5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)

மதனீ, வசனங்கள்: 120

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَوْفُوْا بِالْعُقُوْدِ ؕ۬ اُحِلَّتْ لَكُمْ بَهِیْمَةُ الْاَنْعَامِ اِلَّا مَا یُتْلٰی عَلَیْكُمْ غَیْرَ مُحِلِّی الصَّیْدِ وَاَنْتُمْ حُرُمٌ ؕ اِنَّ اللّٰهَ یَحْكُمُ مَا یُرِیْدُ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاَوْفُوْاநிறைவேற்றுங்கள்بِالْعُقُوْدِ‌ ؕஉடன்படிக்கைகளைاُحِلَّتْஆகுமாக்கப்பட்டனلَـكُمْஉங்களுக்குبَهِيْمَةُ الْاَنْعَامِகால்நடைகள்اِلَّاதவிரمَاஎவைيُتْلٰىஓதிக்காட்டப்படுகிறதுعَلَيْكُمْஉங்கள் மீதுغَيْرَ مُحِلِّىஆகுமாக்காதீர்கள்الصَّيْدِவேட்டையாடுவதைوَاَنْـتُمْநீங்கள்حُرُمٌ‌ ؕஇஹ்ராமுடையவர்களாக இருக்கும் போதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَحْكُمُசட்டமாக்குகிறான்مَاஎதைيُرِيْدُ‏நாடுகிறான்
யா அய்யுஹல் லதீன ஆமனூ அவ்Fபூ Bபில்'உகூத்; உஹில்லத் லகும் Bபஹீமதுல் அன்'ஆமி இல்லா மா யுத்லா 'அலய்கும் கய்ர முஹில்லிஸ் ஸய்தி வ அன்தும் ஹுரும்; இன்னல் லாஹ யஹ்குமு மா யுரீத்
முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَآىِٕرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْیَ وَلَا الْقَلَآىِٕدَ وَلَاۤ آٰمِّیْنَ الْبَیْتَ الْحَرَامَ یَبْتَغُوْنَ فَضْلًا مِّنْ رَّبِّهِمْ وَرِضْوَانًا ؕ وَاِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوْا ؕ وَلَا یَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ اَنْ صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ اَنْ تَعْتَدُوْا ۘ وَتَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَالتَّقْوٰی ۪ وَلَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَالْعُدْوَانِ ۪ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تُحِلُّوْاஆகுமாக்காதீர்கள்شَعَآٮِٕرَஅடையாளங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَلَا الشَّهْرَஇன்னும் மாதத்தைالْحَـرَامَபுனிதமானதுوَلَا الْهَدْىَஇன்னும் குர்பானியைوَلَا الْقَلَٓاٮِٕدَஇன்னும் மாலையிடப்பட்ட குர்பானிகளைوَلَاۤ آٰمِّيْنَஇன்னும் நாடுபவர்களைالْبَيْتَ(கஅபா)ஆலயத்தைالْحَـرَامَபுனிதமானதுيَبْـتَغُوْنَதேடியவர்களாகفَضْلًاஅருளைمِّنْ رَّبِّهِمْதங்கள் இறைவனிடமிருந்துوَرِضْوَانًا ؕஇன்னும் பொருத்தத்தைوَاِذَا حَلَلْتُمْநீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால்فَاصْطَادُوْا‌ ؕவேட்டையாடுங்கள்وَلَا يَجْرِمَنَّكُمْஉங்களை தூண்ட வேண்டாம்شَنَاٰنُதுவேஷம்قَوْمٍசமுதாயத்தின்اَنْ صَدُّوஅவர்களை தடுத்த காரணத்தால்كُمْஉங்களைعَنِ الْمَسْجِدِமஸ்ஜிதை விட்டுالْحَـرَامِபுனிதமானதுاَنْ تَعْتَدُوْا‌ ۘநீங்கள் வரம்புமீறுவதுوَتَعَاوَنُوْاஒருவருக்கொருவர் உதவுங்கள்عَلَى الْبِرِّநன்மைக்குوَالتَّقْوٰى‌இன்னும் இறையச்சம்وَلَا تَعَاوَنُوْاஒருவருக்கொருவர் உதவாதீர்கள்عَلَى الْاِثْمِபாவத்திற்குوَالْعُدْوَانِ‌இன்னும் அநியாயம்وَاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِيْدُகடுமையானவன்الْعِقَابِ‏தண்டனை
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துஹில்லூ ஷ'ஆ 'இரல் லாஹி வ லஷ் ஷஹ்ரல் ஹராம வ லல் ஹத்ய வ லல் கலா'இத வலா ஆம்மீனல் Bபய்தல் ஹராம யBப்தகூன Fபள்லம் மிர் ரBப்Bபிஹிம் வ ரிள்வானா; வ இதா ஹலல்தும் Fபஸ்தாதூ; வலா யஜ்ரிமன்னகும் ஷன ஆனு கவ்மின் அன் ஸத்தூகும் 'அனில் மஸ்ஜிதில்-ஹராமி அன் தஃததூ; வ த'ஆவனூ 'அலல்Bபிர்ரி வத்தக்வா; வலா த'ஆவனூ 'அலல் இத்மி வல்'உத்வான்; வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
حُرِّمَتْ عَلَیْكُمُ الْمَیْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ لِغَیْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّیَةُ وَالنَّطِیْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّیْتُمْ ۫ وَمَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ ؕ ذٰلِكُمْ فِسْقٌ ؕ اَلْیَوْمَ یَىِٕسَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ دِیْنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ؕ اَلْیَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِیْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَیْكُمْ نِعْمَتِیْ وَرَضِیْتُ لَكُمُ الْاِسْلَامَ دِیْنًا ؕ فَمَنِ اضْطُرَّ فِیْ مَخْمَصَةٍ غَیْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
حُرِّمَتْவிலக்கப்பட்டனعَلَيْكُمُஉங்களுக்குالْمَيْتَةُசெத்ததுوَالدَّمُஇன்னும் இரத்தம்وَلَحْمُஇன்னும் இறைச்சிالْخِنْزِيْرِபன்றிوَمَاۤஇன்னும் எதுاُهِلَّபெயர் கூறப்பட்டதுلِغَيْرِஅல்லாதவற்றிற்காகاللّٰهِஅல்லாஹ்بِهٖஅதைوَالْمُنْخَنِقَةُஇன்னும் கழுத்து நெருக்கிச் செத்ததுوَالْمَوْقُوْذَةُஇன்னும் அடிப்பட்டுச் செத்ததுوَالْمُتَرَدِّيَةُஇன்னும் விழுந்து செத்ததுوَالنَّطِيْحَةُஇன்னும் கொம்பால் குத்தப்பட்டுச் செத்ததுوَمَاۤஇன்னும் எதைاَكَلَதின்றதுالسَّبُعُமிருகங்கள்اِلَّاதவிரمَاஎதைذَكَّيْتُمْஅறுத்தீர்கள்وَمَا ذُ بِحَஇன்னும் எது/அறுக்கப்பட்டதுعَلَىமீதுالنُّصُبِநடப்பட்டவை, சிலைகள்وَاَنْ تَسْتَقْسِمُوْاஇன்னும் பாகம் பிரித்துக் கொள்வதுبِالْاَزْلَامِ‌ ؕஅம்புகளைக்கொண்டுذٰ لِكُمْஇவைفِسْقٌ‌ ؕ اَلْيَوْمَபாவம்/இன்றுيَٮِٕسَநம்பிக்கை இழந்தனர்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْவிட்டுدِيْـنِكُمْஉங்கள் மார்க்கம்فَلَا تَخْشَوஆகவே பயப்படாதீர்கள்هُمْஅவர்களைوَاخْشَوْنِ‌ ؕஎன்னை பயப்படுங்கள்اَ لْيَوْمَஇன்றுاَكْمَلْتُமுழுமையாக்கினேன்لَـكُمْஉங்களுக்குدِيْنَكُمْஉங்கள் மார்க்கத்தைوَاَ تْمَمْتُஇன்னும் முழுமையாக்கினேன்عَلَيْكُمْஉங்கள் மீதுنِعْمَتِىْஎன் அருளைوَرَضِيْتُஇன்னும் திருப்தியடைந்தேன்لَـكُمُஉங்களுக்குالْاِسْلَامَஇஸ்லாமைدِيْنًا‌ ؕமார்க்கமாகفَمَنِஆகவே எவர்اضْطُرَّநிர்ப்பந்திக்கப்பட்டார்فِىْ مَخْمَصَةٍகடுமையான பசியில்غَيْرَ مُتَجَانِفٍசாயாதவராகلِّاِثْمٍ‌ۙபாவத்தின் பக்கம்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏‏மகா கருணையாளன்
ஹுர்ரிமத் 'அலய்குமுல் மய்தது வத்தமு வ லஹ்முல் கின்Zஜீரி வ மா உஹில்ல லிகிரில் லாஹி Bபிஹீ வல்முன் கனி கது வல் மவ்கூதது வல் முதரத் தியது வன்ன தீஹது வ மா அகலஸ் ஸBபு'உ இல்லா மா தக்கய்தும் வமா துBபிஹ 'அலன் னுஸுBபி வ அன் தஸ்தக்ஸிமூ Bபில் அZஜ்லாம்; தாலிகும் Fபிஸ்க்; அல்யவ்ம ய'இஸல் லதீன கFபரூ மின் தீனிகும் Fபலா தக்-ஷவ்ஹும் வக் ஷவ்ன்; அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து 'அலய்கும் னிஃமதீ வ ரளீது லகுமுல் இஸ்லாம தீனா; Fபமனிள்துர்ர Fபீ மக்மஸதின் கய்ர முதஜானிFபில் லி இத்மின் Fப இன்னல்லாஹ கFபூருர் ரஹீம்
 (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
یَسْـَٔلُوْنَكَ مَاذَاۤ اُحِلَّ لَهُمْ ؕ قُلْ اُحِلَّ لَكُمُ الطَّیِّبٰتُ ۙ وَمَا عَلَّمْتُمْ مِّنَ الْجَوَارِحِ مُكَلِّبِیْنَ تُعَلِّمُوْنَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللّٰهُ ؗ فَكُلُوْا مِمَّاۤ اَمْسَكْنَ عَلَیْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَیْهِ ۪ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
يَسْأَلُوْنَكَகேட்கின்றனர்/உம்மிடம்مَاذَاۤஎவைاُحِلَّஆகுமாக்கப்பட்டனلَهُمْ‌ؕஅவர்களுக்குقُلْகூறுவீராகاُحِلَّஆகுமாக்கப்பட்டனلَـكُمُஉங்களுக்குالطَّيِّبٰتُ‌ ۙநல்லவைوَمَاஇன்னும் எவைعَلَّمْتُمْகற்றுக் கொடுத்தீர்கள்مِّنَ الْجَـوَارِحِமிருகங்களில்مُكَلِّبِيْنَவேட்டையாட பயிற்சி அளியுங்கள்تُعَلِّمُوْنَهُنَّகற்று கொடுங்கள்/அவற்றுக்குمِمَّاஎவற்றிலிருந்துعَلَّمَكُمُகற்பித்தான்/உங்களுக்குاللّٰهُ‌அல்லாஹ்فَكُلُوْاஆகவே புசியுங்கள்مِمَّاۤஎவற்றிலிருந்துاَمْسَكْنَஅவை தடுத்தனعَلَيْكُمْஉங்களுக்காகوَاذْكُرُواஇன்னும் கூறுங்கள்اسْمَபெயரைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْهِ‌அவற்றின் மீதுوَاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَرِيْعُதீவிரமானவன்الْحِسَابِ‏கணக்கிடுவதில்
யஸ்'அலூனக மாதா உஹில்ல லஹும்; குல் உஹில்ல லகுமுத்தய்யிBபாது வ மா'அல்லம்தும் மினல் ஜவாரிஹி முகல்லிBபீன து'அல்லிமூனஹுன்னமிம்மா 'அல்லமகுமுல் லாஹு Fபகுலூ மிம்மா அம்ஸக்ன 'அலய்கும் வத்குருஸ் மல் லாஹி 'அலய்ஹ்; வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்; எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.
اَلْیَوْمَ اُحِلَّ لَكُمُ الطَّیِّبٰتُ ؕ وَطَعَامُ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ حِلٌّ لَّكُمْ ۪ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ؗ وَالْمُحْصَنٰتُ مِنَ الْمُؤْمِنٰتِ وَالْمُحْصَنٰتُ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ اِذَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ مُحْصِنِیْنَ غَیْرَ مُسٰفِحِیْنَ وَلَا مُتَّخِذِیْۤ اَخْدَانٍ ؕ وَمَنْ یَّكْفُرْ بِالْاِیْمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهٗ ؗ وَهُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ ۟۠
اَلْيَوْمَஇன்றுاُحِلَّஆகுமாக்கப்பட்டனلَـكُمُஉங்களுக்குالطَّيِّبٰتُ‌ ؕநல்லவைوَطَعَامُஇன்னும் உணவும்الَّذِيْنَஎவர்களின்اُوْتُوْاகொடுக்கப்பட்டார்கள்الْكِتٰبَவேதம்حِلٌّஆகுமானதுلَّـکُمْஉங்களுக்குوَطَعَامُكُمْஇன்னும் உங்கள் உணவுحِلٌّஆகுமானதுلَّهُمْ‌அவர்களுக்குوَالْمُحْصَنٰتُகற்புள்ள பெண்கள்مِنَஇருந்துالْمُؤْمِنٰتِஈமான் கொண்ட பெண்கள்وَالْمُحْصَنٰتُஇன்னும் கற்புள்ள பெண்கள்مِنَ الَّذِيْنَஎவர்களில்اُوْتُواகொடுக்கப்பட்டவர்கள்الْـكِتٰبَவேதம்مِنْ قَبْلِكُمْஉங்களுக்குமுன்னர்اِذَاۤ اٰتَيْتُمُوநீங்கள்கொடுத்தால்هُنَّஅவர்களுக்குاُجُوْرமணக்கொடைகளைهُنَّஅவர்களுடையمُحْصِنِيْنَகற்புள்ளவர்களாகغَيْرَஅன்றிمُسَافِحِيْنَவிபச்சாரர்களாகوَلَا مُتَّخِذِىْۤஇன்னும் ஆக்காதவர்களாகاَخْدَانٍ‌ؕஇரகசிய தோழிகளைوَمَنْஎவர்يَّكْفُرْமறுக்கிறார்بِالْاِيْمَانِநம்பிக்கை கொள்ளفَقَدْதிட்டமாகحَبِطَஅழிந்து விடும்عَمَلُهٗஅவருடைய செயல்وَهُوَஅவர்فِى الْاٰخِرَةِமறுமையில்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
அல்யவ்ம உஹில்ல லகுமுத் தய்யிBபாது வ த'ஆமுல் லதீன ஊதுல் கிதாBப ஹில்லுல் லகும் வ த'ஆமுகும் ஹில்லுல் லஹும் வல் முஹ்ஸனாது மினல் மு'மினாதி வல்முஹ்ஸனாது மினல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் இதா ஆதய்துமூஹுன்ன உஜூரஹுன்ன முஹ்ஸினீன கய்ர முஸாFபிஹீன வலா முத்தகிதீ அக்தான்; வ மய் யக்Fபுர் Bபில் ஈமானி Fபகத் ஹBபித 'அமலுஹூ வ ஹுவ Fபில் ஆகிரதி மினல் காஸிரீன்
இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَی الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَیْدِیَكُمْ اِلَی الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَی الْكَعْبَیْنِ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ مِّنْهُ ؕ مَا یُرِیْدُ اللّٰهُ لِیَجْعَلَ عَلَیْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰكِنْ یُّرِیْدُ لِیُطَهِّرَكُمْ وَلِیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِذَا قُمْتُمْநீங்கள் நின்றால்اِلَى الصَّلٰوةِதொழுகைக்குفَاغْسِلُوْاகழுகுங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைوَاَيْدِيَكُمْஇன்னும் கைகளை/உங்கள்اِلَىவரைالْمَرَافِقِமுழங்கைகள்وَامْسَحُوْاஇன்னும் தடவுங்கள்بِرُءُوْسِكُمْஉங்கள் தலைகளில்وَاَرْجُلَكُمْஇன்னும் உங்கள் கால்களைاِلَىவரைالْـكَعْبَيْنِ‌ ؕஇரு கணுக்கால்கள்وَاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்جُنُبًاமுழுக்காளிகளாகفَاطَّهَّرُوْا‌ ؕநன்கு சுத்தமாகுங்கள்وَاِنْ كُنْتُمْஇன்னும் நீங்கள் இருந்தால்مَّرْضَىٰۤநோயாளிகளாகاَوْஅல்லதுعَلٰى سَفَرٍபயணத்தில்اَوْஅல்லதுجَآءَவந்தார்اَحَدٌஒருவர்مِّنْكُمْஉங்களில்مِّنَஇருந்துالْغَآٮِٕطِமலஜல பாதைاَوْஅல்லதுلٰمَسْتُمُஉறவு கொண்டீர்கள்النِّسَآءَபெண்களுடன்فَلَمْ تَجِدُوْاபெறவில்லைمَآءًதண்ணீரைفَتَيَمَّمُوْاநாடுங்கள்صَعِيْدًاமண்ணைطَيِّبًاசுத்தமானதுفَامْسَحُوْاஇன்னும் தடவுங்கள்بِوُجُوْهِكُمْமுகங்களை/உங்கள்وَاَيْدِيْكُمْஇன்னும் கைகளை/உங்கள்مِّنْهُ‌ ؕஅதில்مَا يُرِيْدُநாடமாட்டான்اللّٰهُஅல்லாஹ்لِيَجْعَلَஆக்குவதற்குعَلَيْكُمْஉங்கள் மீதுمِّنْ حَرَجٍசிரமத்தைوَّلٰـكِنْஎனினும்يُّرِيْدُநாடுகிறான்لِيُطَهِّرَكُمْஉங்களைபரிசுத்தமாக்கوَ لِيُتِمَّஇன்னும் முழுமையாக்கنِعْمَتَهٗதன் அருளைعَلَيْكُمْஉங்கள் மீதுلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா கும்தும் இலஸ் ஸலாதி Fபக்ஸிலூ வுஜூஹகும் வ அய்தியகும் இலல் மராFபிகி வம்ஸஹூ Bபிரு'ஊஸிகும் வ அர்ஜுலகும் இலல் கஃBபய்ன்; வ இன் குன்தும் ஜுனுBபன் Fபத்தஹ்ஹரூ; வ இன் குன்தும் மர்ளா அவ்'அலா ஸFபரின் அவ் ஜா'அ அஹதும் மின்கும் மினல் கா'இதி அவ் லாமஸ்துமுன்னிஸா'அ Fபலம் தஜிதூ மா'அன் Fபதயம்மமூ ஸ'ஈதன் தய்யிBபன் Fபம்ஸஹூ Bபிவுஜூஹிகும் வ அய்தீகும் மின்ஹ்; ம யுரீதுல் லாஹு லியஜ்'அல 'அலய்கும் மின் ஹரஜி(ன்)வ் வலாகி(ன்)ய் யுரீது லியுதஹ்ஹிரகும் வ லியுதிம்ம னிஃமதஹூ 'அலய்கும் ல'அல்லகும் தஷ்குரூன்
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
وَاذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ وَمِیْثَاقَهُ الَّذِیْ وَاثَقَكُمْ بِهٖۤ ۙ اِذْ قُلْتُمْ سَمِعْنَا وَاَطَعْنَا ؗ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
وَاذْکُرُوْநினைவு கூறுங்கள்انِعْمَةَஅருளைاللهِஅல்லாஹ்வின்عَلَیْکُمْஉங்கள் மீதுوَمِیْثَاقَهُஇன்னும் அவனுடைய உறுதிமொழியைالَّذِیْ وَاثَقَکُمْஎது/உங்களிடம் உறுதி மொழி வாங்கினான்بِهۤ ۙஅதைاِذْபோதுقُلْتُمْகூறினீர்கள்سَمِعْنَاசெவிமடுத்தோம்وَاَطَعْنَاஇன்னும் கீழ்ப்படிந்தோம்وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللهَஅல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِஉள்ளவற்றைالصُّدُوْرِ‏நெஞ்சங்களில்
வத்குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் வ மீதாகஹுல் லதீ வாதககும் Bபிஹீ இத் குல்தும் ஸமிஃனா வ அதஃனா வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய பொழுது நீங்கள் அதை உறுதிப்படுத்தி, “நாங்கள் செவி மடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்” என்று நீங்கள் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) இருதயங்களிலுள்ள (இரகசியங்களை) யெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوّٰمِیْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ ؗ وَلَا یَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰۤی اَلَّا تَعْدِلُوْا ؕ اِعْدِلُوْا ۫ هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰی ؗ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேكُوْنُوْاஇருங்கள்قَوَّا امِيْنَநிலைநின்றவர்களாகلِلّٰهِஅல்லாஹ்வுக்காகشُهَدَآءَசாட்சி கூறுபவர்களாகبِالْقِسْطِ‌நீதிக்குوَلَا يَجْرِمَنَّكُمْஉங்களை தூண்ட வேண்டாம்شَنَاٰنُதுவேஷம்قَوْمٍஒரு சமுதாயத்தின்عَلٰٓىமீதுاَ لَّا تَعْدِلُوْا‌ ؕநீங்கள் நீதமாக நடக்காதிருக்கاِعْدِلُوْاநீதமாக இருங்கள்هُوَஅதுاَقْرَبُமிக நெருக்கமானதுلِلتَّقْوٰى‌இறையச்சத்திற்குوَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்خَبِيْرٌۢஆழ்ந்தறிந்தவன்بِمَاஎதைتَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமானூ கூனூ கவ்வா மீன லில்லாஹி ஷுஹதா'அ Bபில்கிஸ்த், வலா யஜ்ரிமன்னகும் ஷன ஆனு கவ்மின் 'அலா அல்லா தஃதிலூ; இஃதிலூ; ஹுவ அக்ரBபு லித்தக்வா வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ கBபீரும் Bபிமா தஃமலூன்
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِیْمٌ ۟
وَعَدَவாக்களித்தான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَஎவர்களுக்குاٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِ‌ ۙநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّاَجْرٌஇன்னும் கூலிعَظِيْمٌ‏மகத்தானது
வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் 'அளீம்
ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟
وَالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَكَذَّبُوْاஇன்னும் பொய்ப்பித்தார்கள்بِاٰيٰتِنَاۤநம் வசனங்களைاُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُவாசிகள்الْجَحِيْمِ‏நரக
வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுல் ஜஹீம்
எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ هَمَّ قَوْمٌ اَنْ یَّبْسُطُوْۤا اِلَیْكُمْ اَیْدِیَهُمْ فَكَفَّ اَیْدِیَهُمْ عَنْكُمْ ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟۠
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களேاذْكُرُوْاநினைவு கூறுங்கள்نِعْمَتَஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுاِذْபோதுهَمَّநாடினர்قَوْمٌஒரு சமுதாயம்اَنْ يَّبْسُطُوْۤاஅவர்கள் நீட்டுவதற்குاِلَيْكُمْஉங்கள் பக்கம்اَيْدِيَهُمْதங்கள் கரங்களைفَكَفَّதடுத்தான்اَيْدِيَهُمْஅவர்களுடைய கரங்களைعَنْكُمْ‌ۚஉங்களை விட்டுوَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைوَعَلَى اللّٰهِஅல்லாஹ் மீதுفَلْيَتَوَكَّلِநம்பிக்கை வைக்கட்டும்الْمُؤْمِنُوْنَ‏நம்பிக்கையாளர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனுத் குரூ னிஃமதல்லாஹி 'அலய்கும் இத் ஹம்ம கவ்முன் அய் யBப்ஸுதூ இலய்கும் அய்தியஹும் FபகFப்Fப அய்தியஹும் 'அன்கும் வத்தகுல்லாஹ்; வ'அலல் லாஹி Fபல் யதவகலில் மு'மினூன்
முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.
وَلَقَدْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۚ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَیْ عَشَرَ نَقِیْبًا ؕ وَقَالَ اللّٰهُ اِنِّیْ مَعَكُمْ ؕ لَىِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَیْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِیْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَلَاُدْخِلَنَّكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
وَلَقَدْதிட்டமாகاَخَذَவாங்கினான்اللّٰهُஅல்லாஹ்مِيْثَاقَஉறுதிமொழிبَنِىْۤ اِسْرآءِيْلَ‌ۚஇஸ்ரவேலர்களின்وَبَعَثْنَاஇன்னும் அனுப்பினோம்مِنْهُمُஅவர்களிலிருந்துاثْنَىْ عَشَرَபன்னிரெண்டுنَقِيْبًا‌ ؕதலைவரைوَقَالَஇன்னும் கூறினான்اللّٰهُஅல்லாஹ்اِنِّىْநிச்சயமாக நான்مَعَكُمْ‌ؕஉங்களுடன்لَٮِٕنْ اَقَمْتُمُநீங்கள் நிலைநிறுத்தினால்الصَّلٰوةَதொழுகையைوَاٰتَيْتُمُஇன்னும் நீங்கள் கொடுத்தீர்கள்الزَّكٰوةَஸகாத்தைوَاٰمَنْتُمْஇன்னும் நம்பிக்கை கொண்டீர்கள்بِرُسُلِىْஎன் தூதர்களைوَعَزَّرْتُمُوْهُمْஇன்னும் அவர்களுக்கு உதவிபுரிந்தீர்கள்وَاَقْرَضْتُمُஇன்னும் நீங்கள் கடன் கொடுத்தால்اللّٰهَஅல்லாஹ்விற்குقَرْضًاகடன்حَسَنًاஅழகியதுلَّاُكَفِّرَنَّநிச்சயமாக அகற்றிடுவேன்عَنْكُمْஉங்களைவிட்டுسَيِّاٰتِكُمْஉங்கள் பாவங்களைوَلَاُدْخِلَـنَّكُمْஇன்னும் நிச்சயமாக நுழைப்பேன்/உங்களைجَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅதன் கீழேالْاَنْهٰرُ‌ۚநதிகள்فَمَنْஎவர்كَفَرَநிராகரிப்பார்بَعْدَபின்னர்ذٰ لِكَஇதற்குمِنْكُمْஉங்களில்فَقَدْதிட்டமாகضَلَّவழி தவறிவிட்டார்سَوَآءَநடு (நேரான)السَّبِيْلِ‏வழி
வ லகத் அகதல் லாஹு மீதாக Bபனீ இஸ்ரா'ஈல வ Bப'அத்னா மின்ஹுமுத் னய் 'அஷர னகீBப(ன்)வ் வ காலல் லாஹு இன்னீ ம'அகும் ல'இன் அகம்துமுஸ் ஸலாத வ ஆதய்துமுZஜ் Zஜகாத வ ஆமன்தும் Bபி ருஸுலீ வ'அZஜ்Zஜர்துமூஹும் வ அக்ரள்துமுல் லாஹ கர்ளன் ஹஸனல் ல உகFப்Fபிரன்ன 'அன்கும் ஸய்யிஆதிகும் வ ல உத்கிலன் னகும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; Fபமன் கFபர Bபஃத தாலிக மின்கும் Fபகத் ளல்ல ஸவா'அஸ் ஸBபீல்
நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்; மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்.”
فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِیَةً ۚ یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ ۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰی خَآىِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟
فَبِمَا نَقْضِهِمْஆகவே அவர்கள் முறித்த காரணத்தால்مِّيْثَاقَهُمْஉறுதி மொழியை/தங்கள்لَعَنّٰهُمْசபித்தோம்/அவர்களைوَجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்قُلُوْبَهُمْஉள்ளங்களை/அவர்களுடையقٰسِيَةً‌ ۚஇறுக்கமானதாகيُحَرِّفُوْنَபுரட்டுகிறார்கள்الْـكَلِمَவசனங்களைعَنْஇருந்துمَّوَاضِعِهٖ‌ۙஅதன் இடங்கள்وَنَسُوْاஇன்னும் மறந்தார்கள்حَظًّاஒரு பாகத்தைمِّمَّاஎதிலிருந்துذُكِّرُوْاஉபதேசிக்கப்பட்டார்கள்بِهٖۚஅதைوَلَا تَزَالُ تَطَّلِعُகண்டுகொண்டே இருப்பீர்عَلٰى خَآٮِٕنَةٍமோசடியைمِّنْهُمْஅவர்களிடமிருந்துاِلَّاதவிரقَلِيْلًاசிலரைمِّنْهُمْ‌அவர்களில்فَاعْفُஆகவே மன்னிப்பீராகعَنْهُمْஅவர்களைوَاصْفَحْ‌ ؕஇன்னும் புறக்கணிப்பீராகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِيْنَ‏நற்பண்பாளர்களை
FபBபிமா னக்ளிஹிம் மீதா கஹும் ல'அன்னாஹும் வ ஜ'அல்னா குலூBபஹும் காஸியதய் யுஹர்ரிFபூனல் கலிம 'அம்மவாளி'இஹீ வ னஸூ ஹள்ளம் மிம்மா துக்கிரூ Bபிஹ்; வலா தZஜாலு தத்தலி'உ 'அலா கா'இனதிம் மின்ஹும் இல்லா கலீலம் மின்ஹும் FபஃFபு 'அன்ஹும் வஸ்Fபஹ்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
وَمِنَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰۤی اَخَذْنَا مِیْثَاقَهُمْ فَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۪ فَاَغْرَیْنَا بَیْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ؕ وَسَوْفَ یُنَبِّئُهُمُ اللّٰهُ بِمَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟
وَمِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினர்اِنَّاநிச்சயமாக நாங்கள்نَصٰرٰٓىகிறிஸ்த்தவர்கள்اَخَذْنَاவாங்கினோம்مِيْثَاقَهُمْஅவர்களுடைய உறுதிமொழியைفَنَسُوْاமறந்தார்கள்حَظًّاஒரு பகுதியைمِّمَّاஎதிலிருந்துذُكِّرُوْاஉபதேசிக்கப்பட்டார்கள்بِهٖஅதைக் கொண்டுفَاَغْرَيْنَاஆகவே மூட்டினோம்بَيْنَهُمُஅவர்களுக்கு மத்தியில்الْعَدَاوَةَபகைமையைوَالْبَغْضَآءَஇன்னும் வெறுப்பைاِلٰى يَوْمِ الْقِيٰمَةِ‌ ؕவரை/மறுமை நாள்وَسَوْفَ يُنَبِّئُهُمُஅவர்களுக்கு அறிவிப்பான்اللّٰهُஅல்லாஹ்بِمَاஎதைكَانُوْاஇருந்தார்கள்يَصْنَعُوْنَ‏செய்கிறார்கள்
வ மினல் லதீன காலூ இன்னா னஸாரா அகத்னா மீதாகஹும் Fபனஸூ ஹள்ளம் மிம்மா துக்கிரூ Bபிஹீ Fப அக்ரய்னா Bபய்னஹுமுல் 'அதாவத வல்Bபக்ளா'அ இலா யவ்மில் கியாமஹ்; வ ஸவ்Fப யுனBப்Bபி'உஹுமுல் லாஹு Bபிமா கானூ யஸ்ன'ஊன்
அன்றியும் எவர்கள் தங்களை, “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்; ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்; இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்.
یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ كَثِیْرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُوْنَ مِنَ الْكِتٰبِ وَیَعْفُوْا عَنْ كَثِیْرٍ ؕ۬ قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِیْنٌ ۟ۙ
يٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேقَدْ جَآءَதிட்டமாக வந்து விட்டார்كُمْஉங்களிடம்رَسُوْلُـنَاநம் தூதர்يُبَيِّنُதெளிவுபடுத்துவார்لَـكُمْஉங்களுக்குكَثِيْرًاபலவற்றைمِّمَّاஎதிலிருந்துكُنْتُمْஇருந்தீர்கள்تُخْفُوْنَமறைக்கிறீர்கள்مِنَ الْكِتٰبِவேதத்தில்وَيَعْفُوْاஇன்னும் விட்டுவிடுவார்عَنْ كَثِيْرٍ‌ ؕபலவற்றைقَدْதிட்டமாக வந்து விட்டதுجَآءَكُمْஉங்களிடம்مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துنُوْرٌஓர் ஒளிوَّكِتٰبٌஇன்னும் ஒரு வேதம்مُّبِيْنٌ ۙ‏தெளிவானது
யா அஹ்லல் கிதாBபி கத் ஜா'அகும் ரஸூலுனா யுBபய்யினு லகும் கதீரம் மிம்ம்மா குன்தும் துக்Fபூன மினல் கிதாBபி வ யஃFபூ 'அன் கதீர்; கத் ஜா'அகும் மினல் லாஹி னூரு(ன்)வ் வ கிதாBபும் முBபீன்
வேதமுடையவர்களே! மெய்யாகவே உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
یَّهْدِیْ بِهِ اللّٰهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهٗ سُبُلَ السَّلٰمِ وَیُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ بِاِذْنِهٖ وَیَهْدِیْهِمْ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
يَّهْدِىْநேர்வழி காட்டுகிறான்بِهِஅதன் மூலமாகاللّٰهُஅல்லாஹ்مَنِஎவர்கள்اتَّبَعَபின்பற்றினார்(கள்)رِضْوَانَهٗஅவனின் பொருத்தத்தைسُبُلَபாதைகளைالسَّلٰمِஈடேற்றத்தின்وَيُخْرِجُهُمْஇன்னும் வெளியேற்றுகிறான்/அவர்களைمِّنَ الظُّلُمٰتِஇருள்களிலிருந்துاِلَىபக்கம்النُّوْرِஒளிبِاِذْنِهٖதன் கட்டளைப்படிوَيَهْدِيْهِمْஇன்னும் அவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான்اِلٰىபக்கம்صِرَاطٍவழிمُّسْتَقِيْمٍ‏நேர்
யஹ்தீ Bபிஹில் லாஹு மனித் தBப'அ ரிள்வானஹூ ஸுBபுலஸ் ஸலாமி வ யுக்ரிஜுஹும் மினள் ளுலுமாதி இலன் னூரி Bபி இத்னிஹீ வ யஹ்தீஹிம் இலா ஸிராதிம் முஸ்தகீம்
அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ قُلْ فَمَنْ یَّمْلِكُ مِنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ اَنْ یُّهْلِكَ الْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ وَاُمَّهٗ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
لَـقَدْதிட்டவட்டமாகكَفَرَநிராகரித்தனர்الَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினர்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன்الْمَسِيْحُமஸீஹ்தான்ابْنُமகன்مَرْيَمَ‌ؕமர்யமுடையقُلْகூறுவீராகفَمَنْயார்يَّمْلِكُசக்தி பெறுவான்مِنَஇடம்اللّٰهِஅல்லாஹ்شَيْـٴًـــــاஒரு சிறிதும்اِنْ اَرَادَநாடினால்اَنْ يُّهْلِكَஅவன் அழிப்பதைالْمَسِيْحَமஸீஹைابْنَமகன்مَرْيَمَமர்யமுடையوَاُمَّهٗஇன்னும் அவருடைய தாயைوَمَنْயார்فِى الْاَرْضِபூமியில்جَمِيْعًا‌ ؕஅனைவரையும்وَلِلّٰهِஅல்லாஹ்வுக்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَا‌ ؕஇன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்يَخْلُقُபடைக்கிறான்مَا يَشَآءُ‌ ؕஎதை/நாடுகிறான்وَاللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதும்كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ ஹுவல் மஸீஹுBப் னு மர்யம்; குல் Fபம(ன்)ய்-யம்லிகு மினல் லாஹி ஷய்'அன் இன் அராத அய் யுஹ்லிகல் மஸீஹBப் ன மர்யம வ உம்மஹூ வ மன் Fபில் அர்ளி ஜமீ'ஆ, வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா; யக்லுகு மா யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
وَقَالَتِ الْیَهُوْدُ وَالنَّصٰرٰی نَحْنُ اَبْنٰٓؤُا اللّٰهِ وَاَحِبَّآؤُهٗ ؕ قُلْ فَلِمَ یُعَذِّبُكُمْ بِذُنُوْبِكُمْ ؕ بَلْ اَنْتُمْ بَشَرٌ مِّمَّنْ خَلَقَ ؕ یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؗ وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟
وَقَالَتِகூறினர்الْيَهُوْدُயூதர்கள்وَالنَّصٰرٰىஇன்னும் கிறித்தவர்கள்نَحْنُநாங்கள்اَبْنٰٓؤُاபிள்ளைகள்اللّٰهِஅல்லாஹ்வுடையوَاَحِبَّآؤُهٗ‌ ؕஇன்னும் அவனுடைய நேசர்கள்قُلْகூறுவீராகفَلِمَ يُعَذِّبُكُمْஅவ்வாறாயின் ஏன்/வேதனை செய்கிறான்/உங்களைبِذُنُوْبِكُمْ‌ؕஉங்கள் குற்றங்களுக்காகبَلْமாறாகاَنْـتُمْநீங்கள்بَشَرٌமனிதர்கள்مِّمَّنْஎவர்களில்خَلَقَ‌ ؕபடைத்தான்يَغْفِرُமன்னிக்கிறான்لِمَنْஎவர்களைيَّشَآءُநாடுகிறான்وَيُعَذِّبُஇன்னும் வேதனை செய்கிறான்مَنْ يَّشَآءُ‌ ؕஎவர்களை/நாடுகிறான்وَلِلّٰهِஅல்லாஹ்விற்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَا‌இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்وَاِلَيْهِஅவனளவில்தான்الْمَصِيْرُ‏மீளுமிடம்
வ காலதில் யஹூது வன் னஸாரா னஹ்னு அBப்னா'உல் லாஹி வ அஹிBப்Bபா'உஹ்; குல் Fபலிம யு'அத்திBபுகும் BபிதுனூBபிகும் Bபல் அன்தும் Bபஷரும் மிம்மன் கலக்; யக்Fபிரு லிமய் யஷா'உ வ யு'அத்திBபு மய் யஷா'; வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா வ இலய்ஹில் மஸீர்
யூதர்களும், கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்; அவனுடைய நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ عَلٰی فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَآءَنَا مِنْ بَشِیْرٍ وَّلَا نَذِیْرٍ ؗ فَقَدْ جَآءَكُمْ بَشِیْرٌ وَّنَذِیْرٌ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
يٰۤـاَهْلَ الْـكِتٰبِவேதக்காரர்களேقَدْ جَآءَவந்துவிட்டார்كُمْஉங்களிடம்رَسُوْلُـنَاநம் தூதர்يُبَيِّنُதெளிவுபடுத்துகிறார்لَـكُمْஉங்களிடம்عَلٰى فَتْرَةٍஇடைவெளியில்مِّنَ الرُّسُلِதூதர்களின்اَنْ تَقُوْلُوْاநீங்கள் கூறாதிருக்கمَا جَآءَவரவில்லைنَاஎங்களுக்குمِنْۢஎவரும்بَشِيْرٍநற்செய்தி கூறுபவர்وَّلَاஇன்னும் இல்லைنَذِيْرٍ‌எச்சரிப்பவர்فَقَدْஉறுதியாகجَآءَவந்துவிட்டார்كُمْஉங்களிடம்بَشِيْرٌநற்செய்தி கூறுபவர்وَّنَذِيْرٌ‌ؕஇன்னும் எச்சரிப்பவர்وَاللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதும்كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
யா அஹ்லல் கிதாBபி கத் ஜா'அகும் ரஸூலுனா யுBபய்யினு லகும் 'அலா Fபத்ரதிம் மினர் ருஸுலி அன் தகூலூ மா ஜா'அனா மிம் Bபஷீரி(ன்)வ் வலா னதீரின் Fபகத் ஜா'அகும் Bபஷீரு(ன்)வ் வ னதீர்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَعَلَ فِیْكُمْ اَنْۢبِیَآءَ وَجَعَلَكُمْ مُّلُوْكًا ۖۗ وَّاٰتٰىكُمْ مَّا لَمْ یُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَاِذْ قَالَகூறிய சமயத்தை...مُوْسٰىமூஸாلِقَوْمِهٖதன் சமுதாயத்திற்குيٰقَوْمِஎன் சமுதாயமேاذْكُرُوْاநினைவு கூறுங்கள்نِعْمَةَஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுاِذْஅந்நேரத்தில்جَعَلَஆக்கினான்فِيْكُمْஉங்களில்اَنْۢـبِيَآءَநபிமார்களைوَجَعَلَـكُمْஆக்கினான்/உங்களைمُّلُوْكًاஅரசர்களாகۖ  وَّاٰتٰٮكُمْஇன்னும் கொடுத்தான்/உங்களுக்குمَّاஎவற்றைلَمْ يُؤْتِகொடுக்கவில்லைاَحَدًاஒருவருக்கும்مِّنَ الْعٰلَمِيْنَ‏உலகத்தாரில்
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மித் குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் இத் ஜ'அல Fபீகும் அம்Bபியா'அ வ ஜ'அலகும் முலூக(ன்)வ் வ ஆதாகும் மா லம் யு'தி அஹதம் மினல் 'ஆலமீன்
அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்” என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்.
یٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِیْ كَتَبَ اللّٰهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰۤی اَدْبَارِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِیْنَ ۟
يٰقَوْمِஎன் சமுதாயமேادْخُلُواநுழையுங்கள்الْاَرْضَபூமியில்الْمُقَدَّسَةَபரிசுத்தமானதுالَّتِىْஎதுكَتَبَவிதித்தான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குوَلَا تَرْتَدُّوْاஇன்னும் திரும்பிவிடாதீர்கள்عَلٰٓى اَدْبَارِபின் புறங்களில்كُمْஉங்கள்فَتَـنْقَلِبُوْاதிரும்புவீர்கள்خٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளாக
யா கவ்மித் குலுல் அர்ளல் முகத்தஸதல் லதீ கதBபல் லாஹு லகும் வலா தர்தத்தூ 'அலா அத்Bபாரிகும் Fபதன்கலிBபூ காஸிரீன்ன்
(தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.
قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّ فِیْهَا قَوْمًا جَبَّارِیْنَ ۖۗ وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰی یَخْرُجُوْا مِنْهَا ۚ فَاِنْ یَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دٰخِلُوْنَ ۟
قَالُوْاகூறினர்يٰمُوْسٰٓىமூஸாவே!اِنَّநிச்சயமாகفِيْهَاஅதில்قَوْمًاஒரு சமுதாயம்جَبَّارِيْنَ ۖ பலசாலிகளானوَاِنَّاநிச்சயமாக நாங்கள்لَنْமாட்டோம்نَّدْخُلَهَاஅதில் நுழையحَتّٰىவரைيَخْرُجُوْاவெளியேறுவார்கள்مِنْهَا‌ ۚஅதிலிருந்துفَاِنْ يَّخْرُجُوْاஅவர்கள் வெளியேறினால்مِنْهَاஅதிலிரு ந்துفَاِنَّاநிச்சயமாக நாங்கள்دَاخِلُوْنَ‏நுழைவோம்
காலூ யா மூஸா இன்னா Fபீஹா கவ்மன் ஜBப்Bபாரீன வ இன்னா லன் னத்குலஹா ஹத்தா யக்ருஜூ மின்ஹா Fப-இ(ன்)ய் யக்ருஜூ மின்ஹா Fப இன்னா தாகிலூன்
அதற்கு அவர்கள், “மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள்; எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்” எனக் கூறினார்கள்.
قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِیْنَ یَخَافُوْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمَا ادْخُلُوْا عَلَیْهِمُ الْبَابَ ۚ فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غٰلِبُوْنَ ۚ۬ وَعَلَی اللّٰهِ فَتَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
قَالَகூறினார்(கள்)رَجُلٰنِஇருவர்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்يَخَافُوْنَபயப்படுகிறார்கள்اَنْعَمَஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمَاஅவ்விருவர் மீதும்ادْخُلُوْاநுழையுங்கள்عَلَيْهِمُஅவர்களைஎதிர்த்துالْبَابَ‌ۚவாசலில்فَاِذَا دَخَلْتُمُوْهُஅதில் நீங்கள் நுழைந்தால்فَاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்غٰلِبُوْنَ‌  ۚவெற்றி பெறுவீர்கள்وَعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதேفَتَوَكَّلُوْۤاநம்பிக்கை வையுங்கள்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
கால ரஜுலானி மினல் லதீன யகாFபூன அன்'அமல் லாஹு 'அலய்ஹிமத் குலூ 'அலய்ஹிமுல் BபாBப், Fப இதா தகல்துமூஹு Fப இன்னகும் காலிBபூன்; வ 'அலல் லாஹி Fபதவக்கலூ இன் குன்தும் மு'மினீன்
(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்; அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) “அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினர்.
قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِیْهَا فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قٰعِدُوْنَ ۟
قَالُوْاகூறினர்يٰمُوْسٰٓىமூஸாவே!اِنَّاநிச்சயமாக நாங்கள்لَنْமாட்டோம்نَّدْخُلَهَاۤஅதில் நுழையاَبَدًاஅறவேمَّا دَامُوْاஅவர்கள் இருக்கும் காலமெல்லாம்فِيْهَا‌அதில்فَاذْهَبْஆகவே செல்اَنْتَநீوَرَبُّكَஇன்னும் உன் இறைவன்فَقَاتِلَاۤஇருவரும் போரிடுங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்هٰهُنَاஇங்கேதான்قَاعِدُوْنَ‏உட்கார்ந்திருப்போம்
காலூ யா மூஸா இன்னா லன் னத்குலஹா அBபதம் மா தாமூ Fபீஹா Fபத்ஹBப் அன்த வ ரBப்Bபுக Fபகாதிலா இன்னா ஹாஹுனா கா'இதூன்
அதற்கவர்கள், “மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَ رَبِّ اِنِّیْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِیْ وَاَخِیْ فَافْرُقْ بَیْنَنَا وَبَیْنَ الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟
قَالَகூறினார்رَبِّஎன் இறைவாاِنِّىْநிச்சயமாக நான்لَاۤ اَمْلِكُஅதிகாரம் பெற மாட்டேன்اِلَّاதவிரنَفْسِىْஎனக்குوَاَخِىْ‌இன்னும் என் சகோதரர்فَافْرُقْஆகவே பிரித்திடுبَيْنَـنَاஎங்களுக்கு மத்தியில்وَبَيْنَஇன்னும் மத்தியில்الْقَوْمِசமுதாயம்الْفٰسِقِيْنَ‏பாவிகளான
கால ரBப்Bபி இன்னீ லா அம்லிகு இல்லா னFப்ஸீ வ அகீ FபFப்ருக் Bபய்னனா வ Bபய்னல் கவ்மில் Fபாஸிகீன்
“என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா கூறினார்.
قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَیْهِمْ اَرْبَعِیْنَ سَنَةً ۚ یَتِیْهُوْنَ فِی الْاَرْضِ ؕ فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟۠
قَالَகூறினான்فَاِنَّهَاஆகவே நிச்சயமாக அதுمُحَرَّمَةٌதடுக்கப்பட்டதாகும்عَلَيْهِمْ‌அவர்கள் மீதுاَرْبَعِيْنَநாற்பதுسَنَةً‌  ۚஆண்டு(கள்)يَتِيْهُوْنَதிக்கற்றலைவார்கள்فِى الْاَرْضِ‌ ؕபூமியில்فَلَا تَاْسَஆகவே கவலைப்படாதீர்عَلَى الْقَوْمِசமுதாயத்தின் மீதுالْفٰسِقِيْنَ‏பாவிகளான
கால Fப இன்னஹா முஹர் ரமதுன் 'அலய்ஹிம் அர்Bப'ஈன ஸனஹ்; யதீஹூன Fபில் அர்ள்; Fபலா தாஸ 'அலல் கவ்மில் Fபாஸிகீன்
(அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ ابْنَیْ اٰدَمَ بِالْحَقِّ ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ یُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ ؕ قَالَ لَاَقْتُلَنَّكَ ؕ قَالَ اِنَّمَا یَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِیْنَ ۟
وَاتْلُஓதுவீராகعَلَيْهِمْஅவர்கள் முன்نَبَاَசெய்தியைابْنَىْஇரு மகன்களின்اٰدَمَஆதமுடையبِالْحَـقِّ‌ۘஉண்மையில்اِذْபோதுقَرَّبَاகுர்பானி கொடுத்தனர்قُرْبَانًاஒரு குர்பானியைفَتُقُبِّلَஏற்றுக் கொள்ளப்பட்டதுمِنْஇருந்துاَحَدِهِمَاஅவ்விருவரில் ஒருவர்وَلَمْ يُتَقَبَّلْஏற்கப்படவில்லைمِنَஇருந்துالْاٰخَرِؕமற்றவர்قَالَஎன்றார்لَاَقْتُلَـنَّكَ‌ؕநிச்சயமாக உன்னைக்கொல்வேன்قَالَகூறினார்اِنَّمَا يَتَقَبَّلُஏற்பதெல்லாம்اللّٰهُஅல்லாஹ்مِنَ الْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்
வத்லு 'அலய்ஹிம் னBப அBப்னய் ஆதம Bபில்ஹக்க்; இத் கர்ரBபா குர்Bபானன் FபதுகுBப்Bபில மின் அஹதிஹிமா வ லம் யுதகBப்Bபல் மினல் ஆகரி கால ல அக்துலன்ன்னக கால இன்னமா யதகBப்Bபலுல் லாஹு மினல் முத்தகீன்
(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.
لَىِٕنْۢ بَسَطْتَّ اِلَیَّ یَدَكَ لِتَقْتُلَنِیْ مَاۤ اَنَا بِبَاسِطٍ یَّدِیَ اِلَیْكَ لِاَقْتُلَكَ ۚ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِیْنَ ۟
لَٮِٕنْۢ بَسَطْتَّநீங்கள் நீட்டினால்اِلَىَّஎன்னளவில்يَدَكَஉன் கரத்தைلِتَقْتُلَنِىْநீ என்னைக் கொல்வ தற்காகمَاۤ اَنَاநான் இல்லைبِبَاسِطٍநீட்டுபவனாகيَّدِىَஎன் கரத்தைاِلَيْكَஉன்னளவில்لِاَقْتُلَكَ‌ ۚநான் கொல்வதற்காக / உன்னைاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اللّٰهَஅல்லாஹ்வைرَبَّஇறைவனாகியالْعٰلَمِيْنَ‏அகிலத்தாரின்
ல'இம் Bபஸத்த இலய்ய யதக லிதக்துலனீ மா அன BபிBபாஸிதி(ன்)ய் யதிய இலய்க லி அக்துலக இன்னீ அகாFபுல் லாஹ ரBப்Bபல் 'ஆலமீன்
அன்றியும், “நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).
اِنِّیْۤ اُرِیْدُ اَنْ تَبُوْٓاَ بِاِثْمِیْ وَاِثْمِكَ فَتَكُوْنَ مِنْ اَصْحٰبِ النَّارِ ۚ وَذٰلِكَ جَزٰٓؤُا الظّٰلِمِیْنَ ۟ۚ
اِنِّىْۤநிச்சயமாக நான்اُرِيْدُநாடுகிறேன்اَنْ تَبُوْٓءَاநீ திரும்புவதைبِاِثْمِىْஎன் பாவத்துடன்وَ اِثْمِكَஉன் பாவம்فَتَكُوْنَஆகிவிடுவாய்مِنْஇருந்துاَصْحٰبِவாசிகள்النَّارِ‌ۚநரகம்وَذٰ لِكَஇதுجَزٰٓؤُاகூலிالظّٰلِمِيْنَ‌ۚ‏‏அநியாயக்காரர்களின்
இன்னீ உரீது அன் தBபூ'அ Bபி இத்மீ வ இத்மிக Fபதகூன மின் அஸ்-ஹாBபின் னார்; வ தாலிக ஜZஜா'உள் ளாலிமீன்
என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்; அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்),
فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَتْلَ اَخِیْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِیْنَ ۟
فَطَوَّعَتْதூண்டியதுلَهٗஅவரைنَفْسُهٗஅவருடைய மனம்قَـتْلَகொல்வதற்குاَخِيْهِதன் சகோதரரைفَقَتَلَهٗஆகவே அவரைக் கொன்றார்فَاَصْبَحَஆகவே ஆகினார்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
Fபதவ்வ'அத் லஹூ னFப்ஸு ஹூ கத்ல அகீஹி Fபகதலஹூ Fப அஸ்Bபஹ மினல் காஸிரீன்
(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.
فَبَعَثَ اللّٰهُ غُرَابًا یَّبْحَثُ فِی الْاَرْضِ لِیُرِیَهٗ كَیْفَ یُوَارِیْ سَوْءَةَ اَخِیْهِ ؕ قَالَ یٰوَیْلَتٰۤی اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِیَ سَوْءَةَ اَخِیْ ۚ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِیْنَ ۟
فَبَـعَثَஆகவே அனுப்பினான்اللّٰهُஅல்லாஹ்غُرَابًاஒரு காகத்தைيَّبْحَثُதோண்டுகிறதுفِىْ الْاَرْضِபூமியில்لِيُرِيَهٗகாட்டுவதற்காக/ அவனுக்குكَيْفَஎவ்வாறுيُوَارِىْமறைப்பான்سَوْءَةَசடலத்தைاَخِيْهِ‌ؕதன் சகோதரனின்قَالَகூறினான்يَاوَيْلَتٰٓىஎன் நாசமேاَعَجَزْتُஇயலாமலாகி விட்டேனா?اَنْ اَكُوْنَநான் ஆகمِثْلَபோன்றுهٰذَاஇந்தالْغُرَابِகாகம்فَاُوَارِىَமறைத்திருப்பேனேسَوْءَةَசடலத்தைاَخِىْ‌ۚஎன் சகோதரனின்فَاَصْبَحَஆகிவிட்டான்مِنَ النّٰدِمِيْنَۛ ۚ ۙ‏‏‏துக்கப்படுபவர்களில்
FபBப'அதல் லாஹு குராBபய் யBப்ஹது Fபில் அர்ளி லியுரியஹூ கய்Fப யுவாரீ ஸவ்'அத அகீஹ்; கால யா வய்லதா அ'அஜZஜ்து அன் அகூன மித்ல ஹாதல் குராBபி Fப உவாரிய ஸவ் அத அகீ Fப அஸ்Bபஹ மினன் னாதிமீன்
பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.
مِنْ اَجْلِ ذٰلِكَ ؔۛۚ كَتَبْنَا عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَیْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِی الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِیْعًا ؕ وَمَنْ اَحْیَاهَا فَكَاَنَّمَاۤ اَحْیَا النَّاسَ جَمِیْعًا ؕ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَیِّنٰتِ ؗ ثُمَّ اِنَّ كَثِیْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰلِكَ فِی الْاَرْضِ لَمُسْرِفُوْنَ ۟
مِنْ اَجْلِகாரணமாகذٰ لِكَ ۛ ؔ ۚஅதன்كَتَبْنَاவிதித்தோம்عَلٰىமீதுبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்கள்اَنَّهٗநிச்சயமாகمَنْஎவன்قَتَلَகொன்றார்نَفْسًۢاஓர் உயிரைبِغَيْرِ نَفْسٍஓர் உயிரைக் கொலை செய்ததற்கு அல்லாமல்اَوْஅல்லதுفَسَادٍவிஷமம் செய்தல்فِى الْاَرْضِபூமியில்فَكَاَنَّمَاபோலாவான்قَتَلَகொன்றான்النَّاسَமக்கள்جَمِيْعًا ؕஅனைவரையும்وَمَنْஎவர்اَحْيَاهَاவாழவைத்தார்/அதைفَكَاَنَّمَاۤபோலாவார்اَحْيَاவாழவைத்தார்النَّاسَமக்கள்جَمِيْعًا ؕஅனைவரையும்وَلَـقَدْதிட்டமாகجَآءَتْهُمْவந்தார்கள்/அவர்களிடம்رُسُلُنَاநம் தூதர்கள்بِالْبَيِّنٰتِஅத்தாட்சிகளுடன்ثُمَّபிறகுاِنَّநிச்சயமாகكَثِيْرًاஅதிகமானவர்கள்مِّنْهُمْஅவர்களில்بَعْدَ ذٰ لِكَஅதன் பின்னர்فِى الْاَرْضِபூமியில்لَمُسْرِفُوْنَ‏வரம்புமீறுகிறார்கள்
மின் அஜ்லி தாலிக கதBப்னா 'அலா Bபனீ இஸ்ரா'ஈல அன்னஹூ மன் கதல னFப்ஸம் Bபிகய்ரி னFப்ஸின் அவ் Fபஸாதின் Fபில் அர்ளி Fபக அன்னம்மா கதலன் னாஸ ஜமீ'அ(ன்)வ் வ மன் அஹ்யாஹா Fபக அன்னமா அஹ்யன் னாஸ ஜமீ'ஆ; வ லகத் ஜா'அத் ஹும் ருஸுலுனா Bபில்Bபய்யினாதி தும்ம இன்ன கதீரம் மின்ஹும் Bபஃத தாலிக Fபில் அர்ளி லமுஸ்ரிFபூன்
இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
اِنَّمَا جَزٰٓؤُا الَّذِیْنَ یُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَسْعَوْنَ فِی الْاَرْضِ فَسَادًا اَنْ یُّقَتَّلُوْۤا اَوْ یُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ اَیْدِیْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ یُنْفَوْا مِنَ الْاَرْضِ ؕ ذٰلِكَ لَهُمْ خِزْیٌ فِی الدُّنْیَا وَلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ
اِنَّمَا جَزٰٓؤُاதண்டனையெல்லாம்الَّذِيْنَஎவர்கள்يُحَارِبُوْنَபோரிடுவார்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்وَرَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதர்وَيَسْعَوْنَஇன்னும் முயற்சிக்கின்றனர்فِى الْاَرْضِபூமியில்فَسَادًاகுழப்பம் செய்யاَنْ يُّقَتَّلُوْۤاஅவர்கள் கொல்லப்படுவதுاَوْஅல்லதுيُصَلَّبُوْۤاஅவர்கள் சிலுவையில் அறையப்படுவதுاَوْஅல்லதுتُقَطَّعَவெட்டப்படுவதுاَيْدِيْهِمْஅவர்களின் கரங்கள்وَاَرْجُلُهُمْஇன்னும் அவர்களின் கால்கள்مِّنْ خِلَافٍமாற்றமாகاَوْஅல்லதுيُنْفَوْاஅவர்கள் கடத்தப்படுவதுمِنَஇருந்துالْاَرْضِ‌ؕநாடுذٰ لِكَஇதுلَهُمْஅவர்களுக்குخِزْىٌஇழிவுفِى الدُّنْيَا‌இவ்வுலகத்தில்وَ لَهُمْஇன்னும் அவர்களுக்குفِى الْاٰخِرَةِமறுமையில்عَذَابٌவேதனைعَظِيْمٌ ۙ‏பெரியது
இன்னமா ஜZஜா'உல் லதீன யுஹாரிBபூனல் லாஹ வ ரஸூலஹூ வ யஸ்'அவ்ன Fபில் அர்ளி Fபஸாதன் அய் யுகத்தலூ அவ் யுஸல்லBபூ அவ் துகத்த'அ அய்தீஹிம் வ அர்ஜுலுஹும் மின் கிலாFபின் அவ் யுன்Fபவ் மினலர்ள்; தாலிக லஹும் கிZஜ்யுன் Fபித் துன்யா வ லஹும் Fபில் ஆகிரதி 'அதாBபுன் 'அளீம்
அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ قَبْلِ اَنْ تَقْدِرُوْا عَلَیْهِمْ ۚ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்تَابُوْا(மன்னிப்புக் கோரி) திருந்தி திரும்பினார்கள்مِنْ قَبْلِமுன்னர்اَنْ تَقْدِرُوْاநீங்கள் ஆற்றல்பெறுவதுعَلَيْهِمْ‌ۚஅவர்கள் மீதுفَاعْلَمُوْۤاஆகவே அறிந்துகொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
இல்லல் லதீன தாBபூ மின் கBப்லி அன் தக்திரூ 'அலய்ஹிம் Fபஃலமூ அன்ன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَیْهِ الْوَسِیْلَةَ وَجَاهِدُوْا فِیْ سَبِیْلِهٖ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களே!اتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَابْتَغُوْۤاஇன்னும் தேடுங்கள்اِلَيْهِஅவனளவில்الْوَسِيْلَةَநன்மையைوَجَاهِدُوْاஇன்னும் போரிடுங்கள்فِىْ سَبِيْلِهٖஅவனுடைய பாதையில்لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றியடைவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வBப்தகூ இலய்ஹில் வஸீலத வ ஜாஹிதூ Fபீ ஸBபீலிஹீ ல'அல்லகும் துFப்லிஹூன்
முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ اَنَّ لَهُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لِیَفْتَدُوْا بِهٖ مِنْ عَذَابِ یَوْمِ الْقِیٰمَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்لَوْ اَنَّ لَهُمْநிச்சயமாக அவர்களுக்கு இருந்தால்مَّاஎவைفِى الْاَرْضِஇப்பூமியில்جَمِيْعًاஅனைத்தும்وَّمِثْلَهٗஇன்னும் அவை போன்றதுمَعَهٗஅத்துடன்لِيَـفْتَدُوْاஅவர்கள் பினை கொடுப்பதற்காகبِهٖஅதைக் கொண்டுمِنْஇருந்துعَذَابِவேதனைيَوْمِ الْقِيٰمَةِமறுமை நாளின்مَا تُقُبِّلَஅங்கீகரிக்கப்படாதுمِنْهُمْ‌ۚஅவர்களிடமிருந்துوَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
இன்னல் லதீன கFபரூ லவ் அன்ன லஹும் மா Fபில் அர்ளி ஜமீ'அ(ன்)வ் வ மித்லஹூ ம'அஹூ லியFப்ததூ Bபிஹீ மின் 'அதாBபி யவ்மில் கியாமதி மா துகுBப்Bபில மின்ஹும் வ லஹும் அதாBபுன் அலீம்
நிச்சயமாக, நிராகரிப்போர்கள் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை, மறுமையின் வேதனைக்குப் பகரமாக அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா; மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
یُرِیْدُوْنَ اَنْ یَّخْرُجُوْا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخٰرِجِیْنَ مِنْهَا ؗ وَلَهُمْ عَذَابٌ مُّقِیْمٌ ۟
يُرِيْدُوْنَநாடுவார்கள்اَنْ يَّخْرُجُوْاஅவர்கள் வெளியேறمِنَஇருந்துالنَّارِநரகம்وَمَاஇல்லைهُمْஅவர்கள்بِخَارِجِيْنَவெளியேறுபவர்களாகمِنْهَا‌அதிலிருந்துوَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைمُّقِيْمٌ‏நிலையானது
யுரீதூன அய் யக்ருஜூ மினன் னாரி வமா ஹும் Bபிகாரி ஜீன மின்ஹா வ லஹும் 'அதாBபும் முகீம்
அவர்கள் (நரக) நெருப்பை விட்டு வெளியேறிவிட நாடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைவிட்டு வெளியேறுகிறவர்களாக இல்லை; அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَیْدِیَهُمَا جَزَآءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
وَالسَّارِقُதிருடன்وَالسَّارِقَةُஇன்னும் திருடிفَاقْطَعُوْۤاவெட்டுங்கள்اَيْدِيَهُمَاஅவ்விருவரின் கரங்களைجَزَآءًۢகூலியாகبِمَا كَسَبَاஅவ்விருவர் செய்ததன் காரணமாகنَـكَالًاதண்டனையாகمِّنَ اللّٰهِ ؕஅல்லாஹ்விடமிருந்துوَاللّٰهُஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌ‏மகா ஞானவான்
வஸ்ஸாரிகு வஸ்ஸாரிகது Fபக்த'ஊ அய்தியஹுமா ஜZஜா'அம் Bபிமா கஸBபா னகாலம் மினல் லாஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
فَمَنْ تَابَ مِنْ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ یَتُوْبُ عَلَیْهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
فَمَنْஎவர்تَابَதிருந்தி திரும்பினார்مِنْۢ بَعْدِபின்னர்ظُلْمِهٖதன் தீமைوَاَصْلَحَஇன்னும் திருத்திக் கொண்டார்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَتُوْبُபிழை பொறுப்பான்عَلَيْهِؕஅவர் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
Fபமன் தாBப மிம் Bபஃதி ளுல்மிஹீ வ அஸ்லஹ Fப இன்னல் லாஹ யதூBபு 'அலய்ஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ یُعَذِّبُ مَنْ یَّشَآءُ وَیَغْفِرُ لِمَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اَلَمْ تَعْلَمْநீர் அறியவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهٗஅவனுக்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِؕஇன்னும் பூமியின்يُعَذِّبُவேதனை செய்வான்مَنْஎவரைيَّشَآءُநாடுகிறான்وَيَغْفِرُஇன்னும் மன்னிப்பான்لِمَنْஎவரைيَّشَآءُ‌ ؕநாடுகிறான்وَاللّٰهُஅல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்கள் மீதும்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
அலம் தஃலம் அன்னல் லாஹ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி யு'அத் திBபு ம(ன்)ய்-யஷா'உ வ யக்Fபிரு லிம(ன்)ய்-யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
یٰۤاَیُّهَا الرَّسُوْلُ لَا یَحْزُنْكَ الَّذِیْنَ یُسَارِعُوْنَ فِی الْكُفْرِ مِنَ الَّذِیْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛۚ وَمِنَ الَّذِیْنَ هَادُوْا ۛۚ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِیْنَ ۙ لَمْ یَاْتُوْكَ ؕ یُحَرِّفُوْنَ الْكَلِمَ مِنْ بَعْدِ مَوَاضِعِهٖ ۚ یَقُوْلُوْنَ اِنْ اُوْتِیْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ؕ وَمَنْ یُّرِدِ اللّٰهُ فِتْنَتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَمْ یُرِدِ اللّٰهُ اَنْ یُّطَهِّرَ قُلُوْبَهُمْ ؕ لَهُمْ فِی الدُّنْیَا خِزْیٌ ۖۚ وَّلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُதூதரேلَا يَحْزُنْكَஉமக்குக் கவலையூட்ட வேண்டாம்الَّذِيْنَஎவர்கள்يُسَارِعُوْنَதீவிரம்காட்டுகிறார்கள்فِى الْكُفْرِநிராகரிப்பில்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاَ فْوَاهِهِمْதங்கள் வாய்களால்وَلَمْ تُؤْمِنْஇன்னும் நம்பிக்கை கொள்ளவில்லைقُلُوْبُهُمْ‌ ‌ۛۚஅவர்களுடைய உள்ளங்கள்وَمِنَஇன்னும் இருந்துالَّذِيْنَஎவர்கள்هَادُوْا ۛۚயூதராகி விட்டார்கள்سَمّٰعُوْنَஅதிகம் செவிமடுக்கிறார்கள்لِلْكَذِبِபொய்யைسَمّٰعُوْنَஅதிகம் செவிமடுக்கிறார்கள்لِقَوْمٍகூட்டத்திற்காகاٰخَرِيْنَۙமற்றொருلَمْ يَاْتُوْكَ‌ؕஅவர்கள் வரவில்லை / உம்மிடம்يُحَرِّفُوْنَமாற்றுகின்றனர்الْـكَلِمَவசனங்களைمِنْۢ بَعْدِஇருந்துمَوَاضِعِهٖ‌ۚஅவற்றின் இடங்கள்يَقُوْلُوْنَகூறுகின்றனர்اِنْ اُوْتِيْتُمْநீங்கள் கொடுக்கப்பட்டால்هٰذَاஇதைفَخُذُوْهُஅதை எடுங்கள்وَاِنْ لَّمْ تُؤْتَوْهُநீங்கள் கொடுக்கப்படவில்லையெனில்/அதைفَاحْذَرُوْا‌ ؕஎச்சரிக்கையாக இருங்கள்وَمَنْஎவர்يُّرِدِநாடினான்اللّٰهُஅல்லாஹ்فِتْنَـتَهٗசோதிக்க/அவரைفَلَنْ تَمْلِكَஉரிமை பெறமாட்டீர்لَهٗஅவருக்காகمِنَவிடம்اللّٰهِஅல்லாஹ்شَيْــٴًـــا‌ؕஎதையும்اُولٰٓٮِٕكَஅவர்கள்الَّذِيْنَஎவர்கள்لَمْ يُرِدِநாடவில்லைاللّٰهُஅல்லாஹ்اَنْ يُّطَهِّرَஅவன்பரிசுத்தமாக்கقُلُوْبَهُمْ‌ ؕஉள்ளங்களை / அவர்களுடையلَهُمْஅவர்களுக்குفِىْ الدُّنْيَاஇம்மையில்خِزْىٌ ۚۖஇழிவுوَّஇன்னும்لَهُمْஅவர்களுக்குفِىْ الْاٰخِرَةِமறுமையில்عَذَابٌவேதனைعَظِيْمٌ‏பெரிய
யா அய்யுஹர் ரஸூலு லா யஹ்Zஜுன்கல் லதீன யுஸா ரி'ஊன Fபில் குFப்ரி மினல் லதீன காலூ ஆமன்னா Bபி அFப்வாஹிஹிம் வ லம் து'மின் குலூBபுஹும்; வ மினல் லதீன ஹாதூ ஸம்மா'ஊன லில்கதிBபி ஸம்மா'ஊன லிகவ்மின் ஆகரீன லம் ய'தூக யுஹர்ரிFபூனல் கலிம மிம் Bபஃதி மவாளி'இஹீ யகூலூன இன் ஊதீதும் ஹாதா Fபகுதூஹு வ இல் லம் து'தவ்ஹு Fபஹ்தரூ; வ ம(ன்)ய்-யுரிதில் லாஹு Fபித்னதஹூ Fபலன் தம்லிக லஹூ மினல் லாஹி ஷய்'ஆ; உலா 'இகல் லதீன லம் யுரிதில் லாஹு அ(ன்)ய்-யுதஹ்ஹிர குலூBபஹும்; லஹும் Fபித் துன்யா கிZஜ்யு(ன்)வ் வ லஹும் Fபில் ஆகிரதி'அதாBபுன் 'அளீம்
தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர்; உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர்; மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி “இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; அதை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்கள்; மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர்; இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.
سَمّٰعُوْنَ لِلْكَذِبِ اَكّٰلُوْنَ لِلسُّحْتِ ؕ فَاِنْ جَآءُوْكَ فَاحْكُمْ بَیْنَهُمْ اَوْ اَعْرِضْ عَنْهُمْ ۚ وَاِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ یَّضُرُّوْكَ شَیْـًٔا ؕ وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَیْنَهُمْ بِالْقِسْطِ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
سَمّٰعُوْنَஅதிகம் செவிமடுக்கிறார்கள்لِلْكَذِبِபொய்யைاَ كّٰلُوْنَஅதிகம் விழுங்குகிறார்கள்لِلسُّحْتِ‌ؕஆகாத செல்வத்தைفَاِنْ جَآءُوْكَஇவர்கள் உம்மிடம் வந்தால்فَاحْكُمْதீர்ப்பளிப்பீராகبَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்اَوْஅல்லதுاَعْرِضْபுறக்கணிப்பீராகعَنْهُمْ‌ ۚஅவர்களைوَاِنْ تُعْرِضْநீர் புறக்கணித்தால்عَنْهُمْஅவர்களைفَلَنْஒருபோதும் முடியாதுيَّضُرُّوْكَஅவர்கள் உமக்கு கெடுதி செய்யشَيْــٴًـــا‌ ؕகொஞ்சமும்وَاِنْ حَكَمْتَநீர் தீர்ப்பளித்தால்فَاحْكُمْதீர்ப்பளிப்பீராகبَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِالْقِسْطِ‌ ؕநீதமாகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُقْسِطِيْنَ‏நீதவான்களை
ஸம்மா'ஊன லில்கதிBபி அக்காலூன லிஸ்ஸுஹ்த்; Fப இன் ஜா'ஊக Fபஹ்கும் Bபய்னஹும் அவ் அஃரிள் அன்ஹும் வ இன் துஃரிள் 'அன்ஹும் Fபல(ன்)ய்-யளுர்ரூக ஷய்'அ(ன்)வ் வ இன் ஹகம்த Fபஹ்கும் Bபய்னஹும் Bபில்கிஸ்த்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முக்ஸிதீன்
அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்; (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும்; அப்படி இவர்களை விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
وَكَیْفَ یُحَكِّمُوْنَكَ وَعِنْدَهُمُ التَّوْرٰىةُ فِیْهَا حُكْمُ اللّٰهِ ثُمَّ یَتَوَلَّوْنَ مِنْ بَعْدِ ذٰلِكَ ؕ وَمَاۤ اُولٰٓىِٕكَ بِالْمُؤْمِنِیْنَ ۟۠
وَكَيْفَஎவ்வாறுيُحَكِّمُوْنَكَதீர்ப்பாளராக ஆக்குகிறார்கள்/உம்மைوَعِنْدَஇருக்க / இடம்هُمُஅவர்கள்التَّوْرٰٮةُதவ்றாத்فِيْهَاஅதில்حُكْمُசட்டம்اللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபிறகுيَتَوَلَّوْنَதிரும்புகின்றனர்مِنْۢ بَعْدِபின்னர்ذٰ لِكَ‌ ؕஅதற்குوَمَاۤஇல்லைاُولٰٓٮِٕكَஇவர்கள்بِالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
வ கய்Fப யுஹக்கிமூனக வ 'இன்தஹுமுத் தவ்ராது Fபீஹா ஹுக்முல் லாஹி தும்ம யதவல்லவ்ன மிம் Bபஃதி தாலிக்; வ மா உலா'இக Bபில்மு'மினீன்
எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது; அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது; எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுவார்கள்; இவர்கள் முஃமின்களே அல்லர்.
اِنَّاۤ اَنْزَلْنَا التَّوْرٰىةَ فِیْهَا هُدًی وَّنُوْرٌ ۚ یَحْكُمُ بِهَا النَّبِیُّوْنَ الَّذِیْنَ اَسْلَمُوْا لِلَّذِیْنَ هَادُوْا وَالرَّبّٰنِیُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَیْهِ شُهَدَآءَ ۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنَاஇறக்கினோம்التَّوْرٰٮةَதவ்றாத்தைفِيْهَاஅதிலேهُدًىநேர்வழிوَّنُوْرٌ‌ ۚஇன்னும் ஒளிيَحْكُمُதீர்ப்பளிப்பார்(கள்)بِهَاஅதைக் கொண்டேالنَّبِيُّوْنَநபிமார்கள்الَّذِيْنَஎவர்கள்اَسْلَمُوْاமுற்றிலும் பணிந்தனர்لِلَّذِيْنَஎவர்களுக்குهَادُوْاயூதராகி விட்டனர்وَ الرَّبَّانِيُّوْنَஇன்னும் குருமார்கள்وَالْاَحْبَارُஇன்னும் பண்டிதர்கள்بِمَاஎதன் காரணமாகاسْتُحْفِظُوْاகாக்கும்படி கோரப்பட்டார்கள்مِنْ كِتٰبِவேதத்தைاللّٰهِஅல்லாஹ்வின்وَكَانُوْاஇன்னும் இருந்தார்கள்عَلَيْهِஅதன் மீதுشُهَدَآءَ‌ ۚசாட்சியாளர்களாகفَلَا تَخْشَوُاஆகவே அஞ்சாதீர்கள்النَّاسَமக்களுக்குوَاخْشَوْنِஎனக்கு அஞ்சுங்கள்وَلَا تَشْتَرُوْاவாங்காதீர்கள்بِاٰيٰتِىْஎன் வசனங்களுக்குப் பகரமாகثَمَنًاகிரயத்தைقَلِيْلًا‌ ؕசொற்பமானதுوَمَنْஎவர்لَّمْ يَحْكُمْதீர்ப்பளிக்கவில்லைبِمَاۤ اَنْزَلَஇறக்கியதைக்கொண்டுاللّٰهُஅல்லாஹ்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْكٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்
இன்னா அன்Zஜல்னத் தவ்ராத Fபீஹா ஹுத(ன்)வ் வ னூர்; யஹ்குமு Bபிஹன் னBபிய்யூனல் லதீன அஸ்லமூ லில்லதீன ஹாதூ வர் ரBப்Bபானிய்யூன வல் அஹ்Bபாரு Bபிமஸ் துஹ்Fபிளூ மின் கிதாBபில் லாஹி வ கானூ 'அலய்ஹி ஷுஹதா'; Fபலா தக்-ஷவுன் னாஸ வக்-ஷவ்னி வலா தஷ்தரூ Bபி ஆயாதீ தமனன் கலீலா; வ மல் லம் யஹ்கும் Bபிமா அன்Zஜலல் லாஹு Fப உலா'இக ஹுமுல் காFபிரூன்
நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
وَكَتَبْنَا عَلَیْهِمْ فِیْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِ ۙ وَالْعَیْنَ بِالْعَیْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ ۙ وَالْجُرُوْحَ قِصَاصٌ ؕ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
وَكَتَبْنَاஇன்னும் விதித்தோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுفِيْهَاۤஅதில்اَنَّநிச்சயமாகالنَّفْسَஉயிர்بِالنَّفْسِۙஉயிருக்குப் பதிலாகوَالْعَيْنَஇன்னும் கண்بِالْعَيْنِகண்ணுக்குப் பதிலாகوَالْاَنْفَஇன்னும் மூக்குبِالْاَنْفِமூக்குக்குப் பதிலாகوَالْاُذُنَஇன்னும் காதுبِالْاُذُنِகாதுக்குப் பதிலாகوَالسِّنَّஇன்னும் பல்بِالسِّنِّۙபல்லுக்குப் பதிலாகوَالْجُرُوْحَஇன்னும் காயங்கள்قِصَاصٌ‌ؕபழிவாங்கப்படும்فَمَنْஎவர்تَصَدَّقَமன்னிப்பார்بِهٖஅதைفَهُوَஅதுكَفَّارَةٌபரிகாரமாகும்لَّهٗ ؕஅவருக்குوَمَنْஎவர்கள்لَّمْ يَحْكُمْதீர்ப்பளிக்கவில்லைبِمَاۤ اَنْزَلَஇறக்கியதைக்கொண்டுاللّٰهُஅல்லாஹ்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
வ கதBப்னா 'அலய்ஹிம் Fபீஹா அன்னன் னFப்ஸ Bபின்னFப்ஸி வல்'அய்ன Bபில்'அய்னி வல் அன்Fப Bபிலன்Fபி வல் உதுன Bபில் உதுனி வஸ்ஸின்ன Bபிஸ்ஸின்னி வல்ஜுரூஹ கிஸாஸ்; Fபமன் தஸத்தக Bபிஹீ Fபஹுவ கFப்Fபாரதுல் லஹ்; வ மல் லம் யஹ்கும் Bபிமா அன்Zஜலல் லாஹு Fப உலா'இக ஹுமுள் ளாலிமூன்
அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!.
وَقَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِعِیْسَی ابْنِ مَرْیَمَ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ ۪ وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ فِیْهِ هُدًی وَّنُوْرٌ ۙ وَّمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ وَهُدًی وَّمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟ؕ
وَقَفَّيْنَاதொடரச்செய்தோம்عَلٰٓى اٰثَارِهِمْஅவர்களுடைய அடிச்சுவடுகளில்بِعِيْسَىஈஸாவைابْنِமகன்مَرْيَمَமர்யமுடையمُصَدِّقًاஉண்மைப்படுத்துபவராகلِّمَاஎதைبَيْنَ يَدَيْهِதனக்கு முன்مِنَஇருந்துالتَّوْرٰٮةِ‌தவ்றாத்وَاٰتَيْنٰهُஇன்னும் அவருக்குக் கொடுத்தோம்الْاِنْجِيْلَஇன்ஜீலைفِيْهِஅதில்هُدًىநேர்வழிوَّنُوْرٌ ۙஇன்னும் ஒளிوَّ مُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதுلِّمَا بَيْنَ يَدَيْهِஎதை/தனக்கு முன்مِنَ التَّوْرٰٮةِதவ்றாத்திலிருந்துوَهُدًىநேர்வழியாகوَّمَوْعِظَةًஇன்னும் ஓர் உபதேசமாகلِّـلْمُتَّقِيْنَ ؕ‏அஞ்சுபவர்களுக்கு
வ கFப்Fபய்னா 'அலா ஆதாரிஹிம் Bபி 'ஈஸBப் னி மர்யம முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி மினத் தவ்ராதி வ ஆதய்னாஹுல் இன்ஜீல Fபீஹி ஹுத(ன்)வ் வ னூரு(ன்)வ் வ முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி மினத் தவ்ராதி வ ஹுத(ன்)வ் வ மவ்'இளதல் லில்முத்தகீன்
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
وَلْیَحْكُمْ اَهْلُ الْاِنْجِیْلِ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فِیْهِ ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
وَلْيَحْكُمْதீர்ப்பளிக்கவும்اَهْلُ الْاِنْجِيْلِஇன்ஜீலுடையவர்கள்بِمَاۤஇறக்கியதைக்கொண்டுاَنْزَلَ اللّٰهُஅல்லாஹ்فِيْهِ‌ؕஅதில்وَمَنْஎவர்கள்لَّمْ يَحْكُمْதீர்ப்பளிக்கவில்லைبِمَاۤஎதைக் கொண்டுاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْفٰسِقُوْنَ‏பாவிகள்
வல்யஹ்கும் அஹ்லுல் இன்ஜீலி Bபிமா அன்Zஜலல் லாஹு Fபீஹ்; வ மல் லம் யஹ்கும் Bபிமா அன்Zஜலல் லாஹு Fப உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.
وَاَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَیْمِنًا عَلَیْهِ فَاحْكُمْ بَیْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَقِّ ؕ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ لِّیَبْلُوَكُمْ فِیْ مَاۤ اٰتٰىكُمْ فَاسْتَبِقُوا الْخَیْرٰتِ ؕ اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟ۙ
وَاَنْزَلْنَاۤஇன்னும் இறக்கினோம்اِلَيْكَஉமக்குالْكِتٰبَஇவ்வேதத்தைبِالْحَـقِّஉண்மையுடன் கூடியمُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதாகلِّمَا بَيْنَ يَدَيْهِதனக்கு முன்னுள்ளதைمِنَஇருந்துالْكِتٰبِவேதம்وَمُهَيْمِنًاஇன்னும் பாதுகாக்கக் கூடியதாகعَلَيْهِ‌அதைفَاحْكُمْஆகவே தீர்ப்பளிப்பீராக!بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِمَاۤ اَنْزَلَஇறக்கியதைக் கொண்டேاللّٰهُஅல்லாஹ்وَلَا تَتَّبِعْபின்பற்றாதீர்اَهْوَآءவிருப்பங்களைهُمْஅவர்களுடையعَمَّاஎதைவிட்டுجَآءَكَவந்தது/உமக்குمِنَ الْحَـقِّ‌ؕஉண்மையிலிருந்துلِكُلٍّஒவ்வொருவருக்கும்جَعَلْنَاஏற்படுத்தினோம்مِنْكُمْஉங்களில்شِرْعَةًஒரு மார்க்கத்தைوَّمِنْهَاجًا ؕஇன்னும் ஒரு வழியைوَلَوْ شَآءَநாடி இருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَجَـعَلَـكُمْஉங்களை ஆக்கியிருப்பான்اُمَّةًஒரு சமுதாயமாகوَّاحِدَةًஒரேوَّلٰـكِنْஎனினும்لِّيَبْلُوَكُمْஅவன் உங்களை சோதிப்பதற்காகفِىْ مَاۤ اٰتٰٮكُمْஉங்களுக்கு அவன் கொடுத்தவற்றில்فَاسْتَبِقُواஆகவே முந்துங்கள்الْخَـيْـرٰتِ‌ؕநன்மைகளில்اِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்مَرْجِعُكُمْஉங்கள் மீளுமிடம்جَمِيْعًاஅனைவரும்فَيُنَبِّئُكُمْஅறிவிப்பான்/உங்களுக்குبِمَاஎதைكُنْتُمْஇருந்தீர்கள்فِيْهِஅதில்تَخْتَلِفُوْنَۙ‏முரண்படுகிறீர்கள்
வ அன்Zஜல்னா இலய்கல் கிதாBப Bபில்ஹக்கி முஸத்திகல்லிமா Bபய்ன யதய்ஹி மினல் கிதாBபி வ முஹய்மினன் 'அலய்ஹி Fபஹ்கும் Bபய்னஹும் Bபிமா அன்Zஜலல் லாஹு வலா தத்தBபிஃ அஹ்வா'அஹும் 'அம்மா ஜா'அக மினல் ஹக்க்; லிகுல்லின் ஜ'அல்னா மின்கும் ஷிர்'அத(ன்)வ் வ மின்ஹாஜா; வ லவ் ஷா'அல் லாஹு லஜ'அலகும் உம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ லாகில் லியBப்லுவகும் Fபீ மா ஆதாகும் Fபஸ்தBபிகுல் கய்ராத்; இலல் லாஹி மர்ஜி'உகும் ஜமீ'அன் FபயுனBப் Bபி'உகும் Bபிமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
وَاَنِ احْكُمْ بَیْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ یَّفْتِنُوْكَ عَنْ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَیْكَ ؕ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّصِیْبَهُمْ بِبَعْضِ ذُنُوْبِهِمْ ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ ۟
وَاَنِ احْكُمْதீர்ப்பளிப்பீராகبَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِمَاۤ اَنْزَلَஇறக்கியதைக்கொண்டுاللّٰهُஅல்லாஹ்وَلَا تَتَّبِعْபின்பற்றாதீர்اَهْوَآءَهُمْஅவர்களின் விருப்பங்களைوَاحْذَرْهُمْஅவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராகاَنْ يَّفْتِنُوْكَஉம்மை அவர்கள் திருப்பிவிடுவதுعَنْۢ بَعْضِசிலவற்றிலிருந்துمَاۤஎதுاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்اِلَيْكَ‌ؕஉமக்குفَاِنْ تَوَلَّوْاஅவர்கள் திரும்பினால்فَاعْلَمْஅறிந்து கொள்வீராகاَنَّمَاஎல்லாம்يُرِيْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَنْ يُّصِيْبَهُمْஅவர்களை சோதிப்பதைத்தான்بِبَـعْضِசிலவற்றின்ذُنُوْبِهِمْ‌ؕஅவர்களுடைய பாவங்கள்وَاِنَّ كَثِيْرًاநிச்சயமாக அதிகமானோர்مِّنَ النَّاسِமனிதர்களில்لَفٰسِقُوْنَ‏பாவிகள்தான்
வ அனிஹ் கும் Bபய்னஹும் Bபிமா அன்Zஜலல் லாஹு வலா தத்தBபிஃ அஹ்வா'அஹும் வஹ்தர்ஹும் அய் யFப்தினூக 'அம் Bபஃளி மா அன்Zஜலல் லாஹு இலய்க Fப இன் தவல்லவ் Fபஃலம் அன்னமா யுரீதுல் லாஹு அய் யுஸீBபஹும் BபிBபஃளி துனூBபிஹிம்; வ இன்ன கதீரம் மினன் னாஸி லFபாஸிகூன்
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
اَفَحُكْمَ الْجَاهِلِیَّةِ یَبْغُوْنَ ؕ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟۠
اَفَحُكْمَசட்டத்தையா?الْجَـاهِلِيَّةِஅறியாமைக்காலத்தின்يَـبْغُوْنَ‌ؕதேடுகின்றனர்وَمَنْயார்اَحْسَنُமிக அழகானவன்مِنَவிடاللّٰهِஅல்லாஹ்வைحُكْمًاசட்டத்தால்لِّـقَوْمٍசமுதாயத்திற்குيُّوْقِنُوْنَ‏உறுதி கொள்கின்றனர்
அFபஹுக்மல் ஜாஹிலிய்யதி யBப்கூன்; வ மன் அஹ்ஸனு மினல் லாஹி ஹுக்மல் லிகவ்மி(ன்)ய் யூகினூன்
அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْیَهُوْدَ وَالنَّصٰرٰۤی اَوْلِیَآءَ ؔۘ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ وَمَنْ یَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَتَّخِذُواஆக்காதீர்கள்الْيَهُوْدَயூதர்களைوَالنَّصٰرٰۤىஇன்னும் கிறித்தவர்களைاَوْلِيَآءَநண்பர்களாகبَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِيَآءُநண்பர்கள்بَعْضٍ‌ؕசிலரின்وَمَنْஎவர்يَّتَوَلَّهُمْநட்புகொள்வார்/அவர்களுடன்مِّنْكُمْஉங்களில்فَاِنَّهٗநிச்சயமாக அவர்مِنْهُمْ‌ؕஅவர்களைச் சார்ந்தவர்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதுல் யஹூத வன் னஸாரா அவ்லியா'; Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; வ மய் யதவல்லஹும் மின்கும் Fப இன்னஹூ மின்ஹும்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
فَتَرَی الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ یُّسَارِعُوْنَ فِیْهِمْ یَقُوْلُوْنَ نَخْشٰۤی اَنْ تُصِیْبَنَا دَآىِٕرَةٌ ؕ فَعَسَی اللّٰهُ اَنْ یَّاْتِیَ بِالْفَتْحِ اَوْ اَمْرٍ مِّنْ عِنْدِهٖ فَیُصْبِحُوْا عَلٰی مَاۤ اَسَرُّوْا فِیْۤ اَنْفُسِهِمْ نٰدِمِیْنَ ۟ؕ
فَتَـرَىகாண்பீர்الَّذِيْنَஎவர்களைفِىْ قُلُوْبِهِمْதங்கள் உள்ளங்களில்مَّرَضٌநோய்يُّسَارِعُوْنَவிரைபவர்களாகفِيْهِمْஅவர்களில்يَقُوْلُوْنَகூறுகின்றனர்نَخْشٰٓىபயப்படுகிறோம்اَنْ تُصِيْبَـنَاஎங்களைஅடைவதைدَآٮِٕرَةٌ‌ ؕஆபத்துفَعَسَىஆகலாம்اللّٰهُஅல்லாஹ்اَنْ يَّاْتِىَவருவதுبِالْفَتْحِவெற்றியைக் கொண்டுاَوْஅல்லதுاَمْرٍஒரு காரியம்مِّنْஇருந்துعِنْدِهٖதன்னிடம்فَيُصْبِحُوْاஆகிவிடுவார்கள்عَلٰىமீதுمَاۤஎதுاَسَرُّوْاமறைத்தார்கள்فِىْۤ اَنْفُسِهِمْதங்கள் உள்ளங்களில்نٰدِمِيْنَ ؕ‏துக்கப்பட்டவர்களாக
Fபதரல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)ய் யுஸாரி'ஊன Fபீஹிம் யகூலூன னக்-ஷா அன் துஸீBபனா தா'இரஹ்; Fப'அஸல்லாஹு அய் யாதிய Bபில்Fபத்ஹி அவ் அம்ரிம் மின் 'இன்திஹீ Fப யுஸ்Bபிஹூ 'அலா மா அஸர்ரூ Fபீ அன்Fபுஸிஹிம் னாதிமீன்
எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) “எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்” என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.
وَیَقُوْلُ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَهٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ ۙ اِنَّهُمْ لَمَعَكُمْ ؕ حَبِطَتْ اَعْمَالُهُمْ فَاَصْبَحُوْا خٰسِرِیْنَ ۟
وَيَقُوْلُஇன்னும் கூறுவார்(கள்)الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்கள்اَهٰٓؤُلَاۤءِஇவர்கள்தானாالَّذِيْنَஎவர்கள்اَقْسَمُوْاசத்தியம்செய்தார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுجَهْدَஉறுதியாகاَيْمَانِهِمْ‌ۙதங்கள் சத்தியங்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَمَعَكُمْ‌ ؕஉங்களுடன்தான்حَبِطَتْஅழிந்து விட்டனاَعْمَالُهُمْஅவர்களுடைய (நல்ல)செயல்கள்فَاَصْبَحُوْاஆகவே ஆகிவிட்டனர்خٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளாக
வ யகூலுல் லதீன ஆமனூ அஹா'உலா'இல் லதீன அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் இன்னஹும் லம'அகும்; ஹBபிதத் அஃமாலுஹும் Fப அஸ்Bபஹூ காஸிரீன்
(மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?” என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன; இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا مَنْ یَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِیْنِهٖ فَسَوْفَ یَاْتِی اللّٰهُ بِقَوْمٍ یُّحِبُّهُمْ وَیُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَی الْمُؤْمِنِیْنَ اَعِزَّةٍ عَلَی الْكٰفِرِیْنَ ؗ یُجَاهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا یَخَافُوْنَ لَوْمَةَ لَآىِٕمٍ ؕ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேمَنْஎவரும்يَّرْتَدَّமாறுவார்مِنْكُمْஉங்களிலிருந்துعَنْவிட்டுدِيْـنِهٖதன் மார்க்கம்فَسَوْفَ يَاْتِىகொண்டு வருவான்اللّٰهُஅல்லாஹ்بِقَوْمٍஒரு சமுதாயத்தைيُّحِبُّهُمْநேசிப்பான்/அவர்களைوَيُحِبُّوْنَهٗۤ ۙஇன்னும் நேசிப்பார்கள் / அவனைاَذِلَّةٍபணிவானவர்கள்عَلَىஇடம்الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்கள்اَعِزَّةٍகண்டிப்பானவர்கள்عَلَى الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களிடம்يُجَاهِدُوْنَபோரிடுவார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَلَا يَخَافُوْنَபயப்பட மாட்டார்கள்لَوْمَةَபழிப்பைلَاۤٮِٕمٍ‌ ؕபழிப்பவனின்ذٰ لِكَஇதுفَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்يُؤْتِيْهِஅதை கொடுக்கின்றான்مَنْ يَّشَآءُ‌ ؕஎவருக்கு/நாடுகிறான்وَاللّٰهُஅல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ மய் யர்தத்த மின்கும் 'அன் தீனிஹீ Fபஸவ்Fப ய'தில்லாஹு Bபிகவ்மி(ன்)ய் யுஹிBப்Bபுஹும் வ யுஹிBப்Bபூனஹூ அதில்லதின் 'அலல் மு'மினீன அ'இZஜ்Zஜதின் 'அலல் காFபிரீன யுஜாஹிதூன Fபீ ஸBபீலில் லாஹி வலா யகாFபூன லவ்மத லா'இம்; தாலிக Fபள்லுல் லாஹி யு'தீஹி மய் யஷா'; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.
اِنَّمَا وَلِیُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رٰكِعُوْنَ ۟
اِنَّمَاஎல்லாம்وَلِيُّكُمُஉங்கள் நண்பன்اللّٰهُஅல்லாஹ்وَرَسُوْلُهٗஇன்னும் அவனுடைய தூதர்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்கள்الَّذِيْنَஎவர்கள்يُقِيْمُوْنَநிலை நிறுத்துகின்றனர்الصَّلٰوةَதொழுகையைوَيُؤْتُوْنَஇன்னும் கொடுக்கின்றனர்الزَّكٰوةَஸகாத்தைوَهُمْ رَاكِعُوْنَ‏அவர்கள் தலைகுனிவார்கள்
இன்னமா வலிய்யுகுமுல் லாஹு வ ரஸூலுஹூ வல் லதீன ஆமனுல் லதீன யுகீமூனஸ் ஸலாத வ யு'தூனZஜ் Zஜகாத வ ஹும் ராகி'ஊன்
நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.
وَمَنْ یَّتَوَلَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالَّذِیْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ ۟۠
وَمَنْஎவர்يَّتَوَلَّநேசிக்கிறார்اللّٰهَஅல்லாஹ்வைوَ رَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதரைوَالَّذِيْنَ اٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டவர்களைفَاِنَّநிச்சயமாகحِزْبَபடையினர்اللّٰهِஅல்லாஹ்வின்هُمُஅவர்கள்தான்الْغٰلِبُوْنَ‏வெற்றியாளர்கள்
வ மய் யதவல்லல் லாஹ வ ரஸூலஹூ வல்லதீன ஆமனூ Fப இன்ன ஹிZஜ்Bபல் லாஹி ஹுமுல் காலிBபூன்
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ اَوْلِیَآءَ ۚ وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَـتَّخِذُواஎடுத்துக் கொள்ளாதீர்கள்الَّذِيْنَஎவர்கள்اتَّخَذُوْاஎடுத்துக்கொண்டார்கள்دِيْنَكُمْஉங்கள் மார்க்கத்தைهُزُوًاபரிகாசமாகوَّلَعِبًاஇன்னும் விளையாட்டாகمِّنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டவர்கள்الْكِتٰبَவேதம்مِنْ قَبْلِكُمْஉங்களுக்குமுன்னர்وَالْـكُفَّارَஇன்னும் நிராகரிப்பவர்களைاَوْلِيَآءَ‌ ۚநண்பர்களாகوَاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதுல் லதீனத் தகதூ தீனகும் ஹுZஜுவ(ன்)வ் வ ல'இBபம் மினல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் வல்குFப்Fபார அவ்லியா'; வத்தகுல் லாஹ இன் குன்தும் முஉ'மினீன்
முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
وَاِذَا نَادَیْتُمْ اِلَی الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْقِلُوْنَ ۟
وَ اِذَا نَادَيْتُمْநீங்கள் அழைத்தால்اِلَى الصَّلٰوةِதொழுகைக்குاتَّخَذُوْهَاஅதை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்هُزُوًاபரிகாசமாகوَّلَعِبًا‌ ؕஇன்னும் விளையாட்டாகذٰ لِكَஅதுبِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்قَوْمٌமக்கள்لَّا يَعْقِلُوْنَ‏புரிய மாட்டார்கள்
வ இதா னாதய்தும் இலஸ் ஸலாதித் தகதூஹா ஹுZஜு வன்'வ் வ ல'இBபா; தாலிக Bபிஅன்ன்னஹும் கவ்முல் லா யஃகிலூன்
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ هَلْ تَنْقِمُوْنَ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلُ ۙ وَاَنَّ اَكْثَرَكُمْ فٰسِقُوْنَ ۟
قُلْகூறுவீராகيٰۤـاَهْلَ الْـكِتٰبِவேதக்காரர்களேهَلْ تَـنْقِمُوْنَநீங்கள் வெறுக்கிறீர்களா? (பழிக்கிறீர்களா?)مِنَّاۤஎங்களைاِلَّاۤதவிரاَنْ اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவேبِاللّٰهِஅல்லாஹ்வைوَمَاۤ اُنْزِلَஇன்னும் இறக்கப்பட்டதைاِلَـيْنَاஎங்களுக்குوَمَاۤ اُنْزِلَஇன்னும் இறக்கப்பட்டதைمِنْ قَبْلُ ۙமுன்னர்وَاَنَّ اَكْثَرَநிச்சயமாக அதிகமானவர்கள்كُمْஉங்களில்فٰسِقُوْنَ‏பாவிகள்
குல் யா அஹ்லல் கிதாBபி ஹல் தன்கிமூன மின்னா இல்லா அன் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வமா உன்Zஜில மின் கBப்லு வ அன்ன்ன அக்தரகும் Fபாஸிகூன்
“வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
قُلْ هَلْ اُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكَ مَثُوْبَةً عِنْدَ اللّٰهِ ؕ مَنْ لَّعَنَهُ اللّٰهُ وَغَضِبَ عَلَیْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِیْرَ وَعَبَدَ الطَّاغُوْتَ ؕ اُولٰٓىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ عَنْ سَوَآءِ السَّبِیْلِ ۟
قُلْகூறுவீராகهَلْ اُنَـبِّئُكُمْநான் உங்களுக்கு அறிவிக்கவா?بِشَرٍّமிகக் கெட்டவனைمِّنْவிடذٰ لِكَஇதைمَثُوْبَةًதண்டனையால்عِنْدَ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்விடம்مَنْஎவர்لَّعَنَهُசபித்தான்/அவரைاللّٰهُஅல்லாஹ்وَغَضِبَஇன்னும் கோபித்தான்عَلَيْهِஅவர்(கள்) மீதுوَجَعَلَஆக்கினான்مِنْهُمُஅவர்களில்الْقِرَدَةَகுரங்குகளாகوَالْخَـنَازِيْرَஇன்னும் பன்றிகளாகوَعَبَدَஇன்னும் வணங்கினார்(கள்)الطَّاغُوْتَ‌ ؕஷைத்தானைاُولٰٓٮِٕكَஅவர்கள்தான்شَرٌّமிகக் கெட்டவர்கள்مَّكَانًاதகுதியால்وَّاَضَلُّஇன்னும் மிகவும் வழிதவறியவர்கள்عَنْஇருந்துسَوَآءِநேரான (நடு)السَّبِيْلِ‏பாதை
குல் ஹல் உனBப்Bபி'உகும் Bபிஷர்ரிம் மின் தாலிக மதூBபதன் 'இன்தல் லாஹ்; மல்ல'அன ஹுல் லாஹு வ களிBப 'அலய்ஹி வ ஜ'அல மின்ஹுமுல் கிரதத வல் கனாZஜீர வ 'அBபதத் தாகூத்; உலா'இக ஷர்ரும் மகான(ன்)வ் வ அளல்லு 'அன் ஸவா'இஸ் ஸBபீல்
“அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَاِذَا جَآءُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا وَقَدْ دَّخَلُوْا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوْا بِهٖ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا كَانُوْا یَكْتُمُوْنَ ۟
وَاِذَا جَآءُوْஅவர்கள் வந்தால்كُمْஉங்களிடம்قَالُوْۤاகூறினர்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்وَقَدْதிட்டமாகدَّخَلُوْاநுழைந்தார்கள்بِالْكُفْرِநிராகரிப்பைக் கொண்டேوَهُمْஇன்னும் அவர்கள்قَدْதிட்டமாகخَرَجُوْاவெளியேறினார்கள்بِهٖ‌ؕஅதனுடன்وَاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎதைكَانُوْاஇருந்தார்கள்يَكْتُمُوْنَ‏மறைக்கிறார்கள்
வ இதா ஜா'ஊகும் காலூ ஆமன்னா வ கத் தகலூ Bபில்குFப்ரி வ ஹும் கத் கரஜூ Bபிஹ்; வல்லாஹு அஃலமு Bபிமா கானூ யக்துமூன்
(முஃமின்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் “நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்!” என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் குஃப்ருடன் (நிராகரிப்புடன்)தான் வந்தார்கள்; இன்னும் அதனுடனேயே வெளியேறினார்கள், (நிச்சயமாக) அவர்கள் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் மிகவும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
وَتَرٰی كَثِیْرًا مِّنْهُمْ یُسَارِعُوْنَ فِی الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاَكْلِهِمُ السُّحْتَ ؕ لَبِئْسَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَتَرٰىகாண்பீர்كَثِيْرًاஅதிகமானவர்களைمِّنْهُمْஅவர்களில்يُسَارِعُوْنَவிரைபவர்களாகفِى الْاِثْمِபாவத்தில்وَالْعُدْوَانِஇன்னும் அநியாயம்وَاَكْلِهِمُஇன்னும் விழுங்குவதுالسُّحْتَ‌ ؕஆகாத செல்வத்தைلَبِئْسَகெட்டுவிட்டதுمَاஎதுكَانُوْاஇருந்தார்கள்يَعْمَلُوْنَ‏செய்கிறார்கள்
வ தரா கதீரம் மின்ஹும் யுஸாரி'ஊன Fபில் இத்மி வல்'உத்வானி வ அக்லிஹிமுஸ் ஸுஹ்த்; லBபி'ஸ மா கானூ யஃமலூன்
அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
لَوْلَا یَنْهٰىهُمُ الرَّبّٰنِیُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَ ؕ لَبِئْسَ مَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟
لَوْلَا يَنْهٰٮهُمُஅவர்களை தடை செய்ய வேண்டாமா?الرَّبَّانِيُّوْنَகுருமார்கள்وَالْاَحْبَارُஇன்னும் பண்டிதர்கள்عَنْ قَوْلِهِمُஅவர்களுடைய பேச்சிலிருந்துالْاِثْمَபாவமானوَاَكْلِهِمُஇன்னும் அவர்கள் விழுங்குவதுالسُّحْتَ‌ؕவிலக்கப்பட்டதைلَبِئْسَகெட்டுவிட்டதுمَاஎதுكَانُوْاஇருந்தார்கள்يَصْنَعُوْنَ‏செய்கிறார்கள்
லவ் லா யன்ஹாஹுமுர் ரBப்Bபானிய்யூன வல் அஹ்Bபாரு 'அன் கவ்லிஹிமுல் இத்மா வ அக்லிஹிமுஸ் ஸுஹ்த்; லBபி'ஸ மா கானூ யஸ்ன'ஊன்
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
وَقَالَتِ الْیَهُوْدُ یَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ ؕ غُلَّتْ اَیْدِیْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا ۘ بَلْ یَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ یُنْفِقُ كَیْفَ یَشَآءُ ؕ وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ؕ وَاَلْقَیْنَا بَیْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ؕ كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ ۙ وَیَسْعَوْنَ فِی الْاَرْضِ فَسَادًا ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ ۟
وَقَالَتِகூறினர்الْيَهُوْدُயூதர்கள்يَدُகைاللّٰهِஅல்லாஹ்வின்مَغْلُوْلَةٌ‌ ؕகட்டப்பட்டிருக்கிறதுغُلَّتْகட்டப்பட்டனاَيْدِيْهِمْஅவர்களுடைய கைகள்وَلُعِنُوْاசபிக்கப்பட்டனர்بِمَاஎதன் காரணமாகقَالُوْا‌ ۘகூறினர்بَلْமாறாகيَدٰهُஅவனுடைய இரு கைகள்مَبْسُوْطَتٰنِ ۙவிரிக்கப்பட்டுள்ளனيُنْفِقُதர்மம் புரிகிறான்كَيْفَஎவ்வாறுيَشَآءُ‌ ؕஅவன் நாடுகிறான்وَلَيَزِيْدَنَّநிச்சயமாக அதிகப்படுத்தும்كَثِيْرًاஅதிகமானோர்مِّنْهُمْஅவர்களில்مَّاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்طُغْيَانًاவரம்பு மீறுவதைوَّكُفْرًا‌ ؕஇன்னும் நிராகரிப்பைوَاَ لْقَيْنَاஏற்படுத்தினோம்بَيْنَهُمُஅவர்களுக்கு மத்தியில்الْعَدَاوَةَபகைமையைوَالْبَغْضَآءَஇன்னும் வெறுப்பைاِلٰىவரைيَوْمِ الْقِيٰمَةِ‌ ؕமறுமை நாள்كُلَّمَاۤஎல்லாம்اَوْقَدُوْاமூட்டினார்கள்نَارًاநெருப்பைلِّلْحَرْبِபோருக்குاَطْفَاَهَاஅணைத்து விட்டான்/அதைاللّٰهُ‌ ۙஅல்லாஹ்وَيَسْعَوْنَஇன்னும் விரைகிறார்கள்فِى الْاَرْضِபூமியில்فَسَادًا‌ ؕகலகம் செய்வதற்காகوَاللّٰهُஅல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْمُفْسِدِيْنَ‏கலகம் செய்பவர்களை
வ காலதில் யஹூது யதுல்லாஹி மக்லூலஹ்; குல்லத் அய்தீஹிம் வ லு'இனூ Bபிமா காலூ; Bபல் யதாஹு மBப்ஸூ ததானி யுன்Fபிகு கய்Fப யஷா'; வ ல யZஜீதன்ன கதீரம்ம் மின்ஹும் மா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக துக்யான(ன்)வ் வ குFப்ரா; வ அல்கய்னா Bபய்னஹுமுல் 'அதாவத வல் Bபக்ளா அ' இலா யவ்மில் கியாமஹ்; குல்லமா அவ்கதூ னாரல் லில்ஹர்Bபி அத் Fப-அஹல் லாஹ்; வ யஸ்'அவ்ன Fபில் அர்ளி Fபஸாதா; வல் லாஹு லா யுஹிBப்Bபுல் முFப்ஸிதீன்
“அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
وَلَوْ اَنَّ اَهْلَ الْكِتٰبِ اٰمَنُوْا وَاتَّقَوْا لَكَفَّرْنَا عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَاَدْخَلْنٰهُمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
وَلَوْ اَنَّஇருந்தால்اَهْلَ الْـكِتٰبِவேதக்காரர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَاتَّقَوْاஇன்னும் அஞ்சினார்கள்لَـكَفَّرْنَاநிச்சயமாக அகற்றிடுவோம்عَنْهُمْஅவர்களை விட்டுسَيِّاٰتِهِمْபாவங்களை அவர்களுடையوَلَاَدْخَلْنٰهُمْஇன்னும் நுழைத்திடுவோம்/அவர்களைجَنّٰتِசொர்க்கங்களில்النَّعِيْمِ‏இன்பம் நிறைந்த
வ லவ் அன்ன அஹ்லல் கிதாBபி ஆமனூ வத்தகவ் லகFப்Fபர்னா 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ ல அத்கல்னாஹு ஜன்னாதின் ன'ஈம்
வேதமுடையவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழைய வைப்போம்.
وَلَوْ اَنَّهُمْ اَقَامُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِمْ مِّنْ رَّبِّهِمْ لَاَكَلُوْا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ ؕ مِنْهُمْ اُمَّةٌ مُّقْتَصِدَةٌ ؕ وَكَثِیْرٌ مِّنْهُمْ سَآءَ مَا یَعْمَلُوْنَ ۟۠
وَلَوْ اَنَّهُمْஅவர்கள் இருந்தால்اَقَامُواநிலைநிறுத்தினார்கள்التَّوْرٰٮةَதவ்றாத்தைوَالْاِنْجِيْلَஇன்னும் இன்ஜீலைوَمَاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْهِمْஅவர்களுக்குمِّنْஇருந்துرَّبِّهِمْஅவர்களுடைய இறைவன்لَاَ كَلُوْاஇன்னும் புசித்திருப்பார்கள்مِنْஇருந்துفَوْقِهِمْஅவர்களுக்கு மேல்وَمِنْ تَحْتِஇன்னும் கீழிருந்துاَرْجُلِهِمْ‌ؕஅவர்களுடைய கால்கள்مِنْهُمْஅவர்களில்اُمَّةٌஒரு கூட்டம்مُّقْتَصِدَةٌ‌  ؕநேர்மையானதுوَكَثِيْرٌஇன்னும் அதிகமானோர்مِّنْهُمْஅவர்களில்سَآءَகெட்டு விட்டனمَاஎதுيَعْمَلُوْنَ‏செய்கிறார்கள்
வ லவ் அன்னஹும் அகாமுத் தவ்ராத வல் இன்ஜீல வ மா உன்Zஜில இலய்ஹிம் மிர் ரBப்Bபிஹிம் ல அகலூ மின் Fபவ்கிஹிம் வ மின் தஹ்தி அர்ஜுலிஹிம்; மின்ஹும் உம்மதும் முக்த ஸிதது(ன்)வ் வ கதீரும் மின்ஹும் ஸா'அ மா யஃமலூன்
இன்னும்: அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும்.
یٰۤاَیُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ ؕ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهٗ ؕ وَاللّٰهُ یَعْصِمُكَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُதூதரேبَلِّغْஎடுத்துரைப்பீராகمَاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَ‌ ؕஉம் இறைவன்وَاِنْ لَّمْ تَفْعَلْநீர் செய்யவில்லையென்றால்فَمَا بَلَّغْتَநீர் எடுத்துரைக்கவில்லைرِسٰلَـتَهٗ‌ ؕதூதை/அவனுடையوَاللّٰهُஅல்லாஹ்يَعْصِمُكَகாப்பாற்றுவான்/உம்மைمِنَ النَّاسِ‌ ؕமக்களிடமிருந்துاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَசமுதாயத்தைالْـكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
யா அய்யுஹர் ரஸூலு Bபல்லிக் மா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக வ இல் லம் தFப்'அல் Fபமா Bபல்லக்த ரிஸாலதஹ்; வல்லாஹு யஃஸிமுக மினன் னாஸ்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لَسْتُمْ عَلٰی شَیْءٍ حَتّٰی تُقِیْمُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ ؕ وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ۚ فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟
قُلْகூறுவீராகيٰۤـاَهْلَ الْـكِتٰبِவேதக்காரர்களேلَسْتُمْநீங்கள் இல்லைعَلٰى شَىْءٍஒரு விஷயத்திலும்حَتّٰىவரைتُقِيْمُواநிலைநிறுத்துவீர்கள்التَّوْرٰٮةَதவ்றாத்தைوَالْاِنْجِيْلَஇன்ஜீலைوَمَاۤஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْهِمْஉங்களுக்குمِّنْஇருந்துرَّبِّكُمْ‌ ؕஉங்கள் இறைவன்وَلَيَزِيْدَنَّநிச்சயமாக அதிகப்படுத்துகிறதுكَثِيْرًاஅதிகமானவர்களுக்குمِّنْهُஅவர்களில்مَّاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்طُغْيَانًاவரம்பு மீறுவதைوَّكُفْرًا‌ۚஇன்னும் நிராகரிப்பைفَلَا تَاْسَஆகவே கவலைப்படாதீர்عَلَىமீதுالْقَوْمِசமுதாயம்الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
குல் யா அஹ்லல் கிதாBபி லஸ்தும் 'அலா ஷய்'இன் ஹத்தா துகீமுத் தவ்ராத வல் இன்ஜீல வ மா உன்Zஜில இலய்கும் மிர் ரBப்Bபிகும்; வ லயZஜீதன்ன கதீரம் மின்ஹும் மா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக துக் யான(ன்)வ் வ குFப்ரன் Fபலா தாஸ 'அலல் கவ்மில் காFபிரீன்
“வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை” என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالصّٰبِـُٔوْنَ وَالنَّصٰرٰی مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هَادُوْاயூதர்கள்وَالصَّابِــٴُــوْنَஇன்னும் சாபியீன்கள்وَالنَّصٰرٰىஇன்னும் கிறித்தவர்கள்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِஇன்னும் இறுதி நாளைوَعَمِلَஇன்னும் செய்தார்صَالِحًـاநன்மையைفَلَا خَوْفٌஒரு பயமுமில்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْஇன்னும் அவர்கள் இல்லைيَحْزَنُوْنَ‏கவலைப்படுவார்கள்
இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாதூ வஸ் ஸாBபி'ஊன வன் னஸாரா மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ 'அமில ஸாலிஹன் Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
لَقَدْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَاَرْسَلْنَاۤ اِلَیْهِمْ رُسُلًا ؕ كُلَّمَا جَآءَهُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُهُمْ ۙ فَرِیْقًا كَذَّبُوْا وَفَرِیْقًا یَّقْتُلُوْنَ ۟ۗ
لَقَدْதிட்டமாகاَخَذْنَاவாங்கினோம்مِيْثَاقَஉறுதிமொழியைبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களின்وَاَرْسَلْنَاۤஇன்னும் அனுப்பினோம்اِلَيْهِمْஅவர்களிடம்رُسُلًا ؕதூதர்களைكُلَّمَا جَآءَهُمْஅவர்களிடம் வந்தபோதெல்லாம்رَسُوْلٌ ۢஒரு தூதர்بِمَاஎதை கொண்டுلَا تَهْوٰٓىவிரும்பாதுاَنْفُسُهُمْۙஅவர்களுடைய மனங்கள்فَرِيْقًاஒரு வகுப்பாரைكَذَّبُوْاபொய்ப்பித்தனர்وَفَرِيْقًاஇன்னும் ஒரு வகுப்பாரைيَّقْتُلُوْنَ‏கொல்கின்றனர்
லகத் அகத்னா மீதாக Bபனீ இஸ்ரா'ஈல வ அர்ஸல்னா இலய்ஹிம் ருஸுலன் குல்லமா ஜா'அஹும் ரஸூலும் Bபிமா லா தஹ்வா அன்Fபுஸுஹும் Fபரீகன் கத்தBபூ வ Fபரீக(ன்)ய் யக்துலூன்
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்; எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைப் கொலை செய்தும் வந்தார்கள்.
وَحَسِبُوْۤا اَلَّا تَكُوْنَ فِتْنَةٌ فَعَمُوْا وَصَمُّوْا ثُمَّ تَابَ اللّٰهُ عَلَیْهِمْ ثُمَّ عَمُوْا وَصَمُّوْا كَثِیْرٌ مِّنْهُمْ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟
وَحَسِبُوْۤاஇன்னும் எண்ணினர்اَلَّا تَكُوْنَஏற்படாதுفِتْنَةٌதண்டனைفَعَمُوْاஆகவே குருடாகினர்وَصَمُّوْاஇன்னும் செவிடாகினர்ثُمَّபிறகுتَابَபிழைபொறுத்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஅவர்கள் மீதுثُمَّபிறகும்عَمُوْاகுருடாகினர்وَصَمُّوْاஇன்னும் செவிடாகினர்كَثِيْرٌஅதிகமானோர்مِّنْهُمْ‌ؕஅவர்களில்وَاللّٰهُஅல்லாஹ்بَصِيْرٌۢஉற்று நோக்குபவன்بِمَاஎதைيَعْمَلُوْنَ‏செய்கிறார்கள்
வ ஹஸிBபூ அல்லா தகூன Fபித்னதுன் Fப'அமூ வ ஸம்மூ தும்ம தாBபல் லாஹு 'அலய்ஹிம் தும்ம 'அமூ வ ஸம்மூ கதீரும் மின்ஹும்; வல்லாஹு Bபஸீரும் Bபிமா யஃமலூன்
(இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆகவே அவர்கள் (உண்மையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்; இதற்குப் பிறகும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்; எனினும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகவும் செவிடர்களாகவுமே இருந்தனர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ وَقَالَ الْمَسِیْحُ یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّیْ وَرَبَّكُمْ ؕ اِنَّهٗ مَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَیْهِ الْجَنَّةَ وَمَاْوٰىهُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
لَقَدْதிட்டவட்டமாகكَفَرَநிராகரித்தார்الَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன்தான்الْمَسِيْحُமஸீஹ்தான்ابْنُமகன்مَرْيَمَ‌ ؕமர்யமுடையوَقَالَகூறினார்الْمَسِيْحُமஸீஹ்يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களே!اعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைرَبِّىْஎன் இறைவன்وَرَبَّكُمْ‌ ؕஇன்னும் உங்கள் இறைவன்اِنَّهٗநிச்சயமாக செய்திمَنْஎவர்يُّشْرِكْஇணைவைக்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வுக்குفَقَدْதிட்டமாகحَرَّمَதடுத்து விடுகிறான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِஅவர் மீதுالْجَـنَّةَசொர்க்கத்தைوَمَاْوٰٮهُஇன்னும் அவருடைய தங்குமிடம்النَّارُ‌ ؕநரகம்தான்وَمَاஇல்லைلِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குمِنْ اَنْصَارٍ‏உதவியாளர்களில் எவரும்
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ ஹுவல் மஸீஹுBப் னு மர்யம வ காலல் மஸீஹு யா Bபனீ இஸ்ரா'ஈல உஃBபுதுல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபகும் இன்ன்னஹூ ம(ன்)ய்-யுஷ்ரிக் Bபில்லாஹி Fபகத் ஹர்ரமல் லாஹு 'அலய்ஹில் ஜன்னத வமா வாஹுன் னாரு வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ ۘ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّاۤ اِلٰهٌ وَّاحِدٌ ؕ وَاِنْ لَّمْ یَنْتَهُوْا عَمَّا یَقُوْلُوْنَ لَیَمَسَّنَّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
لَـقَدْதிட்டவட்டமாகكَفَرَநிராகரித்தார்(கள்)الَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்ثَالِثُ ثَلٰثَةٍ‌ ۘமூவரில் ஒருவன்وَمَاஇல்லைمِنْஇருந்துاِلٰهٍவணக்கத்திற்குரியவன்اِلَّاۤதவிரاِلٰـهٌஒரு வணக்கத்திற்குரியவன்وَّاحِدٌ  ؕஒரேوَاِنْ لَّمْ يَنْتَهُوْاஅவர்கள் விலகவில்லையெனில்عَمَّاஎதிலிருந்துيَقُوْلُوْنَகூறுகிறார்கள்لَيَمَسَّنَّநிச்சயமாக அடையும்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْهُمْஅவர்களில்عَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தக்கூடியது
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ தாலிது தலாதஹ்; வமா மின் இலாஹின் இல்லா இலாஹு(ன்)வ் வாஹித்; வ இல்லம் யன்தஹூ 'அம்மா யகூலூன லயமஸ் ஸன்னல் லதீன கFபரூ மின்ஹும் 'அதாBபுன் அலீம்
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
اَفَلَا یَتُوْبُوْنَ اِلَی اللّٰهِ وَیَسْتَغْفِرُوْنَهٗ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اَفَلَا يَتُوْبُوْنَதிருந்தி திரும்ப மாட்டார்களா?اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்وَيَسْتَغْفِرُوْنَهٗ‌ؕஇன்னும் மன்னிப்புக் கோரமாட்டார்களா/அவனிடம்وَஇன்னும்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
அFபலா யதூBபூன இலல் லாஹி வ யஸ்தக்Fபிரூனஹ்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.
مَا الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ؕ وَاُمُّهٗ صِدِّیْقَةٌ ؕ كَانَا یَاْكُلٰنِ الطَّعَامَ ؕ اُنْظُرْ كَیْفَ نُبَیِّنُ لَهُمُ الْاٰیٰتِ ثُمَّ انْظُرْ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟
مَا الْمَسِيْحُமஸீஹ் இல்லைابْنُமகன்مَرْيَمَமர்யமுடையاِلَّاதவிரرَسُوْلٌ‌ ۚஒரு தூதரேقَدْ خَلَتْசென்றுவிட்டனர்مِنْ قَبْلِهِஇவருக்கு முன்னர்الرُّسُلُؕதூதர்கள்وَاُمُّهٗஇன்னும் அவருடைய தாய்صِدِّيْقَةٌ‌  ؕஒரு மகாஉண்மையாளர்كَانَاஇருந்தனர்يَاْكُلٰنِசாப்பிடுவார்கள்الطَّعَامَ‌ؕஉணவுاُنْظُرْகவனிப்பீராகكَيْفَஎவ்வாறுنُبَيِّنُதெளிபடுத்துகிறோம்لَهُمُஅவர்களுக்குالْاٰيٰتِஅத்தாட்சிகளைثُمَّபிறகுانْظُرْகவனிப்பீராகاَ نّٰىஎவ்வாறுيُؤْفَكُوْنَ‏திருப்பப்படுகின்றனர்
மல் மஸீஹுBப் னு மர்யம இல்லா ரஸூலுன் கத் கலத் மின் கBப்லிஹிர் ருஸுலு வ உம்முஹூ ஸித்தீகதுன் கானா யா குலானித் த'ஆம்; உன்ளுர் கய்Fப னுBபய்யினு லஹுமுல் ஆயாதி தும்மன் ளுர் அன்னா யு'Fபகூன்
மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!
قُلْ اَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ؕ وَاللّٰهُ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
قُلْகூறுவீராகاَ تَعْبُدُوْنَவணங்குகிறீர்களா?مِنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்مَاஎவைلَا يَمْلِكُஉரிமைபெறாதுلَـكُمْஉங்களுக்குضَرًّاதீங்களிப்பதற்குوَّلَا نَفْعًا ؕஇன்னும் பலனளிப்பதற்குوَاللّٰهُஅல்லாஹ்هُوَ السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏மிக அறிந்தவன்
குல் அதஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யம்லிகு லகும் ளர்ர(ன்)வ் வலா னFப்'ஆ; வல்லாஹு ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
“அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்த தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ غَیْرَ الْحَقِّ وَلَا تَتَّبِعُوْۤا اَهْوَآءَ قَوْمٍ قَدْ ضَلُّوْا مِنْ قَبْلُ وَاَضَلُّوْا كَثِیْرًا وَّضَلُّوْا عَنْ سَوَآءِ السَّبِیْلِ ۟۠
قُلْகூறுவீராகيٰۤـاَهْلَ الْـكِتٰبِவேதக்காரர்களேلَا تَغْلُوْاவரம்பு மீறாதீர்கள்فِىْ دِيْـنِكُمْஉங்கள் மார்க்கத்தில்غَيْرَமுரணாகالْحَـقِّஉண்மைக்குوَلَا تَتَّبِعُوْۤاஇன்னும் பின்பற்றாதீர்கள்اَهْوَآءَவிருப்பங்களைقَوْمٍசமுதாயத்தின்قَدْ ضَلُّوْاவழிதவறி விட்டனர்مِنْ قَبْلُமுன்புوَاَضَلُّوْاஇன்னும் வழி கெடுத்தனர்كَثِيْرًاபலரைوَّضَلُّوْاஇன்னும் வழி தவறினர்عَنْஇருந்துسَوَآءِநேரானالسَّبِيْلِ‏பாதை
குல் யா அஹ்லல் கிதாBபி லா தக்லூ Fபீ தீனிகும் கய்ரல் ஹக்கி வலா தத்தBபி'ஊ அஹ்வா'அ கவ்மின் கத் ளல்லூ மின் கBப்லு வ அளல்லூ கதீர(ன்)வ் வ ளல்லூ 'அன் ஸவா'இஸ் ஸBபீல்
“வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!
لُعِنَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟
لُعِنَசபிக்கப்பட்டார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களில்عَلٰى لِسَانِநாவினால்دَاوٗدَதாவூதுடையوَعِيْسَىஇன்னும் ஈஸாவின்ابْنِமகன்مَرْيَمَ‌ ؕமர்யமின்ذٰ لِكَஅதுبِمَاஎதன் காரணமாகعَصَوْاமாறுசெய்தனர்وَّكَانُوْاஇன்னும் இருந்தனர்يَعْتَدُوْنَ‏மீறுபவர்களாக
லு'இனல் லதீன கFபரூ மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா லிஸானி தாவூத வ 'ஈஸBப் னி மர்யம்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
كَانُوْا لَا یَتَنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ؕ لَبِئْسَ مَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟
كَانُوْاஇருந்தனர்لَا يَتَـنَاهَوْنَஒருவர் மற்றவரைத் தடுக்காதவர்களாகعَنْவிட்டுمُّنْكَرٍதீமைفَعَلُوْهُ ؕசெய்தனர் / அதைلَبِئْسَகெட்டுவிட்டதுمَاஎதுكَانُوْاஇருந்தனர்يَفْعَلُوْنَ‏செய்வார்கள்
கானூ லா யதனாஹவ்ன 'அம் முன்கரின் Fப'அலூஹ்; லBபி'ஸ மா கானூ யFப'லூன்
இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை; அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.
تَرٰی كَثِیْرًا مِّنْهُمْ یَتَوَلَّوْنَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ اَنْفُسُهُمْ اَنْ سَخِطَ اللّٰهُ عَلَیْهِمْ وَفِی الْعَذَابِ هُمْ خٰلِدُوْنَ ۟
تَرٰىகாண்பீர்كَثِيْرًاஅதிகாமானோரைمِّنْهُمْஅவர்களில்يَتَوَلَّوْنَநட்பு வைக்கிறார்கள்الَّذِيْنَஎவர்களிடம்كَفَرُوْا‌ؕநிராகரித்தார்கள்لَبِئْسَகெட்டுவிட்டதுمَاஎதுقَدَّمَتْமுற்படுத்தியனلَهُمْஅவர்களுக்குاَنْفُسُهُمْஅவர்களுடைய ஆன்மாக்கள்اَنْ سَخِطَகோபிக்கும்படியாகاللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஅவர்கள் மீதுوَفِى الْعَذَابِஇன்னும் வேதனையில்தான்هُمْஅவர்கள்خٰلِدُوْنَ‏நிரந்தரமாக இருப்பார்கள்
தரா கதீரம் மின்ஹும் யதவல்லவ்னல் லதீன கFபரூ; லBபி'ஸ மா கத்தமத் லஹும் அன்Fபுஸுஹும் அன் ஸகிதல் லாஹு 'அலய்ஹிம் வ Fபில் 'அதாBபி ஹும் காலிதூன்
(நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும்; ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது; மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
وَلَوْ كَانُوْا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِیِّ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِیَآءَ وَلٰكِنَّ كَثِیْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
وَلَوْ كَانُوْاஅவர்கள் இருந்திருந்தால்يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்பவர்களாகبِاللّٰهِஅல்லாஹ்வைوَالنَّبِىِّஇன்னும் நபியைوَمَاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْهِஅவருக்குمَا اتَّخَذُوْஎடுத்திருக்க மாட்டார்கள்هُمْஅவர்களைاَوْلِيَآءَநண்பர்களாகوَلٰـكِنَّஎன்றாலும்كَثِيْرًاஅதிகமானோர்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَ‏பாவிகள்
வ லவ் கானூ யு'மினூன Bபில்லாஹி வன் னBபிய்யி வ மா உன்Zஜில இலய்ஹி மத்தகதூஹும் அவ்லியா'அ வ லாகின்ன கதீரம் மின்ஹும் Fபாஸிகூன்
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الْیَهُوْدَ وَالَّذِیْنَ اَشْرَكُوْا ۚ وَلَتَجِدَنَّ اَقْرَبَهُمْ مَّوَدَّةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰی ؕ ذٰلِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّیْسِیْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
لَـتَجِدَنَّ(நீர்) காண்பீர்اَشَدَّகடுமையானவர்களாகالنَّاسِமக்களில்عَدَاوَةًபகைமையினால்لِّـلَّذِيْنَஎவர்களுக்குاٰمَنُواநம்பிக்கை கொண்டார்கள்الْيَهُوْدَயூதர்களைوَالَّذِيْنَஇன்னும் எவர்களைاَشْرَكُوْا‌ ۚஇணைவைத்தனர்وَلَـتَجِدَنَّஇன்னும் நிச்சயமாக காண்பீர்اَ قْرَبَهُمْஅவர்களில் மிக நெருங்கியவர்களாகمَّوَدَّةًநேசத்தில்لِّـلَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களுக்குالَّذِيْنَஎவர்களைقَالُوْۤاகூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்نَصٰرٰى‌ ؕகிறித்தவர்கள்ذٰ لِكَஅதுبِاَنَّகாரணம்/நிச்சயமாகمِنْهُمْஅவர்களில்قِسِّيْسِيْنَகுருக்கள்وَرُهْبَانًاஇன்னும் துறவிகள்وَّاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَا يَسْتَكْبِرُوْنَ‏பெருமை கொள்ள மாட்டார்கள்
லதஜிதன்ன அஷத் தன் னாஸி 'அதாவதல் லில்லதீன ஆமனுல் யஹூத வல்லதீன அஷ்ரகூ வ லதஜிதன்ன அக்ரBபஹும் மவத்ததல் லில் லதீன ஆமனுல் லதீன காலூ இன்னா னஸாரா; தாலிக Bபி அன்ன மின்ஹும் கிஸீஸீன வ ருஹ்Bபான(ன்)வ் வ அன்னஹும் லா யஸ்தக்Bபிரூன்
நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَی الرَّسُوْلِ تَرٰۤی اَعْیُنَهُمْ تَفِیْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَقِّ ۚ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟
وَاِذَا سَمِعُوْاஅவர்கள் செவியுற்றால்مَاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَىபக்கம்الرَّسُوْلِதூதர்تَرٰٓىகாண்பீர்اَعْيُنَهُمْஅவர்களின் கண்களைتَفِيْضُநிரம்பி வழியக்கூடியதாகمِنَ الدَّمْعِகண்ணீரால்مِمَّاஎதன் காரணமாகعَرَفُوْاஅறிந்தனர்مِنَ الْحَـقِّ‌ۚஉண்மையைيَقُوْلُوْنَகூறுகின்றனர்رَبَّنَاۤஎங்கள் இறைவாاٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்فَاكْتُبْنَاஆகவே பதிவு செய்/எங்களைمَعَஉடன்الشّٰهِدِيْنَ‏சாட்சியாளர்கள்
வ இதா ஸமி'ஊ மா உன்Zஜில இலர் ரஸூலி தரா அஃயுனஹும் தFபீளு மினத் தம்'இ மிம்ம்மா 'அரFபூ மினல்ஹக்க்; யகூலூன ரBப்Bபனா ஆமன்னா Fபக்துBப்னா ம'அஷ் ஷாஹிதீன்
இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.
وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللّٰهِ وَمَا جَآءَنَا مِنَ الْحَقِّ ۙ وَنَطْمَعُ اَنْ یُّدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصّٰلِحِیْنَ ۟
وَمَاஎன்னلَـنَاஎங்களுக்குلَا نُؤْمِنُநாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருக்கبِاللّٰهِஅல்லாஹ்வைوَمَاஇன்னும் எதுجَآءَவந்ததுنَاநமக்குمِنَ الْحَـقِّۙசத்தியம்وَنَطْمَعُநாங்கள் ஆசைப்படாமல் இருக்கவும்اَنْ يُّدْخِلَـنَاஎங்களை / அவன் சேர்ப்பதைرَبُّنَاஎங்கள் இறைவன்مَعَஉடன்الْقَوْمِமக்கள்الصّٰلِحِيْنَ‏நல்லவர்கள்
வமா லனா லா னு'மினு Bபில்லாஹி வமா ஜா'அனா மினல் ஹக்கி வ னத்ம'உ அய் யுத்கிலனா ரBப்Bபுனா ம'அல் கவ்மிஸ் ஸாலிஹீன்
மேலும், “அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்களை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்” (என்றும் அவர்கள் கூறுவர்).
فَاَثَابَهُمُ اللّٰهُ بِمَا قَالُوْا جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَذٰلِكَ جَزَآءُ الْمُحْسِنِیْنَ ۟
فَاَثَابَهُمُஆகவே பிரதிபலனாகஅளித்தான்/அவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்بِمَاஎதன் காரணமாகقَالُوْاகூறினார்கள்جَنّٰتٍசொர்க்கங்களைتَجْرِىْஓடுகிறதுمِنْஇருந்துتَحْتِهَاஅதன் கீழேالْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَا‌ ؕஅதில்وَذٰ لِكَஇதுجَزَآءُகூலிالْمُحْسِنِيْنَ‏நல்லறம்புரிபவர்களுடைய
Fப அதாBபஹுமுல் லாஹு Bபிமா காலூ ஜன்ன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ தாலிக ஜZஜா'உல் முஹ்ஸினீன்
அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்.
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟۠
وَالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்وَكَذَّبُوْاஇன்னும் பொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاۤநம் வசனங்களைاُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ الْجَحِيْمِ‏நரகவாசிகள்தான்
வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுல் ஜஹீம்
ஆனால், எவர் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ, அ(த்தகைய)வர்கள் நரகவாசிகளேயாவர்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَیِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تُحَرِّمُوْاஆகாதவையாக ஆக்காதீர்கள்طَيِّبٰتِநல்லவற்றைمَاۤஎவைاَحَلَّஆகுமாக்கினான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குوَلَا تَعْتَدُوْا‌ ؕஇன்னும் வரம்புமீறாதீர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْمُعْتَدِيْنَ‏வரம்புமீறிகளை
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துஹர்ரிமூ தய்யிBபாதி மா அஹல்லல் லாஹு லகும் வலா தஃததூ; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் மு'ததீன்
முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَیِّبًا ۪ وَّاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
وَكُلُوْاஇன்னும் புசியுங்கள்مِمَّاஎதிலிருந்துرَزَقَكُمُவழங்கினான்/ உங்களுக்குاللّٰهُஅல்லாஹ்حَلٰلًاஅனுமதிக்கப்பட்டதைطَيِّبًا‌நல்லதுوَّ اتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைالَّذِىْۤஎவன்اَنْـتُمْநீங்கள்بِهٖஅவனைمُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கிறீர்கள்
வ குலூ மிம்மா ரZஜககுமுல் லாஹு ஹலாலன் தய்யிBபா; வத்தகுல் லாஹல்லதீ அன்தும் Bபிஹீ மு'மினூன்
அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்; நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَیْمَانَ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِیْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِیْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِیْرُ رَقَبَةٍ ؕ فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ ؕ ذٰلِكَ كَفَّارَةُ اَیْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ؕ وَاحْفَظُوْۤا اَیْمَانَكُمْ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
لَاமாட்டான்يُؤَاخِذُكُمُஉங்களை தண்டிக்கاللّٰهُஅல்லாஹ்بِاللَّغْوِவீணானதற்காகفِىْۤஇல்اَيْمَانِكُمْஉங்கள் சத்தியங்கள்وَلٰـكِنْஎனினும்يُّؤَاخِذُكُمْஉங்களைத் தண்டிப்பான்بِمَاஎதற்காகعَقَّدْتُّمُஉறுதிப்படுத்தினீர்கள்الْاَيْمَانَ‌ ۚசத்தியங்களைفَكَفَّارَتُهٗۤஅதற்குப் பரிகாரம்اِطْعَامُஉணவளிப்பதுعَشَرَةِபத்துمَسٰكِيْنَஏழைகளுக்குمِنْஇருந்துاَوْسَطِநடுத்தரமானதுمَاஎதுتُطْعِمُوْنَஉணவளிக்கிறீர்கள்اَهْلِيْكُمْஉங்கள் குடும்பத்திற்குاَوْஅல்லதுكِسْوَتُهُمْஅவர்களுக்கு ஆடையளிப்பதுاَوْஅல்லதுتَحْرِيْرُவிடுதலையிடுவதுرَقَبَةٍ‌ ؕஓர் அடிமைفَمَنْஎவர்لَّمْ يَجِدْபெறவில்லையெனில்فَصِيَامُநோன்பிருத்தல்ثَلٰثَةِமூன்றுاَيَّامٍ‌ ؕநாட்களுக்குذٰ لِكَஇதுكَفَّارَةُபரிகாரம்اَيْمَانِكُمْஉங்கள் சத்தியங்களின்اِذَا حَلَفْتُمْ‌ ؕநீங்கள் சத்தியம் செய்தால்وَاحْفَظُوْۤاகாப்பாற்றுங்கள்اَيْمَانَكُمْ‌ ؕஉங்கள் சத்தியங்களைكَذٰلِكَஇவ்வாறுيُبَيِّنُவிவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குاٰيٰتِهٖதன் வசனங்களைلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
லா யு'ஆகிதுகுமுல் லாஹு Bபில்லக்வி Fபீ அய்மானிகும் வ லாகி(ன்)ய் யு'ஆகிதுகுமுல் Bபிமா 'அக்கத்துமுல் அய்மான அ கFப்Fபார துஹூ இத்'ஆமு 'அஷரதி மஸாகீன மின் அவ்ஸதி மா துத்'இமூன அஹ்லீகும் அவ் கிஸ்வதுஹும் அவ் தஹ்ரீரு ரகBபதின் Fபமல்லம் யஜித் Fப ஸியாமு தலாததி அய்யாம்; தாலிக கFப்Fபாரது அய்மானிகும் இதா ஹலFப்தும்; வஹ்Fபளூ அய்மானகும்; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஷ்குரூன்
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَیْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّیْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِنَّمَا الْخَمْرُநிச்சயமாக மதுوَالْمَيْسِرُஇன்னும் சூதுوَالْاَنْصَابُஇன்னும் சிலைகள்وَالْاَزْلَامُஇன்னும் அம்புகள்رِجْسٌஅருவருக்கத்தக்கவைمِّنْ عَمَلِசெயல்களில்الشَّيْطٰنِஷைத்தானின்فَاجْتَنِبُوْهُஆகவே, விட்டு விலகுங்கள்/இவற்றைلَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றி பெறுவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்னமல் கம்ரு வல்மய்ஸிரு வல் அன்ஸாBபு வல் அZஜ்லாமு ரிஜ்ஸும் மின் 'அமலிஷ் ஷய்தானி Fபஜ்தனிBபூஹு ல'அல் லகும் துFப்லிஹூன்
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
اِنَّمَا یُرِیْدُ الشَّیْطٰنُ اَنْ یُّوْقِعَ بَیْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِی الْخَمْرِ وَالْمَیْسِرِ وَیَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ ۚ فَهَلْ اَنْتُمْ مُّنْتَهُوْنَ ۟
اِنَّمَاஎல்லாம்يُرِيْدُநாடுகிறான்الشَّيْطٰنُஷைத்தான்اَنْ يُّوْقِعَஅவன் உண்டுபண்ணுவதுبَيْنَكُمُஉங்களுக்குமத்தியில்الْعَدَاوَةَபகைமைوَالْبَغْضَآءَஇன்னும் வெறுப்பைفِى الْخَمْرِமதுவினால்وَالْمَيْسِرِஇன்னும் சூதாட்டத்தினால்وَيَصُدَّكُمْஇன்னும் அவன் தடுப்பது/உங்களைعَنْ ذِكْرِஞாபகத்திலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்وَعَنِ الصَّلٰوةِ‌ ۚஇன்னும் தொழுகையிலிருந்துفَهَلْஆகவே ?اَنْـتُمْநீங்கள்مُّنْتَهُوْنَ‏விலகுபவர்கள்
இன்னமா யுரீதுஷ் ஷய்தானு அய் யூகி'அ Bபய்னகுமுல் 'அதாவத வல் Bபக்ளா'அ Fபில் கம்ரி வல் மய்ஸிரி வ யஸுத்தகும் 'அன் திக்ரில் லாஹி வ 'அனிஸ் ஸலாதி Fபஹல் அன்தும் முன்தஹூன்
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
وَاَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا ۚ فَاِنْ تَوَلَّیْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَا عَلٰی رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
وَاَطِيْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَاَطِيْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَதூதருக்குوَاحْذَرُوْا‌ ۚஇன்னும் எச்சரிக்கையாக இருங்கள்فَاِنْ تَوَلَّيْتُمْநீங்கள்திரும்பினால்فَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّمَاநிச்சயமாகعَلٰى رَسُوْلِنَاநம் தூதர் மீதுالْبَلٰغُஎடுத்துரைப்பதுالْمُبِيْنُ‏தெளிவாக
வ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல வஹ்தரூ; Fப இன் தவல் லய்தும் Fபஃலமூ அன்னமா 'அலா ரஸூலினல் Bபலாகுல் முBபீன்
இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
لَیْسَ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِیْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوْا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوْا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوْا وَّاَحْسَنُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟۠
لَـيْسَஇல்லைعَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைجُنَاحٌகுற்றம்فِيْمَاஎதில்طَعِمُوْۤاபுசித்தார்கள்اِذَا مَا اتَّقَواதவிர்ந்து கொண்டால்وَّاٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைثُمَّபிறகுاتَّقَواஅஞ்சினார்கள்وَّاٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டார்கள்ثُمَّபிறகுاتَّقَواஅஞ்சினார்கள்وَّاَحْسَنُوْا ؕஇன்னும் நல்லறம் செய்தார்கள்وَاللّٰهُஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِيْنَ‏நல்லறம்புரிவோரை
லய்ஸ 'அலல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜுனாஹுன் Fபீமா த'இமூ இதா மத் தகவ் வ ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி தும்மத் தகவ் வ ஆமனூ தும்மத் தகவ் வ அஹ்ஸனூ; வல்லாஹு யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَیَبْلُوَنَّكُمُ اللّٰهُ بِشَیْءٍ مِّنَ الصَّیْدِ تَنَالُهٗۤ اَیْدِیْكُمْ وَرِمَاحُكُمْ لِیَعْلَمَ اللّٰهُ مَنْ یَّخَافُهٗ بِالْغَیْبِ ۚ فَمَنِ اعْتَدٰی بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَيَبْلُوَنَّكُمُநிச்சயமாக சோதிப்பான் / உங்களைاللّٰهُஅல்லாஹ்بِشَىْءٍசிலதைக் கொண்டுمِّنَ الصَّيْدِவேட்டைகளில்تَنَالُـهٗۤஅடைந்து விடுகின்றன/அதைاَيْدِيْكُمْஉங்கள் கரங்கள்وَ رِمَاحُكُمْஇன்னும் ஈட்டிகள் / உங்கள்لِيَـعْلَمَஅறிவதற்காகاللّٰهُஅல்லாஹ்مَنْஎவர்يَّخَافُهٗபயப்படுகிறார்/தன்னைبِالْـغَيْبِ‌ ۚமறைவில்فَمَنِஎவர்اعْتَدٰىமீறினார்بَعْدَ ذٰ لِكَஇதற்குப் பின்புفَلَهٗஅவருக்குعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தக்கூடியது
யா அய்யுஹல் லதீன ஆமனூ ல யBப்லுவன்ன்னகுமுல் லாஹு Bபிஷய்'இம் மினஸ் ஸய்தி தனாலுஹூ அய்தீகும் வ ரிமாஹுகும் லியஃலமல் லாஹு மய் யகாFபுஹூ Bபில்கய்Bப்; Fபமனிஃ ததா Bபஃத தாலிக Fபலஹூ 'அதாBபுன் அலீம்
ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான்; ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّیْدَ وَاَنْتُمْ حُرُمٌ ؕ وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ یَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْیًا بٰلِغَ الْكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِیْنَ اَوْ عَدْلُ ذٰلِكَ صِیَامًا لِّیَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ ؕ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ؕ وَمَنْ عَادَ فَیَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَقْتُلُواகொல்லாதீர்கள்الصَّيْدَவேட்டையைوَاَنْـتُمْநீங்கள்حُرُمٌ‌ ؕஇஹ்ராமுடையவர்கள்وَمَنْஎவர்قَتَلَهٗகொன்றார்/அதைمِنْكُمْஉங்களில்مُّتَعَمِّدًاவேண்டுமென்றே (நாடியவராக)فَجَزَآءٌதண்டனைمِّثْلُஒப்பானதுمَاஎதுقَتَلَகொன்றார்مِنَஇருந்துالنَّعَمِகால்நடைகள்يَحْكُمُதீர்ப்பளிப்பர்بِهٖஅதற்குذَوَا عَدْلٍநேர்மையான இருவர்مِّنْكُمْஉங்களில்هَدْيًاۢபலியாகبٰلِغَஅடையக் கூடியதுالْـكَعْبَةِகஅபாاَوْஅல்லதுكَفَّارَةٌபரிகாரம்طَعَامُஉணவளிப்பதுمَسٰكِيْنَஏழைகள்اَوْஅல்லதுعَدْلُசமமானதுذٰ لِكَஅதுصِيَامًاநோன்பால்لِّيَذُوْقَஅவன் அனுபவிப்பதற்காகوَبَالَகெட்ட முடிவைاَمْرِهٖ‌ ؕசெயல் / தனதுعَفَاமன்னித்தான்اللّٰهُஅல்லாஹ்عَمَّا سَلَفَ‌ ؕமுன் நடந்தவற்றைوَمَنْஎவன்عَادَமீண்டான்فَيَنْتَقِمُதண்டிப்பான்اللّٰهُஅல்லாஹ்مِنْهُ‌ ؕஅவனைوَاللّٰهُஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்ذُو انْتِقَامٍ‏தண்டிப்பவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தக்துலுஸ் ஸய்த வ அன்தும் ஹுரும்; வ மன் கதலஹூ மின்கும் முத்'அம் மிதன் FபஜZஜா'உம் மித்லு மா கதல மினன்ன'அமி யஹ்குமு Bபிஹீ தவா 'அத்லிம் மின்கும் ஹத்யம் Bபாலிகல் கஃBபதி அவ் கFப்Fபாரதுன் த'ஆமு மஸாகீன அவ் 'அத்லு தாலிக ஸியாமல் லியதூக வBபால அம்ரிஹ்; 'அFபல் லாஹு 'அம்மா ஸலFப்; வ மன் 'ஆத Fபயன்த கிமுல் லாஹு மின்ஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் துன்திகாம்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான்.
اُحِلَّ لَكُمْ صَیْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّكُمْ وَلِلسَّیَّارَةِ ۚ وَحُرِّمَ عَلَیْكُمْ صَیْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
اُحِلَّஅனுமதிக்கப்பட்டுள்ளதுلَـكُمْஉங்களுக்குصَيْدُவேட்டையாடுவதுالْبَحْرِகடலில்وَطَعَامُهٗஇன்னும் அதை புசிப்பதுمَتَاعًاபயனளிப்பதற்காகلَّـكُمْஉங்களுக்குوَلِلسَّيَّارَةِ‌ ۚஇன்னும் பயணிகளுக்குوَحُرِّمَவிலக்கப்பட்டுள்ளதுعَلَيْكُمْஉங்களுக்குصَيْدُவேட்டையாடுவதுالْبَـرِّதரையில்مَا دُمْتُمْஇருக்கும்போதெல்லாம்حُرُمًا‌ ؕஇஹ்ராமுடைய வர்களாகوَاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைالَّذِىْۤஎவன்اِلَيْهِஅவன் பக்கம்تُحْشَرُوْنَ‏நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
உஹில்ல லகும் ஸய்துல் Bபஹ்ரி வ த'ஆமுஹூ மதா'அல் லகும் வ லிஸ்ஸய்யாரதி வ ஹுர்ரிம 'அலய்கும் ஸய்துல் Bபர்ரி மா தும்தும் ஹுருமா; வத்தகுல் லாஹல் லதீ இலய்ஹி துஹ்ஷரூன்
உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது; ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
جَعَلَ اللّٰهُ الْكَعْبَةَ الْبَیْتَ الْحَرَامَ قِیٰمًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْیَ وَالْقَلَآىِٕدَ ؕ ذٰلِكَ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
جَعَلَஆக்கினான்اللّٰهُஅல்லாஹ்الْـكَعْبَةَகஅபாவைالْبَيْتَவீடுالْحَـرَامَபுனிதமானதுقِيٰمًاஅபயமளிக்கக்கூடியது,لِّـلنَّاسِமக்களுக்குوَالشَّهْرَஇன்னும் மாதத்தைالْحَـرَامَபுனிதமானதுوَالْهَدْىَஇன்னும் பலியைوَالْقَلَاۤٮِٕدَ‌ ؕஇன்னும் மாலைகளைذٰ لِكَஅதுلِتَعْلَمُوْۤاநீங்கள் அறிந்து கொள்வதற்காகاَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَعْلَمُஅறிகிறான்مَا فِى السَّمٰوٰتِஎவை/வானங்களில்وَمَاஇன்னும் எதுفِى الْاَرْضِபூமியில்وَاَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
ஜ'அலல் லாஹுல் கஃBபதல் Bபய்தல் ஹராம கியாமல் லின்னாஸி வஷ் ஷஹ்ரல் ஹராம வல்ஹத்ய வல்கலா'இத்; தாலிக லிதஃலமூ அன்னல் லாஹ யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி வ அன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான்; இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்;) அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன்.
اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ؕ
اِعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்شَدِيْدُகடுமையானவன்الْعِقَابِதண்டனைوَاَنَّ اللّٰهَஇன்னும் நிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ ؕ‏பெரும் கருணையாளன்
இஃலமூ அன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBபி வ அன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன்; மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான்,
مَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ۟
مَاகடமை இல்லைعَلَىமீதுالرَّسُوْلِதூதர்اِلَّاதவிரالْبَلٰغُ‌ ؕஎடுத்துரைப்பதுوَاللّٰهُஅல்லாஹ்يَعْلَمُநன்கறிவான்مَاஎதைتُبْدُوْنَவெளிப்படுத்துகிறீர்கள்وَمَاஇன்னும் எதைتَكْتُمُوْنَ‏மறைக்கிறீர்கள்
மா 'அலர் ரஸூலி இல்லல் Bபலாக்; வல்லாஹு யஃலமு மா துBப்தூன வமா தக்துமூன்
(இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
قُلْ لَّا یَسْتَوِی الْخَبِیْثُ وَالطَّیِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِیْثِ ۚ فَاتَّقُوا اللّٰهَ یٰۤاُولِی الْاَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟۠
قُلْகூறுவீராகلَّا يَسْتَوِىசமமாகாதுالْخَبِيْثُதீயதுوَالطَّيِّبُஇன்னும் நல்லதுوَلَوْ اَعْجَبَكَஉம்மை ஆச்சரியப்படுத்தினாலும்كَثْرَةُஅதிகமாக இருப்பதுالْخَبِيْثِ‌ ۚ فَاتَّقُواதீயது/ஆகவேஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைيٰۤاُولِى الْاَ لْبَابِஅறிவாளிகளேلَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றி பெறுவதற்காக
குல் லா யஸ்தவில் கBபீது வத்தய்யிBபு வ லவ் அஃஜBபக கத்ரதுல் கBபீத்; Fபத்தகுல் லாஹ யா உலில் அல்BபாBபி ல'அல்லகும் துFப்லிஹூன்
(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், “தீயதும், நல்லதும் சமமாகாது; எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என்று நீர் கூறுவீராக.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَسْـَٔلُوْا عَنْ اَشْیَآءَ اِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ ۚ وَاِنْ تَسْـَٔلُوْا عَنْهَا حِیْنَ یُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَكُمْ ؕ عَفَا اللّٰهُ عَنْهَا ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَسْـٴَــلُوْاகேள்வி கேட்காதீர்கள்عَنْ اَشْيَآءَபல விஷயங்கள் பற்றிاِنْ تُبْدَ لَـكُمْஅவை வெளியாக்கப்பட்டால்/உங்களுக்குتَسُؤْكُمْ‌ۚவருத்தமளிக்கும்/உங்களுக்குوَاِنْ تَسْـٴَــلُوْاநீங்கள் கேள்வி கேட்டால்عَنْهَاஅவற்றைப் பற்றிحِيْநேரத்தில்يُنَزَّلُஇறக்கப்படும்الْقُرْاٰنُகுர்ஆன்تُبْدَ لَـكُمْ ؕவெளியாக்கப்படும்/உங்களுக்குعَفَاமன்னித்தான்اللّٰهُ عَنْهَا‌ ؕஅல்லாஹ்/அவற்றைوَاللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்حَلِيْمٌபெரும் சகிப்பாளன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தஸ்'அலூ 'அன் அஷ்யா'அ இன் துBப்த லகும் தஸு'கும் வ இன் தஸ்'அலூ 'அன்ஹா ஹீன யுனZஜ்Zஜலுல் குர்'ஆனு துBப்த லகும்; 'அFபல்லாஹு 'அன்ஹா; வல்லாஹு கFபூருன் ஹலீம்
ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப்பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும்; மேலும் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும்; (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான்; அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான்.
قَدْ سَاَلَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِیْنَ ۟
قَدْதிட்டமாகسَاَ لَهَاகேட்டார்(கள்) / அவற்றைப் பற்றிقَوْمٌசில மக்கள்مِّنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்புثُمَّபிறகுاَصْبَحُوْاமாறிவிட்டனர்بِهَاஅவற்றைكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களாக
கத் ஸ அலஹா கவ்மும் மின் கBப்லிகும் தும்ம அஸ்Bபஹூ Bபிஹா காFபிரீன்
உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.
مَا جَعَلَ اللّٰهُ مِنْ بَحِیْرَةٍ وَّلَا سَآىِٕبَةٍ وَّلَا وَصِیْلَةٍ وَّلَا حَامٍ ۙ وَّلٰكِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ وَاَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟
مَا جَعَلَஏற்படுத்தவில்லைاللّٰهُஅல்லாஹ்مِنْۢஎதையும்بَحِيْرَةٍபஹீராوَّلَا سَآٮِٕبَةٍஸாயிபாوَّلَا وَصِيْلَةٍவஸீலாوَّلَا حَامٍ‌ ۙஹறாம்وَّلٰـكِنَّஎனினும்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்يَفْتَرُوْنَகற்பனை செய்கின்றனர்عَلَى اللّٰهِஅல்லாஹ் மீதுالْـكَذِبَ‌ ؕபொய்யைوَاَكْثَرُهُمْஅவர்களில் அதிகமானவர்கள்لَا يَعْقِلُوْنَ‏புரிய மாட்டார்கள்
மா ஜ'அலல் லாஹு மிம் Bபஹீரதி(ன்)வ் வலா ஸா'இBபதி(ன்)வ் வலா வஸீலதி(ன்)வ் வலா ஹாமி(ன்)வ் வ லாகின்னல் லதீன கFபரூ யFப்தரூன 'அலல்லாஹில் கதிBப்; வ அக்தருஹும் லா யஃகிலூன்
பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுயேச்சையாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்) வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்) ஹாமி (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுயேச்சையாகத் திரியும்படி விடப்பபடும் ஆண் ஒட்டகம்) என்பவை (போன்ற சடங்குகளை) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை - ஆனால் காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர் மேலும் அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர்.
وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰی مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا یَعْلَمُوْنَ شَیْـًٔا وَّلَا یَهْتَدُوْنَ ۟
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குتَعَالَوْاவாருங்கள்اِلٰىபக்கம்مَاۤஎதுاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்وَاِلَىஇன்னும் பக்கம்الرَّسُوْلِதூதர்قَالُوْاகூறினர்حَسْبُنَاஎங்களுக்குப் போதும்مَاஎதுوَجَدْنَاகண்டோம்عَلَيْهِஅதன் மீதுاٰبَآءَنَا‌ ؕஎங்கள் மூதாதைகளைاَوَلَوْ كَانَஇருந்தாலுமா?اٰبَآؤُமூதாதைகள்هُمْஅவர்களுடையلَا يَعْلَمُوْنَஅறியமாட்டார்கள்شَيْــٴًـــاஎதையும்وَّلَا يَهْتَدُوْنَ‏இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்
வ இதா கீல லஹும் த'ஆலவ் இலா மா அன்Zஜலல்லாஹு வ இலர் ரஸூலி காலூ ஹஸ்Bபுனா மா வஜத்னா 'அலய்ஹி ஆBபா'அனா; அவ லவ் கான ஆBபா'உஹும் லா யஃலமூன ஷய்'அ(ன்)வ் வலா யஹ்ததூன்
“அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا عَلَیْكُمْ اَنْفُسَكُمْ ۚ لَا یَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَیْتُمْ ؕ اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேعَلَيْكُمْகாத்துக்கொள்ளுங்கள்اَنْفُسَكُمْ‌ۚஉங்களைلَاமாட்டார்يَضُرُّكُمْஉங்களுக்கு தீங்கிழைக்கمَّنْஎவர்ضَلَّவழிகெட்டார்اِذَا اهْتَدَيْتُمْ‌ ؕநீங்கள் நேர்வழி சென்றால்اِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்مَرْجِعُكُمْஉங்கள் மீளுமிடம்جَمِيْعًاஅனைவரும்فَيُـنَـبِّـئُكُمْஆகவே அறிவிப்பான்/உங்களுக்குبِمَاஎதைكُنْتُمْஇருந்தீர்கள்تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ 'அலய்கும் அன்Fபுஸகும் லா யளுர்ருகும் மன் ளல்ல இதஹ் ததய்தும்; இலல் லாஹி மர்ஜி'உகும் ஜமீ'அன் FபயுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَیْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِیْنَ الْوَصِیَّةِ اثْنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرٰنِ مِنْ غَیْرِكُمْ اِنْ اَنْتُمْ ضَرَبْتُمْ فِی الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِیْبَةُ الْمَوْتِ ؕ تَحْبِسُوْنَهُمَا مِنْ بَعْدِ الصَّلٰوةِ فَیُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِیْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰی ۙ وَلَا نَكْتُمُ شَهَادَةَ ۙ اللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الْاٰثِمِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேشَهَادَةُசாட்சியாக இருக்க வேண்டும்بَيْنِكُمْஉங்கள் மத்தியில்اِذَا حَضَرَசமீபித்தால்اَحَدَكُمُஉங்களில் ஒருவருக்குالْمَوْتُமரணம்حِيْنَநேரத்தில்الْوَصِيَّةِமரண சாஸனம்اثْـنٰنِஇருவர்ذَوَا عَدْلٍநீதமான இருவர்مِّنْكُمْஉங்களில்اَوْஅல்லதுاٰخَرَانِவேறிருவர்مِنْசேர்ந்தغَيْـرِكُمْநீங்கள் அல்லாதاِنْ اَنْـتُمْ ضَرَبْتُمْநீங்கள் பயணித்தால்فِى الْاَرْضِபூமியில்فَاَصَابَتْكُمْஅடைந்தால்/உங்களைمُّصِيْبَةُசோதனைالْمَوْتِ‌ ؕமரணம்تَحْبِسُوْنَهُمَاதடுத்து வையுங்கள்/அவ்விருவரைمِنْۢ بَعْدِபின்னர்الصَّلٰوةِதொழுகைفَيُقْسِمٰنِஅவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِنِ ارْتَبْتُمْநீங்கள் சந்தேகித்தால்لَا نَشْتَرِىْவாங்கமாட்டோம்بِهٖஅதற்குப் பகரமாகثَمَنًاஓர் ஆதாயத்தைوَّلَوْ كَانَஅவர் இருந்தாலும்ذَا قُرْبٰى‌ ۙஉறவினராகوَلَا نَـكْتُمُஇன்னும் மறைக்க மாட்டோம்شَهَادَةَ ۙசாட்சி கூறியதில்اللّٰهِஅல்லாஹ்விற்காகاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِذًاஅப்போதுلَّمِنَ الْاٰثِمِيْنَ‏பாவிகளில்
யா அய்யுஹல் லதீன ஆமனூ ஷஹாதது Bபய்னிகும் இதா ஹளர அஹதகுமுல் மவ்து ஹீனல் வஸிய்யதித் னானி தவா 'அத்லிம் மின்கும் அவ் ஆகரானி மின் கய்ரிகும் இன் அன்தும் ளரBப்தும் Fபில் அர்ளி Fப அஸாBபத்கும் முஸீBபதுல் மவ்த்; தஹ்Bபி ஸூனஹுமா மிம் Bபஃதிஸ் ஸலாதி Fப யுக்ஸிமானி Bபில்லாஹி இனிர்தBப்தும் லா னஷ்தரீ Bபிஹீ தமன(ன்)வ் வ லவ் கான தா குர்Bபா வலா னக்துமு ஷஹாததல் லாஹி இன்னா இதல் லமினல் ஆதிமீன்
ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும் “நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை; அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாயிவிடுவோம்“ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
فَاِنْ عُثِرَ عَلٰۤی اَنَّهُمَا اسْتَحَقَّاۤ اِثْمًا فَاٰخَرٰنِ یَقُوْمٰنِ مَقَامَهُمَا مِنَ الَّذِیْنَ اسْتَحَقَّ عَلَیْهِمُ الْاَوْلَیٰنِ فَیُقْسِمٰنِ بِاللّٰهِ لَشَهَادَتُنَاۤ اَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَمَا اعْتَدَیْنَاۤ ۖؗ اِنَّاۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟
فَاِنْ عُثِرَகண்டுபிடிக்கப்பட்டால்عَلٰٓىமீதுاَنَّهُمَاநிச்சயமாக அவ்விருவரும்اسْتَحَقَّاۤஉரியவர்களாகி விட்டனர்اِثْمًاபாவத்திற்குفَاٰخَرٰنِவேறு இருவர்يَقُوْمٰنِநிற்பார்கள்مَقَامَهُمَاஅவ்விருவருடைய இடத்தில்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்اسْتَحَقَّஉரிமை ஏற்பட்டதுعَلَيْهِمُஅவர்களுக்குالْاَوْلَيٰنِநெருங்கிய இரு வாரிசுகள்فَيُقْسِمٰنِஅவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَشَهَادَتُنَاۤநிச்சயமாக எங்கள்சாட்சியம்اَحَقُّமிக உண்மையானதுمِنْ شَهَادَتِهِمَاஅவ்விருவரின் சாட்சியத்தைவிடوَ مَا اعْتَدَيْنَاۤ‌ ۖ நாங்கள்வரம்புமீறவில்லைاِنَّاۤ‌நிச்சயமாக நாங்கள்اِذًاஅப்போதுلَّمِنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில்தான்
Fப இன் 'உதிர 'அலா அன்னஹுமஸ் தஹக்கா இத்மன் Fப ஆகரானி யகூமானி மகாமஹுமா மினல் லதீனஸ் தஹக்க 'அலய்ஹிமுல் அவ்லயானி Fப யுக்ஸிமானி Bபில்லாஹி லஷஹாததுனா அஹக்கு மின் ஷஹாததிஹிமா வ ம'ததய்னா இன்னா இதல் லமினள் ளாலிமீன்
நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று: “அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது; நாங்கள் வரம்பு மீறவில்லை; (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக் காரர்களாகி விடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்.
ذٰلِكَ اَدْنٰۤی اَنْ یَّاْتُوْا بِالشَّهَادَةِ عَلٰی وَجْهِهَاۤ اَوْ یَخَافُوْۤا اَنْ تُرَدَّ اَیْمَانٌ بَعْدَ اَیْمَانِهِمْ ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاسْمَعُوْا ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
ذٰ لِكَ اَدْنٰٓىஅது/மிக்கசுலபமானதுاَنْ يَّاْتُوْاஅவர்கள் வருவதற்குبِالشَّهَادَةِசாட்சியத்தைக் கொண்டுعَلٰى وَجْهِهَاۤஅதற்குரிய முறையில்اَوْஅல்லதுيَخَافُوْۤاஅவர்கள் பயப்படுவதுاَنْ تُرَدَّமறுக்கப்படும்اَيْمَانٌۢசத்தியங்கள்بَعْدَபின்னர்اَيْمَانِهِمْ‌ؕஅவர்களுடைய சத்தியங்கள்وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاسْمَعُوْا‌ ؕசெவிசாயுங்கள்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَகூட்டத்தைالْفٰسِقِيْنَ‏பாவிகளான
தாலிக அத்னா அய் ய'தூ Bபிஷ்ஷஹாததி 'அலா வஜ்ஹிஹா அவ் யகாFபூ அன் துரத்த அய்மானும் Bபஃத அய்மானிஹிம்; வத்தகுல் லாஹ வஸ்ம'ஊ; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி, கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனமாய்க் கேளுங்கள் - ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
یَوْمَ یَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَیَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ ؕ قَالُوْا لَا عِلْمَ لَنَا ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
يَوْمَநாளில்يَجْمَعُஒன்று சேர்ப்பான்اللّٰهُஅல்லாஹ்الرُّسُلَதூதர்களைفَيَقُوْلُகூறுவான்مَاذَاۤஎன்ன?اُجِبْتُمْ‌ ؕபதில் கூறப்பட்டீர்கள்قَالُوْاகூறுவார்கள்لَا عِلْمَஅறவே ஞானமில்லைلَـنَا ؕஎங்களுக்குاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்عَلَّامُமிக மிக அறிந்தவன்الْغُيُوْبِ‏மறைவானவற்றை
யவ்ம யஜ்ம'உல் லாஹுர் ருஸுல Fப யகூலு மாதா உஜிBப்தும் காலூ லா 'இல்ம லனா இன்னக அன்த 'அல்லாமுல் குயூBப்
(நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் “(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: “அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்” என்று கூறுவார்கள்.
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ اذْكُرْ نِعْمَتِیْ عَلَیْكَ وَعَلٰی وَالِدَتِكَ ۘ اِذْ اَیَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ ۫ تُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا ۚ وَاِذْ عَلَّمْتُكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ بِاِذْنِیْ فَتَنْفُخُ فِیْهَا فَتَكُوْنُ طَیْرًا بِاِذْنِیْ وَتُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِیْ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰی بِاِذْنِیْ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
‌اِذْசமயம்قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்يٰعِيْسَىஈஸாவேابْنَமகன்مَرْيَمَமர்யமுடையاذْكُرْநினைவு கூர்வீராகنِعْمَتِىْஎன் அருளைعَلَيْكَஉம்மீதுوَعَلٰى وَالِدَتِكَ‌ ۘஇன்னும் மீது/உம் தாய்اِذْசமயம்اَيَّدْتُّكَபலப்படுத்தினேன்/உம்மைبِرُوْحِஆத்மாவைக்கொண்டுالْقُدُسِபரிசுத்தமானتُكَلِّمُபேசுவீர்النَّاسَமக்களிடம்فِىْ الْمَهْدِதொட்டிலில்وَكَهْلًاஇன்னும் வாலிபராக‌ ۚوَاِذْஇன்னும் சமயம்عَلَّمْتُكَகற்பித்தேன்/உமக்குالْـكِتٰبَஎழுதுவதைوَالْحِكْمَةَஇன்னும் ஞானத்தைوَالتَّوْرٰٮةَஇன்னும் தவ்றாத்தைوَالْاِنْجِيْلَ‌ ۚஇன்னும் இன்ஜீலைوَاِذْஇன்னும் சமயம்تَخْلُقُபடைப்பீர்مِنَஇருந்துالطِّيْنِகளிமண்كَهَيْـــٴَــةِ ‏உருவத்தைப் போல்الطَّيْرِபறவையின்بِاِذْنِىْஎன் அனுமதியினால்فَتَـنْفُخُஊதுவீர்فِيْهَاஅதில்فَتَكُوْنُஅது/ஆகிவிடும்طَيْرًۢاபறவையாகبِاِذْنِىْ‌என் அனுமதியினால்وَ تُبْرِئُஇன்னும் சுகமளிப்பீர்الْاَكْمَهَபிறவிக் குருடரைوَالْاَبْرَصَஇன்னும் வெண்குஷ்டரைبِاِذْنِىْ‌ ۚஎன் அனுமதியினால்وَاِذْஇன்னும் சமயம்تُخْرِجُவெளியாக்குவீர்الْمَوْتٰىமரணித்தவர்களைبِاِذْنِىْ ۚஎன் அனுமதியினால்وَاِذْஇன்னும் சமயம்كَفَفْتُதடுத்தேன்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களைعَنْكَஉம்மைவிட்டுاِذْபோதுجِئْتَهُمْவந்தீர்/அவர்களிடம்بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுفَقَالَகூறினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْهُمْஅவர்களில்اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியம்مُّبِيْنٌ‏தெளிவானது
இத் காலல் லாஹு யா 'ஈஸBப்-ன-மர்யமத் குர் னிஃமதீ 'அலய்க வ 'அலா வாலிததிக; இத் அய்யத்துக Bபி ரூஹில் குதுஸி துகல்லிமுன் னாஸ Fபில் மஹ்தி வ கஹ்ல(ன்)வ் வ இத் 'அல்லம்துகல் கிதாBப வல் ஹிக்மத வ தவ்ராத வல் இன்ஜீல வ இத் தக்லுகு மினத் தீனி கஹய் 'அதித் தய்ரி Bபி இத்னீ Fபதன்Fபுகு Fபீஹா Fபதகூனு தய்ரம் Bபி இத்னீ வ துBப்ரி'உல் அக்மஹ வல் அBப்ரஸ Bபி இத்னீ வ இத் துக்ரிஜுல் மவ்தா Bபி இத்னீ வ இத் கFபFப்து Bபனீ இஸ்ரா'ஈல 'அன்க இத் ஜி'தஹும் Bபில் Bபய்யினாதி Fப காலல் லதீன கFபரூ மின்ஹும் இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
وَاِذْ اَوْحَیْتُ اِلَی الْحَوَارِیّٖنَ اَنْ اٰمِنُوْا بِیْ وَبِرَسُوْلِیْ ۚ قَالُوْۤا اٰمَنَّا وَاشْهَدْ بِاَنَّنَا مُسْلِمُوْنَ ۟
وَ اِذْசமயத்தை நினைவு கூர்வீராகاَوْحَيْتُவஹீ அறிவித்தேன்اِلَىபக்கம்الْحَـوَارِيّٖنَசிஷ்யர்கள்اَنْ اٰمِنُوْا بِىْநம்பிக்கை கொள்ளுங்கள் என்று/என்னைوَبِرَسُوْلِىْ‌ۚஇன்னும் என் தூதரைقَالُوْۤاகூறினார்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்وَاشْهَدْஇன்னும் சாட்சியளிப்பீராகبِاَنَّـنَاநிச்சயமாக நாங்கள்مُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள்
வ இத் அவ்ஹய்து இலல் ஹவாரிய்யீன அன் ஆமினூ Bபீ வ Bபி ரஸூலீ காலூ ஆமன்னா வஷ்ஹத் Bபி அன்னனா முஸ்லிமூன்
“என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம்: நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.
اِذْ قَالَ الْحَوَارِیُّوْنَ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ هَلْ یَسْتَطِیْعُ رَبُّكَ اَنْ یُّنَزِّلَ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ ؕ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِذْ قَالَகூறிய சமயம்الْحَـوَارِيُّوْنَசிஷ்யர்கள்يٰعِيْسَىஈஸாவேابْنَமகன்مَرْيَمَமர்யமுடையهَلْ يَسْتَطِيْعُஇயலுவானா?رَبُّكَஉம் இறைவன்اَنْ يُّنَزِّلَஅவன் இறக்குவதற்குعَلَيْنَاஎங்கள் மீதுمَآٮِٕدَةًஓர் உணவுத் தட்டைمِّنَ السَّمَآءِ‌ ؕவானத்திலிருந்துقَالَகூறினார்اتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இத் காலல் ஹவாரிய்யூன யா 'ஈஸBப் ன மர்யம ஹல் யஸ்ததீ'உ ரBப்Bபுக அய் யுனZஜ் Zஜில அலய்னா மா'இததம் மினஸ் ஸமா'இ காலத் தகுல் லாஹ இன் குன்தும் மு'மினீன்
“மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
قَالُوْا نُرِیْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَىِٕنَّ قُلُوْبُنَا وَنَعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَنَا وَنَكُوْنَ عَلَیْهَا مِنَ الشّٰهِدِیْنَ ۟
قَالُوْاகூறினார்கள்نُرِيْدُநாடுகிறோம்اَنْ نَّاْكُلَநாங்கள் புசிப்பதற்குمِنْهَاஅதிலிருந்துوَتَطْمَٮِٕنَّஇன்னும் திருப்தியடைவதற்குقُلُوْبُنَاஎங்கள் உள்ளங்கள்وَنَـعْلَمَஇன்னும் நாங்கள் அறிவதற்குاَنْஎன்றுقَدْஉறுதியாகصَدَقْتَـنَاஉண்மைகூறினீர்/எங்களிடம்وَنَكُوْنَநாங்கள் ஆகிவிடுவதற்குعَلَيْهَاஅதன் மீதுمِنَ الشّٰهِدِيْنَ‏சாட்சியாளர்களில்
காலூ னுரீது அன் னாகுல மின்ஹா வ ததம 'இன்ன குலூ Bபுனா வ னஃலம அன் கத் ஸதக்தன வ னகூன 'அலய்ஹா மினஷ் ஷாஹிதீன்
அதற்கவர்கள், “நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்” என்று கூறினார்கள்.
قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَنَا عِیْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَةً مِّنْكَ ۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟
قَالَகூறினார்عِيْسَىஈஸாابْنُமகன்مَرْيَمَமர்யமுடையاللّٰهُمَّஅல்லாஹ்வேرَبَّنَاۤஎங்கள் இறைவாاَنْزِلْஇறக்குعَلَيْنَاஎங்கள் மீதுمَآٮِٕدَةًஓர் உணவுத் தட்டைمِّنَஇருந்துالسَّمَآءِவானம்تَكُوْنُஅது இருக்கும்لَـنَاஎங்களுக்குعِيْدًاஒரு பெருநாளாகلِّاَوَّلِنَاஎங்கள் முன் இருப்பவர்களுக்குوَاٰخِرِنَاஇன்னும் எங்களுக்குப் பின் வருபவர்களுக்குوَاٰيَةًஇன்னும் ஓர் அத்தாட்சியாகمِّنْكَ‌ۚஉன்னிடமிருந்துوَارْزُقْنَاஇன்னும் எங்களுக்கு உணவளிوَاَنْتَ خَيْرُநீ மிகச் சிறந்தவன்الرّٰزِقِيْنَ‏உணவளிப்பவர்களில்
கால 'ஈஸBப் னு மர்யமல் லாஹும்ம ரBப்Bபனா அன்Zஜில் 'அலய்னா மா'இததம் மினஸ் ஸமா'இ தகூனு லனா 'ஈதல் லி அவ்வலினா வ ஆகிரினா வ ஆயதம் மின்க வர்Zஜுக்னா வ அன்த கய்ருர் ராZஜிகீன்
மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
قَالَ اللّٰهُ اِنِّیْ مُنَزِّلُهَا عَلَیْكُمْ ۚ فَمَنْ یَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّیْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِیْنَ ۟۠
قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்اِنِّىْநிச்சயமாக நான்مُنَزِّلُهَاஅதை இறக்குவேன்عَلَيْكُمْ‌ۚஉங்கள் மீதுفَمَنْஆகவே எவர்يَّكْفُرْநிராகரிப்பாரோبَعْدُபின்னர்مِنْكُمْஉங்களில்فَاِنِّىْۤநிச்சயமாக நான்اُعَذِّبُهٗவேதனை செய்வேன்/ அவருக்குعَذَابًاவேதனையால்لَّاۤமாட்டேன்اُعَذِّبُهٗۤஅதைக்கொண்டு தண்டிக்கاَحَدًاஒருவரையும்مِّنَ الْعٰلَمِيْنَ‏உலகத்தாரில்
காலல் லாஹு இன்னீ முனZஜ் Zஜிலுஹா 'அலய்கும் Fபமய் யக்Fபுர் Bபஃது மின்கும் Fப இன்னீ உ'அத்திBபுஹூ 'அதாBபல் லா உ'அத்திBபுஹூ அஹதம் மினல் 'ஆலமீன்
அதற்கு அல்லாஹ், “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்” என்று கூறினான்.
وَاِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِیْ وَاُمِّیَ اِلٰهَیْنِ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالَ سُبْحٰنَكَ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اَقُوْلَ مَا لَیْسَ لِیْ ۗ بِحَقٍّ ؔؕ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ ؕ تَعْلَمُ مَا فِیْ نَفْسِیْ وَلَاۤ اَعْلَمُ مَا فِیْ نَفْسِكَ ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
وَاِذْசமயம்قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்يٰعِيْسَىஈஸாவேابْنَமகன்مَرْيَمَமர்யமுடையءَاَنْتَநீர்قُلْتَகூறினீர்لِلنَّاسِமக்களுக்குاتَّخِذُوْنِىْஎடுத்துக் கொள்ளுங்கள்/என்னைوَاُمِّىَஇன்னும் என் தாயைاِلٰهَيْنِவணங்கப்படும் (இரு) தெய்வங்களாகمِنْ دُوْنِ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வையன்றிقَالَகூறுவார்سُبْحٰنَكَநீ மிகப்பரிசுத்தமானவன்مَا يَكُوْنُஆகாதுلِىْۤஎனக்குاَنْ اَقُوْلَநான் கூறுவதுمَاஎதைلَـيْسَஇல்லைلِىْஎனக்குبِحَقٍّ‌ؕؔதகுதிاِنْ كُنْتُநான் இருந்தால்قُلْتُهٗஅதைக் கூறினேன்فَقَدْ عَلِمْتَهٗ‌ؕதிட்டமாக நீ அதை அறிந்திருப்பாய்تَعْلَمُநன்கறிவாய்مَا فِىْ نَفْسِىْஎதை/என் உள்ளத்தில்وَلَاۤ اَعْلَمُ مَاஇன்னும் அறிய மாட்டேன்/எதைفِىْ نَفْسِكَ‌ؕஉன் உள்ளத்தில்اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்عَلَّامُமிக மிக அறிந்தவன்الْغُيُوْبِ‏மறைவானவற்றை
வ இத் காலல் லாஹு யா 'ஈஸBப் ன மர்யம 'அ-அன்த குல்த லின்னாஸித் தகிதூனீ வ உம்மிய இலாஹய்னி மின் தூனில் லாஹி கால ஸுBப்ஹானக மா யகூனு லீ அன் அகூல மா லய்ஸ லீ Bபிஹக்க்; இன் குன்து குல்துஹூ Fபகத் 'அலிம்தஹ்; தஃலமு மா Fபீ னFப்ஸீ வ லா அ'அலமு மா Fபீ னFப்ஸிக்; இன்னக அன்த 'அல்லாமுல் குயூBப்
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِیْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّیْ وَرَبَّكُمْ ۚ وَكُنْتُ عَلَیْهِمْ شَهِیْدًا مَّا دُمْتُ فِیْهِمْ ۚ فَلَمَّا تَوَفَّیْتَنِیْ كُنْتَ اَنْتَ الرَّقِیْبَ عَلَیْهِمْ ؕ وَاَنْتَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
مَا قُلْتُநான் கூறவில்லைلَهُمْஅவர்களுக்குاِلَّا مَاۤ اَمَرْتَنِىْதவிர/எதை/நீ ஏவினாய்/எனக்குبِهٖۤஅதைاَنِஎன்பதைاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைرَبِّىْஎன் இறைவன்وَرَبَّكُمْ‌ۚஇன்னும் உங்கள் இறைவன்وَكُنْتُஇருந்தேன்عَلَيْهِمْஅவர்கள் மீதுشَهِيْدًاசாட்சியாளனாகمَّا دُمْتُநான் இருந்தவரைفِيْهِمْ‌ۚஅவர்களுடன்فَلَمَّاபோதுتَوَفَّيْتَنِىْநீ என்னை கைப்பற்றியكُنْتَஇருந்தாய்اَنْتَநீالرَّقِيْبَகண்கானிப்பவனாகعَلَيْهِمْ‌ؕஅவர்கள் மீதுوَاَنْتَநீعَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாவற்றின்شَهِيْدٌ‏சாட்சியாளன்
மா குல்து லஹும் இல்லா மா அமர்தனீ Bபிஹீ அனி'Bபுதுல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபகும்; வ குன்து 'அலய்ஹிம் ஷஹீதம் மா தும்து Fபீஹிம் Fபலம்மா தவFப்Fபய்தனீ குன்த அன்தர் ரகீBப 'அலய்ஹிம்; வ அன்த 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீத்
“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);
اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ ۚ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
اِنْ تُعَذِّبْهُمْநீ வேதனை செய்தால் / அவர்களைفَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்عِبَادُكَ‌ۚஉன் அடியார்கள்وَاِنْ تَغْفِرْநீ மன்னித்தால்لَهُمْஅவர்களைفَاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏ஞானவான்
இன் து'அத்திBப்ஹும் Fப இன்னஹும் இBபாதுக வ இன் தக்Fபிர் லஹும் Fப இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).
قَالَ اللّٰهُ هٰذَا یَوْمُ یَنْفَعُ الصّٰدِقِیْنَ صِدْقُهُمْ ؕ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ رَضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
قَالَகூறுவான்اللّٰهُஅல்லாஹ்هٰذَاஇதுيَوْمُநாள்يَـنْفَعُபலனளிக்கும்الصّٰدِقِيْنَஉண்மையாளர்களுக்குصِدْقُهُمْ‌ؕஅவர்களுடைய உண்மைلَهُمْஅவர்களுக்குجَنّٰتٌசொர்க்கங்கள்تَجْرِىْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅதன் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاۤ اَبَدًا‌ ؕஅதில்/என்றென்றும்رَضِىَமகிழ்ச்சியடைவான்اللّٰهُஅல்லாஹ்عَنْهُمْஅவர்களைப் பற்றிوَرَضُوْاஇன்னும் மகிழ்ச்சியடைவார்கள்عَنْهُ‌ ؕஅவனைப் பற்றிذٰ لِكَஇதுதான்الْـفَوْزُவெற்றிالْعَظِيْمُ‏மகத்தான
காலல் லாஹு ஹாத யவ்மு யன்Fப'உஸ் ஸாதிகீன ஸித்குஹும்; லஹும் ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; ரளியல் லாஹு 'அன்ஹும் வ ரளூ 'அன்ஹ்; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
அப்போது அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்; கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.
لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا فِیْهِنَّ ؕ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
لِلّٰهِஅல்லாஹ்வுக்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا فِيْهِنَّ‌ ؕஇன்னும் அவற்றிலுள்ளவைوَهُوَஅவன்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதுقَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Fபீஹின்ன்; வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன்ன் கதீர்
வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.