இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2906ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا
عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ حَوْلَ ذِي
الْخَلَصَةِ ‏ ‏ ‏.‏ وَكَانَتْ صَنَمًا تَعْبُدُهَا دَوْسٌ فِي الْجَاهِلِيَّةِ بِتَبَالَةَ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தௌஸ் குலப் பெண்களின் இடுப்புப் பகுதிகள் 'துல்-கலஸா'வைச் சுற்றி (சிலை வணக்கத்தின் ஒரு பகுதியாக) அசைந்து ஆடும் வரை மறுமை நாள் வராது." துல்-கலஸா என்பது 'தபாலா' எனும் இடத்தில் அறியாமைக்காலத்தில் தௌஸ் குலத்தார் வணங்கி வந்த ஒரு சிலையாகும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح