நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
வ ஜ'அல்னா மின் Bபய்னி அய்தீஹிம் ஸத்த(ன்)வ்-வ மின் கல்Fபிஹிம் ஸத்தன் Fப அக்ஷய் னாஹும் Fபஹும் லா யுBப்ஸிரூன்
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
وَسَوَآءٌசமம் தான்عَلَيْهِمْஅவர்கள் மீதுءَاَنْذَرْتَهُمْநீர் அவர்களை எச்சரித்தாலும்اَمْஅல்லதுلَمْ تُنْذِرْهُمْஅவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும்لَا يُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
வ ஸவா'உன் 'அலய்ஹிம் 'அ-அன்தர்தஹும் அம் லம் துன்திர்ஹும் லா யு'மினூன்
இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
اِنَّا نَحْنُநிச்சயமாக நாம்தான்نُحْىِஉயிர்ப்பிக்கின்றோம்الْمَوْتٰىஇறந்தவர்களைوَنَكْتُبُஇன்னும் பதிவு செய்வோம்مَا قَدَّمُوْاஅவர்கள் முன்னர் செய்தவற்றையும்وَاٰثَارَகாலடிச் சுவடுகளைهُمْؕؔஅவர்களின்وَكُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்اَحْصَيْنٰهُஅதைப் பதிவு செய்துள்ளோம்فِىْۤ اِمَامٍபதிவேட்டில்مُّبِيْنٍதெளிவான
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
وَاضْرِبْஎடுத்துச் சொல்வீராக!لَهُمْஅவர்களுக்குمَّثَلًاஉதாரணமாகاَصْحٰبَ الْقَرْيَةِ ۘஅந்த ஊர் வாசிகளைاِذْ جَآءَهَاஅவர்களிடம் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!الْمُرْسَلُوْنَۚதூதர்கள்
வள்ரிBப் லஹும் மதலன் அஸ்ஹாBபல் கர்யதிஹ்; இத் ஜா'அஹல் முர்ஸலூன்
(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.
இத் அர்ஸல்னா இலய்ஹிமுத்னய்னி Fபகத்தBபூஹுமா Fப'அZஜ்ZஜZஜ்னா Bபிதாலிதின் Fபகாலூ இன்னா இலய்கும் முர்ஸலூன்
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
வ ஜா'அ மின் அக்ஸல் மதீனதி ரஜுலு(ன்)ய் யஸ்'ஆ கால யா கவ்மித் தBபி'உல் முர்ஸலீன்
(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); “என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.
ءَاَ تَّخِذُநான் எடுத்துக் கொள்வேனா!مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاٰلِهَةً(வேறு) தெய்வங்களைاِنْ يُّرِدْنِஎனக்கு நாடினால்الرَّحْمٰنُபேரருளாளன்بِضُرٍّஒரு தீங்கைلَّا تُغْنِதடுக்காதுعَنِّىْஎன்னை விட்டும்شَفَاعَتُهُمْஅவற்றின் சிபாரிசுشَيْئًاஎதையும்وَّلَا يُنْقِذُوْنِۚஇன்னும் அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்
'அ-அத்தகிது மின் தூனிஹீ ஆலிஹதன் இ(ன்)ய்-யுரித்னிர் ரஹ்மானு Bபிளுர்ரில்-லா துக்னி 'அன்னீ ஷFபா 'அதுஹும் ஷய் 'அ(ன்)வ்-வ லா யுன்கிதூன்
“அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியாது.
قِيْلَகூறப்பட்டதுادْخُلِநீர் நுழைவீராக!الْجَـنَّةَ ؕசொர்க்கத்தில்قَالَஅவர் கூறினார்يٰلَيْتَ قَوْمِىْ يَعْلَمُوْنَۙஎன் மக்கள் (இதை) அறியவேண்டுமே!
கீலத் குலில் ஜன்னத கால யா லய்த கவ்மீ யஃலமூன்
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக” என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.”
தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை; அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்” என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
ஸுBப்ஹானல் லதீ கலகல் அZஜ்வாஜ குல்லஹா மிம்மா தும்Bபிதுல் அர்ளு வ மின் அன்Fபுஸிஹிம் வ மிம்மா லா யஃலமூன்
பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
வ இன் னஷா னுக்ரிக்ஹும் Fபலா ஸரீக லஹும் வலா ஹும் யுன்கதூன்
அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
“அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.
فَلَا يَسْتَطِيْعُوْنَஅவர்கள் சக்தி பெறமாட்டார்கள்تَوْصِيَةًமரண சாசனம் கூறுவதற்குوَّلَاۤ اِلٰٓى اَهْلِهِمْஇன்னும் தங்கள் குடும்பத்தாரிடம்يَرْجِعُوْنَதிரும்பி வர மாட்டார்கள்
Fபலா யஸ்ததீ'ஊன தவ் ஸியத(ன்)வ்-வ லா இலா அஹ்லிஹிம் யர்ஜி'ஊன்
அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
فَالْيَوْمَஇன்றைய தினம்لَا تُظْلَمُ نَفْسٌஅநீதி இழைக்கப்படாது/எந்த ஓர் ஆன்மாவும்شَيْئًاசிறிதளவும்وَّلَا تُجْزَوْنَகூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَநீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர
Fபல்-யவ்ம லா துள்லமு னFப்ஸுன் ஷய்'அ(ன்)வ்-வ லா துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
وَلَوْ نَشَآءُநாம் நாடியிருந்தால்لَمَسَخْنٰهُمْஅவர்களை உட்கார வைத்திருப்போம்عَلٰى مَكَانَتِهِمْஅவர்களின் இடத்திலேயேفَمَا اسْتَطَاعُوْاஆக, அவர்கள் ஆற்றல் பெறமாட்டார்கள்مُضِيًّاநடப்பதற்கு(ம்)وَّلَا يَرْجِعُوْنَதிரும்பி வரவும் மாட்டார்கள்
வ லவ் னஷா'உ லமஸக்னாஹும் 'அலா மகானதிஹிம் Fபமஸ்-ததா'ஊ முளிய்ய(ன்)வ்-வ லா யர்ஜி'ஊன்
அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
وَذَلَّـلْنٰهَاநாம் அவற்றை பணியவைத்தோம்لَهُمْஅவர்களுக்குفَمِنْهَاஅவற்றில்رَكُوْبُهُمْஅவர்களின் வாகனங்களும்وَمِنْهَاஇன்னும் அவற்றில் இருந்துيَاْكُلُوْنَஅவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள்
மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
لَا يَسْتَطِيْعُوْنَஅவர்கள் சக்தி பெறமாட்டார்கள்نَصْرَஉதவுவதற்குهُمْۙஅவர்களுக்குوَهُمْஇன்னும் அவர்கள்لَهُمْஅவர்கள் முன்جُنْدٌராணுவமாகمُّحْضَرُوْنَதயாராக இருக்கின்ற
லா யஸ்ததீ'ஊன னஸ்ரஹும் வ ஹும் லஹும் ஜுன்தும் முஹ்ளரூன்
ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
(நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
“முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
فَسُبْحٰنَஆக, அவன் மகா பரிசுத்தமானவன்الَّذِىْஎவன்بِيَدِهٖஅவனுடைய கரத்தில்مَلَـكُوْتُபேராட்சிكُلِّ شَىْءٍஎல்லாவற்றின்وَّاِلَيْهِஅவன் பக்கம்தான்تُرْجَعُوْنَநீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்