68. ஸூரத்துல் கலம் (எழுதுகோல்)

மக்கீ, வசனங்கள்: 52

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
نٓ وَالْقَلَمِ وَمَا یَسْطُرُوْنَ ۟ۙ
نٓநூன்وَ الْقَلَمِபேனாவின் மீது சத்தியமாகوَ مَاமேலும் எதைیَسْطُرُوْنَۙஅவர்கள் எழுதுகிறார்களோ
னூன்; வல்கலமி வமா யஸ்துரூன்
நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
مَاۤ اَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ ۟ۚ
مَاۤஇல்லைاَنْتَநீர்بِنِعْمَةِஅருளால்رَبِّكَஉமது இறைவனின்بِمَجْنُوْنٍۚபைத்தியக்காரர்
மா அன்த Bபினிஃமதி ரBப்Bபிக Bபிமஜ்னூன்
உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
وَاِنَّ لَكَ لَاَجْرًا غَیْرَ مَمْنُوْنٍ ۟ۚ
وَ اِنَّமேலும் நிச்சயமாகلَكَஉமக்குلَاَجْرًاநிச்சயமாக நற்கூலிغَیْرَஅற்றمَمْنُوْنٍۚமுடிவு
வ இன்ன லக ல அஜ்ரன் கய்ர மம்னூன்
இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
وَاِنَّكَ لَعَلٰی خُلُقٍ عَظِیْمٍ ۟
وَ اِنَّكَமேலும் நிச்சயமாக நீர்لَعَلٰیஉறுதியாக மீது இருக்கின்றீர்خُلُقٍநற்குணத்தின்عَظِیْمٍமகத்தான
வ இன்னக ல'அலா குலுகின் 'அளீம்
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
فَسَتُبْصِرُ وَیُبْصِرُوْنَ ۟ۙ
فَسَتُبْصِرُவிரைவில் நீர் காண்பீர்وَ یُبْصِرُوْنَۙஅவர்களும் காண்பார்கள்
FபஸதுBப்ஸிரு வ யுBப்ஸிரூன்
எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
بِاَیِّىكُمُ الْمَفْتُوْنُ ۟
بِاَىیِّكُمُஉங்களில் யாருக்குالْمَفْتُوْنُபைத்தியம்
Bபி அய்யிகுமுல் மFப்தூன்
உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ ۪ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்هُوَஅவன்اَعْلَمُநன்கு அறிந்தவன்بِمَنْஎவர்ضَلَّவழிதவறினாரோعَنْவிட்டுسَبِیْلِهٖ ۪அவனது பாதையைوَ هُوَமேலும் அவன்اَعْلَمُநன்கு அறிந்தவன்بِالْمُهْتَدِیْنَநேர்வழி பெற்றவர்களை
இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபிமன் ளல்ல 'அன் ஸBபீலிஹீ வ ஹுவ அஃலமு Bபில்முஹ்ததீன்
உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
فَلَا تُطِعِ الْمُكَذِّبِیْنَ ۟
فَلَاஆகவே வேண்டாம்تُطِعِநீர் கீழ்ப்படியالْمُكَذِّبِیْنَபொய்ப்பிப்போருக்கு
Fபலா துதி'இல் முகத்திBபீன்
எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
وَدُّوْا لَوْ تُدْهِنُ فَیُدْهِنُوْنَ ۟
وَدُّوْاஅவர்கள் விரும்புகிறார்கள்لَوْஎன்றுتُدْهِنُநீர் இணங்கிப் போக வேண்டும்فَیُدْهِنُوْنَஅப்பொழுது அவர்களும் இணங்கிப் போவார்கள்
வத்தூ லவ் துத்ஹினு Fப-யுத்ஹினூன்
(சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِیْنٍ ۟ۙ
وَ لَاமேலும் வேண்டாம்تُطِعْநீர் கீழ்ப்படியكُلَّஎந்தவொருحَلَّافٍஅதிகம் சத்தியம் செய்பவனுக்கும்مَّهِیْنٍۙஇழிவானவனுக்கும்
வ லா துதிஃ குல்ல ஹல்லா Fபிம் மஹீன்
அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
هَمَّازٍ مَّشَّآءٍ بِنَمِیْمٍ ۟ۙ
هَمَّازٍகுறை கூறுபவன்مَّشَّآءٍۭதிரிபவன்بِنَمِیْمٍۙகோள் சொல்லிக்கொண்டு
ஹம்மாZஜிம் மஷ் ஷா'இம் Bபினமீம்
(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ
مَّنَّاعٍதடுப்பவர்لِّلْخَیْرِநன்மையைمُعْتَدٍவரம்பு மீறுபவர்اَثِیْمٍۙபாவி
மன்னா'இல் லில்கய்ரி முஃததின் அதீம்
(எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி.
عُتُلٍّ بَعْدَ ذٰلِكَ زَنِیْمٍ ۟ۙ
عُتُلٍّۭமுரடானவன்بَعْدَபிறகுذٰلِكَஅதற்குزَنِیْمٍۙஇழிவானவன்
'உதுல்லிம் Bபஃத தாலிக Zஜனீம்
கடின சித்தமுடையவன்; அப்பால் இழி பிறப்புமுடையவன்.
اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِیْنَ ۟ؕ
اَنْஎன்பதால்كَانَஅவன் இருக்கிறான்ذَاஉடையவனாகمَالٍசெல்வம்وَّ بَنِیْنَؕமற்றும் புதல்வர்கள்
அன் கான தா மாலி(ன்)வ்-வ Bபனீன்
பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் -
اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
اِذَاஎப்பொழுதுتُتْلٰیஓதப்பட்டால்عَلَیْهِஅவனிடம்اٰیٰتُنَاநம் வசனங்கள்قَالَஅவன் கூறுகிறான்اَسَاطِیْرُகட்டுக்கதைகள்الْاَوَّلِیْنَமுன்னோர்களின்
இதா துத்லா 'அலய்ஹி ஆயாதுனா கால அஸாதீருல் அவ்வலீன்
நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவன் கூறுகின்றான்.
سَنَسِمُهٗ عَلَی الْخُرْطُوْمِ ۟
سَنَسِمُهٗநாம் அவனுக்கு அடையாளமிடுவோம்عَلَیமீதுالْخُرْطُوْمِதுதிக்கையின்
ஸனஸிமுஹூ 'அலல் குர்தூம்
விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.
اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَاۤ اَصْحٰبَ الْجَنَّةِ ۚ اِذْ اَقْسَمُوْا لَیَصْرِمُنَّهَا مُصْبِحِیْنَ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்بَلَوْنٰهُمْஅவர்களைச் சோதித்தோம்كَمَاஎவ்வாறுبَلَوْنَاۤநாம் சோதித்தோமோاَصْحٰبَஉரிமையாளர்களைالْجَنَّةِ ۚஅந்தத் தோட்டத்தின்اِذْஅப்போதுاَقْسَمُوْاஅவர்கள் சத்தியம் செய்தார்கள்لَیَصْرِمُنَّهَاநிச்சயமாக அதன் கனிகளைப் பறித்துவிடுவோம் என்றுمُصْبِحِیْنَۙஅதிகாலையில்
இன்னா Bபலவ்னாஹும் கமா Bபலவ்னா அஸ்-ஹாBபல் ஜன்னதி இத் 'அக்ஸமூ ல-யஸ்ரி முன்னஹா முஸ்Bபிஹீன்
நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
وَلَا یَسْتَثْنُوْنَ ۟
وَ لَاமேலும்یَسْتَثْنُوْنَஅவர்கள் விதிவிலக்குக் கூறவில்லை
வ லா யஸ்தத்னூன்
அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை;
فَطَافَ عَلَیْهَا طَآىِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَآىِٕمُوْنَ ۟
فَطَافَஎனவே சுற்றியதுعَلَیْهَاஅதன் மீதுطَآىِٕفٌஒரு பேரழிவுمِّنْபுறத்திலிருந்துرَّبِّكَஉமது இறைவனின்وَ هُمْஅவர்கள்نَآىِٕمُوْنَஉறங்கிக் கொண்டிருந்த நிலையில்
FபதாFப 'அலய்ஹா தா'இ Fபும் மிர் ரBப்Bபிக வ ஹும் னா'இமூன்
எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.
فَاَصْبَحَتْ كَالصَّرِیْمِ ۟ۙ
فَاَصْبَحَتْஆகவே அது ஆகிவிட்டதுكَالصَّرِیْمِۙகருகியதைப் போல
Fப அஸ்Bபஹத் கஸ்ஸரீம்
(நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.
فَتَنَادَوْا مُصْبِحِیْنَ ۟ۙ
فَتَنَادَوْاபின்னர் அவர்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டனர்مُصْبِحِیْنَۙவிடியற்காலையில்
Fபதனாதவ் முஸ்Bபிஹீன்
(இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.
اَنِ اغْدُوْا عَلٰی حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صٰرِمِیْنَ ۟
اَنِஎன்றுاغْدُوْاஅதிகாலையில் புறப்படுங்கள்عَلٰیநோக்கிحَرْثِكُمْஉங்கள் விளைநிலத்தைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰرِمِیْنَஅறுவடை செய்பவர்களாக
அனிக்தூ 'அலா ஹர்திகும் இன் குன்தும் ஸாரிமீன்
“நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்” (என்று கூறிக் கொண்டனர்).
فَانْطَلَقُوْا وَهُمْ یَتَخَافَتُوْنَ ۟ۙ
فَانْطَلَقُوْاஎனவே அவர்கள் புறப்பட்டார்கள்وَ هُمْமேலும் அவர்கள்یَتَخَافَتُوْنَۙஇரகசியமாகப் பேசிக்கொண்டு
Fபன்தலகூ வ ஹும் யதகாFபதூன்
எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்;
اَنْ لَّا یَدْخُلَنَّهَا الْیَوْمَ عَلَیْكُمْ مِّسْكِیْنٌ ۟ۙ
اَنْஎன்றுلَّاகூடாதுیَدْخُلَنَّهَاஅதனுள் நுழையالْیَوْمَஇன்றுعَلَیْكُمْஉங்களிடம்مِّسْكِیْنٌۙஓர் ஏழையும்
அல் லா யத்குலன்னஹல் யவ்ம 'அலய்கும் மிஸ்கீன்
“எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது” (என்று).
وَّغَدَوْا عَلٰی حَرْدٍ قٰدِرِیْنَ ۟
وَّ غَدَوْاமேலும் அவர்கள் அதிகாலையில் சென்றார்கள்عَلٰیமீதுحَرْدٍதடுத்தல்قٰدِرِیْنَஆற்றலுடையவர்களாக
வ கதவ் 'அலா ஹர்தின் காதிரீன்
உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.
فَلَمَّا رَاَوْهَا قَالُوْۤا اِنَّا لَضَآلُّوْنَ ۟ۙ
فَلَمَّاஎனவே எப்போதுرَاَوْهَاஅதை அவர்கள் கண்டார்களோقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாம்لَضَآلُّوْنَۙநிச்சயமாக வழிதவறிவிட்டோம்
Fபலம்மா ர அவ்ஹா காலூ இன்னா லளால்லூன்
ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: “நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்” என்று கூறினார்கள்.
بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟
بَلْமாறாகنَحْنُநாங்கள்مَحْرُوْمُوْنَபாக்கியமிழந்தவர்கள்
Bபல் னஹ்னு மஹ்ரூமூன்
(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) “இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்” (என்றும் கூறிக்கொண்டனர்.)
قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ ۟
قَالَகூறினார்اَوْسَطُهُمْஅவர்களில் சிறந்தவர்اَلَمْஇல்லையாاَقُلْநான் கூறلَّكُمْஉங்களுக்குلَوْ لَاஏன் நீங்கள்تُسَبِّحُوْنَதுதிக்கவில்லை
கால அவ்ஸதுஹும் அலம் அகுல் லகும் லவ் லா துஸBப்Bபிஹூன்
அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் “நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று கூறினார்.
قَالُوْا سُبْحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்سُبْحٰنَதூயவன்رَبِّنَاۤஎங்கள் இறைவன்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்ظٰلِمِیْنَஅநீதியிழைத்தவர்களாக
காலூ ஸுBப்ஹான ரBப்Bபினா இன்னா குன்னா ளாலிமீன்
“எங்கள் இறைவன் தூயவன்; நாம் தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்” என்றும் கூறினர்.
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَلَاوَمُوْنَ ۟
فَاَقْبَلَபிறகு முன்னோக்கினர்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰیநோக்கிبَعْضٍசிலரைیَّتَلَاوَمُوْنَஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டனர்
Fப அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதலாவமூன்
பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர்.
قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰوَیْلَنَاۤஎங்கள் கேடே!اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاநாங்கள் இருந்தோம்طٰغِیْنَவரம்பு மீறியவர்களாக
காலூ யா வய்லனா இன்னா குன்னா தாகீன்
அவர்கள் கூறினார்கள்: “எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.
عَسٰی رَبُّنَاۤ اَنْ یُّبْدِلَنَا خَیْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰی رَبِّنَا رٰغِبُوْنَ ۟
عَسٰیஒருவேளைرَبُّنَاۤஎங்கள் இறைவன்اَنْஎன்றுیُّبْدِلَنَاஎங்களுக்குப் பகரமாகத் தருவான்خَیْرًاசிறந்ததைمِّنْهَاۤஅதைவிடاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلٰیநோக்கிرَبِّنَاஎங்கள் இறைவனைرٰغِبُوْنَஆதரவு வைப்பவர்கள்
'அஸா ரBப்Bபுனா அ(ன்)ய் யுBப்திலனா கய்ரம் மின்ஹா இன்னா இலா ரBப்Bபினா ராகிBபூன்
“எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்” (எனக் கூறினர்).
كَذٰلِكَ الْعَذَابُ ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠
كَذٰلِكَஇவ்வாறேالْعَذَابُ ؕவேதனைوَ لَعَذَابُமேலும் நிச்சயமாக வேதனைالْاٰخِرَةِமறுமையின்اَكْبَرُ ۘமிகப் பெரியதுلَوْஒருவேளைكَانُوْاஅவர்கள்یَعْلَمُوْنَ۠அறிந்திருந்தால்
கதாலிகல் அதாBப், வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Bபர்; லவ் கானூ யஃலமூன்
இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது; அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).  
اِنَّ لِلْمُتَّقِیْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
اِنَّநிச்சயமாகلِلْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்களுக்குعِنْدَஇடத்தில்رَبِّهِمْஅவர்களுடைய இறைவனின்جَنّٰتِசுவனங்கள்النَّعِیْمِபேரின்பத்தின்
இன்ன லில்முத்தகீன 'இன்த ரBப்Bபிஹிம் ஜன்னாதின் ன'ஈம்
நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.
اَفَنَجْعَلُ الْمُسْلِمِیْنَ كَالْمُجْرِمِیْنَ ۟ؕ
اَفَنَجْعَلُநாம் ஆக்குவோமா?الْمُسْلِمِیْنَமுஸ்லிம்களைكَالْمُجْرِمِیْنَؕகுற்றவாளிகளைப் போல்
அFபனஜ்'அலுல் முஸ்லிமீன கல்முஜ்ரிமீன்
நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
مَا لَكُمْ ۥ كَیْفَ تَحْكُمُوْنَ ۟ۚ
مَاஎன்னلَكُمْ ۥஉங்களுக்குكَیْفَஎப்படிتَحْكُمُوْنَۚதீர்ப்பளிக்கிறீர்கள்
மா லகும் கய்Fப தஹ்குமூன்
(சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?
اَمْ لَكُمْ كِتٰبٌ فِیْهِ تَدْرُسُوْنَ ۟ۙ
اَمْஅல்லதுلَكُمْஉங்களுக்குكِتٰبٌஒரு வேதம்فِیْهِஅதில்تَدْرُسُوْنَۙநீங்கள் படிக்கிறீர்கள்
அம் லகும் கிதாBபுன் Fபீஹி தத்ருஸூன்
அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?
اِنَّ لَكُمْ فِیْهِ لَمَا تَخَیَّرُوْنَ ۟ۚ
اِنَّநிச்சயமாகلَكُمْஉங்களுக்குفِیْهِஅதில்لَمَاஎதைتَخَیَّرُوْنَۚநீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ
இன்ன லகும் Fபீஹி லமா தகய்யரூன்
நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா,
اَمْ لَكُمْ اَیْمَانٌ عَلَیْنَا بَالِغَةٌ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۙ اِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُوْنَ ۟ۚ
اَمْஅல்லதுلَكُمْஉங்களுக்குاَیْمَانٌசத்தியங்கள்عَلَیْنَاநம் மீதுبَالِغَةٌநிலைத்திருக்கக்கூடியاِلٰیவரைیَوْمِநாள்الْقِیٰمَةِ ۙமறுமைاِنَّநிச்சயமாகلَكُمْஉங்களுக்குلَمَاஎதைتَحْكُمُوْنَۚநீங்கள் தீர்ப்பளிக்கிறீர்களோ
அம் லகும் அய்மானுன் 'அலய்னா Bபாலிகதுன் இலா யவ்மில் கியாமதி இன்ன லகும் லமா தஹ்குமூன்
அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
سَلْهُمْ اَیُّهُمْ بِذٰلِكَ زَعِیْمٌ ۟ۚۛ
سَلْهُمْஅவர்களிடம் கேளும்اَیُّهُمْஅவர்களில் யார்بِذٰلِكَஅதற்குزَعِیْمٌۚۛபொறுப்பாளி
ஸல்ஹும் அய்யுஹும் Bபிதா லிக Zஜ'ஈம்
(அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக.
اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ فَلْیَاْتُوْا بِشُرَكَآىِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟
اَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குشُرَكَآءُ ۛۚகூட்டாளிகள்فَلْیَاْتُوْاஅவர்கள் கொண்டு வரட்டும்بِشُرَكَآىِٕهِمْதங்களுடைய கூட்டாளிகளைاِنْஒருவேளைكَانُوْاஅவர்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
அம் லஹும் ஷுரகா'உ Fபல் ய'தூ Bபிஷுரகா 'இஹிம் இன் கானூ ஸாதிகீன்
அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.
یَوْمَ یُكْشَفُ عَنْ سَاقٍ وَّیُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ فَلَا یَسْتَطِیْعُوْنَ ۟ۙ
یَوْمَஅந்நாளில்یُكْشَفُவெளிப்படுத்தப்படும்عَنْ-லிருந்துسَاقٍகெண்டைக்கால்وَّ یُدْعَوْنَமேலும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்اِلَی-க்குالسُّجُوْدِஸுஜூது செய்யفَلَاஆனால் அவர்களால் முடியாதுیَسْتَطِیْعُوْنَۙஇயலும்
யவ்ம யுக்ஷFபு 'அன் ஸாகி(ன்)வ் வ யுத்'அவ்ன இலஸ் ஸுஜூதி Fபலா யஸ்ததீ'ஊன்
கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.
خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ وَقَدْ كَانُوْا یُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ ۟
خَاشِعَةًதாழ்ந்த நிலையில்اَبْصَارُهُمْஅவர்களின் பார்வைகள்تَرْهَقُهُمْஅவர்களைச் சூழ்ந்துகொள்ளும்ذِلَّةٌ ؕஇழிவுوَ قَدْமேலும் நிச்சயமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்یُدْعَوْنَஅழைக்கப்பட்டார்கள்اِلَیநோக்கிالسُّجُوْدِசிரவணக்கம்وَ هُمْஅவர்கள் இருக்கும் நிலையில்سٰلِمُوْنَஆரோக்கியமாக
காஷி'அதன் அBப்ஸாருஹும் தர்ஹகுஹும் தில்லது(ன்)வ் வ கத் கானூ யுத்'அவ்ன இலஸ்ஸுஜூதி வ ஹும் ஸாலிமூன்
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
فَذَرْنِیْ وَمَنْ یُّكَذِّبُ بِهٰذَا الْحَدِیْثِ ؕ سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۙ
فَذَرْنِیْஎனவே என்னை விட்டுவிடுவீராகوَ مَنْமேலும் எவர்یُّكَذِّبُபொய்ப்பிக்கிறாரோبِهٰذَاஇந்தالْحَدِیْثِ ؕசெய்தியைسَنَسْتَدْرِجُهُمْநாம் அவர்களைப் படிப்படியாகப் பிடிப்போம்مِّنْஇருந்துحَیْثُஎவ்விடம்لَاஇல்லைیَعْلَمُوْنَۙஅவர்கள் அறிவார்கள்
Fபதர்னீ வ ம(ன்)ய் யுகத்திBபு Bபிஹாதல் ஹதீதி ஸனஸ்தத் ரிஜுஹும் மின் ஹய்து லா யஃலமூன்
எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.
وَاُمْلِیْ لَهُمْ ؕ اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟
وَ اُمْلِیْமேலும் நான் அவகாசம் அளிக்கிறேன்لَهُمْ ؕஅவர்களுக்குاِنَّநிச்சயமாகكَیْدِیْஎனது சூழ்ச்சிمَتِیْنٌஉறுதியானது
வ உம்லீ லஹும்; இன்ன கய்தீ மதீன்
அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன்; நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.
اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ۚ
اَمْஅல்லதுتَسْـَٔلُهُمْநீர் அவர்களிடம் கேட்கிறீராاَجْرًاகூலியைفَهُمْஅதனால் அவர்கள்مِّنْஇருந்துمَّغْرَمٍகடனில்مُّثْقَلُوْنَۚசுமையாக்கப்பட்டுள்ளார்களா
அம் தஸ்'அலுஹும் அஜ்ரன் Fபஹும் மின் மக்ரமின் முத்கலூன்
நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?
اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟
اَمْஅல்லதுعِنْدَهُمُஅவர்களிடம்الْغَیْبُமறைவானவைفَهُمْஆகவே அவர்கள்یَكْتُبُوْنَஎழுதிக்கொள்கிறார்கள்
அம் 'இன்தஹுமுல் கய்Bபு Fபஹும் யக்துBபூன்
அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِ ۘ اِذْ نَادٰی وَهُوَ مَكْظُوْمٌ ۟ؕ
فَاصْبِرْஎனவே பொறுத்திருப்பீராகلِحُكْمِதீர்ப்புக்காகرَبِّكَஉமது இறைவனின்وَ لَاமேலும் வேண்டாம்تَكُنْநீர் ஆகிவிடكَصَاحِبِதோழரைப் போல்الْحُوْتِ ۘமீன்اِذْபோதுنَادٰیஅவர் அழைத்தوَ هُوَஅவர் நிலையில்مَكْظُوْمٌؕதுயரம் நிறைந்தவராக
Fபஸ்Bபிர் லிஹுக்மி ரBப்Bபிக வலா தகுன் கஸாஹிBபில் ஹூத்; இத் னாதா வ ஹுவ மக்ளூம்
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக; மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:
لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَآءِ وَهُوَ مَذْمُوْمٌ ۟
لَوْ لَاۤஇல்லாவிட்டால்اَنْஎன்பதுتَدٰرَكَهٗஅவரை அடைந்திருக்கنِعْمَةٌஓர் அருள்مِّنْஇருந்துرَّبِّهٖஅவருடைய இறைவன்لَنُبِذَநிச்சயமாக அவர் எறியப்பட்டிருப்பார்بِالْعَرَآءِவெட்டவெளியில்وَ هُوَஅந்நிலையில் அவர்مَذْمُوْمٌஇகழப்பட்டவராக
லவ் லா அன் ததார கஹூ னிஃமதும் மிர் ரBப்Bபிஹீ லனுBபித Bபில்'அரா'இ வ ஹுவ மத்மூம்
அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟
فَاجْتَبٰىهُஎனவே அவரைத் தேர்ந்தெடுத்தார்رَبُّهٗஅவருடைய இறைவன்فَجَعَلَهٗஅவரை ஆக்கினான்مِنَஒருவராகالصّٰلِحِیْنَநல்லோர்களில்
Fபஜ்தBபாஹு ரBப்Bபுஹூ Fபஜ'அலஹூ மினஸ் ஸாலிஹீன்
ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.
وَاِنْ یَّكَادُ الَّذِیْنَ كَفَرُوْا لَیُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَیَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ ۟ۘ
وَ اِنْமேலும் நிச்சயமாகیَّكَادُநெருங்குகின்றனர்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَیُزْلِقُوْنَكَஉம்மைச் சறுக்கச் செய்யبِاَبْصَارِهِمْதங்களது பார்வைகளால்لَمَّاபோதுسَمِعُواஅவர்கள் செவியுற்றالذِّكْرَஇவ்வுபதேசத்தைوَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்اِنَّهٗநிச்சயமாக அவர்لَمَجْنُوْنٌۘநிச்சயமாக ஒரு பைத்தியக்காரர்
வ இ(ன்)ய்-யகாதுல் லதீன கFபரூ ல-யுZஜ்லிகூனக BபிஅBப்ஸாரிஹிம் லம்மா ஸமி'உத்-திக்ர வ யகூலூன இன்னஹூ லமஜ்னூன்
மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.
وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠
وَ مَاமேலும் இல்லைهُوَஅதுاِلَّاஅன்றிذِكْرٌநல்லுபதேசம்لِّلْعٰلَمِیْنَ۠அகிலத்தாருக்கு
வமா ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை.