25. ஸூரத்துல் ஃபுர்ஃகான் (பிரித்தறிவித்தல்)

மக்கீ, வசனங்கள்: 77

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَبٰرَكَ الَّذِیْ نَزَّلَ الْفُرْقَانَ عَلٰی عَبْدِهٖ لِیَكُوْنَ لِلْعٰلَمِیْنَ نَذِیْرَا ۟ۙ
تَبٰـرَكَமிக்க அருள் நிறைந்தவன்الَّذِىْஎவன்نَزَّلَஇறக்கினான்الْـفُرْقَانَபகுத்தறிவிக்கும் வேதத்தைعَلٰى عَبْدِهٖதனது அடியார் மீதுلِيَكُوْنَஅவர் இருப்பதற்காகلِلْعٰلَمِيْنَஅகிலத்தார்களைنَذِيْرَا ۙ‏எச்சரிப்பவராக
தBபாரகல் லதீ னZஜ்Zஜலல் Fபுர்கான 'அலா 'அBப்திஹீ லி யகூன லில்'ஆலமீன னதீரா
உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.
لَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ یَتَّخِذْ وَلَدًا وَّلَمْ یَكُنْ لَّهٗ شَرِیْكٌ فِی الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَیْءٍ فَقَدَّرَهٗ تَقْدِیْرًا ۟
اۨلَّذِىْஎவன்لَهٗஅவனுக்கே உரியதுمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَلَمْ يَتَّخِذْஅவன் எடுத்துக் கொள்ளவில்லைوَلَدًاகுழந்தையைوَّلَمْ يَكُنْஇல்லைلَّهٗஅவனுக்குشَرِيْكٌஇணைفِى الْمُلْكِஆட்சியில்وَخَلَقَஇன்னும் அவன்படைத்தான்كُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்فَقَدَّرَهٗஅவற்றை நிர்ணயித்தான்تَقْدِيْرًا‏சீராக
அல்லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வ லம் யத்தகித் வலத(ன்)வ் வ லம் யகுல் லஹூ ஷரீகுன் Fபில்முல்கி வ கலக குல்ல ஷய்'இன் Fபகத்தரஹூ தக்தீரா
(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது; அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை; அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً لَّا یَخْلُقُوْنَ شَیْـًٔا وَّهُمْ یُخْلَقُوْنَ وَلَا یَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ ضَرًّا وَّلَا نَفْعًا وَّلَا یَمْلِكُوْنَ مَوْتًا وَّلَا حَیٰوةً وَّلَا نُشُوْرًا ۟
وَاتَّخَذُوْاஅவர்கள் எடுத்துக் கொண்டனர்مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاٰلِهَةًகடவுள்களைلَّا يَخْلُقُوْنَபடைக்க மாட்டார்கள்شَيْـٴًـــاஎதையும்وَّهُمْஅவர்கள்يُخْلَقُوْنَபடைக்கப்படுகிறார்கள்وَلَا يَمْلِكُوْنَஇன்னும் உரிமை பெற மாட்டார்கள்لِاَنْفُسِهِمْதங்களுக்குத் தாமேضَرًّاதீமை செய்வதற்கும்وَّلَا نَفْعًاநன்மை செய்வதற்கும்وَّلَا يَمْلِكُوْنَஇன்னும் உரிமை பெற மாட்டார்கள்مَوْتًاஇறப்பிற்கும்وَّلَا حَيٰوةًவாழ்விற்கும்وَّلَا نُشُوْرًا‏மீண்டும் உயிர்த்தெழ செய்வதற்கும்
வத்தகதூ மின் தூனிஹீ ஆலிஹதல் லா யக்லுகூன ஷய்'அ(ன்)வ் வ ஹும் யுக்லகூன வலா யம்லிகூன லி அன்Fபுஸிஹிம் ளர்ர(ன்)வ் வலா னFப்'அ(ன்)வ் வலா யம்லிகூன மவ்த(ன்)வ் வலா ஹயாத(ன்)வ் வலா னுஷூரா
(எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே படைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை செய்து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மரணிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اِفْكُ فْتَرٰىهُ وَاَعَانَهٗ عَلَیْهِ قَوْمٌ اٰخَرُوْنَ ۛۚ فَقَدْ جَآءُوْ ظُلْمًا وَّزُوْرًا ۟ۚۛ
وَقَالَகூறுகின்றனர்الَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரிப்பாளர்கள்اِنْ هٰذَاۤஇது இல்லைاِلَّاۤதவிரاِفْكٌஇட்டுக்கட்டப்பட்டதேاۨفْتَـرٰٮهُஇதை இட்டுக்கட்டினார்وَاَعَانَهٗஇன்னும் உதவினர்/இவருக்குعَلَيْهِஇதற்குقَوْمٌமக்கள்اٰخَرُوْنَ‌ ۛۚமற்றفَقَدْஆகவே, திட்டமாகجَآءُوْஇவர்கள் வந்தனர்ظُلْمًاஅநியாயத்திற்கும்وَّزُوْرًا ۛۚ‏பொய்யுக்கும்
வ காலல் லதீன கFபரூ இன் ஹாதா இல்லா இFப்குனிFப் தராஹு வ அ'ஆனஹூ 'அலய்ஹி கவ்முன் ஆகரூன Fபகத் ஜா'ஊ ளுல்ம(ன்)வ் வ Zஜூரா
“இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை; இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார்; இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்; ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.
وَقَالُوْۤا اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ اكْتَتَبَهَا فَهِیَ تُمْلٰی عَلَیْهِ بُكْرَةً وَّاَصِیْلًا ۟
وَقَالُوْۤاஇன்னும் கூறினர்اَسَاطِيْرُகதைகள்الْاَوَّلِيْنَமுன்னோரின்اكْتَتَبَهَاஅவர் எழுதிக் கொண்டார்/இவற்றைفَهِىَஇவைتُمْلٰىஎடுத்தியம்பப் படுகின்றனعَلَيْهِஅவர் மீதுبُكْرَةًகாலையிலும்وَّاَصِيْلًا‏இன்னும் மாலையிலும்
வ காலூ அஸாதீருல் அவ்வலீனக் ததBபஹா Fபஹிய தும்லா 'அலய்ஹி Bபுக்ரத(ன்)வ் வ அஸீலா
இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே; அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.”
قُلْ اَنْزَلَهُ الَّذِیْ یَعْلَمُ السِّرَّ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ اِنَّهٗ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟
قُلْகூறுவீராகاَنْزَلَهُஇதை இறக்கினான்الَّذِىْஎவன்يَعْلَمُஅறிகின்றான்السِّرَّஇரகசியத்தைفِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِ‌ؕபூமியிலும்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கிறான்غَفُوْرًاமகாமன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
குல் அன்Zஜல்ஹுல் லதீ யஃலமுஸ் ஸிர்ர Fபிஸ் ஸமாவாதி வல்-அர்ள்; இன்னஹூ கான கFபூரர் ரஹீமா
(நபியே!) “வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவீராக!
وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ یَاْكُلُ الطَّعَامَ وَیَمْشِیْ فِی الْاَسْوَاقِ ؕ لَوْلَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَلَكٌ فَیَكُوْنَ مَعَهٗ نَذِیْرًا ۟ۙ
وَقَالُوْاஅவர்கள் கூறுகின்றனர்مَالِஎன்ன!هٰذَاஇந்தالرَّسُوْلِதூதருக்குيَاْكُلُஇவர் சாப்பிடுகிறார்الطَّعَامَஉணவுوَيَمْشِىْஇன்னும் நடக்கிறார்فِى الْاَسْوَاقِ‌ ؕகடைத் தெருக்களில்لَوْلَاۤ اُنْزِلَஇறக்கப்பட்டு இருக்க வேண்டாமா?اِلَيْهِஇவர் மீதுمَلَكٌஒரு வானவர்فَيَكُوْنَஅவர் இருக்கிறார்مَعَهٗஇவருடன்نَذِيْرًا ۙ‏எச்சரிப்பவராக
வ காலூ மா லி ஹாதர் ரஸூலி ய'குலுத் த'ஆம வ யம்ஷீ Fபில் அஸ்வாக்; லவ் லா உன்Zஜில இலய்ஹி மலகுன் Fப யகூன ம'அஹூ னதீரா
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: “இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?”
اَوْ یُلْقٰۤی اِلَیْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ یَّاْكُلُ مِنْهَا ؕ وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا ۟
اَوْஅல்லதுيُلْقٰٓىஇறக்கப்பட வேண்டாமா!اِلَيْهِஇவருக்குكَنْزٌஒரு பொக்கிஷம்اَوْஅல்லதுتَكُوْنُஇருக்க வேண்டாமா!لَهٗஇவருக்குجَنَّةٌஒரு தோட்டம்يَّاْكُلُஇவர் புசிப்பாரே!مِنْهَا‌ ؕஅதிலிருந்துوَقَالَஇன்னும் கூறுகின்றனர்الظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்اِنْ تَتَّبِعُوْنَநீங்கள் பின்பற்றவில்லைاِلَّاதவிரرَجُلًاஒரு மனிதரைمَّسْحُوْرًا‏சூனியம் செய்யப்பட்ட
அவ் யுல்கா இலய்ஹி கன்Zஜுன் அவ் தகூனு லஹூ ஜன்னது(ன்)ய் ய'குலு மின்ஹா; வ காலள் ளாலிமூன இன் தத்தBபி'ஊன இல்லா ரஜுலன் மஸ் ஹூரா
“அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள்.
اُنْظُرْ كَیْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا یَسْتَطِیْعُوْنَ سَبِیْلًا ۟۠
اُنْظُرْபார்ப்பீராக!كَيْفَஎப்படிضَرَبُوْاஅவர்கள் விவரிக்கின்றனர்لَـكَஉமக்குالْاَمْثَالَதன்மைகளைفَضَلُّوْاஆகவே, அவர்கள் வழிகெட்டனர்فَلَا يَسْتَطِيْعُوْنَஅவர்கள் சக்தி பெறமாட்டார்கள்سَبِيْلاً‏ஒரு பாதைக்கு
உன்ளுர் கய்Fப ளரBபூ லகல் அம்தால Fபளல்லூ Fபலா யஸ்ததீ'ஊன ஸBபீலா
(நபியே! உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும்! அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.
تَبٰرَكَ الَّذِیْۤ اِنْ شَآءَ جَعَلَ لَكَ خَیْرًا مِّنْ ذٰلِكَ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ وَیَجْعَلْ لَّكَ قُصُوْرًا ۟
تَبٰـرَكَஅருள் நிறைந்தவன்الَّذِىْۤ اِنْ شَآءَஎவன்/அவன் நாடினால்جَعَلَஏற்படுத்துவான்لَكَஉமக்குخَيْرًاசிறந்ததைمِّنْ ذٰ لِكَஇவற்றை விடجَنّٰتٍசொர்க்கங்களைتَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றை சுற்றிالْاَنْهٰرُ ۙநதிகள்وَيَجْعَلْஇன்னும் ஏற்படுத்துவான்لَّكَஉமக்குقُصُوْرًا‏மாளிகைகளை
தBபாரகல் லதீ இன் ஷா'அ ஜ'அல லக கய்ரன் மின் தாலிக ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வ யஜ்'அல் லக குஸூரா
(நபியே! இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சுவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கியம் மிக்கவன்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் - இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.
بَلْ كَذَّبُوْا بِالسَّاعَةِ ۫ وَاَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِیْرًا ۟ۚ
بَلْமாறாகكَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தனர்بِالسَّاعَةِ‌உலக முடிவைوَاَعْتَدْنَاஇன்னும் தயார்படுத்தியுள்ளோம்لِمَنْ كَذَّبَபொய்ப்பிப்பவருக்குبِالسَّاعَةِஉலக முடிவைسَعِيْرًا‌ ۚ‏கொழுந்து விட்டெரியும் நெருப்பை
Bபல் கத்தBபூ Bபிஸ் ஸா'அதி வ அஃதத்னா லிமன் கத்தBப Bபிஸ் ஸா'அதி ஸ'ஈரா
எனினும் அவர்கள் (இறுதி விசாரணக்) காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; ஆனால் நாம் அந்தக்காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
اِذَا رَاَتْهُمْ مِّنْ مَّكَانٍ بَعِیْدٍ سَمِعُوْا لَهَا تَغَیُّظًا وَّزَفِیْرًا ۟
اِذَا رَاَتْهُمْபார்த்தால் / அவர்களை அதுمِّنْ مَّكَانٍۢஇடத்திலிருந்துبَعِيْدٍதூரமானسَمِعُوْاசெவிமடுப்பார்கள்لَهَاஅதனுடையتَغَيُّظًاசப்தத்தையும்وَّزَفِيْرًا‏இரைச்சலையும்
இதா ர'அத் ஹும் மின் மகானின் Bப'ஈதின் ஸமி'ஊ லஹா தகய்யுள(ன்)வ் வ ZஜFபீரா
(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.
وَاِذَاۤ اُلْقُوْا مِنْهَا مَكَانًا ضَیِّقًا مُّقَرَّنِیْنَ دَعَوْا هُنَالِكَ ثُبُوْرًا ۟ؕ
وَاِذَاۤ اُلْقُوْاஅவர்கள் போடப்பட்டால்مِنْهَاஅதில்مَكَانًـاஇடத்தில்ضَيِّقًاநெருக்கமானمُّقَرَّنِيْنَகட்டப்பட்டவர்களாகدَعَوْاஅழைப்பார்கள்هُنَالِكَஅங்குثُبُوْرًا ؕ‏கைசேதமே என்று
வ இதா உல்கூ மின்ஹா மகானன் ளய்யிகம் முகர் ரனீன த'அவ் ஹுனாலிக துBபூரா
மேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.
لَا تَدْعُوا الْیَوْمَ ثُبُوْرًا وَّاحِدًا وَّادْعُوْا ثُبُوْرًا كَثِیْرًا ۟
لَا تَدْعُواஅழைக்காதீர்கள்الْيَوْمَஇன்றுثُبُوْرًاகைசேதமே என்றுوَّاحِدًاஒரு முறைوَّادْعُوْاஅழையுங்கள்ثُبُوْرًاகைசேதமே என்றுكَثِيْرًا‏பல முறை
லா தத்'உல் யவ்ம துBபூர(ன்)வ் வாஹித(ன்)வ் வத்'ஊ துBபூரன் கதீரா
“இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).
قُلْ اَذٰلِكَ خَیْرٌ اَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ كَانَتْ لَهُمْ جَزَآءً وَّمَصِیْرًا ۟
قُلْநீர் கேட்பீராக!اَذٰ لِكَஅது?خَيْرٌசிறந்ததாاَمْஅல்லதுجَنَّةُ الْخُـلْدِஜன்னதுல் குல்துالَّتِىْஎதுوُعِدَவாக்களிக்கப்பட்டனர்الْمُتَّقُوْنَ ؕஇறையச்சமுள்ளவர்கள்كَانَتْஅது இருக்கும்لَهُمْஅவர்களுக்குجَزَآءًகூலியாகவும்وَّمَصِيْرًا‏மீளுமிடமாகவும்
குல் அதாலிக கய்ருன் அம் ஜன்னதுல் குல்தில் லதீ வு'இதல் முத்தகூன்; கானத் லஹும் ஜZஜா'அ(ன்)வ் வ மஸீரா
அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறும்.
لَهُمْ فِیْهَا مَا یَشَآءُوْنَ خٰلِدِیْنَ ؕ كَانَ عَلٰی رَبِّكَ وَعْدًا مَّسْـُٔوْلًا ۟
لَّهُمْஅவர்களுக்குفِيْهَاஅதில்مَاஅவர்கள் நாடுவார்கள்يَشَآءُوْنَஎதுخٰلِدِيْنَ‌ ؕநிரந்தரமாக இருப்பார்கள்كَانَஇருக்கிறதுعَلٰىமீதுرَبِّكَஉமது இறைவன்وَعْدًاவாக்காகمَّسْــــٴُـوْلًا‏வேண்டப்பட்ட
லஹும் Fபீஹா மா யஷா'ஊன காலிதீன்; கான 'அலா ரBப்Bபிக வஃதன் மஸ்'ஊலா
“அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.”
وَیَوْمَ یَحْشُرُهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَیَقُوْلُ ءَاَنْتُمْ اَضْلَلْتُمْ عِبَادِیْ هٰۤؤُلَآءِ اَمْ هُمْ ضَلُّوا السَّبِیْلَ ۟ؕ
وَيَوْمَநாளின்போதுيَحْشُرُஅவன் எழுப்புவான்هُمْஅவர்களையும்وَمَا يَعْبُدُوْنَஅவர்கள் வணங்கியவர்களையும்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிفَيَقُوْلُகேட்பான்ءَاَنْـتُمْ اَضْلَلْـتُمْநீங்கள் வழிகெடுத்தீர்களா?عِبَادِىْஎனது அடியார்களைهٰٓؤُلَاۤءِநீங்கள்தான்اَمْஅல்லதுهُمْஅவர்கள்ضَلُّواதாமாகதவறவிட்டனராالسَّبِيْلَ ؕ‏பாதையை
வ யவ்ம யஹ்ஷுருஹும் வமா யஃBபுதூன மின் தூனில் லாஹி Fப யகூலு 'அ-அன்தும் அள்லல்தும் 'இBபாதீ ஹா'உலா'இ அம் ஹும் ளல்லுஸ் ஸBபீல்
அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) “என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?” என்று (இறைவன்) கேட்பான்.
قَالُوْا سُبْحٰنَكَ مَا كَانَ یَنْۢبَغِیْ لَنَاۤ اَنْ نَّتَّخِذَ مِنْ دُوْنِكَ مِنْ اَوْلِیَآءَ وَلٰكِنْ مَّتَّعْتَهُمْ وَاٰبَآءَهُمْ حَتّٰی نَسُوا الذِّكْرَ ۚ وَكَانُوْا قَوْمًا بُوْرًا ۟
قَالُوْاஅவர்கள் கூறுவர்سُبْحٰنَكَநீ மிகப் பரிசுத்தமானவன்مَا كَانَஇல்லைيَنْۢبَغِىْதகுதியானதாகلَنَاۤஎங்களுக்குاَنْ نَّـتَّخِذَஎடுத்துக் கொள்வதுمِنْ دُوْنِكَஉன்னை அன்றிمِنْ اَوْلِيَآءَபாதுகாவலர்களைوَ لٰـكِنْஎனினும்مَّتَّعْتَهُمْநீ அவர்களுக்கு சுகமளித்தாய்وَاٰبَآءَமூதாதைகளுக்கும்هُمْஅவர்களுடையحَتّٰىஇறுதியாகنَسُواஅவர்கள் மறந்தனர்الذِّكْرَ‌ۚஅறிவுரையைوَكَانُوْاஇன்னும் ஆகிவிட்டனர்قَوْمًۢاமக்களாகبُوْرًا‏அழிந்து போகும்
காலூ ஸுBப்ஹானக மா கான யன்Bபகீ லனா அன் னத்தகித மின் தூனிக மின் அவ்லியா'அ வ லாகின் மத்தஃதஹும் வ ஆBபா'அஹும் ஹத்தா னஸூத் திக்ர வ கானூ கவ்மன் Bபூரா
(அதற்கு) அவர்கள் “இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்” என்று கூறுவர்.
فَقَدْ كَذَّبُوْكُمْ بِمَا تَقُوْلُوْنَ ۙ فَمَا تَسْتَطِیْعُوْنَ صَرْفًا وَّلَا نَصْرًا ۚ وَمَنْ یَّظْلِمْ مِّنْكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِیْرًا ۟
فَقَدْஆகவே, திட்டமாகكَذَّبُوْபொய்ப்பித்துவிட்டனர்كُمْஉங்களைبِمَا تَقُوْلُوْنَۙநீங்கள் கூறியதில்فَمَا تَسْتَطِيْعُوْنَஆகவே, நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்صَرْفًاதிருப்பி விடுவதற்கோوَّلَا نَـصْرًا‌ۚஉதவுவதற்கோوَمَنْயார்يَّظْلِمْஅநீதி இழைத்துக் கொண்டாரோمِّنْكُمْஉங்களில்نُذِقْهُஅவருக்கு சுவைக்க வைப்போம்عَذَابًاதண்டனையைكَبِيْرًا‏பெரிய
Fபகத் கத்தBபூகும் Bபிமா தகூலூன Fபமா தஸ்ததீ'ஊன ஸர்Fப(ன்)வ் வலா னஸ்ரா; வ ம(ன்)ய் யள்லிம் மின்கும் னுதிக்ஹு 'அதாBபன் கBபீரா
நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர்; ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொள்ளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சுவைக்கச்செய்வோம்” (என்று இறைவன் கூறுவான்).
وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِیْنَ اِلَّاۤ اِنَّهُمْ لَیَاْكُلُوْنَ الطَّعَامَ وَیَمْشُوْنَ فِی الْاَسْوَاقِ ؕ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً ؕ اَتَصْبِرُوْنَ ۚ وَكَانَ رَبُّكَ بَصِیْرًا ۟۠
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைقَبْلَكَஉமக்கு முன்னர்مِنَ الْمُرْسَلِيْنَதூதர்களில் எவரையும்اِلَّاۤதவிரاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَيَاْكُلُوْنَஉண்பவர்களாகالطَّعَامَஉணவுوَيَمْشُوْنَஇன்னும் நடந்து செல்பவர்களாகفِى الْاَسْوَاقِ‌ ؕகடைத் தெருக்களில்وَجَعَلْنَاஆக்கினோம்بَعْضَكُمْஉங்களில் சிலரைلِبَعْضٍசிலருக்குفِتْنَةً  ؕசோதனையாகاَتَصْبِرُوْنَ‌ۚநீங்கள் பொறுப்பீர்களா?وَكَانَஇருக்கிறான்رَبُّكَஉமது இறைவன்بَصِيْرًا‏உற்று நோக்குபவனாக
வ மா அர்ஸல்னா கBப்லக மினல் முர்ஸலீன இல்லா இன்னஹும் ல ய'குலூனத் த'ஆம வ யம்ஷூன Fபில் அஸ்வாக்; வ ஜ'அல்னா Bபஃளகும் லிBபஃளின் Fபித்னதன் அதஸ்Bபிரூன்; வ கான ரBப்Bபுக Bபஸீரா
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும் தாம் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் - ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
وَقَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْنَا الْمَلٰٓىِٕكَةُ اَوْ نَرٰی رَبَّنَا ؕ لَقَدِ اسْتَكْبَرُوْا فِیْۤ اَنْفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّا كَبِیْرًا ۟
وَقَالَகூறினார்(கள்)الَّذِيْنَ لَا يَرْجُوْنَஆதரவு வைக்காதவர்கள்لِقَآءَنَاநம் சந்திப்பைلَوْلَاۤ اُنْزِلَஇறக்கப்பட வேண்டாமா?عَلَيْنَاஎங்கள் மீதுالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்اَوْஅல்லதுنَرٰىநாங்கள் பார்க்க வேண்டாமா?رَبَّنَا ؕஎங்கள் இறைவனைلَـقَدِதிட்டவட்டமாகاسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமை அடித்தனர்فِىْۤ اَنْفُسِهِمْதங்களுக்குள்وَعَتَوْ عُتُوًّاஇன்னும் கடுமையாக அழிச்சாட்டியம் செய்தனர்كَبِيْرًا‏மிகப்பெரிய அளவில்
வ காலல் லதீன லா யர்ஜூன லிகா'அனா லவ் லா உன்Zஜில 'அலய்னல் மலா'இகது அவ்னரா ரBப்Bபனா; லகதிஸ்தக்Bபரூ Fபீ அன்Fபுஸிஹிம் வ 'அதவ் 'உதுவ்வன் கBபீரா
மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்: “எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை? அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை?” என்று கூறுகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்.
یَوْمَ یَرَوْنَ الْمَلٰٓىِٕكَةَ لَا بُشْرٰی یَوْمَىِٕذٍ لِّلْمُجْرِمِیْنَ وَیَقُوْلُوْنَ حِجْرًا مَّحْجُوْرًا ۟
يَوْمَநாளில்يَرَوْنَஅவர்கள் பார்ப்பார்கள்الْمَلٰٓٮِٕكَةَவானவர்களைلَاஅறவே இல்லைبُشْرٰىநற்செய்திيَوْمَٮِٕذٍஇந்நாளில்لِّـلْمُجْرِمِيْنَகுற்றவாளிகளுக்குوَ يَقُوْلُوْنَஇன்னும் கூறுவார்கள்حِجْرًاஉங்களுக்கு தடுக்கப்பட்டு விட்டதுمَّحْجُوْرًا‏முற்றிலும்
யவ்ம யரவ்னல் மலா 'இகத லா Bபுஷ்ரா யவ்மய்தின் லில் முஜ்ரிமீன வ யகூலூன ஹிஜ்ரன் மஹ்ஜூரா
அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது; (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.
وَقَدِمْنَاۤ اِلٰی مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا ۟
وَقَدِمْنَاۤநாம் நாடுவோம்اِلٰى مَا عَمِلُوْاஅவர்கள் செய்ததைمِنْ عَمَلٍசெயல்களில்فَجَعَلْنٰهُபிறகு அதை ஆக்கிவிடுவோம்هَبَآءًபுழுதியாகمَّنْثُوْرًا‏பரத்தப்பட்ட
வ கதிம்னா இலா மா 'அமிலூ மின் 'அமலின் Fபஜ'அல்னாஹுஹBபா'அன் மன்தூரா
இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.
اَصْحٰبُ الْجَنَّةِ یَوْمَىِٕذٍ خَیْرٌ مُّسْتَقَرًّا وَّاَحْسَنُ مَقِیْلًا ۟
اَصْحٰبُ الْجَنَّةِசொர்க்கவாசிகள்يَوْمَٮِٕذٍஅந்நாளில்خَيْرٌசிறந்தவர்கள்مُّسْتَقَرًّاதங்குமிடத்தால்وَّاَحْسَنُஇன்னும் மிக சிறப்பானவர்கள்مَقِيْلًا‏ஓய்வெடுக்கும் இடத்தால்
அஸ் ஹாBபுல் ஜன்னதி யவ்ம'இதின் கய்ருன் முஸ்தகர் ர(ன்)வ் வ அஹ்ஸனு மகீலா
அந்நாளில் சுவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாகவும், சுகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.
وَیَوْمَ تَشَقَّقُ السَّمَآءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلٰٓىِٕكَةُ تَنْزِیْلًا ۟
وَيَوْمَநாளில்تَشَقَّقُபிளந்துவிடும்السَّمَآءُவானம்بِالْـغَمَامِவெள்ளை மேகத்தைக் கொண்டுوَنُزِّلَஇன்னும் இறக்கப்படும் (நாளில்)الْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்تَنْزِيْلًا‏இறங்குதல்
வ யவ்ம தஷக்ககுஸ் ஸமா'உ Bபில்கமாமி வ னுZஜ்Zஜிலல் மலா'இகது தன்Zஜீலா
இன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்.
اَلْمُلْكُ یَوْمَىِٕذِ لْحَقُّ لِلرَّحْمٰنِ ؕ وَكَانَ یَوْمًا عَلَی الْكٰفِرِیْنَ عَسِیْرًا ۟
اَلْمُلْكُஆட்சிيَوْمَٮِٕذِஅந்நாளில்اۨلْحَـقُّஉண்மையானلِلرَّحْمٰنِ‌ؕரஹ்மானிற்கேوَكَانَஇருக்கும்يَوْمًاநாளாகعَلَى الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குعَسِيْرًا‏மிக சிரமமான
அல்முல்கு யவ்ம'இதினில் ஹக்கு லிர் ரஹ்மான்; வ கான யவ்மன்'அலல் காFபிரீன 'அஸீரா
அந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான்; மேலும் காஃபிர்களுக்கு கடுமையான நாளாகவும் இருக்கும்.
وَیَوْمَ یَعَضُّ الظَّالِمُ عَلٰی یَدَیْهِ یَقُوْلُ یٰلَیْتَنِی اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِیْلًا ۟
وَيَوْمَஅந்நாளில்يَعَضُّகடிப்பான்الظَّالِمُஅநியாயக்காரன்عَلٰى يَدَيْهِதனது இரு கரங்களையும்يَقُوْلُகூறுவான்يٰلَيْتَنِى اتَّخَذْتُநான் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே!مَعَ الرَّسُوْلِதூதருடன்سَبِيْلًا‏ஒரு வழியை
வ யவ்ம ய'அள்ளுள் ளாலிமு 'அலா யதய்ஹி யகூலு யா லய்தனித் தகத்து ம'அர் ரஸூலி ஸBபீலா
அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு: “அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?” எனக் கூறுவான்.
یٰوَیْلَتٰی لَیْتَنِیْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِیْلًا ۟
يٰوَيْلَتٰىஎன் நாசமே!لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْநான் எடுத்திருக்கக் கூடாதே!فُلَانًاஇன்னவனைخَلِيْلًا‏நண்பனாக
யா வய்லதா லய்தனீ லம் அத்தகித் Fபுலானன் கலீலா
“எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?”
لَقَدْ اَضَلَّنِیْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِیْ ؕ وَكَانَ الشَّیْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا ۟
لَقَدْதிட்டவட்டமாகاَضَلَّنِىْஎன்னை வழிகெடுத்து விட்டான்عَنِ الذِّكْرِஅறிவுரையிலிருந்துبَعْدَபின்னர்اِذْ جَآءَنِىْ‌ ؕஅது என்னிடம் வந்தوَكَانَஇருக்கிறான்الشَّيْطٰنُஷைத்தான்لِلْاِنْسَانِமனிதனைخَذُوْلًا‏கைவிடுபவனாக
லகத் அளல்லனீ 'அனித் திக்ரி Bபஃத இத் ஜா'அனீ; வ கானஷ் ஷய்தானு லில் இன்ஸானி கதூலா
“நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே! மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்!” (என்று புலம்புவான்.)
وَقَالَ الرَّسُوْلُ یٰرَبِّ اِنَّ قَوْمِی اتَّخَذُوْا هٰذَا الْقُرْاٰنَ مَهْجُوْرًا ۟
وَقَالَகூறுவார்الرَّسُوْلُதூதர்يٰرَبِّஎன் இறைவா!اِنَّநிச்சயமாகقَوْمِىஎனது மக்கள்اتَّخَذُوْاஎடுத்துக் கொண்டனர்هٰذَا الْقُرْاٰنَஇந்த குர்ஆனைمَهْجُوْرًا‏புறக்கணிக்கப் பட்டதாக
வ காலர் ரஸூலு யா ரBப்Bபி இன்ன கவ்மித் தகதூ ஹாதல் குர்'ஆன மஹ்ஜூரா
“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்.
وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِیٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِیْنَ ؕ وَكَفٰی بِرَبِّكَ هَادِیًا وَّنَصِیْرًا ۟
وَكَذٰلِكَஇவ்வாறுதான்جَعَلْنَاநாம் ஆக்கினோம்لِكُلِّஒவ்வொருنَبِىٍّநபிக்கும்عَدُوًّاஎதிரிகளைمِّنَ الْمُجْرِمِيْنَ‌ؕகுற்றவாளிகளில்وَكَفٰىபோதுமானவன்بِرَبِّكَஉமது இறைவன்هَادِيًاநேர்வழி காட்டுபவனாகوَّنَصِيْرًا‏இன்னும் உதவுபவனாக
வ கதாலிக ஜ'அல்னா லிகுல்லி னBபிய்யின் 'அதுவ்வன் மினல் முஜ்ரிமீன்; வ கFபா Bபி ரBப்Bபிக ஹாதிய(ன்)வ் வ னஸீரா
மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَا نُزِّلَ عَلَیْهِ الْقُرْاٰنُ جُمْلَةً وَّاحِدَةً ۛۚ كَذٰلِكَ ۛۚ لِنُثَبِّتَ بِهٖ فُؤَادَكَ وَرَتَّلْنٰهُ تَرْتِیْلًا ۟
وَقَالَகூறினர்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்لَوْلَا نُزِّلَஇறக்கப்பட வேண்டாமா!عَلَيْهِஇவர் மீதுالْـقُرْاٰنُஇந்த குர்ஆன்جُمْلَةًஒட்டு மொத்தமாகوَّاحِدَةً‌  ۛۚஒரே தடவையில்كَذٰلِكَ ۛۚஇவ்வாறுதான்لِنُثَبِّتَஉறுதிப்படுத்துவதற்காகبِهٖஅதன் மூலம்فُـؤَادَكَ‌உமது உள்ளத்தைوَرَتَّلْنٰهُஇன்னும் இதை கற்பித்தோம்.تَرْتِيْلًا‏சிறிது சிறிதாக
வ காலல் லதீன கFபரூ லவ் லா னுZஜ்Zஜில 'அலய்ஹில் குர்'ஆனு ஜும்லத(ன்)வ் வாஹிதஹ்; கதாலிக லினுதBப்Bபித Bபிஹீ Fபு'ஆதக வ ரத்தல்னாஹு தர்தீலா
இன்னும்: “இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?” என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.
وَلَا یَاْتُوْنَكَ بِمَثَلٍ اِلَّا جِئْنٰكَ بِالْحَقِّ وَاَحْسَنَ تَفْسِیْرًا ۟ؕ
وَلَا يَاْتُوْنَكَஅவர்கள் உம்மிடம் கூறமாட்டார்கள்بِمَثَلٍஎந்த ஒரு தன்மையையும்اِلَّاதவிரجِئْنٰكَஉமக்கு நாம் கூறியேبِالْحَـقِّசத்தியத்தையும்وَاَحْسَنَஇன்னும் மிக அழகானتَفْسِيْرًا ؕ‏விளக்கத்தை(யும்)
வ லா ய'தூனக Bபி மதலின் இல்லா ஜி'னாக Bபில்ஹக்கி வ அஹ்ஸன தFப்ஸீரா
அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும், (அதை விடவும்) உண்மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.
اَلَّذِیْنَ یُحْشَرُوْنَ عَلٰی وُجُوْهِهِمْ اِلٰی جَهَنَّمَ ۙ اُولٰٓىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ سَبِیْلًا ۟۠
اَلَّذِيْنَஎவர்கள்يُحْشَرُوْنَஎழுப்பப்படுகிறார்களோعَلٰىமீதுوُجُوْهِهِمْதங்கள் முகங்களின்اِلٰىபக்கம்جَهَـنَّمَۙநரகத்தின்اُولٰٓٮِٕكَஅவர்கள்தான்شَرٌّமிக கெட்டவர்கள்مَّكَانًاதங்குமிடத்தால்وَّاَضَلُّஇன்னும் மிக வழிதவறியவர்கள்سَبِيْلًا‏பாதையால்
அல்லதீன யுஹ்ஷரூன 'அலா வுஜூஹிஹிம் இலா ஜஹன்னம உலா'இக ஷர்ருன் மகான(ன்)வ் வ அளல்லு ஸBபீலா
எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் பெரிதும் வழி கெட்டவர்கள்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗۤ اَخَاهُ هٰرُوْنَ وَزِیْرًا ۟ۚۖ
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاகொடுத்தோம்مُوْسَىமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைوَجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்مَعَهٗۤஅவருடன்اَخَاهُஅவரது சகோதரர்هٰرُوْنَஹாரூனைوَزِيْرًا‌ ۖ‌ ۚ‏உதவியாளராக
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப வ ஜ'அல்னா ம'அஹூ அகாஹு ஹாரூன வZஜீரா
மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடைய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.
فَقُلْنَا اذْهَبَاۤ اِلَی الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ فَدَمَّرْنٰهُمْ تَدْمِیْرًا ۟ؕ
فَقُلْنَاநாம் கூறினோம்اذْهَبَاۤநீங்கள் இருவரும் செல்லுங்கள்اِلَى الْقَوْمِமக்களிடம்الَّذِيْنَ كَذَّبُوْاபொய்ப்பித்தவர்கள்بِاٰيٰتِنَاؕநமது அத்தாட்சிகளைفَدَمَّرْنٰهُمْஆகவே நாம் அவர்களை அழித்து விட்டோம்تَدْمِيْرًاؕ‏முற்றிலும் தரை மட்டமாக
Fபகுல்னத் ஹBபா இலல் கவ்மில் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா Fபதம்மர்னாஹும் தத்மீரா
ஆகவே நாம், “நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள்” என்று கூறினோம். பின்னர், அ(வ்வாறு பொய்ப்பித்த)வர்களை முற்றும் அழித்தோம்.
وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰیَةً ؕ وَاَعْتَدْنَا لِلظّٰلِمِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟ۚۖ
وَقَوْمَஇன்னும் மக்களையும்نُوْحٍநூஹூடையلَّمَّاபோதுكَذَّبُواஅவர்கள் பொய்ப்பித்தனர்الرُّسُلَதூதர்களைاَغْرَقْنٰهُمْஅவர்களை மூழ்கடித்தோம்وَجَعَلْنٰهُمْஅவர்களை ஆக்கினோம்لِلنَّاسِமக்களுக்குاٰيَةً  ؕஓர் அத்தாட்சியாகوَاَعْتَدْنَاஇன்னும் நாம் தயார் படுத்தியுள்ளோம்لِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குعَذَابًاதண்டனையைاَ لِيْمًا ۖ‌ ۚ‏வலி தரும்
வ கவ்ம னூஹின் லம்மா கத்தBபுர் ருஸுல அக்ரக்னாஹும் வ ஜ'அல்னாஹும் லின்னாஸி ஆயத(ன்)வ் வ அஃதத்னா லிள்ளாலிமீன 'அதாBபன் அலீமா
இன்னும்: நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.
وَّعَادًا وَّثَمُوْدَاۡ وَاَصْحٰبَ الرَّسِّ وَقُرُوْنًا بَیْنَ ذٰلِكَ كَثِیْرًا ۟
وَّعَادًاஆதுوَّثَمُوْدَا۟ஸமூதுوَ اَصْحٰبَ الرَّسِّகிணறு வாசிகள்وَقُرُوْنًۢاஇன்னும் பல தலைமுறையினரைبَيْنَ ذٰ لِكَஇவர்களுக்கிடையில்كَثِيْرًا‏பல
வ 'ஆத(ன்)வ் வ தமூத வ அஸ் ஹாBபர் ரஸ்ஸி வ குரூனன் Bபய்ன தாலிக கதீரா
இன்னும் “ஆது” “ஸமூது” (கூட்டத்தாரையும்), ரஸ் (கிணறு) வாசிகளையும், இவர்களுக்கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்).
وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْاَمْثَالَ ؗ وَكُلًّا تَبَّرْنَا تَتْبِیْرًا ۟
وَكُلًّاஎல்லோருக்கும்ضَرَبْنَاநாம் விவரித்தோம்لَهُஅவர்களுக்குالْاَمْثَالَ‌பல உதாரணங்களைوَكُلًّاஎல்லோரையும்تَبَّـرْنَاநாம் அழித்துவிட்டோம்تَـتْبِيْرًا‏அடியோடு
வ குல்லன் ளரBப்னா லஹுல் அம்தால வ குல்லன் தBப்Bபர்னா தத்Bபீரா
அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தெளிவான சான்றுகளை தெளிவுபடுத்தினோம். மேலும் (அவர்கள் அவைகளை நிராகரித்ததினால்) அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்.
وَلَقَدْ اَتَوْا عَلَی الْقَرْیَةِ الَّتِیْۤ اُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ ؕ اَفَلَمْ یَكُوْنُوْا یَرَوْنَهَا ۚ بَلْ كَانُوْا لَا یَرْجُوْنَ نُشُوْرًا ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَتَوْاஅவர்கள் வந்திருக்கின்றனர்عَلَىஅருகில்الْقَرْيَةِஊரின்الَّتِىْۤ اُمْطِرَتْபொழியப்பட்டதுمَطَرَமழைالسَّوْءِ‌ ؕமிக மோசமானاَفَلَمْ يَكُوْنُوْا يَرَوْنَهَا ۚஅதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா?بَلْமாறாகكَانُوْاஇருந்தனர்لَا يَرْجُوْنَஅவர்கள் ஆதரவு வைக்காதவர்களாகنُشُوْرًا‏எழுப்பப்படுவதை
வ லகத் அதவ் 'அலல் கர்யதில் லதீ உம்திரத் மதரஸ் ஸவ்'; அFபலம் யகூனூ யரவ்னஹா; Bபல் கானூ லா யர்ஜூன னுஷூரா
இன்னும்: நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை.
وَاِذَا رَاَوْكَ اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ اَهٰذَا الَّذِیْ بَعَثَ اللّٰهُ رَسُوْلًا ۟
وَاِذَا رَاَوْكَஅவர்கள் உம்மைப் பார்த்தால்اِنْ يَّتَّخِذُوْنَكَஉம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்اِلَّاதவிரهُزُوًا ؕகேலியாகவேاَهٰذَاஇவரையா?الَّذِىْஎவர்بَعَثَஅனுப்பினான்اللّٰهُஅல்லாஹ்رَسُوْلًا‏தூதராக
வ இதா ர அவ்க இ(ன்)ய் யத்தகிதூனக இல்லா ஹுZஜுவன் அஹாதல் லதீ Bப'அதல் லாஹு ரஸூலா
“இவரைத்தானா அல்லாஹ் தூதராக அனுப்பியிருக்கிறான்” (என்று கூறி) உம்மை அவர்கள் காணும் பொழுது உம்மைக் கேலிக்குரியவராக அவர்கள் கருதுகின்றனர்.
اِنْ كَادَ لَیُضِلُّنَا عَنْ اٰلِهَتِنَا لَوْلَاۤ اَنْ صَبَرْنَا عَلَیْهَا ؕ وَسَوْفَ یَعْلَمُوْنَ حِیْنَ یَرَوْنَ الْعَذَابَ مَنْ اَضَلُّ سَبِیْلًا ۟
اِنْ كَادَ لَيُضِلُّنَاஇவர் நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார்عَنْ اٰلِهَـتِنَاநமது தெய்வங்களை விட்டுلَوْ لَاۤ اَنْ صَبَـرْنَاநாம் உறுதியாக இருந்திருக்க வில்லையென்றால்عَلَيْهَا‌ ؕஅவற்றின் மீதுوَسَوْفَ يَعْلَمُوْنَஅவர்கள் அறிந்து கொள்வார்கள்حِيْنَபோதுيَرَوْنَஅவர்கள் பார்க்கும்الْعَذَابَதண்டனையைمَنْயார்اَضَلُّமிக வழிகெட்டவர்سَبِيْلًا‏பாதையால்
இன் காத ல யுளில்லுனா 'அன் ஆலிஹதினா லவ் லா அன் ஸBபர்னா 'அலய்ஹா; வ ஸவ்Fப யஃலமூன ஹீன யரவ்னல் 'அதாBப மன் அளல்லு ஸBபீலா
“நாம் (நம் தெய்வங்களின் மீது) உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார்” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்; (மறுமையின்) வேதனையை அவர்கள் காணும்பொழுது, பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.
اَرَءَیْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ ؕ اَفَاَنْتَ تَكُوْنُ عَلَیْهِ وَكِیْلًا ۟ۙ
اَرَءَيْتَநீர் பார்த்தீரா?مَنِ اتَّخَذَஎடுத்துக் கொண்டவனைاِلٰهَهٗதனது கடவுளாகهَوٰٮهُ ؕதனது மன இச்சையைاَفَاَنْتَநீர்?تَكُوْنُஆகுவீராعَلَيْهِஅவனுக்குوَكِيْلًا ۙ‏பொறுப்பாளராக
அர'அய்த மனித் தகத இலாஹஹூ ஹவாஹு அFப அன்த தகூனு 'அலய்ஹி வகீலா
தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?
اَمْ تَحْسَبُ اَنَّ اَكْثَرَهُمْ یَسْمَعُوْنَ اَوْ یَعْقِلُوْنَ ؕ اِنْ هُمْ اِلَّا كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ سَبِیْلًا ۟۠
اَمْஅல்லதுتَحْسَبُநீர் எண்ணுகிறீரா?اَنَّஎன்றுاَكْثَرَஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்يَسْمَعُوْنَசெவிமடுப்பார்கள்اَوْஅல்லதுيَعْقِلُوْنَ‌ ؕசிந்தித்து புரிவார்கள்اِنْ هُمْஅவர்கள் இல்லைاِلَّاதவிரكَالْاَنْعَامِ‌கால்நடைகளைப் போன்றேبَلْமாறாகهُمْஅவர்கள்اَضَلُّவழிகெட்டவர்கள்سَبِيْلًا‏பாதையால்
அம் தஹ்ஸBபு அன்ன அக்தரஹும் யஸ்ம'ஊன அவ் யஃகிலூன்; இன் ஹும் இல்லா கல் அன்'ஆமி Bபல் ஹும் அளல்லு ஸBபீலா
அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை-அல்ல; (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள்.  
اَلَمْ تَرَ اِلٰی رَبِّكَ كَیْفَ مَدَّ الظِّلَّ ۚ وَلَوْ شَآءَ لَجَعَلَهٗ سَاكِنًا ۚ ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَیْهِ دَلِیْلًا ۟ۙ
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اِلٰىபக்கம்رَبِّكَஉமது இறைவன்كَيْفَஎப்படிمَدَّநீட்டுகிறான்الظِّلَّ‌ ۚநிழலைوَلَوْ شَآءَஅவன் நாடியிருந்தால்لَجَـعَلَهٗஅதை ஆக்கியிருப்பான்سَاكِنًا‌ ۚநிரந்தரமாகثُمَّபிறகுجَعَلْنَاநாம் ஆக்கினோம்الشَّمْسَசூரியனைعَلَيْهِஅதன் மீதுدَلِيْلًا ۙ‏ஆதாரமாக
அலம் தர இலா ரBப்Bபிக கய்Fப மத்தள் ளில்ல வ லவ் ஷா'அ ல ஜ'அலஹூ ஸாகினன் தும்ம ஜ'அல்னஷ் ஷம்ஸ 'அலய்ஹி தலீலா
(நபியே!) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே!) பின்னர் சூரியனை - நாம் தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.
ثُمَّ قَبَضْنٰهُ اِلَیْنَا قَبْضًا یَّسِیْرًا ۟
ثُمَّபிறகுقَبَضْنٰهُஅதை கைப்பற்றி விடுகிறோம்اِلَـيْنَاநம் பக்கம்قَبْضًاகைப்பற்றுதல்يَّسِيْرًا‏மறைவாக
தும்ம கBபள்னாஹு இலய்னா கBப்ள(ன்)ய் யஸீரா
பிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.
وَهُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்جَعَلَஆக்கினான்لَـكُمُஉங்களுக்குالَّيْلَஇரவைلِبَاسًاஓர் ஆடையாகவும்وَّالنَّوْمَஇன்னும் தூக்கத்தைسُبَاتًاஓய்வாகவும்وَّجَعَلَஇன்னும் ஆக்கினான்النَّهَارَபகலைنُشُوْرًا‏விழிப்பதற்கும்
வ ஹுவல் லதீ ஜ'அல லகுமுல் லய்ல லிBபாஸ(ன்)வ் வன்னவ்ம ஸுBபாத(ன்)வ் வ ஜ'அலன் னஹார னுஷூரா
அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.
وَهُوَ الَّذِیْۤ اَرْسَلَ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۟ۙ
وَهُوَ الَّذِىْۤஅவன்தான்اَرْسَلَஅனுப்புகிறான்الرِّيٰحَகாற்றுகளைبُشْرًۢاநற்செய்தி கூறக்கூடியதாகبَيْنَ يَدَىْமுன்பாகرَحْمَتِهٖ‌ۚதன் அருளுக்குوَاَنْزَلْنَاஇன்னும் நாம் இறக்குகிறோம்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمَآءًமழை நீரைطَهُوْرًا ۙ‏பரிசுத்தமான
வ ஹுவல் லதீ அர்ஸலர் ரியாஹ Bபுஷ்ரன் Bபய்ன யதய் ரஹ்மதிஹ்; வ அன்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அன் தஹூரா
இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.
لِّنُحْیِ بِهٖ بَلْدَةً مَّیْتًا وَّنُسْقِیَهٗ مِمَّا خَلَقْنَاۤ اَنْعَامًا وَّاَنَاسِیَّ كَثِیْرًا ۟
لِّـنُحْیَِۧநாம் உயிர்ப்பிப்பதற்காகவும்بِهٖஅதன்மூலம்بَلْدَةًபூமியைمَّيْتًاஇறந்தوَّنُسْقِيَهٗஇன்னும் நாம் அதை புகட்டுவதற்காகவும்مِمَّا خَلَقْنَاۤநாம் படைத்தவற்றில்اَنْعَامًاபல கால்நடைகளுக்கும்وَّاَنَاسِىَّஇன்னும் மனிதர்களுக்கும்كَثِيْرًا‏அதிகமான
லினுஹ்யிய Bபிஹீ Bபல்ததன் மய்த(ன்)வ்-வ னுஸ்கியஹூ மிம்மா கலக்னா அன்'ஆம(ன்)வ் வ அனாஸிய்ய கதீரா
இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்.
وَلَقَدْ صَرَّفْنٰهُ بَیْنَهُمْ لِیَذَّكَّرُوْا ۖؗ فَاَبٰۤی اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا ۟
وَلَـقَدْ صَرَّفْنٰهُஅதை நாம் பிரித்துக் கொடுத்தோம்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்لِيَذَّكَّرُوْا ۖஅவர்கள் நல்லறிவு பெறுவதற்காகفَاَبٰٓىமறுத்து விட்டனர்اَكْثَرُமிகஅதிகமானவர்கள்النَّاسِமனிதர்களில்اِلَّاதவிரكُفُوْرًا‏நிராகரிப்பதை
வ லகத் ஸர்ரFப்னாஹு Bபய்னஹும் லி யத்தக்கரூ Fப அBபா அக்தருன் னாஸி இல்லா குFபூரா
அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.
وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِیْ كُلِّ قَرْیَةٍ نَّذِیْرًا ۟ؗۖ
وَلَوْ شِئْنَاநாம் நாடியிருந்தால்لَبَـعَثْنَاஅனுப்பியிருப்போம்فِىْ كُلِّஒவ்வொருقَرْيَةٍஊரிலும்نَّذِيْرًا ۖ ‏ஓர் எச்சரிப்பாளரை
வ லவ் ஷி'னா லBப'அத்னா Fபீ குல்லி கர்யதின் னதீரா
மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.
فَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَجَاهِدْهُمْ بِهٖ جِهَادًا كَبِیْرًا ۟
فَلَا تُطِعِஆகவே கீழ்ப்படியாதீர்الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குوَ جَاهِدْபோர் செய்வீராக!هُمْஅவர்களிடம்بِهٖஇதன்மூலம்جِهَادًاபோர்كَبِيْرًا‏பெரும்
Fபலா துதி'இல் காFபிரீன வ ஜாஹித்ஹும் Bபிஹீ ஜிஹாதன் கBபீரா
ஆகவே, (நபியே!) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர்; இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக.
وَهُوَ الَّذِیْ مَرَجَ الْبَحْرَیْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ اُجَاجٌ ۚ وَجَعَلَ بَیْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்مَرَجَஇணைத்தான்الْبَحْرَيْنِஇரு கடல்களைهٰذَاஇதுعَذْبٌமிக்க மதுரமானதுفُرَاتٌஇனிப்பு நீராகும்وَّهٰذَاஇதுவோمِلْحٌ‌உப்பு நீராகும்اُجَاجٌ ۚமிக்க உவர்ப்பானதுوَجَعَلَஇன்னும் அவன் ஆக்கினான்بَيْنَهُمَاஅவ்விரண்டுக்கும் இடையில்بَرْزَخًاஒரு திரையையும்وَّحِجْرًاதடுப்பையும்مَّحْجُوْرًا‏முற்றிலும் தடுக்கக்கூடியது
வ ஹுவல் லதீ மரஜல் Bபஹ்ரய்னி ஹாதா 'அத்Bபுன் Fபுராது(ன்)வ் வ ஹாதா மில்ஹுன் உஜாஜ்; வ ஜ'அல Bபய்னஹுமா Bபர்Zஜக(ன்)வ் வ ஹிஜ்ரன் மஹ்ஜூரா
அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
وَهُوَ الَّذِیْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّصِهْرًا ؕ وَكَانَ رَبُّكَ قَدِیْرًا ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்خَلَقَபடைத்தான்مِنَ الْمَآءِநீரிலிருந்துبَشَرًاமனிதனைفَجَعَلَهٗஇன்னும் அவனை ஆக்கினான்نَسَبًاஇரத்த பந்தமுடையவனாகوَّ صِهْرًا‌ ؕஇன்னும் திருமண பந்தமுடையவனாகوَكَانَஇருக்கிறான்رَبُّكَஉமது இறைவன்قَدِيْرًا‏பேராற்றலுடையவனாக
வ ஹுவல் லதீ கலக மினல் மா'இ Bபஷரன் Fப ஜ'அலஹூ னஸBபன் வ ஸிஹ்ரா; வ கான ரBப்Bபுக கதீரா
இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُهُمْ وَلَا یَضُرُّهُمْ ؕ وَكَانَ الْكَافِرُ عَلٰی رَبِّهٖ ظَهِیْرًا ۟
وَيَعْبُدُوْنَஅவர்கள் வணங்குகின்றனர்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمَا لَا يَنْفَعُهُمْஅவர்களுக்கு நற்பலனளிக்காதவற்றைوَلَا يَضُرُّஇன்னும் தீங்கிழைக்காதவற்றைهُمْ‌ؕஅவர்களுக்குوَكَانَஇருக்கிறான்الْـكَافِرُநிராகரிப்பாளன்عَلٰىஎதிராகرَبِّهٖதன் இறைவனுக்குظَهِيْرًا‏உதவக்கூடியவனாக
வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உஹும் வலா யளுர்ருஹும்; வ கானல் காFபிரு 'அலா ரBப்Bபிஹீ ளஹீரா
இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர்; நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்.
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِیْرًا ۟
وَمَاۤ اَرْسَلْنٰكَஉம்மை நாம் அனுப்பவில்லைاِلَّاதவிரمُبَشِّرًاநற்செய்தி கூறுபவராகوَّنَذِيْرًا‏இன்னும் எச்சரிப்பவராகவே
வமா அர்ஸல்னாக இல்லா முBபஷ்ஷிர(ன்)வ் வ னதீரா
இன்னும் (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை.
قُلْ مَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ اِلَّا مَنْ شَآءَ اَنْ یَّتَّخِذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟
قُلْகூறுவீராக!مَاۤ اَسْـٴَــلُكُمْநான் உங்களிடம் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍஎவ்வித கூலியையும்اِلَّاஎனினும்مَنْயார்شَآءَநாடினானோاَنْ يَّـتَّخِذَஎடுத்துக்கொள்ளاِلٰى رَبِّهٖதன் இறைவனுடையسَبِيْلًا‏வழியில்
குல் மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இல்லா மன் ஷா'அ அய் யத்தகித இலா ரBப்Bபிஹீ ஸBபீலா
“அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை - விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர் வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர” என்று (நபியே!) நீர் கூறும்.
وَتَوَكَّلْ عَلَی الْحَیِّ الَّذِیْ لَا یَمُوْتُ وَسَبِّحْ بِحَمْدِهٖ ؕ وَكَفٰی بِهٖ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِیْرَا ۟
وَتَوَكَّلْநம்பிக்கை வைப்பீராகعَلَىமீதுالْحَـىِّஉயிருள்ளவன்الَّذِىْஎவன்لَا يَمُوْتُமரணிக்கமாட்டான்وَسَبِّحْஇன்னும் துதிப்பீராக!بِحَمْدِهٖ‌ ؕஅவனைப் புகழ்ந்துوَكَفٰىபோதுமானவன்بِهٖஅவனேبِذُنُوْبِபாவங்களைعِبَادِهٖதன் அடியார்களின்خَبِيْرَ ا‌ ۛۚ ۙ‏ஆழ்ந்தறிபவனாக
வ தவக்கல் 'அலல் ஹய்யில் லதீ லா யமூது வ ஸBப்Bபிஹ் Bபிஹம்திஹ்; வ கFபா Bபிஹீ BபிதுனூBபி 'இBபாதிஹீ கBபீரா
எனவே மரணிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.
لَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ۛۚ اَلرَّحْمٰنُ فَسْـَٔلْ بِهٖ خَبِیْرًا ۟
اۨلَّذِىْஅவன்தான்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَபூமியையும்وَمَا بَيْنَهُمَاஅவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும்فِىْ سِتَّةِ اَيَّامٍஆறு நாட்களில்ثُمَّபிறகுاسْتَوٰىஉயர்ந்து விட்டான்عَلَىமீதுالْعَرْشِ ۛۚஅர்ஷின்اَلرَّحْمٰنُஅவன் பேரருளாளன்فَسْــٴَــــلْகேட்பீராக!بِهٖஅவனைخَبِيْرًا‏அறிந்தவனிடம்
அல்லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா Fபீ ஸித்ததி அய்யாமின் தும்ம ஸ்தவா 'அலல் 'அர்ஷ்; அர் ரஹ்மானு Fபஸ்'அல் Bபிஹீ கBபீரா
அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான்; (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
وَاِذَا قِیْلَ لَهُمُ اسْجُدُوْا لِلرَّحْمٰنِ قَالُوْا وَمَا الرَّحْمٰنُ ۗ اَنَسْجُدُ لِمَا تَاْمُرُنَا وَزَادَهُمْ نُفُوْرًا ۟
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمُஅவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِلرَّحْمٰنِரஹ்மானுக்குقَالُوْاகூறுகின்றனர்وَمَاயார்?الرَّحْمٰنُபேரருளாளன்اَنَسْجُدُநாங்கள் சிரம் பணிய வேண்டுமா?لِمَا تَاْمُرُنَاநீர்ஏவக்கூடியவனுக்குوَزَادَஅதிகப்படுத்தியதுهُمْஅவர்களுக்குنُفُوْرًا ۩‏வெறுப்பை
வ இதா கீல லஹுமுஸ் ஜுதூ லிர் ரஹ்மானி காலூ வ மர் ரஹ்மானு 'அ னஸ்ஜுது லிமா த'முருனா வ Zஜாதஹும் னுFபூரா
“இன்னும் அர்ரஹ்மானுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “அர்ரஹ்மான் என்பவன் யார்? நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?” என்று கேட்கிறார்கள்; இன்னும், இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது.
تَبٰرَكَ الَّذِیْ جَعَلَ فِی السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِیْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِیْرًا ۟
تَبٰـرَكَமிக்க அருள் நிறைந்தவன்الَّذِىْஎவன்جَعَلَஅமைத்தான்فِى السَّمَآءِவானங்களில்بُرُوْجًاபெரும் கோட்டைகளைوَّجَعَلَஇன்னும் அமைத்தான்فِيْهَاஅதில்سِرٰجًاசூரியனையும்وَّقَمَرًاசந்திரனையும்مُّنِيْرًا ‏ஒளிரும்
தBபாரகல் லதீ ஜ'அல Fபிஸ் ஸமா'இ Bபுரூஜ(ன்)வ் வ ஜ'அல Fபீஹா ஸிராஜ(ன்)வ் வ கமரன் முனீரா
வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.
وَهُوَ الَّذِیْ جَعَلَ الَّیْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ یَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்جَعَلَஅமைத்தான்الَّيْلَஇரவையும்وَالنَّهَارَபகலையும்خِلْفَةًபகரமாகلِّمَنْ اَرَادَநாடுபவருக்குاَنْ يَّذَّكَّرَநல்லறிவு பெறاَوْஅல்லதுاَرَادَநாடினார்شُكُوْرًا‏நன்றிசெய்ய
வ ஹுவல் லதீ ஜ'அலல் லய்ல வன்னஹார கில்Fபதன் லிமன் அராத 'அ(ன்)ய் யத்தக்கர அவ் அராதா ஷுகூரா
இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.
وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِیْنَ یَمْشُوْنَ عَلَی الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا ۟
وَعِبَادُஅடியார்கள்الرَّحْمٰنِபேரருளாளனுடையالَّذِيْنَஎவர்கள்يَمْشُوْنَநடப்பார்கள்عَلَى الْاَرْضِபூமியில்هَوْنًاமென்மையாகوَّاِذَا خَاطَبَهُمُஇன்னும் அவர்களிடம் பேசினால்الْجٰهِلُوْنَஅறிவீனர்கள்قَالُوْاகூறி விடுவார்கள்سَلٰمًا‏ஸலாம்
வ 'இBபாதுர் ரஹ்மானில் லதீன யம்ஷூன 'அலல் அர்ளி ஹவ்ன(ன்)வ் வ இதா காத Bபஹுமுல் ஜாஹிலூன காலூ ஸலாமா
இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
وَالَّذِیْنَ یَبِیْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِیَامًا ۟
وَالَّذِيْنَஎவர்கள்يَبِيْتُوْنَஇரவு கழிப்பார்கள்لِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குسُجَّدًاசிரம் பணிந்தவர்களாகوَّقِيَامًا‏நின்றவர்களாக
வல்லதீன யBபீதூன லி ரBப்Bபிஹிம் ஸுஜ்ஜத(ன்)வ் வ கியாமா
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.
وَالَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖۗ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ۟ۗۖ
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَஇன்னும் அவர்கள் கூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவா!اصْرِفْதிருப்பி விடுعَنَّاஎங்களை விட்டுعَذَابَதண்டனையைجَهَـنَّمَநரகமுடையۖ  اِنَّநிச்சயமாகعَذَابَهَاஅதனுடைய தண்டனைكَانَஇருக்கிறதுغَرَامًا ۖ ‏நீங்காத ஒன்றாக
வல்லதீன யகூலூன ரBப்Bபனஸ் ரிFப் 'அன்னா 'அதாBப ஜஹன்னம இன்ன 'அதாBபஹா கான கராமா
“எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள்.
اِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ۟
اِنَّهَاநிச்சயமாக அதுسَآءَتْமிக கெட்டதுمُسْتَقَرًّاநிரந்தரமானதுوَّمُقَامًا‏தங்குமிடத்தாலும்
இன்னஹா ஸா'அத் முஸ்தகர்ர(ன்)வ் வ முகாமா
நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.
وَالَّذِیْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ یُسْرِفُوْا وَلَمْ یَقْتُرُوْا وَكَانَ بَیْنَ ذٰلِكَ قَوَامًا ۟
وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْاஅவர்கள் செலவு செய்தால்لَمْ يُسْرِفُوْاவரம்பு மீறமாட்டார்கள்وَلَمْ يَقْتُرُوْاஇன்னும் கருமித்தனமும் காட்ட மாட்டார்கள்وَكَانَஇருக்கும்بَيْنَமத்தியில்ذٰلِكَஅதற்குقَوَامًا‏நடுநிலையாக
வல்லதீன இதா அன்Fபகூ லம் யுஸ்ரிFபூ வ லம் யக்துரூ வ கான Bபய்ன தாலிக கவாமா
இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.
وَالَّذِیْنَ لَا یَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا یَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ وَلَا یَزْنُوْنَ ۚ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ یَلْقَ اَثَامًا ۟ۙ
وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَஅவர்கள் அழைக்க மாட்டார்கள்مَعَ اللّٰهِஅல்லாஹ்வுடன்اِلٰهًاஒரு கடவுளைاٰخَرَவேறுوَلَا يَقْتُلُوْنَஇன்னும் கொல்ல மாட்டார்கள்النَّفْسَஉயிரைالَّتِىْஎதுحَرَّمَதடுத்தான்اللّٰهُஅல்லாஹ்اِلَّاதவிரبِالْحَـقِّஉரிமையைக் கொண்டேوَلَا يَزْنُوْنَ‌ ۚஇன்னும் விபசாரம் செய்யமாட்டார்கள்وَمَنْ يَّفْعَلْயார் செய்வாரோذٰ لِكَஇவற்றைيَلْقَஅவர் சந்திப்பார்اَثَامًا ۙ‏தண்டனையை
வல்லதீன லா யத்'ஊன ம'அல் லாஹி இலாஹன் ஆகர வலா யக்துலூனன் னFப்ஸல் லதீ ஹர்ரமல் லாஹு இல்லா Bபில்ஹக்கி வலா யZஜ்னூன்; வ மய் யFப்'அல் தாலிக யல்க 'அதாமா
அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.
یُّضٰعَفْ لَهُ الْعَذَابُ یَوْمَ الْقِیٰمَةِ وَیَخْلُدْ فِیْهٖ مُهَانًا ۟ۗۖ
يُضٰعَفْபன்மடங்காக ஆக்கப்படும்لَهُஅவருக்குالْعَذَابُஅந்த தண்டனைيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்وَيَخْلُدْநிரந்தரமாக தங்கி விடுவார்فِيْهٖஅதில்مُهَانًا ۖ ‏இழிவுபடுத்தப்பட்டவராக
யுளா'அFப் லஹுல் 'அதாBபு யவ்மல் கியாமதி வ யக்லுத் Fபீஹீ முஹானா
கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓىِٕكَ یُبَدِّلُ اللّٰهُ سَیِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
اِلَّاஎனினும்,مَنْயார்تَابَதிருந்தினார்(கள்)وَاٰمَنَஇன்னும் நம்பிக்கை கொண்டார்(கள்)وَعَمِلَஇன்னும் செய்தார்عَمَلًاசெயலைصَالِحًـاநன்மையானفَاُولٰٓٮِٕكَஅவர்கள்يُبَدِّلُமாற்றி விடுவான்اللّٰهُஅல்லாஹ்سَيِّاٰتِهِمْஅவர்களுடைய தீய செயல்களைحَسَنٰتٍ‌ ؕநல்ல செயல்களாகوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
இல்லா மன் தாBப வ 'ஆமன வ 'அமில 'அமலன் ஸாலிஹன் Fப உலா'இக யுBபத் திலுல் லாஹு ஸய்யி ஆதிஹிம் ஹஸனாத்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَاِنَّهٗ یَتُوْبُ اِلَی اللّٰهِ مَتَابًا ۟
وَمَنْயார்تَابَதிருந்துவார்وَعَمِلَஇன்னும் செய்வார்صَالِحًـاநன்மைفَاِنَّهٗநிச்சயமாக அவர்يَتُوْبُதிரும்பி விடுகிறார்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்مَتَابًا‏திரும்புதல்-முற்றிலும்
வ மன் தாBப வ 'அமில ஸாலிஹன் Fப இன்னஹூ யதூBபு இலல் லாஹி மதாBபா
இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.
وَالَّذِیْنَ لَا یَشْهَدُوْنَ الزُّوْرَ ۙ وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا ۟
وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَஇன்னும் அவர்கள் ஆஜராக மாட்டார்கள்الزُّوْرَۙபொய்யான செயலுக்குوَ اِذَا مَرُّوْاஇன்னும் இவர்கள் கடந்து சென்றால்بِاللَّغْوِவீணான செயலுக்குمَرُّوْاகடந்து சென்று விடுவார்கள்كِرَامًا‏கண்ணியவான்களாக
வல்லதீன லா யஷ் ஹதூனZஜ் Zஜூர வ இதா மர்ரூ Bபில்லக்வி மர்ரூ கிராமா
அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
وَالَّذِیْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ لَمْ یَخِرُّوْا عَلَیْهَا صُمًّا وَّعُمْیَانًا ۟
وَالَّذِيْنَ اِذَا ذُكِّرُوْاஇன்னும் எவர்கள்/அவர்கள் அறிவுறுத்தப்பட்டால்بِاٰيٰتِவசனங்களைக் கொண்டுرَبِّهِمْதங்கள் இறைவனின்لَمْ يَخِرُّوْاவிழ மாட்டார்கள்عَلَيْهَاஅவற்றின் மீதுصُمًّاசெவிடர்களாகوَّعُمْيَانًا‏இன்னும் குருடர்களாக
வல்லதீன இதா துக்கிரூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் லம் யகிர்ரூ 'அலய்ஹா ஸும்ம(ன்)வ் வ'உம்யானா
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)
وَالَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا ۟
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவா!هَبْதருவாயாக!لَـنَاஎங்களுக்குمِنْ اَزْوَاجِنَاஎங்கள் மனைவிகள் மூலமும்وَذُرِّيّٰتِنَاஎங்கள் சந்ததிகள் மூலமும்قُرَّةَகுளிர்ச்சியைاَعْيُنٍகண்களுக்குوَّاجْعَلْنَاஎங்களை ஆக்குவாயாக!لِلْمُتَّقِيْنَஇறையச்சமுள்ளவர்களுக்குاِمَامًا‏இமாம்களாக
வல்லதீன யகூலூன ரBப்Bபனா ஹBப் லனா மின் அZஜ்வாஜினா வ துர்ரியாதினா குர்ரத அஃயுனி(ன்)வ் வஜ் 'அல்னா லில்முத்தகீன இமாமா
மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
اُولٰٓىِٕكَ یُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَیُلَقَّوْنَ فِیْهَا تَحِیَّةً وَّسَلٰمًا ۟ۙ
اُولٰٓٮِٕكَஇவர்கள்يُجْزَوْنَகூலியாக கொடுக்கப்படுவார்கள்الْغُرْفَةَஅறையைبِمَا صَبَرُوْاஅவர்கள் பொறுமையாக இருந்ததால்وَيُلَقَّوْنَசந்திக்கப்படுவார்கள்فِيْهَاஅதில்تَحِيَّةًமுகமனைக்கொண்டும்وَّسَلٰمًا ۙ‏ஸலாமைக் கொண்டும்
உலா'இக யுஜ்Zஜவ்னல் குர்Fபத Bபிமா ஸBபரூ வ யுலக்கவ்ன Fபீஹா தஹிய்யத(ன்)வ் வ ஸலாமா
பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.
خٰلِدِیْنَ فِیْهَا ؕ حَسُنَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ۟
خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்فِيْهَا‌ ؕஅதில்حَسُنَتْஅது மிக அழகானதுمُسْتَقَرًّاநிரந்தரமான தங்குமிடத்தாலும்وَّمُقَامًا‏தற்காலிகமான தங்குமிடத்தாலும்
காலிதீன Fபீஹா; ஹஸுனத் முஸ்தகர்ர(ன்)வ் வ முகாமா
அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.
قُلْ مَا یَعْبَؤُا بِكُمْ رَبِّیْ لَوْلَا دُعَآؤُكُمْ ۚ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ یَكُوْنُ لِزَامًا ۟۠
قُلْகூறுவீராக!مَا يَعْبَـؤُاஒரு பொருட்டாகவே கருதமாட்டான்بِكُمْஉங்களைرَبِّىْஎன் இறைவன்لَوْلَاஇல்லாதிருந்தால்دُعَآؤُபிரார்த்தனைكُمْ‌ۚஉங்கள்فَقَدْதிட்டமாகكَذَّبْتُمْநீங்கள் பொய்ப்பித்தீர்கள்فَسَوْفَ يَكُوْنُஇது கண்டிப்பாக இருக்கும்لِزَامًا‏உங்களை தொடரக்கூடியதாக
குல் மா யஃBப'உ Bபிகும் ரBப்Bபீ லவ் லா து'ஆ'உகும் Fபகத் கத்தBப்தும் Fபஸவ்Fப யகூனு லிZஜாமா
(நபியே!) சொல்வீராக: “உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்; ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.”