அவசரப்படுகிறார்கள்
அFபBபி 'அதாBபினா யஸ்தஃஜிலூன்
நமது வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
اَفَرَءَیْتَ اِنْ مَّتَّعْنٰهُمْ سِنِیْنَ ۟ۙ
اَفَرَءَیْتَநீர் கவனித்தீரா?اِنْஒருவேளைمَّتَّعْنٰهُمْஅவர்களுக்கு நாம் சுகமளித்தோம்سِنِیْنَۙபல ஆண்டுகள்
அFபர'அய்த இம் மத்தஃனாஹும் ஸினீன்
நீர் பார்த்தீரா? நாம் அவர்களை(ப் பல)ஆண்டுகள் வரை (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருக்கச் செய்தாலும்,
ثُمَّ جَآءَهُمْ مَّا كَانُوْا یُوْعَدُوْنَ ۟ۙ
ثُمَّபின்னர்جَآءَهُمْஅவர்களிடம் வந்தால்مَّاஎதுكَانُوْاஅவர்கள்یُوْعَدُوْنَۙஎச்சரிக்கப்பட்டார்களோ
தும்ம ஜா'அஹும் மா கானூ யூ'அதூன்
பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்-
مَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یُمَتَّعُوْنَ ۟ؕ
مَاۤஎன்னاَغْنٰیபயனளிக்கும்عَنْهُمْஅவர்களுக்குمَّاஎதைكَانُوْاஅவர்கள்یُمَتَّعُوْنَؕசுகமனுபவித்துக் கொண்டிருந்தார்களோ
மா அக்னா 'அன்ஹும் மா கானூ யுமத்த'ஊன்
அவர்கள் (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குப் பயன்தராது.
وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ اِلَّا لَهَا مُنْذِرُوْنَ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَهْلَكْنَاநாம் அழித்தோம்مِنْஎந்தقَرْیَةٍஊரையும்اِلَّاதவிரلَهَاஅதற்குمُنْذِرُوْنَஎச்சரிப்பவர்கள்
வ மா அஹ்லக்னா மின் கர்யதின் இல்லா லஹா முன்திரூன்
இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை.
ذِكْرٰی ۛ۫ وَمَا كُنَّا ظٰلِمِیْنَ ۟
ذِكْرٰی ۛ۫நினைவூட்டலாகوَ مَاமேலும் இல்லைكُنَّاநாம் இருந்தோம்ظٰلِمِیْنَஅநீதி இழைப்பவர்களாக
திக்ரா வமா குன்னா ளாலிமீன்
ஞாபக மூட்டுவதற்காகவே (நபிமார்கள் வந்தார்கள்) - நாம் அநியாயம் செய்பவராக இருக்கவில்லை.
وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّیٰطِیْنُ ۟
وَ مَاஇன்னும் இல்லைتَنَزَّلَتْஇறங்கியதுبِهِஅதைக் கொண்டுالشَّیٰطِیْنُஷைத்தான்கள்
வமா தனZஜ்Zஜலத் Bபிஹிஷ் ஷயாதீன்
இன்னும், ஷைத்தான்கள் இ(வ் வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை.
وَمَا یَنْۢبَغِیْ لَهُمْ وَمَا یَسْتَطِیْعُوْنَ ۟ؕ
وَ مَاமேலும் இல்லைیَنْۢبَغِیْதகுதியானதுلَهُمْஅவர்களுக்குوَ مَاமேலும் இல்லைیَسْتَطِیْعُوْنَؕஅவர்களால் இயலும்
வமா யம்Bபகீ லஹும் வமா யஸ்ததீ'ஊன்
மேலும், அது அவர்களுக்கு தகுதியுமல்ல; (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.
اِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُوْلُوْنَ ۟ؕ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்عَنِஇருந்துالسَّمْعِசெவிமடுப்பதில்لَمَعْزُوْلُوْنَؕமுற்றிலும் விலக்கப்பட்டவர்கள்
இன்னஹும் 'அனிஸ் ஸம்'இ லமஃZஜூலூன்
நிச்சயமாக ஷைத்தான்கள் (இதைக்) கேட்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِیْنَ ۟ۚ
فَلَاஆகவேتَدْعُஅழைக்காதீர்مَعَஉடன்اللّٰهِஅல்லாஹ்اِلٰهًاஇறைவனைاٰخَرَவேறொருفَتَكُوْنَநீர் ஆகிவிடுவீர்مِنَஇருந்துالْمُعَذَّبِیْنَۚவேதனை செய்யப்படுபவர்களில்
Fபலா தத்'உ ம'அல் லாஹி இலாஹன் ஆகர Fபதகூன மினல் மு'அத்தBபீன்
ஆதலின் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்.
وَاَنْذِرْ عَشِیْرَتَكَ الْاَقْرَبِیْنَ ۟ۙ
وَ اَنْذِرْமேலும் எச்சரிப்பீராகعَشِیْرَتَكَஉமது உறவினர்களில்الْاَقْرَبِیْنَۙமிக நெருக்கமானவர்களுக்கு
வ அன்திர் 'அஷீரதகல் அக்ரBபீன்
இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
وَ اخْفِضْமேலும் தாழ்த்துவீராகجَنَاحَكَஉமது சிறகைلِمَنِஎவர்களுக்குاتَّبَعَكَஉம்மைப் பின்பற்றினார்களோمِنَஇருந்துالْمُؤْمِنِیْنَۚநம்பிக்கையாளர்களில்
வக்Fபிள் ஜனாஹக லிமனித் தBப 'அக மினல் மு'மினீன்
மேலும், உம்மைப் பின்பற்றி நடக்கும் முஃமின்களிடத்தில் தோள்தாழ்த்தி(க் கனிவுடன்) நடந்துகொள்வீராக!.
فَاِنْ عَصَوْكَ فَقُلْ اِنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۟ۚ
فَاِنْஎனவேعَصَوْكَஅவர்கள் உமக்கு மாறுசெய்தால்فَقُلْஅப்பொழுது நீர் கூறுவீராகاِنِّیْநிச்சயமாக நான்بَرِیْٓءٌவிலகியவன்مِّمَّاஎவற்றிலிருந்துتَعْمَلُوْنَۚநீங்கள் செய்கிறீர்களோ
Fப இன் அஸவ்க Fபகுல் இன்னீ Bபரீ'உம் மிம்ம்மா தஃமலூன்
ஆனால், அவர்கள் உமக்கு மாறு செய்வார்களாயின்: “நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன்” என்று கூறிவிடுவீராக!
وَتَوَكَّلْ عَلَی الْعَزِیْزِ الرَّحِیْمِ ۟ۙ
وَ تَوَكَّلْமேலும் நீர் நம்பிக்கை வைப்பீராகعَلَیமீதுالْعَزِیْزِமிகைத்தவன்الرَّحِیْمِۙநிகரற்ற அன்புடையவன்
வ தவக்கல் அலல் 'அZஜீZஜிர் ரஹீம்
இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக!
الَّذِیْ یَرٰىكَ حِیْنَ تَقُوْمُ ۟ۙ
الَّذِیْஅவன்یَرٰىكَஉம்மைக் காண்கிறான்حِیْنَபோதுتَقُوْمُۙநீர் நிற்கும்
அல்லதீ யராக ஹீன தகூம்
அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.
وَتَقَلُّبَكَ فِی السّٰجِدِیْنَ ۟
وَ تَقَلُّبَكَஉமது அசைவுகளையும்فِیமத்தியில்السّٰجِدِیْنَஸஜ்தா செய்பவர்களின்
வ தகல்லுBபக Fபிஸ் ஸாஜிதீன்
இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)
اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
اِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவன்السَّمِیْعُசெவியுறுபவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; மிக அறிபவன்.
هَلْ اُنَبِّئُكُمْ عَلٰی مَنْ تَنَزَّلُ الشَّیٰطِیْنُ ۟ؕ
هَلْSlநான்اُنَبِّئُكُمْஉங்களுக்கு அறிவிக்கட்டுமாعَلٰیமீதுمَنْயார்تَنَزَّلُஇறங்குகிறார்கள்الشَّیٰطِیْنُؕஷைத்தான்கள்
ஹல் உனBப்Bபி'உகும் 'அலா மன் தனZஜ்Zஜலுஷ் ஷயாதீன்
எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?
تَنَزَّلُ عَلٰی كُلِّ اَفَّاكٍ اَثِیْمٍ ۟ۙ
تَنَزَّلُஇறங்குகின்றனعَلٰیமீதுكُلِّஒவ்வொருاَفَّاكٍபெரும் பொய்யன்اَثِیْمٍۙபெரும் பாவி
தனZஜ்Zஜலு 'அலா குல்லி அFப்Fபாகின் அதீம்
பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள்.
یُّلْقُوْنَ السَّمْعَ وَاَكْثَرُهُمْ كٰذِبُوْنَ ۟ؕ
یُّلْقُوْنَஅவர்கள் போடுகின்றனர்السَّمْعَ(ஒட்டுக்) கேட்டதைوَ اَكْثَرُهُمْமேலும் அவர்களில் பெரும்பாலோர்كٰذِبُوْنَؕபொய்யர்களே
யுல்கூனஸ் ஸம்'அ வ அக்தருஹும் காதிBபூன்
தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே.
وَالشُّعَرَآءُ یَتَّبِعُهُمُ الْغَاوٗنَ ۟ؕ
وَ الشُّعَرَآءُஇன்னும் கவிஞர்கள்یَتَّبِعُهُمُஅவர்களைப் பின்பற்றுவார்கள்الْغَاوٗنَؕவழிகெட்டவர்கள்
வஷ்ஷு 'அரா'உ யத்தBபி 'உஹுமுல் காவூன்
இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
اَلَمْ تَرَ اَنَّهُمْ فِیْ كُلِّ وَادٍ یَّهِیْمُوْنَ ۟ۙ
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்த்தீர்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்فِیْஇல்كُلِّஒவ்வொருوَادٍபள்ளத்தாக்குیَّهِیْمُوْنَۙஅலைகிறார்கள்
அலம் தர அன்னஹும் Fபீ குல்லி வாதி(ன்)ய் யஹீமூன்
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
وَاَنَّهُمْ یَقُوْلُوْنَ مَا لَا یَفْعَلُوْنَ ۟ۙ
وَ اَنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்یَقُوْلُوْنَகூறுகிறார்கள்مَاஎதைلَاசெய்யیَفْعَلُوْنَۙமாட்டார்களோ
வ அன்னஹும் யகூலூன ம லா யFப்'அலூன்
இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِیْرًا وَّانْتَصَرُوْا مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا ؕ وَسَیَعْلَمُ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَیَّ مُنْقَلَبٍ یَّنْقَلِبُوْنَ ۟۠
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ ذَكَرُواமேலும் நினைவு கூர்ந்தார்களோاللّٰهَஅல்லாஹ்வைكَثِیْرًاஅதிகமாகوَّ انْتَصَرُوْاமேலும் தற்காத்துக் கொண்டார்களோمِنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஅவர்கள்ظُلِمُوْا ؕஅநீதி இழைக்கப்பட்டார்களோوَ سَیَعْلَمُமேலும் விரைவில் அறிந்து கொள்வார்கள்الَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْۤاஅநீதி இழைத்தார்களோاَیَّஎத்தகையمُنْقَلَبٍதிரும்புமிடத்திற்குیَّنْقَلِبُوْنَ۠அவர்கள் திரும்புவார்கள்
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ தகருல் லாஹ கதீர(ன்)வ் வன்தஸரூ மின் Bபஃதி மா ளுலிமூ; வ ஸயஃலமுல் லதீன ளலமூ அய்ய முன்கலBபி(ன்)ய் யன்கலிBபூன்
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.