38. ஸூரத்து ஸாத்

மக்கீ, வசனங்கள்: 88

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
صٓ وَالْقُرْاٰنِ ذِی الذِّكْرِ ۟ؕ
صٓஸாத்وَ الْقُرْاٰنِகுர்ஆனின் மீது சத்தியமாகذِیஉடையالذِّكْرِؕஅறிவுரை
ஸாத்; வல்-குர்ஆனி தித் திக்ர்
முஹம்மது ஜான்
ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக.
அப்துல் ஹமீது பாகவி
ஸாத்; நல்லுபதேசங்கள் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக!
IFT
ஸாத், அறிவுரை நிறைந்த குர்ஆனின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஸாத் (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலையுடைய இக்குர் ஆனின் மீது சத்தியமாக!
Saheeh International
Ṣad. By the Qur’an containing reminder...
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ عِزَّةٍ وَّشِقَاقٍ ۟
بَلِமாறாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفِیْஇருக்கின்றனர்عِزَّةٍஅகந்தையிலும்وَّ شِقَاقٍபிணக்கிலும்
Bபலில் லதீன கFபரூ Fபீ 'இZஜ்Zஜதி(ன்)வ் வ ஷிகாக்
முஹம்மது ஜான்
ஆனால், நிராகரிப்பவர்களோ பெருமையிலும், மாறுபாட்டிலும் (ஆழ்ந்து) கிடக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(இது நம்மால்தான் அருளப்பட்டது. இதை) நிராகரிப்பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர்.
IFT
ஆயினும், எவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ அவர்கள்தாம் பெரும் ஆணவத்திலும், பிடிவாதத்திலும் உழன்று கொண்டு இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆனால், நிராகரித்தோர் பெருமையிலும், முரண்பாட்டிலும் (மூழ்கி) இருக்கின்றனர்.
Saheeh International
But those who disbelieve are in pride and dissension.
كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ فَنَادَوْا وَّلَاتَ حِیْنَ مَنَاصٍ ۟
كَمْஎத்தனையோاَهْلَكْنَاநாம் அழித்தோம்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்னர்مِّنْஇருந்துقَرْنٍதலைமுறையினரைفَنَادَوْاஅப்போது அவர்கள் அலறினார்கள்وَّ لَاتَஆனால் இல்லைحِیْنَநேரம்مَنَاصٍதப்பிப்பதற்கு
கம் அஹ்லக்னா மின் கBப்லிஹிம் மின் கர்னின் Fபனாதவ் வ லாத ஹீன மனாஸ்
முஹம்மது ஜான்
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; அப்போது, அவர்கள் தப்பி ஓட வழியில்லாத நிலையில் (உதவி தேடிக்) கூக்குரலிட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கிறோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாய் இருக்கவில்லை.
IFT
இவர்களுக்கு முன் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம். (அவர்களுடைய தீயகதி வந்தபோது) அவர்கள் கூக்குரலிட்டார்கள். ஆயினும், அது தப்பிப்பதற்கான நேரமாய் இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருகின்றோம், (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் (உதவி தேடி) அழைத்தார்கள், (அது வேதனையிலிருந்து) தப்பித்துக்கொள்ளக்கூடிய நேரமாகவும் இருக்கவில்லை.
Saheeh International
How many a generation have We destroyed before them, and they [then] called out; but it was not a time for escape.
وَعَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ ؗ وَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا سٰحِرٌ كَذَّابٌ ۟ۖۚ
وَ عَجِبُوْۤاமேலும் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்اَنْஎன்றுجَآءَهُمْஅவர்களிடம் வந்தார்مُّنْذِرٌஓர் எச்சரிக்கையாளர்مِّنْهُمْ ؗஅவர்களிலிருந்தேوَ قَالَமேலும் கூறினார்கள்الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்هٰذَاஇவர்سٰحِرٌசூனியக்காரர்كَذَّابٌۖۚபெரும் பொய்யர்
வ 'அஜிBபூ அன் ஜா'அ ஹும் முன்திரும் மின்ஹும் வ காலல் காFபிரூன ஹாதா ஸாஹிருன் கத்தாBப்
முஹம்மது ஜான்
அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்; “இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!” என்றும் காஃபிர்கள் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர் (ஆகிய நீர்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, ‘‘இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்'' என்று (உங்களைப் பற்றி) அந்த நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
IFT
அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் இவர்களிலிருந்தே வந்துவிட்டார் என்பது குறித்து இவர்களுக்குப் பெரும்வியப்பு ஏற்பட்டது. நிராகரிப்பாளர்கள் கூறலாயினர்: “இவர் ஒரு சூனியக்காரர்; சுத்தப் பொய்யர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவர் (ஆகிய நீர்) அவர்களி(ன் இனத்தி)லிருந்து அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டனர்; ”இவர் பெரும் பொய்யரான சூனியக்காரர்” என்றும் (உம்மைப்பற்றி) நிராகரிப்போர் கூறினர்.
Saheeh International
And they wonder that there has come to them a warner [i.e., Prophet Muhammad (ﷺ] from among themselves. And the disbelievers say, "This is a magician and a liar.
اَجَعَلَ الْاٰلِهَةَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ اِنَّ هٰذَا لَشَیْءٌ عُجَابٌ ۟
اَجَعَلَஅவன் ஆக்கிவிட்டானா?الْاٰلِهَةَதெய்வங்களைاِلٰهًاஇறைவனாகوَّاحِدًا ۖۚஒரேاِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَشَیْءٌஒரு காரியம்عُجَابٌஆச்சரியமானது
அஜ'அலல் ஆலிஹத இலாஹ(ன்)வ் வாஹிதன் இன்ன ஹாதா லஷய்'உன் 'உஜாBப்
முஹம்மது ஜான்
“இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே ஓர் இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்'' (என்று கூறி,)
IFT
என்ன, இவர் அத்தனை கடவுளருக்கும் பகரமாக ஒரே கடவுள்தான் என்று ஆக்கிவிட்டாரா? இது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(என்ன!) இவர் (நம்முடைய வணக்கத்திற்குரிய) தெய்வங்களை (நிராகரித்து விட்டு) ஒரே ஒரு வணக்கதிற்குரியவனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்” (என்றும் கூறினர்).
Saheeh International
Has he made the gods [only] one God? Indeed, this is a curious thing."
وَانْطَلَقَ الْمَلَاُ مِنْهُمْ اَنِ امْشُوْا وَاصْبِرُوْا عَلٰۤی اٰلِهَتِكُمْ ۖۚ اِنَّ هٰذَا لَشَیْءٌ یُّرَادُ ۟ۖۚ
وَ انْطَلَقَமேலும் புறப்பட்டனர்الْمَلَاُதலைவர்கள்مِنْهُمْஅவர்களில் உள்ளاَنِஎன்றுامْشُوْاசெல்லுங்கள்وَ اصْبِرُوْاமேலும் உறுதியாக இருங்கள்عَلٰۤیமீதுاٰلِهَتِكُمْ ۖۚஉங்கள் தெய்வங்களின்اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَشَیْءٌஒரு காரியமாகும்یُّرَادُۖۚநாடப்படுகிறது
வன்தலகல் மல-உ மின்ஹும் அனிம் ஷூ வஸ்Bபிரூ 'அலா ஆலிஹதிகும் இன்ன்ன ஹாதா லஷய் 'உ(ன்)ய் யுராத்
முஹம்மது ஜான்
“(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது” என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிலுள்ள தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி, ‘‘இவரை விட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாயிருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்)இவ்விஷயத்தில் ஏதோ (ஒரு சுயநலம்தான்) கருதப்படுகிறது'' என்று கூறிக் கொண்டே சென்று விட்டனர்.
IFT
மேலும், சமுதாயத் தலைவர்கள் பின்வருமாறு கூறிக்கொண்டு வெளியேறிச் சென்றார்கள்: “செல்லுங்கள்; உங்களுடைய தெய்வங்களை வணங்குவதில் உறுதியாய் இருங்கள். திண்ணமாக, இவ்விஷயம் ஏதோ ஓர் உள்நோக்கத்துடன் கூறப்படுகின்றது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களிலுள்ள தலைவர்கள், (மற்றவர்களிடம், “இவரை விட்டு உங்கள் வழியில்) நீங்கள் சென்றுவிடுங்கள், இன்னும், உங்கள் தெய்வங்களின் மீது நீங்கள் (உறுதியுடன்) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக, (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இ(க் கூற்றான)து ஏதோ ஒன்றை (சுயநலத்தை கருத்தில் கொண்டு) நாடப்பட்டதாக உள்ளது” என்று (கூறிக்கொண்டே) சென்றுவிட்டனர்.
Saheeh International
And the eminent among them went forth, [saying], "Continue, and be patient over [the defense of] your gods. Indeed, this is a thing intended.
مَا سَمِعْنَا بِهٰذَا فِی الْمِلَّةِ الْاٰخِرَةِ ۖۚ اِنْ هٰذَاۤ اِلَّا اخْتِلَاقٌ ۟ۖۚ
مَاஇல்லைسَمِعْنَاநாங்கள் கேள்விப்பட்டோம்بِهٰذَاஇதைப் பற்றிفِیஇல்الْمِلَّةِமார்க்கம்الْاٰخِرَةِ ۖۚபிந்தியاِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரاخْتِلَاقٌۖۚஇட்டுக்கட்டப்பட்டதே
மா ஸமிஃனா Bபிஹாதா Fபில் மில்லதில் ஆகிரதி இன் ஹாதா இல்லக் திலாக்
முஹம்மது ஜான்
“வேறு (எந்த) சமுதாயத்திலும் நாம் இது (போன்று) கேள்விப்பட்டதில்லை; இது (இவருடைய) கற்பனையேயன்றி வேறில்லை (என்றும்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘முன்னுள்ள வகுப்பார்களிலும், இதை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே தவிர வேறில்லை'' என்றும்,
IFT
அண்மைக்காலத்து எந்தச் சமுதாயத்திடமும் இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது கற்பனைசெய்து கூறப்பட்டதே தவிர வேறொன்றுமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“கடைசிமார்க்க(மான கிறிஸ்தவ மத)த்திலும் இது பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை, இது (இவரால் உண்டாக்கப்பட்ட) பொய்யைத் தவிர வேறில்லை” (என்றும்),
Saheeh International
We have not heard of this in the latest religion. This is not but a fabrication.
ءَاُنْزِلَ عَلَیْهِ الذِّكْرُ مِنْ بَیْنِنَا ؕ بَلْ هُمْ فِیْ شَكٍّ مِّنْ ذِكْرِیْ ۚ بَلْ لَّمَّا یَذُوْقُوْا عَذَابِ ۟ؕ
ءَاُنْزِلَஅருளப்பட்டதா?عَلَیْهِஅவர் மீதுالذِّكْرُஅறிவுரைمِنْۢஇருந்துبَیْنِنَا ؕஎங்களுக்கு இடையேبَلْமாறாகهُمْஅவர்கள்فِیْஇல்شَكٍّசந்தேகம்مِّنْபற்றிذِكْرِیْ ۚஎனது அறிவுரையைப்بَلْமாறாகلَّمَّاஇதுவரைیَذُوْقُوْاஅவர்கள் சுவைக்கவில்லைعَذَابِؕஎனது வேதனையை
'அ-உன்Zஜில 'அலய்ஹித் திக்ரு மின் Bபய்னினா; Bபல் ஹும் Fபீ ஷக்கின் மின் திக்ரீ Bபல் லம்மா யதூகூ 'அதாBப்
முஹம்மது ஜான்
“நம்மில், இவர் பேரில்தான் நினைவுறுத்தும் நல்லுபதேசம் இறக்கப்பட்டு விட்டதோ?” (என்றும் கூறுகிறார்கள்.) அவ்வாறல்ல! அவர்கள் எனது போதனையில் சந்தேகத்தில் இருக்கின்றனர்; அவ்வாறல்ல! இன்னும் அவர்கள் என் வேதனையை அனுபவித்ததில்லை.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நம்மைவிட்டு இவர் பேரில் மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டு விட்டது'' (என்றும் கூறினார்கள்). அவ்வாறன்று. உண்மையில் இவர்கள் நம் எச்சரிக்கையைப் பற்றியே பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். மேலும், இதுவரை அவர்கள் நம் வேதனையைச் சுவைத்துப் பார்க்கவே இல்லை.
IFT
நம்மிடையே, அல்லாஹ்வுடைய அறிவுரை இறக்கி வைக்கப்படுவதற்கு இவர் ஒருவர் மட்டும்தான் இருந்தாரா, என்ன?” உண்மை என்னவெனில், இவர்கள் என்னுடைய அறிவுரையின் மீது சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறெல்லாம் இவர்கள் பேசுவதற்குக் காரணம், இவர்கள் நான் தரும் வேதனையைச் சுவைக்கவில்லை என்பதுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நம்மவர்களுக்கிடையில் இவர் மீது (வேத) உபதேசம் இறக்கப்பட்டுவிட்டதா” (என்றும் கூறினார்கள்.) அவ்வாறன்று! உண்மையில் இவர்கள் என்னுடைய (வேத) உபதேசத்தைப் பற்றி சந்தேகத்திலிருகின்றனர். இல்லை, இதுவரையில் அவர்கள் என்னுடைய வேதனையைச் சுவைத்(துப்பார்த்)ததில்லை.
Saheeh International
Has the message been revealed to him out of [all of] us?" Rather, they are in doubt about My message. Rather, they have not yet tasted My punishment.
اَمْ عِنْدَهُمْ خَزَآىِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِیْزِ الْوَهَّابِ ۟ۚ
اَمْஅல்லதுعِنْدَهُمْஅவர்களிடம்خَزَآىِٕنُகருவூலங்கள்رَحْمَةِஅருளின்رَبِّكَஉமது இறைவனின்الْعَزِیْزِமிகைத்தவனானالْوَهَّابِۚபெருங்கொடையாளனான
அம்'இன்தஹும் கZஜா 'இனு ரஹ்மதி ரBப்Bபிகல் 'அZஜீZஜில் வஹ்ஹாBப்
முஹம்மது ஜான்
அல்லது, யாவரையும் மிகைத்தவனும் மிகப்பெருங் கொடையாளியுமாகிய உமது இறைவனின் கிருபைக் கருவூலங்கள் - அவர்களிடம் இருக்கின்றனவா,
அப்துல் ஹமீது பாகவி
(வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உமது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கிறதா?
IFT
என்ன, யாவற்றையும் மிகைத்தவனும் பெருங்கொடையாளனுமான உம் இறைவனின் அருட்களஞ்சியங்கள் இவர்களின் கைவசத்தில்தான் உள்ளனவா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (யாவரையும்) மிகைத்த, பெருங்கொடையாளனாகிய உமதிரட்சகனின் அருள் பொக்கிஷங்கள் அவர்களிடம் இருக்கின்றனவா?
Saheeh International
Or do they have the depositories of the mercy of your Lord, the Exalted in Might, the Bestower?
اَمْ لَهُمْ مُّلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۫ فَلْیَرْتَقُوْا فِی الْاَسْبَابِ ۟
اَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குمُّلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ مَاமேலும் எவைبَیْنَهُمَا ۫அவ்விரண்டிற்கும் இடையில்فَلْیَرْتَقُوْاஎனவே அவர்கள் ஏறிச் செல்லட்டும்فِیஇல்الْاَسْبَابِவழிகளில்
அம் லஹும் முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா Fபல்யர்தகூ Fபில் அஸ்BபாBப்
முஹம்மது ஜான்
அல்லது வானங்களுடையவும், பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா? அவ்வாறாயின் அவர்கள் (ஏணி போன்ற) சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது வானங்கள், பூமி, இன்னும் இவற்றின் மத்தியில் உள்ளவற்றின் ஆட்சி அவர்களுக்கு உரியதுதானா? அவ்வாறாயின், அவர்கள் (இறைவனுடன் போர் புரிவதற்காக) ஏணி வைத்து மேலே ஏறவும்.
IFT
அல்லது இவர்கள் வானம், பூமி மற்றும் இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்திற்கும் உரிமையாளர்களா? அவ்வாறாயின், இவர்கள் உலகாயத ரீதியான உச்சகட்ட சாதனங்கள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்க்கட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது வானங்கள் மற்றும் பூமி, இன்னும் இவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அவர்களுக்கு இருக்கிறதா? அவ்வாறாயின், (வானங்களின்) வழிகளில் (ஏறும் சாதனங்கள் மூலம்) அவர்கள் ஏரிச்செல்லட்டும்.
Saheeh International
Or is theirs the dominion of the heavens and the earth and what is between them? Then let them ascend through [any] ways of access.
جُنْدٌ مَّا هُنَالِكَ مَهْزُوْمٌ مِّنَ الْاَحْزَابِ ۟
جُنْدٌஒரு படைمَّاஏதோهُنَالِكَஅங்கேمَهْزُوْمٌதோற்கடிக்கப்பட்டمِّنَஇருந்துالْاَحْزَابِகூட்டணிகளில்
ஜுன்தும் மா ஹுனாலிக மஹ்Zஜூமும் மினல் அஹ்ZஜாBப்
முஹம்மது ஜான்
ஆனால் இங்கிருக்கும் படையினரும் (முன் தலைமுறைகளில்) முறியடிக்கப்பட்ட ஏனைய கூட்டங்களைப் போலவே ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(கேவலம்!) இங்கிருக்கும் இவர்களுடைய கூட்டத்தினர் (எம்மாத்திரம்?) மற்ற கூட்டத்தினர்களைப் போலவே இவர்களும் முறியடிக்கப்படுவார்கள்.
IFT
பல கூட்டத்தினரிடையே இவர்கள் ஒரு சிறு கூட்டத்தினர்தாம்; இவர்கள் இதே இடத்தில் தோல்வி அடைய இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(முன்சென்ற நபிமார்களைப் பொய்யாக்கிய) கூட்டதார்களில், இங்கிருப்பவர்கள் தோற்கடிக்கப்படும் ஓர் அற்பப்படை,
Saheeh International
[They are but] soldiers [who will be] defeated there among the companies [of disbelievers].
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّفِرْعَوْنُ ذُو الْاَوْتَادِ ۟ۙ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்قَوْمُசமுதாயம்نُوْحٍநூஹுடையوَّ عَادٌஆதுவும்وَّ فِرْعَوْنُஃபிர்அவ்னும்ذُوஉடையالْاَوْتَادِۙஆப்புகளை
கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ 'ஆது(ன்)வ் வ Fபிர்'அவ்னு துல் அவ்தாத்
முஹம்மது ஜான்
(இவ்வாறு) இவர்களுக்கு முன் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ஆது(சமூகத்தாரு)ம், முளைகளுடைய ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், ‘ஆத்' என்னும் மக்களும், பெரும் படையுடைய ஃபிர்அவ்னும், (நம் தூதர்களைப்) பொய்யாக்கினார்கள்.
IFT
இவர்களுக்கு முன் நூஹுடைய சமூகத்தினரும், ஆத் சமூகத்தினரும், முளைகளுடைய ஃபிர்அவ்னும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் (இருந்த) நூஹ்வுடைய சமூகத்தாரும், ஆது (சமூகத்தாரு)ம், முளைகளுடைய(_பெரும் படைகளுடைய) ஃபிர் அவ்னும் (நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கினார்கள்.
Saheeh International
The people of Noah denied before them, and [the tribe of] ʿAad and Pharaoh, the owner of stakes,
وَثَمُوْدُ وَقَوْمُ لُوْطٍ وَّاَصْحٰبُ لْـَٔیْكَةِ ؕ اُولٰٓىِٕكَ الْاَحْزَابُ ۟
وَ ثَمُوْدُமேலும் ஸமூதுوَ قَوْمُமேலும் சமூகத்தாரும்لُوْطٍலூத்துடையوَّ اَصْحٰبُமேலும் வாசிகளும்لْـَٔیْكَةِ ؕஐக்கா வனத்தின்اُولٰٓىِٕكَஇவர்களேالْاَحْزَابُபெரும் படைகள்
வ தமூது வ கவ்மு லூதி(ன்)வ் வ அஸ்ஹாBபுல் 'அய்கஹ்; உலா'இகல் அஹ்ZஜாBப்
முஹம்மது ஜான்
(இவ்வாறு) “ஸமூது”ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறே ‘ஸமூத்' என்னும் மக்களும், லூத்துடைய மக்களும், (மத்யன்) தோப்புவாசிகளும் (பொய்யாக்கினார்கள்). இவர்கள்தான் (முறியடிக்கப்பட்ட) அந்தக் கூட்டத்தினர்கள்.
IFT
மற்றும் ஸமூத் சமூகம், லூத்தின் சமூகம், ஐக்காவாசிகள் ஆகியோரும் கூட பொய்யெனத் தூற்றியிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறே) ஸமூதும், லூத்துடைய சமூகத்தாரும், (மத்யன்) தோப்புவாசிகளும் (பொய்யாக்கினார்கள்). இவர்கள் தாம் (முறியடிக்கப்பட்ட) அக்கூட்டதினர்கள் ஆவார்கள்.
Saheeh International
And [the tribe of] Thamūd and the people of Lot and the companions of the thicket [i.e., people of Madyan]. Those are the companies.
اِنْ كُلٌّ اِلَّا كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ ۟۠
اِنْஇல்லைكُلٌّஒவ்வொருவரும்اِلَّاதவிரكَذَّبَபொய்ப்பித்தனர்الرُّسُلَதூதர்களைفَحَقَّஆகவே உறுதியானதுعِقَابِ۠என் தண்டனை
இன் குல்லுன் இல்லா கத்தBபர் ருஸுல Fபஹக்க 'இகாBப்
முஹம்மது ஜான்
இவர்கள் ஒவ்வொருவரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்படாமல் இல்லை; எனவே என்னுடைய தண்டனை (அவர்கள் மீது) உறுதியாயிற்று.  
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் ஒவ்வொரு கூட்டத்தினரும் தூதர்களைப் பொய்யாக்காமல் இருந்ததில்லை. (ஆகவே, அவர்கள் மீது) என் வேதனை உறுதியாயிற்று.
IFT
கூட்டத்தினர் என்பது அவர்கள்தாம்! அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தூதர்களைப் பொய்யர்கள் என வாதிட்டார்கள். எனவே, என்னுடைய தண்டனையின் தீர்ப்பு (அவர்கள் மீது) விதிக்கப்பட்டுவிட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்கள் ஒவ்வொருவரும் (நம்முடைய) தூதர்களைப் பொய்யாக்கியே தவிர இருக்கவில்லை, ஆகவே, (அவர்களுக்கு) என்னுடைய தண்டனை நிச்சயமாகிவிட்டது.
Saheeh International
Each of them denied the messengers, so My penalty was justified.
وَمَا یَنْظُرُ هٰۤؤُلَآءِ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً مَّا لَهَا مِنْ فَوَاقٍ ۟
وَ مَاமேலும் இல்லைیَنْظُرُஎதிர்பார்க்கிறார்கள்هٰۤؤُلَآءِஇவர்கள்اِلَّاதவிரصَیْحَةًஒரு பேரோசையைوَّاحِدَةًஒரே ஒருمَّاஇல்லைلَهَاஅதற்குمِنْஎந்த ஒருفَوَاقٍதாமதமும்
வமா யன்ளுரு ஹா உலா'இ இல்லா ஸய்ஹத(ன்)வ் வாஹிததம் மா லஹா மின் Fபவாக்
முஹம்மது ஜான்
இன்னும் இவர்களும் ஒரே ஒரு பேரொளியைத் தவிர (வேறெதனையும்) எதிர் பார்க்கவில்லை. அதில் தாமதமும் இராது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அரபிகளாகிய) இவர்களும் (தங்களை அழிக்கக்கூடிய) ஒரே ஒரு சப்தத்தைத் தவிர (வேறெதனை) எதிர்பார்க்கின்றனர். (அது வரும் சமயம்) அதைத் தாமதப்படுத்தவும் வழி இருக்காது.
IFT
இந்த மக்களும் ஒரே ஓர் உரத்த ஓசையையே எதிர்பார்த்திருக்கின்றார்கள். அதற்குப் பிறகு மற்றோர் உரத்த ஓசை இராது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இவர்கள் ஒரே ஒரு சப்தத்தைப் தவிர (வேறெதனையும்) எதிர்பார்க்கவில்லை, அ(துவருவ)தில் தாமதமும் இராது.
Saheeh International
And these [disbelievers] await not but one blast [of the Horn]; for it there will be no delay.
وَقَالُوْا رَبَّنَا عَجِّلْ لَّنَا قِطَّنَا قَبْلَ یَوْمِ الْحِسَابِ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்رَبَّنَاஎங்கள் இறைவனேعَجِّلْவிரைந்து வழங்குلَّنَاஎங்களுக்குقِطَّنَاஎங்கள் பங்கைقَبْلَமுன்னதாகیَوْمِநாளுக்குالْحِسَابِவிசாரணை
வ காலூ ரBப்Bபனா 'அஜ்ஜில் லனா கித்தனா கBப்ல யவ்மில் ஹிஸாBப்
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவா! கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளுக்கு முன்னரே, எங்கள் (வேதனையின்) பாகத்தை துரிதப்படுத்தி(க் கொடுத்து) விடுவாயாக” என்றும் (ஏளனமாகக்) கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள், கேள்வி கணக்குக் கேட்கும் நாள் வருவதற்கு முன்னதாகவே, ‘‘எங்கள் இறைவனே! எங்கள் (வேதனையின்) பாகத்தை எங்களுக்குக் கொடுத்துத் தீர்த்துவிடு!'' என்று (பரிகாசமாகக்) கேட்கிறார்கள்.
IFT
இவர்கள் கூறுகிறார்கள்: “எங்கள் இறைவனே! கேள்வி கணக்கிற்குரிய நாளுக்கு முன்பே எங்களின் பங்கினை எங்களுக்கு விரைவாகத் தந்துவிடு!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “எங்கள் இரட்சகனே! (கேள்வி) கணக்குடைய நாளைக்கு முன்னதாகவே, எங்களுடைய (வேதனையின்) பங்கை எங்களுக்குத் துரிதப் படுத்திவிடுவாயாக!” என்று இவர்கள் (பரிகாசமாகக்) கேட்கின்றார்கள்.
Saheeh International
And they say, "Our Lord, hasten for us our share [of the punishment] before the Day of Account."
اِصْبِرْ عَلٰی مَا یَقُوْلُوْنَ وَاذْكُرْ عَبْدَنَا دَاوٗدَ ذَا الْاَیْدِ ۚ اِنَّهٗۤ اَوَّابٌ ۟
اِصْبِرْபொறுத்துக் கொள்வீராகعَلٰیமீதுمَاஎதைیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களோوَ اذْكُرْமேலும் நினைவு கூர்வீராகعَبْدَنَاநம் அடியாரானدَاوٗدَதாவூதைذَاஉடையவரானالْاَیْدِ ۚவலிமைاِنَّهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌஅதிகம் மீளுபவர்
இஸ்Bபிர் 'அலா மா யகூலூன வத்குர் 'அBப்தனா தாவூத தல் அய்தி இன்னஹூ அவ்வாBப்
முஹம்மது ஜான்
இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையாக சகித்துக்கொண்டு இருப்பீராக. மேலும், மிக பலசாலியாகிய நம் அடியார் தாவூதை நினைத்துப் பார்ப்பீராக. நிச்சயமாக அவர் (எத்தகைய சிரமத்திலும்) நம்மையே நோக்கி நின்றார்.
IFT
(நபியே!) இவர்கள் பேசும் பேச்சுகளை பொறுத்துக் கொள்ளும். மேலும், பெரும் ஆற்றல்களைக் கொண்டிருந்த நம்முடைய அடியார் தாவூதின் வரலாற்றை இவர்களுக்கு நீர் எடுத்துக்கூறும். அவர் (ஒவ்வொரு விவகாரத்திலும் அல்லாஹ்விடமே) திரும்பக் கூடியவராக இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்கள் கூறுவதின் மீது நீர் பொறுமையாக இருப்பீராக! அன்றியும், மிக்க பலசாலியாகிய நமது அடியார் தாவூதை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் (நம் பக்கமே) மிகுதியாகத் திரும்பக்கூடியவராக இருந்தார்.
Saheeh International
Be patient over what they say and remember Our servant, David, the possessor of strength; indeed, he was one who repeatedly turned back [to Allah].
اِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهٗ یُسَبِّحْنَ بِالْعَشِیِّ وَالْاِشْرَاقِ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்سَخَّرْنَاவசப்படுத்தினோம்الْجِبَالَமலைகளைمَعَهٗஅவருடன்یُسَبِّحْنَதுதிக்கும்படிبِالْعَشِیِّமாலையிலும்وَ الْاِشْرَاقِۙகாலையிலும்
இன்னா ஸக்கர்னல் ஜிBபால ம'அஹூ யுஸBப்Bபிஹ்ன Bபில்'அஷிய்யி வல் இஷ்ராக்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்; மாலை வேளையிலும், காலை வேளையிலும் அவை அவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்தித் தந்தோம். காலையிலும், மாலையிலும் அவை அவருடன் சேர்ந்து துதி செய்து கொண்டிருந்தன.
IFT
நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அவை காலையிலும், மாலையிலும் அவருடன் சேர்ந்து (இறைவனைத்) துதி செய்த வண்ணம் இருந்தன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, மலைகளை நாம் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம், அவை அவருடன் சேர்ந்து மாலையிலும், காலையிலும் துதித்துக்கொண்டிருந்தன.
Saheeh International
Indeed, We subjected the mountains [to praise] with him, exalting [Allah] in the [late] afternoon and [after] sunrise.
وَالطَّیْرَ مَحْشُوْرَةً ؕ كُلٌّ لَّهٗۤ اَوَّابٌ ۟
وَ الطَّیْرَபறவைகளையும்مَحْشُوْرَةً ؕஒன்று திரட்டப்பட்டவையாகكُلٌّஒவ்வொன்றும்لَّهٗۤஅவனிடம்اَوَّابٌமீளக்கூடியவை
வத்தய்ர மஹ்ஷூரஹ்; குல்லுல் லஹூ அவ்வாBப்
முஹம்மது ஜான்
மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.
அப்துல் ஹமீது பாகவி
பறவைகளின் கூட்டத்தையும், (நாம் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்.) அவை, அவருடைய சப்தத்தைப் பின்பற்றி அவரை சூழ்ந்து (அவ்வாறே) சப்தமிட்டன.
IFT
பறவைகளும் ஒன்று திரண்டு வந்தன. அவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதிப்பதில் கவனம் செலுத்தக் கூடியனவாய் இருந்தன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், தடுக்கப்பட்டவையாக இருக்கும் நிலையில் பறவைகளையும் (அவருக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவை ஒவ்வொன்றும் (அவருடன் அல்லாஹ்வைத் துதிசெய்து அவனுக்கு வழிப்படுவதின் மூலம்) அவனின் பக்கம் திரும்பக்கூடியவையாக இருந்தன.
Saheeh International
And the birds were assembled, all with him repeating [praises].
وَشَدَدْنَا مُلْكَهٗ وَاٰتَیْنٰهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ ۟
وَ شَدَدْنَاமேலும் நாம் பலப்படுத்தினோம்مُلْكَهٗஅவருடைய ஆட்சியைوَ اٰتَیْنٰهُமேலும் அவருக்கு வழங்கினோம்الْحِكْمَةَஞானத்தைوَ فَصْلَமேலும் தெளிவானالْخِطَابِபேச்சாற்றலை
வ ஷதத்னா முல்கஹூ வ ஆதய்னாஹுல் ஹிக்மத வ Fபஸ்லல் கிதாBப்
முஹம்மது ஜான்
மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்; இன்னும் அவருக்கு ஞானத்தையும், தெளிவான சொல்லாற்றலையும் அளித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவருடைய ஆட்சியை நாம் பலப்படுத்தி, அவருக்கு ஞானத்தையும் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தியையும் கொடுத்தோம்.
IFT
நாம் அவருடைய அரசாட்சியை வலுப்படுத்தியிருந்தோம்; நுண்ணறிவையும் அவருக்கு வழங்கியிருந்தோம். மிக நுட்பமான தீர்ப்பளிக்கும் ஆற்றலையும் நல்கி இருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவருடைய ஆட்சியை நாம் வலுப்படுத்தினோம், அவருக்கு (ஆழ்ந்து சிந்தித்து செயல்படும் உறுதியான) அறிவையும், (விவகாரங்களைத் தீர்க்கும்) தெளிவான விளக்கத்தையும் கொடுத்தோம்.
Saheeh International
And We strengthened his kingdom and gave him wisdom and discernment in speech.
وَهَلْ اَتٰىكَ نَبَؤُا الْخَصْمِ ۘ اِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَ ۟ۙ
وَ هَلْமேலும்اَتٰىكَஉம்மிடம் வந்ததாنَبَؤُاசெய்திالْخَصْمِ ۘவழக்காளிகளின்اِذْபோதுتَسَوَّرُواஅவர்கள் சுவரேறியالْمِحْرَابَۙதொழுமிடத்திற்கு
வ ஹல் அதாக னBப'உல் கஸ்ம்; இத் தஸவ்வருல் மிஹ்ராBப்
முஹம்மது ஜான்
அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைந்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி -
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அந்த வழக்காளிகளின் செய்தி உமக்குக் கிடைத்திருக்கிறதா? அவர்கள் (தாவூது வணங்கிக் கொண்டிருந்த) மடத்து அறையின் சுவற்றைத்தாண்டி (வந்து),
IFT
மேலும், சுவர் ஏறி மாடத்தில் நுழைந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்திருக்கிறதா? (அவர் வணங்கிக்கொண்டிருந்த) தொழுமிடத்தின் சுவரை அவர்கள் தாண்டிய சமயம்_
Saheeh International
And has there come to you the news of the adversaries, when they climbed over the wall of [his] prayer chamber -
اِذْ دَخَلُوْا عَلٰی دَاوٗدَ فَفَزِعَ مِنْهُمْ قَالُوْا لَا تَخَفْ ۚ خَصْمٰنِ بَغٰی بَعْضُنَا عَلٰی بَعْضٍ فَاحْكُمْ بَیْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَاۤ اِلٰی سَوَآءِ الصِّرَاطِ ۟
اِذْபோதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தார்கள்عَلٰیஇடம்دَاوٗدَதாவூத்فَفَزِعَஅப்போது அவர் திடுக்கிட்டார்مِنْهُمْஅவர்களைக் கண்டுقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَاவேண்டாம்تَخَفْ ۚபயப்படாதீர்خَصْمٰنِஇரு வழக்காடிகள்بَغٰیஅநியாயம் செய்துவிட்டனர்بَعْضُنَاஎங்களில் சிலர்عَلٰیமீதுبَعْضٍமற்றவர்فَاحْكُمْஎனவே தீர்ப்பளியுங்கள்بَیْنَنَاஎங்களுக்கிடையேبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ لَاமேலும் வேண்டாம்تُشْطِطْவரம்பு மீறாதீர்கள்وَ اهْدِنَاۤமேலும் எங்களுக்கு வழிகாட்டுங்கள்اِلٰیபக்கம்سَوَآءِநேரானالصِّرَاطِபாதையின்
இத் தகலூ 'அலா தாவூத FபFபZஜி'அ மின்ஹும் காலூ லா தகFப் கஸ்மானி Bபகா Bபஃளுனா 'அலா Bபஃளின் Fபஹ்கும் Bபய்னனா Bபில்ஹக்கி வலா துஷ்தித் வஹ்தினா இலா ஸவா'இஸ் ஸிராத்
முஹம்மது ஜான்
தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!”
அப்துல் ஹமீது பாகவி
தாவூதிடம் நுழைந்தபோது, அவர் அவர்களைப் பற்றி(ப் பயந்து) திடுக்கமுற்றார். அதற்கவர்கள் ‘‘(தாவூதே!) பயப்படாதீர். (நாங்கள் இருவரும்) இரு கட்சிக்காரர்கள். எங்களில் ஒருவர் மற்றொருவர் மீது அநியாயம் செய்திருக்கிறார். எங்களுக்கிடையில் நீர் நீதமாகத் தீர்ப்பளிப்பீராக. அதில் தவறிழைத்து விடாதீர். எங்களை நேரான வழியில் செலுத்துவீராக.
IFT
அவர்கள் தாவூதிடம் வந்தபோது அவர், அவர்களைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்! நாங்கள் ஒரு வழக்கு சம்பந்தமான இரு பிரிவினராவோம். எங்களில் ஒருவர் இன்னொருவருக்கு அநீதி இழைத்துள்ளார். நீர் எங்களிடையே மிகச்சரியாகத் தீர்ப்பு வழங்குவீராக! நேர்மை தவறிவிடாதீர்; எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தாவூதிடம் அவர்கள் நுழைந்த போது அவர், அவர்களைப்பற்றி திடுக்கமுற்றார். அ(தற்க)வர்கள் (“தாவூதே!) நீர் பயப்படாதீர், (நாங்களிருவரும்) இரு வழக்காளிகள், எங்களில் சிலர் சிலரின் மீது அநியாயம் செய்திருக்கின்றனர், ஆகவே, எங்களுக்கிடையில் உண்மையைக் கொண்டு நீர் தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்தும் விடாதீர், எங்களை நேரான வழியிலும் செலுத்துவீராக!” என்று கூறினார்கள்.
Saheeh International
When they entered upon David and he was alarmed by them? They said, "Fear not. [We are] two adversaries, one of whom has wronged the other, so judge between us with truth and do not exceed [it] and guide us to the sound path.
اِنَّ هٰذَاۤ اَخِیْ ۫ لَهٗ تِسْعٌ وَّتِسْعُوْنَ نَعْجَةً وَّلِیَ نَعْجَةٌ وَّاحِدَةٌ ۫ فَقَالَ اَكْفِلْنِیْهَا وَعَزَّنِیْ فِی الْخِطَابِ ۟
اِنَّநிச்சயமாகهٰذَاۤஇவர்اَخِیْ ۫எனது சகோதரன்لَهٗஅவருக்குتِسْعٌஒன்பதுوَّ تِسْعُوْنَமற்றும் தொண்ணூறுنَعْجَةًபெண் ஆடுகள்وَّلِیَமேலும் எனக்குنَعْجَةٌபெண் ஆடுوَّاحِدَةٌ ۫ஒன்றுفَقَالَஎனவே அவர் சொன்னார்اَكْفِلْنِیْهَاஅதை என்னிடம் ஒப்படைத்துவிடுوَ عَزَّنِیْமேலும் என்னை மிகைத்துவிட்டார்فِیஇல்الْخِطَابِபேச்சு
இன்ன ஹாதா அகீ லஹூ திஸ்'உ(ன்)வ் வ திஸ்'ஊன னஃஜத(ன்)வ் வ லிய னஃஜது(ன்)வ் வாஹிதஹ்; Fபகால அக்Fபில்னீஹ வ 'அZஜ்Zஜனீ Fபில்கிதாBப்
முஹம்மது ஜான்
(அவர்களில் ஒருவர் கூறினார்:) “நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன; ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது; அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்.”
அப்துல் ஹமீது பாகவி
இவர் என் சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் இருக்கின்றன. என்னிடம் ஒரே ஒரு ஆடுதான் இருக்கிறது. (அவ்வாறிருந்தும்) அவர் அதையும் (தனக்குக்) கொடுத்துவிட வேண்டும் என்று கூறி வாதத்தில் அவர் என்னை ஜெயித்து விட்டார்'' என்று கூறினார்.
IFT
இதோ! இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது செம்மறி ஆடுகள் இருக்கின்றன. என்னிடமோ ஒரே ஒரு செம்மறி ஆடுதான் இருக்கின்றது. ‘இந்த ஒரு செம்மறி ஆட்டையும் என்னிடம் ஒப்படைத்துவிடு!’ என்று என்னிடம் இவர் கூறுகின்றார். பேச்சுசாதுர்யத்தால் இவர் என்னை மடக்கிவிட்டார்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக இவர், என்னுடைய சகோதரர், இவருக்கு தொண்ணூற்றொன்பது பெண் ஆடுகள் இருக்கின்றன, எனக்கு ஒரே ஒரு பெண் ஆடு தான் இருக்கிறது, பின்னர் அவர், “அதனை என் பொறுப்பில் ஆக்கி (எனக்கு கொடுத்து) விடு” என்று கூறி, வாதத்தில் அவர் என்னை மிகைத்தும் விட்டார்“ (என்று கூறினார்).
Saheeh International
Indeed this, my brother, has ninety-nine ewes, and I have one ewe; so he said, 'Entrust her to me,' and he overpowered me in speech."
قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰی نِعَاجِهٖ ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ الْخُلَطَآءِ لَیَبْغِیْ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِیْلٌ مَّا هُمْ ؕ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۟
قَالَஅவர் கூறினார்لَقَدْநிச்சயமாகظَلَمَكَஉமக்கு அநீதி இழைத்துவிட்டார்بِسُؤَالِகேட்பதன் மூலம்نَعْجَتِكَஉமது பெண் ஆட்டைاِلٰیசேர்த்துக்கொள்ளنِعَاجِهٖ ؕதன் பெண் ஆடுகளுடன்وَ اِنَّமேலும் நிச்சயமாகكَثِیْرًاஅதிகமானோர்مِّنَஇருந்துالْخُلَطَآءِகூட்டாளிகளில்لَیَبْغِیْஅநீதி இழைக்கிறார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰیமீதுبَعْضٍமற்றவர்اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ قَلِیْلٌஇன்னும் மிகக் குறைவானவர்களேمَّاஅவர்கள்هُمْ ؕஅவர்கள்وَ ظَنَّமேலும் எண்ணினார்دَاوٗدُதாவூதுاَنَّمَاநிச்சயமாக நாம்فَتَنّٰهُஅவரைச் சோதித்தோம் என்றுفَاسْتَغْفَرَஆகவே அவர் மன்னிப்புக்கோரினார்رَبَّهٗதனது இறைவனிடம்وَ خَرَّமேலும் அவர் விழுந்தார்رَاكِعًاசிரம் பணிந்தவராகوَّ اَنَابَ۩இன்னும் திரும்பினார்
கால லகத் ளலமக Bபிஸு 'ஆலி னஃஜதிக இலா னிஹாஜிஹ்; வ இன்ன கதீரன் மினல் குலதா'இ ல-யBப்கீ Bபஃளுஹும் 'அலா Bபஃளின் இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ கலீலுன் மா ஹும்; வ ளன்ன தாவூது அன்னமா Fபதன்னாஹு Fபஸ்தக்Fபர ரBப்Bபஹூ வ கர்ர ராகி'அ(ன்)வ் வ அனாBப்
முஹம்மது ஜான்
(அதற்கு தாவூது:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு தாவூத், ‘‘உன் ஆட்டை, அவர் தன் ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் உம் மீது செய்யும் அநியாயமாகும். கூட்டாளிகளில் பெரும்பாலானவர்கள், ஒருவர் ஒருவரை மோசம் செய்து விடுகின்றனர்; நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கிறவர்களைத் தவிர, (நம்பிக்கையாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. மோசம் செய்யாத) இத்தகையவர்கள் வெகு சிலரே!'' என்று கூறினார். இதற்குள் நிச்சயமாக நாம் தாவூதை சோதனைக்குள்ளாக்கி விட்டோம் என்று தாவூத் எண்ணி, தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும்படி கோரி, சிரம் பணிந்து வணங்கி தன் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தார்.
IFT
தாவூத் பதிலளித்தார்: “இவர் தன்னுடைய செம்மறி ஆடுகளுடன் உம்முடைய செம்மறி ஆட்டையும் இணைத்துக் கொள்வதாகக் கோரியதன் மூலம் திண்ணமாக உமக்கு அநீதி இழைத்து விட்டார். உண்மையில் ஒன்றுகூடி வாழும் மக்களில் பெரும்பாலோர், ஒருவர் மற்றவர் மீது வரம்புமீறி நடந்து கொள்கின்றார்கள். ஆயினும் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்கள்தாம் இதிலிருந்து தப்பித்திருக்கின்றார்கள். இத்தகையோர் மிகச்சிலரே ஆவர்.” (இவ்வாறு கூறிக்கொண்டிருந்தபோதே) உண்மையில் நாம் அவரை சோதித்திருக்கின்றோம் என்பதை தாவூத் உணர்ந்து விட்டார். உடனே தம்முடைய இறைவனிடம் மன்னிப்புக் கோரினார். மேலும் ஸஜ்தாவில்* விழுந்து விட்டார்; இறைவன் பக்கம் மீண்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு தாவூத்) “உம்முடைய பெண் ஆட்டை அவர் தன்னுடைய பெண் ஆடுகளுடன் சேர்த்துவிடுமாறு கேட்டதனால், நிச்சயமாக அவர் உமக்கு அநியாயமிழைத்து விட்டார்; இன்னும் நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர், அவர்களில் சிலர் மற்ற சிலரின் மீது வரம்பு மீறிவிடுகின்றனர், விசுவாசங் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோர்களைத் தவிர, இவர்கள் குறைந்தவர்களே” என்று கூறினார், (இதற்குள்) தாவூத் நிச்சயமாக நாமே (அவர் தீர்ப்பு செய்யும் திறன் படைத்தவரா? என) அவரைச் சோதனைக்குள்ளாக்கிவிட்டோம் என்று எண்ணினார், ஆகவே, தன் இரட்சகனிடம் மன்னிப்புத் தேடி, குனிந்தவராக (ஸஜ்தாவில்) விழுந்தார், மேலும், (அல்லாஹ்வின் பால் தவ்பா செய்து) மீண்டார்.
Saheeh International
[David] said, "He has certainly wronged you in demanding your ewe [in addition] to his ewes. And indeed, many associates oppress one another, except for those who believe and do righteous deeds - and few are they." And David became certain that We had tried him, and he asked forgiveness of his Lord and fell down bowing [in prostration] and turned in repentance [to Allah].
فَغَفَرْنَا لَهٗ ذٰلِكَ ؕ وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰی وَحُسْنَ مَاٰبٍ ۟
فَغَفَرْنَاஆகவே நாம் மன்னித்தோம்لَهٗஅவருக்குذٰلِكَ ؕஅதனைوَ اِنَّமேலும் நிச்சயமாகلَهٗஅவருக்குعِنْدَنَاநம்மிடம்لَزُلْفٰیநெருக்கமான இடம்وَ حُسْنَமேலும் அழகானمَاٰبٍமீளுமிடம்
FபகFபர்னா லஹூ தாலிக்; வ இன்ன லஹூ 'இன்தனா லZஜுல்Fபா வ ஹுஸ்ன ம ஆBப்
முஹம்மது ஜான்
ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னித்தோம்; அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், நாம் அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக நெருங்கிய பெரும் பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு.
IFT
அப்போது நாம் அவருடைய அந்தத் தவறை மன்னித்து விட்டோம். திண்ணமாக நம்மிடத்தில் அவருக்கு நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (தாம் குற்றம் இழைத்துவிட்டதாக) அ(வர் கருதிய)தை அவருக்கு நாம் மன்னித்துவிட்டோம், நிச்சயமாக அவருக்கு, நம்மிடத்தில் (மிக்க) நெருக்கமும், அழகான இருப்பிடமும் உண்டு.
Saheeh International
So We forgave him that; and indeed, for him is nearness to Us and a good place of return.
یٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِیْفَةً فِی الْاَرْضِ فَاحْكُمْ بَیْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰی فَیُضِلَّكَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ اِنَّ الَّذِیْنَ یَضِلُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌۢ بِمَا نَسُوْا یَوْمَ الْحِسَابِ ۟۠
یٰدَاوٗدُதாவூதே!اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنٰكَஉம்மை ஆக்கினோம்خَلِیْفَةًஒரு பிரதிநிதியாகفِیஇல்الْاَرْضِபூமியில்فَاحْكُمْஎனவே தீர்ப்பளிப்பீராகبَیْنَஇடையேالنَّاسِமனிதர்களுக்குبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ لَاமேலும் வேண்டாம்تَتَّبِعِநீர் பின்பற்றالْهَوٰیமன இச்சையைفَیُضِلَّكَஅது உம்மை வழிதவறச் செய்யும்عَنْஇருந்துسَبِیْلِபாதையைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَضِلُّوْنَவழிதவறுகிறார்களோعَنْஇருந்துسَبِیْلِபாதையைاللّٰهِஅல்லாஹ்வின்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِیْدٌۢகடுமையானதுبِمَاகாரணமாகنَسُوْاஅவர்கள் மறந்ததன்یَوْمَநாளைالْحِسَابِ۠கேள்வி கணக்கு
யா தாவூது இன்னா ஜ'அல்னாக கலீFபதன் Fபில் அர்ளி Fபஹ்கும் Bபய்னன் னாஸி Bபில்ஹக்கி வலா தத்தBபி'இல் ஹவா Fபயுளில்லக 'அன் ஸBபீலில் லாஹ்; இன்னல் லதீன யளில்லூன 'அன் ஸBபீலில் லாஹ்; லஹும் 'அதாBபுன் ஷதீதும் Bபிமா னஸூ யவ்மல் ஹிஸாBப்
முஹம்மது ஜான்
(நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.  
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், (நாம் அவரை நோக்கி) ‘‘தாவூதே! நிச்சயமாக நாம் உம்மைப் பூமியில் (நம்) பிரதிநிதியாக ஆக்கினோம். ஆதலால், நீர் மனிதர்களுக்கிடையில், நியாயமாகத் தீர்ப்பு கூறுவீராக. சரீர இச்சையைப் பின்பற்றாதீர். அது உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்தும் தவறி விடும்படி செய்யும். எவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து தவறுகிறார்களோ அவர்கள் கேள்வி கணக்குக் கேட்கும் நாளை மறந்து விடுவார்கள். அதன் காரணமாக, அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு'' (என்று கூறினோம்).
IFT
(நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நாம் உம்மை பூமியில் பிரதிநிதியாக ஆக்கியிருக்கின்றோம். எனவே, நீர் மக்களிடையே நீதியுடன் ஆட்சி செலுத்தும். மேலும், மன இச்சைகளைப் பின்பற்றாதீர். அது, அல்லாஹ்வின் வழியிலிருந்து உம்மைப் பிறழச் செய்துவிடும். எவர்கள் அல்லாஹ்வுடைய வழியிலிருந்து பிறழ்ந்துவிடுகின்றார்களோ, அவர்களுக்குத் திண்ணமாக கடும் தண்டனை இருக்கிறது; கேள்வி கணக்கிற்குரிய நாளை அவர்கள் மறந்துவிட்ட காரணத்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“தாவூதே! நிச்சயமாக நாம், உம்மை பூமியில் பிரதிநிதியாக ஆக்கினோம், ஆகவே நீர் மனிதர்களுக்கிடையில், சத்தியத்தைக் கொண்டுத் தீர்ப்புச் செய்வீராக! மனோ இச்சையைப் பின்பற்றவேண்டாம். (பின்பற்றினால்,) அது உம்மை அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் வழிதவறச் செய்துவிடும், நிச்சயமாக அல்லாஹ்வின் பாதையைவிட்டு வழி தவறி விடுகின்றார்களே அத்தகையவர்கள்_ (கேள்வி) கணக்கு (க்கேட்கும்) நாளை அவர்கள் மறந்து விட்டதன் காரணமாக, அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு” (என்று கூறினோம்).
Saheeh International
[We said], "O David, indeed We have made you a successor upon the earth, so judge between the people in truth and do not follow [your own] desire, as it will lead you astray from the way of Allah." Indeed, those who go astray from the way of Allah will have a severe punishment for having forgotten the Day of Account.
وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا بَاطِلًا ؕ ذٰلِكَ ظَنُّ الَّذِیْنَ كَفَرُوْا ۚ فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنَ النَّارِ ۟ؕ
وَ مَاமேலும் இல்லைخَلَقْنَاநாம் படைத்தோம்السَّمَآءَவானத்தைوَ الْاَرْضَபூமியையும்وَ مَاமற்றும் எவற்றைبَیْنَهُمَاஅவையிரண்டிற்கும் இடையில் உள்ளவற்றைبَاطِلًا ؕவீணாகذٰلِكَஅதுظَنُّஎண்ணமாகும்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْا ۚநிராகரித்தார்களோ அவர்களின்فَوَیْلٌஆகவே கேடுதான்لِّلَّذِیْنَஎவர்களுக்குكَفَرُوْاநிராகரித்தார்களோمِنَஇருந்துالنَّارِؕநரக நெருப்பின்
வமா கலக்னஸ் ஸமா'அ வல் அர்ள வமா Bபய்னஹுமா Bபாதிலா; தாலிக ளன்னுல் லதீன கFபரூ; Fப வய்லுல் லில் லதீன கFபரூ மினன் னார்
முஹம்மது ஜான்
மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) நிராகரிப்பவர்களின் எண்ணமே ஆகும். நிராகரிக்கும் இவர்களுக்குக் கேடுதான்; இவர்களுக்கு நரகமே கிடைக்கும்.
IFT
நாம் இந்த வானத்தையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள இந்த உலகத்தையும் வீணாகப் படைத்திடவில்லை. நிராகரிப்பாளர்களின் கருத்தாகும் இது. இத்தகைய நிராகரிப் பாளர்களுக்கு நரக நெருப்பின் மூலம் அழிவுதான் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்தையும், பூமியையும், இவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் வீணாக நாம் படைக்கவில்லை, இது நிராகரித்தார்களே அத்தகையோரின் எண்ணமேயாகும், ஆகவே, நிராகரித்துவிட்டார்களே அத்தகையவர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் (உண்டு).
Saheeh International
And We did not create the heaven and the earth and that between them aimlessly. That is the assumption of those who disbelieve, so woe to those who disbelieve from the Fire.
اَمْ نَجْعَلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَالْمُفْسِدِیْنَ فِی الْاَرْضِ ؗ اَمْ نَجْعَلُ الْمُتَّقِیْنَ كَالْفُجَّارِ ۟
اَمْஅல்லதுنَجْعَلُநாம் ஆக்குவோமாالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைكَالْمُفْسِدِیْنَகுழப்பம் செய்பவர்களைப் போல்فِیஇல்الْاَرْضِ ؗபூமிاَمْஅல்லதுنَجْعَلُநாம் ஆக்குவோமாالْمُتَّقِیْنَஇறையச்சம் உடையவர்களைكَالْفُجَّارِதீயவர்களைப் போல்
அம் னஜ்'அலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி கல்முFபிஸ்தீன Fபில் அர்ளி அம் னஜ்'அலுல் முத்தகீன கல்Fபுஜ்ஜார்
முஹம்மது ஜான்
அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களை பூமியில் விஷமம் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது இறையச்சமுடையவர்களை (குற்றம்புரியும்) பாவிகளைப்போல் நாம் ஆக்கி விடுவோமா?
IFT
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்களையும் பூமியில் அராஜகம் செய்து திரிபவர்களையும் நாம் சமமாக்கிவிடுவோமா, என்ன? இறையச்சமுள்ளோரை ஒழுக்கக்கேடர்களைப் போன்று ஆக்குவோமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்தார்களே அத்தகையோரை, பூமியில் குழப்பம் செய்கிறவர்களைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது பயபக்தியுடைவர்களை (குற்றம் புரியும்) பாவிகளைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா?
Saheeh International
Or should We treat those who believe and do righteous deeds like corrupters in the land? Or should We treat those who fear Allah like the wicked?
كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ مُبٰرَكٌ لِّیَدَّبَّرُوْۤا اٰیٰتِهٖ وَلِیَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ ۟
كِتٰبٌவேதம்اَنْزَلْنٰهُநாம் இதனை அருளினோம்اِلَیْكَஉமக்குمُبٰرَكٌபாக்கியம் மிக்கதுلِّیَدَّبَّرُوْۤاஅவர்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்காகاٰیٰتِهٖஅதன் வசனங்களைوَ لِیَتَذَكَّرَமேலும் படிப்பினை பெறுவதற்காகاُولُواஉடையவர்கள்الْاَلْبَابِஅறிவை
கிதாBபுன் அன்Zஜல்னாஹு இலய்க முBபாரகுல் லியத்தBப்Bபரூ ஆயாதிஹீ வ லியததக்கர உலுல் அல்BபாBப்
முஹம்மது ஜான்
(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கிவைத்தோம். இது மிக பாக்கியமுள்ளது. அறிவுடையவர்கள் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக!
IFT
இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். (நபியே!) இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! குர் ஆனாகிய இது, அதன் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக இருக்க) பாக்கியமிக்க வேதமாகும், இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், (இதனை கொண்டு) அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் நாம் இதை உம்மீது இறக்கிவைத்தோம்.
Saheeh International
[This is] a blessed Book which We have revealed to you, [O Muhammad], that they might reflect upon its verses and that those of understanding would be reminded.
وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَیْمٰنَ ؕ نِعْمَ الْعَبْدُ ؕ اِنَّهٗۤ اَوَّابٌ ۟ؕ
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لِدَاوٗدَதாவூதுக்குسُلَیْمٰنَ ؕஸுலைமானைنِعْمَமிகச் சிறந்தالْعَبْدُ ؕஅடியார்اِنَّهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌؕஅதிகம் திரும்புபவர்
வ வஹBப்னா லி தாவூத ஸுலய்மான்; னிஃமல் 'அBப்த்; இன்னஹூ அவ்வாBப்
முஹம்மது ஜான்
இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.
அப்துல் ஹமீது பாகவி
தாவூதுக்கு, ஸுலைமானை நாம் மகனாகத் தந்தருள் புரிந்தோம். அவர் மிக நல்லடியார். மெய்யாகவே அவர் (ஒவ்வொரு விஷயத்திலும்) நம்மையே நோக்கி நின்றார்.
IFT
நாம் தாவூதுக்கு ஸுலைமா(ன் போன்ற மைந்த)னை வழங்கினோம். அவர் மிகச்சிறந்த அடியாராகவும், தம்முடைய இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக்கூடியவராகவும் திகழ்ந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் தாவூதுக்கு, ஸுலைமானை அன்பளிப்பாக நாம் வழங்கினோம்; (அவர்) மிக்க நல்லடியார்_நிச்சயமாக அவர், (நம்பக்கமே) மிகுதியாகத் திரும்புபவர்.
Saheeh International
And to David We gave Solomon. An excellent servant, indeed he was one repeatedly turning back [to Allah].
اِذْ عُرِضَ عَلَیْهِ بِالْعَشِیِّ الصّٰفِنٰتُ الْجِیَادُ ۟ۙ
اِذْஅப்போதுعُرِضَகொண்டுவரப்பட்டபோதுعَلَیْهِஅவர் முன்னிலையில்بِالْعَشِیِّமாலை நேரத்தில்الصّٰفِنٰتُநேர்த்தியாக நிற்கும் குதிரைகள்الْجِیَادُۙஅதிவேகமாகப் பாயக்கூடியவை
இத் 'உரிள 'அலய்ஹி Bபில்'அஷிய் யிஸ் ஸாFபினாதுல் ஜியாத்
முஹம்மது ஜான்
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது:
அப்துல் ஹமீது பாகவி
(யுத்தத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த) உயர்ந்த குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில், அவர் முன் கொண்டு வரப்பட்டபொழுது (அதைப் பார்த்துக் கொண்டிருந்ததனால், சூரியன் அஸ்தமித்து அவருடைய அஸர் தொழுகை தவறி விட்டது. அதற்கவர்:)
IFT
அந்தச் சந்தர்ப்பம் நினைவு கூரத்தக்கதாகும். நன்கு பயிற்சி பெற்ற குதிரைகள் மாலை நேரத்தில் அவர் முன்னால் கொண்டு வரப்பட்டபோது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூன்று கால்களிலும், நான்காவது காலின் குழம்பிலும் நின்று, துரிதமாகச் செல்லும் (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகள் (ஒரு நாளன்று) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்டபொழுது,
Saheeh International
[Mention] when there were exhibited before him in the afternoon the poised [standing] racehorses.
فَقَالَ اِنِّیْۤ اَحْبَبْتُ حُبَّ الْخَیْرِ عَنْ ذِكْرِ رَبِّیْ ۚ حَتّٰی تَوَارَتْ بِالْحِجَابِ ۟ۥ
فَقَالَஅவர் கூறினார்اِنِّیْۤநிச்சயமாக நான்اَحْبَبْتُவிரும்பிவிட்டேன்حُبَّநேசத்தைالْخَیْرِபொருள்களின்عَنْவிட்டும்ذِكْرِநினைவைرَبِّیْ ۚஎன் இறைவனின்حَتّٰیவரைتَوَارَتْஅது மறையும்بِالْحِجَابِۥதிரைக்குப் பின்னால்
Fபகால இன்னீ அஹ்BபBப்து ஹுBப்Bபல் கய்ரி 'அன் திக்ரி ரBப்Bபீ ஹத்தா தவாரத் Bபில்ஹிஜாBப்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன்” என அவர் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நான் (சூரியன்) திரைக்குள் மறைந்துவிடும் வரை, அல்லாஹ்வின் திருப்பெயரை நினைவுகூர்வதை விட்டுப் பொருளை அதிகமாக அன்பு கொண்டு விட்டேனே (என்று மனம் வருந்தி),
IFT
அவர் கூறினார்: “என்னுடைய இறைவனை நினைவுகூர்வதற்காகவே நான் இச்செல்வத்தை நேசிக்கின்றேன்.” இறுதியாக அக்குதிரைகள் கண்ணைவிட்டு மறைந்தபோது (அவர்கட்டளையிட்டார்:)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதன் மேல் கவனம் கொண்டதனால், சூரியன் அஸ்தமித்து, அவருடைய தியான நேரம் தவறிவிட்டது, அதற்கவர்) ”நிச்சயமாக நான் (சூரியன்) திரையினுள் மறைந்துவிடும் வரை என் இரட்சகனை நினைவுகூர்வதைவிட்டும் இந்த நல்ல பொருள்களை அதிகமாக அன்பு கொண்டுவிட்டேன்” என்று கூறினார்.
Saheeh International
And he said, "Indeed, I gave preference to the love of good [things] over the remembrance of my Lord until it [i.e., the sun] disappeared into the curtain [of darkness]."
رُدُّوْهَا عَلَیَّ ؕ فَطَفِقَ مَسْحًا بِالسُّوْقِ وَالْاَعْنَاقِ ۟
رُدُّوْهَاஅவற்றைத் திரும்பக் கொண்டுவாருங்கள்عَلَیَّ ؕஎன்னிடம்فَطَفِقَபின்னர் அவர் தொடங்கினார்مَسْحًۢاதடவிக் கொடுக்கبِالسُّوْقِகால்களைوَ الْاَعْنَاقِமற்றும் கழுத்துகளை
ருத்தூஹா 'அலய்ய Fப தFபிக மஸ்-ஹம் Bபிஸ்ஸூகி வல் அஃனாக்
முஹம்மது ஜான்
“என்னிடம் அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள் (என்று கூறினார்; அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்) அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுத்தார்.”
அப்துல் ஹமீது பாகவி
அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்'' எனக் கூறி, அவற்றின் பின்னங்கால்களையும், கழுத்துக்களையும் (கையினால் நீவி) தடவிக் கொடுத்தார்.
IFT
“அவற்றை என்னிடம் திரும்பக் கொண்டு வாருங்கள்!” பிறகு அவற்றின் கெண்டைக் கால்களையும், பிடரிகளையும் கையினால் தடவினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவற்றை என்னிடம் திரும்பக்கொண்டுவாருங்கள்” எனக் கூறி அவைகளின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் (கையால்) தடவிக்கொடுத்தார்.
Saheeh International
[He said], "Return them to me," and set about striking [their] legs and necks.
وَلَقَدْ فَتَنَّا سُلَیْمٰنَ وَاَلْقَیْنَا عَلٰی كُرْسِیِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகفَتَنَّاநாம் சோதித்தோம்سُلَیْمٰنَஸுலைமானைوَ اَلْقَیْنَاமேலும் நாம் போட்டோம்عَلٰیமீதுكُرْسِیِّهٖஅவருடைய அரியணையின்جَسَدًاஒரு உடலைثُمَّபின்னர்اَنَابَஅவர் (திருந்தி) மீண்டார்
வ லகத் Fபதன்னா ஸுலய்மான வ அல்கய்னா 'அலா குர்ஸிய்யிஹீ ஜஸதன் தும்ம அனாBப்
முஹம்மது ஜான்
இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்; அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் - ஆகவே அவர் (நம்மளவில்) திரும்பினார்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் ஸுலைமானை (மற்றொரு விதத்திலும்) சோதனை செய்து, அவருடைய சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தை எறிந்தோம். பிறகு, அவர் நம்மளவில் திரும்பிவிட்டார்.
IFT
பிறகு (பாருங்கள்) நாம் ஸுலைமானையும் சோதனைக்குள்ளாக்கினோம்; அவருடைய அரியணையில் ஒரு சடலத்தைக் கொண்டு வந்து போட்டோம். பிறகு அவர் (தம்முடைய இறைவன் பக்கம்) திரும்பினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நிச்சயமாக, நாம் ஸுலைமானை (மற்றொரு விதத்திலும்) சோதித்தோம், மேலும், அவருடைய சிம்மாசனத்தில் ஒரு சடலத்தை நாம் போட்டோம், பின்னர் அவர், (நம்மளவில்) திரும்பினார்.
Saheeh International
And We certainly tried Solomon and placed on his throne a body; then he returned.
قَالَ رَبِّ اغْفِرْ لِیْ وَهَبْ لِیْ مُلْكًا لَّا یَنْۢبَغِیْ لِاَحَدٍ مِّنْ بَعْدِیْ ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاغْفِرْமன்னிப்பாயாகلِیْஎனக்குوَهَبْமேலும் வழங்குவாயாகلِیْஎனக்குمُلْكًاஓர் அரசாட்சியைلَّاஇல்லைیَنْۢبَغِیْதகுதியானதுلِاَحَدٍஎவருக்கும்مِّنْۢஇருந்துبَعْدِیْ ۚஎனக்குப் பின்اِنَّكَநிச்சயமாக நீاَنْتَநீயேالْوَهَّابُபெரும் கொடையாளி
கால ரBப்Bபிக் Fபிர் லீ வ ஹBப் லீ முல்கல் லா யம்Bபகீ லி அஹதின் மின் Bபஃதீ இன்னக அன்தல் வஹ்ஹாBப்
முஹம்மது ஜான்
“என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர் ‘‘என் இறைவனே! என் குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ தந்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீதான் பெரும் கொடையாளி'' என்று பிரார்த்தனை செய்தார்.
IFT
“என்னுடைய இறைவா! என்னை நீ மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே) “என் இரட்சகனே! என்னை மன்னித்து விடுவாயாக! எனக்குப் பின்னர், எவருக்குமே கிடைக்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ அன்பளிப்புச் செய்வாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய்” என்று (பிரார்த்தனை செய்து) அவர் கூறினார்.
Saheeh International
He said, "My Lord, forgive me and grant me a kingdom such as will not belong to anyone after me. Indeed, You are the Bestower."
فَسَخَّرْنَا لَهُ الرِّیْحَ تَجْرِیْ بِاَمْرِهٖ رُخَآءً حَیْثُ اَصَابَ ۟ۙ
فَسَخَّرْنَاஎனவே நாம் வசப்படுத்தினோம்لَهُஅவருக்குالرِّیْحَகாற்றைتَجْرِیْஅது வீசும்بِاَمْرِهٖஅவருடைய கட்டளைப்படிرُخَآءًமென்மையாகحَیْثُஎங்குاَصَابَۙஅவர் நாடினாரோ
Fப ஸகர்னா லஹுர் ரீஹ தஜ்ரீ Bபி அம்ரிஹீ ருகா'அன் ஹய்து அஸாBப்
முஹம்மது ஜான்
ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், (அவர் விரும்பிய ஆட்சியைக் கொடுத்துக்) காற்றையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய கட்டளையின் படி, அவர் செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் மிக்க சௌகரியமாகவே (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
IFT
அப்போது நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அது அவருடைய ஆணையால் அவர் விரும்பிய திசையில் மென்மையாய் வீசிக்கொண்டிருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதலால், காற்றை அவருக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம், அது அவருடைய கட்டளையின் பிரகாரம் அவர் நாடியவாறு (பல இடங்களுக்கும்) மிக்க இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
Saheeh International
So We subjected to him the wind blowing by his command, gently, wherever he directed,
وَالشَّیٰطِیْنَ كُلَّ بَنَّآءٍ وَّغَوَّاصٍ ۟ۙ
وَ الشَّیٰطِیْنَஷைத்தான்களையும்كُلَّஒவ்வொருبَنَّآءٍகட்டிடம் கட்டுபவனையும்وَّ غَوَّاصٍۙமுத்துக்குளிப்பவனையும்
வஷ் ஷயாதீன குல்ல Bபன்னா'இ(ன்)வ் வ கவ்வாஸ்
முஹம்மது ஜான்
மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்;
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ஷைத்தான்களில் உள்ள சிற்பிகள், முத்துக் குளிப்பவர்கள் ஆகிய அனைவரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.
IFT
கட்டடம் கட்டக்கூடிய, நீரில் மூழ்கக்கூடிய வகைவகையான ஷைத்தான்களையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர் (இன்னும் விலை உயர்ந்த முத்துக்கள் போன்ற சாதனங்களை எடுத்து வரக் கடலில்) மூழ்குவோர் ஆகிய ஒவ்வொருவரையும்_
Saheeh International
And [also] the devils [of jinn] - every builder and diver.
وَّاٰخَرِیْنَ مُقَرَّنِیْنَ فِی الْاَصْفَادِ ۟
وَّ اٰخَرِیْنَஇன்னும் மற்றவர்களைمُقَرَّنِیْنَபிணைக்கப்பட்டவர்களாகفِیஇல்الْاَصْفَادِசங்கிலிகள்
வ ஆகரீன முகர்ரனீன Fபில் அஸ்Fபாத்
முஹம்மது ஜான்
சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் அவருக்குக் வசப்படுத்திக் கொடுத்தோம்).
அப்துல் ஹமீது பாகவி
மேலும், சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறு (மூர்க்கர்கள்) பலரையும் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்.
IFT
சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
_சங்கிலிகளில் பிணைக்கப்பட்டவர்களான மற்றவர்களையும் (நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்).
Saheeh International
And others bound together in irons.
هٰذَا عَطَآؤُنَا فَامْنُنْ اَوْ اَمْسِكْ بِغَیْرِ حِسَابٍ ۟
هٰذَاஇதுعَطَآؤُنَاநமது கொடைفَامْنُنْஆகவே வழங்குவீராகاَوْஅல்லதுاَمْسِكْதடுத்துக் கொள்வீராகبِغَیْرِஇன்றிحِسَابٍகணக்கு
ஹாதா 'அதா'உனா Fபம்னுன் அவ் அம்ஸிக் Bபிகய்ரி ஹிஸாBப்
முஹம்மது ஜான்
“இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக்) கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் - கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்).
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், (அவரை நோக்கி) ‘‘இவையெல்லாம் நாம் உமக்கு வழங்கிய கொடைகளாகும். ஆகவே, (இவற்றை) நீர் கணக்கின்றி (எல்லோருக்கும் கொடுத்து) நன்றி செய்யவும். அல்லது (அவற்றை உம்மிடமே) நிறுத்திக் கொள்ளும். (அது உமது விருப்பத்தைப் பொறுத்த விஷயம்'' என்றோம்.)
IFT
(நாம் அவரிடம் கூறினோம்:) “இது நம்முடைய அன்பளிப்பு: இதை உம் விருப்பப்படி வழங்குவதற்கும், வழங்காமல் இருப்பதற்கும் உமக்கு முழு அதிகாரம் இருக்கின்றது. எந்தக் கேள்வி கணக்கும் இல்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இது (உமக்கு கொடுக்கப்பட்ட) நம்முடைய அன்பளிப்பாகும், ஆகவே, (இதிலிருந்து பிறருக்கு கொடுத்து) உபகாரம் செய்யும், அல்லது (உம்மிடமே) நிறுத்திக்கொள்ளும், உம் மீது எந்த கேள்வி கணக்கும் இல்லை”.
Saheeh International
[We said], "This is Our gift, so grant or withhold without account."
وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰی وَحُسْنَ مَاٰبٍ ۟۠
وَ اِنَّமேலும் நிச்சயமாகلَهٗஅவருக்குعِنْدَنَاநம்மிடம்لَزُلْفٰیநெருக்கமான அந்தஸ்துوَ حُسْنَமேலும் அழகானمَاٰبٍ۠மீளுமிடம்
வ இன்ன லஹூ 'இன்தனா லZஜுல்Fபா வ ஹுஸ்ன மஆBப்
முஹம்மது ஜான்
மேலும், நிச்சயமாக அவருக்கு, நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.  
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக்க நெருங்கிய மேலான பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு.
IFT
திண்ணமாக அவருக்கு நம்மிடத்தில் நெருக்கமும் நல்ல முடிவும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் (மிக்க) நெருக்கமும் அழகான இருப்பிடமும் உண்டு.
Saheeh International
And indeed, for him is nearness to Us and a good place of return.
وَاذْكُرْ عَبْدَنَاۤ اَیُّوْبَ ۘ اِذْ نَادٰی رَبَّهٗۤ اَنِّیْ مَسَّنِیَ الشَّیْطٰنُ بِنُصْبٍ وَّعَذَابٍ ۟ؕ
وَ اذْكُرْஇன்னும் நினைவுகூர்வீராகعَبْدَنَاۤநம் அடியார்اَیُّوْبَ ۘஅய்யூபைاِذْஅப்பொழுதுنَادٰیஅவர் அழைத்தார்رَبَّهٗۤதன் இறைவனைاَنِّیْநிச்சயமாக நான்مَسَّنِیَஎன்னைத் தீண்டிவிட்டான்الشَّیْطٰنُஷைத்தான்بِنُصْبٍதுன்பத்தைக் கொண்டுوَّ عَذَابٍؕஇன்னும் வேதனையைக் கொண்டும்
வத்குர் 'அBப்தனா அய்யூBப்; இத் னாத ரBப்Bபஹூ அன்னீ மஸ்ஸனியஷ் ஷய்தானு Bபி னுஸ்Bபி(ன்)வ் வ 'அதாBப்
முஹம்மது ஜான்
மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூர்க! அவர் தம் இறைவனிடம், “நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்” (என்று கூறிய போது);
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம் அடியார் ஐயூபை நினைத்துப் பார்ப்பீராக. அவர் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தபொழுது ‘‘நிச்சயமாக எனக்கு ஷைத்தான் துன்பத்தையும் வேதனையையும் கொடுத்து விட்டான்'' (என்று கூறினார்.)
IFT
நம்முடைய அடியார் அய்யூபையும் நினைவுகூர்வீராக! ஒருபோது அவர், “ஷைத்தான் என்னைச் சிரமத்திலும், துன்பத்திலும் ஆழ்த்திவிட்டானே!” என்று தன்னுடைய இறைவனை அழைத்து முறையிட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) நமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இரட்சகனை அழைத்(துப் பிரார்த்தனை செய்)து “நிச்சயமாக என்னை ஷைத்தான் துன்பத்தையும், வேதனையும் கொண்டு தீண்டிவிட்டான்” (என்று கூறியபோது, அதற்கு நாம்)
Saheeh International
And remember Our servant Job, when he called to his Lord, "Indeed, Satan has touched me with hardship and torment."
اُرْكُضْ بِرِجْلِكَ ۚ هٰذَا مُغْتَسَلٌۢ بَارِدٌ وَّشَرَابٌ ۟
اُرْكُضْமிதிப்பீராகبِرِجْلِكَ ۚஉமது காலால்هٰذَاஇதுمُغْتَسَلٌۢகுளிக்குமிடம்بَارِدٌகுளிர்ந்தوَّ شَرَابٌமேலும் பானம்
உர்குள் Bபி ரிஜ்லிக ஹாத முக்தஸலுன் Bபாரிது(ன்)வ் வ ஷராBப்
முஹம்மது ஜான்
“உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும்” (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்) “இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன” (என்று சொன்னோம்).
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு நாம்) ‘‘உமது காலை(ப் பூமியில்) தட்டுவீராக'' (என்று கூறினோம். அவர் தட்டவே ஓர் ஊற்று உதித் தோடியது. அவரை நோக்கி) ‘‘இதோ குளிப்பதற்கான குளிர்ந்த நீர். (இதுவே உமது) பானமுமாகும்'' (என்று கூறினோம். அதனால் அவருடைய நோய்கள் குணமாகி விட்டன.)
IFT
(அப்பொழுது நாம் அவருக்குக் கட்டளையிட்டோம்:) பூமியில் உம்முடைய கால்களைக் கொண்டு உதையும். இதோ குளிப்பதற்கும், குடிப்பதற்கும் குளிர்ந்த நீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உம்முடைய காலால் (பூமியில்) அடியும்” (என்று கூறினோம், அவர் அடிக்கவே அங்கு ஓர் ஊற்று உதித்தோடியது, அவரிடம்.) “இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் இருக்கின்றன (என்று கூறினோம், அதனால், அவருடைய நோய் குணமாகிவிட்டது).
Saheeh International
[So he was told], "Strike [the ground] with your foot; this is a [spring for a] cool bath and drink."
وَوَهَبْنَا لَهٗۤ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟
وَ وَهَبْنَاமேலும் நாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاَهْلَهٗஅவருடைய குடும்பத்தாரைوَ مِثْلَهُمْஅவர்களைப் போன்றவர்களையும்مَّعَهُمْஅவர்களுடன்رَحْمَةًஅருளாகمِّنَّاநம்மிடமிருந்துوَ ذِكْرٰیமேலும் நினைவூட்டலாகلِاُولِیஅறிவுடையالْاَلْبَابِமக்களுக்கு
வவஹBப்னா லஹூ அஹ்லஹூ வ மித்லஹும் ம'அஹும் ரஹ்மதன் மின்னா வ திக்ரா லி உலில் அல்BபாBப்
முஹம்மது ஜான்
பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் அறிவுடையயோருக்கு நினைவூட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், நம் அருளாகவும் அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் நாம் அவருக்கு(ப் பிரிந்திருந்த) அவருடைய குடும்பத்தாரையும் அவர்கள் போன்றவர்களையும் அவர்களுடன் கொடுத்து அருள் புரிந்தோம்.
IFT
நாம் அவருக்கு அவருடைய குடும்பத்தாரைத் திருப்பிக் கொடுத்தோம். மேலும், அவர்களோடு அதே அளவுக்கு மற்றவர்களையும் அவருக்கு வழங்கினோம். நமது சார்பிலிருந்து அருளாகவும், அறிவுடையோருக்குப் படிப்பினையாகவும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நம்மிடமிருந்து அருளாகவும், அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவும் அவருக்கு அவருடைய குடும்பத்தினரையும், அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நாம் அன்பளிப்பாக வழங்கினோம்.
Saheeh International
And We granted him his family and a like [number] with them as mercy from Us and a reminder for those of understanding.
وَخُذْ بِیَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِّهٖ وَلَا تَحْنَثْ ؕ اِنَّا وَجَدْنٰهُ صَابِرًا ؕ نِعْمَ الْعَبْدُ ؕ اِنَّهٗۤ اَوَّابٌ ۟
وَ خُذْமேலும் எடுப்பீராகبِیَدِكَஉமது கையில்ضِغْثًاஒரு பிடி புல்லைفَاضْرِبْபின்னர் அடிப்பீராகبِّهٖஅதைக் கொண்டுوَ لَاமேலும் வேண்டாம்تَحْنَثْ ؕசத்தியத்தை மீறاِنَّاநிச்சயமாக நாம்وَجَدْنٰهُஅவரைக் கண்டோம்صَابِرًا ؕபொறுமையாளராகنِّعْمَமிகச் சிறந்தالْعَبْدُ ؕஅடியார்اِنَّهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌ(நம்மிடமே) மீளக்கூடியவர்
வ குத் Bபியதிக ளிக்தன் Fபள்ரிBப் Bபிஹீ வலா தஹ்னத், இன்னா வஜத்னாஹு ஸாBபிரா; னிஃமல் 'அBப்த்; இன்னஹூ அவ்வாBப்
முஹம்மது ஜான்
“ஒரு பிடி புல் (கற்றையை) உம்கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக; நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்” (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதைக்கொண்டு (உமது மனைவியை) அடிப்பீராக. நீர் உமது சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை'' (என்று கூறினோம்.) நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார்.
IFT
மேலும், (நாம் அவரிடம் கூறினோம்:) ‘ஒருபிடி புல்லை எடுத்து அதைக்கொண்டு அடியும்; உம்முடைய சத்தியத்தை முறித்து விடாதிரும்.’ அவரை நாம் பொறுமையாளராய்க் கண்டோம். அவர் மிகச்சிறந்த அடியாராகவும் தம் இறைவனின் பக்கம் அதிகம் திரும்பக் கூடியவராகவும் திகழ்ந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “புல்லிலிருந்து ஒரு பிடியை உமது கையில் எடுத்து, அதனைக் கொண்டு (உம் மனைவியை) அடியும், நீர் (உம்முடைய) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்” (என்று கூறினோம்). நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமையாளராகவே கண்டோம், (அவர்) மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (நம்பால்) அதிகமாக மீளக்கூடியவராக இருந்தார்.
Saheeh International
[We said], "And take in your hand a bunch [of grass] and strike with it and do not break your oath." Indeed, We found him patient, an excellent servant. Indeed, he was one repeatedly turning back [to Allah].
وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ اُولِی الْاَیْدِیْ وَالْاَبْصَارِ ۟
وَ اذْكُرْஇன்னும் நினைவுகூர்வீராகعِبٰدَنَاۤநம் அடியார்களைاِبْرٰهِیْمَஇப்ராஹீமைوَ اِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்கைوَ یَعْقُوْبَஇன்னும் யஃகூபைاُولِیஉடையவர்களானالْاَیْدِیْஆற்றல்وَ الْاَبْصَارِமற்றும் நுண்ணறிவு
வத்குர் 'இBபாதனா இBப்ராஹீம வ இஸ்-ஹாக வ யஃகூBப உலில்-அய்தீ வலBப்ஸார்
முஹம்மது ஜான்
(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம் அடியார்கள் இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூபையும் நினைத்துப் பார்ப்பீராக. இவர்கள் கொடையாளிகளாகவும், அகப்பார்வை உடையவர்களாகவும் இருந்தார்கள்.
IFT
மேலும், நம்முடைய அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரை நினைவுபடுத்துவீராக! அவர்கள் மிகுந்த செயலாற்றல் கொண்டவர்களாகவும், நுண்ணோக்கு உடையவர்களாகவும் இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும்) ஆற்றல்களும், (மார்க்கத்தின் நுணுக்கங்களை விளங்கும்) பார்வைகளும் உடையவர்களாக இருந்த நமது அடியார்களான இப்றாஹீமையும், இஸ்ஹாக்கையும், யஃகூபையும் நினைவு கூர்வீராக!
Saheeh International
And remember Our servants, Abraham, Isaac and Jacob - those of strength and [religious] vision.
اِنَّاۤ اَخْلَصْنٰهُمْ بِخَالِصَةٍ ذِكْرَی الدَّارِ ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَخْلَصْنٰهُمْஅவர்களைத் தேர்ந்தெடுத்தோம்بِخَالِصَةٍஒரு தூய பண்பினால்ذِكْرَیநினைவுகூரும்الدَّارِۚமறுமை இல்லத்தை
இன்னா அக்லஸ்னாஹும் Bபி காலிஸதின் திக்ரத் தார்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்).
அப்துல் ஹமீது பாகவி
மறுமையை (மக்களுக்கு) எந்நேரமும் ஞாபகமூட்டுவதற்காக அவர்களை நாம் பிரத்யேகப்படுத்தினோம்.
IFT
மறுமையை நினைவுகூர்வது எனும் ஒரு தூய பண்பு அவர்களிடம் இருந்தமையால் நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (மறுமை) வீட்டை நினைவுகூருவதை நோக்கமாகக் கொண்டு (செயல்படுபவர்களாக) அவர்களை நாம் பிரத்தியேகப்படுத்தினோம்.
Saheeh International
Indeed, We chose them for an exclusive quality: remembrance of the home [of the Hereafter].
وَاِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ الْمُصْطَفَیْنَ الْاَخْیَارِ ۟ؕ
وَ اِنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்عِنْدَنَاநம்மிடம்لَمِنَநிச்சயமாகالْمُصْطَفَیْنَதேர்ந்தெடுக்கப்பட்டالْاَخْیَارِؕமிகச் சிறந்தவர்களில்
வ இன்னஹும் 'இன்தனா லமினல் முஸ்தFபய்னல் அக்யார்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லோர்களில் நின்றுமுள்ளவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள், நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களில் உள்ளவர்களாகவே இருந்தனர்.
IFT
திண்ணமாக அவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றோர்கள் ஆவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக அவர்கள், நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்தோரில் உள்ளவர்களாவார்கள்.
Saheeh International
And indeed they are, to Us, among the chosen and outstanding.
وَاذْكُرْ اِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَذَا الْكِفْلِ ؕ وَكُلٌّ مِّنَ الْاَخْیَارِ ۟ؕ
وَ اذْكُرْமேலும் நினைவுகூறுவீராகاِسْمٰعِیْلَஇஸ்மாயீலைوَ الْیَسَعَஇன்னும் அல்யஸஃவைوَ ذَاஇன்னும் துல்الْكِفْلِ ؕஅல்கிஃப்லைوَ كُلٌّஇன்னும் அனைவரும்مِّنَநின்றும்الْاَخْیَارِؕசிறந்தவர்களில்
வத்குர் இஸ்மா'ஈல வல் யஸ'அ வ தல்-கிFப்லி வ குல்லுன் மினல் அக்யார்
முஹம்மது ஜான்
இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக; இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இஸ்மாயீல், அல்யஸஉ, துல்கிஃப்லு ஆகிய இவர்களையும் நினைவு கூர்வீராக. இவர்கள் அனைவரும் நல்லடியார்களில் உள்ளவர்கள் தான்.
IFT
இஸ்மாயீல், அல்யஸவு, துல்கிஃப்ல் ஆகியோரையும் நினைவுகூர்வீராக! இவர்கள் எல்லோரும் நன்மக்களாய் விளங்கினர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இன்னும் இஸ்மாயீலையும், அல்யஸஉவையும், துல்கிப்லுவையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் நல்லடியார்களில் உள்ளவர்களாவர்.
Saheeh International
And remember Ishmael, Elisha and Dhul-Kifl, and all are among the outstanding.
هٰذَا ذِكْرٌ ؕ وَاِنَّ لِلْمُتَّقِیْنَ لَحُسْنَ مَاٰبٍ ۟ۙ
هٰذَاஇதுذِكْرٌ ؕஒரு நினைவூட்டல்وَ اِنَّமேலும் நிச்சயமாகلِلْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்களுக்குلَحُسْنَநிச்சயமாக ஓர் அழகியمَاٰبٍۙதிரும்புமிடம்
ஹாதா திக்ருன் வ இன்ன லில் முத்தகீன ல ஹுஸ்ன ம ஆBப்
முஹம்மது ஜான்
இது நல்லுபதேசமாக இருக்கும்; நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய இருப்பிடமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(மேற்கூறிய) இவையெல்லாம் (நம்பிக்கையாளர்களுக்கு) நல்ல அறிவுரையாகும். நிச்சயமாக (இத்தகைய) இறையச்சமுடையவர்களுக்கு (நல்ல) இருப்பிடமுண்டு.
IFT
இது ஒரு நல்லுரையாகும். (இப்போது கேளுங்கள்!) இறையச்சம் உள்ளவர்களுக்கு திண்ணமாக அழகிய தங்குமிடம் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது (விசுவாசிகளுக்கு) நல்லுபதேசமாகும், நிச்சயமாக (இத்தகைய) பயபக்தியாளர்களுக்கு அழகான இருப்பிடமும் உண்டு.
Saheeh International
This is a reminder. And indeed, for the righteous is a good place of return -
جَنّٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْاَبْوَابُ ۟ۚ
جَنّٰتِசுவனங்கள்عَدْنٍநிலையானمُّفَتَّحَةًதிறக்கப்பட்டلَّهُمُஅவர்களுக்காகالْاَبْوَابُۚவாசல்கள்
ஜன்னாதி 'அத்னின் முFபத்தஹதன் லஹுமுல் அBப்வாBப்
முஹம்மது ஜான்
“அத்னு” என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அது நிலையான சொர்க்கத்தில் இருக்கிறது. அதன் வாசல்கள் அவர்களுக்கு (எந்நேரமும்) திறக்கப்பட்டிருக்கும்.
IFT
நிலையாகத் தங்குகின்ற சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்திருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்விருப்பிடம் அத்னு எனும்) நிலையான சுவனபதிகளில் (இருக்கிறது,) அவர்களுக்காக (அதன்) வாயல்கள் (திறக்கப்பட்டவையாக இருக்கும்.
Saheeh International
Gardens of perpetual residence, whose doors will be opened to them.
مُتَّكِـِٕیْنَ فِیْهَا یَدْعُوْنَ فِیْهَا بِفَاكِهَةٍ كَثِیْرَةٍ وَّشَرَابٍ ۟
مُتَّكِـِٕیْنَசாய்ந்திருப்பவர்களாகفِیْهَاஅதில்یَدْعُوْنَஅவர்கள் கேட்பார்கள்فِیْهَاஅதில்بِفَاكِهَةٍகனிகளைكَثِیْرَةٍஏராளமானوَّ شَرَابٍஇன்னும் பானத்தையும்
முத்தகி'ஈன Fபீஹா யத்'ஊன Fபீஹா BபிFபாகிஹதின் கதீரதி(ன்)வ் வ ஷராBப்
முஹம்மது ஜான்
அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்(டு அருந்திக் கொண்டிருப்)பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் (உள்ள தலையணைகளின் மீது) சாய்ந்த வண்ணமாக, ஏராளமான கனி வர்க்கங்களையும் (இன்பமான) பானங்களையும், கேட்டு (வாங்கிப் புசித்து) அருந்திக்கொண்டு இருப்பார்கள்.
IFT
அங்கே அவர்கள் மஞ்சங்களில் சாய்ந்திருப்பார்கள். நிறையக் கனிகளையும், பானங்களையும் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் (தலையணைகளின் மீது) சாய்ந்தவர்களாக, ஏராளமான கனிகளையும் (இன்பமான) பானங்களையும் கேட்(டு வங்கிப் புசித்து அருந்திக் கொண்டிருப்)பார்கள்.
Saheeh International
Reclining within them, they will call therein for abundant fruit and drink.
وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ اَتْرَابٌ ۟
وَ عِنْدَهُمْமேலும் அவர்களிடம்قٰصِرٰتُதாழ்த்தியவர்கள்الطَّرْفِபார்வையைاَتْرَابٌசமவயதினர்
வ 'இன்தஹும் காஸிராதுத் தர்Fபி அத்ராBப்
முஹம்மது ஜான்
அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும், ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிடத்தில் கீழ்நோக்கிய பார்வையையுடைய ஒத்த வயதுடைய கன்னிகைகள் பலரும் இருப்பார்கள்.
IFT
மேலும், அவர்களின் அருகில் நாணமுடைய சமவயதுடைய மனைவியர் இருப்பர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களிடத்தில், கீழ் நோக்கிய பார்வைகளயுடைய ஒத்த வயதுடைய கன்னிகைகள் (பலரும்) இருப்பார்கள்.
Saheeh International
And with them will be women limiting [their] glances and of equal age.
هٰذَا مَا تُوْعَدُوْنَ لِیَوْمِ الْحِسَابِ ۟
هٰذَاஇதுதான்مَاஎதுتُوْعَدُوْنَஉங்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோلِیَوْمِநாளுக்காகالْحِسَابِகேள்விக் கணக்கு
ஹாதா மா தூ'அதூன லி யவ்மில் ஹிஸாBப்
முஹம்மது ஜான்
“கேள்வி கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) கேள்வி கணக்குக் கேட்கும் நாளில் உங்களுக்கு(த் தருவதாக) வாக்களிக்கப்பட்டவை இவைதான்.
IFT
கேள்விகணக்கு கேட்கும் நாளில் உங்களுக்குத் தருவதாக வாக்களித்துக் கொண்டிருப்பவை இவைதாம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது, (கேள்வி) “கணக்கிற்குரிய நாளுக்கென நீங்கள் வாக்களிக்கப்பட்டவையாகும்.”
Saheeh International
This is what you, [the righteous], are promised for the Day of Account.
اِنَّ هٰذَا لَرِزْقُنَا مَا لَهٗ مِنْ نَّفَادٍ ۟ۚۖ
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَرِزْقُنَاநிச்சயமாக நமது வாழ்வாதாரம்مَاஇல்லைلَهٗஅதற்குمِنْஎந்தنَّفَادٍۚۖமுடிவும்
இன்ன ஹாதா லரிZஜ்குனா மா லஹூ மின் னFபாத்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்; இதற்கு (என்றும்) முடிவே இராது” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இவை நம் கொடையாகும். இதற்கு அழிவே இல்லை (என்று கூறப்படும்).
IFT
இது நாம் வழங்கும் நற்பேறாகும். இதற்கு என்றுமே முடிவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும், இதற்கு முடிவே இல்லை” (என்று அவர்களுக்குக் கூறப்படும்)
Saheeh International
Indeed, this is Our provision; for it there is no depletion.
هٰذَا ؕ وَاِنَّ لِلطّٰغِیْنَ لَشَرَّ مَاٰبٍ ۟ۙ
هٰذَا ؕஇதுوَ اِنَّமேலும் நிச்சயமாகلِلطّٰغِیْنَவரம்பு மீறியவர்களுக்குلَشَرَّநிச்சயமாகத் தீயمَاٰبٍۙதிரும்புமிடம்
ஹாதா; வ இன்ன லித்தாகீன லஷர்ர மஆBப்
முஹம்மது ஜான்
இது (நல்லோருக்காக); ஆனால் நிச்சயமாகத் தீயவர்களுக்கு மிகக் கெட்ட தங்குமிடம் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(நல்லவர்களின் முடிவு) இதுவாகும். வழிகெட்டவர்களின் தங்கும் இடம் நிச்சயமாக மகா தீயது.
IFT
இதுதான் இறையச்சம் உடையவர்களின் நல்ல முடிவாகும். வரம்புமீறிச் செல்வோருக்கு மிகத் தீய இருப்பிடம் இருக்கிறது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது(வே நல்லோரின் முடிவாகும்) மேலும் நிச்சயமாக, (அல்லாஹ்வின் கட்டளையை மீறிய) கெட்டவர்களுக்கு மிகக்கெட்ட தங்குமிடம் இருக்கிறது.
Saheeh International
This [is so]. But indeed, for the transgressors is an evil place of return -
جَهَنَّمَ ۚ یَصْلَوْنَهَا ۚ فَبِئْسَ الْمِهَادُ ۟
جَهَنَّمَ ۚநரகம்یَصْلَوْنَهَا ۚஅதில் அவர்கள் நுழைவார்கள்فَبِئْسَஅது மிகக் கெட்டالْمِهَادُதங்குமிடம்
ஜஹன்னம யஸ்லவ்னஹா Fப Bபி'ஸல் மிஹாத்
முஹம்மது ஜான்
(அதுவே நரகம்) ஜஹன்னம் -அதில் அவர்கள் நுழைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டது.
அப்துல் ஹமீது பாகவி
அது நரகம்தான். அதில்தான் அவர்கள் புகுவார்கள். அது தங்குமிடங்களில் மகா கெட்டது.
IFT
நரகம்! அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். அது மிகத் தீய தங்குமிடம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதுவே) நரகம்_அதில் அவர்கள் புகுவார்கள், தங்குமிடமான அது மிகக் கெட்டது.
Saheeh International
Hell, which they will [enter to] burn, and wretched is the resting place.
هٰذَا ۙ فَلْیَذُوْقُوْهُ حَمِیْمٌ وَّغَسَّاقٌ ۟ۙ
هٰذَا ۙஇதுفَلْیَذُوْقُوْهُஆகவே அவர்கள் அதனைச் சுவைக்கட்டும்حَمِیْمٌகொதிக்கும் நீர்وَّ غَسَّاقٌۙமேலும் சீழ்
ஹாதா Fபல்யதூகூஹு ஹமீமு(ன்)வ் வ கஸ்ஸாக்
முஹம்மது ஜான்
இது (தீயோர்களுக்காக); ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் - கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி,) ‘‘இதோ! கொதித்த நீரும், சீழ் சலமும்! அதை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறப்படும்).
IFT
இதுதான் அவர்களுக்கு உரியது. எனவே, அவர்கள் சுவைக்கட்டும்; கொதித்த நீரையும் சீழ்சலத்தையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது (தீயோரின் முடிவாகும்), ஆகவே, இதை அவர்கள் சுவைத்துப் பார்க்கட்டும்_ (இதுவே) கொதித்த நீரும், (நரகவாசிகளின் உடலிலிருந்து வடியும்) சீழ் ஜலமுமாகும்.
Saheeh International
This - so let them taste it - is scalding water and [foul] purulence.
وَّاٰخَرُ مِنْ شَكْلِهٖۤ اَزْوَاجٌ ۟ؕ
وَّ اٰخَرُஇன்னும் மற்றவைمِنْஇருந்துشَكْلِهٖۤஅதன் போன்றاَزْوَاجٌؕபல வகைகள்
வ ஆகரு மின் ஷக்லிஹீ அZஜ்வாஜ்
முஹம்மது ஜான்
இன்னும் (இதைத்தவிர) இது போன்ற பல (வேதனைகளும்) உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
இதைப் போன்ற (துன்பம் நிறைந்த) விதவிதமான வேறு (வேதனைகளு)ம் உண்டு.
IFT
இதுபோன்ற வேறு பல கழிவுகளையும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதைப்போன்ற வேறு பலவகை (வேதனை)களும் உண்டு.
Saheeh International
And other [punishments] of its type [in various] kinds.
هٰذَا فَوْجٌ مُّقْتَحِمٌ مَّعَكُمْ ۚ لَا مَرْحَبًا بِهِمْ ؕ اِنَّهُمْ صَالُوا النَّارِ ۟
هٰذَاஇதுفَوْجٌஒரு கூட்டம்مُّقْتَحِمٌமுண்டியடித்து நுழையக்கூடியதுمَّعَكُمْ ۚஉங்களுடன்لَاஇல்லைمَرْحَبًۢاநல்வரவுبِهِمْ ؕஅவர்களுக்குاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்صَالُواஎரிபவர்கள்النَّارِநெருப்பில்
ஹாதா Fபவ்ஜுன் முக்தஹிமுன் ம'அகும் லா மர்ஹBபன் Bபிஹிம்; இன்னஹும் ஸாலுன் னார்
முஹம்மது ஜான்
(நரகவாதிகளின் தலைவர்களிடம்:) “இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்; இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது; நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்பவர்கள்” (என்று கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களுடைய தலைவர்களை நோக்கி,) ‘‘இந்தக் கூட்டத்தாரும் உங்களுடன் (நரகத்தில்) தள்ளப்படுவார்கள்'' (என்று கூறப்படும். அதற்கு அவர்கள்) ‘‘இது அவர்களுக்கு நல்வரவாகாது. நிச்சயமாக இவர்கள் நரகம் செல்பவர்களே'' (என்று கூறுவார்கள்).
IFT
(அவர்கள், தம்மைப் பின்பற்றியவர்கள் நரகத்தை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு தமக்கிடையே கூறிக்கொள்வார்கள்:) “இதோ! ஒரு படை முண்டியடித்துக் கொண்டு உங்களிடம் வருகின்றது. எந்த வரவேற்பும் இவர்களுக்கு இல்லை; இவர்கள் நெருப்பில் எரிந்து பொசுங்கக்கூடியவர்கள்தாம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்களுடைய தலைவர்களிடம்) “இது உங்களுடன் (நரகத்தில்) புகும் படையாகும்” (என்று கூறப்படும் அதற்கு அவர்கள்,) ”இது அவர்களுக்கு நல்லவரவாகாது, நிச்சயமாக, அவர்கள் நரகத்தில் புகுந்து விட்டவர்களே!” (என்று கூறுவார்கள்).
Saheeh International
[Its inhabitants will say], "This is a company bursting in with you. No welcome for them. Indeed, they will burn in the Fire."
قَالُوْا بَلْ اَنْتُمْ ۫ لَا مَرْحَبًا بِكُمْ ؕ اَنْتُمْ قَدَّمْتُمُوْهُ لَنَا ۚ فَبِئْسَ الْقَرَارُ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلْமாறாகاَنْتُمْ ۫நீங்கள்தான்لَاஇல்லைمَرْحَبًۢاநல்வரவுبِكُمْ ؕஉங்களுக்குاَنْتُمْநீங்கள்தான்قَدَّمْتُمُوْهُஇதனை முற்படுத்தினீர்கள்لَنَا ۚஎங்களுக்குفَبِئْسَஆகவே மிகக் கெட்டதுالْقَرَارُதங்குமிடம்
காலூ Bபல் அன்தும் லா மர்ஹBபன் Bபிகும்; அன்தும் கத்தம்துமூஹு லனா FபBபி'ஸல் கரார்
முஹம்மது ஜான்
அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, நீங்களும் தான்! உங்களுக்கும் சங்கை கிடையாது! நீங்கள் தாம் எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது!” என்று கூறுவர்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அ(த்தலை)வர்கள் (பின் தொடர்ந்த) அவர்களை நோக்கி, ‘‘(எங்களுக்கு) இல்லை. மாறாக, உங்களுக்குத்தான் நல்வரவில்லை. நீங்கள் தான் எங்களுக்கு இதைத் தேடித்தந்தீர்கள். (ஆதலால், நம்மிருவரின்) தங்குமிடம் மகா கெட்டதுதான்'' என்று கூறுவார்கள்.
IFT
அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள். “இல்லை! நீங்கள்தாம் எரிந்து பொசுங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்; எந்த வரவேற்பும் உங்களுக்குத்தான் இல்லை; நீங்கள்தாம் இந்தத் தீயகதிக்கு எங்களை ஆளாக்கினீர்கள். எவ்வளவு மோசமான தங்குமிடம் இது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு அ(த்தலைவர்களைப் பின்பற்றிய)வர்கள் (தலைவர்களிடம், “எங்களுக்கு) அன்று! நீங்களும்தான், உங்களுக்கு நல்வரவில்லை, நீங்கள்தாம் எங்களுக்கு இதனை முற்படுத்தித்தந்தீர்கள், ஆதலால், (நம்மிருசாராரின்) தங்குமிடம் மிகக் கெட்டது” என்று கூறுவார்கள்.
Saheeh International
They will say, "Nor you! No welcome for you. You, [our leaders], brought this upon us, and wretched is the settlement."
قَالُوْا رَبَّنَا مَنْ قَدَّمَ لَنَا هٰذَا فَزِدْهُ عَذَابًا ضِعْفًا فِی النَّارِ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவனேمَنْஎவர்قَدَّمَகொண்டு வந்தாரோلَنَاஎங்களுக்குهٰذَاஇதைفَزِدْهُஅவருக்கு அதிகப்படுத்துவாயாகعَذَابًاவேதனையைضِعْفًاஇருமடங்காகفِیஇல்النَّارِநெருப்பு
காலூ ரBப்Bபனா மன் கத்தம லனா ஹாதா Fப Zஜித்ஹு 'அதாBபன் ளிஃFபன் Fபின் னார்
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவா! எவர் எங்களுக்கு இதை (இந்நிலையை) முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக!” என்று அவர்கள் கூறுவர்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர, ‘‘எங்கள் இறைவனே! எவன் இதை எங்களுக்குத் தேடி வைத்தானோ, அவனுக்கு நரகத்தில் (வேதனையை) இரு மடங்கு அதிகப்படுத்து'' என்று பிரார்த்திப்பார்கள்.
IFT
பிறகு அவர்கள் கூறுவார்கள்: “இறைவா! எவர்கள் எங்களை இந்தத் தீயகதிக்கு ஆளாக்கிடத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்களோ அவர்களுக்கு நரகத்தின் இருமடங்கு வேதனையை நீ கொடுப்பாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எங்களிரட்சகனே! எவன் இதனை எங்களுக்கு முற்படுத்தி வைத்தானோ அவனுக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்கு அதிகப்படுத்துவாயாக! என்று கூறுவார்கள்.
Saheeh International
They will say, "Our Lord, whoever brought this upon us - increase for him double punishment in the Fire."
وَقَالُوْا مَا لَنَا لَا نَرٰی رِجَالًا كُنَّا نَعُدُّهُمْ مِّنَ الْاَشْرَارِ ۟ؕ
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறுவார்கள்مَاஎன்னلَنَاநமக்குلَاஇல்லைنَرٰیநாம் காண்கிறோம்رِجَالًاசில மனிதர்களைكُنَّاநாம் இருந்தோம்نَعُدُّهُمْஅவர்களை நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்مِّنَஇருந்துالْاَشْرَارِؕதீயவர்கள்
வ காலூ மா லனா லா னரா ரிஜாலன் குன்னா ன'உத்துஹும் மினல் அஷ்ரார்
முஹம்மது ஜான்
இன்னும், அவர்கள்: “நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை?
அப்துல் ஹமீது பாகவி
தவிர, ‘‘மிகக் கெட்ட மனிதர்கள் என்று (உலகத்தில்) எண்ணிக் கொண்டிருந்தோமே அவர்களை (நரகத்தில்) காணவில்லையே?'' என்று ஒருவர் ஒருவரைக் கேட்பார்கள்.
IFT
அவர்கள் தமக்கிடையில் பேசிக்கொள்வார்கள்: “என்ன நாம் உலகில் யாரைத் தீயவர்களென்று கருதியிருந்தோமோ அவர்களை எங்குமே காணவில்லையே?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், “எங்களுகென்ன நேர்ந்தது? எவர்களை தீயவர்களில் உள்ளவர்கள் என்று (உலகத்தில்) எண்ணிக்கொண்டிருந்தோமோ அந்த மனிதர்களை (நரகத்தில்) காணவில்லையே!“ என்று கூறுவார்கள்.
Saheeh International
And they will say, "Why do we not see men whom we used to count among the worst?
اَتَّخَذْنٰهُمْ سِخْرِیًّا اَمْ زَاغَتْ عَنْهُمُ الْاَبْصَارُ ۟
اَتَّخَذْنٰهُمْநாம் அவர்களை ஆக்கிக் கொண்டோமாسِخْرِیًّاபரிகாசமாகاَمْஅல்லதுزَاغَتْதவறிவிட்டனவாعَنْهُمُஅவர்களை விட்டும்الْاَبْصَارُபார்வைகள்
அத்தகத்னாஹும் ஸிக் ரிய்யன் அம் Zஜாகத் 'அன்ஹுமுல் அBப்ஸார்
முஹம்மது ஜான்
“நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமா? அல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகி விட்டனவா?” என்று கூறுவர்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘எவர்களைப் பரிகாசம் பண்ணிக் கொண்டிருந்தோமோ (அவர்கள் இங்கிருந்தும்) அவர்களைப் பார்க்காதவாறு நம் கண்கள்தான் மங்கி விட்டனவோ!'' (என்றும் கூறுவார்கள்).
IFT
அவர்களை நாம் தாம் வெறுமனே பரிகாசம் செய்துகொண்டு இருந்தோமா? அல்லது அவர்கள் கண்ணில்படாமல் இருக்கின்றார்களா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர்களைப் பரிகாசமாக நாம் எடுத்துக்கொண்டிருந்தோமோ? அல்லது (அவர்கள் இங்கிருந்தும்) அவர்களைப் பார்க்காதவாறு நம்முடைய பார்வைகள் தாம் சாய்ந்துவிட்டனவா!” (என்றும் கூறுவார்கள்).
Saheeh International
Is it [because] we took them in ridicule, or has [our] vision turned away from them?"
اِنَّ ذٰلِكَ لَحَقٌّ تَخَاصُمُ اَهْلِ النَّارِ ۟۠
اِنَّநிச்சயமாகذٰلِكَஅதுلَحَقٌّஉண்மையானதேتَخَاصُمُசச்சரவுاَهْلِவாசிகளின்النَّارِ۠நரக நெருப்பின்
இன்ன தாலிக லஹக்குன் தகாஸுமு அஹ்லின் னார்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இது தான் உண்மை. நரகவாசிகள் (இவ்வாறு தான்) ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறு நரகவாசிகள் தர்க்கித்துக் கொள்வது நிச்சயமாக உண்மை தான்.
IFT
சந்தேகமின்றி இது உண்மையான விஷயமாகும்; இதேபோன்ற தர்க்கங்கள் தாம் நரகவாசிகளிடையே நடைபெற இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நரகவாசிகள் (இவ்வாறு) தர்க்கித்துக் கொள்ளும் இது திட்டமாக உண்மையாகும்.
Saheeh International
Indeed, that is truth [i.e., reality] - the quarreling of the people of the Fire.
قُلْ اِنَّمَاۤ اَنَا مُنْذِرٌ ۖۗ وَّمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۟ۚ
قُلْகூறுவீராகاِنَّمَاۤநிச்சயமாகاَنَاநான்مُنْذِرٌ ۖۗஅச்சமூட்டி எச்சரிப்பவன்وَّ مَاமேலும் இல்லைمِنْஎந்த ஒருاِلٰهٍவணக்கத்திற்குரியவனும்اِلَّاதவிரاللّٰهُஅல்லாஹ்الْوَاحِدُஏகன்الْقَهَّارُۚஅடக்கியாள்பவன்
குல் இன்னமா அன முன்திரு(ன்)வ் வமா மின் லாஹின் இல்லல் லாஹுல் வாஹிதுல் கஹ்ஹார்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறுவீராக: “நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே, அன்றியும் ஏகனும், (யாவரையும்) அடக்கியாள்பவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு (இதைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அனைவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு இறைவன் இல்லவே இல்லை.
IFT
(நபியே! இவர்களிடம்) கூறும்: “நான் எச்சரிக்கை செய்பவன் ஆவேன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் ஏகன்; அடக்கியாள்பவன்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் (இதனைப்பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவனே, (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை” என்றும் (நபியே!) நீர் கூர்வீராக!
Saheeh International
Say, [O Muhammad], "I am only a warner, and there is not any deity except Allah, the One, the Prevailing,
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا الْعَزِیْزُ الْغَفَّارُ ۟
رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِமற்றும் பூமிوَ مَاமற்றும் எவைبَیْنَهُمَاஅவையிரண்டிற்கும் இடையில்الْعَزِیْزُமிகைத்தவன்الْغَفَّارُமிக மன்னிப்பவன்
ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமல் 'அZஜீZஜுல் கFப்Fபார்
முஹம்மது ஜான்
“(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக இருக்கின்றான்; அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிகவும் மன்னிப்பவன்.”
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவை அனைத்திற்கும் உரிமையாளன். அவன் அனைவரையும் மிகைத்தவன், மிக்க மன்னிப்புடையவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
IFT
மேலும் வானங்கள் மற்றும் பூமி இவ்விரண்டுக்குமிடையிலுள்ள பொருள்கள் அனைத்தின் அதிபதி; வலிமை மிக்கவன்; பெரிதும் பிழைபொறுப்பவன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன் தான்) வானங்கள் மற்றும் பூமி இன்னும், இவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றிற்கு இரட்சகன், (அவன் யாவற்றையும்) மிகைத்தோன், மிக்க மன்னிப்புடையோன்.
Saheeh International
Lord of the heavens and the earth and whatever is between them, the Exalted in Might, the Perpetual Forgiver."
قُلْ هُوَ نَبَؤٌا عَظِیْمٌ ۟ۙ
قُلْகூறுவீராகهُوَஅதுنَبَؤٌاசெய்திعَظِیْمٌۙமகத்தானது
குல் ஹுவ னBப'உன் 'அளீம்
முஹம்மது ஜான்
(நபியே?) கூறுவீராக: “(நான் உங்களுக்கு எடுத்துரைக்கும்) இது மகத்தான செய்தியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘(உங்களுக்கு நான் எடுத்துரைக்கும்) இது மிக மகத்தானதொரு விஷயம்.
IFT
இவர்களிடம் கூறும்: “இது ஒரு மாபெரும் செய்தி!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(உங்களுக்கு நான் எடுத்துரைக்கும்) இது, மிக மகத்தான செய்தியாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக:
Saheeh International
Say, "It is great news
اَنْتُمْ عَنْهُ مُعْرِضُوْنَ ۟
اَنْتُمْநீங்கள்عَنْهُஅதனைمُعْرِضُوْنَபுறக்கணிப்பவர்கள்
அன்தும் 'அன்ஹு முஃரிளூன்
முஹம்மது ஜான்
“நீங்களோ அதைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்.''
IFT
நீங்களோ இதனை(ச் செவியேற்றும்) புறக்கணிக்கின்றீர்களே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால்) நீங்கள் அதனைப் புறக்கணிக்கின்றவர்களாக இருக்கிறீர்கள்.
Saheeh International
From which you turn away.
مَا كَانَ لِیَ مِنْ عِلْمٍ بِالْمَلَاِ الْاَعْلٰۤی اِذْ یَخْتَصِمُوْنَ ۟
مَاஇல்லைكَانَஇருந்ததுلِیَஎனக்குمِنْஎந்தعِلْمٍۭஅறிவும்بِالْمَلَاِகூட்டத்தாரைப் பற்றிالْاَعْلٰۤیமேலானاِذْபோதுیَخْتَصِمُوْنَஅவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த
மா கான லிய மின் 'இல்மின் Bபில் மல'இல் அஃலா இத் யக்தஸிமூன்
முஹம்மது ஜான்
“மேலான கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
அப்துல் ஹமீது பாகவி
(ஆதமை இறைவன் படைத்தபோது,) மேலுலகத்தார் (ஆகிய வானவர்கள்) தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டது எனக்கொன்றும் தெரியாது. (அதைப் பற்றி) ‘‘எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதைத் தவிர, (நான் அறியேன்.)
IFT
(இவர்களிடம் கூறுங்கள்:) “மேலுலகத்தில் தர்க்கம் நடைபெற்றபோது, அவர்களைப்பற்றிய எந்த விவரமும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(ஆதமை அல்லாஹ் படைத்தபோது,) மிக மேலான கூட்டத்தார் (ஆகிய மலக்குகள் தங்களுக்குள்) தர்க்கித்துக்கொண்டது பற்றி (அல்லாஹ் அறிவித்ததே தவிர) எனகொன்றும் தெரியாது (என்றும்),
Saheeh International
I had no knowledge of the exalted assembly [of angels] when they were disputing [the creation of Adam].
اِنْ یُّوْحٰۤی اِلَیَّ اِلَّاۤ اَنَّمَاۤ اَنَا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
اِنْஇல்லைیُّوْحٰۤیவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَیَّஎனக்குاِلَّاۤதவிரاَنَّمَاۤஎன்பதைاَنَاநான்نَذِیْرٌஎச்சரிக்கை செய்பவன்مُّبِیْنٌதெளிவான
இ(ன்)ய்-யூஹா இலய்ய இல்லா அன்ன மா அன னதீருன் முBபீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்பதற்காக அல்லாமல் எனக்கு வஹீ அறிவிக்கப்படவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான் பகிரங்கமாக, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை என்றுதான் எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டுள்ளது.''(என்று கூறுவீராக)
IFT
நான் வெளிப்படையாய் எச்சரிக்கை செய்யக்கூடியவனாய் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வஹியின் மூலம் இவ்விஷயங்கள் எனக்கு அறிவிக்கப்படுகின்றன.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன், என்பதைத்தவிர (வேறு எதையும்) எனக்கு (வஹீமூலம்) அறிவிக்கப்படவில்லை” (என்றும் கூறுவீராக!)
Saheeh International
It has not been revealed to me except that I am a clear warner."
اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ خَالِقٌۢ بَشَرًا مِّنْ طِیْنٍ ۟
اِذْஅப்போதுقَالَகூறினான்رَبُّكَஉமது இறைவன்لِلْمَلٰٓىِٕكَةِவானவர்களிடம்اِنِّیْநிச்சயமாக நான்خَالِقٌۢபடைக்கவுள்ளேன்بَشَرًاஒரு மனிதனைمِّنْஇலிருந்துطِیْنٍகளிமண்
இத் கால ரBப்Bபுக லில்மலா'இகதி இன்னீ காலிகுன் Bபஷரன் மின் தீன்
முஹம்மது ஜான்
(நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்:
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவன் வானவர்களை நோக்கி, ‘‘நான் மனிதனைக் களிமண்ணால் படைக்கப் போகிறேன்'' என்று கூறிய சமயத்தில்,
IFT
உம்முடைய இறைவன் வானவர்களிடம் “நான் களிமண்ணால் ஒரு மனிதனைப் படைக்கப்போகின்றேன்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உமதிரட்சகன் மலக்குகளிடம் நிச்சயமாக “நான் மனிதனைக் களிமண்ணால் படைக்கப்போகிறேன்” என்று கூறிய வேளையை (நபியே நீர் நினைவு கூர்வீராக!)
Saheeh International
[So mention] when your Lord said to the angels, "Indeed, I am going to create a human being from clay.
فَاِذَا سَوَّیْتُهٗ وَنَفَخْتُ فِیْهِ مِنْ رُّوْحِیْ فَقَعُوْا لَهٗ سٰجِدِیْنَ ۟
فَاِذَاஆகவே எப்போதுسَوَّیْتُهٗநான் அவனைச் செம்மைப்படுத்திوَ نَفَخْتُமேலும் நான் ஊதியபோதுفِیْهِஅவனுக்குள்مِنْஇருந்துرُّوْحِیْஎனது ஆவிفَقَعُوْاவிழுங்கள்لَهٗஅவனுக்குسٰجِدِیْنَசிரம் பணிந்தவர்களாக
Fப-இத ஸவ்வய்துஹூ வ னFபக்து Fபீஹி மிர் ரூஹீ Fபக'ஊ லஹூ ஸாஜிதீன்
முஹம்மது ஜான்
“நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்);
அப்துல் ஹமீது பாகவி
நான் அவரைச் செப்பனிட்டு, அவருக்குள் (நான் படைத்த) என் உயிரிலிருந்து ஊதினால் அவருக்குமுன் நீங்கள் சிரம் பணிந்தவர்களாக விழுந்துவிடுங்கள் என்றும் கூறினான்.''
IFT
நான் அவரை முழுமையாகப் படைத்து, அவருக்குள் என்னுடைய உயிரை ஊதினால், அவருக்கு முன்னால் சிரம் பணியுங்கள் எனக் கூறியபோது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு நான் அவரை (அவருடைய தோற்றத்தை உருவாக்கி)ச்சரிப்படுத்தி என் உயிரிலிருந்தும் அவரில் ஊதியபோது, அவருக்கு சிரம் பணிந்தவர்களாக விழுங்கள் (எனக் கூறியதும்).
Saheeh International
So when I have proportioned him and breathed into him of My [created] soul, then fall down to him in prostration."
فَسَجَدَ الْمَلٰٓىِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَ ۟ۙ
فَسَجَدَஎனவே சிரம் பணிந்தார்கள்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்كُلُّهُمْஅவர்கள் அனைவரும்اَجْمَعُوْنَۙஒட்டுமொத்தமாக
Fபஸஜதல் மலா'இகது குல்லுஹும் அஜ்ம'ஊன்
முஹம்மது ஜான்
அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அச்சமயம்) வானவர்கள் எல்லோரும் அனைவருமே சிரம் பணிந்தார்கள்.
IFT
(இக்கட்டளைக்கு இணங்கி) வானவர்கள் அனைவருமே சிரம் பணிந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது சமயம்) மலக்குகள்_அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சிரம்பணிந்தார்கள்_
Saheeh International
So the angels prostrated - all of them entirely,
اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اِسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
اِلَّاۤதவிரاِبْلِیْسَ ؕஇப்லீஸைاِسْتَكْبَرَஅவன் பெருமையடித்தான்وَ كَانَமேலும் அவன் ஆகிவிட்டான்مِنَஒருவனாகالْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்களில்
இல்லா இBப்லீஸ்; ஸ்தக்Bபர வ கான மினல் காFபிரீன்
முஹம்மது ஜான்
இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
இப்லீஸைத் தவிர, அவன் கர்வம்கொண்டு (நம் கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்.
IFT
ஆனால், இப்லீஸைத் தவிர! அவன் தன்னைப் பெரியவனென்று கருதி கர்வம் கொண்டான். மேலும், நிராகரிப்பவர்களுடன் சேர்ந்துவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இப்லீஸைத்தவிர_அவன் கர்வங்கொண்டான், நிராகரிப்பவர்களிலும் ஆகிவிட்டான்.
Saheeh International
Except Iblees; he was arrogant and became among the disbelievers.
قَالَ یٰۤاِبْلِیْسُ مَا مَنَعَكَ اَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِیَدَیَّ ؕ اَسْتَكْبَرْتَ اَمْ كُنْتَ مِنَ الْعَالِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்یٰۤاِبْلِیْسُஇப்லீஸேمَاஎதுمَنَعَكَஉன்னைத் தடுத்ததுاَنْநீتَسْجُدَசிரம்பணிவதைلِمَاஎதற்குخَلَقْتُநான் படைத்தேனோبِیَدَیَّ ؕஎன் இரு கைகளால்اَسْتَكْبَرْتَநீ பெருமையடிக்கிறாயாاَمْஅல்லதுكُنْتَநீ இருக்கிறாயாمِنَஇருந்துالْعَالِیْنَஉயர்ந்தவர்களில்
கால யா இBப்லீஸு மா மன'அக அன் தஸ்ஜுத லிமா கலக்து Bபி யதய்ய 'அ ஸ்தக்Bபர்த அம் குன்த மின் அல் 'ஆலீன்
முஹம்மது ஜான்
“இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு இறைவன், ‘‘இப்லீஸே! நானே என் இரு கரங்களால் படைத்தவருக்கு முன் நீ சிரம் பணிய உன்னைத் தடுத்தது எது? நீ உன்னை மிகப் பெரியவனாக மதித்துக் கொண்டாயா? அல்லது நீ, (என் கட்டளைக்குக் கீழ்ப்படியக் கூடாத) உயர்ந்த பதவியுடையவனாகி விட்டாயா?'' என்றான்.
IFT
இறைவன் கூறினான்: “இப்லீஸே! நான் என்னுடைய இரு கைகளால் படைத்திருக்கும் இவருக்கு சிரம் பணிவதை விட்டு உன்னைத் தடுத்தது எது? நீ கர்வம் கொண்டு விட்டாயா? அல்லது நீ உயர் அந்தஸ்து உடையவர்களுள் ஒருவனாகி விட்டாயா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அல்லாஹ்,) ”இப்லீஸே! என் இருகரங்களால் நான் படைத்ததற்கு நீ சிரம் பணியாது உன்னைத் தடுத்தது எது? நீ கர்வங்கொண்டுவிட்டாயா? அல்லது, நீ உயர்ந்த (பதவியுடைய)வர்களில் ஆகிவிட்டாயா?” என்றான்.
Saheeh International
[Allah] said, "O Iblees, what prevented you from prostrating to that which I created with My hands? Were you arrogant [then], or were you [already] among the haughty?"
قَالَ اَنَا خَیْرٌ مِّنْهُ ؕ خَلَقْتَنِیْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِیْنٍ ۟
قَالَஅவன் கூறினான்اَنَاநான்خَیْرٌமேலானவன்مِّنْهُ ؕஅவனை விடخَلَقْتَنِیْஎன்னை நீ படைத்தாய்مِنْஇருந்துنَّارٍநெருப்புوَّ خَلَقْتَهٗமேலும் அவனை நீ படைத்தாய்مِنْஇருந்துطِیْنٍகளிமண்
கால அன கய்ரும் மின்ஹு; கலக்தனீ மின் னாரி(ன்)வ் வ கலக்தஹூ மின் தீன்
முஹம்மது ஜான்
“நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன், ‘‘அவரைவிட நானே மேலானவன். என்னை நீயே நெருப்பால் படைத்தாய்; அவரை களிமண்ணால் படைத்தாய்'' என்றான்.
IFT
அவன் (இப்லீஸ்) பதிலளித்தான்: “நான் அவரை விடச் சிறந்தவன்; என்னை நீ நெருப்பினால் படைத்தாய்; அவரையோ களிமண்ணால்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், ‘நான் அவரை விட மிக்க மேலானவன், என்னை, நெருப்பிலிருந்து நீ படைத்தாய், இன்னும், அவரைக் களிமண்ணிலிருந்து நீ படைத்தாய்” என்றான்.
Saheeh International
He said, "I am better than him. You created me from fire and created him from clay."
قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِیْمٌ ۟ۚۖ
قَالَஅவன் கூறினான்فَاخْرُجْஎனவே வெளியேறுمِنْهَاஇதிலிருந்துفَاِنَّكَநிச்சயமாக நீرَجِیْمٌۚۖவிரட்டப்பட்டவன்
கால Fபக்ருஜ் மின்ஹா Fப இன்னக ரஜீம்
முஹம்மது ஜான்
(அப்போது இறைவன்) “இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்” எனக் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு இறைவன், ‘‘அவ்வாறாயின், நீ இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டு விட்டாய்.
IFT
அல்லாஹ் கூறினான்: “சரி! நீ இங்கிருந்து வெளியேறி விடு; நீ விரட்டப்பட வேண்டியவனாய் இருக்கின்றாய்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அல்லாஹ், “அவ்வாறாயின்,) நீ இதிலிருந்து வெளியேறி விடு, நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்” என்று கூறினான்.
Saheeh International
[Allah] said, "Then get out of it [i.e., Paradise], for indeed, you are expelled.
وَّاِنَّ عَلَیْكَ لَعْنَتِیْۤ اِلٰی یَوْمِ الدِّیْنِ ۟
وَّ اِنَّமேலும் நிச்சயமாகعَلَیْكَஉன் மீதுلَعْنَتِیْۤஎனது சாபம்اِلٰیவரைیَوْمِநாள்الدِّیْنِதீர்ப்பு
வ இன்ன 'அலய்க லஃனதீ இலா யவ்மித் தீன்
முஹம்மது ஜான்
“இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்” (எனவும் இறைவன் கூறினான்).
அப்துல் ஹமீது பாகவி
தீர்ப்பு நாள் வரை என் சாபம் உன்மீது நிச்சயமாக நிலைத்திருக்கும்'' என்றான்.
IFT
மேலும், கூலி வழங்கும் நாள் வரை உன்மீது என்னுடைய சாபம் உண்டாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய சாபமும் தீர்ப்பு நாள்வரை நிச்சயமாக உன்மீது இருக்கும்”, (என்று கூறினான்.)
Saheeh International
And indeed, upon you is My curse until the Day of Recompense."
قَالَ رَبِّ فَاَنْظِرْنِیْۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்رَبِّஎன் இறைவாفَاَنْظِرْنِیْۤஎனவே எனக்கு அவகாசம் அளிப்பாயாகاِلٰیவரைیَوْمِநாள்یُبْعَثُوْنَஅவர்கள் எழுப்பப்படும்
கால ரBப்Bபி Fப அன்ளிர்னீ இலா யவ்மி யுBப்'அதூன்
முஹம்மது ஜான்
“இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன், ‘‘என் இறைவனே! (மரணித்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடு'' என்றான்.
IFT
அதற்கு அவன் கூறினான்: “என் இறைவா! அவ்வாறாயின் இவர்களை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பும் நாள் வரையில் எனக்கு அவகாசம் அளித்திடுவாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், “என் இரட்சகனே! (இறந்தோர்) எழுப்பப்படும் நாள்வரையில் நீ எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று கூறினான்.
Saheeh International
He said, "My Lord, then reprieve me until the Day they are resurrected."
قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِیْنَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்فَاِنَّكَஆகவே, நிச்சயமாக நீمِنَஉள்ளவன் ஆவாய்الْمُنْظَرِیْنَۙஅவகாசம் அளிக்கப்பட்டவர்களில்
கால Fப இன்னக மினல் முன்ளரீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே” என (அல்லாஹ்) கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு இறைவன் கூறினான்: ‘‘நிச்சயமாக உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது,
IFT
அல்லாஹ் கூறினான்: “சரி! உனக்கு அந்நாள்வரை அவகாசம் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அல்லாஹ்,) “நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் உள்ளாய்” என்று கூறினான்.
Saheeh International
[Allah] said, "So indeed, you are of those reprieved
اِلٰی یَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ ۟
اِلٰیவரைیَوْمِநாள்الْوَقْتِநேரம்الْمَعْلُوْمِஅறியப்பட்ட
இலா யவ்மில் வக்தில் மஃலூம்
முஹம்மது ஜான்
“குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்” (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்).
அப்துல் ஹமீது பாகவி
குறிப்பிட்ட அந்நாள் வரை (உன் தவணை)''
IFT
அந்நாள் வரும் நேரம் எனக்குத் தெரியும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
குறிப்பிட்ட நேரத்தின் நாள்வரையில் (உன் தவணை உண்டு என்று கூறினான்).
Saheeh International
Until the Day of the time well-known."
قَالَ فَبِعِزَّتِكَ لَاُغْوِیَنَّهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்فَبِعِزَّتِكَஉனது வல்லமையின் மீது சத்தியமாகلَاُغْوِیَنَّهُمْநிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன்اَجْمَعِیْنَۙஅவர்கள் அனைவரையும்
கால Fப Bபி 'இZஜ்Zஜதிக ல உக்வியன்னஹும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன், ‘‘உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக நான் (மனிதர்கள்) அனைவரையும் வழி கெடுத்து விடுவேன்.''
IFT
அவன் கூறினான்: “உன்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக! இம்மக்கள் அனைவரையும் நான் வழிகெடுத்துக் கொண்டிருப்பேன்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அப்போது) அவன், “உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் அனைவரையும் வழிகெடுத்துவிடுவேன்” என்றான்.
Saheeh International
[Iblees] said, "By Your might, I will surely mislead them all.
اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَكَஉமது அடியார்களைمِنْهُمُஅவர்களில்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்களை
இல்லா 'இBபாதக மின்ஹுமுல் முக்லஸீன்
முஹம்மது ஜான்
“(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘(எனினும்,) அவர்களில் பரிசுத்த மனதுடைய உன் அடியார்களைத் தவிர'' என்றான்.
IFT
ஆனால், இவர்களில் நீ தூய்மைப்படுத்தியுள்ள உன்னுடைய அடியார்களைத் தவிர!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர்களில் (உன்னால்) தேர்ந்தெடுக்கப்பட்ட உன் அடியார்களைத் தவிர”.
Saheeh International
Except, among them, Your chosen servants."
قَالَ فَالْحَقُّ ؗ وَالْحَقَّ اَقُوْلُ ۟ۚ
قَالَஅவன் கூறினான்فَالْحَقُّ ؗஎனவே உண்மையேوَ الْحَقَّமேலும் உண்மையையேاَقُوْلُۚநான் கூறுகிறேன்
கால Fபல்ஹக்க், வல்ஹக்க அகூல்
முஹம்மது ஜான்
(அதற்கு இறைவன்:) “அது உண்மை; உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு இறைவன், ‘‘நான் உண்மையே கூறுபவன். உண்மை என்னவென்றால்,
IFT
இறைவன் கூறினான்: “அவ்வாறாயின், உண்மை இதுதான்: உண்மையைத்தான் நான் கூறுகின்றேன்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “உண்மையே! இன்னும், நான் உண்மையையே கூறுகிறேன்” என்று (அல்லாஹ்) கூறினான்.
Saheeh International
[Allah] said, "The truth [is My oath], and the truth I say -
لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ اَجْمَعِیْنَ ۟
لَاَمْلَـَٔنَّநான் நிச்சயமாக நிரப்புவேன்جَهَنَّمَநரகத்தைمِنْكَஉன்னைக் கொண்டும்وَ مِمَّنْமேலும் எவர்تَبِعَكَஉன்னைப் பின்பற்றினார்களோمِنْهُمْஅவர்களில்اَجْمَعِیْنَஅனைவரையும்
ல அம்ல'அன்ன ஜஹன்னம மின்க வ மிம்மன் தBபி'அக மின்ஹும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்)
அப்துல் ஹமீது பாகவி
உன்னையும் உன்னைப் பின்பற்றிய அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்'' என்றான்.
IFT
உன்னைக் கொண்டும் மனிதர்களில் யார் யார் உன்னைப் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் அனைவரைக் கொண்டும் நான் நிச்சயம் நரகத்தை நிரப்புவேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதாவது) “நிச்சயமாக உன்னாலும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்களாலும் ஆகிய (உங்கள்) அனைவர்களாலும் நரகத்தைத் திண்ணமாக நான் நிரப்புவேன்” (என்றான்).
Saheeh International
[That] I will surely fill Hell with you and those of them that follow you all together."
قُلْ مَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ وَّمَاۤ اَنَا مِنَ الْمُتَكَلِّفِیْنَ ۟
قُلْகூறுவீராகمَاۤஇல்லைاَسْـَٔلُكُمْநான் உங்களிடம் கேட்கிறேன்عَلَیْهِஇதற்காகمِنْஎந்தاَجْرٍகூலியையும்وَّ مَاۤமேலும் இல்லைاَنَاநான்مِنَசேர்ந்தவன்الْمُتَكَلِّفِیْنَபுனைந்துரைப்பவர்கள்
குல் மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரி(ன்)வ் வ மா அன மினல் முதகல்லிFபீன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறும்: (“இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; அன்றியும், (இதை இட்டுக் கட்டி) சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) கூறுவீராக: (மனிதர்களே! இதை ஓதிக் காண்பிப்பதற்காக) நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. மேலும், (நீங்கள் சுமக்க முடியாத ஒரு சுமையை) நான் உங்கள் மீது சுமத்தவும் இல்லை. இவ்வேதத்தை நான் கற்பனையாக கட்டிக் கொள்ளவும் இல்லை.
IFT
(நபியே!) இவர்களிடம் நீர் கூறும்: “இந்த அழைப்புப் பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. மேலும், நான் போலிக்குணம் உடையவர்களில் உள்ளவனல்லன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) இ(வ்வேதத்தை ஓதிக் காண்பிப்ப)தற்காக உங்களிடத்தில் எவ்விதக் கூலியையும் நான் கேட்கவில்லை, (எதையும்) உண்டாக்கி (பொய்யாக)க் கூறுபவர்களில் நான் உள்ளவனுமல்லன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, [O Muhammad], "I do not ask you for it [i.e., the Qur’an] any payment, and I am not of the pretentious.
اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟
اِنْஇல்லைهُوَஇதுاِلَّاஅன்றிذِكْرٌநினைவூட்டல்لِّلْعٰلَمِیْنَஅகிலத்தாருக்கு
இன் ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
முஹம்மது ஜான்
“இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.”
அப்துல் ஹமீது பாகவி
உலகத்தார் அனைவருக்குமே இது ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
IFT
இது உலகமக்கள் அனைவருக்கும் நல்லுரையேயாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அகிலத்தார்க்கெல்லாம் இது நல்லுபதேசமே தவிர இல்லை.
Saheeh International
It is but a reminder to the worlds.
وَلَتَعْلَمُنَّ نَبَاَهٗ بَعْدَ حِیْنٍ ۟۠
وَ لَتَعْلَمُنَّநிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்نَبَاَهٗஅதன் செய்தியைبَعْدَபின்னர்حِیْنٍ۠சிறிது காலத்திற்கு
வ லதஃலமுன்ன னBப அஹூ Bபஃத ஹீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக சிறிது காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.
IFT
மேலும், சிறிது காலம் கழிவதற்குள்ளாக இதன் நிலைமை நிச்சயமாக உங்களுக்குத் தெரிந்துவிடும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, சிறிது காலத்திற்குப் பின், நீங்கள் இதன் (உண்மைச்) செய்தியைத் திட்டமாக அறிந்துகொள்வீர்கள்.
Saheeh International
And you will surely know [the truth of] its information after a time."