நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்: “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம்.
يَغْفِرْஅவன் மன்னிப்பான்لَـكُمْஉங்களுக்குمِّنْ ذُنُوْبِكُمْஉங்கள் பாவங்களைوَيُؤَخِّرْكُمْஇன்னும் அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான்اِلٰٓى اَجَلٍதவணை வரைمُّسَمًّىؕகுறிப்பிட்டاِنَّநிச்சயமாகاَجَلَதவணைاللّٰهِஅல்லாஹ்வின்اِذَا جَآءَவந்துவிட்டால்لَا يُؤَخَّرُۘஅது பிற்படுத்தப்படாதுلَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَநீங்கள் அறிபவர்களாக இருக்க வேண்டுமே!
யக்Fபிர் லகும் மின் துனூBபிகும் வ யு'அக்கிர்கும் இலா அஜலிம் முஸம்மா; இன்னா அஜலல் லாஹி இதா ஜா'அ லா யு'அக்கர்; லவ் குன்தும் தஃலமூன்
“(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).
“அன்றியும்: நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர்; மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.
நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்; அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.
மேலும் அவர்கள்: “உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் சொல்கின்றனர்.
وَقَدْதிட்டமாகاَضَلُّوْاஅவர்கள் வழி கெடுத்தனர்كَثِيْرًا ۚபலரைوَلَا تَزِدِநீ அதிகப்படுத்தாதே!الظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குاِلَّا ضَلٰلًاவழிகேட்டைத் தவிர
ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.
“நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
رَبِّஎன் இறைவா!اغْفِرْلِىْஎன்னை(யும்) மன்னிப்பாயாக!وَلِـوَالِدَىَّஎன் பெற்றோரையும்وَلِمَنْ دَخَلَநுழைந்து விட்டவரையும்بَيْتِىَஎன் வீட்டில்مُؤْمِنًاநம்பிக்கையாளராகوَّلِلْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களையும்وَالْمُؤْمِنٰتِؕநம்பிக்கை கொண்ட பெண்களையும்وَلَا تَزِدِஅதிகப்படுத்தாதே!الظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குاِلَّا تَبَارًاஅழிவைத் தவிர
“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).