75. ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)

மக்கீ, வசனங்கள்: 40

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
لَاۤ اُقْسِمُ بِیَوْمِ الْقِیٰمَةِ ۟ۙ
لَاۤ اُقْسِمُசத்தியம் செய்கிறேன்!بِيَوْمِநாளின் மீதுالْقِيٰمَةِۙ‏மறுமை
லா உக்ஸிமு Bபி யவ்மில் கியாமஹ்
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ ۟ؕ
وَلَاۤ اُقْسِمُஇன்னும் சத்தியம் செய்கிறேன் !بِالنَّفْسِஆன்மாவின் மீதுاللَّوَّامَةِؕ‏பழிக்கின்ற
வ லா உக்ஸிமு Bபின் னFப்ஸில் லவ்வாமஹ்
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ ۟ؕ
اَيَحْسَبُஎண்ணுகின்றானாالْاِنْسَانُமனிதன்اَلَّنْ نَّجْمَعَஅறவே ஒன்று சேர்க்க மாட்டோம் என்றுعِظَامَهٗؕ‏அவனுடைய எலும்புகளை
அயஹ்ஸBபுல் இன்ஸானு அல் லன் னஜ்ம்'அ 'இளாமஹ்
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
بَلٰى قٰدِرِیْنَ عَلٰۤی اَنْ نُّسَوِّیَ بَنَانَهٗ ۟
بَلٰىஏன் முடியாது!قٰدِرِيْنَஆற்றலுடையவர்கள்عَلٰٓى اَنْ نُّسَوِّىَநாம் சரியாக அமைப்பதற்குبَنَانَهٗ‏அவனுடைய விரல் நுனிகளை
Bபலா காதிரீன 'அலா அன் னுஸவ்விய Bபனானஹ்
அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
بَلْ یُرِیْدُ الْاِنْسَانُ لِیَفْجُرَ اَمَامَهٗ ۟ۚ
بَلْமாறாகيُرِيْدُநாடுகின்றான்الْاِنْسَانُமனிதன்لِيَفْجُرَபாவம் செய்வதற்கேاَمَامَهٗ‌ۚ‏தனது வருங்காலத்திலும்
Bபல் யுரீதுல் இன்ஸானு லியFப்ஜுர அமாமஹ்
எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
یَسْـَٔلُ اَیَّانَ یَوْمُ الْقِیٰمَةِ ۟ؕ
يَسْأَلُகேட்கிறான்اَيَّانَஎப்போது வரும்يَوْمُ الْقِيٰمَةِؕ‏மறுமை நாள்
யஸ்'அலு அய்ய்யான யவ்முல் கியாமஹ்
“கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ ۟ۙ
وَجُمِعَஇன்னும் ஒன்று சேர்க்கப்பட்டால்الشَّمْسُசூரியனும்وَالْقَمَرُۙ‏சந்திரனும்
வ ஜுமி'அஷ் ஷம்ஸு வல் கமர்
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
یَقُوْلُ الْاِنْسَانُ یَوْمَىِٕذٍ اَیْنَ الْمَفَرُّ ۟ۚ
يَقُوْلُகூறுவான்الْاِنْسَانُமனிதன்يَوْمَٮِٕذٍஅந்நாளில்اَيْنَஎங்கே?الْمَفَرُّ‌ ۚ‏தப்பிக்குமிடம்
யகூலுல் இன்ஸானு யவ் ம 'இதின் அய்னல் மFபர்ர்
அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
كَلَّا لَا وَزَرَ ۟ؕ
كَلَّاஅவ்வாறல்லلَا وَزَرَؕ‏தப்பித்து ஓட அறவே முடியாது
கல்லா லா வZஜர்
“இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ لْمُسْتَقَرُّ ۟ؕ
اِلٰى رَبِّكَஉமது இறைவன் பக்கம்தான்يَوْمَٮِٕذِஅந்நாளில்اۨلْمُسْتَقَرُّ ؕ‏இறுதியாக நிலையான தங்குமிடம்
இலா ரBப்Bபிக யவ்ம 'இதினில் முஸ்தகர்ர்
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
یُنَبَّؤُا الْاِنْسَانُ یَوْمَىِٕذٍۭ بِمَا قَدَّمَ وَاَخَّرَ ۟ؕ
يُنَبَّؤُاஅறிவிக்கப்படுவான்الْاِنْسَانُமனிதன்يَوْمَٮِٕذٍۢஅந்நாளில்بِمَا قَدَّمَதான் முந்தி செய்ததையும்وَاَخَّرَؕ‏பிந்தி செய்ததையும்
யுனBப்Bப 'உல் இன்ஸானு யவ்ம 'இதிம் Bபிமா கத்தம வ அக்கர்
அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
بَلِ الْاِنْسَانُ عَلٰی نَفْسِهٖ بَصِیْرَةٌ ۟ۙ
بَلِமாறாகالْاِنْسَانُமனிதன்عَلٰى نَفْسِهٖஅவனுக்கேبَصِيْرَةٌ ۙ‏சாட்சியாக இருப்பான்
Bபலில் இன்ஸானு 'அலா னFப்ஸிஹீ Bபஸீரஹ்
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.
وَّلَوْ اَلْقٰى مَعَاذِیْرَهٗ ۟ؕ
وَّلَوْ اَلْقٰىஅவன் கூறினாலும்مَعَاذِيْرَهٗؕ‏தனது காரணங்களை
வ லவ் அல்கா ம'ஆதீரஹ்
அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖ ۟ؕ
لَا تُحَرِّكْ بِهٖஅசைக்காதீர்/இதற்குلِسَانَكَஉமது நாவைلِتَعْجَلَநீர் அவசரமாக செய்வதற்காகبِهٖؕ‏இதை
லா துஹர்ரிக் Bபிஹீ லிஸா னக லிதஃஜல Bபிஹ்
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.
اِنَّ عَلَیْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ ۟ۚۖ
اِنَّநிச்சயமாகعَلَيْنَاநம்மீது கடமையாகும்جَمْعَهٗஅதை ஒன்று சேர்ப்பதும்وَقُرْاٰنَهٗۚ ۖ‏அதை ஓதவைப்பதும்
இன்ன 'அலய்னா ஜம்'அஹூ வ குர் ஆனஹ்
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ ۟ۚ
فَاِذَا قَرَاْنٰهُஇதை நாம் ஓதினால்فَاتَّبِعْநீர் பின்தொடர்வீராக!قُرْاٰنَهٗ‌ۚ‏அது ஓதப்படுவதை
Fப இதா கரானாஹு Fபத்தBபிஃ குர் ஆனஹ்
எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
ثُمَّ اِنَّ عَلَیْنَا بَیَانَهٗ ۟ؕ
ثُمَّபிறகுاِنَّநிச்சயமாகعَلَيْنَاநம்மீது கடமையாகும்بَيَانَهٗؕ‏அதை விவரிப்பது
தும்ம இன்ன 'அலய்னா Bபயானஹ்
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லبَلْமாறாகتُحِبُّوْنَநீங்கள் நேசிக்கிறீர்கள்الْعَاجِلَةَ ۙ‏உலக வாழ்க்கையை
கல்லா Bபல் துஹிBப்Bபூனல் 'ஆஜிலஹ்
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
وَتَذَرُوْنَவிட்டு விடுகிறீர்கள்الْاٰخِرَةَ ؕ‏மறுமையை
வ ததரூனல் ஆகிரஹ்
ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاضِرَةٌ ۟ۙ
وُجُوْهٌசில முகங்கள்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்نَّاضِرَةٌ ۙ‏செழிப்பாக இருக்கும்
வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதின் னாளிரஹ்
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۟ۚ
اِلٰى رَبِّهَاதமது இறைவனைنَاظِرَةٌ‌ ۚ‏பார்த்துக் கொண்டிருக்கும்
இலா ரBப்Bபிஹா னாளிரஹ்
தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍۭ بَاسِرَةٌ ۟ۙ
وَوُجُوْهٌஇன்னும் சில முகங்கள்يَّوْمَٮِٕذٍۢஅந்நாளில்بَاسِرَةٌ ۙ‏கருத்து காய்ந்துபோய் இருக்கும்
வ வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதிம் Bபாஸிரஹ்
ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
تَظُنُّ اَنْ یُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ۟ؕ
تَظُنُّஅறிந்துகொள்ளும்اَنْ يُّفْعَلَநிகழப்போகிறதுஎன்றுبِهَاஅதற்குفَاقِرَةٌ ؕ‏கடுமையான ஒரு பிரச்சனை
தளுன்னு அ(ன்)ய் யுFப்'அல Bபிஹா Fபாகிரஹ்
இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ۟ۙ
كَلَّاۤஅவ்வாறல்ல!اِذَا بَلَغَتِஉயிர் அடைந்தால்التَّرَاقِىَۙ‏தொண்டைக் குழியை
கல்லா இதா Bபலகதித் தராகீ
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-
وَقِیْلَ مَنْ ٚ رَاقٍ ۟ۙ
وَقِيْلَகேட்கப்பட்டால்مَنْ ٚ رَاقٍۙ‏யாரும்/ஒதிப்பார்ப்பவர்
வ கீல மன் ராக்
“மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.
وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُ ۟ۙ
وَّظَنَّஇன்னும் அறிந்து கொண்டால்اَنَّهُநிச்சயமாக இதுالْفِرَاقُۙ‏பிரிவுதான்
வ ளன்ன அன்னஹுல் Fபிராக்
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ۟ۙ
وَالْتَفَّتِபின்னிக்கொண்டால்السَّاقُகெண்டைக் கால்بِالسَّاقِۙ‏கெண்டைக் காலுடன்
வல்தFப்Fபதிஸ் ஸாகு Bபிஸ்ஸாக்
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ لْمَسَاقُ ۟ؕ۠
اِلٰى رَبِّكَஉமது இறைவனிடமேيَوْمَٮِٕذِஅந்நாளில்اۨلْمَسَاقُؕ‏ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம்
இலா ரBப்Bபிக யவ்ம'இதினில் மஸாக்
உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.  
فَلَا صَدَّقَ وَلَا صَلّٰى ۟ۙ
فَلَا صَدَّقَஉண்மைப்படுத்தவில்லைوَلَا صَلّٰىۙ‏தொழவும் இல்லை
Fபலா ஸத்தக வலா ஸல்லா
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.
وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّٰى ۟ۙ
وَلٰڪِنْஎனினும்كَذَّبَபொய்ப்பித்தான்وَتَوَلّٰىۙ‏இன்னும் விலகிச் சென்றான்
வ லாகின் கத்தBப வ தவல்லா
ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
ثُمَّ ذَهَبَ اِلٰۤی اَهْلِهٖ یَتَمَطّٰى ۟ؕ
ثُمَّபிறகுذَهَبَசென்றான்اِلٰٓى اَهْلِهٖதனது குடும்பத்தாரிடம்يَتَمَطّٰىؕ‏கர்வம் கொண்டவனாக
தும்ம தஹBப இலா அஹ்லிஹீ யதமத்தா
பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ۙ
اَوْلٰىகேடுதான்لَكَஉனக்குفَاَوْلٰىۙ‏இன்னும் கேடுதான்
அவ்லா லக Fப அவ்லா
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ؕ
ثُمَّபிறகு(ம்)اَوْلٰىகேடுதான்لَكَஉனக்குفَاَوْلٰىؕ‏இன்னும் கேடுதான்
தும்ம அவ்லா லக Fப அவ்லா
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَنْ یُّتْرَكَ سُدًی ۟ؕ
اَيَحْسَبُஎண்ணுகின்றானாالْاِنْسَانُமனிதன்اَنْ يُّتْرَكَவிட்டு விடப்படுவான் என்றுسُدًىؕ‏சும்மா
அயஹ்ஸBபுல் இன்ஸானு அய் யுத்ரக ஸுதா
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
اَلَمْ یَكُ نُطْفَةً مِّنْ مَّنِیٍّ یُّمْنٰى ۟ۙ
اَلَمْ يَكُஅவன் இருக்கவில்லையா?نُطْفَةًஒரு துளி விந்தாகمِّنْ مَّنِىٍّஇந்திரியத்தின்يُّمْنٰىۙ‏இந்திரியம் செலுத்தப்படுகின்றது
அலம் யகு னுத்Fபதம் மிம் மனிய்யி(ன்)ய் யும்னா
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰى ۟ۙ
ثُمَّபிறகுكَانَஇருந்தான்عَلَقَةًகருவாகفَخَلَقَஆக, அவன் படைத்தான்فَسَوّٰىۙ‏இன்னும் செம்மையாக ஆக்கினான்
தும்ம கான 'அலகதன் Fபகலக Fபஸவ்வா
பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ ۟ؕ
فَجَعَلَஇன்னும் ஆக்கினான்مِنْهُஅதிலிருந்துالزَّوْجَيْنِஜோடிகளைالذَّكَرَஆண்وَالْاُنْثٰىؕ‏இன்னும் பெண்
Fபஜ'அல மின்ஹுZஜ் Zஜவ்ஜய்னித் தகர வல் உன்தா
பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
اَلَیْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰى ۟۠
اَلَيْسَஇல்லையா?ذٰلِكَஇவன்بِقٰدِرٍஆற்றல் உள்ளவனாகعَلٰٓى اَنْ يُّحْـىَِۧஉயிர்ப்பிப்பதற்குالْمَوْتٰىஇறந்தவர்களை
அலய்ஸ தாலிக Bபிகாதிரின் 'அலா அ(ன்)ய் யுஹ்யியல் மவ்தா
(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?