87. ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)

மக்கீ, வசனங்கள்: 19

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَی ۟ۙ
سَبِّحِதுதித்து தூய்மைப் படுத்துவீராகاسْمَபெயரைرَبِّكَஉம் இறைவனின்الْاَعْلَىۙ‏மிக உயர்ந்தவனாகிய
ஸBப்Bபிஹிஸ்ம ரBப்Bபிகல் அஃலா
(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
الَّذِیْ خَلَقَ فَسَوّٰی ۟
الَّذِىْ خَلَقَஅவன்தான் படைத்தான்فَسَوّٰى ۙ‏இன்னும் ஒழுங்கு படுத்தினான்
அல்லதீ கலக Fபஸவ்வா
அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
وَالَّذِیْ قَدَّرَ فَهَدٰی ۟
وَالَّذِىْ قَدَّرَஅவன்தான் நிர்ணயம் செய்தான்فَهَدٰى ۙ‏இன்னும் வழிகாட்டினான்
வல்லதீ கத்தர Fபஹதா
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
وَالَّذِیْۤ اَخْرَجَ الْمَرْعٰی ۟
وَالَّذِىْۤ اَخْرَجَஅவன்தான் வெளியாக்கினான்الْمَرْعٰى ۙ‏பசுமையான புல்லை
வல்லதீ அக்ரஜல் மர்'ஆ
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰی ۟ؕ
فَجَعَلَهٗஇன்னும் அதை ஆக்கினான்غُثَآءًசருகாகاَحْوٰىؕ‏கருத்த (காய்ந்த)
Fபஜ'அலஹூ குதா'அன் அஹ்வா
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤی ۟ۙ
سَنُقْرِئُكَஉமக்குக் கற்பிப்போம்فَلَا تَنْسٰٓىۙ‏ஆகவே நீர் மறக்க மாட்டீர்
ஸனுக்ரி'உக Fபலா தன்ஸா
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ وَمَا یَخْفٰی ۟ؕ
اِلَّاதவிரمَا شَآءَநாடியதைاللّٰهُ‌ؕஅல்லாஹ்اِنَّهٗநிச்சயமாக அவன்يَعْلَمُஅறிவான்الْجَهْرَவெளிப்படையானதைوَمَا يَخْفٰىؕ‏இன்னும் மறைந்திருப்பதை
இல்லா மா ஷா'அல் லாஹ்; இன்னஹூ யஃலமுல் ஜஹ்ர வமா யக்Fபா
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
وَنُیَسِّرُكَ لِلْیُسْرٰی ۟ۚۖ
وَنُيَسِّرُكَஉமக்கு இலகுவாக்குவோம்لِلْيُسْرٰى ۖ‌ۚ‏சொர்க்கப் பாதையை
வ னு-யஸ்ஸிருக லில்யுஸ்ரா
அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰی ۟ؕ
فَذَكِّرْஆகவே, அறிவுரை கூறுவீராகاِنْ نَّفَعَتِபலனளித்தால்الذِّكْرٰىؕ‏அறிவுரை
Fபதக்கிர் இன் னFப'அதித்திக்ரா
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
سَیَذَّكَّرُ مَنْ یَّخْشٰی ۟ۙ
سَيَذَّكَّرُஅறிவுரை பெறுவார்مَنْஎவர்يَّخْشٰىۙ‏பயப்படுகிறார்
ஸ யத்தக்கரு மய்யக்-ஷா
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
وَیَتَجَنَّبُهَا الْاَشْقَی ۟ۙ
وَيَتَجَنَّبُهَاஇன்னும் அதைத் தவிர்த்துவிடுவான்الْاَشْقَىۙ‏பெரும் துர்ப்பாக்கியவான்
வ யதஜன்னBபுஹல் அஷ்கா
ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
الَّذِیْ یَصْلَی النَّارَ الْكُبْرٰی ۟ۚ
الَّذِىْஎவன்يَصْلَىபற்றி எரிவான்النَّارَநெருப்பில்الْكُبْرٰى‌ۚ‏மாபெரும்
அல்லதீ யஸ்லன் னாரல் குBப்ரா
அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَلَا یَحْیٰی ۟ؕ
ثُمَّபிறகுلَا يَمُوْتُமரணிக்கவும் மாட்டான்فِيْهَاஅதில்وَلَا يَحْيٰىؕ‏இன்னும் வாழவும் மாட்டான்
தும்ம லா யமூது Fபீஹா வலா யஹ்யா
பின்னர், அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰی ۟ۙ
قَدْதிட்டமாகاَفْلَحَவெற்றி பெற்றார்مَنْஎவர்تَزَكّٰىۙ‏பரிசுத்தமடைந்தார்
கத் அFப்லஹ மன் தZஜக்கா
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰی ۟ؕ
وَذَكَرَஇன்னும் நினைவு கூர்ந்தார்اسْمَபெயரைرَبِّهٖதன் இறைவனின்فَصَلّٰى‌ ؕ‏இன்னும் தொழுதார்
வ தகரஸ் ம ரBப்Bபிஹீ Fபஸல்லா
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۚۖ
بَلْமாறாகتُؤْثِرُوْنَதேர்ந்தெடுக்கிறீர்கள்الْحَيٰوةَவாழ்வைالدُّنْيَا ۖ‏உலக(ம்)
Bபல் து'திரூனல் ஹயாதத் துன்யா
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
وَالْاٰخِرَةُ خَیْرٌ وَّاَبْقٰی ۟ؕ
وَالْاٰخِرَةُமறுமையோخَيْرٌமிகச் சிறந்ததுوَّ اَبْقٰىؕ‏இன்னும் என்றும் நிலையானது
வல் ஆகிரது கய்ரு(ன்)வ் வ அBப்கா
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰی ۟ۙ
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَفِى الصُّحُفِவேதங்களிலும்الْاُوْلٰىۙ‏முந்திய
இன்ன ஹாதா லFபிஸ் ஸுஹு Fபில் ஊலா
நிச்சயமாக இது முந்திய ஆகமங்களிலும்-
صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ۟۠
صُحُفِவேதங்களாகியاِبْرٰهِيْمَஇப்றாஹீமுடையوَمُوْسٰى‏இன்னும் மூஸாவுடைய
ஸுஹுFபி இBப்ராஹீம வ மூஸா
இப்ராஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.