15. ஸூரத்துல் ஹிஜ்ர் (மலைப்பாறை)

மக்கீ, வசனங்கள்: 99

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
الٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ وَقُرْاٰنٍ مُّبِیْنٍ ۟
الٓرٰ ۫அலிஃப், லாம், றாتِلْكَஇவைاٰیٰتُவசனங்கள்الْكِتٰبِவேதத்தின்وَ قُرْاٰنٍமேலும் குர்ஆனின்مُّبِیْنٍதெளிவான
அலிFப்-லாம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBபி வ குர்ஆ-னிம் முBபீன்
அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடையவும் தெளிவான திருக்குர்ஆனுடையவுமான வசனங்களாகவும்.
رُبَمَا یَوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِیْنَ ۟
رُبَمَاபலமுறைیَوَدُّவிரும்புவார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَوْஎன்றுكَانُوْاஇருந்திருக்கலாமேمُسْلِمِیْنَமுஸ்லிம்களாக
ருBபமா யவத்துல் லதீன கFபரூ லவ் கானூ முஸ்லிமீன்
தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.
ذَرْهُمْ یَاْكُلُوْا وَیَتَمَتَّعُوْا وَیُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
ذَرْهُمْஅவர்களை விட்டுவிடுவீராகیَاْكُلُوْاஅவர்கள் உண்ணட்டும்وَ یَتَمَتَّعُوْاமேலும் அவர்கள் சுகமனுபவிக்கட்டும்وَ یُلْهِهِمُமேலும் அவர்களைப் பராக்காக்கட்டும்الْاَمَلُ(வீண்) ஆசைفَسَوْفَவிரைவில்یَعْلَمُوْنَஅவர்கள் அறிந்துகொள்வார்கள்
தர்ஹும் யாகுலூ வ யதமத்த'ஊ வ யுல்ஹிஹிமுல் அமலு Fபஸவ்Fப யஃலமூன்
(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَهْلَكْنَاநாம் அழித்தோம்مِنْஎந்த ஓர்قَرْیَةٍஊரையும்اِلَّاதவிரوَ لَهَاஅதற்குكِتَابٌஒரு விதிمَّعْلُوْمٌஅறியப்பட்ட
வ மா அஹ்லக்னா மின் கர்யதின் இல்லா வ லஹா கிதாBபும் மஃலூம்
எந்த ஊர்(வாசி)களையும் (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அவர்களுக்கெனக் குறிப்பிட்ட காலத்தவணையிலன்றி நாம் அழித்துவிடுவதுமில்லை.
مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا یَسْتَاْخِرُوْنَ ۟
مَاஇல்லைتَسْبِقُமுந்தும்مِنْஎந்தவொருاُمَّةٍசமுதாயமும்اَجَلَهَاஅதன் தவணையைوَ مَاமேலும் இல்லைیَسْتَاْخِرُوْنَஅவர்கள் பிந்துவார்கள்
மா தஸ்Bபிகு மின் உம்மதின் அஜலஹா வமா யஸ்தாகிரூன்
எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணைக்கு முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
وَقَالُوْا یٰۤاَیُّهَا الَّذِیْ نُزِّلَ عَلَیْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌ ۟ؕ
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்یٰۤاَیُّهَاالَّذِیْஎவர்نُزِّلَஅருளப்பட்டதோعَلَیْهِஅவர் மீதுالذِّكْرُஇவ்வுபதேசம்اِنَّكَநிச்சயமாக நீர்لَمَجْنُوْنٌؕநிச்சயமாக ஒரு பைத்தியக்காரர்
வ காலூ யா அய்யுஹல் லதீ னுZஜ்Zஜில 'அலய்ஹித் திக்ரு இன்னக லமஜ்னூன்
(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.
لَوْ مَا تَاْتِیْنَا بِالْمَلٰٓىِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
لَوْஏன்مَاஇல்லைتَاْتِیْنَاஎங்களிடம் கொண்டு வருகிறீர்بِالْمَلٰٓىِٕكَةِவானவர்களைاِنْஎன்றால்كُنْتَநீர் இருந்தால்مِنَஒருவராகالصّٰدِقِیْنَஉண்மையாளர்களில்
லவ் மா தாதீனா Bபில் மலா'இகதி இன் குன்த மினஸ் ஸாதிகீன்
“நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்.)
مَا نُنَزِّلُ الْمَلٰٓىِٕكَةَ اِلَّا بِالْحَقِّ وَمَا كَانُوْۤا اِذًا مُّنْظَرِیْنَ ۟
مَاஇல்லைنُنَزِّلُநாம் இறக்குகிறோம்الْمَلٰٓىِٕكَةَவானவர்களைاِلَّاதவிரبِالْحَقِّஉண்மையைக் கொண்டுوَ مَاமேலும் இல்லைكَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اِذًاஅப்போதுمُّنْظَرِیْنَஅவகாசம் அளிக்கப்பட்டவர்கள்
மா னுனZஜ்Zஜிலுல் மலா'இ கத இல்லா Bபில்ஹக்கி வமா கானூ இதம் முன்ளரீன்
நாம் மலக்குகளை உண்மையான (தக்க காரணத்தோடு அல்லாமல் இறக்குவதில்லை; அப்(படி இறக்கப்படும்) போது அ(ந் நிராகரிப்ப)வர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.
اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்نَحْنُநாமேنَزَّلْنَاஇறக்கி வைத்தோம்الذِّكْرَஇந்த அறிவுரையைوَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَهٗஅதனைلَحٰفِظُوْنَநிச்சயமாகப் பாதுகாப்பவர்கள்
இன்னா னஹ்னு னZஜல்னத் திக்ர வ இன்னா லஹூ லஹா Fபிளூன்
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِیْ شِیَعِ الْاَوَّلِیْنَ ۟
وَ لَقَدْநிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مِنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னர்فِیْஇல்شِیَعِபிரிவுகள்الْاَوَّلِیْنَமுன்னோர்களின்
வ லகத் அர்ஸல்னா மின் கBப்லிக Fபீ ஷிய'இல் அவ்வலீன்
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.
وَمَا یَاْتِیْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைیَاْتِیْهِمْஅவர்களிடம் வரும்مِّنْஎந்த ஒருرَّسُوْلٍதூதரும்اِلَّاதவிரكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்بِهٖஅவரைப்یَسْتَهْزِءُوْنَபரிகசிப்பவர்களாக
வமா யாதீஹிம் மிர் ரஸூலின் இல்லா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை.
كَذٰلِكَ نَسْلُكُهٗ فِیْ قُلُوْبِ الْمُجْرِمِیْنَ ۟ۙ
كَذٰلِكَஇவ்வாறேنَسْلُكُهٗஅதனை நாம் புகுத்துகிறோம்فِیْஉள்ளேقُلُوْبِஇதயங்களில்الْمُجْرِمِیْنَۙகுற்றவாளிகளின்
கதாலிக னஸ்லுகுஹூ Fபீ குலூBபில் முஜ்ரிமீன்
இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி விடுகிறோம்.
لَا یُؤْمِنُوْنَ بِهٖ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِیْنَ ۟
لَاமாட்டார்கள்یُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்ளبِهٖஇதன் மீதுوَ قَدْமேலும் நிச்சயமாகخَلَتْசென்றுவிட்டதுسُنَّةُவழிமுறைالْاَوَّلِیْنَமுன்னோர்களின்
லா யு'மினூன Bபிஹீ வ கத் கலத் ஸுன்னதுல் அவ்வலீன்
அவர்கள் இ(வ் வேதத்)தின் மீது ஈமான் கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் இந்நடை முறையும் (இறுதியில் அவர்கள் அழிவும்) நிகழ்ந்தே வந்துள்ளன.
وَلَوْ فَتَحْنَا عَلَیْهِمْ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوْا فِیْهِ یَعْرُجُوْنَ ۟ۙ
وَ لَوْஇன்னும் ஒருவேளைفَتَحْنَاநாம் திறந்தாலும்عَلَیْهِمْஅவர்களுக்குبَابًاஒரு வாசலைمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்فَظَلُّوْاஅவர்கள் தொடர்ந்துفِیْهِஅதில்یَعْرُجُوْنَۙஏறிக்கொண்டிருந்தாலும்
வ லவ் Fபதஹ்னா 'அலய்ஹிம் BபாBபம் மினஸ் ஸமா'இ Fபளலூ Fபீஹி யஃருஜூன்
இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).
لَقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ ۟۠
لَقَالُوْۤاநிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்اِنَّمَاமட்டுமேسُكِّرَتْமயக்கப்பட்டுவிட்டனاَبْصَارُنَاஎங்கள் பார்வைகள்بَلْமாறாகنَحْنُநாங்கள்قَوْمٌஒரு சமூகம்مَّسْحُوْرُوْنَ۠சூனியம் செய்யப்பட்டவர்கள்
லகாலூ இன்னமா ஸுக்கிரத் அBப்ஸாருனா Bபல் னஹ்னு கவ்மும் மஸ்ஹூரூன்
“நம் பார்வைகளெல்லாம் மயக்கப்பட்டு விட்டன; இல்லை! நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகி விட்டோம்“ என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
وَلَقَدْ جَعَلْنَا فِی السَّمَآءِ بُرُوْجًا وَّزَیَّنّٰهَا لِلنّٰظِرِیْنَ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகجَعَلْنَاநாம் அமைத்தோம்فِیஇல்السَّمَآءِவானம்بُرُوْجًاநட்சத்திர மண்டலங்களைوَّ زَیَّنّٰهَاமேலும் அதனை அழகாக்கினோம்لِلنّٰظِرِیْنَۙபார்ப்பவர்களுக்கு
வ லகத் ஜ'அல்னா Fபிஸ்ஸமா'இ Bபுரூஜ(ன்)வ் வ Zஜய்யன்னாஹா லின்னாளிரீன்
வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَیْطٰنٍ رَّجِیْمٍ ۟ۙ
وَ حَفِظْنٰهَاமேலும் நாம் அதனைப் பாதுகாத்தோம்مِنْஇருந்துكُلِّஒவ்வொருشَیْطٰنٍஷைத்தான்رَّجِیْمٍۙவிரட்டப்பட்ட
வ ஹFபிள்னாஹா மின் குல்லி ஷய்தானிர் ரஜீம்
விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம்.
اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَتْبَعَهٗ شِهَابٌ مُّبِیْنٌ ۟
اِلَّاதவிரمَنِஎவர்اسْتَرَقَதிருட்டுத்தனமாகالسَّمْعَசெவிமடுக்கிறாரோفَاَتْبَعَهٗஅவரைப் பின்தொடரும்شِهَابٌநெருப்புப்பந்துمُّبِیْنٌதெளிவான
இல்லா மனிஸ் தரகஸ் ஸம்'அ Fப அத்Bப'அஹூ ஷிஹாBபும் முBபீன்
திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஷைத்தானைத்தவிர; (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அந்த ஷைத்தானை (விரட்டிப்) பின் பற்றும்.
وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَیْنَا فِیْهَا رَوَاسِیَ وَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ شَیْءٍ مَّوْزُوْنٍ ۟
وَ الْاَرْضَமேலும் பூமியைمَدَدْنٰهَاஅதனை நாம் விரித்தோம்وَ اَلْقَیْنَاமேலும் நாம் அமைத்தோம்فِیْهَاஅதில்رَوَاسِیَஉறுதியான மலைகளைوَ اَنْۢبَتْنَاமேலும் நாம் முளைக்கச் செய்தோம்فِیْهَاஅதில்مِنْஇருந்துكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்مَّوْزُوْنٍசீரான அளவில்
வல் அர்ள மதத்னாஹா வ அல்கய்னா Fபீஹா ரவாஸிய வ அம்Bபத்னா Fபீஹா மின் குல்லி ஷய்'இம் மவ்Zஜூன்
பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
وَجَعَلْنَا لَكُمْ فِیْهَا مَعَایِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرٰزِقِیْنَ ۟
وَ جَعَلْنَاமேலும் நாம் ஏற்படுத்தினோம்لَكُمْஉங்களுக்குفِیْهَاஅதில்مَعَایِشَவாழ்வாதாரங்களைوَ مَنْமேலும் எவரைلَّسْتُمْநீங்கள் இல்லையோلَهٗஅவருக்குبِرٰزِقِیْنَஉணவளிப்பவர்களாக
வ ஜ'அல்னா லகும் Fபீஹா ம'ஆயிஷ வ மல் லஸ்தும் லஹூ BபிராZஜிகீன்
நாம் அதில் உங்களுக்கும் நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம்.
وَاِنْ مِّنْ شَیْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآىِٕنُهٗ ؗ وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ ۟
وَ اِنْமேலும் இல்லைمِّنْஎந்தشَیْءٍஒரு பொருளும்اِلَّاதவிரعِنْدَنَاநம்மிடம்خَزَآىِٕنُهٗ ؗஅதன் கருவூலங்கள்وَ مَاமேலும் இல்லைنُنَزِّلُهٗۤஅதனை நாம் இறக்கியருள்வதுاِلَّاதவிரبِقَدَرٍஓர் அளவின்படிمَّعْلُوْمٍநிர்ணயிக்கப்பட்ட
வ இம் மின் ஷய்'இன் இல்லா 'இன்தனா கZஜா 'இனுஹூ வமா னுனZஜ்Zஜிலுஹூ இல்லா Bபிகதரிம் மஃலூம்
ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.
وَاَرْسَلْنَا الرِّیٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَیْنٰكُمُوْهُ ۚ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِیْنَ ۟
وَ اَرْسَلْنَاமேலும் நாம் அனுப்பினோம்الرِّیٰحَகாற்றுகளைلَوَاقِحَசூற்படுத்தக்கூடியவையாகفَاَنْزَلْنَاபின்னர் நாம் இறக்கினோம்مِنَஇருந்துالسَّمَآءِவானம்مَآءًநீரைفَاَسْقَیْنٰكُمُوْهُ ۚபின்னர் அதனை உங்களுக்குப் புகட்டினோம்وَ مَاۤமேலும் இல்லைاَنْتُمْநீங்கள்لَهٗஅதனைبِخٰزِنِیْنَசேகரித்து வைப்பவர்களாக
வ அர்ஸல்னர் ரியாஹ ல வாகிஹ Fப அன்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அன் Fப அஸ்கய் னாகுமூஹு வ மா அன்தும் லஹூ BபிகாZஜினீன்
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
وَاِنَّا لَنَحْنُ نُحْیٖ وَنُمِیْتُ وَنَحْنُ الْوٰرِثُوْنَ ۟
وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَنَحْنُநாமேنُحْیٖஉயிர் கொடுக்கிறோம்وَ نُمِیْتُமேலும் மரணிக்கச் செய்கிறோம்وَ نَحْنُமேலும் நாம்الْوٰرِثُوْنَவாரிசுகள்
வ இன்ன்னா ல னஹ்னு னுஹ்யீ வ னுமீது வ னஹ்னுல் வாரிதூன்
நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கிறோம், நாமே மரணிக்கவும் வைக்கின்றோம்; மேலும், எல்லாவற்றிற்கும் வாரிஸாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம்.
وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِیْنَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَاْخِرِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகعَلِمْنَاநாம் அறிவோம்الْمُسْتَقْدِمِیْنَமுந்திச் சென்றவர்களைمِنْكُمْஉங்களில்وَ لَقَدْமேலும் நிச்சயமாகعَلِمْنَاநாம் அறிவோம்الْمُسْتَاْخِرِیْنَபிந்தி வருபவர்களை
வ ல கத் 'அலிம்னல் முஸ்தக்திமீன மின்கும் வ லகத் 'அலிம்னல் முஸ்தாகிரீன்
உங்களில் முந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்.
وَاِنَّ رَبَّكَ هُوَ یَحْشُرُهُمْ ؕ اِنَّهٗ حَكِیْمٌ عَلِیْمٌ ۟۠
وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்هُوَஅவனேیَحْشُرُهُمْ ؕஅவர்களை ஒன்று திரட்டுவான்اِنَّهٗநிச்சயமாக அவன்حَكِیْمٌஞானமிக்கவன்عَلِیْمٌ۠முற்றறிந்தவன்
வ இன்ன ரBப்Bபக ஹுவ யஹ்ஷுருஹும்; இன்னஹூ ஹகீமுன் 'அலீம்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதி நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟ۚ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகخَلَقْنَاநாம் படைத்தோம்الْاِنْسَانَமனிதனைمِنْஇருந்துصَلْصَالٍகாய்ந்த களிமண்مِّنْஇருந்துحَمَاٍகருஞ்சேறுمَّسْنُوْنٍۚஉருமாற்றப்பட்ட
வ லகத் கலக்னல் இன்ஸான மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
وَالْجَآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ ۟
وَ الْجَآنَّஇன்னும் ஜின்களைخَلَقْنٰهُஅதனை நாம் படைத்தோம்مِنْஅதற்குقَبْلُமுன்னரேمِنْஇருந்துنَّارِநெருப்புالسَّمُوْمِகடும் வெப்பமுள்ள
வல்ஜான்ன கலக்னாஹு மின் கBப்லு மின் னாரிஸ் ஸமூம்
(அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ خَالِقٌۢ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟
وَ اِذْஇன்னும் (நினைவு கூர்வீராக)قَالَகூறியதைرَبُّكَஉமது இறைவன்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களிடம்اِنِّیْநிச்சயமாக நான்خَالِقٌۢபடைக்கப் போகிறேன்بَشَرًاஒரு மனிதனைمِّنْஇருந்துصَلْصَالٍகாய்ந்த களிமண்مِّنْஇருந்துحَمَاٍகருஞ்சேறுمَّسْنُوْنٍமாற்றமடைந்த
வ இத் கால ரBப்Bபுக லில்மலா' இகதி இன்னீ காலிகும் Bபஷரம் மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
(நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,
فَاِذَا سَوَّیْتُهٗ وَنَفَخْتُ فِیْهِ مِنْ رُّوْحِیْ فَقَعُوْا لَهٗ سٰجِدِیْنَ ۟
فَاِذَاஎனவே எப்போதுسَوَّیْتُهٗநான் அவனைச் செப்பனிட்டுوَ نَفَخْتُமேலும் நான் ஊதிفِیْهِஅவனுள்مِنْஇருந்துرُّوْحِیْஎனது உயிர்فَقَعُوْاஅப்போது விழுங்கள்لَهٗஅவனுக்குسٰجِدِیْنَசிரம் பணிந்தவர்களாக
Fப இதா ஸவ்வய்துஹூ வ னFபக்து Fபீஹி மிர் ரூஹீ Fபக'ஊ லஹூ ஸாஜிதீன்
அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
فَسَجَدَ الْمَلٰٓىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَ ۟ۙ
فَسَجَدَஎனவே சிரம் பணிந்தார்கள்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்كُلُّهُمْஅவர்கள் அனைவரும்اَجْمَعُوْنَۙஒட்டுமொத்தமாக
Fபஸஜதல் மலா'இகது குல்லுஹும் அஜ்ம'ஊன்
அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اَبٰۤی اَنْ یَّكُوْنَ مَعَ السّٰجِدِیْنَ ۟
اِلَّاۤதவிரاِبْلِیْسَ ؕஇப்லீஸைاَبٰۤیமறுத்தான்اَنْஎன்றுیَّكُوْنَஇருக்கمَعَஉடன்السّٰجِدِیْنَசிரம் பணிபவர்கள்
இல்லா இBப்லீஸ அBபா அய் யகூன ம'அஸ் ஸாஜிதீன்
இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
قَالَ یٰۤاِبْلِیْسُ مَا لَكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்یٰۤاِبْلِیْسُஇப்லீஸேمَاஎன்னلَكَஉனக்குاَلَّاஇல்லாமல்تَكُوْنَநீ இருக்கمَعَஉடன்السّٰجِدِیْنَசிரம் பணிபவர்கள்
கால யா இBப்லீஸு மா லக அல்லா தகூன ம'அஸ் ஸாஜிதீன்
“இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான்.
قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ ۟
قَالَஅவன் கூறினான்لَمْஇல்லைاَكُنْநான்لِّاَسْجُدَசிரம் பணிவதற்குلِبَشَرٍஒரு மனிதனுக்குخَلَقْتَهٗநீ அவனைப் படைத்தாய்مِنْஇருந்துصَلْصَالٍகாய்ந்த களிமண்مِّنْஇருந்துحَمَاٍகருப்புச் சேறுمَّسْنُوْنٍஉருமாற்றப்பட்ட
கால லம் அகுல் லி அஸ்ஜுத லிBபஷரின் கலக்தஹூ மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான்.
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِیْمٌ ۟ۙ
قَالَஅவன் கூறினான்فَاخْرُجْஎனவே வெளியேறுمِنْهَاஅதிலிருந்துفَاِنَّكَநிச்சயமாக நீرَجِیْمٌۙவிரட்டப்பட்டவன்
கால Fபக்ருஜ் மின்ஹா Fப இன்னக ரஜீம்
“அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு; நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்.”
وَّاِنَّ عَلَیْكَ اللَّعْنَةَ اِلٰی یَوْمِ الدِّیْنِ ۟
وَّ اِنَّமேலும் நிச்சயமாகعَلَیْكَஉன் மீதுاللَّعْنَةَசாபம்اِلٰیவரைیَوْمِநாள்الدِّیْنِதீர்ப்பு
வ இன்ன 'அலய்கல் லஃனத இலா யவ்மித் தீன்
“மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!” என்று (இறைவனும்) கூறினான்.
قَالَ رَبِّ فَاَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்رَبِّஎன் இறைவனேفَاَنْظِرْنِیْۤஎனவே எனக்கு அவகாசம் அளிப்பாயாகاِلٰیவரைیَوْمِநாள்یُبْعَثُوْنَஅவர்கள் எழுப்பப்படுவார்கள்
கால ரBப்Bபி Fப அன்ளிர்னீ இலா யவ்மி யுBப்'அதூன்
“என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான்.
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்فَاِنَّكَஎனவே நிச்சயமாக நீمِنَஉள்ளவன்الْمُنْظَرِیْنَۙஅவகாசம் அளிக்கப்பட்டவர்களில்
கால Fப இன்னக மினல் முன்ளரீன்
“நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்;”
اِلٰی یَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ ۟
اِلٰیவரைیَوْمِநாள்الْوَقْتِநேரம்الْمَعْلُوْمِஅறியப்பட்ட
இலா யவ்மில் வக்தில் மஃலூம்
“குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்” என்று அல்லாஹ் கூறினான்.
قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَیْتَنِیْ لَاُزَیِّنَنَّ لَهُمْ فِی الْاَرْضِ وَلَاُغْوِیَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்رَبِّஎன் இறைவனேبِمَاۤஎதனால்اَغْوَیْتَنِیْநீ என்னை வழிகெடுத்தாயோلَاُزَیِّنَنَّநிச்சயமாக நான் அழகாகக் காட்டுவேன்لَهُمْஅவர்களுக்குفِیஇல்الْاَرْضِபூமிوَ لَاُغْوِیَنَّهُمْமேலும் நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன்اَجْمَعِیْنَۙஅனைவரையும்
கால ரBப்Bபி Bபிமா அக்வய்தனீ ல உZஜய்யின் அன்ன லஹும் Fபில் அர்ளி வ ல உக்வியன் னஹும் அஜ்ம'ஈன்
(அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَكَஉமது அடியார்களைمِنْهُمُஅவர்களில்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்களை
இல்லா 'இBபாதக மின்ஹுமுல் முக்லஸீன்
“அவர்களில் அந்தரங்க - சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான்.
قَالَ هٰذَا صِرَاطٌ عَلَیَّ مُسْتَقِیْمٌ ۟
قَالَகூறினான்هٰذَاஇதுصِرَاطٌவழிعَلَیَّஎன்னிடம்مُسْتَقِیْمٌநேரான
கால ஹாத ஸிராதுன் 'அலய்ய முஸ்தகீம்
(அதற்கு இறைவன் “அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.
اِنَّ عِبَادِیْ لَیْسَ لَكَ عَلَیْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغٰوِیْنَ ۟
اِنَّநிச்சயமாகعِبَادِیْஎனது அடியார்கள்لَیْسَஇல்லைلَكَஉனக்குعَلَیْهِمْஅவர்கள் மீதுسُلْطٰنٌஅதிகாரம்اِلَّاதவிரمَنِஎவர்اتَّبَعَكَஉன்னைப் பின்பற்றினாரோمِنَஉள்ளالْغٰوِیْنَவழிகெட்டவர்கள்
இன்ன 'இBபாதீ லய்ஸ லக 'அலய்ஹிம் ஸுல்தானுன் இல்லா மனித்தBப'அக மினல் காவீன்
“நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை - உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” என்று கூறினான்.
وَاِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِیْنَ ۟۫ۙ
وَ اِنَّமேலும் நிச்சயமாகجَهَنَّمَநரகம்لَمَوْعِدُهُمْஅவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடமாகும்اَجْمَعِیْنَ۫ۙஅவர்கள் அனைவருக்கும்
வ இன்ன ஜஹன்னம லமவ்'இதுஹும் அஜ்ம'ஈன்
நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
لَهَا سَبْعَةُ اَبْوَابٍ ؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ ۟۠
لَهَاஅதற்குسَبْعَةُஏழுاَبْوَابٍ ؕவாசல்கள்لِكُلِّஒவ்வொருبَابٍவாசலுக்கும்مِّنْهُمْஅவர்களில்جُزْءٌஒரு பிரிவுمَّقْسُوْمٌ۠பங்கிடப்பட்டுள்ளது
லஹா ஸBப்'அது அBப்வாBப்; லிகுல்லி BபாBபிம் மின்ஹும் ஜுZஜ்'உம் மக்ஸூம்
அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.  
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ؕ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்கள்فِیْஇல்جَنّٰتٍசுவனங்கள்وَّ عُیُوْنٍؕமற்றும் நீரூற்றுகள்
இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.
اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِیْنَ ۟
اُدْخُلُوْهَاஅதில் நுழையுங்கள்بِسَلٰمٍசாந்தியுடன்اٰمِنِیْنَஅச்சமற்றவர்களாக
உத்குலூஹா Bபிஸலாமின் ஆமினீன்
(அவர்களை நோக்கி) “சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்).
وَنَزَعْنَا مَا فِیْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیْنَ ۟
وَ نَزَعْنَاமேலும் நாம் அகற்றிவிடுவோம்مَاஎதைفِیْஉள்ளதோصُدُوْرِهِمْஅவர்களின் நெஞ்சங்களில்مِّنْஇருந்துغِلٍّகுரோதத்தைاِخْوَانًاசகோதரர்களாகعَلٰیமீதுسُرُرٍகட்டில்களின்مُّتَقٰبِلِیْنَஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக
வ னZஜஃனா ம Fபீ ஸுதூரிஹிம் மின் கில்லின் இக்வானன் 'அலா ஸுருரிம் முதகாBபிலீன்
மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
لَا یَمَسُّهُمْ فِیْهَا نَصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِیْنَ ۟
لَاஇல்லைیَمَسُّهُمْஅவர்களைத் தீண்டும்فِیْهَاஅதில்نَصَبٌசோர்வுوَّ مَاமேலும் இல்லைهُمْஅவர்கள்مِّنْهَاஅதிலிருந்துبِمُخْرَجِیْنَவெளியேற்றப்படுபவர்கள்
லா யமஸ் ஸுஹும் Fபீஹா னஸBபு(ன்)வ் வமா ஹும் மின்ஹா Bபிமுக்ரஜீன்
அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.
نَبِّئْ عِبَادِیْۤ اَنِّیْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟ۙ
نَبِّئْஅறிவிப்பீராகعِبَادِیْۤஎன் அடியார்களுக்குاَنِّیْۤநிச்சயமாக நான்اَنَاநானேالْغَفُوْرُமிக்க மன்னிப்பவன்الرَّحِیْمُۙநிகரற்ற அன்புடையவன்
னBப்Bபி' 'இBபாதீ அன்ன்னீ அனல் கFபூருர் ரஹீம்
(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக: “நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்.”
وَاَنَّ عَذَابِیْ هُوَ الْعَذَابُ الْاَلِیْمُ ۟
وَ اَنَّமேலும் நிச்சயமாகعَذَابِیْஎனது வேதனைهُوَஅதுவேالْعَذَابُவேதனைالْاَلِیْمُமிகத் துன்புறுத்தும்
வ அன்ன 'அதாBபீ ஹுவல் 'அதாBபுல் அலீம்
“(ஆயினும்) நிச்சயமாக என்னுடைய வேதனையும் நோவினைமிக்கதாகவே இருக்கும்” (என்றும் சொல்லும்).
وَنَبِّئْهُمْ عَنْ ضَیْفِ اِبْرٰهِیْمَ ۟ۘ
وَ نَبِّئْهُمْமேலும் அவர்களுக்குத் தெரிவிப்பீராகعَنْபற்றிضَیْفِவிருந்தினர்களைப்اِبْرٰهِیْمَۘஇப்ராஹீமுடைய
வ னBப்Bபி'ஹும் 'அன் ளய்Fபி இBப்ராஹீம்
இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
اِذْ دَخَلُوْا عَلَیْهِ فَقَالُوْا سَلٰمًا ؕ قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ ۟
اِذْபோதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தார்கள்عَلَیْهِஅவரிடம்فَقَالُوْاஅவர்கள் கூறினார்கள்سَلٰمًا ؕஸலாம்قَالَஅவர் கூறினார்اِنَّاநிச்சயமாக நாங்கள்مِنْكُمْஉங்களைக் கண்டுوَ جِلُوْنَஅச்சமடைகிறோம்
இத் தகலூ 'அலய்ஹி Fபகாலூ ஸலாமன் கால இன்னா மின்கும் வஜிலூன்
அவர்கள் அவரிடம் வந்து, “உங்களுக்குச் சாந்தி (ஸலாமுன்) உண்டாவதாக!” என்று சொன்ன போது அவர், “நாம் உங்களைப்பற்றி பயப்படுகிறோம்” என்று கூறினார்.
قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِیْمٍ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَاவேண்டாம்تَوْجَلْஅஞ்சاِنَّاநிச்சயமாக நாம்نُبَشِّرُكَஉமக்கு நற்செய்தி கூறுகிறோம்بِغُلٰمٍஒரு சிறுவனைப் பற்றிعَلِیْمٍமிக்க அறிவுடைய
காலூ ல தவ்ஜல் இன்னா னுBபஷ்ஷிருக Bபிகுலாமின் 'அலீம்
அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்” என்று கூறினார்கள்.
قَالَ اَبَشَّرْتُمُوْنِیْ عَلٰۤی اَنْ مَّسَّنِیَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்اَبَشَّرْتُمُوْنِیْஎனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா?عَلٰۤیநிலையிலும்اَنْஎன்றمَّسَّنِیَஎன்னைத் தீண்டிவிட்டதுالْكِبَرُமுதுமைفَبِمَஎனவே எதைக் கொண்டுتُبَشِّرُوْنَநற்செய்தி கூறுகிறீர்கள்?
கால அBபஷ்ஷர்துமூனீ 'அலா அம் மஸ்ஸனியல் கிBபரு FபBபிம துBபஷ்ஷிரூன்
அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.
قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்بَشَّرْنٰكَஉமக்கு நற்செய்தி கூறினோம்بِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுفَلَاஎனவே வேண்டாம்تَكُنْநீர் ஆகிவிடمِّنَஉள்ளவர்களில்الْقٰنِطِیْنَநம்பிக்கையிழந்தவர்கள்
காலூ Bபஷ்ஷர்னாக Bபில்ஹக்கி Fபலா தகும் மினல் கானிதீன்
அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!” என்று கூறினார்கள்.
قَالَ وَمَنْ یَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ ۟
قَالَஅவர் கூறினார்وَ مَنْமேலும் யார்یَّقْنَطُநம்பிக்கையிழப்பார்مِنْஇருந்துرَّحْمَةِஅருளில்رَبِّهٖۤதன் இறைவனின்اِلَّاதவிரالضَّآلُّوْنَவழிகெட்டவர்கள்
கால வ மய் யக்னது மிர் ரஹ்மதி ரBப்Bபிஹீ இல்லள் ளாலூன்
“வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்فَمَاஅப்படியானால் என்னخَطْبُكُمْஉங்கள் காரியம்اَیُّهَاالْمُرْسَلُوْنَதூதர்களே
கால Fபமா கத்Bபுகும் அய்யுஹல் முர்ஸலூன்
“(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியமென்ன?” என்று (இப்ராஹீம்) கேட்டார்.
قَالُوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمٍ مُّجْرِمِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اُرْسِلْنَاۤஅனுப்பப்பட்டுள்ளோம்اِلٰیநோக்கிقَوْمٍஒரு கூட்டத்தாரைمُّجْرِمِیْنَۙகுற்றவாளிகளான
காலூ இன்னா உர்ஸில்னா இலா கவ்மிம் முஜ்ரிமீன்
அதற்கவர்கள், “குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
اِلَّاۤதவிரاٰلَகுடும்பத்தாரைلُوْطٍ ؕலூத்தின்اِنَّاநிச்சயமாக நாம்لَمُنَجُّوْهُمْஅவர்களைக் காப்பாற்றுவோம்اَجْمَعِیْنَۙஅனைவரையும்
இல்லா ஆல லூத்; இன்னா லமுனஜ்ஜூஹும் அஜ்ம'ஈன்
“லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِیْنَ ۟۠
اِلَّاதவிரامْرَاَتَهٗஅவரது மனைவியைقَدَّرْنَاۤ ۙநாம் நிர்ணயித்துவிட்டோம்اِنَّهَاநிச்சயமாக அவள்لَمِنَநிச்சயமாகالْغٰبِرِیْنَ۠பின்தங்கியவர்களில்
இல்லம் ர அதஹூ கத்தர்னா இன்னஹா லமினல் காBபிரீன்
ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்” என்று (வானவர்கள்) கூறினார்கள்.  
فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ لْمُرْسَلُوْنَ ۟ۙ
فَلَمَّاஆகவே எப்போதுجَآءَவந்தார்களோاٰلَகுடும்பத்தாரிடம்لُوْطِலூத்துடையلْمُرْسَلُوْنَۙதூதர்கள்
Fபலம்ம ஜா'அ ஆல லூதினில் முர்ஸலூன்
(இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
قَالَ اِنَّكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
قَالَகூறினார்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்مُّنْكَرُوْنَஅறிமுகமில்லாதவர்கள்
கால இன்னகும் கவ்மும் முன்கரூன்
(அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (லூத்) சொன்னார்,
قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِیْهِ یَمْتَرُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்بَلْமாறாகجِئْنٰكَஉம்மிடம் நாங்கள் வந்திருக்கிறோம்بِمَاஎதனைக் கொண்டுكَانُوْاஅவர்கள்فِیْهِஅதில்یَمْتَرُوْنَசந்தேகித்துக் கொண்டிருந்தார்களோ
காலூ Bபல் ஜி'னாக Bபிமா கானூ Fபீஹி யம்தரூன்
(அதற்கு அவர்கள்,) “அல்ல, (உம் கூட்டதாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்;
وَاَتَیْنٰكَ بِالْحَقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
وَ اَتَیْنٰكَமேலும் நாம் உம்மிடம் வந்துள்ளோம்بِالْحَقِّசத்தியத்துடன்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَصٰدِقُوْنَஉண்மையாளர்களாகவே இருக்கின்றோம்
வ அதய்னாக Bபில்ஹக்கி வ இன்னா லஸாதிகூன்
(உறுதியாக நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّیْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا یَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَیْثُ تُؤْمَرُوْنَ ۟
فَاَسْرِஎனவே புறப்படுவீராகبِاَهْلِكَஉமது குடும்பத்தாருடன்بِقِطْعٍஒரு பகுதியில்مِّنَஇருந்துالَّیْلِஇரவின்وَ اتَّبِعْமேலும் பின்தொடர்வீராகاَدْبَارَهُمْஅவர்களின் பின்னால்وَ لَاமேலும் வேண்டாம்یَلْتَفِتْதிரும்பிப் பார்க்கمِنْكُمْஉங்களில்اَحَدٌஎவரும்وَّ امْضُوْاமேலும் செல்லுங்கள்حَیْثُஎங்குتُؤْمَرُوْنَநீங்கள் கட்டளையிடப்படுகிறீர்களோ
Fப அஸ்ரி Bபி அஹ்லிக Bபிகித்'இம் மினல் லய்லி வத்தBபிஃ அத்Bபாரஹும் வலா யல்தFபித் மின்கும் அஹது(ன்)வ் வம்ளூ ஹய்து து'மரூன்
ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
وَقَضَیْنَاۤ اِلَیْهِ ذٰلِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰۤؤُلَآءِ مَقْطُوْعٌ مُّصْبِحِیْنَ ۟
وَ قَضَیْنَاۤமேலும் நாம் அறிவித்தோம்اِلَیْهِஅவருக்குذٰلِكَஅந்தالْاَمْرَகாரியத்தைاَنَّநிச்சயமாகدَابِرَவேர்هٰۤؤُلَآءِஇவர்களுடையمَقْطُوْعٌஅறுக்கப்பட்டுவிடும்مُّصْبِحِیْنَஅதிகாலையில்
வ களய்னா இலய்ஹி தாலிகல் அம்ர அன்ன தாBபிர ஹா'உலா'இ மக்தூ'உம் முஸ்Bபிஹீன்
மேலும், “இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டு விடுவார்கள் (என்னும்) அக்காரியத்தையும் நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்”.
وَجَآءَ اَهْلُ الْمَدِیْنَةِ یَسْتَبْشِرُوْنَ ۟
وَ جَآءَமேலும் வந்தார்கள்اَهْلُமக்கள்الْمَدِیْنَةِநகரத்தின்یَسْتَبْشِرُوْنَமகிழ்ச்சியடைந்தவர்களாக
வ ஜா'அ அஹ்லுல் மதீனதி யஸ்தBப்ஷிரூன்
(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
قَالَ اِنَّ هٰۤؤُلَآءِ ضَیْفِیْ فَلَا تَفْضَحُوْنِ ۟ۙ
قَالَகூறினார்اِنَّநிச்சயமாகهٰۤؤُلَآءِஇவர்கள்ضَیْفِیْஎன் விருந்தினர்கள்فَلَاஆகவேتَفْضَحُوْنِۙஎன்னை அவமானப்படுத்தாதீர்கள்
கால இன்ன ஹா'உலா'இ ளய்Fபீ Fபலா தFப்ளஹூன்
(லூத் வந்தவர்களை நோக்கி:) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;”
وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ ۟
وَ اتَّقُواமேலும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ لَاமேலும் வேண்டாம்تُخْزُوْنِஎன்னை இழிவுபடுத்த
வத்தகுல் லாஹ வலா துக்Zஜூன்
“அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்” என்றும் கூறினார்.
قَالُوْۤا اَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعٰلَمِیْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَوَ لَمْநாங்கள் ... இல்லையா?نَنْهَكَஉம்மைத் தடுக்கعَنِவிட்டும்الْعٰلَمِیْنَஉலகத்தாரை
காலூ அவலம் னன்ஹக 'அனில் 'ஆலமீன்
அதற்கவர்கள், “உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.
قَالَ هٰۤؤُلَآءِ بَنٰتِیْۤ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟ؕ
قَالَஅவர் கூறினார்هٰۤؤُلَآءِஇவர்கள்بَنٰتِیْۤஎன் புதல்விகள்اِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்فٰعِلِیْنَؕசெய்பவர்களாக
கால ஹா'உலா'இ Bபனாதீ இன் குன்தும் Fபா'இலீன்
அதற்கவர், “இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்” என்று கூறினார்.
لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِیْ سَكْرَتِهِمْ یَعْمَهُوْنَ ۟
لَعَمْرُكَஉம் வாழ்நாளின் மீது சத்தியமாகاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَفِیْஉறுதியாகسَكْرَتِهِمْதங்கள் போதையில்یَعْمَهُوْنَதடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்
ல'அம்ருக இன்னஹும் லFபீ ஸக்ரதிஹிம் யஃமஹூன்
(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُشْرِقِیْنَ ۟ۙ
فَاَخَذَتْهُمُஆகவே அவர்களைப் பிடித்துக்கொண்டதுالصَّیْحَةُஅந்தப் பேரொலிمُشْرِقِیْنَۙசூரியன் உதிக்கும் வேளையில்
Fப அகதத் ஹுமுஸ் ஸய்ஹது முஷ்ரிகீன்
ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
فَجَعَلْنَا عَالِیَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّیْلٍ ۟ؕ
فَجَعَلْنَاஎனவே நாம் ஆக்கினோம்عَالِیَهَاஅதன் மேல் பகுதியைسَافِلَهَاஅதன் கீழ்ப்பகுதியாகوَ اَمْطَرْنَاமேலும் நாம் மழையாகப் பொழியச் செய்தோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுحِجَارَةًகற்களைمِّنْஆனسِجِّیْلٍؕசுடப்பட்ட களிமண்ணால்
Fபஜ'அல்னா 'ஆலியஹா ஸாFபிலஹா வ அம்தர்னா 'அலய்ஹிம் ஹிஜாரதம் மின் ஸிஜ்ஜீல்
பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّلْمُتَوَسِّمِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیٰتٍஅத்தாட்சிகள்لِّلْمُتَوَسِّمِیْنَகூர்ந்து கவனிப்பவர்களுக்கு
இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லில்முதவஸ்ஸிமீன்
நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَاِنَّهَا لَبِسَبِیْلٍ مُّقِیْمٍ ۟
وَ اِنَّهَاமேலும் நிச்சயமாக அதுلَبِسَبِیْلٍஒரு பாதையில்مُّقِیْمٍநிலைத்திருக்கிறது
வ இன்னஹா லBபி ஸBபீலிம் முகீம்
நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ
اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةًஓர் அத்தாட்சிلِّلْمُؤْمِنِیْنَؕநம்பிக்கையாளர்களுக்கு
இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லில்மு'மினீன்
திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது.
وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَیْكَةِ لَظٰلِمِیْنَ ۟ۙ
وَ اِنْநிச்சயமாகكَانَஇருந்தார்கள்اَصْحٰبُவாசிகள்الْاَیْكَةِஅய்க்காلَظٰلِمِیْنَۙஅநியாயக்காரர்களாக
வ இன் கான அஸ்ஹாBபுல் அய்கதி லளாலிமீன்
இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த (ஷுஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர்.
فَانْتَقَمْنَا مِنْهُمْ ۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِیْنٍ ۟ؕ۠
فَانْتَقَمْنَاஎனவே நாம் பழிவாங்கினோம்مِنْهُمْ ۘஅவர்களிடமிருந்துوَ اِنَّهُمَاமேலும் நிச்சயமாக அவ்விரு (ஊர்களும்)لَبِاِمَامٍஒரு பெருவழியில்مُّبِیْنٍؕ۠தெளிவான
Fபன்தகம்னா மின்ஹும் வ இன்னஹுமா லBபி இமாமிம் முBபீன்
எனவே அவர்களிடமும் நாம் பழிவாங்கினோம்; (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான (போக்குவரத்து) வழியில் தான் இருக்கின்றன.  
وَلَقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِیْنَ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகவேكَذَّبَபொய்ப்பித்தனர்اَصْحٰبُவாசிகள்الْحِجْرِஹிஜ்ர்الْمُرْسَلِیْنَۙதூதர்களை
வ லகத் கத்தBப அஸ்ஹாBபுல் ஹிஜ்ரில் முர்ஸலீன்
(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
وَاٰتَیْنٰهُمْ اٰیٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِیْنَ ۟ۙ
وَ اٰتَیْنٰهُمْமேலும் நாம் அவர்களுக்கு வழங்கினோம்اٰیٰتِنَاநம்முடைய அத்தாட்சிகளைفَكَانُوْاஆனால் அவர்கள் இருந்தார்கள்عَنْهَاஅவற்றைمُعْرِضِیْنَۙபுறக்கணிப்பவர்களாக
வ ஆதய்னாஹும் ஆயாதினா Fபகானூ 'அன்ஹா முஃரிளீன்
அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
وَكَانُوْا یَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُیُوْتًا اٰمِنِیْنَ ۟
وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்یَنْحِتُوْنَகுடைந்து கொண்டிருந்தார்கள்مِنَஇருந்துالْجِبَالِமலைகளில்بُیُوْتًاவீடுகளைاٰمِنِیْنَஅச்சமற்றவர்களாக
வ கானூ யன்ஹிதூன மினல் ஜிBபாலி Bபுயூதன் ஆமினீன்
அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.
فَاَخَذَتْهُمُ الصَّیْحَةُ مُصْبِحِیْنَ ۟ۙ
فَاَخَذَتْهُمُஅவர்களைப் பிடித்துக்கொண்டதுالصَّیْحَةُபேரொலிمُصْبِحِیْنَۙஅதிகாலையில்
Fப அகதத் ஹுமுஸ் ஸய்ஹது முஸ்Bபிஹீன்
ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது,
فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ؕ
فَمَاۤஆகவே இல்லைاَغْنٰیபயனளித்ததுعَنْهُمْஅவர்களுக்குمَّاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَكْسِبُوْنَؕசம்பாதித்துக் கொண்டிருந்தார்களோ
Fபமா அக்னா 'அன்ஹும் மா கானூ யக்ஸிBபூன்
அப்போது அவர்கள் (தம் பாதுகாப்புக்கென) அமைத்துக் கொண்டிருந்தவை எதுவும் அவர்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை.
وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ ؕ وَاِنَّ السَّاعَةَ لَاٰتِیَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِیْلَ ۟
وَ مَاமேலும் இல்லைخَلَقْنَاநாம் படைத்தோம்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَபூமியையும்وَ مَاஇன்னும் எவற்றைبَیْنَهُمَاۤஅவ்விரண்டிற்கும் இடையில்اِلَّاதவிரبِالْحَقِّ ؕசத்தியத்தைக் கொண்டேوَ اِنَّமேலும் நிச்சயமாகالسَّاعَةَஇறுதி வேளைلَاٰتِیَةٌநிச்சயமாக வரக்கூடியதேفَاصْفَحِஎனவே மன்னிப்பீராகالصَّفْحَமன்னிப்பைالْجَمِیْلَஅழகிய
வமா கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா இல்லா Bபில்ஹக்க்; வ இன்னஸ் ஸா'அத ல ஆதியதுன் Fபஸ்Fபஹிஸ் ஸFப்ஹல் ஜமீல்
நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது; ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப் புறக்கணித்துவிடும்.
اِنَّ رَبَّكَ هُوَ الْخَلّٰقُ الْعَلِیْمُ ۟
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்هُوَஅவனேالْخَلّٰقُபடைப்பவன்الْعَلِیْمُநன்கறிந்தவன்
இன்ன ரBப்Bபக ஹுவல் கல்லாகுல் 'அலீம்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
وَلَقَدْ اٰتَیْنٰكَ سَبْعًا مِّنَ الْمَثَانِیْ وَالْقُرْاٰنَ الْعَظِیْمَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنٰكَஉமக்கு நாம் வழங்கினோம்سَبْعًاஏழினைمِّنَஇருந்துالْمَثَانِیْதிரும்பத் திரும்ப ஓதப்படுபவற்றில்وَ الْقُرْاٰنَமேலும் குர்ஆனைالْعَظِیْمَமகத்தான
வ லகத் ஆதய்னாக ஸBப்'அம் மினல் மதானீ வல் குர்ஆனல் 'அளீம்
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.
لَا تَمُدَّنَّ عَیْنَیْكَ اِلٰی مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِیْنَ ۟
لَاவேண்டாம்تَمُدَّنَّநீர் செலுத்தعَیْنَیْكَஉமது இரு கண்களைاِلٰیநோக்கிمَاஎதைمَتَّعْنَاநாம் சுகமனுபவிக்கச் செய்தோமோبِهٖۤஅதைக் கொண்டுاَزْوَاجًاபல பிரிவினருக்குمِّنْهُمْஅவர்களில்وَ لَاமேலும் வேண்டாம்تَحْزَنْநீர் கவலைப்படعَلَیْهِمْஅவர்களுக்காகوَ اخْفِضْஇன்னும் தாழ்த்துவீராகجَنَاحَكَஉமது சிறகைلِلْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்கு
லா தமுத்தன்ன 'அய்னய்க இலா மா மத்தஃனா Bபிஹீ அZஜ்வாஜம் மின்ஹும் வலா தஹ்Zஜன் 'அலய்ஹிம் வக்Fபிள் ஜனாஹக லில்மு 'மினீன்
அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.
وَقُلْ اِنِّیْۤ اَنَا النَّذِیْرُ الْمُبِیْنُ ۟ۚ
وَ قُلْமேலும் கூறுவீராகاِنِّیْۤநிச்சயமாக நான்اَنَاநான்النَّذِیْرُஅச்சமூட்டி எச்சரிப்பவன்الْمُبِیْنُۚதெளிவானவன்
வ குல் இன்னீ அனன் னதீருல் முBபீன்
“பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்” என்று நீர் கூறுவீராக;
كَمَاۤ اَنْزَلْنَا عَلَی الْمُقْتَسِمِیْنَ ۟ۙ
كَمَاۤபோன்றுاَنْزَلْنَاநாம் இறக்கினோம்عَلَیமீதுالْمُقْتَسِمِیْنَۙபிரித்தவர்கள்
கமா அன்Zஜல்னா 'அலல் முக்தஸிமீன்
(நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,
الَّذِیْنَ جَعَلُوا الْقُرْاٰنَ عِضِیْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்جَعَلُواஆக்கினார்களோالْقُرْاٰنَகுர்ஆனைعِضِیْنَதுண்டு துண்டாக
அல்லதீன ஜ'அலுல் குர்'ஆன'இளீன்
இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).
فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
فَوَرَبِّكَஆகவே, உமது இறைவன் மீது சத்தியமாகلَنَسْـَٔلَنَّهُمْநிச்சயமாக நாம் அவர்களை விசாரிப்போம்اَجْمَعِیْنَۙஅனைவரையும்
Fபவ ரBப்Bபிக லனஸ்'அ லன்னஹும் அஜ்ம'ஈன்
உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.
عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
عَمَّاஎதைப் பற்றிكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
'அம்மா கானூ யஃமலூன்
அவர்கள் செய்து கொண்டிருந்த (எல்லாச்) செயல்களைப் பற்றியும், (நாம் விசாரிப்போம்).
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِیْنَ ۟
فَاصْدَعْஆகவே பகிரங்கப்படுத்துவீராகبِمَاஎதைக் கொண்டுتُؤْمَرُநீர் ஏவப்படுகிறீரோوَ اَعْرِضْமேலும் புறக்கணிப்பீராகعَنِவிட்டுالْمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களை
Fபஸ்தஃ Bபிமா து'மரு வ அஃரிள் அனில் முஷ்ரிகீன்
ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!
اِنَّا كَفَیْنٰكَ الْمُسْتَهْزِءِیْنَ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்كَفَیْنٰكَஉமக்குப் போதுமானவர்களாக இருக்கிறோம்الْمُسْتَهْزِءِیْنَۙபரிகசிப்பவர்களுக்கு
இன்னா கFபய்னாகல் முஸ்தஹ்Zஜி'ஈன்
உம்மை ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.
الَّذِیْنَ یَجْعَلُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ۚ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்یَجْعَلُوْنَஆக்குகிறார்களோمَعَஉடன்اللّٰهِஅல்லாஹ்اِلٰهًاஇறைவனைاٰخَرَ ۚவேறொருفَسَوْفَஆகவே விரைவில்یَعْلَمُوْنَஅறிந்து கொள்வார்கள்
அல்லதீன யஜ்'அலூன ம'அல் லாஹி இலாஹன் ஆகர்; Fபஸவ்Fப யஃலமூன்
இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்; (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்து கொள்வார்கள்.
وَلَقَدْ نَعْلَمُ اَنَّكَ یَضِیْقُ صَدْرُكَ بِمَا یَقُوْلُوْنَ ۟ۙ
وَ لَقَدْநிச்சயமாகவேنَعْلَمُநாம் அறிவோம்اَنَّكَநிச்சயமாக நீர்یَضِیْقُநெருக்கடி அடைகிறதுصَدْرُكَஉமது நெஞ்சம்بِمَاஅதனால்یَقُوْلُوْنَۙஅவர்கள் கூறுகிறார்கள்
வ லகத் னஃலமு அன்னக யளீகு ஸத்ருக Bபிமா யகூலூன்
(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்.
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِیْنَ ۟ۙ
فَسَبِّحْஆகவே துதிப்பீராகبِحَمْدِபுகழுடன்رَبِّكَஉமது இறைவனின்وَ كُنْமேலும் ஆவீராகمِّنَஉள்ளவர்களில்السّٰجِدِیْنَۙசிரம் பணிபவர்கள்
FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வ கும் மினஸ் ஸாஜிதீன்
நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!
وَاعْبُدْ رَبَّكَ حَتّٰی یَاْتِیَكَ الْیَقِیْنُ ۟۠
وَ اعْبُدْமேலும் வணங்குவீராகرَبَّكَஉமது இறைவனைحَتّٰیவரைیَاْتِیَكَஉமக்கு வரும்الْیَقِیْنُ۠உறுதி
வஃBபுத் ரBப்Bபக ஹத்தா யாதியகல் யகீன்
உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!