65. ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து)

மதனீ, வசனங்கள்: 12

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ۚ وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ ۚ لَا تُخْرِجُوْهُنَّ مِنْ بُیُوْتِهِنَّ وَلَا یَخْرُجْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ وَمَنْ یَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ لَا تَدْرِیْ لَعَلَّ اللّٰهَ یُحْدِثُ بَعْدَ ذٰلِكَ اَمْرًا ۟
يٰۤاَيُّهَا النَّبِىُّநபியே!اِذَا طَلَّقْتُمُநீங்கள் விவாகரத்து செய்தால்النِّسَآءَபெண்களைفَطَلِّقُوْهُنَّஅவர்களை விவாகரத்து செய்யுங்கள்لِعِدَّتِهِنَّஅவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டுوَاَحْصُواஇன்னும் சரியாக கணக்கிடுங்கள்الْعِدَّةَ ۚஇத்தாவைوَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைرَبَّكُمْ‌ ۚஉங்கள் இறைவனாகியلَا تُخْرِجُوْهُنَّஅவர்களை வெளியேற்றாதீர்கள்مِنْۢ بُيُوْتِهِنَّஅவர்களின் இல்லங்களில் இருந்துوَلَا يَخْرُجْنَஇன்னும் அவர்களும் வெளியேற வேண்டாம்اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَஅவர்கள் செய்தாலே தவிரبِفَاحِشَةٍதீய செயலைمُّبَيِّنَةٍ‌ ؕதெளிவானوَتِلْكَஇவைحُدُوْدُசட்டங்களாகும்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்وَمَنْஎவர்يَّتَعَدَّமீறுவாரோحُدُوْدَசட்டங்களைاللّٰهِஅல்லாஹ்வின்فَقَدْதிட்டமாகظَلَمَஅநீதி இழைத்துக் கொண்டார்نَفْسَهٗ‌ ؕதனக்குத் தானேلَا تَدْرِىْநீர் அறியமாட்டீர்لَعَلَّ اللّٰهَ يُحْدِثُஅல்லாஹ் ஏற்படுத்தலாம்بَعْدَ ذٰ لِكَஇதற்குப் பின்னர்اَمْرًا‏ஒரு காரியத்தை
யா அய்யுஹன் னBபிய்யு இதா தல்லக்தும்முன் னிஸா'அ Fபதல்லிகூஹுன்ன லி'இத்ததிஹின்ன வ அஹ்ஸுல்'இத்தத வத்தகுல் லாஹ ரBப்Bபகும்; லா துக்ரி ஜூஹுன்ன மின் Bபு-யூதிஹின்ன வலா யக்ருஜ்ன இல்லா அ(ன்)ய் ய'தீன BபிFபாஹிஷதிம் முBபய்யினஹ்; வ தில்க ஹுதூதுல் லாஹ்; வ ம(ன்)ய் யத'அத்த ஹுதூதல் லாஹி Fபகத் ளலம னFப்ஸஹ்; லா தத்ரீ ல'அல்லல் லாஹ யுஹ்திது Bபஃததாலிக அம்ரா
நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.
فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ فَارِقُوْهُنَّ بِمَعْرُوْفٍ وَّاَشْهِدُوْا ذَوَیْ عَدْلٍ مِّنْكُمْ وَاَقِیْمُوا الشَّهَادَةَ لِلّٰهِ ؕ ذٰلِكُمْ یُوْعَظُ بِهٖ مَنْ كَانَ یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ۬ وَمَنْ یَّتَّقِ اللّٰهَ یَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۟ۙ
فَاِذَا بَلَغْنَஅவர்கள் அடைந்து விட்டால்اَجَلَهُنَّதங்கள் தவணையைفَاَمْسِكُوْதடுத்து வையுங்கள்هُنَّஅவர்களைبِمَعْرُوْفٍநல்ல முறையில்اَوْஅல்லதுفَارِقُوْநீங்கள் பிரிந்து விடுங்கள்هُنَّஅவர்களைبِمَعْرُوْفٍநல்ல முறையில்وَّاَشْهِدُوْاஇன்னும் சாட்சியாக்குங்கள்ذَوَىْ عَدْلٍநீதமான இருவரைمِّنْكُمْஉங்களில்وَاَقِيْمُواஇன்னும் நிலை நிறுத்துங்கள்الشَّهَادَةَசாட்சியத்தைلِلّٰهِ‌ ؕஅல்லாஹ்விற்காகذٰ لِكُمْஇவைيُوْعَظُஉபதேசிக்கப் படுகின்றார்بِهٖஇவற்றின் மூலம்مَنْ كَانَ يُؤْمِنُஎவர்/நம்பிக்கை கொண்டிருப்பாரோبِاللّٰهِஅல்லாஹ்வையும்وَالْيَوْمِ الْاٰخِرِ‌ ۙமறுமை நாளையும்وَمَنْஎவர்يَّـتَّـقِஅஞ்சுவாரோاللّٰهَஅல்லாஹ்வைيَجْعَلْஏற்படுத்துவான்لَّهٗஅவருக்குمَخْرَجًا ۙ‏ஒரு தீர்வை
Fப இதா Bபலக்ன அஜலஹுன்ன Fப அம்ஸிகூஹுன்ன BபிமஃரூFபின் அவ் Fபாரிகூஹுன்ன BபிமஃரூFபி(ன்)வ் வ அஷ்ஹிதூ தவய் 'அத்லிம் மின்கும் வ அகீமுஷ் ஷஹாதத லில்லாஹ்; தாலிகும் யூ'அளு Bபிஹீ மன் கான யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; வ ம(ன்)ய் யத்தகில் லாஹ யஜ்'அல் லஹூ மக்ரஜா
ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
وَّیَرْزُقْهُ مِنْ حَیْثُ لَا یَحْتَسِبُ ؕ وَمَنْ یَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَیْءٍ قَدْرًا ۟
وَّيَرْزُقْهُஇன்னும் அவருக்கு உணவளிப்பான்مِنْ حَيْثُவிதத்தில் இருந்துلَا يَحْتَسِبُ‌ ؕஅவர் எண்ணாதوَمَنْ يَّتَوَكَّلْஎவர் நம்பிக்கை வைப்பாரோعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுفَهُوَஅவனேحَسْبُهٗ ؕஅவருக்குப் போதுமானவன்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்بَالِغُநிறைவேற்றுவான்اَمْرِهٖ‌ ؕதனது காரியத்தைقَدْதிட்டமாகجَعَلَஏற்படுத்தினான்اللّٰهُஅல்லாஹ்لِكُلِّ شَىْءٍஒவ்வொன்றுக்கும்قَدْرًا‏ஓர் அளவை
வ யர்Zஜுக்ஹு மின் ஹய்து லா யஹ்தஸிBப்; வ ம(ன்)ய் யதவக்கல் 'அலல் லாஹி Fபஹுவ ஹஸ்Bபுஹ்; இன்னல் லாஹ Bபாலிகு அம்ரிஹ்; கத் ஜ'அலல் லாஹு லிகுல்லி ஷய்'இன் கத்ரா
அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
وَا یَىِٕسْنَ مِنَ الْمَحِیْضِ مِنْ نِّسَآىِٕكُمْ اِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلٰثَةُ اَشْهُرٍ ۙ وَّا لَمْ یَحِضْنَ ؕ وَاُولَاتُ الْاَحْمَالِ اَجَلُهُنَّ اَنْ یَّضَعْنَ حَمْلَهُنَّ ؕ وَمَنْ یَّتَّقِ اللّٰهَ یَجْعَلْ لَّهٗ مِنْ اَمْرِهٖ یُسْرًا ۟
وَالّٰٓـىٴِْஎவர்கள்يَٮِٕسْنَநிராசை அடைந்து விட்டனரோمِنَ الْمَحِيْضِமாதவிடாயிலிருந்துمِنْ نِّسَآٮِٕكُمْஉங்கள் பெண்களில்اِنِ ارْتَبْتُمْநீங்கள் சந்தேகித்தால்فَعِدَّتُهُنَّஅவர்களின் இத்தாثَلٰثَةُமூன்றுاَشْهُرٍமாதங்களாகும்وَّالّٰٓـىٴِْஎவர்கள்لَمْ يَحِضْنَ‌ ؕஅவர்கள் மாதவிடாய் வரவில்லைوَاُولَاتُ الْاَحْمَالِகர்ப்பமுடைய பெண்கள்اَجَلُهُنَّஅவர்களின் தவணைاَنْ يَّضَعْنَஅவர்கள் பெற்றெடுப்பதாகும்حَمْلَهُنَّ ؕதங்கள் கர்ப்பத்தைوَمَنْஎவர்يَّـتَّـقِஅஞ்சுவாரோاللّٰهَஅல்லாஹ்வைيَجْعَلْஏற்படுத்துவான்لَّهٗஅவருக்குمِنْ اَمْرِهٖஅவரின் காரியத்தில்یُسْرًا‏இலகுவை
வல்லா'ஈ ய'இஸ்ன மினல் மஹீளி மின் னிஸா 'இகும் இனிர் தBப்தும் Fப'இத்ததுஹுன்ன தலாதது அஷ்ஹுரி(ன்)வ் வல்லா'ஈ லம் யஹிள்ன்; வ உலாதுல் அஹ்மாலி அஜலுஹுன்ன அ(ன்)ய் யளஃன ஹம்லஹுன்; வ ம(ன்)ய் யத்தகில் லாஹ யஜ்'அல் லஹூ மின் அம்ரிஹீ யுஸ்ரா
மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
ذٰلِكَ اَمْرُ اللّٰهِ اَنْزَلَهٗۤ اِلَیْكُمْ ؕ وَمَنْ یَّتَّقِ اللّٰهَ یُكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُعْظِمْ لَهٗۤ اَجْرًا ۟
ذٰ لِكَ اَمْرُஇது/கட்டளையாகும்اللّٰهِஅல்லாஹ்வின்اَنْزَلَهٗۤஇதை இறக்கி இருக்கின்றான்اِلَيْكُمْ‌ ؕஉங்களுக்குوَمَنْஎவர்يَّـتَّـقِஅஞ்சுவாரோاللّٰهَஅல்லாஹ்வைيُكَفِّرْஅவன் போக்குவான்عَنْهُஅவரை விட்டும்سَيِّاٰتِهٖஅவரின் பாவங்களைوَيُعْظِمْஇன்னும் பெரிதாக்குவான்لَهٗۤஅவருக்குاَجْرًا‏கூலியை
தாலிக அம்ருல் லாஹி அன்Zஜலஹூ இலய்கும்; வ ம(ன்)ய் யத்தகில் லாஹ யுகFப்Fபிர் 'அன்ஹு ஸய்யி ஆதிஹீ வ யுஃளிம் லஹூ அஜ்ரா
இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும் - இதை அவன் உங்களுக்கு இறக்கியருளினான். எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுகிறாரோ, அவரை அவருடைய பாவங்களை விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான்.
اَسْكِنُوْهُنَّ مِنْ حَیْثُ سَكَنْتُمْ مِّنْ وُّجْدِكُمْ وَلَا تُضَآرُّوْهُنَّ لِتُضَیِّقُوْا عَلَیْهِنَّ ؕ وَاِنْ كُنَّ اُولَاتِ حَمْلٍ فَاَنْفِقُوْا عَلَیْهِنَّ حَتّٰی یَضَعْنَ حَمْلَهُنَّ ۚ فَاِنْ اَرْضَعْنَ لَكُمْ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ ۚ وَاْتَمِرُوْا بَیْنَكُمْ بِمَعْرُوْفٍ ۚ وَاِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهٗۤ اُخْرٰی ۟ؕ
اَسْكِنُوْهُنَّஅவர்களை தங்க வையுங்கள்مِنْ حَيْثُ سَكَنْـتُمْநீங்கள் தங்கும் இடத்தில்مِّنْ وُّجْدِكُمْஉங்கள் வசதிக்கேற்பوَلَا تُضَآرُّوْதீங்கு செய்யாதீர்கள்هُنَّஅவர்களுக்குلِتُضَيِّقُوْاநீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காகعَلَيْهِنَّ‌ ؕஅவர்கள் மீதுوَاِنْ كُنَّஅவர்கள் இருந்தால்اُولَاتِ حَمْلٍகர்ப்பம் உள்ள பெண்களாகفَاَنْفِقُواசெலவு செய்யுங்கள்عَلَيْهِنَّஅவர்களுக்குحَتّٰىவரைيَضَعْنَஅவர்கள் பெற்றெடுக்கின்றحَمْلَهُنَّ‌ ۚதங்கள் கர்ப்பத்தைفَاِنْ اَرْضَعْنَஅவர்கள் பாலூட்டினால்لَـكُمْஉங்களுக்காகفَاٰ تُوْهُنَّஅவர்களுக்கு கொடுங்கள்اُجُوْرَهُنَّ‌ ۚஅவர்களின் ஊதியங்களைوَاْتَمِرُوْاஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்بَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்بِمَعْرُوْفٍ‌ۚநல்லதைوَاِنْ تَعَاسَرْتُمْநீங்கள் சிரமமாகக் கருதினால்فَسَتُرْضِعُபாலூட்டுவாள்لَهٗۤஅவருக்காகاُخْرٰى ؕ‏வேறு ஒரு பெண்
அஸ்கினூஹுன்ன மின் ஹய்து ஸகன்தும் மி(ன்)வ் வுஜ்திகும் வலா துளார்ரூஹுன்ன லிதுளய்யிகூ 'அலய்ஹின்ன்; வ இன் குன்ன உலாதி ஹம்லின் Fப அன்Fபிகூ 'அலய்ஹின்ன ஹத்தா யளஃன ஹம்லஹுன்ன்; Fபய்ன் அர்ளஃன லகும் Fப ஆதூ ஹுன்ன உஜூரஹுன்ன்; வ'தமிரூ Bபய்னகும் BபிமஃரூFபி(ன்)வ் வ இன் த'ஆஸர்தும் Fபஸதுர்ளி'உ லஹூ உக்ரா
உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.
لِیُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖ ؕ وَمَنْ قُدِرَ عَلَیْهِ رِزْقُهٗ فَلْیُنْفِقْ مِمَّاۤ اٰتٰىهُ اللّٰهُ ؕ لَا یُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا مَاۤ اٰتٰىهَا ؕ سَیَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ یُّسْرًا ۟۠
لِيُنْفِقْசெலவு செய்யட்டும்ذُوْ سَعَةٍவசதியுடையவர்مِّنْ سَعَتِهٖ‌ؕதனது வசதியிலிருந்துوَمَنْஎவர் ஒருவர்قُدِرَநெருக்கடியாக இருக்கின்றதோعَلَيْهِஅவர் மீதுرِزْقُهٗஅவருடைய வாழ்வாதாரம்فَلْيُنْفِقْஅவர்கள் செலவு செய்யட்டும்مِمَّاۤ اٰتٰٮهُதனக்கு கொடுத்ததில் இருந்துاللّٰهُ‌ؕஅல்லாஹ்لَا يُكَلِّفُசிரமம் கொடுக்க மாட்டான்اللّٰهُஅல்லாஹ்نَفْسًاஓர் ஆன்மாவிற்குاِلَّاதவிரمَاۤ اٰتٰٮهَا‌ؕஅவன் அதற்கு கொடுத்ததைسَيَجْعَلُஏற்படுத்துவான்اللّٰهُஅல்லாஹ்بَعْدَபின்னர்عُسْرٍசிரமத்திற்குيُّسْرًا‏இலகுவை
லியுன்Fபிக் தூ ஸ'அதிம் மின் ஸ'அதிஹ்; வ மன் குதிர 'அலய்ஹி ரிZஜ்குஹூ Fபல்யுன்Fபிக் மிம்மா ஆதாஹுல் லாஹ்; லா யுகல்லிFபுல் லாஹு னFப்ஸன் இல்லா மா ஆதாஹா; ஸ யஜ்'அலுல் லாஹு Bபஃத'உஸ்ரி(ன்)ய் யுஸ்ரா
தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும்; ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்.
وَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ عَتَتْ عَنْ اَمْرِ رَبِّهَا وَرُسُلِهٖ فَحَاسَبْنٰهَا حِسَابًا شَدِیْدًا ۙ وَّعَذَّبْنٰهَا عَذَابًا نُّكْرًا ۟
وَكَاَيِّنْஎத்தனையோمِّنْ قَرْيَةٍ عَتَتْஊர்கள்/மீறினعَنْ اَمْرِகட்டளையையும்رَبِّهَاதமது இறைவனின்وَرُسُلِهٖஇன்னும் தமது தூதரின்فَحَاسَبْنٰهَاநாம் அவற்றை விசாரித்தோம்حِسَابًاவிசாரணையால்شَدِيْدًاۙகடுமையானوَّعَذَّبْنٰهَاஇன்னும் அவற்றை வேதனை செய்தோம்عَذَابًا نُّكْرًا‏மோசமான தண்டனையால்
வ க அய்யிம் மின் கர்யதின் 'அதத் 'அன் அம்ரி ரBப்Bபிஹா வ ருஸுலிஹீ FபஹாஸBப்னாஹா ஹிஸாBபன் ஷதீத(ன்)வ் வ 'அத்தBப்னாஹா 'அதாBபன் னுக்ரா
எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்; ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம்.
فَذَاقَتْ وَبَالَ اَمْرِهَا وَكَانَ عَاقِبَةُ اَمْرِهَا خُسْرًا ۟
فَذَاقَتْஅவை சுவைத்தனوَبَالَகெட்ட முடிவைاَمْرِهَاதமது காரியத்தின்وَكَانَஇன்னும் ஆகிவிட்டதுعَاقِبَةُமுடிவுاَمْرِهَاஅவற்றின் காரியத்தின்خُسْرًا‏மிக நஷ்டமாகவே
Fபதாகத் வBப்Bபல அம்ரிஹா வ கான 'ஆகிBபது அம்ரிஹா குஸ்ரா
இவ்வாறு அவை தம் செயலுக்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டன; அன்றியும், அவர்களுடைய செயல்களின் முடிவும் நஷ்டமாகவே ஆயிற்று.
اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِیْدًا ۙ فَاتَّقُوا اللّٰهَ یٰۤاُولِی الْاَلْبَابِ الَّذِیْنَ اٰمَنُوْا ۛ۫ؕ قَدْ اَنْزَلَ اللّٰهُ اِلَیْكُمْ ذِكْرًا ۟ۙ
اَعَدَّதயார் செய்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْஅவர்களுக்குعَذَابًاதண்டனையைشَدِيْدًا‌ ۙகடுமையானفَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைيٰۤاُولِى الْاَ لْبَابِ ۖۚ ۛஅறிவுடையவர்களே!الَّذِيْنَ اٰمَنُوْا ۛؕநம்பிக்கை கொண்டவர்கள்قَدْதிட்டமாகاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்اِلَيْكُمْஉங்களுக்குذِكْرًا ۙ‏நல்லுபதேசத்தை
அ'அத்தல் லாஹு லஹும் 'அதாBபன் ஷதீதன் Fபத்தகுல் லாஹ யா உலில் அல்BபாBப், அல்லதீன ஆம்மனூ; கத் அன்Zஜலல் லாஹு இலய்கும் திக்ரா
அல்லாஹ் (அவர்களுக்குக்) கடினமான வேதனையை (மறுமையில்) சித்தம் செய்திருக்கின்றான்; ஆகவே, ஈமான் கொண்டுள்ள அறிவுடையோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவுறுத்தும் இவ்வுபதேசத்தை இறக்கி வைத்திருக்கின்றான்.
رَّسُوْلًا یَّتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِ اللّٰهِ مُبَیِّنٰتٍ لِّیُخْرِجَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا ۟
رَّسُوْلًاஒரு தூதரைيَّتْلُوْاஓதிக் காண்பிக்கிறார்عَلَيْكُمْஉங்களுக்குاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்مُبَيِّنٰتٍதெளிவான(வை)لِّيُخْرِجَவெளியேற்றுவதற்காகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைمِنَ الظُّلُمٰتِஇருள்களிலிருந்துاِلَى النُّوْرِ‌ؕஒளியின் பக்கம்وَمَنْஎவர்(கள்)يُّؤْمِنْۢநம்பிக்கை கொண்டார்(கள்)بِاللّٰهِஅல்லாஹ்வைوَيَعْمَلْஇன்னும் செய்வார்(கள்)صَالِحًـاநன்மையைيُّدْخِلْهُஅவர்களை பிரவேசிக்கவைப்பான்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமாகத் தங்குவார்கள்فِيْهَاۤஅவற்றில்اَبَدًا‌ؕஎப்போதும்قَدْதிட்டமாகاَحْسَنَஅழகாக வைத்திருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்لَهٗஅவர்களுக்குرِزْقًا‏வாழ்வாதாரத்தை
ரஸூல(ன்)ய் யத்லூ 'அலய்கும் ஆயாதில் லாஹி முBபய்யினாதில் லியுக்ரிஜல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மினள் ளுலுமாதி இலன் னூர்; வ ம(ன்)ய் யு'மின் Bபில்லாஹி வ யஃமல் ஸாலிஹ(ன்)ய் யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா கத் அஹ்ஸனல் லாஹு லஹூ ரிZஜ்கா
அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக; மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்.
اَللّٰهُ الَّذِیْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ ؕ یَتَنَزَّلُ الْاَمْرُ بَیْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۙ۬ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَیْءٍ عِلْمًا ۟۠
اَللّٰهُ الَّذِىْஅல்லாஹ்தான்خَلَقَபடைத்தான்سَبْعَ سَمٰوٰتٍஏழு வானங்களையும்وَّمِنَ الْاَرْضِஇன்னும் பூமியில்مِثْلَهُنَّ ؕஅவைப் போன்றதையும்يَتَنَزَّلُஇறங்குகின்றனالْاَمْرُகட்டளைகள்بَيْنَهُنَّஅவற்றுக்கு மத்தியில்لِتَعْلَمُوْۤاநீங்கள் அறிவதற்காகاَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்கள் மீதும்قَدِيْرٌ ۙபேராற்றலுடையவன்وَّاَنَّ اللّٰهَஇன்னும் நிச்சயமாக அல்லாஹ்قَدْதிட்டமாகاَحَاطَசூழ்ந்துள்ளான்بِكُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்களையும்عِلْمًا‏அறிவால்
அல்லாஹுல் லதீ கலக ஸBப்'அ ஸமாவாதி(ன்)வ் வ மினல் அர்ளி மித்லஹுன்ன யதனZஜ்Zஜலுல் அம்ரு Bபய்னஹுன்ன லிதஃலமூ அன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீரு(ன்)வ் வ அன்னல் லாஹ கத் அஹாத Bபிகுல்லி ஷய்'இன் 'இல்மா
அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது.