10. ஸூரத்து யூனுஸ் (நபி)

மக்கீ, வசனங்கள்: 109

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
الٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْحَكِیْمِ ۟
الٓر‌அலிஃப்; லாம்; றாتِلْكَஇவைاٰيٰتُவசனங்கள்الْكِتٰبِவேதத்தின்الْحَكِيْمِ‏ஞானமிகுந்த(து)
அலிFப்-லாம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBபில் ஹகீம்
அலிஃப், லாம், றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنْ اَوْحَیْنَاۤ اِلٰی رَجُلٍ مِّنْهُمْ اَنْ اَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْ ؔؕ قَالَ الْكٰفِرُوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِیْنٌ ۟
اَكَانَஇருக்கிறதா?لِلنَّاسِமனிதர்களுக்குعَجَبًاஆச்சரியமாகاَنْ اَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்ததுاِلٰى رَجُلٍஒரு மனிதருக்குمِّنْهُمْஅவர்களில்اَنْஎன்றுاَنْذِرِஎச்சரிப்பீராகالنَّاسَமனிதர்களைوَبَشِّرِஇன்னும் நற்செய்தி கூறுவீராகالَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டவர்களுக்குاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குقَدَمَ صِدْقٍநற்கூலிعِنْدَஇடத்தில்رَبِّهِمْؔ‌ؕதங்கள் இறைவன்قَالَகூறினார்(கள்)الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்اِنَّநிச்சயமாகهٰذَاஇவர்لَسٰحِرٌசூனியக்காரர்தான்مُّبِيْنٌ‏தெளிவான
'அ கான லின்னாஸி 'அஜாBபன் 'அன் 'அவ்ஹய்னா 'இலா ரஜுலின் மின்ஹும் 'அன் அன்திரின் னாஸ வ Bபஷ்ஷிரில் லதீன 'ஆமனூ 'அன்ன லஹும் கதம ஸித்கின் 'இன்த ரBப்Bபிஹிம்; காலல் காFபிரூன 'இன்ன ஹாதா ல ஸாஹிருன் முBபீன்
மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, “நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே” என்று கூறுகின்றனர்.
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ یُدَبِّرُ الْاَمْرَ ؕ مَا مِنْ شَفِیْعٍ اِلَّا مِنْ بَعْدِ اِذْنِهٖ ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
اِنَّ رَبَّكُمُநிச்சயமாகஉங்கள் இறைவன்اللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎத்தகையவன்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَஇன்னும் பூமியையும்فِىْஇல்سِتَّةِஆறுاَيَّامٍநாள்கள்ثُمَّபிறகுاسْتَوٰىஉயர்ந்து விட்டான்عَلَىமீதுالْعَرْشِ‌அர்ஷ்يُدَبِّرُநிர்வகிக்கிறான்الْاَمْرَ‌ؕகாரியத்தைمَا مِنْஅறவே இல்லைشَفِيْعٍபரிந்துரைப்பவர்اِلَّاதவிரمِنْۢ بَعْدِபின்னரேاِذْنِهٖ‌ ؕஅவனுடைய அனுமதிக்குذٰ لِكُمُஅந்தاللّٰهُஅல்லாஹ்தான்رَبُّكُمْஉங்கள் இறைவன்فَاعْبُدُوْஆகவே வணங்குங்கள்هُ‌ ؕஅவனைاَفَلَا تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
இன்ன ரBப்Bபகுமுல் லாஹுல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமின் தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷி யுதBப்Bபிருல் அம்ர மா மின் ஷFபீ'இன் இல்லா மின் Bபஃதி இத்னிஹ்; தலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; அFபலா ததக்கரூன்
நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
اِلَیْهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ اِنَّهٗ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ لِیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِیْمٍ وَّعَذَابٌ اَلِیْمٌ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟
اِلَيْهِஅவனிடமேمَرْجِعُكُمْஉங்கள் மீளுமிடம்جَمِيْعًا ؕஅனைவரின்وَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வுடையحَقًّا‌ ؕஉண்மையேاِنَّهٗநிச்சயமாக அவன்يَـبْدَؤُاஆரம்பிக்கிறான்الْخَـلْقَபடைப்பைثُمَّபிறகுيُعِيْدُهٗமீட்கிறான்/அதைلِيَجْزِىَகூலி கொடுப்பதற்காகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِநற்செயல்களைبِالْقِسْطِ‌ؕநீதமாகوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்لَهُمْஅவர்களுக்குشَرَابٌகுடிபானம்مِّنْ حَمِيْمٍமுற்றிலும் கொதித்தவற்றிலிருந்துوَّعَذَابٌஇன்னும் வேதனையும்اَلِيْمٌۢதுன்புறுத்தும்بِمَاஎதன் காரணமாகكَانُوْاஇருந்தனர்يَكْفُرُوْنَ‏நிராகரிக்கின்றனர்
இலய்ஹி மர்ஜி'உகும் ஜமீ 'அ(ன்)வ் வஃதல் லாஹி ஹக்கா; இன்னஹூ யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ லியஜ்Zஜியல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Bபில்கிஸ்த்; வல்லதீன கFபரூ லஹும் ஷராBபுன் மின் ஹமீ மி(ன்)வ் வ 'அதாBபுன் 'அலீமுன் Bபிமா கானூ யக்Fபுரூன்
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
هُوَ الَّذِیْ جَعَلَ الشَّمْسَ ضِیَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِیْنَ وَالْحِسَابَ ؕ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَقِّ ۚ یُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
هُوَஅவனேالَّذِىْஎத்தகையவன்جَعَلَஆக்கினான்الشَّمْسَசூரியனைضِيَآءًஒளியாக(வும்)وَّالْقَمَرَஇன்னும் சந்திரனைنُوْرًاவெளிச்சமாக(வும்)وَّقَدَّرَஇன்னும் நிர்ணயித்தான்هٗஅதைمَنَازِلَதங்குமிடங்களில்لِتَعْلَمُوْاநீங்கள் அறிவதற்காகعَدَدَஎண்ணிக்கையையும்السِّنِيْنَஆண்டுகளின்وَالْحِسَابَ‌ؕஇன்னும் கணக்கையும்مَا خَلَقَபடைக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்ذٰلِكَஇவற்றைاِلَّاதவிரبِالْحَـقِّ‌ۚஉண்மையானதற்கேيُفَصِّلُவிவரிக்கின்றான்الْاٰيٰتِஅத்தாட்சிகளைلِقَوْمٍசமுதாயத்திற்குيَّعْلَمُوْنَ‏அறிகிறார்கள்
ஹுவல் லதீ ஜ'அலஷ் ஷம்ஸ ளியா'அ(ன்)வ் வல்கமர னூர(ன்)வ் வ கத்தரஹூ மனாZஜில லி தஃலமூ 'அததஸ் ஸினீன வல்ஹிஸாBப்; மா கலகல் லாஹு தாலிக இல்லா Bபில்ஹக்க்; யுFபஸ்ஸிலுல் ஆயாதி லி கவ்மி(ன்)ய் யஃலமூன்
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
اِنَّ فِی اخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَّقُوْنَ ۟
اِنَّநிச்சயமாகفِى اخْتِلَافِமாறுவதில்الَّيْلِஇரவுوَالنَّهَارِஇன்னும் பகல்وَمَاஇன்னும் எதுخَلَقَபடைத்தான்اللّٰهُஅல்லாஹ்فِى السَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِஇன்னும் பூமிلَاٰيٰتٍ(உ) அத்தாட்சிகள்لِّـقَوْمٍமக்களுக்குيَّتَّقُوْنَ‏அல்லாஹ்வை அஞ்சுகின்றனர்
இன்ன Fபிக் திலாFபில் லய்லி வன்னஹாரி வமா கலகல் லாஹு Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி ல ஆயாதின் லிகவ்மி(ன்)ய் யத்தகூன்
நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
اِنَّ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا وَرَضُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا وَاطْمَاَنُّوْا بِهَا وَالَّذِیْنَ هُمْ عَنْ اٰیٰتِنَا غٰفِلُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்لَا يَرْجُوْنَஆதரவு வைக்க மாட்டார்கள்لِقَآءَنَاநம் சந்திப்பைوَرَضُوْاஇன்னும் விரும்பினர்بِالْحَيٰوةِவாழ்க்கையைالدُّنْيَاஇவ்வுலகம்وَاطْمَاَنُّوْاஇன்னும் நிம்மதியடைந்தனர்بِهَاஅதைக் கொண்டுوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்عَنْவிட்டுاٰيٰتِنَاநம் வசனங்கள்غٰفِلُوْنَۙ‏அலட்சியமானவர் களாக
இன்னல் லதீன லா யர்ஜூன லிகா'அனா வ ரளூ Bபில்ஹயாதித் துன்யா வத்ம' அன்னூ Bபிஹா வல்லதீன ஹும் 'அன் ஆயாதினா காFபிலூன்
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ -
اُولٰٓىِٕكَ مَاْوٰىهُمُ النَّارُ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்مَاْوٰٮهُمُஅவர்களுடைய தங்குமிடம்النَّارُநரகம்தான்بِمَاஎதன் காரணமாகكَانُوْاஇருந்தனர்يَكْسِبُوْنَ‏செய்கிறார்கள்
உலா'இக ம'வாஹுமுன் னாரு Bபிமா கானூ யக்ஸிBபூன்
அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ یَهْدِیْهِمْ رَبُّهُمْ بِاِیْمَانِهِمْ ۚ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَ عَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِநற்செயல்களைيَهْدِيْهِمْநேர்வழி செலுத்துவான்/அவர்களைرَبُّهُمْஇறைவன்/அவர்களுடையبِاِيْمَانِهِمْ‌ۚஅவர்களின் நம்பிக்கையின் காரணமாகتَجْرِىْஓடுகின்றمِنْ تَحْتِهِمُஅவர்களுக்குக் கீழ்الْاَنْهٰرُநதிகள்فِىْ جَنّٰتِசொர்க்கங்களில்النَّعِيْمِ‏இன்பமிகு
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி யஹ்தீஹிம் ரBப்Bபுஹும் Bபி ஈமானிஹிம் தஜ்ரீ மின் தஹ்திஹிமுல் அன்ஹாரு Fபீ ஜன்னாதின் ன'ஈம்
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
دَعْوٰىهُمْ فِیْهَا سُبْحٰنَكَ اللّٰهُمَّ وَتَحِیَّتُهُمْ فِیْهَا سَلٰمٌ ۚ وَاٰخِرُ دَعْوٰىهُمْ اَنِ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
دَعْوٰٮهُمْஅவர்களின் பிரார்த்தனைفِيْهَاஅதில்سُبْحٰنَكَநீ மிகப் பரிசுத்தமானவன்اللّٰهُمَّஅல்லாஹ்வேوَ تَحِيَّـتُهُஇன்னும் அவர்களின் முகமன்فِيْهَاஅதில்سَلٰمٌ‌ۚஸலாம்وَاٰخِرُஇறுதிدَعْوٰٮهُمْபிரார்த்தனையின்/அவர்களுடையاَنِ الْحَمْدُநிச்சயமாக புகழ்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேرَبِّஇறைவன்الْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
தஃவாஹும் Fபீஹா ஸுBப்ஹானகல் லாஹும்ம வ தஹிய்யதுஹும் Fபீஹா ஸலாம்; வ ஆகிரு தஃவாஹும் அனில் ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
அதில் அவர்கள்: “(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். “எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.
وَلَوْ یُعَجِّلُ اللّٰهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَیْرِ لَقُضِیَ اِلَیْهِمْ اَجَلُهُمْ ؕ فَنَذَرُ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
وَلَوْ يُعَجِّلُஅவசரப்படுத்தினால்اللّٰهُஅல்லாஹ்(வும்)لِلنَّاسِமனிதர்களுக்குالشَّرَّதீங்கைاسْتِعْجَالَهُمْஅவர்கள் அவசரப்படுவதுபோல்بِالْخَيْرِநன்மையைلَـقُضِىَமுடிக்கப்பட்டிருக்கும்اِلَيْهِمْஅவர்களுக்குاَجَلُهُمْ‌ؕதவணைக் காலம்/ அவர்களுடையفَنَذَرُஆகவே விட்டுவிடுகிறோம்الَّذِيْنَஎவர்கள்لَا يَرْجُوْنَஆதரவு வைக்க மாட்டார்கள்لِقَآءَنَاநம் சந்திப்பைفِىْஇல்طُغْيَانِهِمْஅவர்களுடைய வழிகேடுيَعْمَهُوْنَ‏கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
வ லவ் யு'அஜ்ஜிலுல் லாஹு லின்னாஸிஷ் ஷர்ர ஸ்திஃ ஜாலஹும் Bபில் கய்ரி லகுளிய இலய்ஹிம் 'அஜலுஹும் Fப னதருல் லதீன லா யர்ஜூன லிகா'அனா Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்; எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம்.
وَاِذَا مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖۤ اَوْ قَاعِدًا اَوْ قَآىِٕمًا ۚ فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ یَدْعُنَاۤ اِلٰی ضُرٍّ مَّسَّهٗ ؕ كَذٰلِكَ زُیِّنَ لِلْمُسْرِفِیْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَاِذَا مَسَّதீண்டினால்الْاِنْسَانَமனிதனைالضُّرُّதுன்பம்دَعَاபிரார்த்திக்கிறான்نَاநம்மிடம்لِجَنْۢبِهٖۤஅவன் தன் விலாவின் மீதுاَوْஅல்லதுقَاعِدًاஉட்கார்ந்தவனாகاَوْஅல்லதுقَآٮِٕمًا ۚநின்றவனாகفَلَمَّا كَشَفْنَاநாம் நீக்கிவிட்டபோதுعَنْهُஅவனை விட்டுضُرَّهٗஅவனுடைய துன்பத்தைمَرَّசெல்கின்றான்كَاَنْ لَّمْ يَدْعُنَاۤஅவன் நம்மை அழைக்காதது போன்றுاِلٰى ضُرٍّதுன்பத்திற்குمَّسَّهٗ‌ؕதீண்டியது/அவனைكَذٰلِكَஇவ்வாறுزُيِّنَஅலங்கரிக்கப்பட்டனلِلْمُسْرِفِيْنَவரம்பு மீறிகளுக்குمَاஎவைكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்கின்றனர்
வ இதா மஸ்ஸல் இன்ஸானள் ளுர்ரு த'ஆனா லி ஜம்Bபிஹீ அவ் கா'இதன் அவ் கா'இமன் Fபலம்மா கஷFப்னா 'அன்ஹு ளுர்ரஹூ மர்ர க அன் லம் யத்'உனா இலா ளுர்ரின் மஸ்ஸஹ்; கதாலிக Zஜுய்யின லில்முஸ்ரிFபீன மா கானூ யஃமலூன்
மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.
وَلَقَدْ اَهْلَكْنَا الْقُرُوْنَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوْا ۙ وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ وَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا ؕ كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟
وَلَقَدْ اَهْلَـكْنَاதிட்டமாக அழித்துவிட்டோம்الْـقُرُوْنَதலைமுறைகளைمِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னிருந்தلَمَّا ظَلَمُوْا ۙஅவர்கள் அநியாயம் செய்தபோதுوَجَآءَتْهُمْஇன்னும் வந்தனர்/அவர்களிடம்رُسُلُهُمْதூதர்கள்/ அவர்களுடையبِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளை கொண்டுوَمَا كَانُوْا لِيُـؤْمِنُوْا ؕஅவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லைكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىநாம் கூலி கொடுப்போம்الْقَوْمَமக்களுக்குالْمُجْرِمِيْنَ‏குற்றம்புரிகின்றவர்கள்
வ லகத் அஹ்லக்னல் குரூன மின் கBப்லிகும் லம்மா ளலமூ வ ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில் Bபய்யினாதி வமா கானூ லியு'மினூ; கதாலிக னஜ்Zஜில் கவ்மல் முஜ்ரிமீன்
(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.
ثُمَّ جَعَلْنٰكُمْ خَلٰٓىِٕفَ فِی الْاَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَیْفَ تَعْمَلُوْنَ ۟
ثُمَّபிறகுجَعَلْنٰكُمْஆக்கினோம்/ உங்களைخَلٰٓٮِٕفَபிரதிநிதிகளாகفِى الْاَرْضِபூமியில்مِنْۢ بَعْدِهِمْஅவர்களுக்குப் பின்னர்لِنَـنْظُرَநாம் கவனிப்பதற்காகكَيْفَஎப்படிتَعْمَلُوْنَ‏நீங்கள் செய்கிறீர்கள்
தும்ம ஜ'அல்னாகும் கலா'இFப Fபில் அர்ளி மின் Bபஃதிஹிம் லி னன்ளுர கய்Fப தஃமலூன்
நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம்.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیَاتُنَا بَیِّنٰتٍ ۙ قَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا ائْتِ بِقُرْاٰنٍ غَیْرِ هٰذَاۤ اَوْ بَدِّلْهُ ؕ قُلْ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اُبَدِّلَهٗ مِنْ تِلْقَآئِ نَفْسِیْ ۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ۚ اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
وَاِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஇவர்கள் மீதுاٰيَاتُنَاவசனங்கள்/நம்بَيِّنٰتٍ‌ ۙதெளிவான(வை)قَالَகூறுகின்றனர்الَّذِيْنَ لَا يَرْجُوْنَஎவர்கள்/ஆதரவு வைக்கமாட்டார்கள்لِقَآءَنَاநம் சந்திப்பைائْتِவாரீர்بِقُرْاٰنٍஒரு குர்ஆனைக் கொண்டுغَيْرِஅல்லாதهٰذَاۤஇதுاَوْஅல்லதுبَدِّلْهُ‌ ؕமாற்றுவீராக/அதைقُلْகூறுவீராகمَا يَكُوْنُ لِىْۤமுடியாது/என்னால்اَنْநான்மாற்றுவதுاُبَدِّلَهٗஅதைمِنْ تِلْقَآئِபுறத்திலிருந்துنَـفْسِىْ ۚஎன்اِنْ اَتَّبِعُபின்பற்ற மாட்டேன்اِلَّاதவிரمَاஎதுيُوْحٰۤىவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَىَّ‌ ۚஎனக்குاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اِنْ عَصَيْتُநான் மாறுசெய்தால்رَبِّىْஎன் இறைவனுக்குعَذَابَவேதனையைيَوْمٍநாளின்عَظِيْمٍ‏மகத்தான
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலல் லதீன லா யர்ஜூன லிகா'அ ன'தி Bபி குர்'ஆனின் கய்ரி ஹாதா அவ் Bபத்தில்ஹ்; குல் மா யகூனு லீ 'அன் 'உBபத்திலஹூ மின் தில்கா'இ னFப்ஸீ இன் அத்தBபி'உ இல்லா மா யூஹா இலய்ய இன்னீ அகாFபு இன் 'அஸய்து ரBப்Bபீ 'அதாBப யவ்மின் 'அளீம்
அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், “இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்” என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
قُلْ لَّوْ شَآءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَیْكُمْ وَلَاۤ اَدْرٰىكُمْ بِهٖ ۖؗ فَقَدْ لَبِثْتُ فِیْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
قُلْகூறுவீராகلَّوْ شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَاநான் ஓதியிருக்கவும் மாட்டேன்تَلَوْتُهٗஇதைعَلَيْكُمْஉங்கள் மீதுوَلَاۤஇன்னும் அவன் அறிவித்திருக்கவும் மாட்டான்اَدْرٰٮكُمْஉங்களுக்குبِهٖ ۖ இதைفَقَدْ لَبِثْتُதிட்டமாக வசித்துள்ளேன்فِيْكُمْஉங்களுடன்عُمُرًاஒரு (நீண்ட) காலம்مِّنْ قَبْلِهٖ ؕஇதற்கு முன்னர்اَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
குல் லவ் ஷா'அல் லாஹு மா தலவ்துஹூ 'அலய்கும் வ லா அத்ராகும் Bபிஹீ Fபகத் லBபித்து Fபீகும் 'உமுரன் மின் கBப்லிஹ்; அFபலா தஃகிலூன்
“(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الْمُجْرِمُوْنَ ۟
فَمَنْயார்?اَظْلَمُபெரும் அநியாயக்காரன்مِمَّنِஎவனைவிடافْتَـرٰىஇட்டுக்கட்டினான்عَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைاَوْஅல்லதுكَذَّبَபொய்ப்பித்தான்بِاٰيٰتِهٖ ؕஅவனுடைய வசனங்களைاِنَّهٗநிச்சயமாகلَا يُفْلِحُவெற்றி பெறமாட்டார்(கள்)الْمُجْرِمُوْنَ‏குற்றவாளிகள்
Fபமன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபி ஆயாதிஹ்; இன்னஹூ லா யுFப்லிஹுல் முஜ்ரிமூன்
அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ وَیَقُوْلُوْنَ هٰۤؤُلَآءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ ؕ قُلْ اَتُنَبِّـُٔوْنَ اللّٰهَ بِمَا لَا یَعْلَمُ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
وَيَعْبُدُوْنَஇன்னும் அவர்கள் வணங்குகிறார்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمَا لَا يَضُرُّஎதை/தீங்கிழைக்காதுهُمْதங்களுக்குوَلَا يَنْفَعُهُمْஇன்னும் பலனளிக்காது / தங்களுக்குوَيَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்هٰٓؤُلَاۤءِஇவைشُفَعَآؤُசிபாரிசாளர்கள்نَاஎங்கள்عِنْدَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்விடம்قُلْகூறுவீராகاَتُـنَـبِّــــٴُـوْنَஅறிவிக்கிறீர்களா?اللّٰهَஅல்லாஹ்வுக்குبِمَاஎதைلَا يَعْلَمُஅறிய மாட்டான்فِى السَّمٰوٰتِவானங்களில்وَلَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் பூமியில்سُبْحٰنَهٗஅவன் மிகப் பரிசுத்தமானவன்وَتَعٰلٰىஇன்னும் உயர்ந்து விட்டான்عَمَّاஎவற்றைவிட்டுيُشْرِكُوْنَ‏இணைவைக்கிறார்கள்
வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யளுர்ருஹும் வலா யன்Fப'உஹும் வ யகூலூன ஹா'உலா'இ ஷுFப'ஆ 'உனா 'இன்தல் லாஹ்; குல் 'அ துனBப்Bபி 'ஊனல் லாஹ Bபி மா லா யஃலமு Fபிஸ் ஸமாவாதி வலா Fபில் அர்ள்; ஸுBப்ஹானஹூ வ த'ஆலா 'அம்மா யுஷ்ரிகூன்
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும்.
وَمَا كَانَ النَّاسُ اِلَّاۤ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْا ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ فِیْمَا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَمَا كَانَஇருக்கவில்லைالنَّاسُமனிதர்கள்اِلَّاۤதவிரاُمَّةًஒரு சமுதாயமாகوَّاحِدَةًஒரேفَاخْتَلَفُوْا‌ ؕபிறகு மாறுபட்டனர்وَلَوْلَاஇருக்கவில்லையெனில்كَلِمَةٌசொல்سَبَقَتْமுந்தியதுمِنْ رَّبِّكَஉம் இறைவனின்لَـقُضِىَதீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَيْنَهُஅவர்களுக்கிடையில்فِيْمَاஎவற்றில்فِيْهِஅவற்றில்يَخْتَلِفُوْنَ‏மாறுபடுகின்றனர்
வமா கானன் னாஸு இல்லா உம்மத(ன்)வ் வாஹிததன் Fப க்தலFபூ; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும் Fபீ மா Fபீஹி யக்தலிFபூன்
மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும்.
وَیَقُوْلُوْنَ لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ۚ فَقُلْ اِنَّمَا الْغَیْبُ لِلّٰهِ فَانْتَظِرُوْا ۚ اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟۠
وَيَقُوْلُوْنَஇன்னும் அவர்கள் கூறுகின்றனர்لَوْلَاۤ اُنْزِلَஇறக்கப்பட்டிருக்க வேண்டாமா?عَلَيْهِஅவர் மீதுاٰيَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّهٖ‌ ۚஅவருடைய இறைவன்فَقُلْஆகவே, கூறுவீராகاِنَّمَاஎல்லாம்الْغَيْبُமறைவானவைلِلّٰهِஅல்லாஹ்வுக்குரியனفَانْتَظِرُوْا‌ ۚஆகவே எதிர் பார்த்திருங்கள்اِنِّىْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன்مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏எதிர்பார்ப்பவர்களில்
வ யகூலூன லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயதுன் மிர் ரBப்Bபிஹீ Fபகுல் இன்னமல் கய்Bபு லில்லாஹி Fபன்தளிரூ இன்னீ ம'அகும் மினல் முன்தளிரீன்
“மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِیْۤ اٰیَاتِنَا ؕ قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًا ؕ اِنَّ رُسُلَنَا یَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ ۟
وَاِذَاۤ اَذَقْنَاநாம் சுவைக்க வைத்தால்النَّاسَமனிதர்களுக்குرَحْمَةًஒரு கருணையைمِّنْۢ بَعْدِபின்னர்ضَرَّآءَஒரு துன்பம்مَسَّتْهُمْதீண்டியது/தங்களைاِذَاஅப்போதுلَهُمْஅவர்களுக்குمَّكْرٌஒரு சூழ்ச்சிفِىْۤ اٰيَاتِنَا‌ ؕவசனங்களில்/நம்قُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்اَسْرَعُமிகத் தீவிரமானவன்مَكْرًا‌ ؕசூழ்ச்சி செய்வதில்اِنَّநிச்சயமாகرُسُلَنَاநம் தூதர்கள்يَكْتُبُوْنَபதிவு செய்கிறார்கள்مَاஎதைتَمْكُرُوْنَ‏நீங்கள் சூழ்ச்சி செய்கிறீர்கள்
வ இதா அதக்னன் னாஸ ரஹ்மதன் மின் Bபஃதி ளர்ரா'அ மஸ்ஸத் ஹும் இதா லஹும் மக்ருன் Fபீ ஆயாதினா; குலில் லாஹு அஸ்ர'உ மக்ரா; இன்ன ருஸுலனா யக்துBபூன மா தம்குரூன்
மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது; “திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
هُوَ الَّذِیْ یُسَیِّرُكُمْ فِی الْبَرِّ وَالْبَحْرِ ؕ حَتّٰۤی اِذَا كُنْتُمْ فِی الْفُلْكِ ۚ وَجَرَیْنَ بِهِمْ بِرِیْحٍ طَیِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِیْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِیْطَ بِهِمْ ۙ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬ لَىِٕنْ اَنْجَیْتَنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟
هُوَஅவன்الَّذِىْஎத்தகையவன்يُسَيِّرُபயணிக்கவைக்கிறான்كُمْஉங்களைفِى الْبَرِّநிலத்திலும்وَالْبَحْرِ‌ؕஇன்னும் நீரிலும்حَتّٰۤىஇறுதியாகاِذَاபோதுكُنْتُمْஇருக்கின்றீர்கள்فِى الْفُلْكِ ۚகப்பல்களில்وَ جَرَيْنَஇன்னும் பயணித்தனبِهِمْஅவர்களை சுமந்துبِرِيْحٍஒரு காற்றால்طَيِّبَةٍநல்லوَّفَرِحُوْاஇன்னும் அவர்கள் மகிழ்ந்தனர்بِهَاஅதன்மூலம்جَآءَتْهَاவந்தது/அவற்றுக்குرِيْحٌகாற்றுعَاصِفٌபுயல்وَّجَآءَஇன்னும் வந்தனهُمُஅவர்களுக்குالْمَوْجُஅலைகள்مِنْஇருந்துكُلِّஎல்லாمَكَانٍஇடம்وَّظَنُّوْۤاஇன்னும் அவர்கள் எண்ணினர்اَنَّهُمْநிச்சயமாக தாம்اُحِيْطَஅழிக்கப்பட்டோம்بِهِمْ‌ ۙதாம்دَعَوُاஅவர்கள் அழைக்கின்றனர்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِيْنَதூய்மைப்படுத்தியவர்களாகلَـهُஅவனுக்குالدِّيْنَۙ வழிபாட்டைلَٮِٕنْ اَنْجَيْتَـنَاநீ பாதுகாத்தால் / எங்களைمِنْ هٰذِهٖஇதிலிருந்துلَنَكُوْنَنَّநிச்சயமாக இருப்போம்مِنَ الشّٰكِرِيْنَ‏நன்றி செலுத்துபவர்களில்
ஹுவல் லதீ யுஸய்யிருகும் Fபில் Bபர்ரி வல்Bபஹ்ரி ஹத்தா இதா குன்தும் Fபில் Fபுல்கி வ ஜரய்ன Bபிஹிம் Bபி ரீஹின் தய்யிBபதி(ன்)வ் வ Fபரிஹூ Bபிஹா ஜா'அத் ஹா ரீஹுன் 'ஆஸிFபு(ன்)வ் வ ஜா'அஹுமுல் மவ்ஜு மின் குல்லி மகானி(ன்)வ் வ ளன்னூ 'அன்னஹும் 'உஹீத Bபிஹிம் த'அ வுல்லாஹ முக்லிஸீன லஹுத் தீன ல'இன் அன்ஜய்தனா மின் ஹாதிஹீ ல னகூனன்ன மினஷ் ஷாகிரீன்
அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.
فَلَمَّاۤ اَنْجٰىهُمْ اِذَا هُمْ یَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّمَا بَغْیُكُمْ عَلٰۤی اَنْفُسِكُمْ ۙ مَّتَاعَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ ثُمَّ اِلَیْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
فَلَمَّاۤபோதுاَنْجٰٮهُمْஅவன் பாதுகாத்தான்/அவர்களைاِذَاஅப்போதேهُمْஅவர்கள்يَبْغُوْنَவரம்பு மீறுகின்றனர்فِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَـقِّ‌ ؕநியாயமின்றிيٰۤـاَ يُّهَا النَّاسُமனிதர்களேاِنَّمَاஎல்லாம்بَغْيُكُمْவரம்புமீறுதல்/உங்கள்عَلٰٓى اَنْفُسِكُمْ‌ۙஉங்களுக்கே கேடானதுمَّتَاعَசொற்ப இன்பமாகும்الْحَيٰوةِவாழ்க்கைالدُّنْيَا‌இவ்வுலகثُمَّபிறகுاِلَـيْنَاநம் பக்கமேمَرْجِعُكُمْஉங்கள் மீளுமிடம்فَنُنَبِّئُكُمْஅறிவிப்போம்/உங்களுக்குبِمَاஎவற்றைكُنْتُمْஇருந்தீர்கள்تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
Fபலம்மா அன்ஜாஹும் இதா ஹும் யBப்கூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்க்; யா அய்யுஹன்னாஸு இன்னமா Bபக் யுகும் 'அலா அன்Fபுஸிகும் மதா'அல் ஹயாதித் துன்யா தும்ம இலய்னா மர்ஜி'உகும் FபனுனBப்Bபி 'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டதும் அவர்கள் பூமியின் மேல் நியாயமில்லாது அழிச்சாட்டியம் செய்கிறார்கள்; மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்களெல்லாம் உங்களுக்கே கேடாகமுடியும்; உலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; இதன் பின்னர் நம்மிடமே நீங்கள் திரும்ப வர வேண்டியதிருக்கிறது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம்.
اِنَّمَا مَثَلُ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا یَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُ ؕ حَتّٰۤی اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّیَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَیْهَاۤ ۙ اَتٰىهَاۤ اَمْرُنَا لَیْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِیْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
اِنَّمَاஎல்லாம்مَثَلُஉதாரணம்الْحَيٰوةِவாழ்க்கையின்الدُّنْيَاஉலகம்كَمَآءٍநீரைப் போன்றுاَنْزَلْنٰهُநாம் இறக்கியمِنَஇருந்துالسَّمَآءِமேகம்فَاخْتَلَطَகலந்து விட்டதுبِهٖஅதன் மூலம்نَبَاتُதாவரம்الْاَرْضِபூமியின்مِمَّاஎதிலிருந்துيَاْكُلُபுசிப்பார்(கள்)النَّاسُமனிதர்கள்وَالْاَنْعَامُؕஇன்னும் கால்நடைகளும்حَتّٰۤىஇறுதியாகاِذَاۤபோதுاَخَذَتِஎடுத்ததுالْاَرْضُபூமிزُخْرُفَهَاதன் அலங்காரத்தைوَازَّيَّنَتْஇன்னும் அலங்காரமானதுوَظَنَّஇன்னும் எண்ணினார்(கள்)اَهْلُهَاۤஅதன் உரிமையாளர்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்قٰدِرُوْنَஆற்றல் பெற்றவர்கள்عَلَيْهَاۤ ۙஅவற்றின் மேல்اَتٰٮهَاۤவந்தது அவற்றுக்குاَمْرُنَاநம் கட்டளைلَيْلًاஇரவில்اَوْஅல்லதுنَهَارًاபகலில்فَجَعَلْنٰهَاஆக்கினோம்/அவற்றைحَصِيْدًاவேரறுக்கப்பட்டதாகكَاَنْபோன்றுلَّمْ تَغْنَஅவைஇருக்கவில்லைبِالْاَمْسِ‌ ؕநேற்றுكَذٰلِكَஇவ்வாறுنُـفَصِّلُவிவரிக்கிறோம்الْاٰيٰتِவசனங்களைلِقَوْمٍமக்களுக்குيَّتَفَكَّرُوْنَ‏சிந்திக்கின்றார்கள்
இன்னமா மதலுல் ஹயாதித் துன்யா க மா'இன் அன்Zஜல்னாஹு மினஸ் ஸமா'இ Fபக்தலத Bபிஹீ னBபாதுல் அர்ளி மிம்மா ய'குலுன் னாஸு வல் அன்'ஆம்; ஹத்தா இதா அகததில் அர்ளு Zஜுக்ருFபஹா வZஜ்Zஜய்யனத் வ ளன்ன அஹ்லுஹா அன்னஹும் காதிரூன 'அலய்ஹா அதாஹா அம்ருனா லய்லன் அவ் னஹாரன் Fபஜ'அல்னாஹா ஹஸீதன் க 'அன் லம் தக்ன Bபில்-அம்ஸ்; கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்
وَاللّٰهُ یَدْعُوْۤا اِلٰی دَارِ السَّلٰمِ ؕ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
وَاللّٰهُஅல்லாஹ்يَدْعُوْۤاஅழைக்கிறான்اِلٰى دَارِஇல்லத்திற்குالسَّلٰمِؕஈடேற்றத்தின்وَيَهْدِىْஇன்னும் வழிகாட்டுகிறான்مَنْஎவரைيَّشَآءُநாடுகிறான்اِلٰىபக்கம்صِرَاطٍபாதைمُّسْتَقِيْمٍ‏நேரானது
வல்லாஹு யத்'ஊ இலா தாரிஸ் ஸலாமி வ யஹ்தீ ம(ன்)ய் யஷா'உ இலா ஸிராதின் முஸ்தகீம்
மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
لِلَّذِیْنَ اَحْسَنُوا الْحُسْنٰی وَزِیَادَةٌ ؕ وَلَا یَرْهَقُ وُجُوْهَهُمْ قَتَرٌ وَّلَا ذِلَّةٌ ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
لِلَّذِيْنَஎவர்களுக்குاَحْسَنُواநல்லறம் புரிந்தனர்الْحُسْنٰىமிக அழகிய கூலிوَزِيَادَةٌ ؕஇன்னும் அதிகம்وَلَا يَرْهَقُஇன்னும் சூழாதுوُجُوْهَهُمْஅவர்களுடைய முகங்கள்قَتَرٌகவலைوَّلَا ذِلَّـةٌ ؕஅவர்கள் இழிவுاُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ الْجَـنَّةِ‌ ۚசொர்க்கவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
லில் லதீன அஹ்ஸனுல் ஹுஸ்னா வ Zஜியாதது(ன்)வ் வலா யர்ஹகு வுஜூஹஹும் கதரு(ன்)வ் வலா தில்லஹ்; உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சுவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
وَالَّذِیْنَ كَسَبُوا السَّیِّاٰتِ جَزَآءُ سَیِّئَةٍ بِمِثْلِهَا ۙ وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ مَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍۚ كَاَنَّمَاۤ اُغْشِیَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّیْلِ مُظْلِمًا ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَالَّذِيْنَஎவர்கள்كَسَبُواசெய்தனர்السَّيِّاٰتِதீமைகளைجَزَآءُ سَيِّئَةٍ ۢகூலி/தீமையின்بِمِثْلِهَا ۙஅது போன்றதைக் கொண்டுوَتَرْهَقُهُمْஇன்னும் சூழும்/அவர்களைذِلَّـةٌ  ؕஇழிவுمَاஇல்லைلَهُمْஅவர்களுக்குمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துمِنْ عَاصِمٍ‌ ۚபாதுகாப்பவர் ஒருவரும்كَاَنَّمَاۤபோன்றுاُغْشِيَتْசூழப்பட்டனوُجُوْهُهُمْஅவர்களுடைய முகங்கள்قِطَعًاஒரு பாகத்தால்مِّنَ الَّيْلِஇரவின்مُظْلِمًا ؕஇருண்டதுاُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ النَّارِ‌ ؕநரகவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
வல்லதீன கஸBபுஸ் ஸய்யி ஆதி ஜZஜா'உ ஸய்யி'அதின் Bபிமித்லிஹா வ தர்ஹகுஹும் தில்லஹ்; மா லஹும் மினல் லாஹி மின் 'ஆஸிமின் க அன்னமா உக்ஷியத் வுஜூஹுஹும் கித'அன் மினல் லய்லி முள்லிமா; உலா'இக அஸ்-ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
ஆனால் தீமையைச் சம்பாதிப்பவர்களுக்கு, (அவர்கள் செய்த) தீமைக்குக் கூலியாக அதுபோன்ற தீமையாகும்! அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும்; அவர்களை அல்லாஹ்வின் (தண்டனையை) விட்டுக் காப்பாற்றுபவர் எவருமிலர்; இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சுற்றிக் கொள்ளப்பட்டது போல் (அவர்களின்) முகங்கள் காணப்படும். அவர்கள் நரக நெருப்புக்கு உரியவர்கள். அவர்கள் அங்கேயே என்றென்றும் இருப்பார்கள்.
وَیَوْمَ نَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِیْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ ۚ فَزَیَّلْنَا بَیْنَهُمْ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِیَّانَا تَعْبُدُوْنَ ۟
وَيَوْمَநாளில்نَحْشُرُஒன்று சேர்ப்போம்هُمْஅவர்கள்جَمِيْعًاஅனைவரையும்ثُمَّபிறகுنَقُوْلُகூறுவோம்لِلَّذِيْنَஎவர்களுக்குاَشْرَكُوْاஇணைவைத்தனர்مَكَانَكُمْஉங்கள் இடத்தில்اَنْتُمْநீங்களும்وَشُرَكَآؤُஇன்னும் இணைகள்كُمْ‌ۚஉங்கள்فَزَيَّلْنَاநீக்கி விடுவோம்بَيْنَهُمْ‌அவர்களுக்கிடையில்وَقَالَஇன்னும் கூறுவார்شُرَكَآؤُஇணை(தெய்வங்)கள்هُمْஅவர்களுடையمَّا كُنْتُمْநீங்கள் இருக்கவில்லைاِيَّانَاஎங்களைتَعْبُدُوْنَ‏வணங்குகிறீர்கள்
வ யவ்ம னஹ்ஷுருஹும் ஜமீ'அன் தும்ம னகூலு லில் லதீன அஷ்ரகூ மகானகும் அன்தும் வ ஷுரகா'உகும்; FபZஜய்யல்னா Bபய்னஹும் வ கால ஷுரகா'உஹும் மா குன்தும் இய்யானா தஃBபுதூன்
(இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி: “நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்” நீங்கள் எங்களை வணங்கவேயில்லை” என்று கூறிவிடும்.
فَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنَنَا وَبَیْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِیْنَ ۟
فَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேشَهِيْدًۢاசாட்சியால்بَيْنَـنَاஎங்களுக்கிடையில்وَبَيْنَكُمْஇன்னும் உங்களுக்கிடையில்اِنْ كُنَّاநிச்சயம் நாங்கள்عَنْ عِبَادَتِكُمْவிட்டு/வழிபாடு/உங்கள்لَغٰفِلِيْنَ‏கவனமற்றவர்களாகவே
FபகFபா Bபில்லாஹி ஷஹீதன் Bபய்னனா வ Bபய்னகும் இன் குன்னா 'அன் 'இBபாததிகும் லகாFபிலீன்
“நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்” (என்றும் அவை கூறும்).
هُنَالِكَ تَبْلُوْا كُلُّ نَفْسٍ مَّاۤ اَسْلَفَتْ وَرُدُّوْۤا اِلَی اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
هُنَالِكَஅங்குتَبْلُوْاசோதிக்கும்كُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாمَّاۤஎவற்றைاَسْلَفَتْ‌அது முன்செய்ததுوَرُدُّوْۤاஇன்னும் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்مَوْلٰٮهُمُதங்கள் எஜமானன்الْحَـقِّ‌உண்மையானவன்وَضَلَّஇன்னும் மறைந்துவிடும்عَنْهُمْஅவர்களை விட்டுمَّاஎதுكَانُوْاஇருந்தனர்يَفْتَرُوْنَ‏இட்டுக்கட்டுகின்றனர்
ஹுனாலிக தBப்லூ குல்லு னFப்ஸின் மா 'அஸ்லFபத்; வ ருத்தூ இலல் லாஹி மவ்லாஹுமுல் ஹக்கி வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
قُلْ مَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ یَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَمَنْ یُّخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَیُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ وَمَنْ یُّدَبِّرُ الْاَمْرَ ؕ فَسَیَقُوْلُوْنَ اللّٰهُ ۚ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ ۟
قُلْகூறுவீராகمَنْயார்يَّرْزُقُكُمْஉணவளிக்கிறார்/உங்களுக்குمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துوَالْاَرْضِஇன்னும் பூமிاَمَّنْஅல்லது யார்يَّمْلِكُஉரிமை கொள்வார்السَّمْعَசெவிوَالْاَبْصَارَஇன்னும் பார்வைகள்وَ مَنْஇன்னும் யார்?يُّخْرِجُவெளிப்படுத்துவார்الْحَـىَّஉயிருள்ளதைمِنَ الْمَيِّتِஇறந்ததிலிருந்துوَيُخْرِجُஇன்னும் வெளிப்படுத்துவார்الْمَيِّتَஇறந்ததைمِنَ الْحَـىِّஉயிருள்ளதிலிருந்துوَمَنْஇன்னும் யார்?يُّدَبِّرُநிர்வகிக்கிறான்الْاَمْرَ‌ؕகாரியத்தைفَسَيَـقُوْلُوْنَகூறுவார்கள்اللّٰهُ‌ۚஅல்லாஹ்فَقُلْகூறுவீராகاَفَلَا تَتَّقُوْنَ‏நீங்கள் அஞ்ச வேண்டாமா?
குல் மய் யர்Zஜுகுகும் மினஸ் ஸமா'இ வல் அர்ளி அம்ம(ன்)ய் யம்லிகுஸ் ஸம்'அ வல் அBப்ஸார வ மய் யுக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யிதி வ யுக்ரிஜுல் மய்யித மினல் ஹய்யி வ மய் யுதBப்Bபிருல் அம்ர்; Fபஸ யகூலூனல் லாஹ்; Fபகுல் அFபலா தத்தகூன்
“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَقُّ ۚ فَمَاذَا بَعْدَ الْحَقِّ اِلَّا الضَّلٰلُ ۖۚ فَاَنّٰی تُصْرَفُوْنَ ۟
فَذٰلِكُمُஅந்தاللّٰهُஅல்லாஹ்தான்رَبُّكُمُஉங்கள் இறைவன்الْحَـقُّ ۚஉண்மையானவன்فَمَاذَا(வேறு) என்ன?بَعْدَபின்னர்الْحَـقِّஉண்மைக்குاِلَّاதவிரالضَّلٰلُ‌ ۚவழிகேடுفَاَنّٰىஎவ்வாறுتُصْرَفُوْنَ‏நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
Fபதாலிகுமுல் லாஹு ரBப்Bபுகுமுல் ஹக்க்; Fபமாதா Bபஃதல் ஹக்கி இல்லள் ளலாலு Fப அன்ன துஸ்ரFபூன்
உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَی الَّذِیْنَ فَسَقُوْۤا اَنَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
كَذٰلِكَஅவ்வாறேحَقَّتْஉண்மையாகி விட்டதுكَلِمَتُசொல்رَبِّكَஉம் இறைவனின்عَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்فَسَقُوْۤاமீறினார்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
கதாலிக ஹக்கத் கலிமது ரBப்Bபிக 'அலல் லதீன Fபஸகூ அன்னஹும் லா யு'மினூன்
பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ ؕ قُلِ اللّٰهُ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
قُلْகூறுவீராகهَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ?/ இருந்து/இணைதெய்வங்கள்/உங்கள்مَّنْஎவன்يَّبْدَؤُاஆரம்பிக்கிறான்الْخَـلْقَபடைப்புகளைثُمَّபிறகுيُعِيْدُهٗ‌ ؕமீட்கிறான் / அவற்றைقُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்தான்يَـبْدَؤُاஆரம்பிக்கிறான்الْخَـلْقَபடைப்புகளைثُمَّபிறகுيُعِيْدُهٗ‌ؕமீட்கிறான்/அவற்றைفَاَنّٰىஎவ்வாறு?تُؤْفَكُوْنَ‏நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
குல் ஹல் மின் ஷுரகா 'இகும் மய் யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹ்; குலில் லாஹு யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ Fப அன்னா து'Fபகூன்
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.
قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ ؕ قُلِ اللّٰهُ یَهْدِیْ لِلْحَقِّ ؕ اَفَمَنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ اَحَقُّ اَنْ یُّتَّبَعَ اَمَّنْ لَّا یَهِدِّیْۤ اِلَّاۤ اَنْ یُّهْدٰی ۚ فَمَا لَكُمْ ۫ كَیْفَ تَحْكُمُوْنَ ۟
قُلْகூறுவீராகهَلْ?مِنْஇருந்துشُرَكَآٮِٕكُمْஇணை(தெய்வங்)கள்/உங்கள்مَّنْஎவர்يَّهْدِىْۤநேர்வழி காட்டுவார்اِلَىபக்கம்الْحَـقِّ‌ؕசத்தியம்قُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்يَهْدِىْநேர்வழி காட்டுகிறான்لِلْحَقِّ‌ؕசத்தியத்திற்குاَفَمَنْஆகவே எவர்?يَّهْدِىْۤநேர்வழி காட்டுவான்اِلَىபக்கம்الْحَقِّசத்தியத்தின்اَحَقُّமிகத் தகுதியானவனாاَنْ يُّتَّبَعَபின்பற்றப்படுவதற்குاَمَّنْஅல்லது/எவர்لَّا يَهِدِّىْۤநேர்வழி அடைய மாட்டான்اِلَّاۤதவிரاَنْ يُّهْدٰى‌ۚஅவர் நேர்வழி காட்டப்படுவார்فَمَاஎன்ன?لَكُمْஉங்களுக்குكَيْفَஎவ்வாறு?تَحْكُمُوْنَ‏நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்
குல் ஹல் மின் ஷுரகா 'இகும் மய் யஹ்தீ இலல் ஹக்க்; குலில் லாஹு யஹ்தீ லில்ஹக்க்; அFபமய் யஹ்தீ இலல் ஹக்கி அஹக்கு அய் யுத்தBப'அ அம்மல் லா யஹித்தீ இல்லா அய் யுஹ்தா Fபமா லகும் கய்Fப தஹ்குமூன்
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக; அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.
وَمَا یَتَّبِعُ اَكْثَرُهُمْ اِلَّا ظَنًّا ؕ اِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْـًٔا ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِمَا یَفْعَلُوْنَ ۟
وَمَا يَتَّبِعُபின்பற்றவில்லைاَكْثَرُபெரும்பாலானவர்கள்هُمْஅவர்களில்اِلَّاதவிரظَنًّاசந்தேகத்தைؕاِنَّநிச்சயமாகالظَّنَّசந்தேகம்لَا يُغْنِىْபலன் தராதுمِنَவிட்டுالْحَـقِّஉண்மையைشَيْــٴًــا‌ ؕஒரு சிறிதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِمَاஎதைيَفْعَلُوْنَ‏அவர்கள் செய்கிறார்கள்
வமா யத்தBபி'உ அக்தருஹும் இல்லா ளன்னா; இன்னள் ளன்ன லா யுக்னீ மினல் ஹக்கி ஷய்'ஆ; இன்னல் லாஹ 'அலீமுன் Bபிமா யFப்'அலூன்
ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ یُّفْتَرٰی مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ تَصْدِیْقَ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَتَفْصِیْلَ الْكِتٰبِ لَا رَیْبَ فِیْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟۫
وَمَا كَانَஇல்லைهٰذَا الْقُرْاٰنُஇந்த குர்ஆன்اَنْ يُّفْتَـرٰىஇட்டுக்கட்டப்பட்டதாகمِنْஇருந்துدُوْنِஅல்லாதவர்اللّٰهِஅல்லாஹ்وَلٰـكِنْஎனினும்تَصْدِيْقَஉண்மைப்படுத்துதல்الَّذِىْஎவற்றைبَيْنَ يَدَيْهِதனக்கு முன்னால்وَتَفْصِيْلَஇன்னும் விவரித்துக் கூறுதல்الْكِتٰبِசட்டங்களைلَا رَيْبَஅறவே சந்தேகம் இல்லைفِيْهِஇதில்مِنْஇருந்துرَّبِّஇறைவன்الْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
வமா கான ஹாதல் குர்'ஆனு அய் யுFப்தரா மின் தூனில் லாஹி வ லாகின் தஸ்தீகல் லதீ Bபய்ன யதய்ஹி வ தFப்ஸீலல் கிதாBபி லா ரய்Bப Fபீஹீ மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை.
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ فَاْتُوْا بِسُوْرَةٍ مِّثْلِهٖ وَادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اَمْஅல்லதுيَقُوْلُوْنَஅவர்கள் கூறுகின்றனர்افْتَـرٰٮهُ‌ ؕஇதை இட்டுக்கட்டினார்قُلْகூறுவீராகفَاْتُوْاவாருங்கள்بِسُوْرَةٍஒர் அத்தியாயத்தைக் கொண்டுمِّثْلِهٖஅது போன்றوَادْعُوْاஇன்னும் அழையுங்கள்مَنِஎவர்اسْتَطَعْتُمْசாத்தியமானீர்கள்مِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மை சொல்பவர்களாக
'அம் யகூலூனFப் தராஹு குல் Fப'தூ Bபி ஸூரதின் மித்லிஹீ வத்'ஊ மனிஸ் ததஃதும் மின் தூனில் லாஹி இன் குன்தும் ஸாதிகீன்
இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று.
بَلْ كَذَّبُوْا بِمَا لَمْ یُحِیْطُوْا بِعِلْمِهٖ وَلَمَّا یَاْتِهِمْ تَاْوِیْلُهٗ ؕ كَذٰلِكَ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِیْنَ ۟
بَلْமாறாகكَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِمَا لَمْ يُحِيْطُوْاஎதை/அவர்கள் சூழ்ந்தறியவில்லைبِعِلْمِهٖஅதன் அறிவுوَلَمَّاஇன்னும் வரவில்லைيَاْتِهِمْஇவர்களுக்குتَاْوِيْلُهٗ ؕஅதன் விளக்கம்كَذٰلِكَஇவ்வாறேكَذَّبَபொய்ப்பித்தனர்الَّذِيْنَஎவர்கள்مِنْமுன்னர்قَبْلِهِمْ‌இவர்களுக்குفَانْظُرْஆகவே கவனிப்பீராகكَيْفَ كَانَஎவ்வாறு இருந்ததுعَاقِبَةُமுடிவுالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களின்
Bபல் கத்தBபூ Bபிமா லம் யுஹீதூ Bபி'இல்மிஹீ வ லம்மா ய'திஹிம் த'வீலுஹ்; கதாலிக கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுத் ளாலிமீன்
அப்படியல்ல; அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.
وَمِنْهُمْ مَّنْ یُّؤْمِنُ بِهٖ وَمِنْهُمْ مَّنْ لَّا یُؤْمِنُ بِهٖ ؕ وَرَبُّكَ اَعْلَمُ بِالْمُفْسِدِیْنَ ۟۠
وَ مِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்يُّؤْمِنُநம்பிக்கைகொண்டார்بِهٖஅதைوَمِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர்لَّا يُؤْمِنُநம்பிக்கை கொள்ளமாட்டார்بِهٖ‌ؕஅதைوَرَبُّكَஉம் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِالْمُفْسِدِيْنَ‏விஷமிகளை
வ மின்ஹும் மய் யு 'மினு Bபிஹீ வ மின்ஹும் மல் லா யு'மினு Bபிஹ்; வ ரBப்Bபுக அஃலமு Bபில்முFப்ஸிதீன்
அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர்; இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும், உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான்.
وَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ لِّیْ عَمَلِیْ وَلَكُمْ عَمَلُكُمْ ۚ اَنْتُمْ بَرِیْٓـُٔوْنَ مِمَّاۤ اَعْمَلُ وَاَنَا بَرِیْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۟
وَاِنْ كَذَّبُوْكَஅவர்கள் உம்மை பொய்ப்பித்தால்فَقُلْகூறுவீராகلِّىْஎனக்குعَمَلِىْஎன் செயல்وَلَـكُمْஇன்னும் உங்களுக்குعَمَلُكُمْ‌ۚஉங்கள் செயல்اَنْـتُمْநீங்கள்بَرِيْٓـــٴُـوْنَநீங்கியவர்கள்مِمَّاۤஎதிலிருந்துاَعْمَلُசெய்கிறேன்وَاَنَاஇன்னும் நான்بَرِىْٓءٌநீங்கியவன்مِّمَّاஎதிலிருந்துتَعْمَلُوْنَ‏நீங்கள் செய்கிறீர்கள்
வ இன் கத்தBபூக Fபகுல் லீ 'அமலீ வ லகும் 'அமலுகும் அன்தும் Bபரீ'ஊன மிம்மா அஃமலு வ அன Bபரீ'உம் மிம்மா தஃமலூன்
உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக.
وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُوْنَ اِلَیْكَ ؕ اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوْا لَا یَعْقِلُوْنَ ۟
وَمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்يَّسْتَمِعُوْنَசெவிமடுக்கிறார்கள்اِلَيْكَ‌ؕஉம் பக்கம்اَفَاَنْتَ تُسْمِعُநீர் கேட்கவைப்பீரா?الصُّمَّசெவிடர்களைوَلَوْ كَانُوْاஅவர்கள்இருந்தாலும்لَا يَعْقِلُوْنَ‏சிந்தித்து புரிய மாட்டார்கள்
வ மின்ஹும் மய் யஸ்தமி'ஊன இலய்க்; அFப அன்த துஸ்மி'உஸ் ஸும்ம வ லவ் கானூ லா யஃகிலூன்
இன்னும் உம் வார்த்தைகளைக் கேட்பவர்கள் (போல் பாவனை) செய்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர் - எதுவுமே விளங்கிக் கொள்ள இயலாச் செவிடர்களை நீர் கேட்கும்படிச் செய்ய முடியுமா?
وَمِنْهُمْ مَّنْ یَّنْظُرُ اِلَیْكَ ؕ اَفَاَنْتَ تَهْدِی الْعُمْیَ وَلَوْ كَانُوْا لَا یُبْصِرُوْنَ ۟
وَمِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர்يَّنْظُرُபார்க்கிறார்اِلَيْكَ‌ ؕஉம் பக்கம்اَفَاَنْتَநீர்تَهْدِىநேர்வழிசெலுத்துவீரா?الْعُمْىَகுருடர்களைوَ لَوْ كَانُوْا لَا يُبْصِرُوْنَ‏அவர்கள் இருந்தாலும்/பார்க்க மாட்டார்கள்
வ மின்ஹும் மய் யன்ளுரு இலய்க்; அFப அன்த தஹ்தில் 'உம்ய வ லவ் கானூ லா யுBப்ஸிரூன்
உம்மைப் பார்ப்போரும் அவர்களில் இருக்கிறார்கள் - (எதுவும்) பார்க்க இயலாத குருடர்களை நீர் நேர்வழியில் செலுத்த முடியுமா?
اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ النَّاسَ شَیْـًٔا وَّلٰكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَظْلِمُஅநீதியிழைக்க மாட்டான்النَّاسَமனிதர்களுக்குشَيْــٴًــاஒரு சிறிதும்وَّلٰـكِنَّஎனினும்النَّاسَமனிதர்கள்اَنْفُسَهُمْதங்களுக்கேيَظْلِمُوْنَ‏அநீதியிழைக்கின்றனர்
இன்னல் லாஹ லா யள்லிமுன் னாஸ ஷய்'அ(ன்)வ் வ லாகின் னன்னாஸ அன்Fபுஸஹும் யள்லிமூன்
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.
وَیَوْمَ یَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ یَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ یَتَعَارَفُوْنَ بَیْنَهُمْ ؕ قَدْ خَسِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟
وَيَوْمَநாளில்يَحْشُرُஒன்று சேர்ப்பான்هُمْஅவர்களைكَاَنْபோன்றுلَّمْ يَلْبَثُوْۤاஅவர்கள் தங்கவில்லைاِلَّاதவிரسَاعَةًஒரு நேரம்مِّنَ النَّهَارِபகலில்يَتَعَارَفُوْنَஅறிந்துகொள்வார்கள்بَيْنَهُمْ‌ؕதங்களுக்குள்قَدْ خَسِرَதிட்டமாக நஷ்டமடைந்தார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِلِقَآءِசந்திப்பைاللّٰهِஅல்லாஹ்வின்وَمَا كَانُوْاஅவர்கள் இருக்கவில்லைمُهْتَدِيْنَ‏நேர்வழி பெற்றவர்களாக
வ யவ்ம யஹ்ஷுருஹும் க 'அன் லம் யல்Bபதூ இல்லா ஸா'அதன் மினன் னஹாரி யத'ஆரFபூன Bபய்னஹும்; கத் கஸிரல் லதீன கத்தBபூ Bபி லிகா'இல் லாஹி வமா கானூ முஹ்ததீன்
அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்: அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.
وَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِیْدٌ عَلٰی مَا یَفْعَلُوْنَ ۟
وَاِمَّا نُرِيَـنَّكَநிச்சயம் உமக்கு காண்பிப்போம்بَعْضَசிலவற்றைالَّذِىْஎதைنَعِدُவாக்களிக்கிறோம்هُمْஅவர்களுக்குاَوْஅல்லதுنَـتَوَفَّيَنَّكَகைப்பற்றிக் கொள்வோம்/உம்மைفَاِلَيْنَاநம் பக்கமேمَرْجِعُهُمْமீளுமிடம்/அவர்களுடையثُمَّபிறகுاللّٰهُஅல்லாஹ்شَهِيْدٌசாட்சியாக இருப்பான்عَلٰى مَا يَفْعَلُوْنَ‏அவர்கள் செய்தவற்றிற்கு
வ இம்ம னுரியன்னக Bபஃளல் லதீ ன'இதுஹும் அவ் னதவFப்Fபயன்னக Fப இலய்னா மர்ஜி'உஹும் தும்மல் லாஹு ஷஹீதுன் 'அலா மா யFப்'அலூன்
(உம் வாழ்நாளிலேயே) நாம் அவர்களுக்கு வாக்களித்த (வேதனைகளில்) ஒரு பகுதி (சம்பவிப்பதை) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு முன்னமேயே) நாம் உம் ஆத்மாவை கைப்பற்றிக் கொண்டாலும் - (எப்படியிருப்பினும்) அவர்கள் நம்மிடமே திரும்பி வர வேண்டியுள்ளது; இறுதியில், அவர்கள் செய்வதற்கெல்லாம் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.
وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ ۚ فَاِذَا جَآءَ رَسُوْلُهُمْ قُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَلِكُلِّஒவ்வொருவருக்கும்اُمَّةٍஒரு சமுதாயம்رَّسُوْلٌ‌ ۚஒரு தூதர்فَاِذَاபோதுجَآءَவரும்رَسُوْلُهُمْதூதர்/அவர்களுடையقُضِىَதீர்ப்பளிக்கப்படும்بَيْنَهُمْஅவர்களுக்கிடையில்بِالْقِسْطِநீதமாகوَهُمْஇன்னும் அவர்கள்لَا يُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
வ லிகுல்லி உம்மதிர் ரஸூலுன் Fப இதா ஜா'அ ரஸூலுஹும் குளிய Bபய்னஹும் Bபில்கிஸ்தி வ ஹும் லா யுள்லமூன்
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَيَقُوْلُوْنَஅவர்கள் கேட்கின்றனர்مَتٰىஎப்போதுهٰذَاஇந்தالْوَعْدُவாக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
“நீங்கள் உண்மையாளராக இருந்தால் (அச்ச மூட்டப்படும் வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்போது (அமலுக்கு வரும்)” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ ضَرًّا وَّلَا نَفْعًا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ لِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ؕ اِذَا جَآءَ اَجَلُهُمْ فَلَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟
قُلْகூறுவீராகلَّاۤ اَمْلِكُஉரிமை பெறமாட்டேன்لِنَفْسِىْஎனக்குضَرًّاதீமைக்கோوَّلَا نَفْعًاஇன்னும் நன்மைக்கோاِلَّاதவிரمَاஎதைشَآءَநாடினான்اللّٰهُؕஅல்லாஹ்لِكُلِّஒவ்வொருاُمَّةٍவகுப்பார்اَجَلٌ‌ؕதவணைاِذَا جَآءَவந்தால்اَجَلُهُمْதவணை/அவர்களுடையفَلَا يَسْتَـاخِرُوْنَபிந்தமாட்டார்கள்سَاعَةً‌ஒரு சிறிது நேரம்وَّلَا يَسْتَقْدِمُوْنَ‏இன்னும் முந்த மாட்டார்கள்
குல் லா அம்லிகு லினFப்ஸீ ளர்ர(ன்)வ் வலா னFப்'அன் இல்லா மா ஷா'அல் லாஹ்; லிகுல்லி உம்மதின் அஜலுன் இதா ஜா'அ அஜலுஹும் Fப லா யஸ்த'கிரூன ஸா'அத(ன்)வ் வலா யஸ்தக்திமூன்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”
قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُهٗ بَیَاتًا اَوْ نَهَارًا مَّاذَا یَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاَرَءَيْتُمْஅறிவிப்பீர்களாகاِنْ اَتٰٮكُمْஉங்களுக்கு வந்தால்عَذَابُهٗவேதனை/ அவனுடையبَيَاتًاஇரவில்اَوْஅல்லதுنَهَارًاபகலில்مَّاذَاஎதைيَسْتَعْجِلُஅவசரமாக தேடுகின்றனர்مِنْهُஅதிலிருந்துالْمُجْرِمُوْنَ‏குற்றவாளிகள்
குல் 'அ ர'அய்தும் இன் அதாகும் 'அதாBபுஹூ Bபயாதன் அவ் னஹாரன் மாதா யஸ்தஃஜிலு மின்ஹுல் முஜ்ரிமூன்
(நபியே!) நீர் கூறுவீராக: “அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால் - (அதைத் தடுத்துவிட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?
اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنْتُمْ بِهٖ ؕ آٰلْـٰٔنَ وَقَدْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟
اَثُمَّஅங்கே ?اِذَا مَا وَقَعَநிகழ்ந்தால்اٰمَنْتُمْநம்பிக்கை கொள்வீர்கள்بِهٖؕஅதைக் கொண்டுاٰۤلْــٴٰـنَஇப்போதுதானா?وَقَدْ كُنْتُمْதிட்டமாக நீங்கள் இருந்தீர்கள்بِهٖஅதைتَسْتَعْجِلُوْنَ‏அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்!
அ தும்ம இதா மா வக'அ ஆமன்தும் Bபிஹ்; ஆல் 'ஆன வ கத் குன்தும் Bபிஹீ தஸ்தஃஜிலூன்
“அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அவ்வேதனை வந்ததும்) இதோ! நீங்கள் எது (வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது” (என்று தான் கூறப்படும்).
ثُمَّ قِیْلَ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ ۚ هَلْ تُجْزَوْنَ اِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟
ثُمَّபிறகுقِيْلَகூறப்பட்டதுلِلَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயம் செய்தவர்களை நோக்கிذُوْقُوْاசுவையுங்கள்عَذَابَ الْخُـلْدِ‌ۚநிலையான வேதனைهَلْ تُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா?اِلَّاதவிரبِمَاஎதற்குكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்تَكْسِبُوْنَ‏செய்கிறீர்கள்
தும்ம கீல லில் லதீன ளலமூ தூகூ 'அதாBபல் குல்தி ஹல் துஜ்Zஜவ்ன இல்லா Bபிமா குன்தும் தக்ஸிBபூன்
அன்றியும், அந்த அநியாயக்காரர்களை நோக்கி; “என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய இவ்வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள் - நீங்கள் சம்பாதித்ததைத் தவிர (வேறு) கூலி கொடுக்கப்படுவீர்களா?” என்று கூறப்படும்.
وَیَسْتَنْۢبِـُٔوْنَكَ اَحَقٌّ هُوَ ؔؕ قُلْ اِیْ وَرَبِّیْۤ اِنَّهٗ لَحَقٌّ ؔؕۚ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟۠
وَيَسْتَنْۢبِــٴُـوْنَكَஅவர்கள் செய்தி கேட்கின்றனர்/உம்மிடம்اَحَقٌّஉண்மைதானா?هُوَ‌ ؕؔஅதுقُلْகூறுவீராகاِىْஆம்وَرَبِّىْۤஎன் இறைவன் மீது சத்தியமாகاِنَّهٗநிச்சயமாக அதுلَحَقٌّ ؔ‌ؕஉண்மைதான்وَمَاۤ اَنْتُمْநீங்கள் அல்லர்بِمُعْجِزِيْنَ‏பலவீனப்படுத்துபவர்கள்
வ யஸ்தன்Bபி'ஊனக 'அ ஹக்குன் ஹுவ குல் ஈ வ ரBப்Bபீ இன்னஹூ லஹக்க்; வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன்
மேலும் “அது உண்மை தானா?” என்று (நபியே! அவர்கள்) உம்மிடம் வினவுகிறார்கள்; “ஆம்! என் இறைவன் மீது சத்தியமாய் நிச்சயமாக அது உண்மையே. (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது” என்று கூறுவீராக.
وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِی الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖ ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ۚ وَقُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَلَوْ اَنَّஇருந்தால்لِكُلِّ نَفْسٍஒவ்வோர் ஆன்மாவிற்கும்ظَلَمَتْஅநியாயம் செய்ததுمَا فِى الْاَرْضِஎவை/பூமியில்لَافْتَدَتْபரிகாரமாகக் கொடுத்துவிடும்بِهٖ‌ؕஅவற்றைوَاَسَرُّواஇன்னும் மறைத்துக் கொள்வார்கள்النَّدَامَةَதுக்கத்தைلَمَّاபோதுرَاَوُاஅவர்கள் கண்டனர்الْعَذَابَ‌ۚவேதனையைوَقُضِىَஇன்னும் தீர்ப்பளிக்கப்பட்டதுبَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِالْقِسْطِ‌நீதமாகوَهُمْஅவர்கள்لَا يُظْلَمُوْنَ‏அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
வ லவ் அன்ன லிகுல்லி னFப்ஸின் ளலமத் மா Fபில் அர்ளி லFப்ததத் Bபிஹ்; வ அஸர்ருன் னதாமத லம்மா ர அவுல் 'அதாBப், வ குளிய Bபய்னஹும் Bபில்கிஸ்த்; வ ஹும் லா யுள்லமூன்
(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.
اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ اَلَاۤ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்விற்குمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَالْاَرْضِؕஇன்னும் பூமியில்اَلَاۤஅறிந்து கொள்ளுங்கள்اِنَّநிச்சயமாகوَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வுடையحَقٌّஉண்மையானதுوَّلٰـكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)هُمْஅவர்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
அலா இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; அலா இன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதைத் திடமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதியும் நிச்சயமாகவே உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் - எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிந்து கொள்வதில்லை.
هُوَ یُحْیٖ وَیُمِیْتُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
هُوَஅவன்தான்يُحْىٖஉயிர்ப்பிக்கிறான்وَيُمِيْتُஇன்னும் மரணிக்கச் செய்கிறான்وَاِلَيْهِஇன்னும் அவனிடமேتُرْجَعُوْنَ‏நீங்கள் திருப்பப்படுவீர்கள்
ஹுவ யுஹ்யீ வ யுமீது வ இலய்ஹி துர்ஜ'ஊன்
அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரணிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوْرِ ۙ۬ وَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟
يٰۤاَيُّهَا النَّاسُமனிதர்களேقَدْதிட்டமாகجَآءَتْكُمْவந்தது/உங்களுக்குمَّوْعِظَةٌநல்லுபதேசம்مِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்وَشِفَآءٌஇன்னும் மருந்துلِّمَاஉள்ளவற்றிற்குفِى الصُّدُوْرِۙ நெஞ்சங்களில்وَهُدًىஇன்னும் நேர்வழிوَّرَحْمَةٌஇன்னும் அருள்لِّـلْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அத்கும் மவ்'இளதுன் மிர் ரBப்Bபிகும் வ ஷிFபா'உல் லிமா Fபிஸ் ஸுதூரி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில் மு'மினீன்
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْیَفْرَحُوْا ؕ هُوَ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟
قُلْகூறுவீராகبِفَضْلِஅருளைக் கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்وَبِرَحْمَتِهٖஇன்னும் அவனது கருணையைக் கொண்டுفَبِذٰلِكَஇதைக் கொண்டேفَلْيَـفْرَحُوْا ؕஅவர்கள் மகிழ்ச்சியடையட்டும்هُوَஇதுخَيْرٌமிக மேலானதுمِّمَّاஎவை/விடيَجْمَعُوْنَ‏சேகரிக்கிறார்கள்
குல் Bபி Fபள்லில் லாஹி வ Bபி ரஹ்மதிஹீ Fப Bபி தாலிக Fபல் யFப்ரஹூ ஹுவ கய்ருன் மிம்மா யஜ்ம'ஊன்
“அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.
قُلْ اَرَءَیْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ؕ قُلْ آٰللّٰهُ اَذِنَ لَكُمْ اَمْ عَلَی اللّٰهِ تَفْتَرُوْنَ ۟
قُلْகூறுவீராகاَرَءَيْتُمْஅறிவிப்பீர்களாகمَّاۤஎதைاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்காகمِّنْ رِّزْقٍஉணவில்فَجَعَلْتُمْநீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களாمِّنْهُஅதில்حَرَامًاஆகாதவைوَّحَلٰلًا ؕஇன்னும் ஆகுமானவைقُلْகூறுவீராகآٰللّٰهُஅல்லாஹ்اَذِنَஅனுமதியளித்தான்لَـكُمْ‌உங்களுக்குاَمْஅல்லதுعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்வின்تَفْتَرُوْنَ‏இட்டுக்கட்டுகிறீர்கள்
குல் அர'அய்தும் மா அன்Zஜலல் லாஹு லகும் மிர் ரிZஜ்கின் Fபஜ'அல்தும் மின்ஹு ஹராம(ன்)வ் வ ஹலாலன் குல் ஆல்லாஹு அதின லகும்; அம் 'அலல் லாஹி தFப்தரூன்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”
وَمَا ظَنُّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ یَوْمَ الْقِیٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَشْكُرُوْنَ ۟۠
وَمَا ظَنُّஎண்ணம் என்ன?الَّذِيْنَஎவர்கள்يَفْتَرُوْنَஇட்டுக்கட்டுகிறார்கள்عَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்الْكَذِبَபொய்யைيَوْمَ الْقِيٰمَةِ‌ؕமறுமை நாள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَذُوْ فَضْلٍஅருளுடையவன்عَلَىமீதுالنَّاسِமனிதர்கள்وَلٰـكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)هُمْஅவர்களில்لَا يَشْكُرُوْنَ‏நன்றி செலுத்தமாட்டார்கள்
வமா ளன்னுல் லதீன யFப்தரூன 'அலல் லாஹில் கதிBப யவ்மல் கியாமஹ்; இன்னல் லாஹ லதூ Fபள்லின் 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரஹும் லா யஷ்குரூன்
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
وَمَا تَكُوْنُ فِیْ شَاْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَیْكُمْ شُهُوْدًا اِذْ تُفِیْضُوْنَ فِیْهِ ؕ وَمَا یَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
وَمَا تَكُوْنُஇருக்கமாட்டீர்فِىْ شَاْنٍஎந்த செயலிலும்وَّمَا تَتْلُوْاஇன்னும் நீர் ஓத மாட்டீர்مِنْهُஅதிலிருந்துمِنْ قُرْاٰنٍகுர்ஆனிலிருந்துوَّلَا تَعْمَلُوْنَஇன்னும் செய்யமாட்டீர்கள்مِنْ عَمَلٍஎந்த செயலையும்اِلَّاதவிரكُنَّاநாம் இருந்தோம்عَلَيْكُمْஉங்கள் மீதுشُهُوْدًاசாட்சிகளாகاِذْபோதுتُفِيْضُوْنَஈடுபடுகிறீர்கள்فِيْهِ‌ؕஅவற்றில்وَمَا يَعْزُبُஇன்னும் மறையாதுعَنْ رَّبِّكَஉம் இறைவனை விட்டுمِنْ مِّثْقَالِஅளவுذَرَّةٍஓர் அணுفِى الْاَرْضِபூமியில்وَلَا فِى السَّمَآءِஇன்னும் வானத்தில்وَلَاۤ اَصْغَرَசிறிதும் இல்லைمِنْ ذٰ لِكَஇதை விடوَلَاۤ اَكْبَرَஇன்னும் பெரிதும் இல்லைاِلَّاதவிரفِىْ كِتٰبٍபதிவேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான
வமா தகூனு Fபீ ஷ'னி(ன்)வ் வமா தத்லூ மின்ஹு மின் குர்'ஆனி(ன்)வ் வலா தஃமலூன மின் 'அமலின் இல்லா குன்னா 'அலய்கும் ஷுஹூதன் இத் துFபீளூன Fபீஹ்; வமா யஃZஜுBபு 'அர் ரBப்Bபிக மின் மித்காலி தர்ரதின் Fபில் அர்ளி வலா Fபிஸ் ஸமா'இ வ லா அஸ்கர மின் தாலிக வ லா அக்Bபர இல்லா Fபீ கிதாBபின் முBபீன்
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், “குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைந்து விடுவதில்லை. இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
اَلَاۤ اِنَّ اَوْلِیَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚۖ
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّநிச்சயமாகاَوْلِيَآءَநண்பர்கள்اللّٰهِஅல்லாஹ்வின்لَا خَوْفٌஒரு பயமுமில்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ‏இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
அலா இன்னா அவ்லியா'அல் லாஹி லா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟ؕ
الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَكَانُوْاஇருந்தார்கள்يَتَّقُوْنَؕ‏அவர்கள் அஞ்சுபவர்களாக
அல்லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
لَهُمُ الْبُشْرٰی فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ؕ لَا تَبْدِیْلَ لِكَلِمٰتِ اللّٰهِ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ؕ
لَهُمُஅவர்களுக்கேالْبُشْرٰىநற்செய்திفِى الْحَيٰوةِவாழ்வில்الدُّنْيَاஉலகம்وَفِى الْاٰخِرَةِ‌ؕமறுமையில்لَاஅறவே இல்லைتَبْدِيْلَமாற்றம்لِـكَلِمٰتِவாக்குகளில்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடையذٰلِكَ هُوَஇதுதான்الْفَوْزُவெற்றிالْعَظِيْمُؕ‏மகத்தானது
லஹுமுல் Bபுஷ்ரா Fபில் ஹயாதித் துன்யா வ Fபில் ஆகிரஹ்; லா தBப்தீல லி கலிமாதில் லாஹ்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
وَلَا یَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِیْعًا ؕ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَلَاகவலைக்குள்ளாக்க வேண்டாம்يَحْزُنْكَஉம்மைقَوْلُهُمْ‌ۘசொல்/அவர்களுடையاِنَّநிச்சயமாகالْعِزَّةَகண்ணியம்لِلّٰهِஅல்லாஹ்வுக்குجَمِيْعًا‌ ؕஅனைத்துهُوَஅவன்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
வ லா யஹ்Zஜுன்க கவ்லுஹும்; இன்னல் 'இZஜ்Zஜத லில்லாஹி ஜமீ'ஆ; ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
(நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ ؕ وَمَا یَتَّبِعُ الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ شُرَكَآءَ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்வுக்குمَنْஎவர்கள்فِى السَّمٰوٰتِவானங்களில்وَمَنْஇன்னும் எவர்கள்فِى الْاَرْضِ‌ؕபூமியில்وَمَاஇன்னும் எதை?يَتَّبِعُபின்பற்றுகின்றனர்الَّذِيْنَஎவர்கள்يَدْعُوْنَஅழைக்கிறார்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிشُرَكَآءَ‌ ؕஇணை(தெய்வங்)களைاِنْ يَّتَّبِعُوْنَஅவர்கள் பின்பற்றுவதில்லைاِلَّاதவிரالظَّنَّசந்தேகத்தைوَاِنْஇல்லைهُمْஅவர்கள்اِلَّاதவிரيَخْرُصُوْنَ‏கற்பனை செய்பவர்களாக
அலா இன்ன லில்லாஹி மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ள்; வமா யத்தBபி'உல் லதீன யத்'ஊன மின் தூனில் லாஹி ஷுரகா'; இ(ன்)ய் யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வ இன் ஹும் இல்லா யக்ருஸூன்
அறிந்து கொள்ளுங்கள் வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே.
هُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟
هُوَஅவன்الَّذِىْஎத்தகையவன்جَعَلَஆக்கினான்لَـكُمُஉங்களுக்காகالَّيْلَஇரவைلِتَسْكُنُوْاநீங்கள் சுகம்பெறுவதற்காகفِيْهِஅதில்وَالنَّهَارَஇன்னும் பகலைمُبْصِرًا‌ ؕபார்க்கக் கூடியதாகاِنَّ فِىْ ذٰ لِكَநிச்சயமாக/இதில்لَاٰيٰتٍஅத்தாட்சிகள்لِّـقَوْمٍமக்களுக்குيَّسْمَعُوْنَ‏செவிசாய்க்கின்றார்கள்
ஹுவல் லதீ ஜ'அல லகுமுல் லய்ல லிதஸ்குனூ Fபீஹி வன்னஹார முBப்ஸிரா; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லி கவ்மி(ன்)ய் யஸ்ம'ஊன்
நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காக இரவையும், (பொருட்களைப்) பார்ப்பதற்கு ஏற்றவாறு பகலையும் உங்களுக்காக அவனே உண்டாக்கினான்; நிச்சயமாக இதில் (அவன் வசனங்களைச்) செவிசாய்த்துக் (கவனமாகக்) கேட்கும் மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ هُوَ الْغَنِیُّ ؕ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍ بِهٰذَا ؕ اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
قَالُوْاகூறுகின்றனர்اتَّخَذَஆக்கிக் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்وَلَدًا‌ஒரு சந்ததியைسُبْحٰنَهٗ‌ ؕஅவன் மிகப் பரிசுத்தமானவன்هُوَஅவன்الْـغَنِىُّ‌ ؕதேவையற்றவன்لَهٗஅவனுக்கேمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَمَا فِى الْاَرْضِ ؕஇன்னும் பூமியிலுள்ளவைاِنْஇல்லைعِنْدَكُمْஉங்களிடம்مِّنْ سُلْطٰنٍۢஎந்த ஓர் ஆதாரம்بِهٰذَا ؕஇதற்குاَتَقُوْلُوْنَகூறுகிறீர்களா?عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுمَا لَا تَعْلَمُوْنَ‏எதை/ அறியமாட்டீர்கள்
காலுத் தகதல் லாஹு வலதன் ஸுBப்ஹானஹூ ஹுவல் கனிய்யு லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; இன் 'இன்தகும் மின் ஸுல்தானின் Bபிஹாதா; அ' தகூலூன 'அல் அல்லாஹி மா லா தஃலமூன்
அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன; (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?
قُلْ اِنَّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ لَا یُفْلِحُوْنَ ۟ؕ
قُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يَفْتَرُوْنَஇட்டுக்கட்டுகிறார்கள்عَلَى اللّٰهِஅல்லாஹ் மீதுالْـكَذِبَபொய்யைلَا يُفْلِحُوْنَؕ‏வெற்றி பெறமாட்டார்கள்
குல் இன்னல் லதீன யFப்தரூன 'அல் அல்லாஹில் கதிBப லா யுFப்லிஹூன்
“அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும்.
مَتَاعٌ فِی الدُّنْیَا ثُمَّ اِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِیْقُهُمُ الْعَذَابَ الشَّدِیْدَ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟۠
مَتَاعٌஒரு சுகம்فِى الدُّنْيَاஉலகில்ثُمَّபிறகுاِلَيْنَاநம்மிடமேمَرْجِعُهُمْ ثُمَّமீளுமிடம்/அவர்களுடைய/பிறகுنُذِيْقُهُمُசுவைக்க வைப்போம் அவர்களுக்குالْعَذَابَவேதனைالشَّدِيْدَகடினமானبِمَاஎதன் காரணமாகكَانُوْاஇருந்தனர்يَكْفُرُوْنَ‏அவர்கள் நிராகரிக்கிறார்கள்
மதா'உன் Fபித்துன்யா தும்ம இலய்னா மர்ஜி'உஹும் தும்ம னுதீகுஹுமுல் 'அதாBபஷ் ஷதீத Bபிமா கானூ யக்Fபுரூன்
உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சுகமே யாகும்; பின்னர் அவர்கள் நம்மிடமே மீண்டும் வர வேண்டியிருக்கிறது; அப்பொழுது, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக, நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ نُوْحٍ ۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَیْكُمْ مَّقَامِیْ وَتَذْكِیْرِیْ بِاٰیٰتِ اللّٰهِ فَعَلَی اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا یَكُنْ اَمْرُكُمْ عَلَیْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَیَّ وَلَا تُنْظِرُوْنِ ۟
وَاتْلُஓதுவீராகعَلَيْهِمْஅவர்களுக்குنَبَاَசரித்திரத்தைنُوْحٍ‌ۘநூஹூடையاِذْசமயத்தைقَالَஅவர்கள் கூறினார்لِقَوْمِهٖதன் சமுதாயத்தை நோக்கிيٰقَوْمِஎன் சமுதாயமேاِنْ كَانَஇருந்தால்كَبُرَபாரமாகعَلَيْكُمْஉங்கள் மீதுمَّقَامِىْநான் தங்குவதுوَتَذْكِيْرِىْஇன்னும் நான்உபதேசிப்பதுبِاٰيٰتِவசனங்களைக் கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்فَعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்تَوَكَّلْتُநான் நம்பிக்கை வைத்தேன்فَاَجْمِعُوْۤاஆகவேமுடிவுசெய்யுங்கள்اَمْرَகாரியத்தைكُمْஉங்கள்وَشُرَكَآءَஇன்னும் இணை தெய்வங்களைكُمْஉங்கள்ثُمَّபிறகுلَا يَكُنْஆகிவிடவேண்டாம்اَمْرُகாரியம்كُمْஉங்கள்عَلَيْكُمْஉங்கள் மீதுغُمَّةًகுழப்பமானதாகثُمَّபிறகுاقْضُوْۤاநிறைவேற்றுங்கள்اِلَىَّஎன் பக்கம்وَ لَا تُنْظِرُوْنِ‏நீங்கள் அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு
வத்லு 'அலய்ஹிம் னBப-அ-னூஹின் இத் கால லிகவ்மிஹீ யா கவ்மி இன் கான கBபுர 'அலய்கும் மகாமீ வ தத்கீரீ Bபி ஆயாதில் லாஹி Fப'அலல் லாஹி தவக்கல்து Fப அஜ்மி'ஊ அம்ரகும் வ ஷுரகா'அகும் தும்ம லா யகுன் அம்ருகும் 'அலய்கும் கும்மதன் தும்மக் ளூ இலய்ய வலா துன்ளிரூன்
மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.
فَاِنْ تَوَلَّیْتُمْ فَمَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ ؕ اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ ۙ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
فَاِنْ تَوَلَّـيْتُمْநீங்கள் திரும்பினால்فَمَاநான் கேட்கவில்லைسَاَلْـتُكُمْஉங்களிடம்مِّنْ اَجْرٍஎந்த கூலியையும்‌ؕاِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلَىமீதேاللّٰهِ‌ۙஅல்லாஹ்வின்وَاُمِرْتُஇன்னும் கட்டளையிடப் பட்டேன்اَنْ اَكُوْنَநான் ஆகவேண்டுமெனمِنَ الْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களில்
Fப இன் தவல்லய்தும் Fபமா ஸ அல்துகும் மின் அஜ்ரின்; இன் அஜ்ரிய இல்லா 'அல் அல்லாஹி வ உமிர்து அன் அகூன மினல் முஸ்லிமீன்
“ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று கூறினார்).
فَكَذَّبُوْهُ فَنَجَّیْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِی الْفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰٓىِٕفَ وَاَغْرَقْنَا الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟
فَكَذَّبُوْهُஅவர்கள் பொய்ப்பித்தனர்فَنَجَّيْنٰهُஅவரைوَمَنْஆகவே, பாதுகாத்தோம்/அவரைمَّعَهٗஇன்னும் அவருடன் இருந்தவர்களைفِى الْـفُلْكِகப்பலில்وَجَعَلْنٰهُمْஇன்னும் அவர்களை ஆக்கினோம்خَلٰٓٮِٕفَபிரதிநிதிகளாகوَاَغْرَقْنَاஇன்னும் மூழ்கடித்தோம்الَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِاٰيٰتِنَا‌ ۚநம் வசனங்களைفَانْظُرْஆகவே கவனிப்பீராகكَيْفَஎவ்வாறுكَانَஆகிவிட்டதுعَاقِبَةُமுடிவுالْمُنْذَرِيْنَ‏எச்சரிக்கப்பட்டவர்களின்
Fப கத்தBபூஹு Fப னஜ்ஜய்னாஹு வ மன் ம'அஹூ Fபில் Fபுல்கி வ ஜ'அல்னாஹும் கலா'இFப வ அக்ரக்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முன்தரீன்
அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் - மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம் - நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهٖ رُسُلًا اِلٰی قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَیِّنٰتِ فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ نَطْبَعُ عَلٰی قُلُوْبِ الْمُعْتَدِیْنَ ۟
ثُمَّபிறகுبَعَثْنَاஅனுப்பினோம்مِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர்رُسُلًاதூதர்களைاِلٰى قَوْمِهِمْஅவர்களுடைய சமுதாயத்திற்குفَجَآءُوْஅவர்கள் வந்தார்கள்هُمْஅவர்களிடம்بِالْبَيِّنٰتِஅத்தாட்சிகளைக் கொண்டுفَمَا كَانُوْاஅவர்கள் இருக்கவில்லைلِيُؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாகبِمَا كَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தவற்றைبِهٖஅதைمِنْ قَبْلُ‌ ؕமுன்னர்كَذٰلِكَஇவ்வாறேنَطْبَعُமுத்திரையிடுகிறோம்عَلٰىமீதுقُلُوْبِஉள்ளங்கள்الْمُعْتَدِيْنَ‏வரம்புமீறிகளின்
தும்ம Bப'அத்னா மின் Bபஃதிஹீ ருஸுலன் இலா கவ்மிஹிம் Fபஜா'ஊஹும் Bபில் Bபய்யினாதி Fபமா கானூ லியு'மினூ Bபிமா கத்தBபூ Bபிஹீ மின் கBப்ல்; கதாலிக னத்Bப'உ 'அலா குலூBபில் முஃததீன்
அவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی وَهٰرُوْنَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ بِاٰیٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
ثُمَّபிறகுبَعَثْنَاஅனுப்பினோம்مِنْۢ بَعْدِபின்னர்هِمْஇவர்களுக்குمُّوْسٰமூஸாவைوَهٰرُوْنَஇன்னும் ஹாரூனைاِلٰபக்கம்فِرْعَوْنَஃபிர்அவ்ன்وَ مَلَا۟ىِٕهٖஇன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்بِاٰيٰتِنَاநம் அத்தாட்சிகளுடன்فَاسْتَكْبَرُوْاஅவர்கள் கர்வம் கொண்டனர்وَكَانُوْاஇன்னும் இருந்தனர்قَوْمًاசமுதாயமாகمُّجْرِمِيْنَ‏குற்றம் புரிகின்றவர்கள்
தும்ம Bப'அத்னா மின் Bபஃதிஹிம் மூஸா வ ஹாரூன இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Bபி ஆயாதினா Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் முஜ்ரிமீன்
இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْۤا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِیْنٌ ۟
فَلَمَّاபோதுجَآءَவந்ததுهُمُஅவர்களுக்குالْحَـقُّஉண்மைمِنْஇருந்துعِنْدِنَاநம்மிடம்قَالُوْۤاகூறினார்கள்اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَسِحْرٌசூனியம்தான்مُّبِيْنٌ‏தெளிவானது
Fபலம்மா ஜா'அஹுமுல் ஹக்கு மின் 'இன்தினா காலூ இன்ன ஹாதா ல ஸிஹ்ருன் முBபீன்
நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்த போது, “நிச்சயமாக இது தெளிவான சூனியமே யாகும்” என்று கூறினார்கள்.
قَالَ مُوْسٰۤی اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ ؕ اَسِحْرٌ هٰذَا ؕ وَلَا یُفْلِحُ السّٰحِرُوْنَ ۟
قَالَகூறினார்مُوْسٰٓىமூஸாاَتَقُوْلُوْنَகூறுகிறீர்களா?لِلْحَقِّஉண்மையைلَمَّاபோதுجَآءَவந்தكُمْஉங்களிடம்اَسِحْرٌசூனியமா?هٰذَا ؕஇதுوَلَا يُفْلِحُவெற்றி பெறமாட்டார்கள்السَّاحِرُوْنَ‏சூனியக்காரர்கள்
காலா மூஸா 'அ தகூலூன லில் ஹக்கி லம்ம்மா ஜா'அ கும் 'அ ஸிஹ்ருன் ஹாதா வலா யுFப்லிஹுஸ் ஸாஹிரூன்
அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.
قَالُوْۤا اَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا وَتَكُوْنَ لَكُمَا الْكِبْرِیَآءُ فِی الْاَرْضِ ؕ وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِیْنَ ۟
قَالُـوْۤاகூறினார்கள்اَجِئْتَـنَاநீர் எங்களிடம் வந்தீரா?لِتَلْفِتَـنَاநீர் திருப்புவதற்கு / எங்களைعَمَّاவிட்டு/எதைوَجَدْنَاநாங்கள் கண்டோம்عَلَيْهِஅதில்اٰبَآءَنَاஎங்கள் மூதாதைகளைوَتَكُوْنَஇன்னும் ஆகிவிடுவதற்குلَكُمَاஉங்கள் இருவருக்கும்الْكِبْرِيَآءُமகத்துவம்فِى الْاَرْضِؕபூமியில்وَمَا نَحْنُநாங்கள் இல்லைلَـكُمَاஉங்கள் இருவரையும்بِمُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொள்பவர்களாக
காலூ அஜி'தனா லிதல்Fபிதனா 'அம்மா வஜத்னா 'அலய்ஹி ஆBபா'அனா வ தகூன லகுமல் கிBப்ரியா'உ Fபில் அர்ளி வமா னஹ்னு லகுமா Bபி மு'மினீன்
(அதற்கு) அவர்கள்: எங்கள் மூதாதையர்களை எதன் மீது நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? ஆனால் நாங்கள் உங்களிருவர் மீதும் நம்பிக்கை கொள்பவர்களல்லர்” என்று கூறினார்கள்.
وَقَالَ فِرْعَوْنُ ائْتُوْنِیْ بِكُلِّ سٰحِرٍ عَلِیْمٍ ۟
وَقَالَஇன்னும் கூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்ائْتُوْنِىْவாருங்கள்/என்னிடம்بِكُلِّஎல்லோரையும் கொண்டுسٰحِرٍசூனியக்காரர்عَلِيْمٍ‏நன்கறிந்த
வ கால Fபிர்'அவ்னு' தூனீ Bபிகுல்லி ஸாஹிரின் 'அலீம்
ஃபிர்அவ்ன் (தன் கூட்டத்தாரிடம்) “தேர்ச்சி பெற்ற சூனியக்காரர் ஒவ்வொரு வரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக் கூறினான்.
فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟
فَلَمَّا جَآءَவந்த போதுالسَّحَرَةُசூனியக்காரர்கள்قَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குمُّوْسٰۤىமூஸாاَلْقُوْاஎறியுங்கள்مَاۤஎதைاَنْتُمْநீங்கள்مُّلْقُوْنَ‏எறியக்கூடியவர்கள்
Fபலம்மா ஜா'அஸ்ஸ ஹரது கால லஹும் மூஸா அல்கூ மா அன்தும் முல்கூன்
அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.
فَلَمَّاۤ اَلْقَوْا قَالَ مُوْسٰی مَا جِئْتُمْ بِهِ ۙ السِّحْرُ ؕ اِنَّ اللّٰهَ سَیُبْطِلُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَا یُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِیْنَ ۟
فَلَمَّاۤ اَلْقَوْاஆகவே அவர்கள் எறிந்தபோதுقَالَகூறினார்مُوْسٰىமூஸாمَا جِئْتُمْ بِهِۙநீங்கள் செய்தவைالسِّحْرُ‌ؕசூனியம்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்سَيُبْطِلُهٗஅழிப்பான்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يُصْلِحُசீர்படுத்த மாட்டான்عَمَلَசெயலைالْمُفْسِدِيْنَ‏விஷமிகளின்
Fபலம்மா அல்கவ் கால மூஸா மா ஜி'தும் Bபிஹிஸ் ஸிஹ்ர்; இன்னல் லாஹ ஸ யுBப்திலுஹூ; இன்னல் லாஹ லா யுஸ்லிஹு 'அமலல் முFப்ஸிதீன்
அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா: “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்.
وَیُحِقُّ اللّٰهُ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ۟۠
وَيُحِقُّஇன்னும் நிரூபிப்பான்اللّٰهُஅல்லாஹ்الْحَـقَّஉண்மையைبِكَلِمٰتِهٖதன் கட்டளைகளைக் கொண்டுوَلَوْ كَرِهَவெறுத்தாலும் சரியேالْمُجْرِمُوْنَ‏குற்றவாளிகள்
வ யுஹிக்குல் லாஹுல் ஹக்க Bபி கலிமாதிஹீ வ லவ் கரிஹல் முஜ்ரிமூன்
இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான் (என்றும் கூறினார்).
فَمَاۤ اٰمَنَ لِمُوْسٰۤی اِلَّا ذُرِّیَّةٌ مِّنْ قَوْمِهٖ عَلٰی خَوْفٍ مِّنْ فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهِمْ اَنْ یَّفْتِنَهُمْ ؕ وَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِی الْاَرْضِ ۚ وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِیْنَ ۟
فَمَاۤ اٰمَنَநம்பிக்கை கொள்ளவில்லைلِمُوْسٰٓىமூஸாவைاِلَّاதவிரذُرِّيَّةٌஒரு சந்ததியினர்مِّنْ قَوْمِهٖஅவரின்சமுதாயத்தில்عَلٰى خَوْفٍபயந்துمِّنْ فِرْعَوْنَஃபிர்அவ்ன்وَمَلَا۟ ٮِٕهِمْஇன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்اَنْ يَّفْتِنَهُمْ‌ ؕஅவன் துன்புறுத்துவதை/தங்களைوَاِنَّநிச்சயமாகفِرْعَوْنَஃபிர்அவ்ன்لَعَالٍசர்வாதிகாரிفِى الْاَرْضِ‌ ۚபூமியில்وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவன்لَمِنَ الْمُسْرِفِيْنَ‏வரம்பு மீறக்கூடியவர்களில்
Fபமா ஆமன லி-மூஸா இல்லா துர்ரிய்யதுன் மின் கவ்மிஹீ 'அலா கவ்Fபின் மின் Fபிர்'அவ்ன வ மல'இஹிம் 'அ(ன்)ய் யFப்தினஹும்; வ இன்ன Fபிர்'அவ்ன ல'ஆலின் Fபில் அர்ளி வ இன்னஹூ லமினல் முஸ்ரிFபீன்
ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.
وَقَالَ مُوْسٰی یٰقَوْمِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ فَعَلَیْهِ تَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّسْلِمِیْنَ ۟
وَقَالَகூறினார்مُوْسٰىமூஸாيٰقَوْمِஎன் சமுதாயமேاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்اٰمَنْتُمْநம்பிக்கை கொண்டீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைفَعَلَيْهِஅவன் மீதேتَوَكَّلُوْاۤநம்பிக்கை வையுங்கள்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّسْلِمِيْنَ‏முஸ்லிம்களாக
வ கால மூஸா யா கவ்மி இன் குன்தும் ஆமன்தும் Bபில்லாஹி Fப'அலய்ஹி தவக்கலூ இன் குன்தும் முஸ்லிமீன்
மூஸா (தம் சமூகத்தவரிடம்): “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லிம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார்.
فَقَالُوْا عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ۚ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟ۙ
فَقَالُوْاகூறினார்கள்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதேتَوَكَّلْنَا‌ ۚநம்பிக்கைவைத்தோம்رَبَّنَاஎங்கள் இறைவாلَا تَجْعَلْنَاஎங்களை ஆக்கிவிடாதேفِتْنَةًசோதனையாகلِّـلْقَوْمِசமுதாயத்திற்குالظّٰلِمِيْنَۙ‏அநியாயம் புரிகின்றனர்
Fபகாலூ 'அலல் லாஹி தவக்கல்னா ரBப்Bபனா லா தஜ்'அல்னா Fபித்னதல் லில்கவ்மிள் ளாலிமீன்
(அதற்கு) அவர்கள்: “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள்.
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟
وَنَجِّنَاபாதுகாத்துக் கொள்/எங்களைبِرَحْمَتِكَஉன் அருளால்مِنَஇருந்துالْقَوْمِசமுதாயம்الْكٰفِرِيْنَ‏நிராகரிக்கின்றவர்கள்
வ னஜ்ஜினா Bபிரஹ்மதிக மினல் கவ்மில் காFபிரீன்
“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰی وَاَخِیْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُیُوْتًا وَّاجْعَلُوْا بُیُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِیْمُوا الصَّلٰوةَ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
وَاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَىٰ مُوْسٰىமூஸாவுக்குوَاَخِيْهِஇன்னும் அவரது சகோதரரைاَنْ تَبَوَّاٰநீங்கள் இருவரும் அமையுங்கள்لِقَوْمِكُمَاஉங்கள் சமுதாயத்திற்காகبِمِصْرَமிஸ்ரில்بُيُوْتًاவீடுகளைوَّاجْعَلُوْاஇன்னும் ஆக்குங்கள்بُيُوْتَكُمْஉங்கள் வீடுகளைقِبْلَةًதொழுமிடங்களாகوَّاَقِيْمُواஇன்னும் நிலைநிறுத்துங்கள்الصَّلٰوةَ‌ ؕதொழுகையைوَبَشِّرِநற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
வ அவ்ஹய்னா இலா மூஸா வ அகீஹி அன் தBபவ் வ ஆலி கவ்மிகும Bபி மிஸ்ர Bபுயூத(ன்)வ் வஜ்'அலூ Bபுயூதகும் கிBப்லத(ன்)வ் வ அகீமுஸ் ஸலாஹ்; வ Bபஷ்ஷிரில் மு'மினீன்
ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்: “நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (கிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!” என்று வஹீ அறிவித்தோம்.
وَقَالَ مُوْسٰی رَبَّنَاۤ اِنَّكَ اٰتَیْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِیْنَةً وَّاَمْوَالًا فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۙ رَبَّنَا لِیُضِلُّوْا عَنْ سَبِیْلِكَ ۚ رَبَّنَا اطْمِسْ عَلٰۤی اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰی قُلُوْبِهِمْ فَلَا یُؤْمِنُوْا حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟
وَقَالَ مُوْسٰىமூஸா கூறினார்رَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّكَநிச்சயமாக நீاٰتَيْتَகொடுத்தாய்فِرْعَوْنَஃபிர்அவ்னுக்குوَمَلَاَهٗஇன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களுக்குزِيْنَةًஅலங்காரத்தைوَّاَمْوَالًاஇன்னும் செல்வங்கள்فِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَا ۙஇவ்வுலகம்رَبَّنَاஎங்கள் இறைவாلِيُضِلُّوْاஅவர்கள் வழிகெடுப்பதற்குعَنْ سَبِيْلِكَ‌ۚஉன் பாதையிலிருந்துرَبَّنَاஎங்கள் இறைவாاطْمِسْநாசமாக்குعَلٰٓى اَمْوَالِهِمْஅவர்களின் பொருள்களைوَاشْدُدْஇன்னும் இறுக்கிவிடுعَلٰى قُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்களைفَلَا يُؤْمِنُوْاநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்حَتّٰىவரைيَرَوُاஅவர்கள் காண்பர்الْعَذَابَவேதனையைالْاَ لِيْمَ‏துன்புறுத்தக்கூடியது
வ கால மூஸா ரBப்Bபனா இன்னக ஆதய்த Fபிர்'அவ்ன வ மல அஹூ Zஜீனத(ன்)வ் வ அம்வாலன் Fபில் ஹயாதித் துன்யா ரBப்Bபனா லியுளில்லூ 'அன்ஸBபீலிக ரBப்Bபனத் மிஸ் 'அலா அம்வாலிஹிம் வஷ்துத் 'அலா குலூBபிஹிம் Fபலா யு'மினூ ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
قَالَ قَدْ اُجِیْبَتْ دَّعْوَتُكُمَا فَاسْتَقِیْمَا وَلَا تَتَّبِعٰٓنِّ سَبِیْلَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟
قَالَகூறினான்قَدْ اُجِيْبَتْஏற்கப்பட்டு விட்டதுدَّعْوَتُكُمَاபிரார்த்தனை / உங்கள் இருவரின்فَاسْتَقِيْمَاநீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்وَلَا تَتَّبِعٰٓنِّஇன்னும் நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்سَبِيْلَபாதையைالَّذِيْنَஎவர்கள்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
கால கத் உஜீBபத் தஃவதுகுமா Fபஸ்தகீமா வலா தத்தBபி'ஆன்னி ஸBபீலல் லதீன லா யஃலமூன்
இறைவன் கூறினான்: “உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதும்) பின் பற்றாதீர்கள்” என்று.
وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْیًا وَّعَدْوًا ؕ حَتّٰۤی اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ ۙ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِیْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِیْلَ وَاَنَا مِنَ الْمُسْلِمِیْنَ ۟
وَجَاوَزْنَاஇன்னும் கடக்க வைத்தோம்بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَஇஸ்ராயீலின் சந்ததிகளை/கடலைفَاَتْبـَعَهُمْபின் தொடர்ந்தனர்/ அவர்களைفِرْعَوْنُஃபிர்அவ்ன்وَجُنُوْدُهٗஇன்னும் அவனுடைய ராணுவங்கள்بَغْيًاஅழிச்சாட்டியம்وَّعَدْوًا‌ ؕஇன்னும் வரம்பு மீறிحَتّٰۤىஇறுதியாகاِذَاۤபோதுاَدْرَكَهُபிடித்தது/அவனைالْغَرَقُமூழ்குதல்قَالَகூறினான்اٰمَنْتُநம்பிக்கை கொண்டேன்اَنَّهٗநிச்சயமாக செய்திلَاۤஅறவே இல்லைاِلٰهَஇறைவன்اِلَّاதவிரالَّذِىْۤஎத்தகையவன்اٰمَنَتْநம்பிக்கை கொண்டா(ர்க)ள்بِهٖ بَنُوْۤا اِسْرَآءِيْلَஅவனை / இஸ்ராயீலின் சந்ததிகள்وَ اَنَاஇன்னும் நான்مِنَ الْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களில்
வ ஜாவZஜ்னா Bபி Bபனீ இஸ்ரா'ஈலல் Bபஹ்ர Fப அத்Bப'அஹும் Fபிர்'அவ்னு வ ஜுனூதுஹூ Bபக்ய(ன்)வ் வ 'அத்வா; ஹத்தா இதா அத்ரகஹுல் கரகு கால ஆமன்து அன்னஹூ லா இலாஹ இல்லல் லதீ ஆமனத் Bபிஹீ Bபனூ இஸ்ரா'ஈல வ அன மினல் முஸ்லிமீன்
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
آٰلْـٰٔنَ وَقَدْ عَصَیْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟
آٰلْــٰٔنَஇப்போதுதானா?وَقَدْ عَصَيْتَமாறு செய்துவிட்டாய்قَبْلُமுன்னரோوَكُنْتَநீ இருந்தாய்مِنَ الْمُفْسِدِيْنَ‏விஷமிகளில்
ஆல் 'ஆன வ கத் 'அஸய்த கBப்லு வ குன்த மினல் முFப்ஸிதீன்
“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.
فَالْیَوْمَ نُنَجِّیْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰیَةً ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰیٰتِنَا لَغٰفِلُوْنَ ۟۠
فَالْيَوْمَ نُـنَجِّيْكَஇன்று/ நாம் உயரத்தில் வைப்போம் / உன்னைبِبَدَنِكَஉன் உடலைلِتَكُوْنَநீ ஆகுவதற்காகلِمَنْஎவருக்குخَلْفَكَபின்னால்/உனக்குاٰيَةً  ؕஓர் அத்தாட்சியாகوَاِنَّநிச்சயமாகكَثِيْرًاஅதிகமானவர்مِّنَ النَّاسِ عَنْமக்களில்/விட்டுاٰيٰتِنَاநம் அத்தாட்சிகளைلَغٰفِلُوْنَ‏அலட்சியம் செய்பவர்கள்தான்
Fபல்யவ்ம னுனஜ்ஜீக BபிBபதனிக லிதகூன லிமன் கல்Fபக ஆயஹ்; வ இன்ன கதீரன் மினன் னாஸி 'அன் ஆயாதினா லகாFபிலூன்
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).
وَلَقَدْ بَوَّاْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ ۚ فَمَا اخْتَلَفُوْا حَتّٰی جَآءَهُمُ الْعِلْمُ ؕ اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகبَوَّاْنَاஅமைத்தோம்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ராயீலின் சந்ததிகளுக்குمُبَوَّاَஇடத்தைصِدْقٍமிக நல்லوَّرَزَقْنٰهُمْஇன்னும் வழங்கினோம்/அவர்களுக்குمِّنَ الطَّيِّبٰتِ‌ۚநல்லவற்றிலிருந்துفَمَا اخْتَلَفُوْاஅவர்கள் மாறுபடவில்லைحَتّٰىவரைجَآءَவந்ததுهُمُஅவர்களிடம்الْعِلْمُ‌ؕஞானம்اِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்يَقْضِىْதீர்ப்பளிப்பான்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்فِيْمَاஎதில்كَانُوْاஇருந்தனர்فِيْهِஅதில்يَخْتَلِفُوْنَ‏மாறுபடுகின்றனர்
வ லகத் Bபவ்வ'னா Bபனீ இஸ்ரா'ஈல முBபவ்வ 'அ ஸித்கி(ன்)வ் வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி Fப மக்தலFபூ ஹத்தா ஜா'அஹ்முல் 'இல்ம்; இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியினரை, தகுந்த இருப்பிடத்தில் இருத்தி, நல்ல உணவுகளையும் கொடுத்து வந்தோம்; எனினும் உண்மையான ஞானம் அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் மாறுபாடு செய்யவில்லை; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எது பற்றி மாறுபாடு செய்து கொண்டிருந்தார்களோ அ(து விஷயத்)தில் இறுதி நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.
فَاِنْ كُنْتَ فِیْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ فَسْـَٔلِ الَّذِیْنَ یَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ ۚ لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟ۙ
فَاِنْ كُنْتَநீர் இருந்தால்فِىْ شَكٍّசந்தேகத்தில்مِّمَّاۤ اَنْزَلْنَاۤநாம் இறக்கியதில்اِلَيْكَஉமக்குفَسْــٴَــلِகேட்பீராகالَّذِيْنَஎவர்கள்يَقْرَءُوْنَபடிக்கின்றார்கள்الْكِتٰبَவேதத்தைمِنْ قَبْلِكَ‌ۚஉமக்கு முன்னர்لَقَدْ جَآءَவந்துவிட்டதுكَஉமக்குالْحَقُّஉண்மைمِنْ رَّبِّكَஉமது இறைவனிடமிருந்துفَلَا تَكُوْنَنَّஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர்مِنَ الْمُمْتَرِيْنَۙ‏சந்தேகப்படுபவர்களில்
Fப இன் குன்த Fபீ ஷக்கின் மிம்மா அன்Zஜல்னா இலய்க Fபஸ்'அலில் லதீன யக்ர'ஊனல் கிதாBப மின் கBப்லிக்; லகத் ஜா'அகல் ஹக்கு மிர் ரBப்Bபிக Fப லா தகூனன்ன மினல் மும்தரீன்
(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.
وَلَا تَكُوْنَنَّ مِنَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَتَكُوْنَ مِنَ الْخٰسِرِیْنَ ۟
وَلَا تَكُوْنَنَّஅறவே நீர் ஆகிவிடாதீர்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்فَتَكُوْنَஆகிவிடுவீர்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
வ லா தகூனன்ன மினல் லதீன கத்தBபூ Bபி ஆயாதில் லாஹி Fபதகூன மினல் காஸிரீன்
அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர்.
اِنَّ الَّذِیْنَ حَقَّتْ عَلَیْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்حَقَّتْஉறுதியாகி விட்டதுعَلَيْهِمْஅவர்கள் மீதுكَلِمَتُவாக்குرَبِّكَஉம் இறைவனின்لَا يُؤْمِنُوْنَۙ‏அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
இன்னல் லதீன ஹக்கத் 'அலய்ஹிம் கலிமது ரBப்Bபிக லா யு'மினூன்
நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகள் என்று) உம் இறைவனுடைய வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள்.
وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ اٰیَةٍ حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟
وَلَوْவந்தால்جَآءَتْهُمْஅவர்களிடம்كُلُّஎல்லாம்اٰيَةٍஅத்தாட்சிحَتّٰىவரைيَرَوُاகாண்பார்கள்الْعَذَابَவேதனைالْاَ لِيْمَ‏துன்புறுத்தக்கூடியது
வ லவ் ஜா'அத் ஹும் குல்லு ஆயதின் ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்களிடம் எல்லா அத்தாட்சிகளும் வந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.).
فَلَوْلَا كَانَتْ قَرْیَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِیْمَانُهَاۤ اِلَّا قَوْمَ یُوْنُسَ ؕ لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَمَتَّعْنٰهُمْ اِلٰی حِیْنٍ ۟
فَلَوْلَا كَانَتْஇருக்கக்கூடாதா!قَرْيَةٌஓர் ஊர்اٰمَنَتْநம்பிக்கைகொண்டதுفَنَفَعَهَاۤபலனளித்தது/ தங்களுக்குاِيْمَانُهَاۤதங்கள் நம்பிக்கைاِلَّاஎனினும்قَوْمَசமுதாயம்يُوْنُسَ ۚؕயூனுஸ்لَمَّاۤபோதுاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்كَشَفْنَاநீக்கினோம்عَنْهُمْஅவர்களை விட்டுعَذَابَவேதனையைالْخِزْىِஇழிவுفِى الْحَيٰوةِவாழ்வில்الدُّنْيَاஉலகம்وَمَتَّعْنٰهُمْஇன்னும் சுகமளித்தோம்/அவர்களுக்குاِلٰىவரைحِيْنٍ‏ஒரு காலம்
Fபலவ் லா கானத் கர்யதுன் ஆமனத் Fப னFப'அஹா ஈமானுஹா இல்லா கவ்ம யூனுஸ லம்மா ஆமனூ கஷFப்னா 'அன்ஹும் 'அதாBபல் கிZஜ்யி Fபில் ஹயாதித் துன்யா வ மத்தஃனாஹும் இலா ஹீன்
எனவே, (வேதனை வரும்போது) ஓர் ஊர் (மக்கள்) நம்பிக்கைக் கொண்டு, அதனுடைய நம்பிக்கை அதற்குப் பயனளித்ததாக இருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த ஊரும் இருக்கவில்லை!) யூனுஸின் சமுதாயத்தாரைத் தவிர; அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களைவிட்டும் நாம் அகற்றினோம்; சிறிதுகாலம் சுகம் அனுபவிக்க செய்தோம்.
وَلَوْ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِی الْاَرْضِ كُلُّهُمْ جَمِیْعًا ؕ اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰی یَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟
وَلَوْ شَآءَநாடினால்رَبُّكَஉம் இறைவன்لَاٰمَنَநம்பிக்கை கொண்டிருப்பார்(கள்)مَنْ فِى الْاَرْضِபூமியிலுள்ளவர்கள்كُلُّهُمْஅவர்கள் எல்லோரும்جَمِيْعًا‌ ؕஅனைவரும்اَفَاَنْتَநீர்?تُكْرِهُநிர்ப்பந்திப்பீர்النَّاسَமக்களைحَتّٰى يَكُوْنُوْاஅவர்கள் ஆகிவிடுவதற்குمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
வ லவ் ஷா'அ ரBப்Bபுக ல ஆமன மன் Fபில் அர்ளி குல்லுஹும் ஜமீ'ஆ; அFப அன்த துக்ரிஹுன் னாஸ ஹத்தா யகூனூ மு'மினீன்
மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تُؤْمِنَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَیَجْعَلُ الرِّجْسَ عَلَی الَّذِیْنَ لَا یَعْقِلُوْنَ ۟
وَمَا كَانَசாத்தியமாகாதுلِنَفْسٍஓர் ஆத்மாவிற்குاَنْ تُؤْمِنَஅது நம்பிக்கை கொள்வதுاِلَّاதவிரبِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَيَجْعَلُஇன்னும் ஆக்குகிறான்الرِّجْسَதண்டனையைعَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்لَا يَعْقِلُوْنَ‏சிந்தித்து புரிய மாட்டார்கள்
வமா கான லினFப்ஸின் அன் து'மின இல்லா Bபி இத்னில் லாஹ்; வ யஜ்'அலுர் ரிஜ்ஸ 'அலல் லதீன லா யஃகிலூன்
எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.
قُلِ انْظُرُوْا مَاذَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَا تُغْنِی الْاٰیٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ ۟
قُلِகூறுவீராகانْظُرُوْاகவனியுங்கள்مَاذَاஎதைفِى السَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِ ؕஇன்னும் பூமியில்وَمَا تُغْنِىபலனளிக்கமாட்டார்கள்الْاٰيٰتُவசனங்கள்وَالنُّذُرُஇன்னும் எச்சரிப்பவர்கள்عَنْ قَوْمٍசமுதாயத்திற்குلَّا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
குலின் ளுரூ மாதா Fபிஸ்ஸமாவாதி வல் அர்ள்; வமா துக்னில் ஆயாது வன்னுதுரு 'அன் கவ்மில் லா யு'மினூன்
“வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக; எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா.
فَهَلْ یَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَیَّامِ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِهِمْ ؕ قُلْ فَانْتَظِرُوْۤا اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟
فَهَلْஆகவேيَنْتَظِرُوْنَஎதிர் பார்க்கின்றனர்اِلَّاதவிரمِثْلَபோன்றதைاَيَّامِநாள்கள்الَّذِيْنَஎவர்கள்خَلَوْاசென்றார்கள்مِنْ قَبْلِهِمْ‌ؕதங்களுக்கு முன்قُلْகூறுவீராகفَانْتَظِرُوْۤاநீங்கள் எதிர் பாருங்கள்اِنِّىْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன்مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏எதிர்பார்ப்பவர்களில்
Fபஹல் யன்தளிரூன இல்லா மித்ல அய்யாமில் லதீன கலவ் மின் கBப்லிஹிம்; குல் Fபன்தளிரூ இன்னீ ம'அகும் மினல் முன்தளிரீன்
தங்களுக்கு முன் சென்று விட்டார்களே அவர்களுக்கு ஏற்பட்ட நாள்களைப் போன்றதையேயன்றி, அவர்கள் (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? (அப்படியானால் அந்த கஷ்டகாலத்தை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
ثُمَّ نُنَجِّیْ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا كَذٰلِكَ ۚ حَقًّا عَلَیْنَا نُنْجِ الْمُؤْمِنِیْنَ ۟۠
ثُمَّபிறகுنُنَجِّىْபாதுகாப்போம்رُسُلَنَاதூதர்களை/நம்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْا‌நம்பிக்கை கொண்டார்கள்كَذٰلِكَ‌ۚஇவ்வாறேحَقًّاகடமையாகعَلَيْنَاநம்மீது கடமையாக உள்ளதுنُـنْجِநாம் பாதுகாப்பதுالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொண்டவர்களை
தும்ம னுனஜ்ஜீ ருஸுலன வல்லதீன ஆமனூ; கதாலிக ஹக்கன் 'அலய்னா னுன்ஜில் மு'மினீன்
(அவ்வாறு வேதனை வருங்காலத்தில்) நம் தூதர்களையும், ஈமான் கொண்டவர்களையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம் - (ஏனெனில்) ஈமான் கொண்டவர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்.
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِیْ شَكٍّ مِّنْ دِیْنِیْ فَلَاۤ اَعْبُدُ الَّذِیْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِیْ یَتَوَفّٰىكُمْ ۖۚ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۙ
قُلْகூறுவீராகيٰۤاَيُّهَا النَّاسُமக்களேاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்فِىْ شَكٍّசந்தேகத்தில்مِّنْ دِيْنِىْஎன் மார்க்கத்தில்فَلَاۤ اَعْبُدُநான் வணங்கமாட்டேன்الَّذِيْنَஎவர்களைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَلٰـكِنْஎனினும்اَعْبُدُவணங்குவேன்اللّٰهَஅல்லாஹ்வைத்தான்الَّذِىْஎத்தகையவன்يَتَوَفّٰٮكُمْ‌உயிர் கைப்பற்றுகிறான்/உங்களைوَاُمِرْتُஇன்னும் கட்டளையிடப் பட்டேன்اَنْ اَكُوْنَநான் ஆகவேண்டுமென்றுمِنَ الْمُؤْمِنِيْنَۙ‏நம்பிக்கையாளர்களில்
குல் யா அய்யுஹன் னாஸு இன் குன்தும் Fபீ ஷக்க்-இன் மின் தீனீ Fப லா அஃBபுதுல் லதீன தஃBபுதூன மின் தூனில் லாஹி வ லாகின் அஃBபுதுல் லாஹல் லதீ யதவFப்Fபாகும் வ உமிர்து அன் அகூன மினல் மு'மினீன்
“மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன்; ஆனால் உங்களை மரணிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், நான் முஃமின்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَاَنْ اَقِمْ وَجْهَكَ لِلدِّیْنِ حَنِیْفًا ۚ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
وَاَنْ اَقِمْஇன்னும் நிலைநிறுத்துவீராகوَجْهَكَஉம் முகத்தைلِلدِّيْنِமார்க்கத்தின் மீதுحَنِيْفًا‌ ۚஉறுதியானவராகوَلَا تَكُوْنَنَّநிச்சயம் ஆகிவிடாதீர்مِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
வ அன் அகிம் வஜ்ஹக லித்தீனி ஹனீFப(ன்)வ் வலா தகூனன்ன மினல் முஷ்ரிகீன்
நேர்மையான மார்க்கத்தின்பாலே உம் முகத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்; முஷ்ரிக்குகளில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكَ وَلَا یَضُرُّكَ ۚ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِیْنَ ۟
وَلَا تَدْعُஅழைக்காதீர்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمَاஎவைلَا يَنْفَعُكَஉமக்கு பயனளிக்காதுوَ لَا يَضُرُّكَ‌ۚஇன்னும் தீங்களிக்காது/ உமக்குفَاِنْ فَعَلْتَநீ செய்தால்فَاِنَّكَநிச்சயமாக நீர்اِذًاஅப்போதுمِّنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில்
வ லா தத்'உ மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உக வலா யளுர்ருக்; Fப இன் Fப'அல்த Fப இன்னக இதம் மினள் ளாலிமீன்
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்.
وَاِنْ یَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ۚ وَاِنْ یُّرِدْكَ بِخَیْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ ؕ یُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
وَاِنْ يَّمْسَسْكَஉமக்கு கொடுத்தால்اللّٰهُஅல்லாஹ்بِضُرٍّஒரு தீங்கைக் கொண்டுفَلَاஅறவே இல்லைكَاشِفَநீக்குபவர்لَهٗۤஅதைاِلَّا هُوَ ۚதவிர/அவன்وَاِنْ يُّرِدْكَஉமக்கு நாடினால்بِخَيْرٍஒரு நன்மையைفَلَاஅறவே இல்லைرَآدَّதடுப்பவர்لِفَضْلِهٖ‌ ؕஅவனுடையஅருளைيُصِيْبُ بِهٖஅதை அடையச் செய்கிறான்مَنْஎவர்يَّشَآءُநாடுகின்றான்مِنْ عِبَادِهٖ‌ ؕதன் அடியார்களில்وَهُوَஅவன்தான்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இ(ன்)ய் யம்ஸஸ்கல் லாஹு Bபிளுர்ரின் Fபலா காஷிFப லஹூ இல்லா ஹூ;வ இ(ன்)ய் யுரித்க Bபிகய்ரின் Fபலா ராத்த லிFபள்லிஹ்; யுஸீBபு Bபிஹீ ம(ன்)ய் யஷா'உ மின் 'இBபாதிஹ்; வ ஹுவல் கFபூருர் ரஹீம்
அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۚ فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ۚ وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِوَكِیْلٍ ۟ؕ
قُلْகூறுவீராகيٰۤاَيُّهَا النَّاسُமக்களேقَدْ جَآءَவந்து விட்டதுكُمُஉங்களுக்குالْحَـقُّஉண்மைمِنْஇருந்துرَّبِّكُمْ‌ۚஉங்கள் இறைவன்فَمَنِஎவர்اهْتَدٰىநேர்வழி சென்றார்فَاِنَّمَا يَهْتَدِىْஅவர் நேர்வழி செல்வதெல்லாம்لِنَفْسِهٖ‌ۚதன் நன்மைக்காகவேوَمَنْஇன்னும் எவர்ضَلَّவழிகெட்டார்فَاِنَّمَا يَضِلُّஅவர் வழிகெடுவதெல்லாம்عَلَيْهَا‌ۚதனக்குக்கேடாகத்தான்وَمَاۤஇல்லைاَنَاநான்عَلَيْكُمْஉங்கள் மீதுبِوَكِيْلٍؕ‏பொறுப்பாளனாக
குல் யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அகுமுல் ஹக்கு மிர் ரBப்Bபிகும்; Fபமனிஹ் ததா Fப இன்னமா யஹ்ததீ லி னFப்ஸிஹ்; வ மன் ளல்ல Fப இன்னமா யளில்லு 'அலய்ஹா; வ மா அன 'அலய்கும் Bபி வகீல்
(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர் தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்.”
وَاتَّبِعْ مَا یُوْحٰۤی اِلَیْكَ وَاصْبِرْ حَتّٰی یَحْكُمَ اللّٰهُ ۖۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟۠
وَاتَّبِعْபின்பற்றுவீராகمَاஎதுيُوْحٰۤىவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَيْكَஉமக்குوَاصْبِرْஇன்னும் பொறுப்பீராகحَتّٰىவரைيَحْكُمَதீர்ப்பளிப்பான்اللّٰهُ‌ ۖۚஅல்லாஹ்وَهُوَஅவன்خَيْرُமிக மேலானவன்الْحٰكِمِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
வத்தBபிஃ மா யூஹா இலய்க வஸ்Bபிர் ஹத்தா யஹ்குமல் லாஹ்; வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
(நபியே!) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்து கொள்வீராக; அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் பொறுமையாகவும், உறுதியாகவும் இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்.