">

தேடல் வார்த்தை: "பெருமை"

தேடல் மொழிபெயர்ப்புகள்: அப்துல் ஹமீது பாகவி

51 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 2 (முடிவுகள் 1 - 50)

وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ اَبٰی وَاسْتَكْبَرَ ؗۗ وَكَانَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
وَاِذْசமயம்قُلْنَاகூறினோம்لِلْمَلٰٓٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْٓاஆகவே சிரம் பணிந்தார்கள்اِلَّاۤதவிரاِبْلِيْسَؕஇப்லீஸ்اَبٰىமறுத்தான்وَاسْتَكْبَرَ இன்னும் பெருமையடித்தான்وَكَانَஇன்னும் ஆகிவிட்டான்مِنَ الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களில்
வ இத் குல்னா லில்மலா'இ கதிஸ் ஜுதூ லிஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ அBபா வஸ்தக்Bபர வ கான மினல் காFபிரீன்
பின்னர், நாம் வானவர்களை (நோக்கி) “ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்'' எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமைகொண்டு விலகி (நம் கட்டளையை) நிராகரிப்பவர்களில் ஆகி விட்டான்.
شَهْرُ رَمَضَانَ الَّذِیْۤ اُنْزِلَ فِیْهِ الْقُرْاٰنُ هُدًی لِّلنَّاسِ وَبَیِّنٰتٍ مِّنَ الْهُدٰی وَالْفُرْقَانِ ۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْیَصُمْهُ ؕ وَمَنْ كَانَ مَرِیْضًا اَوْ عَلٰی سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَیَّامٍ اُخَرَ ؕ یُرِیْدُ اللّٰهُ بِكُمُ الْیُسْرَ وَلَا یُرِیْدُ بِكُمُ الْعُسْرَ ؗ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
شَهْرُமாதம்رَمَضَانَரமழான்الَّذِىْٓஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுفِيْهِஅதில்الْقُرْاٰنُஅல்குர்ஆன்هُدًىநேர்வழியாகلِّلنَّاسِமக்களுக்குوَ بَيِّنٰتٍஇன்னும் சான்றுகளாகمِّنَ الْهُدٰىநேர்வழியின்وَالْفُرْقَانِۚஇன்னும் பிரித்தறிவிப்பதுفَمَنْஎவர்شَهِدَதங்கி இருப்பார்مِنْكُمُஉங்களிலிருந்துالشَّهْرَஅம்மாதத்தில்فَلْيَـصُمْهُ ؕஅவர் அதில் நோன்பிருக்கவும்وَمَنْஇன்னும் எவர்کَانَஇருப்பார்مَرِيْضًاநோயாளியாகاَوْஅல்லதுعَلٰى سَفَرٍபயணத்தில்فَعِدَّةٌகணக்கிடவும்مِّنْஇருந்துاَيَّامٍநாட்கள்اُخَرَؕமற்ற(வை)يُرِيْدُநாடுவான்اللّٰهُஅல்லாஹ்بِکُمُஉங்களுக்குالْيُسْرَஇலகுவைوَلَا يُرِيْدُஇன்னும் நாடமாட்டான்بِکُمُஉங்களுக்குالْعُسْرَசிரமத்தைوَلِتُکْمِلُواஇன்னும் நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகالْعِدَّةَஎண்ணிக்கையைوَلِتُکَبِّرُواஇன்னும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகاللّٰهَஅல்லாஹ்வைعَلٰى مَا هَدٰٮكُمْஉங்களை நேர்வழி நடத்தியதற்காகوَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
ஷஹ்ரு ரமளானல்லதீ உன்Zஜில Fபீஹில் குர்'ஆனு ஹுதல் லின்னாஸி வ Bபய்யினாதிம் மினல் ஹுதா வல் Fபுர்கான்; Fபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர Fபல்யஸும்ஹு வ மன் கான மரீளன் அவ் 'அலா ஸFபரின் Fப'இத்ததும் மின் அய்யாமின் உகர்; யுரீதுல் லாஹு Bபிகுமுல் யுஸ்ர வலா யுரீது Bபிகுமுல் 'உஸ்ர வ லிதுக்மிலுல் 'இத்தத வ லிதுகBப்Bபிருல் லாஹ 'அலா மா ஹதாகும் வ ல'அல்லகும் தஷ்குரூன்
ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால், (அக்காலத்தில் உங்களில்) யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறான் தவிர சிரமத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும், (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வான்ற) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்!
فَاِذَا قَضَیْتُمْ مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَآءَكُمْ اَوْ اَشَدَّ ذِكْرًا ؕ فَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا وَمَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ۟
فَاِذَا قَضَيْتُمْநீங்கள் நிறைவேற்றிவிட்டால்مَّنَاسِكَکُمْஉங்கள் ஹஜ்ஜு கடமைகளைفَاذْکُرُواநினைவு கூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைكَذِكْرِكُمْநீங்கள் நினைவு கூர்ந்ததைப் போலاٰبَآءَکُمْமூதாதைகளை/உங்கள்اَوْஅல்லதுاَشَدَّகடுமையாகذِکْرًا ؕநினைவு கூர்தல்فَمِنَஇன்னும் இருந்துالنَّاسِமக்கள்مَنْஎவர்يَّقُوْلُகூறுகிறார்رَبَّنَآஎங்கள் இறைவாاٰتِنَاஎங்களுக்குத் தாفِى الدُّنْيَاஇம்மையில்وَمَاஇல்லைلَهٗஅவருக்குفِى الْاٰخِرَةِமறுமையில்مِنْஇருந்துخَلَاقٍ‏பாக்கியம்
Fப-இத களய்தும் மனா ஸிககும் Fபத்குருல் லாஹ கதிக்ரிகும் ஆBபா'அகும் அவ் அஷத்த திக்ரா; Fபமினன்னாஸி மய் யகூலு ரBப்Bபனா ஆதினா Fபித்துன்யா வமா லஹூ Fபில் ஆகிரதி மின் கலாக்
(ஹஜ்ஜூக்குச் சென்ற) நீங்கள் உங்கள் (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றி விட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்த மிட்டு பெருமையாக) நினைவு கூர்ந்து கூறிவந்ததைப்போல் அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை ‘திக்ரு' (செய்து உங்களுக்கு வேண்டியவற்றையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையிலேயே கொடுத்து விடுவாயாக!'' என்று கோருபவரும் மனிதர்களில் உண்டு. ஆனால், இவருக்கு மறுமையில் ஒரு பாக்கியமும் இல்லை.
وَاِذَا قِیْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ ؕ وَلَبِئْسَ الْمِهَادُ ۟
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُஅவனுக்குاتَّقِஅஞ்சிக்கொள்اللّٰهَஅல்லாஹ்வைاَخَذَتْهُஅவனைப் பிடித்துக் கொள்கிறதுالْعِزَّةُபெருமைبِالْاِثْمِ‌பாவத்தைக் கொண்டுفَحَسْبُهٗஎனவே அவனுக்குப்போதும்جَهَنَّمُ‌ؕநரகம்وَلَبِئْسَஇன்னும் திட்டமாக கெட்டுவிட்டதுالْمِهَادُ‏தங்குமிடம்
வ இதா கீல லஹுத்தகில் லாஹ அகததுல் இZஜ்Zஜது Bபில்-இத்ம்; Fபஹஸ்Bபுஹூ ஜஹன்னம்; வ லBபி'ஸல் மிஹாத்
தவிர, ‘‘நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)'' என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக்கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰی ۙ كَالَّذِیْ یُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَیْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ؕ لَا یَقْدِرُوْنَ عَلٰی شَیْءٍ مِّمَّا كَسَبُوْا ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تُبْطِلُوْاபாழாக்காதீர்கள்صَدَقٰتِكُمْஉங்கள் தர்மங்களைبِالْمَنِّசொல்லிக் காட்டுவதுوَالْاَذٰىۙஇன்னும் துன்புறுத்துவதுكَالَّذِىْஎவரைப் போன்றுيُنْفِقُதர்மம் செய்கிறான்مَالَهٗதனது செல்வத்தைرِئَآءَகாட்டுவதற்காகالنَّاسِமக்களுக்குوَلَا يُؤْمِنُஇன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டான்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕஇன்னும் இறுதி நாள்فَمَثَلُهٗஅவனின் உதாரணம்كَمَثَلِஉதாரணத்தைப்போன்றுصَفْوَانٍவழுக்கைப் பாறையின்عَلَيْهِஅதன் மீதுتُرَابٌமண்فَاَصَابَهٗஅதை அடைந்ததுوَابِلٌஅடை மழைفَتَرَكَهٗஅதை விட்டுவிட்டதுصَلْدًا ؕவெறும் பாறையாகلَا يَقْدِرُوْنَஆற்றல் பெறமாட்டார்கள்عَلٰى شَىْءٍஎதையும்مِّمَّاஎதிலிருந்துكَسَبُوْا ؕசெய்தார்கள்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَகூட்டத்தைالْـكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துBப்திலூ ஸதகாதிகும் Bபில்மன்னி வல் அதா கல்லதீ யுன்Fபிகு மாலஹூ ரி'ஆ'அன் னாஸி வலா யு'மினு Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி Fபமதலுஹூ கமதலி ஸFப்வானின் 'அலய்ஹி துராBபுன் Fப அஸாBபஹூ வாBபிலுன் Fபதர கஹூ ஸல்தா; லா யக்திரூன 'அலா ஷய்'இம் மிம்மா கஸBபூ; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாமல் மக்கள் காண்பதற்காக தன் பொருளை செலவு செய்(து வீணாக்கு)பவனைப் போல (நீங்கள் மனமுவந்து வழங்கும்) உங்கள் தர்மங்களை(ப் பெற்றவனுக்கு முன்னும் பின்னும்) சொல்லி காண்பிப்பதாலும் துன்புறுத்துவதாலும் (அதன் பலனை) பாழாக்கி விடாதீர்கள். இவனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கிறது. அதன் மீது மண்படிந்தது. எனினும், ஒரு பெரும் மழை பொழிந்து, அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கி விட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்.) ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததில் இருந்து ஒரு பலனையும் (மறுமையில்) அடையமாட்டார்கள். மேலும், அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் கூட்டத்தை (அவர்களின் தீயச் செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.
لَیْسَ عَلَیْكَ هُدٰىهُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ فَلِاَنْفُسِكُمْ ؕ وَمَا تُنْفِقُوْنَ اِلَّا ابْتِغَآءَ وَجْهِ اللّٰهِ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَیْرٍ یُّوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟
لَيْسَஇல்லைعَلَيْكَஉம்மீதுهُدٰٮهُمْஅவர்களை நேர்வழி செலுத்துதல்وَلٰـكِنَّஎன்றாலும்اللّٰهَஅல்லாஹ்يَهْدِىْநேர்வழி செலுத்துகிறான்مَنْஎவரைيَّشَآءُ‌ ؕநாடுகிறான்وَمَا تُنْفِقُوْاநீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்مِنْ خَيْرٍசெல்வத்தில்فَلِاَنْفُسِكُمْ‌ؕஉங்களுக்குத்தான்وَمَا تُنْفِقُوْنَஇன்னும் தர்மம் புரியாதீர்கள்اِلَّاதவிரابْتِغَآءَநாடியேوَجْهِமுகத்தைاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَمَا تُنْفِقُوْاநீங்கள் எதை தர்மம் புரிந்தாலும்مِنْ خَيْرٍசெல்வத்தில்يُّوَفَّமுழுமையாக நிறைவேற்றப்படும்اِلَيْكُمْஉங்களுக்குوَاَنْـتُمْநீங்கள்لَا تُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
லய்ஸ 'அலய்க ஹுதாஹும் வ லாகின்னல் லாஹ யஹ்தீ மய் யஷா'; வமா துன்Fபிகூ மின் கய்ரின் Fபலி அன்Fபுஸிகும்; வமா துன்Fபிகூன இல்லBப் திகா'அ வஜ்ஹில் லாஹ்; வமா துன்Fபிகூ மின் கய்ரி(ன்)ய் யுவFப்Fப இலய்கும் வ அன்தும் லா துள்லமூன்
(நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்கள் கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்கள் கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர்களையே நேரான வழியில் செலுத்துகிறான். (நம்பிக்கையாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் முகத்தைத் தேடுவதற்கே தவிர, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்) நன்மைக்காக எதைச் செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது.
وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّبِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَالْجَارِ ذِی الْقُرْبٰی وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْۢبِ وَابْنِ السَّبِیْلِ ۙ وَمَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۟ۙ
وَاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَلَا تُشْرِكُوْاஇன்னும் இணையாக்காதீர்கள்بِهٖஅவனுக்குشَيْــٴًـــا‌ ؕஎதையும்وَّبِالْوَالِدَيْنِஇன்னும் தாய் தந்தைக்குاِحْسَانًاநன்மை செய்யுங்கள்وَّبِذِى الْقُرْبٰىஇன்னும் உறவினருக்குوَالْيَتٰمٰىஇன்னும் அநாதைகள்وَ الْمَسٰكِيْنِஇன்னும் ஏழைகள்وَالْجَـارِஇன்னும் அண்டைவீட்டார்ذِى الْقُرْبٰىஉறவினர்وَالْجَـارِஇன்னும் அண்டைவீட்டார்الْجُـنُبِஅந்நியர்وَالصَّاحِبِஇன்னும் நண்பர்بِالْجَـنْۢبِஅருகில் இருக்கும்وَابْنِ السَّبِيْلِ ۙஇன்னும் பயணி(கள்)وَمَاஇன்னும் எவர்مَلَـكَتْசொந்தமாக்கினاَيْمَانُكُمْ‌ ؕஉங்கள் வலக்கரங்கள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்مَنْஎவன்كَانَஇருக்கிறான்مُخْتَالًاகர்வமுடையவனாகفَخُوْرَا ۙ‏பெருமையுடையவனாக
வஃBபுதுல் லாஹ வலா துஷ்ரிகூ Bபிஹீ ஷய்'அ(ன்)வ் வ Bபில்வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வ Bபிதில் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனி வல்ஜாரி தில்குர்Bபா வல்ஜாரில் ஜுனுBபி வஸ்ஸாஹிBபி Bபில்ஜம்Bபி வBப்னிஸ் ஸBபீலி வமா மலகத் அய்மானுகும்; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபு மன் கான முக்தாலன் Fபகூரா
அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வம் கொண்டவனாக, பெருமை அடிப்பவனாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
وَالَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْیَوْمِ الْاٰخِرِ ؕ وَمَنْ یَّكُنِ الشَّیْطٰنُ لَهٗ قَرِیْنًا فَسَآءَ قَرِیْنًا ۟
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்يُنْفِقُوْنَதர்மம் செய்கிறார்கள்اَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைرِئَآءَகாண்பிப்பதற்காகالنَّاسِமக்களுக்குوَلَا يُؤْمِنُوْنَஇன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ‌ؕஇன்னும் இறுதி நாளைوَمَنْஎவருக்குيَّكُنِஆகிவிட்டான்الشَّيْطٰنُஷைத்தான்لَهٗஅவனுக்குقَرِيْنًاநண்பனாகفَسَآءَகெட்டுவிட்டான்قَرِيْنًا‏நண்பனால்
வல்லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் ரி'ஆ'அன் னாஸி வலா யு'மினூன Bபில்லாஹி வலா Bபில் யவ்மில் ஆகிர்; வ மய் யகுனிஷ் ஷய்தானு லஹூ கரீனன் Fபஸா'அ கரீனா
எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கிறானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன் ஆவான்.
فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَیْهِمْ اَبْوَابَ كُلِّ شَیْءٍ ؕ حَتّٰۤی اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ ۟
فَلَمَّاபோதுنَسُوْاமறந்தனர்مَاஎதைذُكِّرُوْاஉபதேசிக்கப் பட்டனர்بِهٖஅதைக் கொண்டுفَتَحْنَاதிறந்தோம்عَلَيْهِمْஅவர்களுக்குاَبْوَابَவாசல்களைكُلِّ شَىْءٍ ؕஎல்லாவற்றின்حَتّٰٓىமுடிவாகاِذَا فَرِحُوْاமகிழ்ச்சியடைந்த போதுبِمَاۤஎதைக் கொண்டுاُوْتُوْۤاகொடுக்கப்பட்டனர்اَخَذْنٰهُمْபிடித்தோம்/அவர்களைبَغْتَةًதிடீரெனفَاِذَا هُمْஅப்போது அவர்கள்مُّبْلِسُوْنَ‏நம்பிக்கை இழந்து விடுகிறார்கள்
Fபலம்மா னஸூ மா துக்கிரூ Bபிஹீ Fபதஹ்னா 'அலய்ஹிம் அBப்வாBப குல்லி ஷய்'இன் ஹத்தா இதா Fபரிஹூ Bபிமா ஊதூ அகத்னாஹும் Bபக்ததன் Fப இதா ஹும் முBப்லிஸூன்
அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்து விடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றைக் கொண்டு அவர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நமது வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ قَالَ اُوْحِیَ اِلَیَّ وَلَمْ یُوْحَ اِلَیْهِ شَیْءٌ وَّمَنْ قَالَ سَاُنْزِلُ مِثْلَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ ؕ وَلَوْ تَرٰۤی اِذِ الظّٰلِمُوْنَ فِیْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓىِٕكَةُ بَاسِطُوْۤا اَیْدِیْهِمْ ۚ اَخْرِجُوْۤا اَنْفُسَكُمْ ؕ اَلْیَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ غَیْرَ الْحَقِّ وَكُنْتُمْ عَنْ اٰیٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ ۟
وَمَنْயார்?اَظْلَمُமிகப்பெரிய அநியாயக்காரன்مِمَّنِஎவனைவிடافْتَـرٰىஇட்டுக்கட்டினான்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًاபொய்யைاَوْஅல்லதுقَالَகூறினான்اُوْحِىَவஹீ அறிவிக்கப்பட்டதுاِلَىَّஎனக்குوَلَمْ يُوْحَஅறிவிக்கப்படவில்லைاِلَيْهِஅவனுக்குشَىْءٌஎதுவும்وَّمَنْஇன்னும் எவன்قَالَகூறினான்سَاُنْزِلُஇறக்குவேன்مِثْلَபோல்مَاۤஎதைاَنْزَلَஇறக்கினான்اللّٰهُ‌ؕஅல்லாஹ்وَلَوْ تَرٰٓىநீர் பார்த்தால்اِذِபோதுالظّٰلِمُوْنَஅக்கிரமக்காரர்கள்فِىْ غَمَرٰتِவேதனைகளில்الْمَوْتِமரணம்وَالْمَلٰٓٮِٕكَةُஇன்னும் வானவர்கள்بَاسِطُوْۤاநீட்டுகிறார்கள்اَيْدِيْهِمْ‌ۚதங்கள் கைகளைاَخْرِجُوْۤاவெளியேற்றுங்கள்اَنْفُسَكُمُ‌ؕஉங்கள் உயிர்களைاَلْيَوْمَஇன்றுتُجْزَوْنَகூலி கொடுக்கப்படுவீர்கள்عَذَابَவேதனையைالْهُوْنِஇழிவானبِمَا كُنْتُمْஇருந்த காரணத்தால்تَقُوْلُوْنَகூறுவீர்கள்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுغَيْرَ الْحَـقِّஉண்மை அல்லாதوَكُنْتُمْஇன்னும் இருந்தீர்கள்عَنْ اٰيٰتِهٖஅவனுடைய வசனங்களை விட்டுتَسْتَكْبِرُوْنَ‏பெருமையடிக்கிறீர்கள்
வ மன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கால ஊஹிய இலய்ய வ லம் யூஹ இலய்ஹி ஷய்'உன் வ மன் கால ஸ உன்Zஜிலு மித்ல மா அன்Zஜலல் லாஹ்; வ லவ் தரா இதிள் ளாலிமூன Fபீ கமராதில் மவ்தி வல்மலா'இகது Bபாஸிதூ அய்தீஹிம் அக்ரிஜூ அன்Fபுஸகும்; அல் யவ்ம துஜ்Zஜவ்ன 'அதாBபல் ஹூனி Bபிமா குன்தும் தகூலூன 'அலல் லாஹி கய்ரல் ஹக்கி வ குன்தும் 'அன் ஆயாதிஹீ தஸ்தக்Bபிரூன்
(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹ்யி மூலம் அவனுக்கு எதுவும் அறிவிக்கப்படாமலிருக்க ‘‘தனக்கும் வஹ்யி வந்தது'' என்று கூறுபவனைவிட அல்லது ‘‘அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்'' என்று கூறுபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்).
قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا یَكُوْنُ لَكَ اَنْ تَتَكَبَّرَ فِیْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِیْنَ ۟
قَالَகூறினான்فَاهْبِطْஆகவே இறங்கிவிடுمِنْهَاஇதிலிருந்துفَمَا يَكُوْنُஅனுமதியில்லைلَـكَஉமக்குاَنْ تَتَكَبَّرَநீ பெருமை கொள்வதற்குفِيْهَاஇதில்فَاخْرُجْவெளியேறி விடு!اِنَّكَநிச்சயமாக நீمِنَ الصّٰغِرِيْنَ‏இழிவானவர்களில்
கால Fபஹ்Bபித் மின்ஹா Fபமா யகூனு லக அன் ததகBப்Bபர Fபீஹா Fபக்ருஜ் இன்னக மினஸ் ஸாகிரீன்
(அதற்கு இறைவன்) ‘‘இதிலிருந்து நீ இறங்கிவிடு! நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை. (உன் பெருமையின் காரணமாக) நிச்சயமாக நீ சிறுமைப்பட்டவனாகி விட்டாய். (ஆதலால், இதிலிருந்து) நீ வெளியேறி விடு'' என்று கூறினான்.
اِنَّ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا یَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتّٰی یَلِجَ الْجَمَلُ فِیْ سَمِّ الْخِیَاطِ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُجْرِمِیْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ كَذَّبُوْاபொய்ப்பித்தவர்கள்بِاٰيٰتِنَاநம் வசனங்களைوَاسْتَكْبَرُوْاஇன்னும் பெருமையடித்து புறக்கணித்தனர்عَنْهَاஅவற்றை விட்டுلَا تُفَتَّحُதிறக்கப்படாதுلَهُمْஅவர்களுக்குاَبْوَابُவாசல்கள்السَّمَآءِவானத்தின்وَلَا يَدْخُلُوْنَஇன்னும் நுழைய மாட்டார்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்حَتّٰى يَلِجَநுழையும் வரைالْجَمَلُஒட்டகம்فِىْ سَمِّகாதில்الْخِيَاطِ‌ ؕஊசியின்وَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىகூலி கொடுப்போம்الْمُجْرِمِيْنَ‏குற்றவாளிகளுக்கு
இன்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வஸ்தக்Bபரூ 'அன்ஹா லா துFபத்தஹு லஹும் அBப்வாBபுஸ் ஸமா'இ வலா யத்குலூனல் ஜன்னத ஹத்தா யலிஜல் ஜமலு Fபீ ஸம்மில் கியாத்; வ கதாலிக னஜ்Zஜில் முஜ்ரிமீன்
நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம்.
وَنَادٰۤی اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا یَّعْرِفُوْنَهُمْ بِسِیْمٰىهُمْ قَالُوْا مَاۤ اَغْنٰی عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ ۟
وَنَادٰٓىஅழைப்பார்(கள்)اَصْحٰبُ الْاَعْرَافِசிகரவாசிகள்رِجَالًاசில மனிதர்களைيَّعْرِفُوْنَهُمْஅறிவார்கள் அவர்களைبِسِيْمٰٮهُمْமுகஅடையாளத்தைக் கொண்டு/அவர்களின்قَالُوْاகூறுவார்கள்مَاۤ اَغْنٰىபலனளிக்கவில்லைعَنْكُمْஉங்களுக்குجَمْعُكُمْஉங்கள் சேமிப்புوَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ‏நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும்
வ னாதா அஸ்ஹாBபுல் அஃராFபி ரிஜால(ன்)ய் யஃரிFபூனஹும் Bபிஸீமாஹும் காலூ மா அக்னா 'அன்கும் ஜம்'உகும் வமா குன்தும் தஸ்தக்Bபிரூன்
அந்த சிகரங்களில் உள்ளவர்கள், முக அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக் குள்ளானவர்கள் என) தாங்கள் அறிந்த சில மனிதர்களை கூவி அழைத்து, ‘‘நீங்கள் (உலகத்தில்) சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவையும், நீங்கள் எவற்றைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவையும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!'' என்று கூறுவார்கள்.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ وَاللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟
وَلَا تَكُوْنُوْاஆகிவிடாதீர்கள்كَالَّذِيْنَஎவர்களைப் போல்خَرَجُوْاபுறப்பட்டனர்مِنْஇருந்துدِيَارِهِمْதங்கள் இல்லங்கள்بَطَرًاபெருமைக்காகوَّرِئَآءَஇன்னும் காண்பிப்பதற்காகالنَّاسِமக்களுக்குوَ يَصُدُّوْنَஇன்னும் தடுப்பார்கள்عَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَاللّٰهُஅல்லாஹ்بِمَاஎவற்றைيَعْمَلُوْنَசெய்வார்கள்مُحِيْطٌ‏சூழ்ந்திருப்பவன்
வ லா தகூனூ கல்லதீன கரஜூ மின் தியாரிஹிம் Bபதர(ன்)வ் வ ரி'ஆ'அன் னாஸி வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹ்; வல்லாஹு Bபிமா யஃமலூன முஹீத்
பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ரு' போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்து கொண்டும் இருந்தவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அவர்களுடைய செயல்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான்.
لَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ فِیْ مَوَاطِنَ كَثِیْرَةٍ ۙ وَّیَوْمَ حُنَیْنٍ ۙ اِذْ اَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنْكُمْ شَیْـًٔا وَّضَاقَتْ عَلَیْكُمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّیْتُمْ مُّدْبِرِیْنَ ۟ۚ
لَـقَدْதிட்டவட்டமாகنَصَرَஉதவினான்كُمُஉங்களுக்குاللّٰهُஅல்லாஹ்فِىْ مَوَاطِنَபோர்க்களங்களில்كَثِيْرَةٍ‌ ۙஅதிகமானوَّيَوْمَஇன்னும் அன்றுحُنَيْنٍ‌ ۙஹுனைன்اِذْ اَعْجَبَـتْكُمْபோது/பெருமைப்படுத்தியது/உங்களைكَثْرَتُكُمْநீங்கள் அதிகமாக இருப்பதுفَلَمْ تُغْنِபலன் தரவில்லைعَنْكُمْஉங்களுக்குشَيْـٴًـــاஎதையும்وَّضَاقَتْஇன்னும் நெருக்கடியாகி விட்டதுعَلَيْكُمُஉங்கள் மீதுالْاَرْضُபூமிبِمَا رَحُبَتْஅது விசாலமாக இருந்தும்ثُمَّபிறகுوَلَّـيْتُمْதிரும்பினீர்கள்مُّدْبِرِيْنَ‌ۚ‏புறமுதுகு காட்டியவர்களாக
லகத் னஸரகுமுல் லாஹு Fபீ மவாதின கதீரதி(ன்)வ் வ யவ்ம ஹுனய்னின் இத் அஃஜBபத்கும் கத்ரதுகும் Fபலம் துக்னி 'அன்கும் ஷய்'அ(ன்)வ் வ ளாகத் 'அலய்குமுல் அர்ளு Bபிமா ரஹுBபத் தும்ம வல்லய்தும் முத்Bபிரீன்
பல போர்க்களங்களில் (உங்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்கள் அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி (குறுகி) விட்டது. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள்.
وَلَىِٕنْ اَذَقْنٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ ذَهَبَ السَّیِّاٰتُ عَنِّیْ ؕ اِنَّهٗ لَفَرِحٌ فَخُوْرٌ ۟ۙ
وَلَٮِٕنْ اَذَقْنٰهُநாம் அவனுக்கு சுவைக்க வைத்தால்نَـعْمَآءَஇன்பத்தைبَعْدَபின்னர்ضَرَّآءَதுன்பம்مَسَّتْهُஅவனுக்கு ஏற்பட்ட(து)لَيَـقُوْلَنَّநிச்சயம் கூறுவான்ذَهَبَசென்றனالسَّيِّاٰتُதீமைகள்عَنِّىْ‌ ؕஎன்னை விட்டுاِنَّهٗநிச்சயமாக அவன்لَـفَرِحٌமகிழ்பவனாகفَخُوْرٌۙ‏தற்பெருமையாளனாக
வல'இன் அதக்னாஹு னஃமா'அ Bபஃத ளர்ரா'அ மஸ்ஸத் ஹு ல யகூலன்ன தஹBபஸ் ஸய்யிஆது 'அன்னீ; இன்னஹூ லFபரிஹுன் Fபகூர்
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் ‘‘நிச்சயமாக என் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வராது)'' என்று கூறுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாக, பெருமையடிப்பவனாக ஆகிவிடுகிறான்.
وَبَرَزُوْا لِلّٰهِ جَمِیْعًا فَقَالَ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا مِنْ عَذَابِ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ قَالُوْا لَوْ هَدٰىنَا اللّٰهُ لَهَدَیْنٰكُمْ ؕ سَوَآءٌ عَلَیْنَاۤ اَجَزِعْنَاۤ اَمْ صَبَرْنَا مَا لَنَا مِنْ مَّحِیْصٍ ۟۠
وَبَرَزُوْاவெளிப்படுவார்கள்لِلّٰهِஅல்லாஹ்விற்கு முன்جَمِيْعًاஅனைவரும்فَقَالَகூறுவார்(கள்)الضُّعَفٰۤؤُاபலவீனர்கள்لِلَّذِيْنَஎவர்களுக்குاسْتَكْبَرُوْۤاபெருமையடித்தனர்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்لَـكُمْஉங்களைتَبَعًاபின்பற்றுபவர்களாகفَهَلْஆகவே ?اَنْـتُمْநீங்கள்مُّغْـنُوْنَதடுப்பீர்கள்عَنَّاஎங்களை விட்டுمِنْ عَذَابِவேதனையிலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்مِنْ شَىْءٍ‌ؕஎதையும்قَالُوْاகூறினர்لَوْ هَدٰٮنَاவழிகாட்டினால்اللّٰهُஅல்லாஹ்لَهَدَيْنٰவழிகாட்டுவோம்كُمْ‌ؕஉங்களுக்குسَوَآءٌசமமேعَلَيْنَاۤநம் மீதுاَجَزِعْنَاۤநாம் பதட்டப்பட்டால் என்ன?اَمْஅல்லதுصَبَرْنَاசகித்தோம்مَاஇல்லைلَــنَاநமக்குمِنْஅறவேمَّحِيْصٍ‏தப்புமிடம்
வ BபரZஜூ லில்லாஹி ஜமீ'அன் Fபகாலள் ளு'அFபா'உ லில் லதீனஸ் தக்Bபரூ இன்னா குன்னா லகும் தBப'அன் Fபஹல் அன்தும் முக்னூன 'அன்னா மின் 'அதாBபில் லாஹி மின் ஷய்'; காலூ லவ் ஹதானல் லாஹு ல ஹதய்னாகும் ஸவா'உன் 'அலய்னா அஜZஜிஃனா அம் ஸBபர்னா மா லனா மின் மஹீஸ்
(மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், (பலசாலிகளென) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றி நடந்தோம். ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவையேனும் எங்களுக்கு நீங்கள் தடுத்து விட வேண்டாமா?'' என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் (வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அல்லாஹ் எங்களுக்கு ஒரு வழி வைத்திருந்தால் (அதை) நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். (தப்ப வழி இல்லை. எங்கள் வேதனையைப்பற்றி) நாங்கள் பதட்டப்பட்டு துடிதுடிப்பதும் அல்லது (அதைச்) சகித்துக் கொண்டு பொறுத்திருப்பதும் ஒன்றாகவே இருக்கிறது. (இவ் வேதனையிலிருந்து) தப்ப எங்களுக்கு ஒரு வழியும் இல்லையே!'' என்று புலம்புவார்கள்.
اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ قُلُوْبُهُمْ مُّنْكِرَةٌ وَّهُمْ مُّسْتَكْبِرُوْنَ ۟
اِلٰهُكُمْ(வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌ‌ ۚஒரே ஒருவன்فَالَّذِيْنَஎவர்கள்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِالْاٰخِرَةِமறுமையைقُلُوْبُهُمْஉள்ளங்கள்/அவர்களுடையمُّنْكِرَةٌநிராகரிக்கின்றனوَّهُمْஇன்னும் அவர்கள்مُّسْتَكْبِرُوْنَ‏பெருமையடிக்கிறார்கள்
இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹித்; Fபல்லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி குலூBபுஹும் முன்கிரது(ன்)வ் வ ஹும் முஸ்தக்Bபிரூன்
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆகவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (எதைக் கூறியபோதிலும்) நிராகரிப்பவைகளாகவே இருக்கின்றன. மேலும், அவர்கள் மிகக் கர்வம்கொண்டு பெருமையடிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
فَادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ؕ فَلَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟
فَادْخُلُوْۤاஆகவே நுழையுங்கள்اَبْوَابَவாசல்களில்جَهَنَّمَநரகத்தின்خٰلِدِيْنَநிரந்தரமானவர்களாகفِيْهَا‌ؕஅதில்فَلَبِئْسَகெட்டுவிட்டதுمَثْوَىதங்குமிடம்الْمُتَكَبِّرِيْنَ‏பெருமையடிப்பவர்களின்
Fபத்குலூ அBப்வாBப ஜஹன்னம காலிதீன Fபீஹா FபலBபி'ஸ மத்வல் முதகBப் Bபிரீன்
(மேலும், இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து என்றென்றுமே அதில் தங்கி விடுங்கள்'' (என்று கூறுவார்கள்). பெருமை அடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மகா கெட்டது.
وَلِلّٰهِ یَسْجُدُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ مِنْ دَآبَّةٍ وَّالْمَلٰٓىِٕكَةُ وَهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
وَلِلّٰهِஅல்லாஹ்விற்குيَسْجُدُசிரம் பணிகிறார்(கள்)مَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَمَا فِى الْاَرْضِஇன்னும் பூமியில்உள்ளவைمِنْ دَآبَّةٍஎல்லா உயிரினங்கள்وَّالْمَلٰۤٮِٕكَةُஇன்னும் வானவர்கள்وَهُمْஇன்னும் அவர்கள்لَا يَسْتَكْبِرُوْنَ‏பெருமையடிப்பதில்லை
வ லில்லாஹி யஸ்ஜுது மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி மின் தாBப்Bபதி(ன்)வ் வல்ம லா'இகது வ ஹும் லா யஸ்தக்Bபிரூன்
வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்வையே சிரம்பணிந்து வணங்குகின்றனர்.அவர்கள் (இப்லீஸைப் போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை.
وَلَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًا ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا ۟
وَلَا تَمْشِஇன்னும் நடக்காதேفِى الْاَرْضِபூமியில்مَرَحًا‌ ۚகர்வம் கொண்டவனாகاِنَّكَநிச்சயமாக நீلَنْ تَخْرِقَஅறவே நீ கிழிக்க(வும்) முடியாதுالْاَرْضَபூமியைوَلَنْ تَبْلُغَஇன்னும் அறவே நீ அடைய(வும்) முடியாதுالْجِبَالَமலைகளின்طُوْلًا‏உயரத்தை
வ லா தம்ஷி Fபில் அர்ளி மரஹன் இன்னக லன் தக்ரிகல் அர்ள வ லன் தBப்லுகல் ஜிBபால தூலா
பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உம்மால் முடியாது.
وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ لَمْ یَتَّخِذْ وَلَدًا وَّلَمْ یَكُنْ لَّهٗ شَرِیْكٌ فِی الْمُلْكِ وَلَمْ یَكُنْ لَّهٗ وَلِیٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِیْرًا ۟۠
وَقُلِஇன்னும் கூறுவீராகالْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்குரியதேالَّذِىْஎத்தகையவன்لَمْ يَتَّخِذْஅவன் ஆக்கிக் கொள்ளவில்லைوَلَدًاகுழந்தையைوَّلَمْ يَكُنْஇன்னும் அறவே இல்லைلَّهٗஅவனுக்குشَرِيْكٌஇணைفِى الْمُلْكِஆட்சியில்وَلَمْ يَكُنْஅறவே இல்லைلَّهٗஅவனுக்குوَلِىٌّநண்பன்مِّنَ الذُّلِّ‌பலவீனத்தினால்وَكَبِّرْهُஇன்னும் பெருமைப்படுத்துவீராக/அவனைتَكْبِيْرًا‏பெருமைப்படுத்துதல்
வ குலில் ஹம்து லில்லாஹில் லதீ லம் யத்தகித் வலத(ன்)வ் வ லம் யகுல் லஹூ ஷரீகுன் Fபில் முல்கி வ லம் யகுல் லஹூ வலிய்யும் மினத் துல்லி வ கBப்Bபிர்ஹு தக்Bபீரா
(நபியே!) கூறுவீராக: ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு ஒரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவனுக்கு பலவீனம் இல்லை என்பதால் அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை.'' ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுவீராக!
وَلَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَنْ عِنْدَهٗ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا یَسْتَحْسِرُوْنَ ۟ۚ
وَلَهٗஅவனுக்கேمَنْஎவர்கள்فِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِ‌ؕபூமியிலும்وَمَنْஇன்னும் எவர்கள்عِنْدَهٗஅவனிடம்لَا يَسْتَكْبِرُوْنَபெருமையடிக்க மாட்டார்கள்عَنْ عِبَادَتِهٖஅவனை வணங்குவதைவிட்டுوَلَا يَسْتَحْسِرُوْنَ‌ۚ‏இன்னும் சோர்வடைய மாட்டார்கள்
வ லஹூ மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ மன் 'இன்தஹூ லா யஸ்தக்Bபிரூன 'அன் 'இBபாத திஹீ வலா யஸ்தஹ்ஸிரூன்
வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுக்குரியனவே! அவனிடத்தில் இருக்கக்கூடிய (வானவர்களாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமை அடிக்கவும் மாட்டார்கள், சோர்வுறவும் மாட்டார்கள்.
لَنْ یَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰكِنْ یَّنَالُهُ التَّقْوٰی مِنْكُمْ ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ ؕ وَبَشِّرِ الْمُحْسِنِیْنَ ۟
لَنْ يَّنَالَஅறவே அடையாதுاللّٰهَஅல்லாஹ்வைلُحُـوْمُهَاஅவற்றின்இறைச்சிகள்وَلَا دِمَآؤُهَاஇன்னும் அவற்றின்இரத்தங்கள்وَلٰـكِنْஎனினும்يَّنَالُهُஅவனை அடையும்التَّقْوٰىஇறையச்சம்مِنْكُمْ‌ؕஉங்களிடமிருந்துكَذٰلِكَஇவ்வாறுதான்سَخَّرَهَاஅவற்றை வசப்படுத்திக் கொடுத்தான்لَـكُمْஉங்களுக்குلِتُكَبِّرُواபெருமைப் படுத்துவதற்காகاللّٰهَஅல்லாஹ்வைعَلٰى مَا هَدٰٮكُمْ‌ؕஅவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காகوَبَشِّرِநற்செய்தி கூறுவீராகالْمُحْسِنِيْنَ‏அழகிய முறையில் கீழ்ப்படிகின்றவர்களுக்கு
ல(ன்)ய் யனாலல் லாஹ லுஹூ முஹா வலா திமா'உஹா வ லாகி(ன்)ய் யனாலுஹுத் தக்வா மின்கும்; கதாலிக ஸக்கர்ஹா லகும் லிதுகBப்Bபிருல் லாஹ 'அலா ம ஹதாகும்; வ Bபஷ்ஷிருல் முஹ்ஸினீன்
(இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்கள் இறையச்சம்தான் அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை அறிவித்ததற்காக (அவனுக்கு நீங்கள் குர்பானி கொடுத்து) அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு இவ்வாறு அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (நபியே! இவ்வாறு குர்பானி கொடுத்து) நன்மை செய்பவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عَالِیْنَ ۟ۚ
اِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடமும்وَمَلَا۟ٮِٕهٖஇன்னும் அவனுடைய சமுதாயத் தலைவர்களிடமும்فَاسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமையடித்தனர்وَكَانُوْاஅவர்கள் இருந்தனர்قَوْمًاமக்களாகعٰلِيْنَ‌ ۚ‏ஆதிக்கம் செலுத்தக்கூடிய
இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் 'ஆலீன்
ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் (அனுப்பிவைத்தோம்). அவர்களோ கர்வம் கொண்டு பெருமை அடிக்கும் மக்களாக இருந்தார்கள்.
اَلَّا تَعْلُوْا عَلَیَّ وَاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟۠
اَلَّا تَعْلُوْاநீங்கள் பெருமை காட்டாதீர்கள்!عَلَىَّஎன்னிடம்وَاْتُوْنِىْஎன்னிடம் வந்து விடுங்கள்!مُسْلِمِيْنَ‏பணிந்தவர்களாக
அல்லா தஃலூ 'அலய்ய வா தூனீ முஸ்லிமீன்
நீங்கள் (கர்வம் கொண்டு) என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்'' (என்றும் எழுதப்பட்டிருக்கிறது) என்று கூறி
اِنَّ فِرْعَوْنَ عَلَا فِی الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِیَعًا یَّسْتَضْعِفُ طَآىِٕفَةً مِّنْهُمْ یُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَیَسْتَحْیٖ نِسَآءَهُمْ ؕ اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِرْعَوْنَஃபிர்அவ்ன்عَلَاபலவந்தப்படுத்தினான்فِى الْاَرْضِபூமியில்وَجَعَلَஇன்னும் ஆக்கினான்اَهْلَهَاஅங்குள்ளவர்களைشِيَـعًاபல பிரிவுகளாகيَّسْتَضْعِفُபலவீனப்படுத்தினான்طَآٮِٕفَةًஒரு வகுப்பாரைمِّنْهُمْஅவர்களில்يُذَبِّحُகொன்றான்اَبْنَآءَஆண் பிள்ளைகளைهُمْஅவர்களின்وَيَسْتَحْىٖவாழவிட்டான்نِسَآءَهُمْ‌ ؕஅவர்களின் பெண்களைاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்مِنَ الْمُفْسِدِيْنَ‏கெட்டவர்களில் ஒருவனாக
இன்ன Fபிர்'அவ்ன 'அலா Fபில் அர்ளி வ ஜ'அல அஹ்லஹா ஷிய'அய் யஸ்தள்'இFபு தா'இFபதம் மின்ஹும் யுதBப்Bபிஹு அBப்னா'அஹும் வ யஸ்தஹ்யீ னிஸா'அஹும்; இன்னஹூ கான மினல் முFப்ஸிதீன்
நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழவைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமிகளில் ஒருவனாகவே இருந்தான்.
وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُوْدُهٗ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَظَنُّوْۤا اَنَّهُمْ اِلَیْنَا لَا یُرْجَعُوْنَ ۟
وَاسْتَكْبَرَபெருமையடித்தனர்هُوَஅவனும்وَجُنُوْدُهٗஅவனுடைய ராணுவங்களும்فِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَـقِّநியாயமின்றிوَظَنُّوْۤاஇன்னும் நினைத்தனர்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اِلَـيْنَاநம்மிடம்لَا يُرْجَعُوْنَ‏திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள்
வஸ்தக்Bபர ஹுவ வ ஜுனூதுஹூ Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ ளன்னூ அன்னஹும் இலய்னா லா யுர்ஜ'ஊன்
அவனும் அவனுடைய இராணுவங்களும் நியாயமின்றிப் பூமியில் பெருமை அடித்தனர், நிச்சயமாக அவர்கள் நம்மிடம் (விசாரணைக்காக) கொண்டுவரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டனர்.
تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِیْنَ لَا یُرِیْدُوْنَ عُلُوًّا فِی الْاَرْضِ وَلَا فَسَادًا ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟
تِلْكَஅந்தالدَّارُஇல்லமானதுالْاٰخِرَةُமறுமைنَجْعَلُهَاஅதை ஆக்குவோம்لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَவிரும்பாதவர்களுக்குعُلُوًّاஅநியாயத்தையோفِى الْاَرْضِபூமியில்وَلَا فَسَادًا‌ ؕகுழப்பத்தையோوَالْعَاقِبَةُமுடிவான நற்பாக்கியம்لِلْمُتَّقِيْنَ‏இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு
தில்கத் தாருல் ஆகிரது னஜ்'அலுஹா லில்லதீன லா யுரீதூன 'உலுவ்வன் Fபில் அர்ளி வலா Fபஸாதா; வல் 'ஆகிBபது லில்முத்தகீன்
(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சம் உடையவர்களுக்குத்தான் உண்டு.
وَقَارُوْنَ وَفِرْعَوْنَ وَهَامٰنَ ۫ وَلَقَدْ جَآءَهُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ وَمَا كَانُوْا سٰبِقِیْنَ ۟ۚۖ
وَقَارُوْنَஇன்னும் காரூனையும்وَفِرْعَوْنَஃபிர்அவ்னையும்وَهَامٰنَ‌ஹாமானையும்وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَهُمْஅவர்களிடம் வந்தார்مُّوْسٰىமூசாبِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَاسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமையடித்தனர்فِى الْاَرْضِபூமியில்وَمَا كَانُوْاஅவர்கள் இல்லைسٰبِقِيْنَ ۖ ۚ‏தப்பி விடுபவர்களாக
வ காரூன வ Fபிர்'அவ்ன வ ஹாமான வ லகத் ஜா'அஹும் மூஸா Bபில்Bபய்யினாதி Fபஸ்தக்Bபரூ Fபில் அர்ளி வமா கானூ ஸாBபிகீன்
காரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (நாம் இவ்வாறே அழித்து விட்டோம்). நிச்சயமாக மூஸா இவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். எனினும், இவர்கள் (அவற்றை நிராகரித்து விட்டுப்) பூமியில் பெருமை கொண்டு நடந்ததினால் (நம் வேதனைக்கு உள்ளானார்கள். அதில் இருந்து) அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍ ۟ۚ
وَلَا تُصَعِّرْதிருப்பிக்கொள்ளாதே!خَدَّكَஉனது கன்னத்தைلِلنَّاسِமக்களை விட்டுوَلَا تَمْشِஇன்னும் நடக்காதேفِى الْاَرْضِபூமியில்مَرَحًا ؕபெருமை பிடித்தவனாகاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يُحِبُّவிரும்ப மாட்டான்كُلَّஅனைவரையும்مُخْتَالٍகர்வமுடையவர்(கள்)فَخُوْرٍۚ‏தற்பெருமை பேசுபவர்(கள்)
வ லா துஸ'-'இர் கத்தக லின்னாஸி வலா தம்ஷி Fபில் அர்ளி மாரஹன் இன்னல் லாஹ லா யுஹிBப்Bபு குல்ல முக்தாலின் Fபகூர்
(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
وَاقْصِدْ فِیْ مَشْیِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ ؕ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِیْرِ ۟۠
وَاقْصِدْஇன்னும் பணிவாக இரு!فِىْ مَشْيِكَஉனது நடையில்وَاغْضُضْஇன்னும் தாழ்த்திக்கொள்!مِنْ صَوْتِكَ‌ؕஉனது சப்தத்தைاِنَّநிச்சயமாகاَنْكَرَமிக மிக அருவருப்பானதுالْاَصْوَاتِசப்தங்களில்لَصَوْتُசப்தமாகும்الْحَمِيْرِ‏கழுதைகளின்
வக்ஸித் Fபீ மஷ்யிக வக்ளுள் மின் ஸவ்திக்; இன்ன அன்கரல் அஸ்வாதி லஸவ்துல் ஹமீர்
உன் நடையில் (பெருமையும் கர்வமுமின்றி) மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக்கொள். ஏனென்றால், சப்தங்களிலெல்லாம் மிக்க வெறுக்கத்தக்கது கழுதையின் (உரத்த) சப்தமே!'' (என்று கூறினார்).
اِنَّمَا یُؤْمِنُ بِاٰیٰتِنَا الَّذِیْنَ اِذَا ذُكِّرُوْا بِهَا خَرُّوْا سُجَّدًا وَّسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
اِنَّمَا يُؤْمِنُநம்பிக்கை கொள்பவர்கள் எல்லாம்بِاٰيٰتِنَاநமது வசனங்களைالَّذِيْنَஎவர்கள்اِذَا ذُكِّرُوْاஅவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால்بِهَاஅவற்றின் மூலம்خَرُّوْاவீழ்ந்து விடுவார்கள்سُجَّدًاசிரம் பணிந்தவர்களாகوَّسَبَّحُوْاஇன்னும் துதிப்பார்கள்بِحَمْدِபுகழ்ந்துرَبِّهِمْதங்கள் இறைவனைوَهُمْஇன்னும் அவர்கள்لَا يَسْتَكْبِرُوْنَ۩‏பெருமையடிக்க மாட்டார்கள்
இன்னமா யு'மினு Bபி ஆயாதினல் லதீன இதா துக்கிரூ Bபிஹா கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ ஸBப்Bபஹூ Bபிஹம்தி ரBப்Bபிஹிம் வ ஹும் லா யஸ்தக்Bபிரூன்
நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், எவர்கள் (பூமியில்) சிரம் பணிந்து தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்கிறார்களோ அவர்கள்தான் நம் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் கர்வம்கொண்டு பெருமையடிக்கவும் மாட்டார்கள்.
لَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ؕ كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ ۟
اۨلَّذِيْنَஎவர்கள்يُجَادِلُوْنَதர்க்கம் செய்கின்றார்கள்فِىْۤ اٰيٰتِஅத்தாட்சிகளில்اللّٰهِஅல்லாஹ்வின்بِغَيْرِ سُلْطٰنٍஎவ்வித ஆதாரமின்றிاَتٰٮهُمْ ؕதங்களிடம் வந்த(து)كَبُـرَமிகப் பெரிய(து)مَقْتًاகோபத்திற்குரியதுعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விட(மு)ம்وَعِنْدَ الَّذِيْنَ اٰمَنُوْا ؕநம்பிக்கையாளர்களிடமும்كَذٰلِكَஇவ்வாறுதான்يَطْبَعُமுத்திரையிடுகிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى كُلِّ قَلْبِஎல்லோருடைய உள்ளத்திலும்مُتَكَبِّرٍபெருமை அடிக்கின்றவர்கள்جَبَّارٍ‏அநியாயக்காரர்கள்
அல்லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதில் லாஹி Bபிகய்ரி ஸுல்தானின் அதாஹும் கBபுர மக்தன் 'இன்தல் லாஹி வ 'இன்தல் லதீன ஆமனூ; கதாலிக யத்Bபஹுல் லாஹு 'அலா குல்லி கல்Bபி முதகBப்Bபிரின் ஜBப்Bபார்
எவர்கள் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறக்கூடிய ஓர் ஆதாரமுமின்றியே, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கிறார்களோ... (அவர்கள் நஷ்டமடைந்து விடுவார்கள்). ஏனென்றால், இது அல்லாஹ்விடத்திலும், நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் பெரும் அருவருப்பானதாகும். இவ்வாறே, பெருமை கொள்ளும் வம்பர்களின் உள்ளங்களிலெல்லாம் முத்திரையிட்டு விடுகிறான்'' (என்றும் அவர் கூறினார்).
وَاِذْ یَتَحَآجُّوْنَ فِی النَّارِ فَیَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِیْبًا مِّنَ النَّارِ ۟
وَاِذْ يَتَحَآجُّوْنَஅவர்கள் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போதுفِى النَّارِநரகத்தில்فَيَقُوْلُகூறுவார்கள்الضُّعَفٰٓؤُاபலவீனமானவர்கள்لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤاபெருமை கொண்டிருந்தவர்களுக்குاِنَّا كُنَّاநிச்சயமாக நாங்கள் இருந்தோம்لَـكُمْஉங்களைتَبَعًاபின்பற்றுபவர்களாகفَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَஆகவே நீங்கள் தடுப்பீர்களா?عَنَّاஎங்களை விட்டுنَصِيْبًاஒரு பகுதியைمِّنَ النَّارِ‏நரகத்தில் இருந்து
வ இத் யதஹாஜ்ஜூன Fபின் னாரி Fப-யகூலுள் ளு'அFபா'உ லில்லதீனஸ் தக்Bபரூ இன்னா குன்னா லகும் தBப'அன் Fபஹல் அன்தும் முக்னூன அன்னா னஸீBபம் மினன் னார்
நரகத்தில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (அவர்களில் உள்ள) பலவீனமானவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்த (தலை)வர்களை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களையே பின்பற்றியிருந்தோம். இன்றைய தினம் நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு சிறிதேனும் எங்களை விட்டு நீங்கள் தடுத்துவிட முடியுமா?'' என்று கேட்பார்கள்.
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُلٌّ فِیْهَاۤ ۙ اِنَّ اللّٰهَ قَدْ حَكَمَ بَیْنَ الْعِبَادِ ۟
قَالَகூறுவார்(கள்)الَّذِيْنَ اسْتَكْبَرُوْۤاபெருமை அடித்தவர்கள்اِنَّاநிச்சயமாக நாம்كُلٌّஎல்லோரும்فِيْهَاۤஅதில்தான்ۙاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَدْ حَكَمَதிட்டமாக தீர்ப்பளித்து விட்டான்بَيْنَ الْعِبَادِ‏அடியார்களுக்கு மத்தியில்
காலல் லதீனஸ் தக்Bபரூ இன்னா குல்லுன் Fபீஹா இன்னல் லாஹ கத் ஹகம Bபய்னல்'இBபாத்
அதற்கு, பெருமையடித்துக் கொண்டிருந்த அ(வர்களுடைய தலை)வர்கள், ‘‘மெய்யாகவே (நாங்களும், நீங்களும் ஆக) நாம் அனைவரும் நரகத்தில்தான் இருக்கிறோம். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு(ச் செய்ய வேண்டிய) தீர்ப்பைச் செய்து விட்டான். (ஆகவே, உங்களுக்காக நாங்கள் ஒன்றும் உதவி செய்வதற்கில்லை)'' என்று கூறுவார்கள்.
اِنَّ الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ۙ اِنْ فِیْ صُدُوْرِهِمْ اِلَّا كِبْرٌ مَّا هُمْ بِبَالِغِیْهِ ۚ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ يُجَادِلُوْنَதர்க்கம் செய்பவர்கள்فِىْۤ اٰيٰتِஅத்தாட்சிகள் விஷயத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்بِغَيْرِ سُلْطٰنٍஎவ்வித ஆதாரமும் இன்றிاَتٰٮهُمْۙதங்களிடம் வந்தاِنْ فِىْ صُدُوْرِهِمْஅவர்களின் உள்ளங்களில் இல்லைاِلَّاதவிரكِبْرٌபெருமையைمَّا هُمْ بِبَالِغِيْهِؕஅவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாதுفَاسْتَعِذْஆகவே, நீர் பாதுகாப்புத் தேடுவீராக!بِاللّٰهِؕஅல்லாஹ்விடம்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْبَصِيْرُ‏உற்று நோக்குபவன்
இன்னல் லதீன யுஜாதி லூன Fபீ ஆயாதில் லாஹி Bபிகய்ரி ஸுல்தானின் அதாஹும் இன் Fபீ ஸுதூரிஹிம் இல்லா கிBப்ரும் மா ஹும் BபிBபாலிகீஹ்; Fபஸ்த'இத் Bபில்லாஹி இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் ஆதாரம் ஏதும் இல்லாதிருக்க அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் (வெறும்) பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. (அப்பெருமையை) அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (உம்மை) பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் நீர் கோருவீராக. நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِیْۤ اَسْتَجِبْ لَكُمْ ؕ اِنَّ الَّذِیْنَ یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِیْ سَیَدْخُلُوْنَ جَهَنَّمَ دٰخِرِیْنَ ۟۠
وَقَالَகூறுகிறான்رَبُّكُمُஉங்கள் இறைவன்ادْعُوْنِىْۤஎன்னிடம் பிரார்த்தியுங்கள்!اَسْتَجِبْநான் அங்கீகரிப்பேன்لَـكُمْؕஉங்களுக்குاِنَّநிச்சயமாகالَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَபெருமை அடிப்பவர்கள்عَنْ عِبَادَتِىْஎனது வணக்க வழிபாடுகளை விட்டுسَيَدْخُلُوْنَநுழைவார்கள்جَهَنَّمَநரகத்தில்دَاخِرِيْنَ‏சிறுமைப்பட்டவர்களாக
வ கால ரBப்Bபுகுமுத் 'ஊனீ அஸ்தஜிBப் லகும்; இன்னல் லதீன யஸ்தக்Bபிரூன அன் 'இBபாததீ ஸ யத்குலூன ஜஹன்னம தாகிரீன்
உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்.
فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً ؕ اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً ؕ وَكَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
فَاَمَّا عَادٌஆக, ஆது சமுதாயம்فَاسْتَكْبَرُوْاபெருமை அடித்தனர்فِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَقِّஅநியாயமாகوَقَالُوْاஇன்னும் கூறினார்கள்مَنْயார்اَشَدُّமிக பலசாலி(கள்)مِنَّاஎங்களை விடقُوَّةً  ؕவலிமையால்اَوَلَمْ يَرَوْاஇவர்கள் கவனிக்கவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்الَّذِىْ خَلَقَهُمْஎவன்/படைத்தான்/அவர்களைهُوَஅவன்اَشَدُّமிக பலசாலிمِنْهُمْஅவர்களை விடقُوَّةً  ؕவலிமையால்وَكَانُوْاஅவர்கள் இருந்தனர்بِاٰيٰتِنَاநமது வசனங்களைيَجْحَدُوْنَ‏மறுப்பவர்களாக
Fப அம்மா 'ஆதுன் Fபஸ்தக் Bபரூ Fபில் அர்ளி Bபிகய்ருல் ஹக்கி வ காலூ மன் அஷத்து மின்னா குவ்வதன் அவலம் யரவ் அன்னல் லாஹல் லதீ கலகஹும் ஹுவ அஷத்து மின்ஹும் குவ்வத(ன்)வ் வ கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
ஆது என்னும் மக்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமைகொண்டு, எங்களைவிட பலசாலியாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (எனினும்,) அவர்கள் நமது (இத்தகைய) அத்தாட்சிகளையும் (தர்க்கித்து) நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள்.
وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا ۫ اَفَلَمْ تَكُنْ اٰیٰتِیْ تُتْلٰی عَلَیْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
وَاَمَّاஆகالَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரித்தவர்கள்اَفَلَمْ تَكُنْஇருக்கவில்லையா?اٰيٰتِىْஎனது வசனங்கள்تُتْلٰىஓதப்படுகின்றனعَلَيْكُمْஉங்கள் மீதுفَاسْتَكْبَرْتُمْநீங்கள் பெருமை அடித்தீர்கள்وَكُنْتُمْஇன்னும் நீங்கள் இருந்தீர்கள்قَوْمًاமக்களாகمُّجْرِمِيْنَ‏குற்றம் புரிகின்றவர்கள்
வ அம்மல் லதீன கFபரூ அFபலம் தகுன் ஆயாதீ துத்லா 'அலய்கும் Fபஸ்தக்Bபர்தும் வ குன்தும் கவ்மம் முஜ்ரிமீன்
எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதைப் புறக்கணித்து) விட்டீர்கள். இன்னும் நீங்கள் குற்றவாளிகளாக இருந்தீர்கள்'' (என்றும் கூறப்படும்).
وَلَهُ الْكِبْرِیَآءُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۪ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
وَلَهُஇன்னும் அவனுக்கே உரியதுالْكِبْرِيَآءُபெருமைفِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِ‌பூமியிலும்وَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
வ லஹுல் கிBப்ரியா'உ Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா பெருமைகளும் அவனுக்கே சொந்தமானவை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ وَكَفَرْتُمْ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی مِثْلِهٖ فَاٰمَنَ وَاسْتَكْبَرْتُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
قُلْகூறுவீராக!اَرَءَيْتُمْஅறிவியுங்கள்اِنْ كَانَஇது இருந்தால்مِنْ عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துوَكَفَرْتُمْஇன்னும் நீங்கள் நிராகரித்து விட்டால்بِهٖஇதைوَشَهِدَஇன்னும் சாட்சியும் கூறினார்شَاهِدٌஒரு சாட்சியாளர்مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களில் உள்ளعَلٰى مِثْلِهٖஇதுபோன்ற ஒன்றுக்குفَاٰمَنَஅவர் நம்பிக்கை கொண்டிருக்கوَاسْتَكْبَرْتُمْ‌ ؕநீங்களோ பெருமை அடித்தீர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி காட்ட மாட்டான்الْقَوْمَமக்களுக்குالظّٰلِمِيْنَ‏அநியாயக்கார(ர்கள்)
குல் அர'அய்தும் இன் கான மின் 'இன்தில் லாஹி வ கFபர்தும் Bபிஹீ வ ஷஹித ஷாஹிதும் மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா மித்லிஹீ Fப ஆமன வஸ்தக் Bபர்தும் இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
(நபியே!) கூறுவீராக: ‘‘(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப் போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கிறது என்று சாட்சியம் கூறி, அதை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதை நிராகரித்து) விட்டால், (உங்கள் கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.''
وَیَوْمَ یُعْرَضُ الَّذِیْنَ كَفَرُوْا عَلَی النَّارِ ؕ اَذْهَبْتُمْ طَیِّبٰتِكُمْ فِیْ حَیَاتِكُمُ الدُّنْیَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ۚ فَالْیَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ ۟۠
وَيَوْمَ يُعْرَضُசமர்ப்பிக்கப்படுகின்ற நாளில்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்عَلَى النَّارِ ؕநரகத்தின் முன்اَذْهَبْتُمْநீங்கள் போக்கிக் கொண்டீர்கள்طَيِّبٰـتِكُمْஉங்கள் நன்மைகளைفِىْ حَيَاتِكُمُஉங்கள் வாழ்க்கையிலேالدُّنْيَاஉலகوَاسْتَمْتَعْتُمْஇன்னும் இன்பம் அடைந்தீர்கள்بِهَا ۚஅவற்றின் மூலம்فَالْيَوْمَஆகவே இன்றைய தினம்تُجْزَوْنَகூலியாக கொடுக்கப்படுவீர்கள்عَذَابَதண்டனையைالْهُوْنِகேவலமானبِمَا كُنْـتُمْநீங்கள் இருந்த காரணத்தாலும்تَسْتَكْبِرُوْنَநீங்கள் பெருமையடிப்பவர்களாகفِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَقِّஅநியாயமாகوَبِمَا كُنْتُمْநீங்கள் இருந்த காரணத்தாலும்تَفْسُقُوْنَ‏நீங்கள் பாவம் செய்பவர்களாக
வ யவ்ம யுஃரளுல் லதீன கFபரூ 'அலன் னாரி அத்ஹBப்தும் தய்யிBபாதிகும் Fபீ ஹயாதிகுமுத் துன்யா வஸ்தம் தஃதும் Bபிஹா Fபல் யவ்ம துஜ்Zஜவ்ன 'அதாBபல் ஹூனி Bபிமா குன்தும் தஸ்தக்Bபிரூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ Bபிமா குன்தும் தFப்ஸுகூன்
நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் உலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், நீங்கள் பெற்றிருந்த நல்லவற்றை எல்லாம், (நன்மையான காரியங்களில் உபயோகிக்காது) உங்கள் சுகபோகங்களிலேயே உபயோகித்து இன்பமனுபவித்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக்கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்ததன் காரணமாக, இழிவு தரும் வேதனையே இன்றைய தினம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்'' (என்று கூறப்படும்).
یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُ وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآىِٕلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَتْقٰىكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌ خَبِیْرٌ ۟
يٰۤاَيُّهَا النَّاسُமக்களே!اِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்مِّنْ ذَكَرٍஓர் ஆணிலிருந்துوَّاُنْثٰىஇன்னும் ஒரு பெண்وَجَعَلْنٰكُمْஇன்னும் உங்களை நாம் ஆக்கினோம்شُعُوْبًاபல நாட்டவர்களாக(வும்)وَّقَبَآٮِٕلَபல குலத்தவர்களாகவும்لِتَعَارَفُوْا‌ ؕநீங்கள் ஒருவர் ஒருவரை அறிவதற்காகاِنَّநிச்சயமாகاَكْرَمَكُمْஉங்களில் மிக கண்ணியமானவர்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்اَ تْقٰٮكُمْ‌ ؕஉங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்خَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
யா அய்யுஹன் னாஸு இன்னா கலக்னாகும் மின் தகரி(ன்)வ் வ உன்தா வ ஜ'அல்னாகும் ஷு'ஊBப(ன்)வ் வ கBபா'இல லித'ஆரFபூ இன்ன அக்ரமகும் 'இன்தல் லாஹி அத்காகும் இன்னல் லாஹ 'அலீமுன் கBபீர்
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரேஓர் ஆண், ஒரேஓர் பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பெருமை பேசாதீர்கள்.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், நன்கு தெரிந்தவன் ஆவான்.
وَّیَبْقٰی وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟ۚ
وَّيَبْقٰىநிலையாக நீடித்து இருக்கும்وَجْهُமுகம்தான்رَبِّكَஉமது இறைவனின்ذُو الْجَلٰلِகம்பீரத்திற்கு(ம்) உரியவனாகியوَالْاِكْرَامِ‌ۚ‏கண்ணியத்திற்கும்
வ யBப்கா வஜ்ஹு ரBப்Bபிக துல் ஜலாலி வல் இக்ராம்
மிக கண்ணியமும் பெருமையும் உடைய உமது இறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்.
اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِیْنَةٌ وَّتَفَاخُرٌ بَیْنَكُمْ وَتَكَاثُرٌ فِی الْاَمْوَالِ وَالْاَوْلَادِ ؕ كَمَثَلِ غَیْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ یَهِیْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ یَكُوْنُ حُطَامًا ؕ وَفِی الْاٰخِرَةِ عَذَابٌ شَدِیْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ ؕ وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟
اِعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَاஉலக வாழ்க்கை எல்லாம்لَعِبٌவிளையாட்டு(ம்)وَّلَهْوٌவேடிக்கையும்وَّزِيْنَةٌஅலங்காரமும்وَّتَفَاخُرٌۢபெருமை அடிப்பதும்بَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்وَتَكَاثُرٌஅதிகத்தின் போட்டியும்தான்فِى الْاَمْوَالِசெல்வங்களிலும்وَالْاَوْلَادِ‌ؕபிள்ளைகளிலும்كَمَثَلِபோல்தான்غَيْثٍஒரு மழையைاَعْجَبَகவர்ந்ததுالْكُفَّارَவிவசாயிகளைنَبَاتُهٗஅதன் விளைச்சல்ثُمَّபிறகுيَهِيْجُஅது காய்ந்து விடுகிறதுفَتَرٰٮهُஅதை நீர் பார்க்கிறீர்مُصْفَرًّاமஞ்சளாகثُمَّபிறகுيَكُوْنُஅது ஆகிவிடுகிறதுحُطٰمًا‌ؕகுப்பையாகوَفِى الْاٰخِرَةِமறுமையில்عَذَابٌவேதனை(யும்)شَدِيْدٌ ۙகடுமையான(து)وَّمَغْفِرَةٌமன்னிப்பும்مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின் புறத்தில் இருந்துوَرِضْوَانٌ‌ؕதிருப்பொருத்தமும்وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤஉலக வாழ்க்கை இல்லைاِلَّا مَتَاعُஇன்பமே தவிரالْغُرُوْرِ‏மயக்கக் கூடிய(து)
இஃலமூ அன்னமல் ஹயா துத் துன்யா ல'இBபு(ன்)வ் வ லஹ்வு(ன்)வ் வ Zஜீனது(ன்)வ் வ தFபாகுரும் Bபய்னகும் வ தகாதுருன் Fபில் அம்வாலி வல் அவ்லாத், கமதலி கய்தின் அஃஜBபல் குFப்Fபார னBபாதுஹூ தும்ம யஹீஜு Fபதராஹு முஸ்Fபாரன் தும்ம யகூனு ஹுதாமா; வ Fபில் ஆகிரதி 'அதாBபுன் ஷதீது(ன்)வ் வ மக் Fபிரதும் மினல் லாஹி வ ரிள்வான்; வ மல் ஹய்யா துத்துன் யா இல்லா மதா'உல் குரூர்
(மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும்தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண் பெருமையும், பொருளிலும் சந்ததியிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ணமும்தான். (இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிகளுக்குக் களிப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதை நீர் காண்கிறீர். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது.) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (பலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமே தவிர வேறில்லை.
لِّكَیْلَا تَاْسَوْا عَلٰی مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰىكُمْ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِ ۟ۙ
لِّـكَيْلَا تَاْسَوْاஏனெனில், நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காக(வும்)عَلٰى مَا فَاتَكُمْஉங்களுக்கு தவறி விட்டதற்காகوَلَا تَفْرَحُوْاநீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும்بِمَاۤ اٰتٰٮكُمْ‌ؕ وَاللّٰهُஅவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு/அல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்كُلَّஎல்லோரையும்مُخْتَالٍஅகம்பாவக்காரர்கள்فَخُوْرِۙ‏பெருமையடிப்பவர்கள்
லிகய்லா த'ஸவ் 'அலா மா Fபாதகும் வலா தFப்ரஹூ Bபிமா ஆதாகும்; வல்லாஹு லா யுஹிBப்Bபு குல்ல முக்தாலின் Fபகூர்
உங்களை விட்டும் தவறிப்போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதை உங்களுக்கு அறிவிக்கிறான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை.
هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَیْمِنُ الْعَزِیْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟
هُوَஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎவன்لَاۤஅறவே இல்லைاِلٰهَகடவுள்اِلَّا هُوَ‌ۚஅவனைத் தவிரاَلْمَلِكُஅரசன்الْقُدُّوْسُமகா தூயவன்السَّلٰمُஈடேற்றம் அளிப்பவன்الْمُؤْمِنُஅபயமளிப்பவன்الْمُهَيْمِنُபாதுகாப்பவன்الْعَزِيْزُமிகைத்தவன்الْجَـبَّارُஅடக்கி ஆள்பவன்الْمُتَكَبِّرُ‌ؕபெருமைக்குரியவன்سُبْحٰنَமகா பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّا يُشْرِكُوْنَ‏அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
ஹுவல்-லாஹுல்-லதீ லா இலாஹ இல்லா ஹுவல்-மலிகுல் குத்தூஸுஸ்-ஸலாமுல் முமினுல் முஹய்மினுல்-'ஆZஜீZஜுல் ஜBப்Bபாருல்-முதகBப்Bபிர்; ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யுஷ்ரிகூன்
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனுமில்லை. அவன்தான் மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; சாந்தியும் சமாதானமும் அளிப்பவன்; அபயமளிப்பவன்; பாதுகாவலன்; (அனைவரையும்) மிகைத்தவன்; அடக்கி ஆளுபவன்; பெருமைக்குரியவன். இவர்கள் கூறும் இணை துணைகளை விட்டு அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
وَرَبَّكَ فَكَبِّرْ ۟
وَرَبَّكَஇன்னும் உமது இறைவனைفَكَبِّرْۙ‏பெருமைப்படுத்துவீராக!
வ ரBப்Bபக FபகBப்Bபிர்
உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக;
فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰىهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ ۙ۬ فَیَقُوْلُ رَبِّیْۤ اَكْرَمَنِ ۟ؕ
فَاَمَّاஆகالْاِنْسَانُமனிதன்اِذَا مَا ابْتَلٰٮهُஅவனைச் சோதித்த போதுرَبُّهٗஅவனுடைய இறைவன்فَاَكْرَمَهٗஇன்னும் அவனைக் கண்ணியப்படுத்தினான்وَنَعَّمَهٗ  ۙஇன்னும் அவனுக்கு அருட்கொடை புரிந்தான்فَيَقُوْلُகூறுகிறான்رَبِّىْۤஎன் இறைவன்اَكْرَمَنِؕ‏என்னைக் கண்ணியப்படுத்தினான்
Fப அம்மல் இன்ஸானு இதா மBப் தலாஹு ரBப்Bபுஹூ Fப அக்ரமஹூ வ ன' 'அமஹூ Fப யகூலு ரBப்Bபீ அக்ரமன்
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.