حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبِكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى لَيْسَ بِمُوسَى بَنِي إِسْرَائِيلَ، إِنَّمَا هُوَ مُوسَى آخَرُ. فَقَالَ كَذَبَ عَدُوُّ اللَّهِ، حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " قَامَ مُوسَى النَّبِيُّ خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ، فَسُئِلَ أَىُّ النَّاسِ أَعْلَمُ فَقَالَ أَنَا أَعْلَمُ. فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ، إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنَّ عَبْدًا مِنْ عِبَادِي بِمَجْمَعِ الْبَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ. قَالَ يَا رَبِّ وَكَيْفَ بِهِ فَقِيلَ لَهُ احْمِلْ حُوتًا فِي مِكْتَلٍ فَإِذَا فَقَدْتَهُ فَهْوَ ثَمَّ، فَانْطَلَقَ وَانْطَلَقَ بِفَتَاهُ يُوشَعَ بْنِ نُونٍ، وَحَمَلاَ حُوتًا فِي مِكْتَلٍ، حَتَّى كَانَا عِنْدَ الصَّخْرَةِ وَضَعَا رُءُوسَهُمَا وَنَامَا فَانْسَلَّ الْحُوتُ مِنَ الْمِكْتَلِ فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا، وَكَانَ لِمُوسَى وَفَتَاهُ عَجَبًا، فَانْطَلَقَا بَقِيَّةَ لَيْلَتِهِمَا وَيَوْمِهِمَا فَلَمَّا أَصْبَحَ قَالَ مُوسَى لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا، لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا، وَلَمْ يَجِدْ مُوسَى مَسًّا مِنَ النَّصَبِ حَتَّى جَاوَزَ الْمَكَانَ الَّذِي أُمِرَ بِهِ. فَقَالَ لَهُ فَتَاهُ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، قَالَ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِي، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَلَمَّا انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ إِذَا رَجُلٌ مُسَجًّى بِثَوْبٍ ـ أَوْ قَالَ تَسَجَّى بِثَوْبِهِ ـ فَسَلَّمَ مُوسَى. فَقَالَ الْخَضِرُ وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ فَقَالَ أَنَا مُوسَى. فَقَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ. قَالَ هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رَشَدًا قَالَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا، يَا مُوسَى إِنِّي عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ لاَ تَعْلَمُهُ أَنْتَ، وَأَنْتَ عَلَى عِلْمٍ عَلَّمَكَهُ لاَ أَعْلَمُهُ. قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا، وَلاَ أَعْصِي لَكَ أَمْرًا، فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى سَاحِلِ الْبَحْرِ لَيْسَ لَهُمَا سَفِينَةٌ، فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ، فَكَلَّمُوهُمْ أَنْ يَحْمِلُوهُمَا، فَعُرِفَ الْخَضِرُ، فَحَمَلُوهُمَا بِغَيْرِ نَوْلٍ، فَجَاءَ عُصْفُورٌ فَوَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ، فَنَقَرَ نَقْرَةً أَوْ نَقْرَتَيْنِ فِي الْبَحْرِ. فَقَالَ الْخَضِرُ يَا مُوسَى، مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلاَّ كَنَقْرَةِ هَذَا الْعُصْفُورِ فِي الْبَحْرِ. فَعَمَدَ الْخَضِرُ إِلَى لَوْحٍ مِنْ أَلْوَاحِ السَّفِينَةِ فَنَزَعَهُ. فَقَالَ مُوسَى قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ، عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ. فَكَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا. فَانْطَلَقَا فَإِذَا غُلاَمٌ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ، فَأَخَذَ الْخَضِرُ بِرَأْسِهِ مِنْ أَعْلاَهُ فَاقْتَلَعَ رَأْسَهُ بِيَدِهِ. فَقَالَ مُوسَى أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا ـ قَالَ ابْنُ عُيَيْنَةَ وَهَذَا أَوْكَدُ ـ فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا، فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا، فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ. قَالَ الْخَضِرُ بِيَدِهِ فَأَقَامَهُ. فَقَالَ لَهُ مُوسَى لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا. قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ ". قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَرْحَمُ اللَّهُ مُوسَى، لَوَدِدْنَا لَوْ صَبَرَ حَتَّى يُقَصَّ عَلَيْنَا مِنْ أَمْرِهِمَا ".
ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம், "நௌஃப் அல்-பகாலி என்பவர், (கிழ்ருடைய தோழரான) மூஸா, பனீ இஸ்ராயீலர்களின் மூஸா அல்லர்; அவர் வேறொரு மூஸா என்று வாதிடுகிறார்" என்று கூறினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் எதிரி பொய் உரைக்கிறான்" என்று கூறினார்கள்.
உபை பின் கஅப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூஸா நபி (அலை) அவர்கள் பனீ இஸ்ராயீலர்களிடையே எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவரிடம், 'மக்களில் மிகவும் அறிந்தவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நானே (மிகவும்) அறிந்தவன்' என்று பதிலளித்தார். (அறிவை) அல்லாஹ் பால் மீட்டாத காரணத்தால் அல்லாஹ் அவர் மீது கண்டிப்பு காட்டினான். 'இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என்னுடைய அடியார்களில் ஒருவர் இருக்கிறார்; அவர் உன்னை விட அதிகம் அறிந்தவர்' என்று அல்லாஹ் அவருக்கு வஹீ அறிவித்தான்.
மூஸா (அலை), 'இறைவா! அவரை நான் எவ்வாறு சந்திப்பது?' என்று கேட்டார். அதற்கு (இறைவன்), 'ஒரு மீனைப் பிடித்துக் கூடையில் இட்டுச் செல்வீராக! எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீரோ, அங்கே அவரைப் பார்ப்பீர்' என்று கூறினான்.
அவ்வாறே மூஸா (அலை) அவர்களும், அவருடைய உதவியாளரான யூஷா பின் நூனும் ஒரு மீனைப் பிடித்துக் கூடையில் இட்டுக்கொண்டு பயணமானார்கள். அவர்கள் ஒரு பாறையை அடைந்ததும், தங்கள் தலைகளைச் சாய்த்துப் படுத்து உறங்கினர். (அப்போது) அந்தக் கூடையில் இருந்த மீன் நழுவிச் சென்று, கடலில் சுரங்கம் போன்றதொரு பாதையை அமைத்துக்கொண்டு சென்றது. இது மூஸாவுக்கும் அவருடைய உதவியாளருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அவ்விரவின் எஞ்சிய பகுதியிலும் (மறுநாள்) பகலிலும் அவர்கள் நடந்தார்கள். பொழுது விடிந்ததும் மூஸா (அலை) தம் உதவியாளரிடம், 'நமது காலை உணவைக் கொண்டு வா! இப்பயணத்தினால் நாம் களைப்படைந்து விட்டோம்' என்று கூறினார். தமக்குக் கட்டளையிடப்பட்ட அந்த இடத்தைக் கடந்து செல்லும் வரை மூஸா (அலை) களைப்பை உணராதவராகவே இருந்தார்.
அப்போது உதவியாளர் அவரிடம், 'நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது நான் மீனை மறந்துவிட்டது நினைவிருக்கிறதா?' என்று கூறினார். அதற்கு மூஸா (அலை), 'அதைத்தான் நாமும் தேடிக்கொண்டிருந்தோம்' என்று கூறிவிட்டு, வந்த வழியே தங்கள் காலடித் தடங்களைப் பின்பற்றித் திரும்பினார்கள்.
அவர்கள் அந்தப் பாறையை அடைந்தபோது, அங்கே ஒரு மனிதர் ஆடையால் போர்த்தப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டார்கள். மூஸா (அலை) அவருக்கு ஸலாம் கூறினார். அதற்கு (அந்த மனிதரான) கிழ்ர், 'உமது பூமியில் ஸலாம் ஏது?' என்று (ஆச்சரியத்துடன்) கேட்டார்.
'நான்தான் மூஸா' என்று அவர் கூறினார். கிழ்ர், 'பனீ இஸ்ராயீல்களின் மூஸாவா?' என்று கேட்க, மூஸா (அலை) 'ஆம்' என்றார்.
தொடர்ந்து மூஸா (அலை), 'உமக்குக் கற்றுத்தரப்பட்ட நேர்வழியை, எனக்கு நீர் கற்றுத்தரும் பொருட்டு நான் உம்மைப் பின்தொடரலாமா?' என்று கேட்டார்.
அதற்கவர், 'என்னுடன் இருக்க உம்மால் பொறுமை காக்க முடியாது. மூஸாவே! உமக்கு அறிவிக்கப்படாத, அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த இறைஞானம் என்னிடம் உள்ளது. (அதுபோல்) எனக்கு அறிவிக்கப்படாத, அல்லாஹ் உமக்குக் கற்றுத்தந்த இறைஞானம் உம்மிடம் உள்ளது' என்று கூறினார்.
அதற்கு மூஸா (அலை), 'அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்; உமது எந்தக் கட்டளைக்கும் நான் மாறு செய்யமாட்டேன்' என்று கூறினார்.
பிறகு இருவரும் கடற்கரையோரமாக நடந்தார்கள். அவர்களுக்குப் படகு ஏதும் இருக்கவில்லை. அப்போது (அந்த வழியாக) ஒரு படகு வந்தது. தங்களை ஏற்றிக்கொள்ளுமாறு அவர்கள் படகோட்டிகளிடம் பேசினார்கள். கிழ்ரை அடையாளம் கண்டுகொண்ட அவர்கள், கூலி ஏதுமின்றி அவர்களை ஏற்றிக்கொண்டார்கள்.
அப்போது சிட்டுக்குருவி ஒன்று வந்து படகின் விளிம்பில் அமர்ந்து, கடலில் ஒன்று அல்லது இரண்டு முறை தன் அலகால் கொத்தியது (நீரைக் குடித்தது).
கிழ்ர் (அலை), 'மூஸாவே! இந்தக் குருவி கடலில் (தன் அலகால்) குறைத்த அளவேயன்றி, என் அறிவும் உமது அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து எதையும் குறைத்துவிடவில்லை' என்று கூறினார்.
பிறகு கிழ்ர் அந்தப் படகின் பலகைகளில் ஒன்றை கழற்றிவிட்டார். இதைக் கண்ட மூஸா (அலை), 'கூலி ஏதுமின்றி நம்மை ஏற்றி வந்த இவர்களது படகில் உள்ளவர்களை மூழ்கடிப்பதற்காகவா நீர் இதில் ஓட்டையிட்டீர்?' என்று கேட்டார்.
அதற்கவர், 'என்னுடன் இருக்க உம்மால் பொறுமை காக்க முடியாது என்று நான் கூறவில்லையா?' என்றார். அதற்கு மூஸா (அலை), 'நான் மறந்துவிட்டதற்காக என்னைக் குற்றம் பிடிக்காதீர்' என்று கூறினார். இது மூஸாவிடமிருந்து ஏற்பட்ட முதலாவது மறதியாகும்.
பிறகு இருவரும் நடந்தனர். அங்கே சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை கிழ்ர் (அலை) கண்டார். அவனது தலையை மேலிருந்து பிடித்து (உயிரைப் போக்கி)க் கொன்றார்.
மூஸா (அலை), '(கொலைக்குப் பழி வாங்கும் விதத்திலன்றி) அநியாயமாக ஒருத் தூய ஆன்மாவை நீர் கொன்றுவிட்டீரே!' என்று கேட்டார். அதற்கவர், 'என்னுடன் இருக்க உம்மால் பொறுமை காக்க முடியாது என்று நான் உமக்குக் கூறவில்லையா?' என்றார்.
பிறகு இருவரும் நடந்தனர். ஓர் ஊரை அடைந்த அவர்கள், அங்கிருந்தவர்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால் அவ்வூரார் இவர்களுக்கு விருந்தளிக்க மறுத்துவிட்டனர். அந்த ஊரில் சாய்ந்து விழும் நிலையில் இருந்த ஒரு சுவரை அவர்கள் கண்டனர். கிழ்ர் (அலை) அதைத் தம் கையால் நிமிர்த்தி வைத்தார்.
இதைக் கண்ட மூஸா (அலை), 'நீர் நாடியிருந்தால் இதற்குக் கூலி வாங்கியிருக்கலாமே!' என்றார். அதற்கு கிழ்ர் (அலை), 'இதுதான் எனக்கும் உமக்குமான பிரிவு' என்று கூறினார்."
நபி (ஸல்) அவர்கள் (இதை விவரித்த பின்), "அல்லாஹ் மூஸாவுக்கு கருணை புரிவானாக! அவர் பொறுமையாக இருந்திருந்தால், அவ்விருவரின் விபரங்களும் நமக்கு (மேலும்) விவரிக்கப்பட்டிருக்கும் என்று நாம் ஆசைப்படுகிறோம்" என்று கூறினார்கள்.