سنن ابن ماجه

10. كتاب النكاح

சுனன் இப்னுமாஜா

10. திருமணம் பற்றிய அத்தியாயங்கள்

باب مَا جَاءَ فِي فَضْلِ النِّكَاحِ
திருமணத்தின் சிறப்பு குறித்து அறிவிக்கப்பட்டவை
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ بْنِ قَيْسٍ، قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ بِمِنًى فَخَلاَ بِهِ عُثْمَانُ فَجَلَسْتُ قَرِيبًا مِنْهُ فَقَالَ لَهُ عُثْمَانُ هَلْ لَكَ أَنْ أُزَوِّجَكَ جَارِيَةً بِكْرًا تُذَكِّرُكَ مِنْ نَفْسِكَ بَعْضَ مَا قَدْ مَضَى فَلَمَّا رَأَى عَبْدُ اللَّهِ أَنَّهُ لَيْسَ لَهُ حَاجَةٌ سِوَى هَذَا أَشَارَ إِلَىَّ بِيَدِهِ فَجِئْتُ وَهُوَ يَقُولُ لَئِنْ قُلْتَ ذَلِكَ لَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ ‏ ‏ ‏.‏
பின்வருமாறு அறிவிக்கப்பட்டது:

அல்கமா பின் கைஸ் கூறினார்கள்: “நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்களுடன் மினாவில் இருந்தேன், அப்போது உஸ்மான் (ரழி) அவர்கள் அவரைத் தனியே அழைத்துச் சென்றார்கள். நான் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். உஸ்மான் (ரழி) அவர்கள் அவரிடம் கூறினார்கள்: 'கடந்த காலத்தில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு இளம் கன்னிகையை நான் உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கட்டுமா?' அதைத் தவிர வேறு எதையும் அவர் (உஸ்மான்) தன்னிடம் கூறவில்லை என்பதை அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கண்டபோது, என்னை நோக்கி சைகை செய்தார்கள். எனவே நான் வந்தேன், அப்போது அவர் கூறினார்கள்: 'நீங்கள் கூறுவதைப் போலவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இளைஞர்களே, உங்களில் திருமணம் முடிக்க சக்தியுள்ளவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது பார்வையைக் கட்டுப்படுத்துவதிலும், கற்பைக் காத்துக் கொள்வதிலும் மிகவும் சிறந்ததாகும். அதற்கு சக்தியில்லாதவர் நோன்பு நோற்கட்டும், ஏனெனில் அது அவரது ஆசையைக் குறைத்துவிடும்.” ' ”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ، حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ النِّكَاحُ مِنْ سُنَّتِي فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي وَتَزَوَّجُوا فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الأُمَمَ وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “திருமணம் எனது சுன்னாவில் ஒரு பகுதியாகும், மேலும், எவர் எனது சுன்னாவைப் பின்பற்றவில்லையோ, அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர். திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனெனில், மற்ற சமூகங்களுக்கு மத்தியில் உங்களின் அதிக எண்ணிக்கையைக் கொண்டு நான் பெருமைப்படுவேன். வசதியுள்ளவர் திருமணம் செய்து கொள்ளட்டும், மேலும் வசதியில்லாதவர், அவர் நோன்பு நோற்கட்டும், ஏனெனில், அது அவரின் ஆசையைக் குறைத்துவிடும்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ لَمْ نَرَ لِلْمُتَحَابَّيْنِ مِثْلَ النِّكَاحِ ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவரையொருவர் நேசிக்கும் இருவருக்கு, திருமணத்தைப் போன்ற எதுவும் இல்லை.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب النَّهْىِ عَنِ التَّبَتُّلِ
துறவறம் தடை செய்யப்பட்டுள்ளது
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ سَعْدٍ، قَالَ لَقَدْ رَدَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلَى عُثْمَانَ بْنِ مَظْعُونٍ التَّبَتُّلَ وَلَوْ أَذِنَ لَهُ لاَخْتَصَيْنَا ‏.‏
அறிவிக்கப்பட்டது:

ஸஃத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “உஸ்மான் இப்னு மழ்ஊன் (ரழி) அவர்கள் பிரம்மச்சரியம் மேற்கொள்ள விரும்பியதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்; அவர்கள் அவருக்கு அனுமதி அளித்திருந்தால், நாங்கள் எங்களையே காயடித்துக் கொண்டிருப்போம்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ، وَزَيْدُ بْنُ أَخْزَمَ، قَالاَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، ‏.‏ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنِ التَّبَتُّلِ ‏.‏ زَادَ زَيْدُ بْنُ أَخْزَمَ وَقَرَأَ قَتَادَةُ ‏{وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلاً مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً}‏ ‏.‏
ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரம்மச்சரியத்தை தடை செய்தார்கள். ஸைத் இப்னு அக்ஸம் அவர்கள் மேலும் கூறியதாவது: “மேலும் கத்தாதா அவர்கள் ஓதினார்கள்: '(முஹம்மதே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் தூதர்களை அனுப்பினோம்; அவர்களுக்காக மனைவிகளையும் சந்ததிகளையும் ஏற்படுத்தினோம்.'”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب حَقِّ الْمَرْأَةِ عَلَى الزَّوْجِ
கணவன் மீது மனைவிக்குள்ள உரிமைகள்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي قَزَعَةَ، عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ مَا حَقُّ الْمَرْأَةِ عَلَى الزَّوْجِ قَالَ ‏ ‏ أَنْ يُطْعِمَهَا إِذَا طَعِمَ وَأَنْ يَكْسُوَهَا إِذَا اكْتَسَى وَلاَ يَضْرِبِ الْوَجْهَ وَلاَ يُقَبِّحْ وَلاَ يَهْجُرْ إِلاَّ فِي الْبَيْتِ ‏ ‏ ‏.‏
ஹகீம் பின் முஆவியா அவர்கள், தம் தந்தை (முஆவியா (ரழி) அவர்கள்) வாயிலாக அறிவித்தார்கள்:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "ஒரு மனைவிக்கு அவளுடைய கணவர் மீதுள்ள உரிமை யாது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: “நீ உண்பதைப் போன்றே அவளுக்கும் உணவளிக்க வேண்டும்; நீ ஆடை அணிவதைப் போன்றே அவளுக்கும் ஆடை அளிக்க வேண்டும்; அவளுடைய முகத்தில் அடிக்கக் கூடாது; அவளை அலங்கோலப்படுத்தவும் கூடாது; மேலும், (ஒழுங்கு நடவடிக்கையாக) வீட்டில் தவிர அவளை வெறுத்து ஒதுக்கக் கூடாது.”

(ஹஸன்)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ شَبِيبِ بْنِ غَرْقَدَةَ الْبَارِقِيِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ، حَدَّثَنِي أَبِي أَنَّهُ، شَهِدَ حِجَّةَ الْوَدَاعِ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَذَكَّرَ وَوَعَظَ ثُمَّ قَالَ ‏ ‏ اسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّمَا هُنَّ عِنْدَكُمْ عَوَانٍ ‏.‏ لَيْسَ تَمْلِكُونَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذَلِكَ إِلاَّ أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ فَإِنْ فَعَلْنَ فَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ لَكُمْ مِنْ نِسَائِكُمْ حَقًّا وَلِنِسَائِكُمْ عَلَيْكُمْ حَقًّا فَأَمَّا حَقُّكُمْ عَلَى نِسَائِكُمْ فَلاَ يُوطِئْنَ فُرُشَكُمْ مَنْ تَكْرَهُونَ وَلاَ يَأْذَنَّ فِي بُيُوتِكُمُ لِمَنْ تَكْرَهُونَ أَلاَ وَحَقُّهُنَّ عَلَيْكُمْ أَنْ تُحْسِنُوا إِلَيْهِنَّ فِي كِسْوَتِهِنَّ وَطَعَامِهِنَّ ‏ ‏ ‏.‏
சுலைமான் பின் அம்ர் பின் அஹ்வஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜத்துல் விதாவில் கலந்துகொண்டதாக என்னிடம் கூறினார்கள். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, பெருமைப்படுத்தி, (மக்களுக்கு) நினைவூட்டி, உபதேசம் செய்தார்கள். பின்னர் அவர்கள் கூறினார்கள்: 'பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன், ஏனெனில் அவர்கள் உங்களிடம் உள்ள கைதிகளைப் போன்றவர்கள், அவர்கள் தெளிவான மானக்கேடான செயலைச் செய்தால் தவிர, அவர்களை வேறு விதமாக நடத்த உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் அவ்வாறு செய்தால், அவர்களின் படுக்கைகளில் அவர்களைப் புறக்கணியுங்கள், மேலும் காயம் ஏற்படுத்தாமலும், தழும்பு படியாமலும் அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்களுக்கு எதிராகத் தொல்லை கொடுக்கும் வழிகளைத் தேடாதீர்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் உள்ளன, மேலும் உங்கள் மீது உங்கள் மனைவியருக்கு உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியர் மீதான உங்கள் உரிமைகள் யாதெனில், நீங்கள் விரும்பாத எவரையும் உங்கள் விரிப்புகளை மிதிக்க அனுமதிக்கக் கூடாது, மேலும் நீங்கள் விரும்பாத எவரையும் உங்கள் வீடுகளுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. மேலும் உங்கள் மீதான அவர்களின் உரிமை என்னவென்றால், அவர்களின் உடை மற்றும் உணவு விஷயத்தில் நீங்கள் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்.'

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب حَقِّ الزَّوْجِ عَلَى الْمَرْأَةِ
கணவனுக்கு அவரது மனைவி மீதுள்ள உரிமைகள்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ لَوْ أَمَرْتُ أَحَدًا أَنْ يَسْجُدَ لأَحَدٍ لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا وَلَوْ أَنَّ رَجُلاً أَمَرَ امْرَأَةً أَنْ تَنْقُلَ مِنْ جَبَلٍ أَحْمَرَ إِلَى جَبَلٍ أَسْوَدَ وَمِنْ جَبَلٍ أَسْوَدَ إِلَى جَبَلٍ أَحْمَرَ - لَكَانَ نَوْلُهَا أَنْ تَفْعَلَ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் ஒருவருக்கு மற்றொருவர் சஜ்தா செய்ய கட்டளையிடுவதாக இருந்தால், பெண்கள் தங்கள் கணவர்களுக்கு சஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன். ஒரு கணவர் தன் மனைவிக்கு ஒரு சிவப்பு மலையிலிருந்து ஒரு கருப்பு மலைக்கும், ஒரு கருப்பு மலையிலிருந்து ஒரு சிவப்பு மலைக்கும் (ஏதேனும் ஒன்றை) நகர்த்துமாறு கட்டளையிட்டால், அவருக்குக் கீழ்ப்படிவது அவளுடைய கடமையாகும்.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنِ الْقَاسِمِ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ لَمَّا قَدِمَ مُعَاذٌ مِنَ الشَّامِ سَجَدَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ مَا هَذَا يَا مُعَاذُ ‏"‏ ‏.‏ قَالَ أَتَيْتُ الشَّامَ فَوَافَقْتُهُمْ يَسْجُدُونَ لأَسَاقِفَتِهِمْ وَبَطَارِقَتِهِمْ فَوَدِدْتُ فِي نَفْسِي أَنْ نَفْعَلَ ذَلِكَ بِكَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ فَلاَ تَفْعَلُوا فَإِنِّي لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِغَيْرِ اللَّهِ لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لاَ تُؤَدِّي الْمَرْأَةُ حَقَّ رَبِّهَا حَتَّى تُؤَدِّيَ حَقَّ زَوْجِهَا وَلَوْ سَأَلَهَا نَفْسَهَا وَهِيَ عَلَى قَتَبٍ لَمْ تَمْنَعْهُ ‏"‏ ‏.‏
பின்வருமாறு அறிவிக்கப்பட்டது:

அப்துல்லாஹ் பின் அபூ அவ்ஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள், “முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் ஷாமிலிருந்து வந்தபோது, நபி (ஸல்) அவர்களுக்கு ஸஜ்தா செய்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘முஆதே, இது என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் கூறினார்கள்: ‘நான் ஷாமுக்குச் சென்றேன், அங்கு அவர்கள் தங்கள் பாதிரியார்களுக்கும் குலத்தலைவர்களுக்கும் ஸஜ்தா செய்வதைக் கண்டேன். அதனால் நான் உங்களுக்கும் அவ்வாறு செய்ய விரும்பினேன்.’ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அவ்வாறு செய்யாதீர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காவது ஸஜ்தா செய்யுமாறு நான் யாருக்காவது கட்டளையிடுவதாக இருந்தால், பெண்கள் தங்கள் கணவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன். முஹம்மத் (ஸல்) அவர்களின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! தன் கணவருக்குச் செய்ய வேண்டிய கடமையை ஒரு பெண் நிறைவேற்றும் வரை, அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய தனது கடமையை அவளால் நிறைவேற்ற முடியாது. அவர் அவளை (தாம்பத்திய உறவுக்காக) அழைத்தால், அவள் ஒட்டகக் கட்டிலில் இருந்தாலும் கூட, அவள் மறுக்கக் கூடாது.’ ”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي نَصْرٍ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُسَاوِرٍ الْحِمْيَرِيِّ، عَنْ أُمِّهِ، قَالَتْ سَمِعْتُ أُمَّ سَلَمَةَ، تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ ‏ أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الْجَنَّةَ ‏ ‏ ‏.‏
முஸாவிர் அல் ஹிம்யரி அவர்கள் தம் தாயாரிடமிருந்து அறிவித்தார்கள்:
அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறக் கேட்டார்கள்: “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: 'தன் கணவன் தன் மீது திருப்தியுற்ற நிலையில் மரணிக்கும் எந்தப் பெண்ணும் சுவர்க்கத்தில் நுழைவாள்.'”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب فَضْلِ النِّسَاءِ
பெண்களில் சிறந்தவர்கள்
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعُمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ إِنَّمَا الدُّنْيَا مَتَاعٌ وَلَيْسَ مِنْ مَتَاعِ الدُّنْيَا شَىْءٌ أَفْضَلَ مِنَ الْمَرْأَةِ الصَّالِحَةِ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இவ்வுலகம் ஒரு பயனளிக்கும் பொருளாகும், மேலும் இவ்வுலகப் பொருட்களில் நல்லொழுக்கமுள்ள மனைவியை விடச் சிறந்த பொருள் வேறெதுவும் இல்லை.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سَمُرَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِيهِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ، قَالَ لَمَّا نَزَلَ فِي الْفِضَّةِ وَالذَّهَبِ مَا نَزَلَ قَالُوا فَأَىَّ الْمَالِ نَتَّخِذُ قَالَ عُمَرُ فَأَنَا أَعْلَمُ لَكُمْ ذَلِكَ ‏.‏ فَأَوْضَعَ عَلَى بَعِيرِهِ فَأَدْرَكَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا فِي أَثَرِهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىَّ الْمَالِ نَتَّخِذُ فَقَالَ ‏ ‏ لِيَتَّخِذْ أَحَدُكُمْ قَلْبًا شَاكِرًا وَلِسَانًا ذَاكِرًا وَزَوْجَةً مُؤْمِنَةً تُعِينُ أَحَدَكُمْ عَلَى أَمْرِ الآخِرَةِ ‏ ‏ ‏.‏
அறிவிக்கப்படுகிறது:
ஸவ்பான் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளி மற்றும் தங்கம் பற்றிய வசனம் இறங்கியபோது, அவர்கள் கேட்டார்கள்: 'நாம் எந்த வகையான செல்வத்தைச் சேகரிக்க வேண்டும்?' உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'நான் அதைப்பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்.' எனவே, அவர்கள் தங்களின் ஒட்டகத்தில் ஏறி நபி (ஸல்) அவர்களை அடைந்தார்கள், நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் கேட்டார்கள்: 'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எந்த வகையான செல்வத்தைச் சேகரிக்க வேண்டும்?' அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் நன்றி செலுத்தும் உள்ளத்தையும், அல்லாஹ்வை நினைவு கூறும் நாவையும், மறுமை விஷயத்தில் அவருக்கு உதவும் இறைநம்பிக்கையுள்ள மனைவியையும் சேகரித்துக் கொள்ளட்டும்.' ”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي الْعَاتِكَةِ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ كَانَ يَقُولُ ‏ ‏ مَا اسْتَفَادَ الْمُؤْمِنُ بَعْدَ تَقْوَى اللَّهِ خَيْرًا لَهُ مِنْ زَوْجَةٍ صَالِحَةٍ إِنْ أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِنْ نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِنْ أَقْسَمَ عَلَيْهَا أَبَرَّتْهُ وَإِنْ غَابَ عَنْهَا نَصَحَتْهُ فِي نَفْسِهَا وَمَالِهِ ‏ ‏ ‏.‏
அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: “ஒரு இறைநம்பிக்கையாளருக்கு அல்லாஹ்வின் தக்வாவிற்குப் பிறகு, ஒரு ஸாலிஹான மனைவியை விட அதிகப் பயனளிக்கக்கூடியது வேறு எதுவும் இல்லை. அவர் அவளுக்குக் கட்டளையிட்டால் அவள் அவருக்குக் கீழ்ப்படிவாள், அவர் அவளைப் பார்த்தால் அவர் மகிழ்ச்சியடைவார், அவர் அவள் மீது சத்தியம் செய்தால் அவள் அதை நிறைவேற்றுவாள், மேலும் அவர் இல்லாதபோது அவள் தன்னுடைய விஷயத்திலும் அவருடைய செல்வத்திலும் அவருக்கு நம்பிக்கைக்குரியவளாக இருப்பாள்.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب تَزْوِيجِ ذَوَاتِ الدِّينِ
மார்க்கப்பற்றுள்ள பெண்ணை மணமுடித்தல்
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ تُنْكَحُ النِّسَاءُ لأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَلِجَمَالِهَا وَلِدِينِهَا ‏.‏ فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண் நான்கு விடயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள்: அவளுடைய செல்வம், அவளுடைய বংশம், அவளுடைய அழகு அல்லது அவளுடைய மார்க்கம். மார்க்கப்பற்றுள்ளவளைத் தேர்வு செய்வீராக, உமது கரங்கள் மண்ணில் புரளட்டும் (அதாவது, நீர் செழிப்படைவீர்).”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ، وَجَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنِ الإِفْرِيقِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ لاَ تَزَوَّجُوا النِّسَاءَ لِحُسْنِهِنَّ فَعَسَى حُسْنُهُنَّ أَنْ يُرْدِيَهُنَّ وَلاَ تَزَوَّجُوهُنَّ لأَمْوَالِهِنَّ فَعَسَى أَمْوَالُهُنَّ أَنْ تُطْغِيَهُنَّ وَلَكِنْ تَزَوَّجُوهُنَّ عَلَى الدِّينِ وَلأَمَةٌ خَرْمَاءُ سَوْدَاءُ ذَاتُ دِينٍ أَفْضَلُ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் செய்யாதீர்கள், ஏனெனில் அது அவர்களை அழிவுக்கு இட்டுச் செல்லக்கூடும். அவர்களின் செல்வத்திற்காக அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள், ஏனெனில் அது அவர்களைப் பாவத்தில் விழச் செய்யக்கூடும். மாறாக, அவர்களின் மார்க்கப் பற்றுக்காக அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். மார்க்கப் பற்றுள்ள, துளையிடப்பட்ட ஒரு கறுப்பு அடிமைப் பெண் சிறந்தவள் ஆவாள்.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب تَزْوِيجِ الأَبْكَارِ
கன்னிப் பெண்களை மணமுடித்தல்
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَلَقِيتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ أَتَزَوَّجْتَ يَا جَابِرُ ‏"‏ ‏.‏ قُلْتُ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ أَبِكْرًا أَوْ ثَيِّبًا ‏"‏ ‏.‏ قُلْتُ ثَيِّبًا ‏.‏ قَالَ ‏"‏ فَهَلاَّ بِكْرًا تُلاَعِبُهَا ‏"‏ ‏.‏ قُلْتُ كُنَّ لِي أَخَوَاتٌ فَخَشِيتُ أَنْ تَدْخُلَ بَيْنِي وَبَيْنَهُنَّ ‏.‏ قَالَ ‏"‏ فَذَاكَ إِذًا ‏"‏ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு பெண்ணை மணந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), 'ஜாபிரே, நீர் திருமணம் செய்துவிட்டீரா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்' என்றேன். அவர்கள், 'கன்னியையா அல்லது திருமணமானவரையா (மணந்தீர்)?' என்று கேட்டார்கள். நான், 'திருமணமானவரையே (மணந்தேன்)' என்றேன். அவர்கள், 'நீர் அவளுடன் விளையாடுவதற்காக ஒரு கன்னியை மணந்திருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். நான், 'எனக்கு சகோதரிகள் உள்ளனர். அவள் எனக்கும் அவர்களுக்கும் இடையில் பிரச்சனையை உண்டாக்குவதை நான் விரும்பவில்லை' என்றேன். அதற்கு அவர்கள், 'அப்படியானால் அதுவே சிறந்தது' என்று கூறினார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ التَّيْمِيُّ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَالِمِ بْنِ عُتْبَةَ بْنِ عُوَيْمِ بْنِ سَاعِدَةَ الأَنْصَارِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ عَلَيْكُمْ بِالأَبْكَارِ فَإِنَّهُنَّ أَعْذَبُ أَفْوَاهًا وَأَنْتَقُ أَرْحَامًا وَأَرْضَى بِالْيَسِيرِ ‏ ‏ ‏.‏
அப்துர்-ரஹ்மான் பின் சலீம் பின் உத்பா பின் சலீம் பின் உவைம் பின் ஸாஇதா அல்-அன்சாரி அவர்கள், தனது தந்தையின் வாயிலாக தனது பாட்டனார் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்ததாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் கன்னிப்பெண்களை மணந்து கொள்ளுங்கள், ஏனெனில் அவர்களின் வாய்கள் அதிக இனிமையானவை, அவர்களின் கருவறைகள் அதிக பிள்ளைகளைப் பெறக்கூடியவை, மேலும் அவர்கள் குறைந்ததைக் கொண்டு திருப்தியடையக்கூடியவர்கள்.'

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب تَزْوِيجِ الْحَرَائِرِ وَالْوَلُودِ
கருவுறும் தன்மையுள்ள சுதந்திரமான பெண்களை மணமுடித்தல்
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ سَلِيمٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ مُزَاحِمٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ ‏ مَنْ أَرَادَ أَنْ يَلْقَى اللَّهَ طَاهِرًا مُطَهَّرًا فَلْيَتَزَوَّجِ الْحَرَائِرَ ‏ ‏ ‏.‏
அறிவிக்கப்படுகிறது:

அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: 'யார் அல்லாஹ்வை தூய்மையானவராகவும், பரிசுத்தமானவராகவும் சந்திக்க விரும்புகிறாரோ, அவர் சுதந்திரமான பெண்களை மணமுடித்துக் கொள்ளட்டும்.'”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ الْمَخْزُومِيُّ، عَنْ طَلْحَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ انْكِحُوا فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “திருமணம் செய்யுங்கள், ஏனெனில் நான் உங்கள் பெரும் எண்ணிக்கையைக் கொண்டு பெருமைப்படுவேன்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب النَّظَرِ إِلَى الْمَرْأَةِ إِذَا أَرَادَ أَنْ يَتَزَوَّجَهَا
திருமணம் செய்ய விரும்பும்போது ஒரு பெண்ணைப் பார்ப்பது
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ حَجَّاجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَمِّهِ، سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ، قَالَ خَطَبْتُ امْرَأَةً فَجَعَلْتُ أَتَخَبَّأُ لَهَا حَتَّى نَظَرْتُ إِلَيْهَا فِي نَخْلٍ لَهَا فَقِيلَ لَهُ أَتَفْعَلُ هَذَا وَأَنْتَ صَاحِبُ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ ‏ إِذَا أَلْقَى اللَّهُ فِي قَلْبِ امْرِئٍ خِطْبَةَ امْرَأَةٍ فَلاَ بَأْسَ أَنْ يَنْظُرَ إِلَيْهَا ‏ ‏ ‏.‏
முஹம்மது பின் ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் ஒரு பெண்ணிடம் திருமணப் பிரேரணை செய்தேன், பின்னர் அவளைப் பார்ப்பதற்காக மறைந்திருந்து காத்திருந்தேன். இறுதியில், அவளுக்குச் சொந்தமான பேரீச்சை மரங்களுக்கு மத்தியில் அவளைக் கண்டேன்.” அவரிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழராக இருந்தும் இப்படிச் செய்கிறீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஒரு மனிதனின் உள்ளத்தில் ஒரு பெண்ணை மணமுடிக்கும் எண்ணத்தை அல்லாஹ் போட்டால், அவன் அவளைப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை’ என்று கூறுவதை நான் கேட்டேன்.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، وَزُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالُوا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، أَرَادَ أَنْ يَتَزَوَّجَ، امْرَأَةً فَقَالَ لَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَحْرَى أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا ‏ ‏ ‏.‏ فَفَعَلَ فَتَزَوَّجَهَا فَذَكَرَ مِنْ مُوَافَقَتِهَا ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:

முஃகீரா பின் ஷுஃபா (ரழி) அவர்கள் ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீங்கள் சென்று அவளைப் பாருங்கள், ஏனெனில் அது உங்கள் இருவருக்கும் இடையே அன்பை உண்டாக்க அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் செய்து, அவளை மணந்து, அவளுடன் எவ்வளவு நன்றாகப் பழகினார்கள் என்பதையும் குறிப்பிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَبِي الرَّبِيعِ، أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَذَكَرْتُ لَهُ امْرَأَةً أَخْطُبُهَا فَقَالَ ‏ ‏ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا ‏ ‏ ‏.‏ فَأَتَيْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ فَخَطَبْتُهَا إِلَى أَبَوَيْهَا وَأَخْبَرْتُهُمَا بِقَوْلِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ فَكَأَنَّهُمَا كَرِهَا ذَلِكَ ‏.‏ قَالَ فَسَمِعَتْ ذَلِكَ الْمَرْأَةُ وَهِيَ فِي خِدْرِهَا فَقَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَكَ أَنْ تَنْظُرَ فَانْظُرْ ‏.‏ وَإِلاَّ فَإِنِّي أَنْشُدُكَ كَأَنَّهَا أَعْظَمَتْ ذَلِكَ ‏.‏ قَالَ فَنَظَرْتُ إِلَيْهَا فَتَزَوَّجْتُهَا ‏.‏ فَذَكَرَ مِنْ مُوَافَقَتِهَا ‏.‏
அறிவிக்கப்படுகிறது:
முஃகீரா பின் ஷுஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் பெண் கேட்க விரும்பிய ஒரு பெண்ணைப் பற்றிக் கூறினேன். அதற்கு அவர்கள், 'நீர் சென்று அவளைப் பாரும், ஏனெனில் அது உங்கள் இருவருக்குமிடையே அன்பை உருவாக்க மிகவும் உகந்தது' என்று கூறினார்கள். ஆகவே, நான் அன்சாரிப் பெண்களில் ஒரு பெண்ணிடம் சென்று, அவளுடைய பெற்றோர் வழியாக அவளைப் பெண் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் அவர்களிடம் தெரிவித்தேன், ஆனால் அவர்கள் அதை விரும்பாதது போல் தோன்றியது. அப்போது, அந்தப் பெண் தனது திரைக்குப் பின்னாலிருந்து கூறுவதை நான் கேட்டேன்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மிடம் அவ்வாறு செய்யும்படி கூறியிருந்தால், நீர் அதைச் செய்யும்; இல்லையெனில், அல்லாஹ்வின் மீது ஆணையாக (அவ்வாறு செய்ய வேண்டாம்)'. அவள் அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதியது போலத் தெரிந்தது. ஆகவே, நான் அவளைப் பார்த்து, அவளை மணமுடித்துக்கொண்டேன்.” மேலும் அவர் அவளுடன் எவ்வளவு இணக்கமாக வாழ்ந்தார் என்பதையும் குறிப்பிட்டார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب لاَ يَخْطُبِ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ
ஒரு மனிதர் தனது சகோதரர் ஏற்கனவே திருமண வேண்டுகோள் விடுத்த பெண்ணுக்கு திருமண வேண்டுகோள் விடுக்கக்கூடாது.
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ لاَ يَخْطُبِ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர், தம் சகோதரன் பெண் கேட்ட ஒரு பெண்ணை பெண் கேட்கக் கூடாது.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ لاَ يَخْطُبِ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர், தம் சகோதரர் ஏற்கனவே பெண் கேட்ட ஒரு பெண்ணிடம் பெண் கேட்க வேண்டாம்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي الْجَهْمِ بْنِ صُخَيْرٍ الْعَدَوِيِّ، قَالَ سَمِعْتُ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، تَقُولُ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِذَا حَلَلْتِ فَآذِنِينِي ‏"‏ ‏.‏ فَآذَنَتْهُ فَخَطَبَهَا مُعَاوِيَةُ وَأَبُو الْجَهْمِ بْنُ صُخَيْرٍ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَمَّا مُعَاوِيَةُ فَرَجُلٌ تَرِبٌ لاَ مَالَ لَهُ وَأَمَّا أَبُو الْجَهْمِ فَرَجُلٌ ضَرَّابٌ لِلنِّسَاءِ وَلَكِنْ أُسَامَةُ ‏"‏ ‏.‏ فَقَالَتْ بِيَدِهَا هَكَذَا أُسَامَةُ أُسَامَةُ ‏.‏ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ طَاعَةُ اللَّهِ وَطَاعَةُ رَسُولِهِ خَيْرٌ لَكِ ‏"‏ ‏.‏ قَالَتْ فَتَزَوَّجْتُهُ فَاغْتَبَطْتُ بِهِ ‏.‏
அபூபக்ர் பின் அபீ ஜஹ்ம் பின் ஸுகைர் அல்-அதவீ (ரழி) கூறினார்கள்: “ஃபாத்திமா பின்த் கைஸ் (ரழி) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ (மறுமணம் செய்ய) ஹலால் ஆகும் போது, எனக்குத் தெரிவி” என்று கூறினார்கள். அவ்வாறே நான் அவர்களுக்குத் தெரிவித்தேன்.' பின்னர் முஆவியா (ரழி), அபூ ஜஹ்ம் பின் ஸுகைர் (ரழி) மற்றும் உஸாமா பின் ஸைத் (ரழி) ஆகியோர் அவரைத் திருமணம் செய்ய பெண் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஆவியாவைப் பொறுத்தவரை, அவரிடம் பணம் இல்லாத ஓர் ஏழை. அபூ ஜஹ்ம்மைப் பொறுத்தவரை, அவர் பெண்களை அடிக்கும் பழக்கமுள்ளவர். ஆனால் உஸாமா (நல்லவர்).’ அவர் (ஃபாத்திமா) தம் கையால் சைகை செய்து, ‘உஸாமாவா, உஸாமாவா?!’ என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், ‘அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிவதே உனக்குச் சிறந்ததாகும்’ என்று கூறினார்கள். அவர் (ஃபாத்திமா) கூறினார்கள்: ‘ஆகவே, நான் அவரைத் திருமணம் செய்துகொண்டேன், மேலும் நான் அவரைப் பற்றி திருப்தி கொண்டேன்.’ ”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب اسْتِئْمَارِ الْبِكْرِ وَالثَّيِّبِ
கன்னிப் பெண்கள் மற்றும் முன்னர் திருமணமானவர்களின் சம்மதத்தைப் பெறுதல்
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى السُّدِّيُّ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْهَاشِمِيِّ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ الأَيِّمُ أَوْلَى بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا وَالْبِكْرُ تُسْتَأْمَرُ فِي نَفْسِهَا ‏"‏ ‏.‏ قِيلَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْبِكْرَ تَسْتَحْيِي أَنْ تَتَكَلَّمَ ‏.‏ قَالَ ‏"‏ إِذْنُهَا سُكُوتُهَا ‏"‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு விதவைக்கு அவளுடைய பாதுகாவலரை விட தன் விஷயத்தில் அதிக உரிமை உண்டு, மேலும் ஒரு கன்னிப்பெண்ணிடம் ஆலோசனை கேட்கப்பட வேண்டும்.” (அதற்கு), “அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் பேசுவதற்கு மிகவும் வெட்கப்படலாம்” என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “அவளுடைய மௌனமே அவளது சம்மதம்” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ لاَ تُنْكَحُ الثَّيِّبُ حَتَّى تُسْتَأْمَرَ وَلاَ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ وَإِذْنُهَا الصُّمُوتُ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணிடம் ஆலோசனை கேட்காமல் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படக் கூடாது. மேலும், ஒரு கன்னிப் பெண்ணிடம் அனுமதி பெறாமல் அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படக் கூடாது. அவளது மௌனமே அவளது சம்மதமாகும்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ عَدِيِّ بْنِ عَدِيٍّ الْكِنْدِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ الثَّيِّبُ تُعْرِبُ عَنْ نَفْسِهَا وَالْبِكْرُ رِضَاهَا صَمْتُهَا ‏ ‏ ‏.‏
அதி இப்னு அதி அல்-கிந்தி (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அவர்களின் தந்தை (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'முன்னர் திருமணம் ஆன பெண் தனக்காகப் பேசுவாள், மேலும் கன்னிப் பெண்ணின் சம்மதம் அவளது மௌனமாகும்.'”

باب مَنْ زَوَّجَ ابْنَتَهُ وَهِيَ كَارِهَةٌ
தன் மகள் விரும்பாத நிலையில் அவளது திருமணத்தை ஏற்பாடு செய்பவர்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ وَمُجَمِّعَ بْنَ يَزِيدَ الأَنْصَارِيَّيْنِ أَخْبَرَاهُ أَنَّ رَجُلاً مِنْهُمْ يُدْعَى خِذَامًا أَنْكَحَ ابْنَةً لَهُ فَكَرِهَتْ نِكَاحَ أَبِيهَا فَأَتَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَذَكَرَتْ لَهُ فَرَدَّ عَلَيْهَا نِكَاحَ أَبِيهَا فَنَكَحَتْ أَبَا لُبَابَةَ بْنَ عَبْدِ الْمُنْذِرِ ‏.‏ وَذَكَرَ يَحْيَى أَنَّهَا كَانَتْ ثَيِّبًا ‏.‏
அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் அல்-அன்சாரி (ரழி) மற்றும் முஜம்மா இப்னு யஸீத் அல்-அன்சாரி (ரழி) ஆகிய இருவரும் கூறினார்கள்:

அவர்களில் கிதாம் (ரழி) என்றழைக்கப்பட்ட ஒருவர் தனது மகளுக்கு ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்தார்கள். ஆனால், தன் தந்தை ஏற்பாடு செய்த அந்தத் திருமணத்தை அவள் விரும்பவில்லை. அவள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அதுபற்றி அவர்களிடம் தெரிவித்தாள். உடனே, அவர்கள் அவளுடைய தந்தை ஏற்பாடு செய்த திருமணத்தை ரத்து செய்தார்கள். பிறகு அவள் அபூ லுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைத் திருமணம் செய்துகொண்டாள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَتْ فَتَاةٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ إِنَّ أَبِي زَوَّجَنِي ابْنَ أَخِيهِ لِيَرْفَعَ بِي خَسِيسَتَهُ ‏.‏ قَالَ فَجَعَلَ الأَمْرَ إِلَيْهَا ‏.‏ فَقَالَتْ قَدْ أَجَزْتُ مَا صَنَعَ أَبِي وَلَكِنْ أَرَدْتُ أَنْ تَعْلَمَ النِّسَاءُ أَنْ لَيْسَ إِلَى الآبَاءِ مِنَ الأَمْرِ شَىْءٌ ‏.‏
இப்னு புரைதா அவர்கள், தமது தந்தை (புரைதா (ரழி) அவர்கள்) கூறியதாக அறிவிக்கிறார்கள்: “ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'என் தந்தை தனது தகுதியை உயர்த்திக் கொள்வதற்காக, என்னை அவரின் சகோதரன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்' என்று கூறினாள். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கினார்கள். அதற்கு அவள், 'என் தந்தை செய்ததை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் தங்கள் தந்தையர்களுக்கு இப்படிச் செய்ய உரிமை இல்லை என்பதைப் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன்' என்று கூறினாள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو السَّقْرِ، يَحْيَى بْنُ يَزْدَادَ الْعَسْكَرِيُّ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الْمَرُّوذِيُّ، حَدَّثَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، ‏.‏ أَنَّ جَارِيَةً، بِكْرًا أَتَتِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَذَكَرَتْ لَهُ أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهِيَ كَارِهَةٌ ‏.‏ فَخَيَّرَهَا النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا مُعَمَّرُ بْنُ سُلَيْمَانَ الرَّقِّيُّ، عَنْ زَيْدِ بْنِ حِبَّانَ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ مِثْلَهُ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு கன்னிப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தனது தந்தை தனக்கு விருப்பமில்லாத ஒரு திருமணத்தை செய்துவிட்டதாகக் கூறினாள். நபி (ஸல்) அவர்கள் அவளுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب نِكَاحِ الصِّغَارِ يُزَوِّجُهُنَّ الآبَاءُ
சிறுமிகளின் திருமணத்தை அவர்களின் தந்தையர்கள் ஏற்பாடு செய்தல்
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَنَا بِنْتُ سِتِّ سِنِينَ فَقَدِمْنَا الْمَدِينَةَ فَنَزَلْنَا فِي بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ فَوُعِكْتُ فَتَمَرَّقَ شَعَرِي حَتَّى وَفَى لَهُ جُمَيْمَةٌ فَأَتَتْنِي أُمِّي أُمُّ رُومَانَ وَإِنِّي لَفِي أُرْجُوحَةٍ وَمَعِي صَوَاحِبَاتٌ لِي فَصَرَخَتْ بِي فَأَتَيْتُهَا وَمَا أَدْرِي مَا تُرِيدُ فَأَخَذَتْ بِيَدِي فَأَوْقَفَتْنِي عَلَى بَابِ الدَّارِ وَإِنِّي لأَنْهَجُ حَتَّى سَكَنَ بَعْضُ نَفَسِي ثُمَّ أَخَذَتْ شَيْئًا مِنْ مَاءٍ فَمَسَحَتْ بِهِ عَلَى وَجْهِي وَرَأْسِي ثُمَّ أَدْخَلَتْنِي الدَّارَ فَإِذَا نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فِي بَيْتٍ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ وَعَلَى خَيْرِ طَائِرٍ ‏.‏ فَأَسْلَمَتْنِي إِلَيْهِنَّ فَأَصْلَحْنَ مِنْ شَأْنِي فَلَمْ يَرُعْنِي إِلاَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ضُحًى ‏.‏ فَأَسْلَمَتْنِي إِلَيْهِ وَأَنَا يَوْمَئِذٍ بِنْتُ تِسْعِ سِنِينَ ‏.‏
அறிவிக்கப்படுகிறது:

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என்னை திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு நாங்கள் அல்-மதீனாவிற்கு வந்து, பனூ ஹாரிஸ் பின் கஸ்ரஜ் கோத்திரத்தாருடன் குடியேறினோம். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, என் தலைமுடி உதிர்ந்தது, பிறகு அது மீண்டும் வளர்ந்து அடர்த்தியாக ஆனது. நான் என் தோழிகள் சிலருடன் ஒரு உர்ஜூஹாவில் (ஊஞ்சலில்) இருந்தபோது, என் தாயார் உம்மு ரூமான் (ரழி) அவர்கள் என்னிடம் வந்து, என்னை அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன், ஆனால் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் என் கையைப் பிடித்து வீட்டின் வாசலில் என்னை நிற்க வைத்தார்கள், நான் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தேன். என் மூச்சு சீரானதும், அவர்கள் சிறிதளவு தண்ணீர் எடுத்து, என் முகத்தையும் தலையையும் துடைத்து, என்னை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள். வீட்டிற்குள் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள், மேலும் அவர்கள், '(அல்லாஹ்விடமிருந்து) பரக்கத்துடனும் நல்பாக்கியத்துடனும்' என்று கூறினார்கள். (என் தாயார்) என்னை அவர்களிடம் ஒப்படைத்தார்கள், மேலும் அவர்கள் என்னை அழகுபடுத்தினார்கள். திடீரென்று காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். மேலும் அவர்கள் என்னை அவர்களிடம் ஒப்படைத்தார்கள், அப்போது எனக்கு ஒன்பது வயது.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ تَزَوَّجَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ عَائِشَةَ وَهِيَ بِنْتُ سَبْعٍ وَبَنَى بِهَا وَهِيَ بِنْتُ تِسْعٍ وَتُوُفِّيَ عَنْهَا وَهِيَ بِنْتُ ثَمَانِي عَشْرَةَ سَنَةً ‏.‏
அறிவிக்கப்படுகிறது:

அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ஏழு வயதாக இருந்தபோது அவர்களைத் திருமணம் செய்தார்கள்; அவர்களுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அவர்களுடன் இல்லற வாழ்வில் இணைந்தார்கள்; நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது, ஆயிஷா (ரழி) அவர்களுக்குப் பதினெட்டு வயது.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب نِكَاحِ الصِّغَارِ يُزَوِّجُهُنَّ غَيْرُ الآبَاءِ
சிறுமிகளின் தந்தையர் அல்லாத வேறு யாரோ ஏற்பாடு செய்யும் திருமணம்
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، ‏.‏ أَنَّهُ حِينَ هَلَكَ عُثْمَانُ بْنُ مَظْعُونٍ تَرَكَ ابْنَةً لَهُ ‏.‏ قَالَ ابْنُ عُمَرَ فَزَوَّجَنِيهَا خَالِي قُدَامَةُ وَهُوَ عَمُّهَا وَلَمْ يُشَاوِرْهَا وَذَلِكَ بَعْدَ مَا هَلَكَ أَبُوهَا فَكَرِهَتْ نِكَاحَهُ وَأَحَبَّتِ الْجَارِيَةُ أَنْ يُزَوِّجَهَا الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ فَزَوَّجَهَا إِيَّاهُ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உஸ்மான் பின் மள்ஊன் (ரழி) அவர்கள் மரணித்தபோது, ஒரு மகளை விட்டுச் சென்றார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “என் மாமாவும், அப்பெண்ணின் தந்தையின் சகோதரருமான குதாமா (ரழி) அவர்கள், அப்பெண்ணிடம் கலந்தாலோசிக்காமலேயே எனக்கு அவளை மணமுடித்து வைத்தார்கள். இது அப்பெண்ணின் தந்தை இறந்த பின்னரே நடந்தது. அப்பெண்ணுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை, மேலும் அப்பெண் முஃகீரா பின் ஷுஃபா (ரழி) அவர்களை மணக்க விரும்பியதால், அவரை மணந்துகொண்டாள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب لاَ نِكَاحَ إِلاَّ بِوَلِيٍّ
காப்பாளர் இல்லாமல் திருமணம் இல்லை
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ أَيُّمَا امْرَأَةٍ لَمْ يُنْكِحْهَا الْوَلِيُّ فَنِكَاحُهَا بَاطِلٌ فَنِكَاحُهَا بَاطِلٌ فَنِكَاحُهَا بَاطِلٌ فَإِنْ أَصَابَهَا فَلَهَا مَهْرُهَا بِمَا أَصَابَ مِنْهَا فَإِنِ اشْتَجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لاَ وَلِيَّ لَهُ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எந்தவொரு பெண்ணும் அவளுடைய பாதுகாவலரின் அனுமதியின்றி திருமணம் செய்தால், அவளுடைய திருமணம் செல்லாது, அவளுடைய திருமணம் செல்லாது, அவளுடைய திருமணம் செல்லாது. (அவளுடன்) அவர் தாம்பத்திய உறவு கொண்டிருந்தால், அவர் அவளை அனுபவித்ததன் காரணமாக அவளுக்கு மஹ்ர் உரியதாகும். மேலும், ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டால், பாதுகாவலர் இல்லாதவர்களுக்கு ஆட்சியாளரே பாதுகாவலர் ஆவார்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ حَجَّاجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَعَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، ‏.‏ قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لاَ نِكَاحَ إِلاَّ بِوَلِيٍّ ‏"‏ ‏.‏ وَفِي حَدِيثِ عَائِشَةَ ‏"‏ وَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لاَ وَلِيَّ لَهُ ‏"‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பொறுப்பாளர் இல்லாமல் திருமணம் இல்லை.'”

ஆயிஷா (ரழி) அவர்களின் ஹதீஸின்படி: “பொறுப்பாளர் இல்லாதவருக்கு ஆட்சியாளரே பொறுப்பாளர் ஆவார்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ لاَ نِكَاحَ إِلاَّ بِوَلِيٍّ ‏ ‏ ‏.‏
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாதுகாவலர் இல்லாமல் திருமணம் இல்லை.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْوَانَ الْعُقَيْلِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ لاَ تُزَوِّجُ الْمَرْأَةُ الْمَرْأَةَ وَلاَ تُزَوِّجُ الْمَرْأَةُ نَفْسَهَا فَإِنَّ الزَّانِيَةَ هِيَ الَّتِي تُزَوِّجُ نَفْسَهَا ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எந்தப் பெண்ணும் மற்றொரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது, மேலும் எந்தப் பெண்ணும் தனக்குத்தானே திருமணம் செய்து கொள்ளக் கூடாது. விபச்சாரி என்பவள் தனக்குத்தானே திருமணம் செய்து கொள்பவள் ஆவாள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب النَّهْىِ عَنِ الشِّغَارِ
ஷிஃகார் திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الشِّغَارِ وَالشِّغَارُ أَنْ يَقُولَ الرَّجُلُ لِلرَّجُلِ زَوِّجْنِي ابْنَتَكَ أَوْ أُخْتَكَ عَلَى أَنْ أُزَوِّجَكَ ابْنَتِي أَوْ أُخْتِي ‏.‏ وَلَيْسَ بَيْنَهُمَا صَدَاقٌ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷிகாரைத் தடை செய்தார்கள். ஷிகார் என்பது, ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடம், ‘உம்முடைய மகளையோ அல்லது சகோதரியையோ எனக்கு மணமுடித்துத் தாரும், அதற்குப் பகரமாக நான் என்னுடைய மகளையோ அல்லது சகோதரியையோ உமக்கு மணமுடித்துத் தருகிறேன்’ என்று கூறுவதாகும், மேலும் அவர்கள் எந்த மஹரையும் கொடுப்பதில்லை (அதாவது, அவர்களில் எவரும் மற்றவருக்கு மஹர் கொடுப்பதில்லை).”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الشِّغَارِ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷிகாரைத் தடை செய்தார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مَهْدِيٍّ، أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَاَ مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ لاَ شِغَارَ فِي الإِسْلاَمِ ‏ ‏ ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இஸ்லாத்தில் ஷிகார் இல்லை.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب صَدَاقِ النِّسَاءِ
பெண்களின் மணக்கொடைகள்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ الدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ كَمْ كَانَ صَدَاقُ نِسَاءِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ كَانَ صَدَاقُهُ فِي أَزْوَاجِهِ اثْنَتَىْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشًّا هَلْ تَدْرِي مَا النَّشُّ هُوَ نِصْفُ أُوقِيَّةٍ وَذَلِكَ خَمْسُمِائَةِ دِرْهَمٍ ‏.‏
அறிவிக்கப்படுகிறது:
அபூ ஸலமா கூறினார்கள்: “நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம், ‘நபியவர்களின் மனைவியருக்கான மஹர் எவ்வளவு?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: ‘அவர் (ஸல்) தம் மனைவியருக்கு வழங்கிய மஹர் பன்னிரண்டு ஊக்கிய்யாக்களும் ஒரு நஷ்ஷும் (வெள்ளி) ஆகும். நஷ் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு ஊக்கிய்யாவில் பாதியாகும். மேலும் அது ஐந்நூறு திர்ஹம்களுக்குச் சமமாகும்.’”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنِ ابْنِ عَوْنٍ، ح وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي الْعَجْفَاءِ السُّلَمِيِّ، قَالَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لاَ تُغَالُوا صَدَاقَ النِّسَاءِ فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا أَوْ تَقْوًى عِنْدَ اللَّهِ كَانَ أَوْلاَكُمْ وَأَحَقَّكُمْ بِهَا مُحَمَّدٌ ـ صلى الله عليه وسلم ـ مَا أَصْدَقَ امْرَأَةً مِنْ نِسَائِهِ وَلاَ أُصْدِقَتِ امْرَأَةٌ مِنْ بَنَاتِهِ أَكْثَرَ مِنِ اثْنَتَىْ عَشْرَةَ أُوقِيَّةً وَإِنَّ الرَّجُلَ لَيُثَقِّلُ صَدَقَةَ امْرَأَتِهِ حَتَّى يَكُونَ لَهَا عَدَاوَةٌ فِي نَفْسِهِ وَيَقُولُ قَدْ كَلِفْتُ إِلَيْكِ عَلَقَ الْقِرْبَةِ أَوْ عَرَقَ الْقِرْبَةِ ‏.‏ وَكُنْتُ رَجُلاً عَرَبِيًّا مُوَلَّدًا مَا أَدْرِي مَا عَلَقُ الْقِرْبَةِ أَوْ عَرَقُ الْقِرْبَةِ ‏.‏
அபூ அஜ்ஃபா அஸ்-சுலமீ அவர்கள் கூறினார்கள்: “உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'பெண்களின் மஹர் விஷயத்தில் வரம்பு மீறாதீர்கள், ஏனெனில் அது இவ்வுலகில் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் ஒரு அடையாளமாகவோ அல்லது அல்லாஹ்விடம் தக்வாவின் அடையாளமாகவோ இருந்திருந்தால், உங்களுக்கு முன்பே முஹம்மது (ஸல்) அவர்கள் அதைச் செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் తమ மனைவியரில் எவருக்கும் (அதிக மஹர்) கொடுக்கவில்லை, மேலும் அவர்களின் மகள்களில் எவருக்கும் பன்னிரண்டு ஊக்கியாவிற்கு மேல் கொடுக்கப்படவில்லை. ஒரு மனிதன் மஹரை உயர்த்திக் கொண்டே சென்று, இறுதியில் அவள் மீது மனக்கசப்பு கொண்டு, “எனக்குச் சொந்தமான அனைத்தையும் உனக்காக நான் செலவழித்துவிட்டேன்,” அல்லது, “நீ எனக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திவிட்டாய்” என்று கூறுகிறான்.’” (ஹஸன்)

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو عُمَرَ الضَّرِيرُ، وَهَنَّادُ بْنُ السَّرِيِّ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، مِنْ بَنِي فَزَارَةَ تَزَوَّجَ عَلَى نَعْلَيْنِ فَأَجَازَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ نِكَاحَهُ ‏.‏
அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ (ரழி) அவர்கள், தம் தந்தை (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:

பனூ ஃபஸாரா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் ஒரு ஜோடி செருப்புகளுக்காகத் திருமணம் செய்துகொண்டார். மேலும் நபி (ஸல்) அவர்கள் அவருடைய திருமணத்தை அனுமதித்தார்கள்.

حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ مَنْ يَتَزَوَّجُهَا ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ أَنَا ‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ ‏"‏ ‏.‏ فَقَالَ لَيْسَ مَعِي ‏.‏ قَالَ ‏"‏ قَدْ زَوَّجْتُكَهَا عَلَى مَا مَعَكَ مِنَ الْقُرْآنِ ‏"‏ ‏.‏
அறிவிக்கப்பட்டதாவது:

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவர்கள், 'அவளை யார் திருமணம் செய்துகொள்வார்?' என்று கேட்டார்கள். ஒரு மனிதர், 'நான்' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'ஒரு இரும்பு மோதிரமாக இருந்தாலும் சரி, அவளுக்கு ஏதாவது கொடுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'என்னிடம் ஒன்றும் இல்லை' என்றார். அதற்கு அவர்கள், 'உமக்குத் தெரிந்த குர்ஆனுக்காக நான் அவளை உமக்கு மணமுடித்துத் தருகிறேன்' என்று கூறினார்கள்.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، مُحَمَّدُ بْنُ يَزِيدَ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَمَانٍ، حَدَّثَنَا الأَغَرُّ الرَّقَاشِيُّ، عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ تَزَوَّجَ عَائِشَةَ عَلَى مَتَاعِ بَيْتٍ قِيمَتُهُ خَمْسُونَ دِرْهَمًا ‏.‏
அபூ சயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஐம்பது திர்ஹம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டு ஆயிஷா (ரழி) அவர்களை மணமுடித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الرَّجُلِ يَتَزَوَّجُ وَلاَ يَفْرِضُ لَهَا فَيَمُوتُ عَلَى ذَلِكَ
ஒரு மனிதர் மஹர் தொகையை நிர்ணயிக்காமல் திருமணம் செய்து கொண்டு பின்னர் இறந்து விடுகிறார்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ، تَزَوَّجَ امْرَأَةً فَمَاتَ عَنْهَا وَلَمْ يَدْخُلْ بِهَا وَلَمْ يَفْرِضْ لَهَا ‏.‏ قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ لَهَا الصَّدَاقُ وَلَهَا الْمِيرَاثُ وَعَلَيْهَا الْعِدَّةُ ‏.‏ فَقَالَ مَعْقِلُ بْنُ سِنَانٍ الأَشْجَعِيُّ شَهِدْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَضَى فِي بَرْوَعَ بِنْتِ وَاشِقٍ بِمِثْلِ ذَلِكَ ‏.‏ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، مِثْلَهُ ‏.‏
மஸ்ரூக் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது:
ஒரு மனிதர் ஒரு பெண்ணை மணந்துகொண்டு, அவளுடன் தாம்பத்திய உறவு கொள்ளாமலும், மஹர் தொகையை நிர்ணயிக்காமலும் இறந்துவிட்டார். அவரைப் பற்றி அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அவளுக்கு மஹர் உண்டு, வாரிசுரிமையும் உண்டு, மேலும் அவள் இத்தா இருக்க வேண்டும்.” மஅகில் இப்னு சினான் அல்-அஷ்ஜஈ (ரழி) அவர்கள் கூறினார்கள்: “பிர்வா பின்த் வாஷிக் (ரழி) அவர்களின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதே போன்ற தீர்ப்பை வழங்குவதை நான் கண்டேன்.” (ஸஹீஹ்) இதே போன்ற வார்த்தைகளுடன், அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடமிருந்து அல்கமா (ரழி) அவர்கள் வழியாக மற்றொரு அறிவிப்பாளர் தொடரும் உள்ளது.

மஸ்ரூக் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது:
ஒரு மனிதர் ஒரு பெண்ணை மணந்துகொண்டு, அவளுடன் தாம்பத்திய உறவு கொள்ளாமலும், மஹர் தொகையை நிர்ணயிக்காமலும் இறந்துவிட்டார். அவரைப் பற்றி அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அவளுக்கு மஹர் உண்டு, வாரிசுரிமையும் உண்டு, மேலும் அவள் இத்தா இருக்க வேண்டும்.” மஅகில் இப்னு சினான் அல்-அஷ்ஜஈ (ரழி) அவர்கள் கூறினார்கள்: “பிர்வா பின்த் வாஷிக் (ரழி) அவர்களின் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதே போன்ற தீர்ப்பை வழங்குவதை நான் கண்டேன்.” (ஸஹீஹ்) இதே போன்ற வார்த்தைகளுடன், அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடமிருந்து அல்கமா (ரழி) அவர்கள் வழியாக மற்றொரு அறிவிப்பாளர் தொடரும் உள்ளது.

ஹதீஸ் தரம் : ளயீஃப், (தாருஸ்ஸலாம்)
باب خُطْبَةِ النِّكَاحِ
திருமண உரை
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ أُوتِيَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ جَوَامِعَ الْخَيْرِ وَخَوَاتِمَهُ - أَوْ قَالَ فَوَاتِحَ الْخَيْرِ - فَعَلَّمَنَا خُطْبَةَ الصَّلاَةِ وَخُطْبَةَ الْحَاجَةِ خُطْبَةُ الصَّلاَةِ التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏.‏ وَخُطْبَةُ الْحَاجَةِ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏.‏ ثُمَّ تَصِلُ خُطْبَتَكَ بِثَلاَثِ آيَاتٍ مِنْ كِتَابِ اللَّهِ ‏{‏يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ‏}‏ إِلَى آخِرِ الآيَةِ ‏{‏ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالأَرْحَامَ ‏}‏ إِلَى آخِرِ الآيَةِ ‏{‏اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلاً سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ‏}‏ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏
அறிவிக்கப்படுகிறது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எல்லா வகையான நன்மைகளின் தொகுப்பும், அதன் முத்திரையும் வழங்கப்பட்டது,” அல்லது அவர்கள் கூறினார்கள்: “எல்லா நன்மைகளுக்கும் வழியைத் திறப்பது (வழங்கப்பட்டது). அவர்கள் (ஸல்) எங்களுக்கு தொழுகையின் குத்பாவையும், தேவையின் குத்பாவையும் கற்றுக் கொடுத்தார்கள். 'தொழுகையின் குத்பா இதுதான்: அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாத். அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ். வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு (எல்லா விதமான புகழுரைகளும், தொழுகைகளும், பரிசுத்தமான வார்த்தைகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே, உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அவனது பரக்கத்தும் உண்டாவதாக. எங்கள் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாவதாக. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடிமையும் தூதருமாவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்). தேவையின் குத்பா இதுதான்: அல்ஹம்து லில்லாஹி நஹ்மதுஹு வ நஸ்தஈனுஹு வ நஸ்தஃக்பிருஹு, வ நஊது பில்லாஹி மின் ஷுரூரி அன்ஃபுஸினா வ மின் ஸய்யிஆத்தி அஃமாலினா, மன் யஹ்திஹில்லாஹு ஃபலா முளில்ல லஹு, வ மன் யுளிலில் ஃபலா ஹாதிய லஹு. வ அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு. (புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, நாங்கள் அவனைப் புகழ்கிறோம், அவனிடமே உதவியும் பாவமன்னிப்பும் தேடுகிறோம். எங்கள் ஆத்மாக்களின் தீமைகளிலிருந்தும், எங்கள் தீய செயல்களிலிருந்தும் அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ் நேர்வழி காட்டியவரை எவராலும் வழிகெடுக்க முடியாது; மேலும், எவரை அவன் வழிகெடுக்கிறானோ, அவருக்கு வழிகாட்ட யாருமில்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்தக் கூட்டாளியும் இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அடிமையும் தூதருமாவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்). பிறகு உங்கள் குத்பாவில் பின்வரும் மூன்று வசனங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்: 'நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள், மேலும் நீங்கள் (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் அடிபணிந்த முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.' மேலும்: 'மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான், பின்னர் ಅವರಿరువుவரிலிருந்தும் பல ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். ஆகவே, எவன் மூலம் நீங்கள் உங்கள் பரஸ்பர (உரிமைகளைக்) கோருகிறீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், மேலும் இரத்த உறவுகளை (துண்டிக்காதீர்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.' மேலும்: 'நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி உங்கள் கடமையைச் செய்யுங்கள், மேலும் (எப்போதும்) உண்மையே பேசுங்கள். அவன் உங்கள் செயல்களை நற்செயல்களாக மாற்றுவான், உங்கள் பாவங்களை மன்னிப்பான்...' வசனத்தின் இறுதி வரை.”

حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏.‏ أَمَّا بَعْدُ ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்-ஹம்து லில்லாஹி நஹ்மதுஹு வ நஸ்தஈனுஹு வ நஊது பில்லாஹி மின் ஷுரூரி அன்ஃபுஸினா வ மின் ஸய்யிஆத்தி அஃமாலினா, மன் யஹ்திஹில்லாஹு ஃபலா முதில்ல லஹு, வ மன் யுத்லில் ஃபலா ஹாதிய லஹு. வ அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு. அம்மா பஃது. (புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது, நாம் அவனையே புகழ்கிறோம், அவனிடமே உதவியும் தேடுகிறோம். நமது ஆன்மாக்களின் தீமைகளிலிருந்தும், நமது தீய செயல்களிலிருந்தும் அல்லாஹ்விடம் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ, அவரை வழிகெடுப்பவர் எவருமில்லை; அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமில்லை. வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையோ கூட்டாளியோ இல்லை என்றும் நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடிமையும் தூதரும் ஆவார் என்றும் சாட்சி கூறுகிறேன். இதற்குப் பிறகு).”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، قَالُوا حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ قُرَّةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ كُلُّ أَمْرٍ ذِي بَالٍ لاَ يُبْدَأُ فِيهِ بِالْحَمْدِ أَقْطَعُ ‏ ‏ ‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் புகழுடன் ஆரம்பிக்கப்படாத ஒவ்வொரு முக்கியமான காரியமும், (பரக்கத்) அற்றதாகும்.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب إِعْلاَنِ النِّكَاحِ
திருமணங்களை அறிவித்தல்
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَالْخَلِيلُ بْنُ عَمْرٍو، قَالاَ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ خَالِدِ بْنِ إِلْيَاسَ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ أَعْلِنُوا هَذَا النِّكَاحَ وَاضْرِبُوا عَلَيْهِ بِالْغِرْبَالِ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இந்தத் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள், மேலும் அதற்காகத் தமுக்கு அடியுங்கள்.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بَلْجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حَاطِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ فَصْلُ مَا بَيْنَ الْحَلاَلِ وَالْحَرَامِ الدُّفُّ وَالصَّوْتُ فِي النِّكَاحِ ‏ ‏ ‏.‏
முஹம்மத் பின் ஹாதிப் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஹலாலுக்கும் ஹராமுக்கும் இடையில் உள்ள வேறுபாடு, திருமணத்தின் போது தஃப் அடிப்பதும், (பாடல் மூலம்) குரல்களை உயர்த்துவதும் ஆகும்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الْغِنَاءِ وَالدُّفِّ
பாடுதல் மற்றும் தஃப் (தப்பட்டை) வாசித்தல்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الْحُسَيْنِ، - اسْمُهُ خَالِدٌ الْمَدَنِيُّ - قَالَ كُنَّا بِالْمَدِينَةِ يَوْمَ عَاشُورَاءَ وَالْجَوَارِي يَضْرِبْنَ بِالدُّفِّ وَيَتَغَنَّيْنَ فَدَخَلْنَا عَلَى الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ فَذَكَرْنَا ذَلِكَ لَهَا ‏.‏ فَقَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَبِيحَةَ عُرْسِي وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ وَتَنْدُبَانِ آبَائِي الَّذِينَ قُتِلُوا يَوْمَ بَدْرٍ وَتَقُولاَنِ فِيمَا تَقُولاَنِ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ ‏.‏ فَقَالَ ‏ ‏ أَمَّا هَذَا فَلاَ تَقُولُوهُ مَا يَعْلَمُ مَا فِي غَدٍ إِلاَّ اللَّهُ ‏ ‏ ‏.‏
காலித் அல்-மதனி என்ற இயற்பெயர் கொண்ட அபூ ஹுஸைன் அவர்கள் கூறினார்கள்:

“நாங்கள் ஆஷூரா நாளன்று அல்-மதீனாவில் இருந்தோம், அப்போது சிறுமிகள் தஃப் அடித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தனர். நாங்கள் ருபையிஃ பின்த் முஅவ்வித் (ரழி) அவர்களிடம் சென்று, அதுபற்றி அவர்களிடம் கூறினோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'எனது திருமண நாளன்று காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது என்னுடன் இருந்த இரண்டு சிறுமிகள், பத்ர் போரில் கொல்லப்பட்ட எனது முன்னோர்களின் சிறப்புகளைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் பாடிக்கொண்டிருந்தவற்றில், “எங்களிடையே ஒரு நபி இருக்கிறார், அவர் நாளை என்ன நடக்கும் என்பதை அறிவார்” என்பதும் ஒன்றாகும்.' அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இப்படிச் சொல்லாதீர்கள், ஏனெனில் நாளை என்ன நடக்கும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ عَلَىَّ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتْ بِهِ الأَنْصَارُ فِي يَوْمِ بُعَاثٍ ‏.‏ قَالَتْ وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ ‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ أَبِمَزْمُورِ الشَّيْطَانِ فِي بَيْتِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَذَلِكَ فِي يَوْمِ عِيدِ الْفِطْرِ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“அபூபக்ர் (ரழி) அவர்கள் என்னிடம் வந்தார்கள், அப்போது என்னிடம் அன்சாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் புஆஸ் போர் குறித்த பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர்.” அவர்கள் கூறினார்கள்: “அவ்விருவரும் உண்மையில் பாடகிகள் அல்லர். அபூபக்ர் (ரழி) அவர்கள், 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று கேட்டார்கள். அது நோன்புப் பெருநாள் அன்று நடந்தது. ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'ஓ அபூபக்ரே, ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு பண்டிகை உண்டு, இது நமது பண்டிகை' என்று கூறினார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَوْفٌ، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ مَرَّ بِبَعْضِ الْمَدِينَةِ فَإِذَا هُوَ بِجَوَارٍ يَضْرِبْنَ بِدُفِّهِنَّ وَيَتَغَنَّيْنَ وَيَقُلْنَ نَحْنُ جَوَارٍ مِنْ بَنِي النَّجَّارِ يَا حَبَّذَا مُحَمَّدٌ مِنْ جَارِ ‏.‏ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ يَعْلَمُ اللَّهُ إِنِّي لأُحِبُّكُنَّ ‏ ‏ ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவின் ஒரு பகுதி வழியாகச் சென்றபோது, சில சிறுமிகள் தங்களது தஃப் அடித்துக்கொண்டு, “நாங்கள் பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த சிறுமிகள், முஹம்மது (ஸல்) அவர்கள் எவ்வளவு சிறந்த அண்டை வீட்டுக்காரர்” என்று பாடுவதைக் கண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் எனக்குப் பிரியமானவர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، أَنْبَأَنَا الأَجْلَحُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَنْكَحَتْ عَائِشَةُ ذَاتَ قَرَابَةٍ لَهَا مِنَ الأَنْصَارِ فَجَاءَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ أَهْدَيْتُمُ الْفَتَاةَ ‏"‏ ‏.‏ قَالُوا نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ أَرْسَلْتُمْ مَعَهَا مَنْ يُغَنِّي قَالَتْ لاَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِنَّ الأَنْصَارَ قَوْمٌ فِيهِمْ غَزَلٌ فَلَوْ بَعَثْتُمْ مَعَهَا مَنْ يَقُولُ أَتَيْنَاكُمْ أَتَيْنَاكُمْ فَحَيَّانَا وَحَيَّاكُمْ ‏"‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

ஆயிஷா (ரழி) அவர்கள் அன்சாரிகளில் உள்ள அவர்களுடைய உறவுக்காரப் பெண் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து கூறினார்கள்: "அந்தப் பெண்ணை (அவளுடைய கணவன் வீட்டிற்கு) அனுப்பி விட்டீர்களா?” அதற்கு அவர்கள், “ஆம்” என்று கூறினார்கள். அவர்கள் கூறினார்கள்: “அவளுடன் பாடுவதற்கு யாரையாவது அனுப்பினீர்களா?” அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள், “இல்லை” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அன்சாரிகள் என்பவர்கள் இரசனை உணர்வு மிக்கவர்கள். 'உங்களிடம் நாங்கள் வந்துவிட்டோம், உங்களிடம் நாங்கள் வந்துவிட்டோம், அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் பரக்கத் செய்வானாக!' என்று கூறுவதற்கு அவளுடன் யாரையாவது நீங்கள் ஏன் அனுப்பவில்லை?”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنْ ثَعْلَبَةَ بْنِ أَبِي مَالِكٍ التَّمِيمِيِّ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فَسَمِعَ صَوْتَ، طَبْلٍ فَأَدْخَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ ثُمَّ تَنَحَّى حَتَّى فَعَلَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ ‏.‏ ثُمَّ قَالَ هَكَذَا فَعَلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
முஜாஹித் அவர்கள் அறிவித்தார்கள்:

நான் இப்னு உமர் (ரழி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் ஒரு தாள வாத்தியத்தின் சத்தத்தைக் கேட்டார்கள். உடனே அவர்கள் தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் வைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்கள். இவ்வாறே அவர்கள் மூன்று முறை செய்தார்கள். பின்னர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் கண்டேன்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب فِي الْمُخَنَّثِينَ
பெண்தன்மை கொண்ட ஆண்கள்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ دَخَلَ عَلَيْهَا فَسَمِعَ مُخَنَّثًا وَهُوَ يَقُولُ لِعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَيَّةَ إِنْ يَفْتَحِ اللَّهُ الطَّائِفَ غَدًا دَلَلْتُكَ عَلَى امْرَأَةٍ تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ أَخْرِجُوهُ مِنْ بُيُوتِكُمْ ‏ ‏ ‏.‏
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் நுழைந்தபோது, பெண்தன்மை கொண்ட ஒருவர் அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா (ரழி) அவர்களிடம் கூறுவதை அவர்கள் கேட்டார்கள்: "அல்லாஹ் நாளை தாயிஃப் மீது உங்களுக்கு வெற்றியளிக்கச் செய்தால், நான்கு (சதைக் மடிப்புகளுடன்) உள்ளே வந்து, எட்டு (சதைக் மடிப்புகளுடன்) வெளியே செல்லும் ஒரு பெண்ணை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்." அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لَعَنَ الْمَرْأَةَ تَتَشَبَّهُ بِالرِّجَالِ وَالرَّجُلَ يَتَشَبَّهُ بِالنِّسَاءِ ‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஆண்களுக்கு ஒப்பாகச் செயல்படும் பெண்களையும், பெண்களுக்கு ஒப்பாகச் செயல்படும் ஆண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ لَعَنَ الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ وَلَعَنَ الْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
பெண்களைப் போல நடந்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போல நடந்துகொள்ளும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب تَهْنِئَةِ النِّكَاحِ
திருமண வாழ்த்துக்கள் தெரிவிப்பது
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا رَفَّأَ قَالَ ‏ ‏ بَارَكَ اللَّهُ لَكُمْ وَبَارَكَ عَلَيْكُمْ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ ‏ ‏ ‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள், திருமண வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்போது கூறுவார்கள்: "பாரகல்லாஹு லக்கும், வ பாரக அலைக்கும், வ ஜமஅ பைனகுமா ஃபீ கைர் (அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் அளிக்கட்டும், உங்கள் மீது அருளைப் பொழியட்டும், மேலும் உங்கள் இருவரையும் நன்மையில் ஒன்றிணைக்கட்டும்)."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الْحَسَنِ، عَنْ عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ بَنِي جُشَمٍ فَقَالُوا بِالرِّفَاءِ وَالْبَنِينَ فَقَالَ لاَ تَقُولُوا هَكَذَا وَلَكِنْ قُولُوا كَمَا قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ وَبَارِكْ عَلَيْهِمْ ‏ ‏ ‏.‏
அகீல் இப்னு அபூ தாலிப் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:

அவர்கள் பனூ ஜுஷம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். அப்போது (அங்கிருந்தவர்கள்), "நீங்கள் இணக்கத்துடன் வாழுங்கள், உங்களுக்கு நிறைய ஆண் பிள்ளைகள் பிறக்கட்டும்" என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள், "அப்படிச் சொல்லாதீர்கள். மாறாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைச் சொல்லுங்கள்: 'அல்லாஹும்ம பாரிக் லஹும் வ பாரிக் அலைஹிம் (யா அல்லாஹ், அவர்களுக்கு பரக்கத் செய்வாயாக, அவர்கள் மீது உன் பரக்கத்தைப் பொழிவாயாக).'” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الْوَلِيمَةِ
வலீமா (திருமண விருந்து)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ فَقَالَ ‏"‏ مَا هَذَا أَوْ مَهْ ‏"‏ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ ‏.‏ فَقَالَ ‏"‏ بَارَكَ اللَّهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ ‏"‏ ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள், அப்துர்-ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களின் மீது மஞ்சள் நிற வாசனைப் பொருளின் தடயங்களைக் கண்டார்கள், மேலும் அவரிடம், “இது என்ன?” என்று கேட்டார்கள். அவர் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதரே, நான் ஒரு நவா (கல்) எடை தங்கத்திற்கு ஒரு பெண்ணை மணமுடித்தேன்.” அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. ஒரே ஒரு ஆட்டைக் கொண்டாவது வலீமா கொடுங்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَوْلَمَ عَلَى شَىْءٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَى زَيْنَبَ فَإِنَّهُ ذَبَحَ شَاةً ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரழி) அவர்களுக்காக ஓர் ஆட்டை அறுத்து அளித்த வலிமா விருந்தைப் போன்று, அவர்களுடைய மனைவியரில் வேறு எவருக்காகவும் அளித்ததை நான் கண்டதில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْعَدَنِيُّ، وَغِيَاثُ بْنُ جَعْفَرٍ الرَّحَبِيُّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا وَائِلُ بْنُ دَاوُدَ، عَنِ ابْنِهِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ أَوْلَمَ عَلَى صَفِيَّةَ بِسَوِيقٍ وَتَمْرٍ ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்களுக்காக ஸவீக்கையும் பேரீச்சம்பழங்களையும் திருமண விருந்தாக வழங்கினார்கள்.

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ شَهِدْتُ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَلِيمَةً مَا فِيهَا لَحْمٌ وَلاَ خُبْزٌ ‏.‏ قَالَ ابْنُ مَاجَهْ لَمْ يُحَدِّثْ بِهِ إِلاَّ ابْنُ عُيَيْنَةَ ‏.‏
சுஃப்யான் (இப்னு உயைனா) அவர்கள், அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் அவர்களின் வாயிலாக, அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
“நபி (ஸல்) அவர்களின் திருமண விருந்து ஒன்றில் நான் கலந்துகொண்டேன்; அதில் இறைச்சியும் இல்லை, ரொட்டியும் இல்லை.”

இப்னு மாஜா கூறினார்கள்: இதனை இப்னு உயைனா அவர்களைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை.

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ جَابِرٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، وَأُمِّ سَلَمَةَ قَالَتَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نُجَهِّزَ فَاطِمَةَ حَتَّى نُدْخِلَهَا عَلَى عَلِيٍّ فَعَمَدْنَا إِلَى الْبَيْتِ فَفَرَشْنَاهُ تُرَابًا لَيِّنًا مِنْ أَعْرَاضِ الْبَطْحَاءِ ثُمَّ حَشَوْنَا مِرْفَقَتَيْنِ لِيفًا فَنَفَشْنَاهُ بِأَيْدِينَا ثُمَّ أَطْعَمْنَا تَمْرًا وَزَبِيبًا وَسَقَيْنَا مَاءً عَذْبًا وَعَمَدْنَا إِلَى عُودٍ فَعَرَضْنَاهُ فِي جَانِبِ الْبَيْتِ لِيُلْقَى عَلَيْهِ الثَّوْبُ وَيُعَلَّقَ عَلَيْهِ السِّقَاءُ فَمَا رَأَيْنَا عُرْسًا أَحْسَنَ مِنْ عُرْسِ فَاطِمَةَ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்களும், உம்மு ஸலமா (ரழி) அவர்களும் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஃபாத்திமா (ரழி) அவர்களை (அவரது திருமணத்திற்காக) தயார்படுத்தி, அலீ (ரழி) அவர்களிடம் அழைத்துச் செல்லுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நாங்கள் அந்த வீட்டிற்குச் சென்று, பத்ஹா நிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மென்மையான மண்ணை அதில் தூவினோம். பிறகு, நாங்கள் எங்கள் கைகளாலேயே சேகரித்த பேரீச்சை மர நாரினால் இரண்டு தலையணைகளை நிரப்பினோம். பிறகு, நாங்கள் உண்பதற்கு பேரீச்சம்பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும், பருகுவதற்கு இனிமையான நீரையும் வழங்கினோம். ஆடைகளையும் தண்ணீர் பைகளையும் தொங்கவிடுவதற்காக, நாங்கள் சென்று சில மரக்கட்டைகளைக் கொண்டுவந்து அறையின் ஓரத்தில் வைத்தோம். மேலும், ஃபாத்திமா (ரழி) அவர்களின் திருமணத்தை விட சிறந்த ஒரு திருமணத்தை நாங்கள் கண்டதில்லை.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ دَعَا أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى عُرْسِهِ فَكَانَتْ خَادِمَهُمُ الْعَرُوسُ ‏.‏ قَالَتْ تَدْرِي مَا سَقَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَتْ أَنْقَعْتُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ فَلَمَّا أَصْبَحْتُ صَفَّيْتُهُنَّ فَأَسْقَيْتُهُنَّ إِيَّاهُ ‏.‏
சஹ்ல் பின் சஅத் அஸ்-ஸாஇதீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
“அபூ உசைத் அஸ்-ஸாஇதீ (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தமது திருமணத்திற்கு அழைத்தார்கள். மணமகளே அவர்களுக்குப் பணிவிடை செய்தார்கள். அந்த மணமகள் கூறினார்: 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருந்தக் கொடுத்தது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் முந்தைய இரவு சில பேரீச்சம்பழங்களை ஊற வைத்திருந்தேன். பிறகு காலையில் அவற்றை வடிகட்டி, அந்த நீரை அவருக்கு அருந்தக் கொடுத்தேன்.'”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب إِجَابَةِ الدَّاعِي
விருந்தோம்பல் அழைப்புகளை ஏற்றுக்கொள்வது
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ وَمَنْ لَمْ يُجِبْ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“உணவுகளில் மிக மோசமானது, செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் புறக்கணிக்கப்படும் திருமண விருந்து உணவாகும். யார் (விருந்து) அழைப்பை ஏற்கவில்லையோ, அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى وَلِيمَةِ عُرْسٍ فَلْيُجِبْ ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டால், அவர் அதை ஏற்றுக்கொள்ளட்டும்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ حُسَيْنٍ أَبُو مَالِكٍ النَّخَعِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ الْوَلِيمَةُ أَوَّلَ يَوْمٍ حَقٌّ وَالثَّانِي مَعْرُوفٌ وَالثَّالِثُ رِيَاءٌ وَسُمْعَةٌ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'முதல் நாள் திருமண விருந்து ஒரு கடமையாகும், இரண்டாம் நாள் ஒரு நடைமுறையாகும், மூன்றாம் நாள் பகட்டுக்காகச் செய்யப்படுவதாகும்.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الإِقَامَةِ عَلَى الْبِكْرِ وَالثَّيِّبِ
கன்னிப் பெண்ணுடனும் முன்னர் திருமணமான பெண்ணுடனும் தங்குதல்
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ إِنَّ لِلثَّيِّبِ ثَلاَثًا وَلِلْبِكْرِ سَبْعًا ‏ ‏ ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணுக்கு மூன்று நாட்களும், கன்னிப்பெண்ணுக்கு ஏழு நாட்களும்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ، - يَعْنِي ابْنَ أَبِي بَكْرِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ - عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لَمَّا تَزَوَّجَ أُمَّ سَلَمَةَ أَقَامَ عِنْدَهَا ثَلاَثًا وَقَالَ ‏ ‏ لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ إِنْ شِئْتِ سَبَّعْتُ لَكِ وَإِنْ سَبَّعْتُ لَكِ سَبَّعْتُ لِنِسَائِي ‏ ‏ ‏.‏
அல்-ஹாரித் அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களைத் திருமணம் செய்தபோது, அவர்களுடன் மூன்று நாட்கள் தங்கினார்கள், பின்னர் கூறினார்கள்:

“உங்கள் கணவரின் பார்வையில் நீங்கள் மதிப்பற்றவர் அல்லர். நீங்கள் விரும்பினால், நான் உங்களுடன் ஏழு நாட்கள் தங்குவேன், ஆனால் பின்னர் எனது மற்ற மனைவிகளுடனும் ஏழு நாட்கள் தங்குவேன்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا دَخَلَتْ عَلَيْهِ أَهْلُهُ
மணமகள் தன்னிடம் வரும்போது மணமகன் கூற வேண்டியது
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَصَالِحُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى الْقَطَّانُ، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ إِذَا أَفَادَ أَحَدُكُمُ امْرَأَةً أَوْ خَادِمًا أَوْ دَابَّةً فَلْيَأْخُذْ بِنَاصِيَتِهَا وَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا جُبِلَتْ عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جُبِلَتْ عَلَيْهِ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் எவரேனும் ஒரு புதிய மனைவியை, ஒரு பணியாளரை, அல்லது ஒரு கால்நடையைப் பெற்றால், அதன் முன்நெற்றியைப் பிடித்துக் கொண்டு இவ்வாறு கூறட்டும்: அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் கைரிஹா வ கைரி மா ஜுபிலத் அலைஹி, வ அஊது பிக்க மின் ஷர்ரிஹா வ ஷர்ரி மா ஜுபிலத் அலைஹி (யா அல்லாஹ், நான் உன்னிடம் அவளின் நன்மையையும், அவளுக்கு நீ இயல்பாக அமைத்திருக்கும் நற்குணத்தின் நன்மையையும் கேட்கிறேன், மேலும் அவளின் தீங்கிலிருந்தும், அவளுக்கு நீ இயல்பாக அமைத்திருக்கும் தீய குணத்தின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்).”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى امْرَأَتَهُ قَالَ اللَّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنِي ثُمَّ كَانَ بَيْنَهُمَا وَلَدٌ لَمْ يُسَلِّطِ اللَّهُ عَلَيْهِ الشَّيْطَانَ - أَوْ لَمْ يَضُرَّهُ - ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளும்போது, அவர் கூறட்டும்: அல்லாஹும்ம ஜன்னிப்னிஷ்-ஷைத்தான வ ஜன்னிபிஷ்-ஷைத்தான மா ரஸக்தனீ (அல்லாஹ்வே, ஷைத்தானை என்னிடமிருந்து அப்புறப்படுத்துவாயாக, மேலும் நீ எனக்கு வழங்கும் குழந்தையிடமிருந்தும் ஷைத்தானை அப்புறப்படுத்துவாயாக). பின்னர், அவர்களுக்கு குழந்தை விதிக்கப்பட்டால், ஷைத்தான் ஒருபோதும் அக்குழந்தைக்குத் தீங்கு செய்யமாட்டான்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب التَّسَتُّرِ عِنْدَ الْجِمَاعِ
தாம்பத்திய உறவின் போது தன்னை மூடிக் கொள்வது
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، وَأَبُو أُسَامَةَ قَالاَ حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ ‏"‏ احْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ كَانَ الْقَوْمُ بَعْضُهُمْ فِي بَعْضٍ قَالَ ‏"‏ إِنِ اسْتَطَعْتَ أَنْ لاَ تُرِيَهَا أَحَدًا فَلاَ تُرِيَنَّهَا ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَإِنْ كَانَ أَحَدُنَا خَالِيًا قَالَ ‏"‏ فَاللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَى مِنْهُ مِنَ النَّاسِ ‏"‏ ‏.‏
பஹ்ஸ் பின் ஹகீம் (ரழி) அவர்கள் தனது தந்தை வழியாக தனது பாட்டனார் (ரழி) அறிவித்ததாவது:

“நான் கேட்டேன்: ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களின் அவ்ரா விஷயத்தில், அதில் எதை நாங்கள் வெளிப்படுத்தலாம், எதை நாங்கள் மறைக்க வேண்டும்?’”

அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: ‘உனது மனைவியிடமும், உனது வலக்கரம் உரிமையாக்கிக் கொண்டவர்களிடமும் தவிர, உனது அவ்ராவை மறைத்துக்கொள்.’

நான் கேட்டேன்: ‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்தால் (என்ன செய்வது)?’

அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: ‘அதனை எவரும் பார்க்காதவாறு உன்னால் பார்த்துக்கொள்ள முடியுமானால், அதனை எவரும் பார்க்கும்படி விடாதே.’

நான் கேட்டேன்: ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனியாக இருந்தால் (என்ன செய்வது)?’

அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: ‘மக்களை விட அல்லாஹ்வே நீ வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன்.’ ”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ وَهْبٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ الْقَاسِمِ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا الأَحْوَصُ بْنُ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، وَرَاشِدِ بْنِ سَعْدٍ، وَعَبْدِ الأَعْلَى بْنِ عَدِيٍّ، عَنْ عُتْبَةَ بْنِ عَبْدٍ السُّلَمِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ فَلْيَسْتَتِرْ وَلاَ يَتَجَرَّدْ تَجَرُّدَ الْعَيْرَيْنِ ‏ ‏ ‏.‏
'உத்பா பின் அப்த் சுலைமான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளும்போது, அவர் தன்னை மறைத்துக் கொள்ளட்டும், கழுதைகளைப் போல் நிர்வாணமாக இருக்க வேண்டாம்.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ مَوْلًى، لِعَائِشَةَ عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا نَظَرْتُ - أَوْ مَا رَأَيْتُ - فَرْجَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَطُّ ‏.‏ قَالَ أَبُو بَكْرٍ قَالَ أَبُو نُعَيْمٍ عَنْ مَوْلاَةٍ لِعَائِشَةَ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்களின் விடுதலை செய்யப்பட்ட அடிமையிடமிருந்து, ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது:

“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மர்ம உறுப்பை உற்றுப் பார்த்ததுமில்லை; அதைக் கண்டதுமில்லை.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب النَّهْىِ عَنْ إِتْيَانِ النِّسَاءِ، فِي أَدْبَارِهِنَّ
பெண்களின் பின்புறத்தில் தாம்பத்திய உறவு கொள்வதற்கான தடை
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنِ الْحَارِثِ بْنِ مُخَلَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ لاَ يَنْظُرُ اللَّهُ إِلَى رَجُلٍ جَامَعَ امْرَأَتَهُ فِي دُبُرِهَا ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தன் மனைவியுடன் அவளுடைய பின்புறத்தில் தாம்பத்திய உறவு கொள்ளும் ஒரு மனிதனை அல்லாஹ் பார்க்க மாட்டான்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أَنْبَأَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هَرَمِيٍّ، عَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ ‏"‏ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ لاَ تَأْتُوا النِّسَاءَ فِي أَدْبَارِهِنَّ ‏"‏ ‏.‏
குஸைமா பின் ஸாபித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் சத்தியத்தைக் கூறுவதற்கு வெட்கப்படுவதில்லை" என்று மூன்று முறை கூறினார்கள். "பெண்களுடன் அவர்களுடைய பின்துவாரங்களில் தாம்பத்திய உறவு கொள்ளாதீர்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، وَجَمِيلُ بْنُ الْحَسَنِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ كَانَتْ يَهُودُ تَقُولُ مَنْ أَتَى امْرَأَةً فِي قُبُلِهَا مِنْ دُبُرِهَا كَانَ الْوَلَدُ أَحْوَلَ فَأَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ ‏{نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ}‏ ‏.‏
முஹம்மத் பின் முன்கதிர் அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது:
அவர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறக் கேட்டதாவது: “ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் அவளது பிறப்புறுப்பில் பின்புறமாக இருந்து தாம்பத்திய உறவு கொண்டால், குழந்தை மாறுகண்ணுடன் பிறக்கும் என்று யூதர்கள் கூறி வந்தார்கள். அப்போது, கண்ணியமிக்க அல்லாஹ் அருளினான்: 'உங்கள் மனைவியர் உங்களுக்கு விளைநிலங்கள் ஆவார்கள். ஆகவே, உங்கள் விளைநிலத்திற்கு நீங்கள் நாடியவாறு செல்லுங்கள்.'”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الْعَزْلِ
தாம்பத்திய உறவின் போது விந்தை வெளியே விடுதல்
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الْعَزْلِ فَقَالَ ‏ ‏ أَوَتَفْعَلُونَ لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا فَإِنَّهُ لَيْسَ مِنْ نَسَمَةٍ قَضَى اللَّهُ لَهَا أَنْ تَكُونَ إِلاَّ هِيَ كَائِنَةٌ ‏ ‏ ‏.‏
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

“ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அஸ்ல் (புணர்ச்சி இடைமறிப்பு) செய்வது பற்றி கேட்டார். அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் அவ்வாறு செய்கிறீர்களா? நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டாலும் உங்களுக்கு அதனால் ஒரு தீங்கும் இல்லை; ஏனெனில், அல்லாஹ் (சுப்ஹானஹு வதஆலா) எந்த ஆன்மா உருவாக வேண்டும் என்று விதித்துவிட்டானோ, அது நிச்சயமாக உருவாகியே தீரும்.’”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَالْقُرْآنُ يَنْزِلُ ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில், குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்தபோது நாங்கள் அஸ்ல் (புணர்ச்சியை இடையில் நிறுத்துதல்) செய்து வந்தோம்.’

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ الْمُحَرَّرِ بْنِ أَبِي هُرَيْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُعْزَلَ عَنِ الْحُرَّةِ إِلاَّ بِإِذْنِهَا ‏.‏
உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு சுதந்திரமான பெண்ணிடம் அவளுடைய அனுமதியின்றி `அஸ்ல்` செய்வதைத் தடை செய்தார்கள்.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب لاَ تُنْكَحُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَلاَ عَلَى خَالَتِهَا
ஒரு பெண்ணின் தந்தை வழி அத்தை அல்லது தாய் வழி அத்தையுடன் சேர்த்து அந்தப் பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளக்கூடாது
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ لاَ تُنْكَحُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَلاَ عَلَى خَالَتِهَا ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒரே நேரத்தில்) திருமணம் செய்து கொள்ளக் கூடாது.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَعْقُوبَ بْنِ عُتْبَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَنْهَى عَنْ نِكَاحَيْنِ أَنْ يَجْمَعَ الرَّجُلُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا وَبَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا ‏.‏
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு வகையான திருமணங்களைத் தடை செய்ததை நான் கேட்டேன்: ஒரு ஆண், ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் (ஒரே நேரத்தில்) திருமணம் செய்வது, மேலும் ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒரே நேரத்தில்) திருமணம் செய்வது.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا جُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّهْشَلِيُّ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ لاَ تُنْكَحُ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَلاَ عَلَى خَالَتِهَا ‏ ‏ ‏.‏
அபூபக்ர் பின் அபூமூஸா அவர்கள், தம் தந்தை (ரழி) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு ஆண், ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் அல்லது அவளுடைய தாயின் சகோதரியையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்யக் கூடாது.””

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الرَّجُلِ يُطَلِّقُ امْرَأَتَهُ ثَلاَثًا فَتَزَوَّجُ فَيُطَلِّقُهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا أَتَرْجِعُ إِلَى الأَوَّلِ
ஒரு மனிதர் தனது மனைவியை மூன்று முறை விவாகரத்து செய்கிறார், பின்னர் மற்றொரு மனிதர் அவளை திருமணம் செய்து தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்னரே விவாகரத்து செய்கிறார். அவள் முதல் கணவரிடம் திரும்பிச் செல்ல முடியுமா?
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةَ، رِفَاعَةَ الْقُرَظِيِّ جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ إِنِّي كُنْتُ عِنْدَ رِفَاعَةَ فَطَلَّقَنِي فَبَتَّ طَلاَقِي فَتَزَوَّجْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ وَإِنَّ مَا مَعَهُ مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ ‏.‏ فَتَبَسَّمَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏ ‏ أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ لاَ حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ரிஃபாஆ அல்-குரழீ (ரழி) அவர்களின் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்கள்: “நான் ரிஃபாஆ (ரழி) அவர்களை மணந்திருந்தேன், அவர் என்னை விவாகரத்து செய்து, அதைத் திரும்பப்பெற முடியாதபடி செய்துவிட்டார். பிறகு நான் அப்துர்-ரஹ்மான் பின் ஸுபைர் (ரழி) அவர்களை மணந்தேன், ஆனால் அவரிடம் இருப்பது ஆடையின் குஞ்சம் போன்றுதான் இருக்கிறது.” நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு கூறினார்கள்: “நீங்கள் ரிஃபாஆ (ரழி) அவர்களிடம் திரும்பச் செல்ல விரும்புகிறீர்களா? இல்லை, நீங்கள் அவருடைய (அப்துர்-ரஹ்மானின்) இனிமையைச் சுவைத்து, அவர் உங்களுடைய இனிமையைச் சுவைக்கும் வரை (அது) முடியாது.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، قَالَ سَمِعْتُ سَالِمَ بْنَ رَزِينٍ، يُحَدِّثُ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي الرَّجُلِ تَكُونُ لَهُ الْمَرْأَةُ فَيُطَلِّقُهَا فَيَتَزَوَّجُهَا رَجُلٌ فَيُطَلِّقُهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا أَتَرْجِعُ إِلَى الأَوَّلِ قَالَ ‏ ‏ لاَ ‏.‏ حَتَّى يَذُوقَ الْعُسَيْلَةَ ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது:

நபி (ஸல்) அவர்களிடம், ஒரு மனிதர் தன் மனைவியை விவாகரத்து செய்து, பின்னர் மற்றொருவர் அவளைத் திருமணம் செய்து, ஆனால் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பே அவளை விவாகரத்து செய்து விட்டால், அவள் முதல் கணவரிடம் திரும்பிச் செல்ல முடியுமா என்பது பற்றி கேட்கப்பட்டது. அவர்கள் கூறினார்கள்: “இல்லை, அவன் அவளுடைய இனிமையை சுவைக்கும் வரை முடியாது.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الْمُحَلِّلِ وَالْمُحَلَّلِ لَهُ
முஹல்லில் மற்றும் முஹல்லல் லஹு
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، عَنْ زَمْعَةَ بْنِ صَالِحٍ، عَنْ سَلَمَةَ بْنِ وَهْرَامَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹல்லிலையும், முஹல்லல் லஹுவையும் சபித்தார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ الْبَخْتَرِيِّ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ ابْنِ عَوْنٍ، وَمُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ ‏.‏
அலி (ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹல்லிலையும், முஹல்லல் லஹுவையும் சபித்தார்கள்.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ صَالِحٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ اللَّيْثَ بْنَ سَعْدٍ، يَقُولُ قَالَ لِي أَبُو مُصْعَبٍ مِشْرَحُ بْنُ هَاعَانَ قَالَ عُقْبَةُ بْنُ عَامِرٍ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَلاَ أُخْبِرُكُمْ بِالتَّيْسِ الْمُسْتَعَارِ ‏"‏ ‏.‏ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ هُوَ الْمُحَلِّلُ لَعَنَ اللَّهُ الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَهُ ‏"‏ ‏.‏
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இரவல் கிடாய் பற்றி நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?' அவர்கள் கூறினார்கள்: “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” அவர்கள் கூறினார்கள்: “அவன்தான் முஹல்லில். அல்லாஹ் முஹல்லிலையும், முஹல்லல் லஹுவையும் சபிக்கட்டும்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب يَحْرُمُ مِنَ الرِّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ
வம்சாவளியின் காரணமாக தடுக்கப்பட்டவை பாலூட்டுதலின் காரணமாகவும் தடுக்கப்பட்டவையாகும்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنِ الْحَجَّاجِ، عَنِ الْحَكَمِ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பால்குடி, இரத்த உறவு தடைசெய்யும் அதே காரியங்களை (திருமணத்திற்கு) தடைசெய்கிறது.'

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، وَأَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ قَالاَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أُرِيدَ عَلَى بِنْتِ حَمْزَةَ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ ‏ ‏ إِنَّهَا ابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ وَإِنَّهُ يَحْرُمُ مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஹம்ஸா பின் அப்துல்-முத்தலிப் (ரழி) அவர்களின் மகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முன்மொழியப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “அவள் என் பால்குடி சகோதரரின் மகள். மேலும், இரத்த பந்தம் ஹராமாக்குபவற்றை எல்லாம் பால்குடியும் ஹராமாக்கிவிடும்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ حَدَّثَتْهَا أَنَّهَا، قَالَتْ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ انْكِحْ أُخْتِي عَزَّةَ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَتُحِبِّينَ ذَلِكَ ‏"‏ ‏.‏ قَالَتْ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَلَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ وَأَحَقُّ مَنْ شَرِكَنِي فِي خَيْرٍ أُخْتِي ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ فَإِنَّ ذَلِكَ لاَ يَحِلُّ لِي ‏"‏ ‏.‏ قَالَتْ فَإِنَّا نَتَحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ ‏.‏ فَقَالَ ‏"‏ بِنْتَ أُمِّ سَلَمَةَ ‏"‏ ‏.‏ قَالَتْ نَعَمْ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ فَإِنَّهَا لَوْ لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حِجْرِي مَا حَلَّتْ لِي إِنَّهَا ابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي وَأَبَاهَا ثُوَيْبَةُ فَلاَ تَعْرِضْنَ عَلَىَّ أَخَوَاتِكُنَّ وَلاَ بَنَاتِكُنَّ ‏"‏ ‏.‏
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ ‏.‏
உர்வா பின் ஜுபைரிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது, ஜைனப் பின்த் அபி ஸலமா (ரழி) அவர்கள் அவரிடம் உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் தன்னிடம் கூறியதாகச் சொன்னார்கள், அவர் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல்) கூறியது:

"என் சகோதரி அஜ்ஜாவை நீங்கள் மணந்துகொள்ளுங்கள்." அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: 'அதை நீர் விரும்புகிறீரா?' அவர் கூறினார்: "ஆம், அல்லாஹ்வின் தூதரே. நான் மட்டும் உங்களுடன் வாழவில்லை, என்னுடன் நன்மைகளைப் பகிர்ந்துகொள்ள மிகவும் தகுதியானவர் என் சகோதரிதான்." அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆனால் அது எனக்கு அனுமதிக்கப்படவில்லை." அவர் கூறினார்: "ஆனால் நீங்கள் துர்ரா பின்த் அபி ஸலமாவை மணந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று நாங்கள் நினைத்தோம்." அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: "உம்மு ஸலமாவின் (ரழி) மகளையா?" அவர் கூறினார்: "ஆம்." அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அவர் என் பராமரிப்பில் உள்ள என் வளர்ப்பு மகளாக இல்லாதிருந்தாலும்கூட, அவர் எனக்கு அனுமதிக்கப்பட்டவராக இருக்கமாட்டார், ஏனெனில் அவர் பால்குடி முறையிலான என் சகோதரரின் மகள் ஆவார். துவைபா அவளுடைய தந்தைக்கும் எனக்கும் பாலூட்டினார். எனவே, உங்கள் சகோதரிகளையும் மகள்களையும் எனக்குத் திருமணத்திற்காக முன்மொழியாதீர்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب لاَ تُحَرِّمُ الْمَصَّةُ وَلاَ الْمَصَّتَانِ
ஒன்று அல்லது இரண்டு முறை பால் குடித்தல் (திருமணத்தை) தடுக்காது
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، أَنَّ أُمَّ الْفَضْلِ، حَدَّثَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ لاَ تُحَرِّمُ الرَّضْعَةُ وَلاَ الرَّضْعَتَانِ أَوِ الْمَصَّةُ وَالْمَصَّتَانِ ‏ ‏ ‏.‏
உம்முல் ஃபள் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருமுறை அல்லது இருமுறை பாலூட்டுவதோ, அல்லது ஒருமுறை அல்லது இருமுறை பால் குடிப்பதோ (திருமண) உறவைத் தடைசெய்யாது.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خِدَاشٍ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ لاَ تُحَرِّمُ الْمَصَّةُ وَالْمَصَّتَانِ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முறையோ அல்லது இரு முறையோ பால் அருந்துதல் (திருமணத்தை) ஹராம் ஆக்காது.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أَنْزَلَ اللَّهُ مِنَ الْقُرْآنِ ثُمَّ سَقَطَ لاَ يُحَرِّمُ إِلاَّ عَشْرُ رَضَعَاتٍ أَوْ خَمْسٌ مَعْلُومَاتٌ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“குர்ஆனில் அல்லாஹ் வஹீயாக (இறைச்செய்தியாக) அருளி, பின்னர் மாற்றியமைத்த விஷயங்களில் ஒன்று என்னவென்றால், பத்து முறை பாலூட்டுவதோ அல்லது நன்கு அறியப்பட்ட ஐந்து முறை (பாலூட்டுவதோ) தவிர வேறு எதுவும் திருமணத்தை ஹராமாக்காது என்பதாகும்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب رِضَاعِ الْكَبِيرِ
பெரியவர்களுக்கு பாலூட்டுதல்
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ الْكَرَاهِيَةَ مِنْ دُخُولِ سَالِمٍ عَلَىَّ ‏.‏ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَرْضِعِيهِ ‏"‏ ‏.‏ قَالَتْ كَيْفَ أُرْضِعُهُ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَقَالَ ‏"‏ قَدْ عَلِمْتُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ ‏"‏ ‏.‏ فَفَعَلَتْ فَأَتَتِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ مَا رَأَيْتُ فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ شَيْئًا أَكْرَهُهُ بَعْدُ ‏.‏ وَكَانَ شَهِدَ بَدْرًا ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

“ஸஹ்லா பின்த் ஸுஹைல் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே, ஸாலிம் என்னிடம் வரும்போது அபூ ஹுதைஃபா (ரழி) அவர்களின் முகத்தில் நான் அதிருப்தியின் அடையாளங்களைப் பார்க்கிறேன்' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பாலூட்டுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அவர் ஒரு வளர்ந்த ஆணாக இருக்கும்போது நான் எப்படி அவருக்குப் பாலூட்ட முடியும்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, “அவர் ஒரு வளர்ந்த ஆண் என்று எனக்குத் தெரியும்” என்று கூறினார்கள். எனவே, அவர் அவ்வாறே செய்தார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அதற்குப் பிறகு அபூ ஹுதைஃபா (ரழி) அவர்களின் முகத்தில் எந்த அதிருப்தியின் அடையாளங்களையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்கள். மேலும், அவர் (ஸாலிம்) பத்ரு (போரில்) கலந்துகொண்டார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، ‏.‏ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ نَزَلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا وَلَقَدْ كَانَ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي فَلَمَّا مَاتَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَتَشَاغَلْنَا بِمَوْتِهِ دَخَلَ دَاجِنٌ فَأَكَلَهَا ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
“கல்லெறி தண்டனை மற்றும் பெரியவருக்கு பத்து முறை பாலூட்டுவது குறித்த வசனம் அருளப்பட்டது1, அது எழுதப்பட்டிருந்த ஏடு என் தலையணைக்குக் கீழ் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது, நாங்கள் அவர்களின் மரண(ப் பணிக)ளில் ஈடுபட்டிருந்தோம், அப்போது ஒரு வீட்டு ஆடு உள்ளே வந்து அதைச் சாப்பிட்டுவிட்டது.”

1: இந்த வசனங்கள் ஓதுதலிலிருந்து நீக்கப்பட்டன, ஆனால் அவற்றின் சட்டம் நீக்கப்படவில்லை. மற்ற ஹதீஸ்கள் பால்குடி கொடுப்பதற்கான எண்ணிக்கையை ஐந்து என நிறுவுகின்றன.

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب لاَ رِضَاعَ بَعْدَ فِصَالٍ
பால் மறக்கடித்த பிறகு பாலூட்டுதல் இல்லை
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا رَجُلٌ فَقَالَ ‏"‏ مَنْ هَذَا ‏"‏ ‏.‏ قَالَتْ هَذَا أَخِي ‏.‏ قَالَ ‏"‏ انْظُرُوا مَنْ تُدْخِلْنَ عَلَيْكُنَّ فَإِنَّ الرَّضَاعَةَ مِنَ الْمَجَاعَةِ ‏"‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களிடம் நுழைந்தார்கள், அப்போது அங்கே ஒரு மனிதர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள், “இவர் என் சகோதரர்” என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களிடம் யார் நுழைகிறார்கள் என்பதை கவனமாகப் பாருங்கள், ஏனெனில் பசியைப் போக்கக்கூடிய (வயதில்) பால் அருந்துவதே (ஒருவரை மஹ்ரம் ஆக்கும்) பால்குடி உறவாகும்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ لاَ رَضَاعَ إِلاَّ مَا فَتَقَ الأَمْعَاءَ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வயிற்றை நிரப்பும் பாலூட்டலைத் தவிர வேறு (திருமணத் தடையை ஏற்படுத்தும்) பால்குடி இல்லை.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، وَعُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو عَبِيدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، عَنْ أُمِّهِ، زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ كُلَّهُنَّ خَالَفْنَ عَائِشَةَ وَأَبَيْنَ أَنْ يَدْخُلَ عَلَيْهِنَّ أَحَدٌ بِمِثْلِ رَضَاعَةِ سَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ وَقُلْنَ وَمَا يُدْرِينَا لَعَلَّ ذَلِكَ كَانَتْ رُخْصَةً لِسَالِمٍ وَحْدَهُ ‏.‏
ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது: நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் ஆயிஷா (ரழி) அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு, அபூ ஹுதைஃபா (ரழி) அவர்களின் விடுவிக்கப்பட்ட அடிமையான சாலிம் (ரழி) அவர்களைப் போன்று பாலூட்டுதல் உறவுமுறை கொண்ட எவரையும் தங்களிடம் பிரவேசிக்க அனுமதிக்க மறுத்தார்கள். அவர்கள் கூறினார்கள்: “நமக்கு எப்படித் தெரியும்? அது சாலிம் (ரழி) அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட ஒரு சலுகையாக இருக்கலாம்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب لَبَنِ الْفَحْلِ
பால் தந்தையைச் சேர்ந்தது
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَتَانِي عَمِّي مِنَ الرَّضَاعَةِ أَفْلَحُ بْنُ أَبِي قُعَيْسٍ يَسْتَأْذِنُ عَلَىَّ بَعْدَ مَا ضُرِبَ الْحِجَابُ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى دَخَلَ عَلَىَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ إِنَّهُ عَمُّكِ فَأْذَنِي لَهُ ‏"‏ ‏.‏ فَقُلْتُ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ قَالَ ‏"‏ تَرِبَتْ يَدَاكِ أَوْ يَمِينُكِ ‏"‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

“பால்குடி முறையிலான என் தந்தையின் சகோதரரான அஃப்லஹ் பின் அபீ குஐஸ் (ரழி) அவர்கள், ஹிஜாப் (பர்தா) சட்டம் கடமையாக்கப்பட்ட பிறகு, என்னைப் பார்க்க அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உள்ளே வரும் வரை நான் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் வந்து, 'அவர் உன்னுடைய தந்தையின் சகோதரர்; அவரை உள்ளே வர அனுமதி' என்று கூறினார்கள். நான், 'ஆனால், எனக்குப் பாலூட்டியது பெண்தானே; ஆண் எனக்குப் பாலூட்டவில்லையே' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'உன் கைகள் மண்ணில் புரளட்டும்', அல்லது, 'உன் வலது கை மண்ணில் புரளட்டும்!' என்று கூறினார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَ عَمِّي مِنَ الرَّضَاعَةِ يَسْتَأْذِنُ عَلَىَّ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ فَلْيَلِجْ عَلَيْكِ عَمُّكِ ‏"‏ ‏.‏ فَقُلْتُ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّهُ عَمُّكِ فَلْيَلِجْ عَلَيْكِ ‏"‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“எனது பால்குடி முறைப் பெரிய தந்தை என்னைப் பார்க்க வந்தார்கள். நான் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'உமது பெரிய தந்தையை உள்ளே வர அனுமதியுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'எனக்குப் பாலூட்டியது ஒரு பெண்தானே தவிர, ஓர் ஆண் எனக்குப் பாலூட்டவில்லையே' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'அவர் உனது பெரிய தந்தைதான்; அவரை உள்ளே வர அனுமதியுங்கள்' என்று கூறினார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الرَّجُلِ يُسْلِمُ وَعِنْدَهُ أُخْتَانِ
அந்த மனிதர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார், மேலும் அவருக்கு இரண்டு சகோதரிகள் (அதாவது, திருமணம் செய்துள்ளார்) இருக்கிறார்கள்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي فَرْوَةَ، عَنْ أَبِي وَهْبٍ الْجَيْشَانِيِّ، عَنْ أَبِي خِرَاشٍ الرُّعَيْنِيِّ، عَنِ الدَّيْلَمِيِّ، قَالَ قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَعِنْدِي أُخْتَانِ تَزَوَّجْتُهُمَا فِي الْجَاهِلِيَّةِ ‏.‏ فَقَالَ ‏ ‏ إِذَا رَجَعْتَ فَطَلِّقْ إِحْدَاهُمَا ‏ ‏ ‏.‏
தைலமீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன், நான் அறியாமைக் காலத்தில் மணந்திருந்த இரண்டு சகோதரிகள் என் மனைவியராக இருந்தனர். அவர்கள் கூறினார்கள்: 'நீர் திரும்பிச் செல்லும்போது, அவர்களில் ஒருவரை விவாகரத்து செய்துவிடும்.'”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي وَهْبٍ الْجَيْشَانِيِّ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ الضَّحَّاكَ بْنَ فَيْرُوزَ الدَّيْلَمِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْلَمْتُ وَتَحْتِي أُخْتَانِ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لِي ‏ ‏ طَلِّقْ أَيَّتَهُمَا شِئْتَ ‏ ‏ ‏.‏
தஹ்ஹாக் பின் ஃபைரூஸ் தைலமீ (ரழி) அவர்கள் தனது தந்தை கூறியதாக அறிவித்தார்கள்:

'நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், மேலும் நான் இரு சகோதரிகளை மணந்துள்ளேன்' என்று கூறினேன்.' அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அவ்விருவரில் நீ விரும்பிய ஒருத்தியை விவாகரத்து செய்துவிடு' என்று கூறினார்கள்.’

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الرَّجُلِ يُسْلِمُ وَعِنْدَهُ أَكْثَرُ مِنْ أَرْبَعِ نِسْوَةٍ
ஒரு மனிதர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார், அவருக்கு நான்குக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தனர்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ حُمَيْضَةَ بِنْتِ الشَّمَرْدَلِ، عَنْ قَيْسِ بْنِ الْحَارِثِ، قَالَ أَسْلَمْتُ وَعِنْدِي ثَمَانِ نِسْوَةٍ فَأَتَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقُلْتُ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ ‏ اخْتَرْ مِنْهُنَّ أَرْبَعًا ‏ ‏ ‏.‏
கைஸ் பின் ஹாரித் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், (அப்போது) எனக்கு எட்டு மனைவிகள் இருந்தனர். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அதைப் பற்றித் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ‘அவர்களில் நால்வரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَسْلَمَ غَيْلاَنُ بْنُ سَلَمَةَ وَتَحْتَهُ عَشْرُ نِسْوَةٍ فَقَالَ لَهُ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ خُذْ مِنْهُنَّ أَرْبَعًا ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

“கைலான் இப்னு ஸலமா (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபோது, அவருக்கு பத்து மனைவியர் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்: 'அவர்களில் இருந்து நான்கு பேரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.'”

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الشَّرْطِ فِي النِّكَاحِ
திருமணத்தில் நிபந்தனைகள்
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ إِنَّ أَحَقَّ الشَّرْطِ أَنْ يُوفَى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ ‏ ‏ ‏.‏
'உக்பா பின் 'ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிபந்தனைகளிலேயே நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதியானது, எந்த நிபந்தனையின் மூலம் நீங்கள் (பெண்களின்) வெட்கத்தலங்களை ஹலாலாக்கிக் கொள்கிறீர்களோ அதுவேயாகும்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ مَا كَانَ مِنْ صَدَاقٍ أَوْ حِبَاءٍ أَوْ هِبَةٍ قَبْلَ عِصْمَةِ النِّكَاحِ فَهُوَ لَهَا وَمَا كَانَ بَعْدَ عِصْمَةِ النِّكَاحِ فَهُوَ لِمَنْ أُعْطِيَهُ أَوْ حُبِيَ وَأَحَقُّ مَا يُكْرَمُ الرَّجُلُ بِهِ ابْنَتُهُ أَوْ أُخْتُهُ ‏ ‏ ‏.‏
அம்ர் பின் ஷுஐப் அவர்கள், அவருடைய தந்தையிடமிருந்து, அவருடைய தாத்தா (ரழி) அவர்கள் கூறினார்கள் என அறிவிக்கிறார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “திருமணத்திற்கு முன்பு மஹராகவோ அல்லது அன்பளிப்பாகவோ எது கொடுக்கப்பட்டாலும், அது அவளுக்குரியது. திருமணத்திற்குப் பிறகு எது கொடுக்கப்பட்டாலும், அது யாருக்குக் கொடுக்கப்பட்டதோ அவருக்கே உரியது. மேலும் ஒரு மனிதன் கௌரவிக்கப்படுவதற்கு மிகவும் தகுதியான விஷயம், அவனுடைய மகளின் அல்லது சகோதரியின் (திருமணம்) ஆகும்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الرَّجُلِ يَعْتِقُ أَمَتَهُ ثُمَّ يَتَزَوَّجُهَا
ஒரு மனிதர் தனது அடிமைப் பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவளை மணமுடிப்பது
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ صَالِحِ بْنِ صَالِحِ بْنِ حَىٍّ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ مَنْ كَانَتْ لَهُ جَارِيَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ أَدَبَهَا وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ وَأَيُّمَا رَجُلٍ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ وَآمَنَ بِمُحَمَّدٍ فَلَهُ أَجْرَانِ وَأَيُّمَا عَبْدٍ مَمْلُوكٍ أَدَّى حَقَّ اللَّهِ عَلَيْهِ وَحَقَّ مَوَالِيهِ فَلَهُ أَجْرَانِ ‏ ‏ ‏.‏ قَالَ صَالِحٌ قَالَ الشَّعْبِيُّ قَدْ أَعْطَيْتُكَهَا بِغَيْرِ شَىْءٍ ‏.‏ إِنْ كَانَ الرَّاكِبُ لَيَرْكَبُ فِيمَا دُونَهَا إِلَى الْمَدِينَةِ ‏.‏
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ஓர் அடிமைப் பெண்ணை வைத்திருந்து, அவளுக்கு நல்லொழுக்கத்தையும் கல்வியையும் கற்பித்து, பின்னர் அவளை விடுவித்து அவளையே மணமுடித்துக் கொள்பவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. வேதக்காரர்களில் எவரேனும் ஒருவர், தம்முடைய நபியை (அலை) நம்பிக்கை கொண்டு, முஹம்மது (ஸல்) அவர்களையும் நம்பிக்கை கொண்டால், அவருக்கும் இரண்டு நன்மைகள் உண்டு. எந்தவொரு அடிமையும், அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், தன் எஜமானர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றினால், அவருக்கும் இரண்டு நன்மைகள் உண்டு.” (ஸஹீஹ்)

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸாலிஹ் அவர்கள் கூறினார்கள்: “ஷஃபி அவர்கள் கூறினார்கள்: 'இந்த (ஹதீஸை) நான் உங்களுக்கு எந்த சிரமமுமின்றி வழங்கிவிட்டேன். (கடந்த காலத்தில்) இதை விடச் சிறிய ஒரு விஷயத்திற்காகக் கூட ஒருவர் (வாகனத்தில்) மதீனாவிற்குப் பயணம் செய்வார்.'”

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا ثَابِتٌ، وَعَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ صَارَتْ صَفِيَّةُ لِدِحْيَةَ الْكَلْبِيِّ ثُمَّ صَارَتْ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَعْدُ فَتَزَوَّجَهَا وَجَعَلَ عِتْقَهَا صَدَاقَهَا ‏.‏ قَالَ حَمَّادٌ فَقَالَ عَبْدُ الْعَزِيزِ لِثَابِتٍ يَا أَبَا مُحَمَّدٍ أَنْتَ سَأَلْتَ أَنَسًا مَا أَمْهَرَهَا قَالَ أَمْهَرَهَا نَفْسَهَا ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஸஃபிய்யா (ரழி) அவர்கள் திஹ்யா அல்-கல்பி (ரழி) அவர்களுக்கு போர்ச் செல்வங்களில் அவரது பங்காக வழங்கப்பட்டார்கள், பின்னர் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டார்கள். அவர்கள் (ஸல்) ஸஃபிய்யா (ரழி) அவர்களை மணமுடித்து, அவர்களின் விடுதலையை அதாவது அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அவர்களின் மஹராக ஆக்கினார்கள். (ஸஹீஹ்)

ஹம்மாத் கூறினார்கள்: “அப்துல்-அஜீஸ் அவர்கள் ஸாபித் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: 'ஓ அபூ முஹம்மத்! நீங்கள் அனஸ் (ரழி) அவர்களிடம் அவர்களின் மஹர் என்னவென்று கேட்டீர்களா?' அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'அவர்களின் மஹர் அவர்களின் விடுதலையாக இருந்தது.' ”

حَدَّثَنَا حُبَيْشُ بْنُ مُبَشِّرٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، ‏.‏ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَعْتَقَ صَفِيَّةَ وَجَعَلَ عِتْقَهَا صَدَاقَهَا وَتَزَوَّجَهَا ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்களை விடுதலை செய்து, அவர்களின் விடுதலையை அவர்களின் மஹராக ஆக்கி, அவர்களை மணந்துகொண்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب تَزْوِيجِ الْعَبْدِ بِغَيْرِ إِذْنِ سَيِّدِهِ
ஒரு அடிமை தனது எஜமானரின் அனுமதியின்றி திருமணம் செய்வது
حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ عَبْدِ الْوَاحِدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ إِذَا تَزَوَّجَ الْعَبْدُ بِغَيْرِ إِذْنِ سَيِّدِهِ كَانَ عَاهِرًا ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓர் அடிமை அவனது எஜமானரின் அனுமதியின்றி திருமணம் செய்தால், அவன் ஒரு விபச்சாரக்காரன் ஆவான்."

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَصَالِحُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ، مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا مِنْدَلٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ أَيُّمَا عَبْدٍ تَزَوَّجَ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ فَهُوَ زَانٍ ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எந்த ஓர் அடிமை தன் எஜமானின் அனுமதியின்றி திருமணம் செய்கிறானோ, அவன் ஒரு விபச்சாரக்காரன்."

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب النَّهْىِ عَنْ نِكَاحِ الْمُتْعَةِ
தற்காலிகத் திருமணம் (முத்ஆ) தடை செய்யப்பட்டுள்ளது
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ، وَالْحَسَنِ، ابْنَىْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِمَا، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ يَوْمَ خَيْبَرَ وَعَنْ لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ ‏.‏
அலீ பின் அபீ தாலிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் தினத்தன்று, பெண்களை தற்காலிக திருமணம் செய்வதையும், வீட்டுக் கழுதைகளின் இறைச்சியையும் தடை செய்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ، عَنِ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي حَجَّةِ الْوَدَاعِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْعُزْبَةَ قَدِ اشْتَدَّتْ عَلَيْنَا ‏.‏ قَالَ ‏"‏ فَاسْتَمْتِعُوا مِنْ هَذِهِ النِّسَاءِ ‏"‏ ‏.‏ فَأَتَيْنَاهُنَّ فَأَبَيْنَ أَنْ يَنْكِحْنَنَا إِلاَّ أَنْ نَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُنَّ أَجَلاً فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ ‏"‏ اجْعَلُوا بَيْنَكُمْ وَبَيْنَهُنَّ أَجَلاً ‏"‏ ‏.‏ فَخَرَجْتُ أَنَا وَابْنُ عَمٍّ لِي مَعَهُ بُرْدٌ وَمَعِي بُرْدٌ وَبُرْدُهُ أَجْوَدُ مِنْ بُرْدِي وَأَنَا أَشَبُّ مِنْهُ فَأَتَيْنَا عَلَى امْرَأَةٍ فَقَالَتْ بُرْدٌ كَبُرْدٍ ‏.‏ فَتَزَوَّجْتُهَا فَمَكَثْتُ عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ ثُمَّ غَدَوْتُ وَرَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَائِمٌ بَيْنَ الرُّكْنِ وَالْبَابِ وَهُوَ يَقُولُ ‏"‏ أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ كُنْتُ أَذِنْتُ لَكُمْ فِي الاِسْتِمْتَاعِ أَلاَ وَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ فَمَنْ كَانَ عِنْدَهُ مِنْهُنَّ شَىْءٌ فَلْيُخَلِّ سَبِيلَهَا وَلاَ تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا ‏"‏ ‏.‏
ரபீஃ பின் ஸப்ரா (ரழி) அவர்கள், தம் தந்தை (ஸப்ரா (ரழி)) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:

"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விடைபெறும் ஹஜ்ஜுக்குச் சென்றோம். அப்போது மக்கள், 'அல்லாஹ்வின் தூதரே, திருமணம் முடிக்காமல் இருப்பது எங்களுக்கு மிகவும் கடினமாகிவிட்டது' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அப்படியானால், இந்தப் பெண்களுடன் தற்காலிகத் திருமணம் செய்துகொள்ளுங்கள்' என்று கூறினார்கள். எனவே நாங்கள் அவர்களிடம் சென்றோம், ஆனால் அவர்களோ எங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு குறிப்பிட்ட தவணையை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதை அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'உங்களுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு குறிப்பிட்ட தவணையை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். எனவே, நான் என்னுடைய உறவினர் ஒருவருடன் சென்றேன். அவரிடம் ஒரு மேலாடை இருந்தது, என்னிடமும் ஒரு மேலாடை இருந்தது. ஆனால் அவருடைய மேலாடை என்னுடையதை விட நேர்த்தியாக இருந்தது, மேலும் நான் அவரை விட வயதில் இளையவனாக இருந்தேன். நாங்கள் ஒரு பெண்ணிடம் சென்றோம். அவள், 'ஒரு மேலாடையும் மற்றொன்றைப் போன்றதுதான்' என்று கூறினாள். எனவே நான் அவளைத் திருமணம் செய்துகொண்டேன், அந்த இரவு அவளுடன் தங்கினேன். பிறகு, மறுநாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுக்கும் (கஃபாவின் மூலை) வாசலுக்கும் இடையே நின்றுகொண்டு, இவ்வாறு கூறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்: 'மக்களே, உங்களுக்குத் தற்காலிகத் திருமணம் செய்துகொள்ள நான் அனுமதி அளித்திருந்தேன். ஆனால் அல்லாஹ் மறுமை நாள் வரை அதைத் தடை செய்துவிட்டான். யாரிடமேனும் தற்காலிகத் திருமணம் செய்த மனைவிகள் இருந்தால், அவர் அவர்களை அனுப்பிவிடட்டும். மேலும், நீங்கள் அவர்களுக்குக் கொடுத்த எதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளாதீர்கள்.' "

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلاَنِيُّ، حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، عَنْ أَبَانَ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لَمَّا وَلِيَ عُمَرُ بْنُ الْخَطَّابِ خَطَبَ النَّاسَ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَذِنَ لَنَا فِي الْمُتْعَةِ ثَلاَثًا ثُمَّ حَرَّمَهَا وَاللَّهِ لاَ أَعْلَمُ أَحَدًا تَمَتَّعَ وَهُوَ مُحْصَنٌ إِلاَّ رَجَمْتُهُ بِالْحِجَارَةِ إِلاَّ أَنْ يَأْتِيَنِي بِأَرْبَعَةٍ يَشْهَدُونَ أَنَّ رَسُولَ اللَّهِ أَحَلَّهَا بَعْدَ إِذْ حَرَّمَهَا ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் கலீஃபாவாக நியமிக்கப்பட்டபோது, அவர்கள் மக்களிடம் உரையாற்றி கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மூன்று முறை தற்காலிகத் திருமணத்திற்கு அனுமதி அளித்தார்கள், பின்னர் அதைத் தடை செய்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, திருமணமான எவரேனும் தற்காலிகத் திருமணம் செய்துகொண்டதாக நான் கேள்விப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்த பிறகு அனுமதித்தார்கள் என்பதற்குச் சாட்சியமளிக்கக்கூடிய நான்கு சாட்சிகளை அவர் என்னிடம் கொண்டு வராத பட்சத்தில், நான் அவருக்கு கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றுவேன்'."

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الْمُحْرِمِ يَتَزَوَّجُ
முஹ்ரிமின் திருமணம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا أَبُو فَزَارَةَ، عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ، حَدَّثَتْنِي مَيْمُونَةُ بِنْتُ الْحَارِثِ، ‏.‏ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَزَوَّجَهَا وَهُوَ حَلاَلٌ ‏.‏ قَالَ وَكَانَتْ خَالَتِي وَخَالَةَ ابْنِ عَبَّاسٍ ‏.‏
மைமூனா பின்த் ஹாரிஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹலாலாக (இஹ்ராம் அணியாத) நிலையில் இருந்தபோது, தம்மைத் திருமணம் செய்துகொண்டார்கள். (ஸஹீஹ்)

அவர் (அறிவிப்பாளர்களில் ஒருவரான யஸீத்) கூறினார்கள்: "மேலும், அவர்கள் (மைமூனா (ரழி)) என்னுடைய தாயின் சகோதரியாகவும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் தாயின் சகோதரியாகவும் இருந்தார்கள்."

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَكَحَ وَهُوَ مُحْرِمٌ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:

நபி (ஸல்) அவர்கள் முஹ்ரிமாக (இஹ்ராமில்) இருக்கும்போது திருமணம் செய்துகொண்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ الْمَكِّيُّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنْ نُبَيْهِ بْنِ وَهْبٍ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ بْنِ عَفَّانَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ الْمُحْرِمُ لاَ يَنْكِحُ وَلاَ يُنْكِحُ وَلاَ يَخْطُبُ ‏ ‏ ‏.‏
அபான் இப்னு உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களின் தந்தை உஸ்மான் (ரழி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்யக்கூடாது, மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது, பெண் பேசவும் கூடாது.'

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الأَكْفَاءِ
தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் பிஸ்மில்லாஹ் சொல்வது சுன்னாவாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும்போது, بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا என்று கூறட்டும். அவ்வாறு கூறிவிட்டு அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு ஷைத்தான் எந்தத் தீங்கும் செய்ய முடியாது."
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابُورَ الرَّقِّيُّ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ سُلَيْمَانَ الأَنْصَارِيُّ، أَخُو فُلَيْحٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنِ ابْنِ وَثِيمَةَ الْمِصْرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ إِذَا أَتَاكُمْ مَنْ تَرْضَوْنَ خُلُقَهُ وَدِينَهُ فَزَوِّجُوهُ إِلاَّ تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களிடம் ஒருவர் வந்து, அவருடைய குணமும் மார்க்கப் பற்றும் உங்களுக்குத் திருப்தியளித்தால், அவருக்கு (உங்கள் மகளையோ அல்லது உங்கள் பராமரிப்பில் உள்ள பெண்ணையோ) திருமணம் செய்து வையுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், பூமியில் ஃபித்னாவும் பரவலான சீர்கேடும் உண்டாகும்.'"

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عِمْرَانَ الْجَعْفَرِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ تَخَيَّرُوا لِنُطَفِكُمْ وَانْكِحُوا الأَكْفَاءَ وَأَنْكِحُوا إِلَيْهِمْ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்கள் விந்துக்களுக்கு சிறந்ததைத் தேர்ந்தெடுங்கள், தகுதியான பெண்களை மணந்து கொள்ளுங்கள், மேலும் அவர்களுக்குப் பெண் கேளுங்கள்."'

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الْقِسْمَةِ بَيْنَ النِّسَاءِ
மனைவிகளுக்கிடையே ஒருவரின் நேரத்தைப் பிரித்தல்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هَمَّامٍ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ مَنْ كَانَتْ لَهُ امْرَأَتَانِ يَمِيلُ مَعَ إِحْدَاهُمَا عَلَى الأُخْرَى جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَأَحَدُ شِقَّيْهِ سَاقِطٌ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவருக்கு இரண்டு மனைவிகள் இருந்து, அவர் அவர்களில் ஒருவரை மற்றவரை விட அதிகமாகச் சார்ந்து நடந்தால், அவர் மறுமை நாளில் தனது ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் வருவார்."

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ يَمَانٍ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا سَافَرَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் செய்ய நாடினால், தமது மனைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقْسِمُ بَيْنَ نِسَائِهِ فَيَعْدِلُ ثُمَّ يَقُولُ ‏ ‏ اللَّهُمَّ هَذَا فِعْلِي فِيمَا أَمْلِكُ فَلاَ تَلُمْنِي فِيمَا تَمْلِكُ وَلاَ أَمْلِكُ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவியரிடையே (தமது நேரத்தை) சமமாகப் பங்கிட்டு வந்தார்கள். பிறகு, 'யா அல்லாஹ், இது என் கட்டுப்பாட்டில் உள்ள விஷயத்தில் நான் செய்யும் பங்கீடாகும். ஆகவே, உன் கட்டுப்பாட்டில் உள்ளதும், என் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதுமான விஷயத்திற்காக என்னைக் குற்றம் பிடித்துவிடாதே' என்று கூறுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الْمَرْأَةِ تَهَبُ يَوْمَهَا لِصَاحِبَتِهَا
ஒரு பெண் தனது சக மனைவிக்கு தனது நாளை வழங்குதல்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، جَمِيعًا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا أَنْ كَبِرَتْ، سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا لِعَائِشَةَ فَكَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقْسِمُ لِعَائِشَةَ بِيَوْمِ سَوْدَةَ ‏.‏
உர்வா அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:
ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரழி) அவர்கள் முதுமையடைந்தபோது, அவர்கள் தமக்குரிய நாளை ஆயிஷா (ரழி) அவர்களுக்கு வழங்கிவிட்டார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸவ்தா (ரழி) அவர்களின் நாளில் ஆயிஷா (ரழி) அவர்களிடம் சென்றார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ سُمَيَّةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَجَدَ عَلَى صَفِيَّةَ بِنْتِ حُيَىٍّ فِي شَىْءٍ ‏.‏ فَقَالَتْ صَفِيَّةُ يَا عَائِشَةُ هَلْ لَكِ أَنْ تُرْضِي رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنِّي وَلَكِ يَوْمِي قَالَتْ نَعَمْ ‏.‏ فَأَخَذَتْ خِمَارًا لَهَا مَصْبُوغًا بِزَعْفَرَانٍ فَرَشَّتْهُ بِالْمَاءِ لِيَفُوحَ رِيحُهُ ثُمَّ قَعَدَتْ إِلَى جَنْبِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ يَا عَائِشَةُ إِلَيْكِ عَنِّي إِنَّهُ لَيْسَ يَوْمَكِ ‏ ‏ ‏.‏ فَقَالَتْ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ ‏.‏ فَأَخْبَرَتْهُ بِالأَمْرِ فَرَضِيَ عَنْهَا ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்திற்காக ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரழி) அவர்கள் மீது கோபமடைந்தார்கள், மேலும் ஸஃபிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "ஓ ஆயிஷா, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என் மீது திருப்தி கொள்ளச் செய்ய முடியுமா? அதற்குப் பதிலாக என்னுடைய (முறை) நாளை உங்களுக்குத் தருகிறேன்?" அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "ஆம்." எனவே, அவர்கள் குங்குமப்பூ சாயமிடப்பட்ட தங்களின் ஒரு முக்காட்டை எடுத்தார்கள், அதன் நறுமணம் அதிகமாகும் பொருட்டு அதன் மீது தண்ணீரைத் தெளித்தார்கள், பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓ ஆயிஷா, எழுந்து செல்லுங்கள், ஏனெனில் இன்று உங்களுடைய (முறை) நாள் அல்ல!" அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அது அல்லாஹ்வின் அருளாகும், அதை அவன் நாடியவர்களுக்கு வழங்குகிறான்." பின்னர், அவர்கள் அந்த விஷயத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள், மேலும் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்கள் மீது திருப்தி கொண்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، ‏.‏ أَنَّهَا قَالَتْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏{وَالصُّلْحُ خَيْرٌ}‏ فِي رَجُلٍ كَانَتْ تَحْتَهُ امْرَأَةٌ قَدْ طَالَتْ صُحْبَتُهَا وَوَلَدَتْ مِنْهُ أَوْلاَدًا فَأَرَادَ أَنْ يَسْتَبْدِلَ بِهَا فَرَاضَتْهُ عَلَى أَنْ تُقِيمَ عِنْدَهُ وَلاَ يَقْسِمَ لَهَا ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"'சமாதானம் செய்துகொள்வதே சிறந்தது' என்ற இந்த வசனம், ஒரு மனிதரைப் பற்றி வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்பட்டது. அவர் ஒரு பெண்ணை நீண்ட காலமாக மணந்திருந்தார், அவள் அவருக்குப் பிள்ளைகளைப் பெற்றெடுத்திருந்தாள். அவர் அவளுக்குப் பதிலாக (புதிய மனைவி ஒருத்தியை) மாற்ற விரும்பினார். அவர் அவளுடன் (புதிய மனைவியுடன்) தங்கியிருப்பதற்கும், இவளுக்கு (முதல் மனைவிக்கு) தனது நேரத்தைப் பங்கிட்டுத் தராமல் இருப்பதற்கும் அவள் (முதல் மனைவி) சம்மதித்தாள். (அதாவது) இவளுடன் இரவுகளைக் கழிக்காமல் இருப்பதற்கு."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الشَّفَاعَةِ فِي التَّزْوِيجِ
திருமணம் தொடர்பான பரிந்துரை
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ يَزِيدَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ أَبِي رُهْمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ مِنْ أَفْضَلِ الشَّفَاعَةِ أَنْ يُشَفَّعَ بَيْنَ الاِثْنَيْنِ فِي النِّكَاحِ ‏ ‏ ‏.‏
அபூ ரூஹ்ம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பரிந்துரைகளிலேயே மிகச் சிறந்தவற்றில் ஒன்று, திருமணம் சம்பந்தமாக இரண்டு பேருக்கு இடையில் பரிந்துரை செய்வதாகும்.'"

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْعَبَّاسِ بْنِ ذَرِيحٍ، عَنِ الْبَهِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ عَثَرَ أُسَامَةُ بِعَتَبَةِ الْبَابِ فَشُجَّ فِي وَجْهِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَمِيطِي عَنْهُ الأَذَى ‏"‏ ‏.‏ فَتَقَذَّرْتُهُ فَجَعَلَ يَمَصُّ عَنْهُ الدَّمَ وَيَمُجُّهُ عَنْ وَجْهِهِ ثُمَّ قَالَ ‏"‏ لَوْ كَانَ أُسَامَةُ جَارِيَةً لَحَلَّيْتُهُ وَكَسَوْتُهُ حَتَّى أُنَفِّقَهُ ‏"‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

உஸாமா (ரழி) அவர்கள் வாசற்படியில் தடுக்கி விழுந்து, அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அவரிடமிருந்து அந்தத் தீங்கை (இரத்தத்தை) அகற்றுங்கள்' என்று கூறினார்கள், ஆனால் நான் அதை அருவருப்பாகக் கருதினேன். அவர்கள் அந்த இரத்தத்தை உறிஞ்சி அவரது முகத்திலிருந்து அகற்றத் தொடங்கினார்கள், பிறகு கூறினார்கள்: 'உஸாமா ஒரு பெண்ணாக இருந்திருந்தால், நான் அவருக்குத் திருமணம் செய்து வைக்கும் வரை அவரை அலங்கரித்து, ஆடை அணிவித்திருப்பேன்.'

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب حُسْنِ مُعَاشَرَةِ النِّسَاءِ
பெண்களை நல்ல முறையில் நடத்துதல்
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى قَالاَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ جَعْفَرِ بْنِ يَحْيَى بْنِ ثَوْبَانَ، عَنْ عَمِّهِ، عُمَارَةَ بْنِ ثَوْبَانَ عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لأَهْلِي ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர், தம் மனைவியிடம் சிறந்தவரே ஆவார். மேலும், நான் என் மனைவியரிடம் உங்களில் சிறந்தவன்."

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ خِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர்கள், தங்களது பெண்களிடத்தில் சிறந்தவர்களே ஆவர்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَابَقَنِي النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَسَبَقْتُهُ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் என்னுடன் பந்தயம் ஓடினார்கள், நான் அவர்களை வென்றேன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَدْرٍ، عَبَّادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أُمِّ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الْمَدِينَةَ وَهُوَ عَرُوسٌ بِصَفِيَّةَ بِنْتِ حُيَىٍّ جِئْنَ نِسَاءُ الأَنْصَارِ فَأَخْبَرْنَ عَنْهَا ‏.‏ قَالَتْ فَتَنَكَّرْتُ وَتَنَقَّبْتُ فَذَهَبْتُ فَنَظَرَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِلَى عَيْنِي فَعَرَفَنِي ‏.‏ قَالَتْ فَالْتَفَتَ فَأَسْرَعْتُ الْمَشْىَ فَأَدْرَكَنِي فَاحْتَضَنَنِي فَقَالَ ‏ ‏ كَيْفَ رَأَيْتِ ‏ ‏ ‏.‏ قَالَتْ قُلْتُ أَرْسِلْ يَهُودِيَّةٌ وَسْطَ يَهُودِيَّاتٍ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்-மதீனாவிற்கு வந்தபோது, அவர்கள் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரழி) அவர்களைப் புதிதாகத் திருமணம் செய்திருந்தார்கள், மேலும் அன்சாரிப் பெண்கள் வந்து எங்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். என் முகபாவனை மாறியது, நான் என் முகத்தை மூடிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கண்களைப் பார்த்து என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். நான் திரும்பி வேகமாக நடந்தேன், ஆனால் அவர்கள் என்னை எட்டிப் பிடித்து, என் மீது தங்கள் கையை வைத்து, 'நீ என்ன பார்த்தாய்?' என்று கேட்டார்கள். நான் கூறினேன்: 'என்னை விடுங்கள், (நான்) மற்ற யூதப் பெண்களிடையே ஒரு யூதப் பெண்ணைப் பார்த்தேன்.'

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ زَكَرِيَّا، عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ، عَنِ الْبَهِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، قَالَ قَالَتْ عَائِشَةُ مَا عَلِمْتُ حَتَّى دَخَلَتْ عَلَىَّ زَيْنَبُ بِغَيْرِ إِذْنٍ وَهِيَ غَضْبَى ‏.‏ ثُمَّ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَحَسْبُكَ إِذَا قَلَبَتْ لَكَ بُنَيَّةُ أَبِي بَكْرٍ ذُرَيْعَتَيْهَا ‏.‏ ثُمَّ أَقْبَلَتْ عَلَىَّ فَأَعْرَضْتُ عَنْهَا حَتَّى قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ دُونَكِ فَانْتَصِرِي ‏ ‏ ‏.‏ فَأَقْبَلْتُ عَلَيْهَا حَتَّى رَأَيْتُهَا وَقَدْ يَبِسَ رِيقُهَا فِي فِيهَا مَا تَرُدُّ عَلَىَّ شَيْئًا فَرَأَيْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَتَهَلَّلُ وَجْهُهُ ‏.‏
உர்வா பின் ஸுபைர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
"ஸைனப் (ரழி) அவர்கள் அனுமதி பெறாமல் கோபமாக என்னிடம் திடீரென நுழையும் வரை நான் (நிலைமையை) அறிந்திருக்கவில்லை. பிறகு அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதரே, அபூபக்ரின் (ரழி) அவர்களின் இந்த இளம் மகள் உங்களுக்கு முன்னால் தன் கைகளை அசைத்துக் காட்டுவது உங்களுக்குப் போதுமானதாக இருக்கிறதா?' பிறகு அவர்கள் என் பக்கம் திரும்பினார்கள், ஆனால் நபி (ஸல்) அவர்கள், 'நீ உனக்காகப் பதில் பேச வேண்டும்' என்று கூறும் வரை நான் அவர்களைப் புறக்கணித்தேன். எனவே நான் அவர்கள் பக்கம் திரும்பி பதிலளிக்கத் தொடங்கினேன்; அவர்களுடைய வாய் வறண்டு போவதையும், அவர்கள் எனக்கு எந்த பதிலும் கூறாமல் இருப்பதையும் நான் காணும் வரை (பேசினேன்). மேலும், நபி (ஸல்) அவர்களுடைய முகம் பிரகாசித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன்." (ஹஸன்).

حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَبِيبٍ الْقَاضِي، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ وَأَنَا عِنْدَ، رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَكَانَ يُسَرِّبُ إِلَىَّ صَوَاحِبَاتِي يُلاَعِبْنَنِي ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது பொம்மைகளை வைத்து விளையாடுவேன். என்னுடன் விளையாடுவதற்காக என்னுடைய தோழிகளை அவர்கள் என்னிடம் அனுப்புவார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب ضَرْبِ النِّسَاءِ
பெண்களை அடிப்பது
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، قَالَ خَطَبَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ثُمَّ ذَكَرَ النِّسَاءَ فَوَعَظَهُمْ فِيهِنَّ ثُمَّ قَالَ ‏ ‏ إِلاَمَ يَجْلِدُ أَحَدُكُمُ امْرَأَتَهُ جَلْدَ الأَمَةِ وَلَعَلَّهُ أَنْ يُضَاجِعَهَا مِنْ آخِرِ يَوْمِهِ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

'நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் அவர்கள் பெண்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். மேலும், அவர்கள் குறித்து (ஆண்களுக்கு) உபதேசித்தார்கள். பின்னர் அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் தன் மனைவியை ஓர் அடிமையைப் போல் சவுக்கால் அடித்துவிட்டு, பிறகு দিনের இறுதியில் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதா?'

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا ضَرَبَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ خَادِمًا لَهُ وَلاَ امْرَأَةً وَلاَ ضَرَبَ بِيَدِهِ شَيْئًا ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஊழியர்கள் எவரையும், அல்லது தமது மனைவியரையும் அடித்ததே இல்லை; மேலும், அவர்களின் கை எதையும் தாக்கியதில்லை."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ إِيَاسِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ذُبَابٍ، قَالَ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ لاَ تَضْرِبُوا إِمَاءَ اللَّهِ ‏"‏ ‏.‏ فَجَاءَ عُمَرُ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ ذَئِرَ النِّسَاءُ عَلَى أَزْوَاجِهِنَّ فَأْمُرْ بِضَرْبِهِنَّ ‏.‏ فَضُرِبْنَ فَطَافَ بِآلِ مُحَمَّدٍ ـ صلى الله عليه وسلم ـ طَائِفُ نِسَاءٍ كَثِيرٍ فَلَمَّا أَصْبَحَ قَالَ ‏"‏ لَقَدْ طَافَ اللَّيْلَةَ بِآلِ مُحَمَّدٍ سَبْعُونَ امْرَأَةً كُلُّ امْرَأَةٍ تَشْتَكِي زَوْجَهَا فَلاَ تَجِدُونَ أُولَئِكَ خِيَارَكُمْ ‏"‏ ‏.‏
இயாஸ் பின் அப்துல்லாஹ் பின் அபூ துபாப் (ரழி) அவர்கள் கூறியதாவது:

"நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியாட்களை (பெண்களை) அடிக்காதீர்கள்' என்று கூறினார்கள். பிறகு, உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே, பெண்கள் தங்கள் கணவர்களிடம் துணிந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை அடிக்குமாறு உத்தரவிடுங்கள்' என்றார்கள்; அதன்படி அவர்கள் (பெண்கள்) அடிக்கப்பட்டனர். பிறகு, முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் பல பெண்கள் வந்து கூடினார்கள். மறுநாள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நேற்றிரவு முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் எழுபது பெண்கள் வந்திருந்தனர். ஒவ்வொருவரும் தம் கணவரைப் பற்றி முறையிட்டனர். அத்தகையோர் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்.' "

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَالْحَسَنُ بْنُ مُدْرِكٍ الطَّحَّانُ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللَّهِ الأَوْدِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْمُسْلِيِّ، عَنِ الأَشْعَثِ بْنِ قَيْسٍ، قَالَ ضِفْتُ عُمَرَ لَيْلَةً فَلَمَّا كَانَ فِي جَوْفِ اللَّيْلِ قَامَ إِلَى امْرَأَتِهِ يَضْرِبُهَا فَحَجَزْتُ بَيْنَهُمَا فَلَمَّا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ لِي يَا أَشْعَثُ احْفَظْ عَنِّي شَيْئًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ لاَ يُسْأَلُ الرَّجُلُ فِيمَ يَضْرِبُ امْرَأَتَهُ وَلاَ تَنَمْ إِلاَّ عَلَى وِتْرٍ ‏ ‏ ‏.‏ وَنَسِيتُ الثَّالِثَةَ ‏.‏
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدِ بْنِ خِدَاشٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، بِإِسْنَادِهِ نَحْوَهُ ‏.‏
அஷ்அத் பின் கைஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் ஒருநாள் இரவு உமர் (ரழி) அவர்களின் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருந்தேன். இரவின் நடுவில் அவர்கள் எழுந்து சென்று தம் மனைவியை அடித்தார்கள், நான் அவர்களைப் பிரித்து விட்டேன். அவர்கள் உறங்கச் சென்றபோது என்னிடம் கூறினார்கள்: 'ஓ அஷ்அத், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்ட ஒன்றை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்: ஒரு கணவர் தம் மனைவியை ஏன் அடித்தார் என்று அவரிடம் கேட்கப்படக் கூடாது; மேலும், நீங்கள் வித்ரு தொழும் வரை உறங்கச் செல்லாதீர்கள்.’ மூன்றாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன்."

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الْوَاصِلَةِ وَالْوَاشِمَةِ
மயிரை நீட்டுபவர்களும், பச்சை குத்துபவர்களும்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ لَعَنَ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒட்டுமுடி வைக்கும் பெண்ணையும், அதனை வைத்துக்கொள்ளும் பெண்ணையும், பச்சை குத்தும் பெண்ணையும், அதனை குத்திக்கொள்ளும் பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ إِنَّ ابْنَتِي عُرَيِّسٌ وَقَدْ أَصَابَتْهَا الْحَصْبَةُ فَتَمَرَّقَ شَعْرُهَا ‏.‏ فَأَصِلُ لَهَا فِيهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ ‏ ‏ ‏.‏
அஸ்மா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்:, என் மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது, அவளுக்கு தட்டம்மை ஏற்பட்டு அவளது முடி உதிர்ந்துவிட்டது. நான் அவளுக்கு ஒட்டுமுடி வைக்கலாமா?, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும், அதை வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபித்துள்ளான்.’"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو عُمَرَ، حَفْصُ بْنُ عَمْرٍو وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ لِخَلْقِ اللَّهِ ‏.‏ فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ فَجَاءَتْ إِلَيْهِ فَقَالَتْ بَلَغَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ كَيْتَ وَكَيْتَ ‏.‏ قَالَ وَمَالِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ فِي كِتَابِ اللَّهِ قَالَتْ إِنِّي لأَقْرَأُ مَا بَيْنَ لَوْحَيْهِ فَمَا وَجَدْتُهُ ‏.‏ قَالَ إِنْ كُنْتِ قَرَأْتِهِ فَقَدْ وَجَدْتِهِ أَمَا قَرَأْتِ ‏{وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا}‏ قَالَتْ بَلَى ‏.‏ قَالَ فَإِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَدْ نَهَى عَنْهُ ‏.‏ قَالَتْ فَإِنِّي لأَظُنُّ أَهْلَكَ يَفْعَلُونَ ‏.‏ قَالَ اذْهَبِي فَانْظُرِي ‏.‏ فَذَهَبَتْ فَنَظَرَتْ فَلَمْ تَرَ مِنْ حَاجَتِهَا شَيْئًا ‏.‏ قَالَتْ مَا رَأَيْتُ شَيْئًا ‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ لَوْ كَانَتْ كَمَا تَقُولِينَ مَا جَامَعَتْنَا ‏.‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"பச்சை குத்தும் பெண்ணையும், பச்சை குத்திக் கொள்ளும் பெண்ணையும், புருவ முடிகளை அகற்றுபவர்களையும், அழகுக்காகத் தம் பற்களை அரத்தால் தேய்த்துப் பிரித்துக் கொள்பவர்களையும், அல்லாஹ்வின் படைப்பை மாற்றுபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்." இந்தச் செய்தி உம்மு யஃகூப் என்று அழைக்கப்பட்ட பனூ அசத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எட்டியது. அவர் அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடம் வந்து, "நீங்கள் இன்னின்னவாறு கூறியதாக நான் கேள்விப்பட்டேன்" என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? மேலும், அது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது' என்று கூறினார்கள். அதற்கு அவர், "நான் அதன் இரு அட்டைகளுக்கு மத்தியில் உள்ளதை ஓதினேன், ஆனால், அதில் நான் இதைக் காணவில்லையே" என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள், "நீங்கள் அதை முறையாக ஓதியிருந்தால், அதைக் கண்டிருப்பீர்கள். நீங்கள் இந்த வசனத்தை ஓதவில்லையா: 'தூதர் (முஹம்மது) உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.'?" என்று கூறினார்கள். அதற்கு அவர், "ஆம் (ஓதியிருக்கிறேன்)" என்றார். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைத் தடுத்தார்கள்' என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண், 'உங்கள் மனைவி இதைச் செய்வதாக நான் நினைக்கிறேன்' என்றார். அப்துல்லாஹ் (ரழி) அவர்கள், "சென்று பார்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர் சென்று பார்த்தார், ஆனால், அவர் விரும்பிய எதையும் காணவில்லை. அவர், "நான் எதையும் பார்க்கவில்லை!" என்று கூறினார். அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் சொல்வது போல் அவள் இருந்திருந்தால், நான் அவளை என்னுடன் வைத்திருக்க மாட்டேன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب مَتَى يُسْتَحَبُّ الْبِنَاءُ بِالنِّسَاءِ
திருமணத்தை நிறைவேற்றுவதற்கான பரிந்துரைக்கப்பட்ட நேரம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، ح وَحَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، جَمِيعًا عَنْ سُفْيَانَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ تَزَوَّجَنِي النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فِي شَوَّالٍ وَبَنَى بِي فِي شَوَّالٍ ‏.‏ فَأَىُّ نِسَائِهِ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي ‏.‏ وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ تُدْخِلَ نِسَاءَهَا فِي شَوَّالٍ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள், என்னை ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்தார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவிலும் ஈடுபட்டார்கள். மேலும், அவருடைய மனைவியரில் என்னை விட அவருக்கு மிகவும் பிரியமானவர் யார் இருந்தார்கள்?" ஆயிஷா (ரழி) அவர்கள், தமது உறவுப் பெண்களுக்கு ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்யப்பட்டு, அவர்களது தாம்பத்திய உறவு தொடங்குவதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، عَنْ أَبِيهِ ـ رضي الله عنه ـ أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ تَزَوَّجَ أُمَّ سَلَمَةَ فِي شَوَّالٍ وَجَمَعَهَا إِلَيْهِ فِي شَوَّالٍ ‏.‏
அப்துல்-மலிக் பின் ஹாரித் பின் ஹிஷாம் (ரழி) அவர்கள், தமது தந்தையிடமிருந்து அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரழி) அவர்களை ஷவ்வால் மாதத்தில் திருமணம் செய்தார்கள், மேலும் ஷவ்வால் மாதத்திலேயே அவர்களுடன் வீடு கூடினார்கள்.

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الرَّجُلِ يَدْخُلُ بِأَهْلِهِ قَبْلَ أَنْ يُعْطِيَهَا شَيْئًا
ஒரு மனிதன் தனது மனைவிக்கு எதையும் கொடுக்கும் முன்னரே அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வது
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ مَنْصُورٍ، - أَظُنُّهُ - عَنْ طَلْحَةَ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَهَا أَنْ تُدْخِلَ عَلَى رَجُلٍ امْرَأَتَهُ قَبْلَ أَنْ يُعْطِيَهَا شَيْئًا ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு பெண்ணுக்கு அவளுடைய கணவர் எதையும் (அதாவது, மஹர்) கொடுப்பதற்கு முன்பே, அப்பெண்ணை அவளுடைய கணவரிடம் அழைத்துச் செல்லுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறினார்கள்.
(பலவீனமானது)

باب مَا يَكُونُ فِيهِ الْيُمْنُ وَالشُّؤْمُ
அதிர்ஷ்டம் மற்றும் நல்ல அதிர்ஷ்டம்
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ سُلَيْمٍ الْكَلْبِيُّ، عَنْ يَحْيَى بْنِ جَابِرٍ، عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ، عَنْ عَمِّهِ، مِخْمَرِ بْنِ مُعَاوِيَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ ‏ لاَ شُؤْمَ وَقَدْ يَكُونُ الْيُمْنُ فِي ثَلاَثَةٍ فِي الْمَرْأَةِ وَالْفَرَسِ وَالدَّارِ ‏ ‏ ‏.‏
ஹகீம் இப்னு முஆவியா (ரழி) அவர்கள், அவர்களின் தந்தையின் சகோதரர் மிக்மர் இப்னு முஆவியா (ரழி) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: 'சகுனங்களை நம்பாதீர்கள், மேலும் பாக்கியம் என்பது மூன்று விஷயங்களில் மட்டுமே உள்ளது: ஒரு பெண், ஒரு குதிரை மற்றும் ஒரு வீடு.'"

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ إِنْ كَانَ فَفِي الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالْمَسْكَنِ ‏ ‏ ‏.‏ يَعْنِي الشُّؤْمَ ‏.‏
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அது இருக்குமானால், அது மூன்று விஷயங்களில் இருக்கிறது: குதிரை, பெண் மற்றும் வீடு," அதாவது துர்ச்சகுனங்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ أَبُو سَلَمَةَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ الشُّؤْمُ فِي ثَلاَثَةٍ فِي الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالدَّارِ ‏ ‏ ‏.‏
قَالَ الزُّهْرِيُّ فَحَدَّثَنِي أَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، أَنَّ جَدَّتَهُ، زَيْنَبَ حَدَّثَتْهُ عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا كَانَتْ تَعُدُّ هَؤُلاَءِ الثَّلاَثَةَ وَتَزِيدُ مَعَهُنَّ السَّيْفَ ‏.‏
ஸாலிம் அவர்கள், தமது தந்தை (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "துர்ச்சகுனம் என்பது மூன்று விஷயங்களில் மட்டுமே காணப்படுகிறது: குதிரை, பெண் மற்றும் வீடு."

(ஸஹீஹ்)
அறிவிப்பாளர்களில் ஒருவர் அஸ்-ஸுஹ்ரி அவர்கள் கூறினார்கள்: "அபூ உபைதா பின் அப்துல்லாஹ் பின் ஸம்ஆ அவர்கள் கூறினார்கள், அவர்களின் தாயார் ஸைனப் அவர்கள், உம்மு ஸலமா (ரழி) அவர்களிடமிருந்து தமக்கு அறிவித்தார்கள்; உம்மு ஸலமா (ரழி) அவர்கள் இந்த மூன்றையும் பட்டியலிட்டு, அவற்றுடன் "வாளையும்" சேர்த்துக் கூறுவார்கள்."

باب الْغَيْرَةِ
பொறாமை
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شَيْبَانَ أَبِي مُعَاوِيَةَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَهْمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ مِنَ الْغَيْرَةِ مَا يُحِبُّ اللَّهُ وَمِنْهَا مَا يَكْرَهُ اللَّهُ فَأَمَّا مَا يُحِبُّ فَالْغَيْرَةُ فِي الرِّيبَةِ وَأَمَّا مَا يَكْرَهُ فَالْغَيْرَةُ فِي غَيْرِ رِيبَةٍ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் விரும்பும் ஒரு வகை ரோஷமும் உள்ளது, அவன் வெறுக்கும் ஒரு வகை ரோஷமும் உள்ளது. அல்லாஹ் விரும்புவதைப் பொறுத்தவரை, அது சந்தேகத்திற்குக் காரணங்கள் இருக்கும்போது ஏற்படும் ரோஷமாகும். அவன் வெறுப்பதைப் பொறுத்தவரை, அது சந்தேகத்திற்குக் காரணங்கள் இல்லாதபோது ஏற்படும் ரோஷமாகும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ قَطُّ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ مِمَّا رَأَيْتُ مِنْ ذِكْرِ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ لَهَا وَلَقَدْ أَمَرَهُ رَبُّهُ أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ ‏.‏ يَعْنِي مِنْ ذَهَبٍ قَالَهُ ابْنُ مَاجَهْ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் கதீஜா (ரழி) அவர்களின் மீது கொண்ட பொறாமையைப் போன்று வேறு எந்தப் பெண்ணின் மீதும் கொண்டதில்லை, ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நினைவுகூர்வதை நான் கண்டதோடு, சொர்க்கத்தில் கஸப்-ஆல் செய்யப்பட்ட ஒரு வீட்டைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறுமாறு அவருடைய இறைவன் தமக்குக் கூறியிருந்தான்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ ‏ ‏ إِنَّ بَنِي هِشَامِ بْنِ الْمُغِيرَةِ اسْتَأْذَنُونِي أَنْ يُنْكِحُوا ابْنَتَهُمْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَلاَ آذَنُ لَهُمْ ثُمَّ لاَ آذَنُ لَهُمْ ثُمَّ لاَ آذَنُ لَهُمْ إِلاَّ أَنْ يُرِيدَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَنْ يُطَلِّقَ ابْنَتِي وَيَنْكِحَ ابْنَتَهُمْ فَإِنَّمَا هِيَ بَضْعَةٌ مِنِّي يَرِيبُنِي مَا رَابَهَا وَيُؤْذِينِي مَا آذَاهَا ‏ ‏ ‏.‏
மிஸ்வர் பின் மக்ரமா (ரழி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் (மேடை) மீது இருந்தபோது கூற நான் கேட்டேன்: 'பனூ ஹிஷாம் பின் முஃகீரா கிளையினர், 'அலீ பின் அபீ தாலிப் (ரழி) அவர்களுக்குத் தங்கள் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு என்னிடம் அனுமதி கேட்டார்கள், ஆனால் நான் அவர்களுக்கு அனுமதி அளிக்க மாட்டேன், நான் அவர்களுக்கு அனுமதி அளிக்க மாட்டேன், நான் அவர்களுக்கு அனுமதி அளிக்க மாட்டேன். 'அலீ பின் அபீ தாலிப் (ரழி) அவர்கள் என் மகளை விவாகரத்து செய்துவிட்டு, அவர்களின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினால் தவிர. ஏனெனில், அவள் என்னில் ஒரு பகுதியாவாள். அவளை எது தொந்தரவு செய்கிறதோ அது என்னையும் தொந்தரவு செய்கிறது, அவளை எது வேதனைப்படுத்துகிறதோ அது என்னையும் வேதனைப்படுத்துகிறது.'"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَنْبَأَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ، أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَطَبَ بِنْتَ أَبِي جَهْلٍ وَعِنْدَهُ فَاطِمَةُ بِنْتُ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَلَمَّا سَمِعَتْ بِذَلِكَ، فَاطِمَةُ أَتَتِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَتْ إِنَّ قَوْمَكَ يَتَحَدَّثُونَ أَنَّكَ لاَ تَغْضَبُ لِبَنَاتِكَ وَهَذَا عَلِيٌّ نَاكِحًا ابْنَةَ أَبِي جَهْلٍ ‏.‏ قَالَ الْمِسْوَرُ فَقَامَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ ثُمَّ قَالَ ‏ ‏ أَمَّا بَعْدُ فَإِنِّي قَدْ أَنْكَحْتُ أَبَا الْعَاصِ بْنَ الرَّبِيعِ فَحَدَّثَنِي فَصَدَقَنِي وَإِنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ بَضْعَةٌ مِنِّي وَأَنَا أَكْرَهُ أَنْ تَفْتِنُوهَا وَإِنَّهَا وَاللَّهِ لاَ تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللَّهِ وَبِنْتُ عَدُوِّ اللَّهِ عِنْدَ رَجُلٍ وَاحِدٍ أَبَدًا ‏ ‏ ‏.‏ قَالَ فَنَزَلَ عَلِيٌّ عَنِ الْخِطْبَةِ ‏.‏
அலி பின் ஹுஸைன் அவர்கள் கூறினார்கள்: மிஸ்வர் பின் மக்ரமா (ரழி) அவர்கள் தன்னிடம் கூறினார்கள்:

அலி பின் அபூ தாலிப் (ரழி) அவர்கள், நபிகளாரின் மகளான ஃபாத்திமா (ரழி) அவர்களை மணமுடித்திருந்த நிலையில், அபூ ஜஹ்லின் மகளைப் பெண் கேட்டார்கள். ஃபாத்திமா (ரழி) அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, அவர்கள் நபிகளார் (ஸல்) அவர்களிடம் சென்று, "தங்களுடைய சமூகத்தினர், தாங்கள் தங்களுடைய மகள்களுக்காக கோபப்படுவதில்லை என்று கூறுகிறார்கள். இந்த அலி, அபூ ஜஹ்லின் மகளை மணமுடிக்கப் போகிறார்" என்று கூறினார்கள். மிஸ்வர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபிகளார் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ஷஹாதா கலிமாவை மொழிந்ததை நான் கேட்டேன். பிறகு அவர்கள் கூறினார்கள்: 'நான் என்னுடைய மகள் (ஸைனப் (ரழி)) அவர்களை அபுல் ஆஸ் பின் ரபீஉக்கு மணமுடித்துக் கொடுத்தேன், அவர் என்னிடம் பேசி, உண்மையையே கூறினார். ஃபாத்திமா (ரழி) என்னில் ஒரு பகுதியாவார். அவர் சிரமப்படுவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதரின் மகளும், அல்லாஹ்வின் எதிரியின் மகளும் ஒருபோதும் ஒரே ஆணுக்கு மனைவியாக ஒன்று சேர மாட்டார்கள்.'"

அவர் (மிஸ்வர் (ரழி)) கூறினார்கள்: எனவே, அலி (ரழி) அவர்கள் அந்தத் திருமணப் பேச்சைக் கைவிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الَّتِي وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ
நபி (ஸல்) அவர்களுக்குத் தன்னைத் திருமணத்திற்காக முன்வைத்த பெண்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَقُولُ أَمَا تَسْتَحِي الْمَرْأَةُ أَنْ تَهَبَ نَفْسَهَا لِلنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ حَتَّى أَنْزَلَ اللَّهُ ‏{تُرْجِي مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ}‏ ‏.‏ قَالَتْ فَقُلْتُ إِنَّ رَبَّكَ لَيُسَارِعُ فِي هَوَاكَ ‏.‏
ஹிஷாம் பின் உர்வா அவர்கள், தம் தந்தை வழியாக அறிவித்தார்கள்: ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுவார்கள்:

"ஒரு பெண் தன்னை நபி (ஸல்) அவர்களுக்கு அர்ப்பணிக்க வெட்கப்பட மாட்டாளா? அல்லாஹ், 'நீங்கள் (முஹம்மதே!) அவர்களில் (உங்கள் மனைவியரில்) நாடியவரின் முறையைத் தள்ளி வைக்கலாம், மேலும் நீங்கள் நாடியவரை உங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம்' என்ற வஹீ (இறைச்செய்தி)யை அருளும் வரை (நான் இவ்வாறு எண்ணினேன்).” அவர்கள் கூறினார்கள்: "பிறகு நான் கூறினேன்: 'உங்களுடைய இறைவன் உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் விரைந்து செயல்படுகிறான்.'"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بِشْرٍ، بَكْرُ بْنُ خَلَفٍ وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا ثَابِتٌ، قَالَ كُنَّا جُلُوسًا مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ وَعِنْدَهُ ابْنَةٌ لَهُ فَقَالَ أَنَسٌ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَعَرَضَتْ نَفْسَهَا عَلَيْهِ ‏.‏ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ هَلْ لَكَ فِيَّ حَاجَةٌ فَقَالَتِ ابْنَتُهُ مَا أَقَلَّ حَيَاءَهَا ‏.‏ فَقَالَ هِيَ خَيْرٌ مِنْكِ رَغِبَتْ فِي رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَعَرَضَتْ نَفْسَهَا عَلَيْهِ ‏.‏
தாபித் கூறினார்கள்:
“நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம், அவருடைய மகளும் அவருடன் இருந்தாள். அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை அவருக்கு வழங்கினார். அப்பெண், "அல்லாஹ்வின் தூதரே, உங்களுக்கு என் மீது ஏதேனும் நாட்டம் உள்ளதா?" என்றார்.' அவருடைய மகள், 'அவளுக்கு வெட்கம் எவ்வளவு குறைவு!' என்றாள். அதற்கு அவர், 'அவர் உன்னை விடச் சிறந்தவர், ஏனெனில் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விரும்பினார், மேலும் தன்னை அவருக்கு வழங்கினார்' என்று கூறினார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الرَّجُلِ يَشُكُّ فِي وَلَدِهِ
ஒரு மனிதர் தனது குழந்தையைப் பற்றி சந்தேகம் கொண்டிருக்கிறார்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ مِنْ بَنِي فَزَارَةَ إِلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلاَمًا أَسْوَدَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ هَلْ لَكَ مِنْ إِبِلٍ ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ فَمَا أَلْوَانُهَا ‏"‏ ‏.‏ قَالَ حُمْرٌ ‏.‏ قَالَ ‏"‏ هَلْ فِيهَا مِنْ أَوْرَقَ ‏"‏ ‏.‏ قَالَ إِنَّ فِيهَا لَوُرْقًا ‏.‏ قَالَ ‏"‏ فَأَنَّى أَتَاهَا ذَلِكَ ‏"‏ ‏.‏ قَالَ عَسَى عِرْقٌ نَزَعَهَا ‏.‏ قَالَ ‏"‏ وَهَذَا لَعَلَّ عِرْقًا نَزَعَهُ ‏"‏ ‏.‏ وَاللَّفْظُ لاِبْنِ الصَّبَّاحِ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"பனூ ஃபஸாரா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே, என் மனைவி ஒரு கறுப்பு நிற மகனைப் பெற்றெடுத்துள்ளாள்!' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: 'உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா?' அவர், 'ஆம்' என்றார். அவர்கள் கேட்டார்கள்: 'அவற்றின் நிறம் என்ன?' அவர், 'சிவப்பு' என்றார். அவர்கள் கேட்டார்கள்: 'அவற்றில் சாம்பல் நிறமானவை ஏதேனும் உள்ளனவா?' அவர், 'ஆம், அவற்றில் சில சாம்பல் நிறமானவை உள்ளன' என்றார். அவர்கள் கேட்டார்கள்: 'அது எங்கிருந்து வந்தது?' அவர், 'ஒருவேளை அது பரம்பரை வழியாக வந்திருக்கலாம்' என்றார். அவர்கள் கூறினார்கள்: 'அதேபோல, ஒருவேளை இதுவும் பரம்பரை வழியாக வந்திருக்கலாம்!' "

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبَاءَةُ بْنُ كُلَيْبٍ اللَّيْثِيُّ أَبُو غَسَّانَ، عَنْ جُوَيْرِيَةَ بْنِ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، ‏.‏ أَنَّ رَجُلاً، مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَتَى النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ عَلَى فِرَاشِي غُلاَمًا أَسْوَدَ وَإِنَّا أَهْلُ بَيْتٍ لَمْ يَكُنْ فِينَا أَسْوَدُ قَطُّ ‏.‏ قَالَ ‏"‏ هَلْ لَكَ مِنَ إِبِلٍ ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ فَمَا أَلْوَانُهَا ‏"‏ ‏.‏ قَالَ حُمْرٌ ‏.‏ قَالَ ‏"‏ هَلْ فِيهَا أَسْوَدُ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ فَهَلْ فِيهَا أَوْرَقُ ‏"‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏"‏ فَأَنَّى كَانَ ذَلِكَ ‏"‏ ‏.‏ قَالَ عَسَى أَنْ يَكُونَ نَزَعَهُ عِرْقٌ ‏.‏ قَالَ ‏"‏ فَلَعَلَّ ابْنَكَ هَذَا نَزَعَهُ عِرْقٌ ‏"‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
பாலைவனத்தைச் சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி என் படுக்கையில் ஒரு கறுப்பு நிற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளாள். என் குடும்பத்தினர் மத்தியில் கறுப்பு நிறத்தவர் எவரும் இல்லை" என்று கூறினார். அதற்கு அவர்கள், "உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்" என்றார். அவர்கள், "அவற்றின் நிறம் என்ன?" என்று கேட்டார்கள். அவர், "சிவப்பு" என்றார். அவர்கள், "அவற்றில் கறுப்பு நிறமானவை இருக்கின்றனவா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை" என்றார். அவர்கள், "அவற்றில் சாம்பல் நிறமானவை இருக்கின்றனவா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்" என்றார். அவர்கள், "அது எப்படி?" என்று கேட்டார்கள். அவர், "ஒருவேளை அது பரம்பரை காரணமாக இருக்கலாம்" என்றார். அவர்கள், "ஒருவேளை உன்னுடைய இந்த மகனின் நிறமும் பரம்பரை காரணமாக இருக்கலாம்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الْوَلَدِ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ
குழந்தை படுக்கைக்குரியது, விபச்சாரம் செய்தவருக்கு எதுவும் கிடைக்காது
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّ عَبْدَ بْنَ زَمْعَةَ وَسَعْدًا اخْتَصَمَا إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فِي ابْنِ أَمَةِ زَمْعَةَ ‏.‏ فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ أَوْصَانِي أَخِي إِذَا قَدِمْتُ مَكَّةَ أَنْ أَنْظُرَ إِلَى ابْنِ أَمَةِ زَمْعَةَ فَأَقْبِضَهُ ‏.‏ وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي وَابْنُ أَمَةِ أَبِي وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي ‏.‏ فَرَأَى النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ شَبَهَهُ بِعُتْبَةَ فَقَالَ ‏ ‏ هُوَ لَكَ يَا عَبْدُ بْنُ زَمْعَةَ ‏.‏ الْوَلَدُ لِلْفِرَاشِ وَاحْتَجِبِي عَنْهُ يَا سَوْدَةُ ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
இப்னு ஸம்ஆ (ரழி) அவர்களும், சஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்களும் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணின் மகனைப் பற்றிய ஒரு வழக்கை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். சஃத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரர் (உத்பா பின் அபீ வக்காஸ்) அவர்கள், 'நான் மக்காவிற்கு வரும்போது, ஸம்ஆவின் அடிமைப் பெண்ணின் மகனைத் தேடி, அவனை என் பராமரிப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று தனது மரண சாசனத்தில் அறிவுறுத்தியிருந்தார்கள்." அப்து இப்னு ஸம்ஆ (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அவன் என் சகோதரன், மேலும் என் தந்தையின் அடிமைப் பெண்ணுடைய மகன்; அவன் என் தந்தையின் விரிப்பில் பிறந்தவன்." நபி (ஸல்) அவர்கள், அவன் உத்பாவை ஒத்திருப்பதைக் கண்டார்கள், மேலும் கூறினார்கள்: "அப்து இப்னு ஸம்ஆவே, அவன் உமக்குரியவன். குழந்தை விரிப்புக்குரியது. சவ்தாவே, அவனிடமிருந்து நீர் ஹிஜாபைக் கடைப்பிடிப்பீராக." (ஸஹீஹ்)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَضَى بِالْوَلَدِ لِلْفِرَاشِ ‏.‏
உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தை விரிப்புக்குரியதாகும் என்று தீர்ப்பளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ الْوَلَدُ لِلْفِرَاشِ ‏.‏ وَلِلْعَاهِرِ الْحَجَرُ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “குழந்தை விரிப்புக்குரியது (அதாவது, கணவனுக்குரியது), விபச்சாரக்காரனுக்கு எதுவும் இல்லை!”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ الْبَاهِلِيَّ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ ‏ الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ ‏ ‏ ‏.‏
ஷுரஹ்பீல் பின் முஸ்லிம் கூறினார்கள்:
"நான் அபூ உமாமா அல்-பாஹிலி (ரழி) அவர்கள் கூறக் கேட்டேன்: 'நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "குழந்தை படுக்கைக்குரியவருக்கே உரியது, விபச்சாரக்காரனுக்கு எதுவும் இல்லை."'

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب فِي الزَّوْجَيْنِ يُسْلِمُ أَحَدُهُمَا قَبْلَ الآخَرِ
ஒரு கணவன் அல்லது மனைவி மற்றவருக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்போது
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ جُمَيْعٍ، حَدَّثَنَا سِمَاكٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةً، جَاءَتْ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَأَسْلَمَتْ ‏.‏ فَتَزَوَّجَهَا رَجُلٌ ‏.‏ قَالَ فَجَاءَ زَوْجُهَا الأَوَّلُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ كُنْتُ أَسْلَمْتُ مَعَهَا وَعَلِمَتْ بِإِسْلاَمِي ‏.‏ قَالَ فَانْتَزَعَهَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ زَوْجِهَا الآخَرِ وَرَدَّهَا إِلَى زَوْجِهَا الأَوَّلِ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார், பிறகு ஒரு ஆண் அவரை மணந்துகொண்டான். பின்னர், அப்பெண்ணின் முதல் கணவன் வந்து, "அல்லாஹ்வின் தூதரே, நானும் அவளுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், மேலும் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது அவளுக்குத் தெரியும்" என்று கூறினான். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவளுடைய இரண்டாவது கணவனிடமிருந்து பிரித்து அவளுடைய முதல் கணவனிடம் ஒப்படைத்தார்கள்.

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ، وَيَحْيَى بْنُ حَكِيمٍ، قَالاَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَدَّ ابْنَتَهُ عَلَى أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ بَعْدَ سَنَتَيْنِ بِنِكَاحِهَا الأَوَّلِ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மகளை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதலாவது திருமண ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அபுல் ஆஸ் பின் ரபீஉ (ரழி) அவர்களிடம் திருப்பியனுப்பினார்கள்.

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَدَّ ابْنَتَهُ زَيْنَبَ عَلَى أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ بِنِكَاحٍ جَدِيدٍ ‏.‏
அம்ரு பின் ஷுஐப் (ரழி) அவர்கள் தம் தந்தை வழியாகவும், அவர் தம் பாட்டனார் வழியாகவும் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் மகள் ஜைனப் (ரழி) அவர்களை அபுல்-ஆஸ் பின் ரபீஃ (ரழி) அவர்களிடம் ஒரு புதிய திருமண ஒப்பந்தத்துடன் திருப்பிக் கொடுத்தார்கள்.

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب الْغَيْلِ
பாலூட்டும் தாயுடன் தாம்பத்திய உறவு கொள்வது
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ الْقُرَشِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، عَنْ جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الأَسَدِيَّةِ، أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏"‏ قَدْ أَرَدْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيَالِ فَإِذَا فَارِسُ وَالرُّومُ يُغِيلُونَ فَلاَ يَقْتُلُونَ أَوْلاَدَهُمْ ‏"‏ ‏.‏ وَسَمِعْتُهُ يَقُولُ وَسُئِلَ عَنِ الْعَزْلِ فَقَالَ ‏"‏ هُوَ الْوَأْدُ الْخَفِيُّ ‏"‏ ‏.‏
ஜுதாமா பின்த் வஹ்ப் அல்-அசதிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: 'பாலூட்டும் தாயுடன் தாம்பத்திய உறவு கொள்வதைத் தடை செய்ய நான் விரும்பினேன், ஆனால் பாரசீகர்களும் ரோமானியர்களும் இதைச் செய்வதை நான் கண்டேன், அது அவர்களின் குழந்தைகளைக் கொல்வதில்லை.' மேலும் அஸ்ல் (தாம்பத்திய உறவின் போது வெளியே விந்து வெளியேற்றுதல்) பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறக் கேட்டேன்: 'அது மறைமுகமாக குழந்தைகளை உயிருடன் புதைப்பதாகும்.'"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنْ عَمْرِو بْنِ مُهَاجِرٍ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ الْمُهَاجِرَ بْنَ أَبِي مُسْلِمٍ، يُحَدِّثُ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ بْنِ السَّكَنِ، وَكَانَتْ، مَوْلاَتَهُ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ ‏ لاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ سِرًّا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ الْغَيْلَ لَيُدْرِكُ الْفَارِسَ عَلَى ظَهْرِ فَرَسِهِ حَتَّى يَصْرَعَهُ ‏ ‏ ‏.‏
முஹாஜிர் பின் அபூ முஸ்லிம் அவர்கள், தங்களால் உரிமை விடப்பட்ட பெண் அடிமையான அஸ்மா பின்த் யஸீத் பின் சகரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டார்கள்: "உங்கள் குழந்தைகளை இரகசியமாகக் கொல்லாதீர்கள், என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, பாலூட்டும் பெண்ணுடன் கொள்ளும் தாம்பத்திய உறவானது, குதிரையில் சவாரி செய்யும் வீரனைப் பின்தொடர்ந்து சென்று அவனைத் தரையில் வீழ்த்திவிடும்."

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب فِي الْمَرْأَةِ تُؤْذِي زَوْجَهَا
ஒரு பெண் தனது கணவரை எரிச்சலூட்டுகிறாள்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُؤَمَّلٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ أَتَتِ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ امْرَأَةٌ مَعَهَا صَبِيَّانِ لَهَا قَدْ حَمَلَتْ أَحَدَهُمَا وَهِيَ تَقُودُ الآخَرَ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ حَامِلاَتٌ وَالِدَاتٌ رَحِيمَاتٌ لَوْلاَ مَا يَأْتِينَ إِلَى أَزْوَاجِهِنَّ دَخَلَ مُصَلِّيَاتُهُنَّ الْجَنَّةَ ‏ ‏ ‏.‏
அபூ உமாமா (ரழி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி தனது இரண்டு குழந்தைகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்; ஒரு குழந்தையைச் சுமந்துகொண்டும், மற்றொன்றைக் கைப்பிடித்து நடத்திக்கொண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அவர்கள் (பெண்கள்) குழந்தைகளைச் சுமப்பவர்கள், பெற்றெடுப்பவர்கள், இரக்கமுடையவர்கள். அவர்கள் தங்கள் கணவன்மார்களைத் தொந்தரவு செய்யாதிருந்தால், அவர்களில் தொழுகையை நிறைவேற்றுபவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள்.'

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ لاَ تُؤْذِي امْرَأَةٌ زَوْجَهَا إِلاَّ قَالَتْ زَوْجَتُهُ مِنَ الْحُورِ الْعِينِ لاَ تُؤْذِيهِ قَاتَلَكِ اللَّهُ فَإِنَّمَا هُوَ عِنْدَكِ دَخِيلٌ أَوْشَكَ أَنْ يُفَارِقَكِ إِلَيْنَا ‏ ‏ ‏.‏
முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எந்தவொரு பெண்ணும் தன் கணவருக்குத் தொல்லை கொடுத்தால், சுவர்க்கத்தில் உள்ள ஹூருல் ஈன்களிலிருந்து அவரின் மனைவி கூறுவார்: 'அவருக்குத் தொல்லை கொடுக்காதே, அல்லாஹ் உன்னை நாசமாக்கட்டும். ஏனெனில் அவர் உன்னிடத்தில் ஒரு தற்காலிக விருந்தினர் மட்டுமே. விரைவில் அவர் உன்னைப் பிரிந்து எங்களிடம் வந்துவிடுவார்.'"

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
باب لاَ يُحَرِّمُ الْحَرَامُ الْحَلاَلَ
ஹராமானது ஹலாலை ஹராமாக்காது
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُعَلَّى بْنِ مَنْصُورٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ لاَ يُحَرِّمُ الْحَرَامُ الْحَلاَلَ ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஹராமானது, ஹலாலானதை ஹராமாக ஆக்காது."

ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)