صحيح البخاري

86. كتاب الحدود

ஸஹீஹுல் புகாரி

86. அல்லாஹ் நிர்ணயித்த எல்லைகளும் தண்டனைகளும் (ஹுதூத்)

باب لاَ يُشْرَبُ الْخَمْرُ
விபச்சாரமும் மதுபானம் அருந்துவதும்
حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ وَهْوَ مُؤْمِنٌ ‏ ‏‏.‏ وَعَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ، إِلاَّ النُّهْبَةَ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு விபச்சாரக்காரன் முறையற்ற தாம்பத்திய உறவு கொள்ளும்போது, அப்போது அவன் அதைச் செய்யும்போது ஒரு முஃமினாக இருப்பதில்லை; மேலும், ஒருவர் மதுபானம் அருந்தும்போது, அப்போது அவர் அருந்தும்போது ஒரு முஃமினாக இருப்பதில்லை; மேலும், ஒரு திருடன் திருடும்போது, அவன் திருடும்போது ஒரு முஃமினாக இருப்பதில்லை; மேலும், ஒரு கொள்ளைக்காரன், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளையடிக்கும்போது, அப்போது அவன் அதைச் செய்யும்போது ஒரு முஃமினாக இருப்பதில்லை."

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் மற்றொரு அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதையே, கொள்ளை பற்றிய பகுதியைத் தவிர்த்து அறிவித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَا جَاءَ فِي ضَرْبِ شَارِبِ الْخَمْرِ
குடிபோதையில் இருப்பவரை அடிப்பது குறித்து என்ன கூறப்படுகிறது?
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ح حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ضَرَبَ فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு குடிகாரரை பேரீச்சை மட்டைகளாலும் காலணிகளாலும் அடித்தார்கள். மேலும் அபூபக்ர் (ரழி) அவர்கள் (அத்தகைய பாவிக்கு) நாற்பது கசையடிகள் கொடுத்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَنْ أَمَرَ بِضَرْبِ الْحَدِّ فِي الْبَيْتِ
யார் சட்டப்பூர்வ தண்டனையை வீட்டில் நிறைவேற்றுமாறு உத்தரவிட்டாரோ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ جِيءَ بِالنُّعَيْمَانِ أَوْ بِابْنِ النُّعَيْمَانِ شَارِبًا، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ كَانَ بِالْبَيْتِ أَنْ يَضْرِبُوهُ‏.‏ قَالَ فَضَرَبُوهُ، فَكُنْتُ أَنَا فِيمَنْ ضَرَبَهُ بِالنِّعَالِ‏.‏
உக்பா பின் அல்-ஹாரிஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அந்-நுஃமான் அல்லது அந்-நுஃமானின் மகன் குடித்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்.

எனவே, நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இருந்த அனைத்து ஆண்களையும் அவரை அடிக்குமாறு கட்டளையிட்டார்கள்.

எனவே, அவர்கள் அனைவரும் அவரை அடித்தார்கள், காலணிகளால் அவரை அடித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الضَّرْبِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ
பேரீச்சம் பனை இலைகளின் தண்டுகள் மற்றும் காலணிகளால் அடித்தல்.
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِنُعَيْمَانَ أَوْ بِابْنِ نُعَيْمَانَ وَهْوَ سَكْرَانُ فَشَقَّ عَلَيْهِ، وَأَمَرَ مَنْ فِي الْبَيْتِ أَنْ يَضْرِبُوهُ، فَضَرَبُوهُ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَكُنْتُ فِيمَنْ ضَرَبَهُ‏.‏
`உக்பா பின் அல்-ஹாரித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அந்-நுஃமான் அல்லது அந்-நுஃமானின் மகன் போதையில் இருந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதனால் பெரிதும் வருத்தமுற்று (கோபமுற்றார்கள்) மேலும் வீட்டில் இருந்த அனைவரையும் அவரை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவர்களும் அவரை பேரீச்சை மட்டைகளாலும் செருப்புகளாலும் அடித்தார்கள், மேலும் அவரை அடித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ جَلَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதையில் இருந்த ஒருவரை பேரீச்ச மட்டைகளாலும் செருப்புகளாலும் அடித்தார்கள். மேலும் அபூபக்கர் (ரழி) அவர்கள் போதையில் இருந்த ஒருவருக்கு நாற்பது கசையடிகள் கொடுத்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، أَنَسٌ عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِرَجُلٍ قَدْ شَرِبَ قَالَ ‏"‏ اضْرِبُوهُ ‏"‏‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ فَمِنَّا الضَّارِبُ بِيَدِهِ، وَالضَّارِبُ بِنَعْلِهِ، وَالضَّارِبُ بِثَوْبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ بَعْضُ الْقَوْمِ أَخْزَاكَ اللَّهُ‏.‏ قَالَ ‏"‏ لاَ تَقُولُوا هَكَذَا لاَ تُعِينُوا عَلَيْهِ الشَّيْطَانَ ‏"‏‏.‏
அபூ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள், "மது அருந்திய ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அவரை அடியுங்கள்!' என்று கூறினார்கள்." அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள், "ஆகவே, எங்களில் சிலர் அவரைத் தங்கள் கைகளாலும், சிலர் தங்கள் காலணிகளாலும், சிலர் தங்கள் ஆடைகளை (முறுக்கி) சாட்டை போன்று அடித்தார்கள், பின்னர் நாங்கள் முடித்ததும், ஒருவர் அவரிடம், 'அல்லாஹ் உன்னை இழிவுபடுத்துவானாக!' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'அவ்வாறு கூறாதீர்கள், ஏனெனில் நீங்கள் ஷைத்தானுக்கு அவர் மீது ஆதிக்கம் செலுத்த உதவுகிறீர்கள்.'"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، سَمِعْتُ عُمَيْرَ بْنَ سَعِيدٍ النَّخَعِيَّ، قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ قَالَ مَا كُنْتُ لأُقِيمَ حَدًّا عَلَى أَحَدٍ فَيَمُوتَ، فَأَجِدَ فِي نَفْسِي، إِلاَّ صَاحِبَ الْخَمْرِ، فَإِنَّهُ لَوْ مَاتَ وَدَيْتُهُ، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَسُنَّهُ‏.‏
`அலீ பின் அபீ தாலிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

சட்டப்பூர்வமான தண்டனையைப் பெற்றதன் காரணமாக இறப்பவருக்காக நான் வருத்தப்படமாட்டேன், குடிகாரரைத் தவிர; ஏனெனில், அவர் (தண்டிக்கப்படும்போது) இறந்துவிட்டால், நான் அவரது குடும்பத்திற்கு இரத்தப் பணத்தை (நஷ்டஈட்டை) கொடுப்பேன், ஏனெனில் குடிகாரருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தவொரு நிர்ணயிக்கப்பட்ட தண்டனையையும் விதிக்கவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ الْجُعَيْدِ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كُنَّا نُؤْتَى بِالشَّارِبِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَإِمْرَةِ أَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ خِلاَفَةِ عُمَرَ، فَنَقُومُ إِلَيْهِ بِأَيْدِينَا وَنِعَالِنَا وَأَرْدِيَتِنَا، حَتَّى كَانَ آخِرُ إِمْرَةِ عُمَرَ، فَجَلَدَ أَرْبَعِينَ، حَتَّى إِذَا عَتَوْا وَفَسَقُوا جَلَدَ ثَمَانِينَ‏.‏
அஸ்-ஸாயிப் பின் யஸீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளிலும், அபூபக்ர் (ரழி) அவர்களின் கிலாஃபத்திலும், உமர் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் ஆரம்பக் காலத்திலும் நாங்கள் குடிகாரர்களை எங்கள் கைகளாலும், காலணிகளாலும், ஆடைகளாலும் (அவற்றை சவுக்கைப் போன்று முறுக்கி) அடிப்போம்.

ஆனால் உமர் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் இறுதிக் காலத்தில், அவர்கள் குடிகாரருக்கு நாற்பது கசையடிகள் கொடுப்பார்கள்; மேலும், குடிகாரர்கள் விஷமிகளாகவும் கீழ்ப்படியாதவர்களாகவும் ஆனபோது, அவர்கள் எண்பது கசையடிகள் கொடுப்பார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَا يُكْرَهُ مِنْ لَعْنِ شَارِبِ الْخَمْرِ وَإِنَّهُ لَيْسَ بِخَارِجٍ مِنَ الْمِلَّةِ
குடிகாரனை சபிப்பது வெறுக்கத்தக்கதாகும், மேலும் அவர் முஸ்லிம் அல்லாதவராக கருதப்படுவதில்லை
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَجُلاً، عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ اسْمُهُ عَبْدَ اللَّهِ، وَكَانَ يُلَقَّبُ حِمَارًا، وَكَانَ يُضْحِكُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ جَلَدَهُ فِي الشَّرَابِ، فَأُتِيَ بِهِ يَوْمًا فَأَمَرَ بِهِ فَجُلِدَ، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ اللَّهُمَّ الْعَنْهُ مَا أَكْثَرَ مَا يُؤْتَى بِهِ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ تَلْعَنُوهُ، فَوَاللَّهِ مَا عَلِمْتُ أَنَّهُ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ ‏ ‏‏.‏
உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில், அப்துல்லாஹ் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதர் இருந்தார், அவரின் புனைப்பெயர் கழுதை என்பதாகும், மேலும் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார். நபி (ஸல்) அவர்கள் (மது) அருந்திய காரணத்தால் அவருக்கு கசையடி கொடுத்தார்கள். மேலும் ஒரு நாள் அவர் அதே குற்றச்சாட்டின் பேரில் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார், மேலும் கசையடி கொடுக்கப்பட்டார். அதன்பேரில், மக்களில் ஒருவர், "அல்லாஹ்வே, இவனை சபிப்பாயாக! இவன் எத்தனை முறை (இத்தகைய குற்றச்சாட்டில் நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டுள்ளான்!" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "இவனை சபிக்காதீர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக, இவன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறான் என்பதை நான் அறிவேன்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا ابْنُ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَكْرَانَ، فَأَمَرَ بِضَرْبِهِ، فَمِنَّا مَنْ يَضْرِبُهُ بِيَدِهِ، وَمِنَّا مَنْ يَضْرِبُهُ بِنَعْلِهِ، وَمِنَّا مَنْ يَضْرِبُهُ بِثَوْبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ رَجُلٌ مَالَهُ أَخْزَاهُ اللَّهُ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ تَكُونُوا عَوْنَ الشَّيْطَانِ عَلَى أَخِيكُمْ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு குடிகாரர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார், அவருக்கு கசையடி கொடுக்குமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள். எங்களில் சிலர் அவரைத் தங்கள் கைகளாலும், சிலர் தங்கள் காலணிகளாலும், சிலர் தங்கள் ஆடைகளாலும் (கசையாக சுருட்டப்பட்ட வடிவில்) அடித்தார்கள். அந்த குடிகாரர் சென்றதும், ஒரு மனிதர், "அவருக்கு என்ன ஆனது? அல்லாஹ் அவரை இழிவுபடுத்துவானாக!" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்கள் (முஸ்லிம்) சகோதரருக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவாதீர்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب السَّارِقِ حِينَ يَسْرِقُ
திருடும்போது திருடன்
حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ غَزْوَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ ‏ ‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு விபச்சாரக்காரர் சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொள்ளும்போது, அவர் அதைச் செய்யும் நேரத்தில் ஒரு நம்பிக்கையாளராக இருப்பதில்லை; மேலும் ஒருவர் திருடும்போது, அவர் திருடும் நேரத்தில் ஒரு நம்பிக்கையாளராக இருப்பதில்லை."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب لَعْنِ السَّارِقِ إِذَا لَمْ يُسَمَّ
திருடர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர்களை சபிப்பது
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لَعَنَ اللَّهُ السَّارِقَ، يَسْرِقُ الْبَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ، وَيَسْرِقُ الْحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ ‏ ‏‏.‏ قَالَ الأَعْمَشُ كَانُوا يَرَوْنَ أَنَّهُ بَيْضُ الْحَدِيدِ، وَالْحَبْلُ كَانُوا يَرَوْنَ أَنَّهُ مِنْهَا مَا يَسْوَى دَرَاهِمَ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு முட்டையைத் திருடி அதற்காகத் தன் கை துண்டிக்கப்படுகிறானோ அல்லது ஒரு கயிற்றைத் திருடி அதற்காகத் தன் கைகள் துண்டிக்கப்படுகிறானோ அத்தகைய மனிதனை அல்லாஹ் சபிக்கிறான்."

அல்-அஃமஷ் அவர்கள் கூறினார்கள், "மக்கள் 'பைதா'வை இரும்புத் தலைக்கவசம் என்று வியாக்கியானம் செய்து வந்தார்கள். மேலும், அந்தக் கயிறு சில திர்ஹங்கள் மதிப்புடையதாக இருக்கலாம் என்றும் அவர்கள் எண்ணி வந்தார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْحُدُودُ كَفَّارَةٌ
அல்-ஹுதூத் பாவப்பரிகாரமாகும்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي مَجْلِسٍ فَقَالَ ‏"‏ بَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزْنُوا ‏"‏‏.‏ وَقَرَأَ هَذِهِ الآيَةَ كُلَّهَا ‏"‏ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ بِهِ، فَهْوَ كَفَّارَتُهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا، فَسَتَرَهُ اللَّهُ عَلَيْهِ، إِنْ شَاءَ غَفَرَ لَهُ، وَإِنْ شَاءَ عَذَّبَهُ ‏"‏‏.‏
உபாதா பின் அஸ்-ஸாமித் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் இருந்தோம், அப்போது அவர்கள் கூறினார்கள், 'அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் நீங்கள் வணங்கமாட்டீர்கள், திருடமாட்டீர்கள், சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொள்ளமாட்டீர்கள் என்றும் என்னிடம் பைஅத் (உறுதிமொழி) செய்யுங்கள்.' பின்னர் நபி (ஸல்) அவர்கள் அந்த முழு வசனத்தையும் (அதாவது 60:12) ஓதிக் காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள், 'உங்களில் எவர் தனது உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ, அவருடைய கூலி அல்லாஹ்விடம் உள்ளது; எவர் இத்தகைய பாவங்களில் எதையேனும் செய்து, அதற்கான சட்டப்பூர்வமான தண்டனையை (இவ்வுலகில்) பெறுகிறாரோ, அது அந்தப் பாவத்திற்கு பரிகாரமாக ஆகிவிடும்; எவர் இத்தகைய பாவங்களில் எதையேனும் செய்து, அல்லாஹ் அதனை (மக்களுக்குத் தெரியாமல்) மறைத்துவிடுகிறானோ, அவரை மன்னிப்பதா அல்லது தண்டிப்பதா என்பது அல்லாஹ்வின் விருப்பமாகும்.'

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب ظَهْرُ الْمُؤْمِنِ حِمًى، إِلاَّ فِي حَدٍّ أَوْ حَقٍّ
ஒரு விசுவாசி பாதுகாப்பாக இருக்கிறார், அவர் அல்லாஹ்வின் சட்ட எல்லைகளை மீறினாலோ அல்லது மற்றவர்களின் உரிமைகளை எடுத்துக் கொண்டாலோ தவிர
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، سَمِعْتُ أَبِي قَالَ عَبْدُ اللَّهِ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ ‏"‏ أَلاَ أَىُّ شَهْرٍ تَعْلَمُونَهُ أَعْظَمُ حُرْمَةً ‏"‏‏.‏ قَالُوا أَلاَ شَهْرُنَا هَذَا‏.‏ قَالَ ‏"‏ أَلاَ أَىُّ بَلَدٍ تَعْلَمُونَهُ أَعْظَمُ حُرْمَةً ‏"‏‏.‏ قَالُوا أَلاَ بَلَدُنَا هَذَا‏.‏ قَالَ ‏"‏ أَلاَ أَىُّ يَوْمٍ تَعْلَمُونَهُ أَعْظَمُ حُرْمَةً ‏"‏‏.‏ قَالُوا أَلاَ يَوْمُنَا هَذَا‏.‏ قَالَ ‏"‏ فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَدْ حَرَّمَ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ، إِلاَّ بِحَقِّهَا، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، أَلاَ هَلْ بَلَّغْتُ ‏"‏‏.‏ ـ ثَلاَثًا كُلُّ ذَلِكَ يُجِيبُونَهُ أَلاَ نَعَمْ ـ قَالَ ‏"‏ وَيْحَكُمْ ـ أَوْ وَيْلَكُمْ ـ لاَ تَرْجِعُنَّ بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ ‏"‏‏.‏
`அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் வதாஉவில் கூறினார்கள், "எந்த மாதம் (வருடத்தில்) மிகவும் புனிதமானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?" மக்கள், "எங்களுடைய இந்த தற்போதைய மாதம் (துல்-ஹஜ் மாதம்)." என்று கூறினார்கள். அவர்கள் (ஸல்) கூறினார்கள், "எந்த ஊர் (நாடு) மிகவும் புனிதமானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?" அவர்கள், "எங்களுடைய இந்த நகரம் (மக்கா)." என்று கூறினார்கள். அவர்கள் (ஸல்) கூறினார்கள், "எந்த நாள் மிகவும் புனிதமானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?" மக்கள், "எங்களுடைய இந்த நாள்." என்று கூறினார்கள். பின்னர் அவர்கள் (ஸல்) கூறினார்கள், "அல்லாஹ், பாக்கியம் பெற்றவன், உன்னதமானவன், உங்களுடைய இரத்தத்தையும், உங்களுடைய சொத்துக்களையும், உங்களுடைய கண்ணியத்தையும் உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த ஊரில், உங்களுடைய இந்த நாளைப் போன்று புனிதமானதாக ஆக்கியிருக்கிறான் (மேலும் அத்தகைய பாதுகாப்பை அலட்சியப்படுத்த முடியாது) நியாயமான முறையில் அன்றி." பின்னர் அவர்கள் (ஸல்) மூன்று முறை, "அல்லாஹ்வின் செய்தியை நான் (உங்களுக்கு) அறிவித்துவிட்டேனா?" என்று கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள், 'அல்லாஹ் உங்களுக்கு கருணை காட்டுவானாக (அல்லது, உங்களுக்குக் கேடுண்டாகட்டும்)! எனக்குப் பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் கழுத்தை வெட்டி காஃபிர்களாக மாறிவிடாதீர்கள்.'

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِقَامَةِ الْحُدُودِ وَالاِنْتِقَامِ لِحُرُمَاتِ اللَّهِ
அல்லாஹ்வின் எல்லைகளையும் வரம்புகளையும் மீறுபவர்களுக்கு சட்டப்பூர்வமான தண்டனையை நிறைவேற்றவும்; மற்றும் பழிவாங்கவும்
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا خُيِّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ أَمْرَيْنِ إِلاَّ اخْتَارَ أَيْسَرَهُمَا، مَا لَمْ يَأْثَمْ، فَإِذَا كَانَ الإِثْمُ كَانَ أَبْعَدَهُمَا مِنْهُ، وَاللَّهِ مَا انْتَقَمَ لِنَفْسِهِ فِي شَىْءٍ يُؤْتَى إِلَيْهِ قَطُّ، حَتَّى تُنْتَهَكَ حُرُمَاتُ اللَّهِ، فَيَنْتَقِمُ لِلَّهِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு விஷயங்களுக்கு இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டால், அது பாவமானதாக இல்லாத வரை அவர்கள் இரண்டில் எளிதானதையே தேர்ந்தெடுப்பார்கள்; ஆனால் அது பாவமானதாக இருந்தால், அவர்கள் அதிலிருந்து வெகு தொலைவில் விலகி இருப்பார்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக, தங்களுக்கு முன்வைக்கப்பட்ட எந்தவொரு விஷயத்திலும் அவர்கள் தமக்காக ஒருபோதும் பழிவாங்கியதில்லை. ஆனால், அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்பட்டால், அவர்கள் அல்லாஹ்வுக்காக பழிவாங்குவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِقَامَةِ الْحُدُودِ عَلَى الشَّرِيفِ وَالْوَضِيعِ
மேன்மக்கள் மற்றும் பலவீனமானவர்கள் மீது சட்டப்படியான தண்டனையை நிறைவேற்றுவது
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُسَامَةَ، كَلَّمَ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي امْرَأَةٍ فَقَالَ ‏ ‏ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا يُقِيمُونَ الْحَدَّ عَلَى الْوَضِيعِ، وَيَتْرُكُونَ الشَّرِيفَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ فَاطِمَةُ فَعَلَتْ ذَلِكَ لَقَطَعْتُ يَدَهَا ‏ ‏‏.‏
`ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:`

`உஸாமா (ரழி) அவர்கள் (திருடிய) ஒரு பெண்ணுக்காக நபி (ஸல்) அவர்களை அணுகினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களுக்கு முன் இருந்த மக்கள் அழிக்கப்பட்டார்கள், ஏனெனில் அவர்கள் ஏழைகள் மீது சட்டப்பூர்வ தண்டனைகளை விதித்து வந்தார்கள் மற்றும் பணக்காரர்களை மன்னித்து வந்தார்கள். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! ஃபாத்திமா (ரழி) (நபி (ஸல்) அவர்களின் மகள்) அதைச் செய்தாலும் (அதாவது திருடினாலும்), நான் அவளுடைய கையை வெட்டிவிடுவேன்."`

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب كَرَاهِيَةِ الشَّفَاعَةِ فِي الْحَدِّ، إِذَا رُفِعَ إِلَى السُّلْطَانِ
சட்டப்பூர்வமான தண்டனை விஷயத்தில் பரிந்துரை செய்வது பரிந்துரைக்கப்படவில்லை
حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ قُرَيْشًا، أَهَمَّتْهُمُ الْمَرْأَةُ الْمَخْزُومِيَّةُ الَّتِي سَرَقَتْ فَقَالُوا مَنْ يُكَلِّمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلاَّ أُسَامَةُ حِبُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ فَكَلَّمَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ‏"‏‏.‏ ثُمَّ قَامَ فَخَطَبَ قَالَ ‏"‏ يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا ضَلَّ مَنْ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ الضَّعِيفُ فِيهِمْ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعَ مُحَمَّدٌ يَدَهَا ‏"‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

திருடியிருந்த மக்ஸுமிய்யா கோத்திரத்துப் பெண்மணி குறித்து குரைஷி மக்கள் மிகவும் கவலைப்பட்டனர்.

அவர்கள் கூறினார்கள், "(அந்தப் பெண்மணிக்குச் சாதகமாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யாரும் பேச முடியாது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரியத்திற்குரியவரான உஸாமா (ரழி) அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு செய்யத் துணியவும் மாட்டார்கள்."

உஸாமா (ரழி) அவர்கள் அந்த விஷயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேசியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றை மீறுமாறு (என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாயா?"

பிறகு அவர்கள் எழுந்து மக்களுக்கு உரையாற்றினார்கள், "மக்களே! உங்களுக்கு முன்னிருந்த சமுதாயங்கள் வழிதவறிப் போனார்கள்; ஏனெனில், அவர்களில் கண்ணியமான ஒருவர் திருடிவிட்டால், அவரை அவர்கள் விட்டுவிடுவார்கள்; ஆனால், அவர்களில் பலவீனமான ஒருவர் திருடிவிட்டால், அவருக்கு அவர்கள் சட்டப்படியான தண்டனையை நிறைவேற்றுவார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக, முஹம்மது (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரழி) திருடியிருந்தாலும், முஹம்மது (ஸல்) அவளது கரத்தைத் துண்டிப்பார்!"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا}
"திருடன் மற்றும் திருடியின் கைகளை வெட்டுங்கள்..."
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ تُقْطَعُ الْيَدُ فِي رُبُعِ دِينَارٍ فَصَاعِدًا ‏ ‏‏.‏ تَابَعَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ وَمَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "கால் தீனார் அல்லது அதற்கு அதிகமான மதிப்புள்ள பொருளைத் திருடியதற்காக கை துண்டிக்கப்பட வேண்டும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَعَمْرَةَ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبُعِ دِينَارٍ ‏ ‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "கால் தீனார் திருடியதற்காக திருடனின் கை துண்டிக்கப்பட வேண்டும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا الْحُسَيْنُ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الأَنْصَارِيِّ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَتْهُ أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ حَدَّثَتْهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ يُقْطَعُ فِي رُبُعِ دِينَارٍ ‏ ‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "கால் தீனார் திருடியதற்காக கை துண்டிக்கப்பட வேண்டும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ أَخْبَرَتْنِي عَائِشَةُ، أَنَّ يَدَ السَّارِقِ، لَمْ تُقْطَعْ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ فِي ثَمَنِ مِجَنٍّ حَجَفَةٍ أَوْ تُرْسٍ‏.‏
حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، مِثْلَهُ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில், ஒரு கேடயத்தின் மதிப்புக்குச் சமமான ஒன்றைத் திருடியதற்காகவே அன்றி, திருடனின் கை வெட்டப்படவில்லை.

இதே போன்ற ஹதீஸ் ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمْ تَكُنْ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي أَدْنَى مِنْ حَجَفَةٍ أَوْ تُرْسٍ، كُلُّ وَاحِدٍ مِنْهُمَا ذُو ثَمَنٍ‏.‏ رَوَاهُ وَكِيعٌ وَابْنُ إِدْرِيسَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ مُرْسَلاً‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு ஹஜஃபா அல்லது ஒரு துர்ஸ் (இரண்டு வகையான கேடயங்கள்) ஆகியவற்றை விட குறைந்த மதிப்புள்ள பொருளைத் திருடியதற்காக ஒரு திருடனின் கை துண்டிக்கப்படவில்லை; அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு (கணிசமான) விலை மதிப்புடையதாக இருந்தது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنِي يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ هِشَامُ بْنُ عُرْوَةَ أَخْبَرَنَا عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمْ تُقْطَعْ يَدُ سَارِقٍ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي أَدْنَى مِنْ ثَمَنِ الْمِجَنِّ، تُرْسٍ أَوْ حَجَفَةٍ، وَكَانَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا ذَا ثَمَنٍ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

டர்ஸ் அல்லது ஹஜஃபா (இரு வகைக் கேடயங்கள்) எதுவாக இருந்தாலும், ஒவ்வொன்றும் (கணிசமான) விலையுடையதான ஒரு கேடயத்தின் விலையை விடக் குறைந்த மதிப்புள்ள ஒன்றைத் திருடியதற்காக, ஒரு திருடனின் கை துண்டிக்கப்படவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَطَعَ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ‏.‏
تَابَعَهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي نَافِعٌ قِيمَتُهُ
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் மதிப்புள்ள ஒரு கேடயத்தைத் திருடியதற்காக ஒரு திருடனின் கையை வெட்டினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَطَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹம்கள் மதிப்புள்ள ஒரு கேடயத்தைத் திருடியதற்காக ஒரு திருடனின் கையைத் துண்டித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَطَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ‏.‏
`அப்துல்லாஹ் பின் `உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹம்கள் மதிப்புள்ள ஒரு கேடயத்தைத் திருடியதற்காக ஒரு திருடனின் கையை வெட்டினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَطَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَ سَارِقٍ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ‏.‏ تَابَعَهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي نَافِعٌ ‏ ‏ قِيمَتُهُ ‏ ‏‏.‏
`அப்துல்லாஹ் பின் `உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் மதிப்புள்ள ஒரு கேடயத்தைத் திருடியதற்காக ஒரு திருடனின் கையைத் துண்டித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لَعَنَ اللَّهُ السَّارِقَ، يَسْرِقُ الْبَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ، وَيَسْرِقُ الْحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் அந்தத் திருடனை சபிக்கிறான்; எவன் ஒரு முட்டையை (அல்லது தலைக்கவசத்தை) திருடி, அதற்காக அவனது கை துண்டிக்கப்படுமோ, அல்லது ஒரு கயிற்றைத் திருடி, அதற்காக அவனது கை துண்டிக்கப்படுமோ."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب تَوْبَةِ السَّارِقِ
திருடனின் பாவமன்னிப்பு
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَطَعَ يَدَ امْرَأَةٍ‏.‏ قَالَتْ عَائِشَةُ وَكَانَتْ تَأْتِي بَعْدَ ذَلِكَ، فَأَرْفَعُ حَاجَتَهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَتَابَتْ وَحَسُنَتْ تَوْبَتُهَا‏.‏
`ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:`

`நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணின் கையைத் துண்டித்தார்கள்; மேலும் அந்தப் பெண் என்னிடம் வருவதும், நான் அவருடைய செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பதும் வழக்கமாக இருந்தது; மேலும் அவர் தவ்பா செய்துகொண்டார், அவருடைய தவ்பாவும் உண்மையானதாக இருந்தது.`

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ـ رضى الله عنه ـ قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَهْطٍ، فَقَالَ ‏ ‏ أُبَايِعُكُمْ عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ، وَلاَ تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلاَ تَعْصُونِي فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَأُخِذَ بِهِ فِي الدُّنْيَا فَهْوَ كَفَّارَةٌ لَهُ وَطَهُورٌ، وَمَنْ سَتَرَهُ اللَّهُ فَذَلِكَ إِلَى اللَّهِ، إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ ‏ ‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ إِذَا تَابَ السَّارِقُ بَعْدَ مَا قُطِعَ يَدُهُ، قُبِلَتْ شَهَادَتُهُ، وَكُلُّ مَحْدُودٍ كَذَلِكَ إِذَا تَابَ قُبِلَتْ شَهَادَتُهُ‏.‏
உபாதா பின் அஸ்-ஸாமித் (ரழி) அறிவித்தார்கள்:
நான் ஒரு குழுவினருடன் நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் (உறுதிமொழி) அளித்தேன். அப்போது அவர்கள் (ஸல்) கூறினார்கள்: "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்க மாட்டீர்கள்; திருட மாட்டீர்கள்; சிசுக்கொலை செய்ய மாட்டீர்கள்; பொய்க் கூற்றுக்களை இட்டுக்கட்டிப் பரப்பி மற்றவர்களைப் பழிதூற்ற மாட்டீர்கள்; மேலும் எந்தவொரு நன்மையான காரியத்திலும் எனக்கு மாறு செய்ய மாட்டீர்கள் என்று உங்களிடமிருந்து நான் உறுதிமொழி வாங்குகிறேன். உங்களில் எவர் இவை அனைத்தையும் (உறுதிமொழியின் கடமைகளை) நிறைவேற்றுகிறார்களோ, அவருடைய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது. மேலும் மேற்கூறிய குற்றங்களில் எதையாவது செய்து, இவ்வுலகில் அதற்கான சட்டப்பூர்வ தண்டனையைப் பெறுகிறாரோ, அது அவருக்குப் பரிகாரமாகவும் தூய்மையாகவும் ஆகிவிடும். ஆனால் அல்லாஹ் அவருடைய பாவத்தை மறைத்துவிட்டால், அது அல்லாஹ்வைப் பொறுத்தது; அவன் (அல்லாஹ்) நாடினால் அவரைத் தண்டிப்பான் அல்லது மன்னிப்பான்."

அபூ அப்துல்லாஹ் கூறினார்கள்: "ஒரு திருடனின் கை துண்டிக்கப்பட்ட பிறகு அவன் திருந்தினால், அவனுடைய சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வாறே, சட்டப்பூர்வ தண்டனை விதிக்கப்பட்ட எவரேனும் திருந்தினால், அவனுடைய சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
بَابُ المحاربين من أهل الكفر والردة
நிராகரிப்பாளர்களில் போர் தொடுப்பவர்கள் மற்றும் மதம் மாறியவர்கள் பற்றிய அத்தியாயம்
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو قِلاَبَةَ الْجَرْمِيُّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم نَفَرٌ مِنْ عُكْلٍ، فَأَسْلَمُوا فَاجْتَوَوُا الْمَدِينَةَ، فَأَمَرَهُمْ أَنْ يَأْتُوا إِبِلَ الصَّدَقَةِ، فَيَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا، فَفَعَلُوا فَصَحُّوا، فَارْتَدُّوا وَقَتَلُوا رُعَاتَهَا وَاسْتَاقُوا، فَبَعَثَ فِي آثَارِهِمْ فَأُتِيَ بِهِمْ، فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَلَ أَعْيُنَهُمْ، ثُمَّ لَمْ يَحْسِمْهُمْ حَتَّى مَاتُوا‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

உக்ல் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தைத் தழுவினார்கள். மதீனாவின் காலநிலை அவர்களுக்கு ஒவ்வாததால், நபி (ஸல்) அவர்கள் தர்ம ஒட்டகங்களின் (பால் தரும்) மந்தைக்குச் சென்று, அவற்றின் பாலையும் சிறுநீரையும் (மருந்தாக) குடிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவர்கள் அவ்வாறே செய்தார்கள். பின்னர், அவர்கள் தங்கள் நோயிலிருந்து குணமடைந்து (ஆரோக்கியமாகி), மார்க்கத்தை விட்டு வெளியேறி (இஸ்லாத்திலிருந்து விலகி), ஒட்டகங்களின் மேய்ப்பரைக் கொன்று, ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து (சிலரை) அனுப்பினார்கள், அதனால் அவர்கள் (பிடிக்கப்பட்டு) கொண்டுவரப்பட்டார்கள், மேலும் நபி (ஸல்) அவர்கள் அவர்களுடைய கைகளும் கால்களும் துண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுடைய கண்களில் சூடேற்றப்பட்ட இரும்புத் துண்டுகளால் சூடு போடப்பட வேண்டும் என்றும், அவர்கள் இறக்கும் வரை, வெட்டப்பட்ட அவர்களுடைய கைகளுக்கும் கால்களுக்கும் சூடு போட்டு இரத்தம் நிறுத்தப்படக்கூடாது என்றும் கட்டளையிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب لَمْ يَحْسِمِ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُحَارِبِينَ مِنْ أَهْلِ الرِّدَّةِ حَتَّى هَلَكُوا‏.‏
போரிட்டவர்களையும் மதம் மாறியவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சூடிட்டுக் கொள்ளவில்லை
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ أَبُو يَعْلَى، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنِي الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَطَعَ الْعُرَنِيِّينَ وَلَمْ يَحْسِمْهُمْ حَتَّى مَاتُوا‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் உரைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஆண்களின் கைகளையும் கால்களையும் துண்டித்தார்கள்; மேலும், அவர்கள் இறக்கும் வரை (அவர்களின் இரத்தம் வழியும் காயங்களுக்கு) சூடு போடவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب لَمْ يُسْقَ الْمُرْتَدُّونَ الْمُحَارِبُونَ حَتَّى مَاتُوا
திருப்பி மாறியவர்களுக்கும் போரிட்டவர்களுக்கும் அவர்கள் இறக்கும் வரை தண்ணீர் கொடுக்கப்படவில்லை
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، عَنْ وُهَيْبٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ رَهْطٌ مِنْ عُكْلٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم كَانُوا فِي الصُّفَّةِ، فَاجْتَوَوُا الْمَدِينَةَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَبْغِنَا رِسْلاً‏.‏ فَقَالَ ‏ ‏ مَا أَجِدُ لَكُمْ إِلاَّ أَنْ تَلْحَقُوا بِإِبِلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏‏.‏ فَأَتَوْهَا فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا حَتَّى صَحُّوا وَسَمِنُوا، وَقَتَلُوا الرَّاعِيَ وَاسْتَاقُوا الذَّوْدَ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم الصَّرِيخُ، فَبَعَثَ الطَّلَبَ فِي آثَارِهِمْ، فَمَا تَرَجَّلَ النَّهَارُ حَتَّى أُتِيَ بِهِمْ، فَأَمَرَ بِمَسَامِيرَ فَأُحْمِيَتْ فَكَحَلَهُمْ وَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَمَا حَسَمَهُمْ، ثُمَّ أُلْقُوا فِي الْحَرَّةِ يَسْتَسْقُونَ فَمَا سُقُوا حَتَّى مَاتُوا‏.‏ قَالَ أَبُو قِلاَبَةَ سَرَقُوا وَقَتَلُوا وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

`உக்ல்` (கோத்திரத்தைச்) சேர்ந்த ஒரு குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள், மேலும் அவர்கள் அஸ்-ஸுஃப்பா மக்களுடன் வசித்து வந்தார்கள், ஆனால் மதீனாவின் காலநிலை அவர்களுக்கு ஒவ்வாததால் அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள், எனவே அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! எங்களுக்குப் பால் வழங்குங்கள்." நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதருடைய (ஸல்) ஒட்டகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியை நான் காணவில்லை." எனவே அவர்கள் சென்று ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் (மருந்தாக) அருந்தினார்கள், மேலும் ஆரோக்கியமாகவும் கொழுத்தும் போனார்கள். பின்னர் அவர்கள் மேய்ப்பரைக் கொன்றார்கள் மேலும் ஒட்டகங்களை ஓட்டிச் சென்றார்கள். உதவி தேடி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் சிலரை அவர்களைப் பின்தொடர அனுப்பினார்கள், மேலும் அவர்கள் நண்பகலுக்கு முன்பே பிடிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் சில இரும்புத் துண்டுகளை செக்கச்செவேலென சூடாக்க உத்தரவிட்டார்கள், மேலும் அவற்றால் அவர்களுடைய கண்களில் சூடு வைக்கப்பட்டது, அவர்களுடைய கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்டன, மேலும் சூடு வைத்து இரத்தம் நிறுத்தப்படவில்லை. பின்னர் அவர்கள் அல்-ஹர்ரா என்ற இடத்தில் விடப்பட்டார்கள், மேலும் அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டபோது, அவர்கள் இறக்கும் வரை அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

(அபூ கிலாபா அவர்கள் கூறினார்கள், "அந்த மக்கள் திருட்டு, கொலை ஆகியவற்றைச் செய்தார்கள், மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (ஸல்) எதிராகப் போரிட்டார்கள்.")

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب سَمْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَعْيُنَ الْمُحَارِبِينَ
அவர்களுடன் போரிட்டவர்களின் கண்களை நபி (ஸல்) அவர்கள் சூடிட்டார்கள்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَهْطًا، مِنْ عُكْلٍ ـ أَوْ قَالَ عُرَيْنَةَ وَلاَ أَعْلَمُهُ إِلاَّ قَالَ مِنْ عُكْلٍ ـ قَدِمُوا الْمَدِينَةَ، فَأَمَرَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلِقَاحٍ، وَأَمَرَهُمْ أَنْ يَخْرُجُوا فَيَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا، فَشَرِبُوا حَتَّى إِذَا بَرِئُوا قَتَلُوا الرَّاعِيَ وَاسْتَاقُوا النَّعَمَ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم غُدْوَةً فَبَعَثَ الطَّلَبَ فِي إِثْرِهِمْ، فَمَا ارْتَفَعَ النَّهَارُ حَتَّى جِيءَ بِهِمْ، فَأَمَرَ بِهِمْ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَرَ أَعْيُنَهُمْ، فَأُلْقُوا بِالْحَرَّةِ يَسْتَسْقُونَ فَلاَ يُسْقَوْنَ‏.‏ قَالَ أَبُو قِلاَبَةَ هَؤُلاَءِ قَوْمٌ سَرَقُوا، وَقَتَلُوا، وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ، وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அறிவித்தார்கள்:
உக்ல் (அல்லது உரைனா) கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தினர் ----ஆனால் அவர்கள் உக்ல் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் சொன்னதாக நான் நினைக்கிறேன் மதீனாவிற்கு வந்தார்கள், மேலும் (அவர்கள் நோய்வாய்ப்பட்டதால்) நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு (பால் கறக்கும்) பெண் ஒட்டகங்களின் மந்தைக்குச் செல்லும்படியும், வெளியே சென்று ஒட்டகங்களின் சிறுநீரையும் பாலையும் (மருந்தாக) குடிக்கும்படியும் கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் சென்று அதைக் குடித்தார்கள், மேலும் அவர்கள் ஆரோக்கியம் அடைந்தபோது, அவர்கள் மேய்ப்பரைக் கொன்றுவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றார்கள். இந்தச் செய்தி அதிகாலையில் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது, எனவே அவர்கள் (சில) ஆட்களை அவர்களைப் பின்தொடர அனுப்பினார்கள், மேலும் அவர்கள் நண்பகலுக்கு முன்பே பிடிக்கப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டும்படியும், மேலும் அவர்களின் கண்களை சூடேற்றப்பட்ட இரும்புத் துண்டுகளால் சூடு வைக்கும்படியும் அவர்கள் கட்டளையிட்டார்கள், மேலும் அவர்கள் அல்-ஹர்ராவில் எறியப்பட்டார்கள், மேலும் அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டபோது, அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கப்படவில்லை. (அபூ கிலாபா (ரழி) கூறினார்கள், "அவர்கள் திருட்டு மற்றும் கொலை செய்த மக்கள், மேலும் விசுவாசிகளாக (முஸ்லிம்களாக) இருந்தபின் இறைமறுப்பிற்குத் திரும்பியவர்கள், மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கும் எதிராகப் போரிட்டவர்கள்").

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب فَضْلِ مَنْ تَرَكَ الْفَوَاحِشَ
அல்-ஃபவாஹிஷை விட்டு விலகுபவரின் மேன்மை
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ إِمَامٌ عَادِلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ فِي خَلاَءٍ فَفَاضَتْ عَيْنَاهُ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسْجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ إِلَى نَفْسِهَا قَالَ إِنِّي أَخَافُ اللَّهَ‏.‏ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا، حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا صَنَعَتْ يَمِينُهُ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் மறுமை நாளில், அவனுடைய நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத அந்நாளில், ஏழு (நபர்களுக்கு) தன்னுடைய நிழலால் நிழலளிப்பான். (அவர்கள் யாவரெனில்), நீதியான ஆட்சியாளர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் வளர்ந்த இளைஞன், தனிமையில் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து (அதனால்) அவருடைய கண்கள் கண்ணீரால் நிறையும் மனிதர், பள்ளிவாசல்களுடன் இதயம் தொடர்பு கொண்ட மனிதர் (கடமையான ஜமாஅத் தொழுகைகளை பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்), அல்லாஹ்வுக்காக ஒருவரையொருவர் நேசிக்கும் இருவர், மதிப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்த வசீகரமான ஒரு பெண் சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொள்ள அவரை அழைக்கும்போது, அவர், 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறும் மனிதர், (இறுதியாக), தம் வலக் கரம் கொடுக்கும் தர்மத்தை தம் இடக் கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்யும் மனிதர்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ‏.‏ وَحَدَّثَنِي خَلِيفَةُ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ تَوَكَّلَ لِي مَا بَيْنَ رِجْلَيْهِ وَمَا بَيْنَ لَحْيَيْهِ، تَوَكَّلْتُ لَهُ بِالْجَنَّةِ ‏ ‏‏.‏
ஸஹ்ல் பின் ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் ஒருவர் எனக்கு, தமது இரு கால்களுக்கு இடையில் உள்ளதன் (அதாவது, தமது மறைவுறுப்பின்) கற்பத்திற்கும், மற்றும் தமது இரு தாடைகளுக்கு இடையில் உள்ளதற்கும் (அதாவது, தமது நாவிற்கும்) பொறுப்பேற்கிறாரோ, அவருக்கு நான் சுவர்க்கத்திற்குப் பொறுப்பேற்கிறேன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِثْمِ الزُّنَاةِ
சட்டவிரோதமான தாம்பத்திய உறவின் பாவம்
أَخْبَرَنَا دَاوُدُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، أَخْبَرَنَا أَنَسٌ، قَالَ لأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لاَ يُحَدِّثُكُمُوهُ أَحَدٌ بَعْدِي، سَمِعْتُهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ لاَ تَقُومُ السَّاعَةُ ـ وَإِمَّا قَالَ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ ـ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَظْهَرَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ، حَتَّى يَكُونَ لِلْخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ ‏ ‏‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் உங்களுக்கு ஒரு செய்தியை அறிவிப்பேன், எனக்குப் பிறகு வேறு யாரும் அதை உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். நான் அதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "(யுகமுடிவு) நேரம் ஏற்படாது" அல்லது (இவ்வாறு) கூறினார்கள்: "(யுகமுடிவு) நேரத்தின் அடையாளங்களில் சில யாதெனில்: மார்க்கக் கல்வி (மார்க்க அறிஞர்களின் மரணத்தின் மூலம்) அகற்றப்படும்; மேலும் (மார்க்கம் பற்றிய) பொதுவான அறியாமை தோன்றும்; மேலும் மது அருந்துதல் மிக அதிகமாகப் பரவும்; மேலும் (வெளிப்படையான) முறைகேடான தாம்பத்திய உறவு பரவலாகும்; மேலும் ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுதியாகிவிடுவார்கள், எந்த அளவுக்கு என்றால், ஐம்பது பெண்களுக்கு அவர்களைக் கவனித்துக் கொள்வதற்கு ஒரேயொரு ஆண் மட்டுமே இருப்பார்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا الْفُضَيْلُ بْنُ غَزْوَانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ يَزْنِي الْعَبْدُ حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ حِينَ يَشْرَبُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَقْتُلُ وَهْوَ مُؤْمِنٌ ‏ ‏‏.‏ قَالَ عِكْرِمَةُ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ كَيْفَ يُنْزَعُ الإِيمَانُ مِنْهُ قَالَ هَكَذَا ـ وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ ثُمَّ أَخْرَجَهَا ـ فَإِنْ تَابَ عَادَ إِلَيْهِ هَكَذَا وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடமிருந்து இக்ரிமா அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "(அல்லாஹ்வின்) ஒரு அடியான் முறையற்ற தாம்பத்திய உறவு கொள்ளும்போது, அதைச் செய்யும்போது அவன் ஒரு விசுவாசியாக இருப்பதில்லை; மேலும் அவன் திருடினால், திருடும்போது அவன் ஒரு விசுவாசியாக இருப்பதில்லை; மேலும் அவன் மதுபானம் அருந்தினால், அதை அருந்தும்போது அவன் ஒரு விசுவாசியாக இருப்பதில்லை; மேலும் அவன் ஒரு கொலையைச் செய்யும்போது அவன் ஒரு விசுவாசியாக இருப்பதில்லை,"

இக்ரிமா கூறினார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம், "அவனிடமிருந்து ஈமான் (விசுவாசம்) எப்படி எடுக்கப்படுகிறது?" என்று கேட்டேன்.

அவர்கள் (இப்னு அப்பாஸ் (ரழி)) கூறினார்கள், "இவ்வாறு," தனது கைகளைக் கோர்த்துப் பின்னர் பிரித்துக் காட்டி, மேலும் கூறினார்கள், "ஆனால் அவன் தவ்பா (பாவமன்னிப்பு) செய்தால், ஈமான் (விசுவாசம்) அவனிடம் இவ்வாறு திரும்புகிறது," மீண்டும் தனது கைகளைக் கோர்த்துக் காட்டி.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ حِينَ يَشْرَبُهَا وَهْوَ مُؤْمِنٌ، وَالتَّوْبَةُ مَعْرُوضَةٌ بَعْدُ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "சட்டவிரோத தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர் சட்டவிரோத தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது இறைநம்பிக்கையாளராக இருக்கமாட்டார், மேலும் திருடுபவர் திருடும்போது இறைநம்பிக்கையாளராக இருக்கமாட்டார், மேலும் மது அருந்துபவர் மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளராக இருக்கமாட்டார். ஆயினும், அதன் பிறகு தவ்பாவின் (பாவமன்னிப்புக் கோருதலின்) வாசல் திறந்தே இருக்கிறது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، وَسُلَيْمَانُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَيْسَرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الذَّنْبِ أَعْظَمُ قَالَ ‏"‏ أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهْوَ خَلَقَكَ ‏"‏‏.‏ قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ ‏"‏ أَنْ تَقْتُلَ وَلَدَكَ مِنْ أَجْلِ أَنْ يَطْعَمَ مَعَكَ ‏"‏‏.‏ قُلْتُ ثُمَّ أَىٌّ قَالَ ‏"‏ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ ‏"‏‏.‏ قَالَ يَحْيَى وَحَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي وَاصِلٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، مِثْلَهُ، قَالَ عَمْرٌو فَذَكَرْتُهُ لِعَبْدِ الرَّحْمَنِ وَكَانَ حَدَّثَنَا عَنْ سُفْيَانَ عَنِ الأَعْمَشِ وَمَنْصُورٍ وَوَاصِلٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ أَبِي مَيْسَرَةَ قَالَ دَعْهُ دَعْهُ‏.‏
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் கேட்டேன், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! பாவங்களிலேயே மிகப் பெரிய பாவம் எது?" அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் ஒருவனே உங்களைப் படைத்திருந்த போதிலும், நீங்கள் மற்றவர்களை வணங்கி அவனுக்கு இணைகளை ஏற்படுத்துவது." நான் கேட்டேன், "அதற்கடுத்து எது?" அவர்கள் கூறினார்கள், "உங்கள் குழந்தை உங்கள் உணவைப் பங்கிட்டுவிடுமோ என்றஞ்சி அதனைக் கொல்வது." நான் கேட்டேன், "அதற்கடுத்து எது?" அவர்கள் கூறினார்கள், "உங்கள் அண்டை வீட்டுக்காரரின் மனைவியுடன் முறையற்ற தாம்பத்திய உறவு கொள்வது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب رَجْمِ الْمُحْصَنِ
திருமணமான நபரின் ரஜ்ம்
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، يُحَدِّثُ عَنْ عَلِيٍّ، رضى الله عنه حِينَ رَجَمَ الْمَرْأَةَ يَوْمَ الْجُمُعَةِ وَقَالَ قَدْ رَجَمْتُهَا بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
அஷ்-ஷுஅபீ அவர்கள் அறிவித்தார்கள்:

அலீ (ரழி) அவர்கள், ஒரு வெள்ளிக்கிழமையன்று ஒரு பெண்ணுக்குக் கல்லெறிந்து மரணதண்டனை விதித்தபோது, கூறினார்கள்: “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாவின்படி அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினேன்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الشَّيْبَانِيِّ، سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى هَلْ رَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ‏.‏ قُلْتُ قَبْلَ سُورَةِ النُّورِ أَمْ بَعْدُ قَالَ لاَ أَدْرِي‏.‏
அஷ்-ஷைபானீ அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரழி) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜம் தண்டனையை (அதாவது கல்லெறிந்து கொல்லுதல்) நிறைவேற்றினார்களா?' என்று கேட்டேன். அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். நான், "சூரத்துந் நூர் வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்படுவதற்கு முன்பா அல்லது அதன்பிறகா?" என்று கேட்டேன். அவர்கள், "எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَحَدَّثَهُ أَنَّهُ قَدْ زَنَى، فَشَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَ، وَكَانَ قَدْ أُحْصِنَ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரழி) அறிவித்தார்கள்:

பனூ அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தான் சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொண்டதாகத் தெரிவித்து, தனக்கு எதிராக நான்கு முறை சாட்சியம் கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் திருமணமானவர் என்பதால், அவரைக் கல்லெறிந்து கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب لاَ يُرْجَمُ الْمَجْنُونُ وَالْمَجْنُونَةُ
ஒரு பைத்தியக்காரர் கல்லெறிந்து கொல்லப்படக்கூடாது
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ‏.‏ فَأَعْرَضَ عَنْهُ، حَتَّى رَدَّدَ عَلَيْهِ أَرْبَعَ مَرَّاتٍ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، دَعَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ أَبِكَ جُنُونٌ ‏"‏‏.‏ قَالَ لاَ‏.‏ قَالَ ‏"‏ فَهَلْ أَحْصَنْتَ ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ ‏"‏‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي مَنْ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ فَكُنْتُ فِيمَنْ رَجَمَهُ فَرَجَمْنَاهُ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ هَرَبَ، فَأَدْرَكْنَاهُ بِالْحَرَّةِ فَرَجَمْنَاهُ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது, ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, அவரை விளித்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தங்கள் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டார்கள், ஆனால் அந்த மனிதர் தனது கூற்றை நான்கு முறை திரும்பத் திரும்பக் கூறினார், மேலும் அவர் தனக்கு எதிராக நான்கு முறை சாட்சி கூறிய பிறகு, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, "உனக்குப் பைத்தியமா?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "இல்லை" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "நீ திருமணமானவனா?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "ஆம்" என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள், "இவரை அழைத்துச் சென்று கல்லெறிந்து கொல்லுங்கள்" என்று கூறினார்கள்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அவருக்கு கல்லெறிந்தவர்களில் ஒருவராக இருந்தேன், மேலும் நாங்கள் முஸல்லாவில் வைத்து அவருக்கு கல்லெறிந்தோம். கற்கள் அவரைத் துன்புறுத்தியபோது, அவர் தப்பி ஓடினார், ஆனால் நாங்கள் அவரை அல்-ஹர்ராவில் பிடித்து, கல்லெறிந்து கொன்றோம்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب لِلْعَاهِرِ الْحَجَرُ
கல்லெறிதல் தண்டனை விபசாரத்திற்கானது
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اخْتَصَمَ سَعْدٌ وَابْنُ زَمْعَةَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ هُوَ لَكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ، الْوَلَدُ لِلْفِرَاشِ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ ‏"‏‏.‏ زَادَ لَنَا قُتَيْبَةُ عَنِ اللَّيْثِ ‏"‏ وَلِلْعَاهِرِ الْحَجَرُ ‏"‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்களும் அப்து பின் ஸம்ஆ (ரழி) அவர்களும் (ஒரு குழந்தை தொடர்பாக) ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அப்து பின் ஸம்ஆ (ரழி) அவர்களே, அந்தச் சிறுவன் உங்களுக்குரியவன், ஏனெனில், குழந்தை (படுக்கைக்குரிய) உரிமையாளருக்கே உரியது. ஸவ்தா (ரழி) அவர்களே! அச்சிறுவனிடமிருந்து உங்களை மறைத்துக் கொள்ளுங்கள்." துணை அறிவிப்பாளர் அல்-லைஸ் அவர்கள் மேலும் அறிவித்தார்கள் (நபி (ஸல்) அவர்களும் கூறினார்கள்): “மேலும், சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொள்பவருக்குக் கல்லெறிதான்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ الْوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الْحَجَرُ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "குழந்தை படுக்கைக்குரியவருக்கு உரியது மேலும் கல்லானது சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொள்பவருக்கு உரியது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الرَّجْمِ فِي الْبَلاَطِ
பலாத்தில் நடந்த ரஜ்ம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَهُودِيٍّ وَيَهُودِيَّةٍ قَدْ أَحْدَثَا جَمِيعًا فَقَالَ لَهُمْ ‏ ‏ مَا تَجِدُونَ فِي كِتَابِكُمْ ‏ ‏‏.‏ قَالُوا إِنَّ أَحْبَارَنَا أَحْدَثُوا تَحْمِيمَ الْوَجْهِ وَالتَّجْبِيَةَ‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ ادْعُهُمْ يَا رَسُولَ اللَّهِ بِالتَّوْرَاةِ‏.‏ فَأُتِيَ بِهَا فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، وَجَعَلَ يَقْرَأُ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا فَقَالَ لَهُ ابْنُ سَلاَمٍ ارْفَعْ يَدَكَ‏.‏ فَإِذَا آيَةُ الرَّجْمِ تَحْتَ يَدِهِ، فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَا‏.‏ قَالَ ابْنُ عُمَرَ فَرُجِمَا عِنْدَ الْبَلاَطِ، فَرَأَيْتُ الْيَهُودِيَّ أَجْنَأَ عَلَيْهَا‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு யூதரும் ஒரு யூதப் பெண்ணும் சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொண்ட குற்றச்சாட்டின் பேரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் கேட்டார்கள். "உங்கள் வேதத்தில் (தோராவில்) இந்தக் குற்றத்திற்கான சட்டபூர்வமான தண்டனை என்ன?" அவர்கள் பதிலளித்தார்கள், "எங்கள் மதகுருமார்கள் முகங்களைக் கரியால் கறுப்பாக்குவதையும் தஜ்பியாவையும் தண்டனையாகப் புதிதாக உருவாக்கியுள்ளனர்." அப்துல்லாஹ் பின் சலாம் (ரழி) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்), தோராவைக் கொண்டு வருமாறு அவர்களிடம் கூறுங்கள்." தோரா கொண்டுவரப்பட்டது, பின்னர் யூதர்களில் ஒருவர் ரஜம் (கல்லெறிந்து கொல்லுதல்) பற்றிய இறை வசனத்தின் மீது தனது கையை வைத்து அதற்கு முன்னும் பின்னும் உள்ளதைப் படிக்கத் தொடங்கினார். அதன்பேரில், இப்னு சலாம் (ரழி) அவர்கள் அந்த யூதரிடம் கூறினார்கள், "உமது கையை எடு." இதோ! ரஜம் பற்றிய இறை வசனம் அவரது கைக்குக் கீழே இருந்தது. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் (பாவிகளையும்) கல்லெறிந்து கொல்லுமாறு கட்டளையிட்டார்கள், அவ்வாறே அவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள்: எனவே அவர்கள் இருவரும் பலாத்தில் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள் மேலும் அந்த யூதர் யூதப் பெண்ணுக்குக் கவசம் போல இருந்ததை நான் கண்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الرَّجْمِ بِالْمُصَلَّى
முஸல்லாவில் ரஜ்ம்
حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلاً، مِنْ أَسْلَمَ جَاءَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَاعْتَرَفَ بِالزِّنَا فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ مَرَّاتٍ‏.‏ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَبِكَ جُنُونٌ ‏"‏‏.‏ قَالَ لاَ‏.‏ قَالَ ‏"‏ آحْصَنْتَ ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ فَأَمَرَ بِهِ فَرُجِمَ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ فَرَّ، فَأُدْرِكَ فَرُجِمَ حَتَّى مَاتَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْرًا وَصَلَّى عَلَيْهِ‏.‏ لَمْ يَقُلْ يُونُسُ وَابْنُ جُرَيْجٍ عَنِ الزُّهْرِيِّ فَصَلَّى عَلَيْهِ‏.‏
ஜாபிர் (ரழி) அறிவித்தார்கள்:

அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தாம் சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொண்டதாக ஒப்புக்கொண்டார். அம்மனிதர் தமக்கு எதிராக நான்கு முறை சாட்சி கூறும் வரை நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரிடமிருந்து தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "உமக்கு பைத்தியமா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நீர் திருமணமானவரா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்" என்றார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள், மேலும் அவர் முஸல்லாவில் கல்லெறிந்து கொல்லப்பட்டார். கற்கள் அவரை வருத்தியபோது, அவர் தப்பி ஓடினார், ஆனால் அவர் பிடிக்கப்பட்டு இறக்கும் வரை கல்லெறியப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி நல்லவிதமாகப் பேசினார்கள் மேலும் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
بَابُ مَنْ أَصَابَ ذَنْبًا دُونَ الْحَدِّ فَأَخْبَرَ الإِمَامَ فَلاَ عُقُوبَةَ عَلَيْهِ بَعْدَ التَّوْبَةِ إِذَا جَاءَ مُسْتَفْتِيًا
யாரேனும் சட்டபூர்வ தண்டனையை விட குறைவான பாவத்தை செய்து, அதை ஆட்சியாளரிடம் தெரிவித்தால், அவரது பாவமன்னிப்புக்குப் பிறகு அவருக்கு எந்த தண்டனையும் விதிக்கப்படக் கூடாது
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، وَقَعَ بِامْرَأَتِهِ فِي رَمَضَانَ، فَاسْتَفْتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ هَلْ تَجِدُ رَقَبَةً ‏"‏‏.‏ قَالَ لاَ‏.‏ قَالَ ‏"‏ هَلْ تَسْتَطِيعُ صِيَامَ شَهْرَيْنِ ‏"‏‏.‏ قَالَ لاَ‏.‏ قَالَ ‏"‏ فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا ‏"‏‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு நபர் ரமலான் மாதத்தில் (அவர் நோன்பு நோற்றிருந்தபோது) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார், மேலும் அவர் அந்தச் செயல் குறித்து அவர்களின் தீர்ப்பை நாடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) கூறினார்கள், “ஒரு அடிமையை விடுதலை செய்ய உங்களால் முடியுமா?” அந்த மனிதர் கூறினார், “இல்லை.” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க உங்களால் முடியுமா?” அவர் கூறினார், “இல்லை.” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளியுங்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَقَالَ اللَّيْثُ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَتَى رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ قَالَ احْتَرَقْتُ‏.‏ قَالَ ‏"‏ مِمَّ ذَاكَ ‏"‏‏.‏ قَالَ وَقَعْتُ بِامْرَأَتِي فِي رَمَضَانَ‏.‏ قَالَ لَهُ ‏"‏ تَصَدَّقْ ‏"‏‏.‏ قَالَ مَا عِنْدِي شَىْءٌ‏.‏ فَجَلَسَ وَأَتَاهُ إِنْسَانٌ يَسُوقُ حِمَارًا وَمَعَهُ طَعَامٌ ـ قَالَ عَبْدُ الرَّحْمَنِ مَا أَدْرِي مَا هُوَ ـ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ أَيْنَ الْمُحْتَرِقُ ‏"‏‏.‏ فَقَالَ هَا أَنَا ذَا‏.‏ قَالَ ‏"‏ خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ ‏"‏‏.‏ قَالَ عَلَى أَحْوَجَ مِنِّي مَا لأَهْلِي طَعَامٌ قَالَ ‏"‏ فَكُلُوهُ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ الْحَدِيثُ الأَوَّلُ أَبْيَنُ قَوْلُهُ ‏"‏ أَطْعِمْ أَهْلَكَ ‏"‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு மனிதர் பள்ளிவாசலில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் அழிந்துவிட்டேன்!" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "நீர் என்ன செய்துவிட்டீர்?" என்று கேட்டார்கள். அவர், "நான் ரமலான் மாதத்தில் (நோன்பு நோற்றிருந்தபோது) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அவர், "என்னிடம் எதுவும் இல்லை" என்று கூறினார். அந்த மனிதர் அமர்ந்தார், அதே நேரத்தில் நபி (ஸல்) அவர்களிடம் உணவைக் கழுதையில் ஏற்றி ஒரு மனிதர் கொண்டு வந்தார் ..... (துணை அறிவிப்பாளர், அப்துர் ரஹ்மான் அவர்கள் மேலும் கூறினார்கள்: அது என்ன வகையான உணவு என்று எனக்குத் தெரியாது). அப்போது நபி (ஸல்) அவர்கள், "அந்த அழிந்த மனிதர் எங்கே?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "இதோ நான் இருக்கிறேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "இந்த உணவை எடுத்து (யாருக்காவது) தர்மமாகக் கொடுங்கள்" என்று கூறினார்கள். அந்த மனிதர், "என்னை விட ஏழ்மையானவருக்கா? என் குடும்பத்தினருக்கு உண்ண எதுவும் இல்லை" என்று கேட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "அப்படியானால், நீங்களே அதை உண்ணுங்கள்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا أَقَرَّ بِالْحَدِّ وَلَمْ يُبَيِّنْ، هَلْ لِلإِمَامِ أَنْ يَسْتُرَ عَلَيْهِ
ஒரு நபர் பாவத்தை ஒப்புக்கொள்கிறார் ஆனால் அந்த பாவத்தை குறிப்பிடவில்லை என்றால், ஆட்சியாளர் அதை அவருக்காக மறைக்க முடியுமா?
حَدَّثَنِي عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ عَاصِمٍ الْكِلاَبِيُّ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا فَأَقِمْهُ عَلَىَّ‏.‏ قَالَ وَلَمْ يَسْأَلْهُ عَنْهُ‏.‏ قَالَ وَحَضَرَتِ الصَّلاَةُ فَصَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم الصَّلاَةَ قَامَ إِلَيْهِ الرَّجُلُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَصَبْتُ حَدًّا، فَأَقِمْ فِيَّ كِتَابَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ أَلَيْسَ قَدْ صَلَّيْتَ مَعَنَا ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَإِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ ذَنْبَكَ ‏"‏‏.‏ أَوْ قَالَ ‏"‏ حَدَّكَ ‏"‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் சட்டப்படி தண்டனைக்குரிய ஒரு பாவத்தைச் செய்துவிட்டேன்; தயவுசெய்து என் மீது சட்டப்படியான தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் என்ன செய்தார் என்று அவரிடம் கேட்கவில்லை. பிறகு தொழுகைக்கான நேரம் வந்தது, அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையை முடித்தபோது, அந்த மனிதர் மீண்டும் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! நான் சட்டப்படி தண்டனைக்குரிய ஒரு பாவத்தைச் செய்துவிட்டேன்; தயவுசெய்து அல்லாஹ்வின் சட்டங்களின்படி என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "நீர் எம்முடன் தொழவில்லையா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உமது பாவத்தை மன்னித்தான்." அல்லது, "....உமது சட்டப்படி தண்டனைக்குரிய பாவத்தை" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب هَلْ يَقُولُ الإِمَامُ لِلْمُقِرِّ لَعَلَّكَ لَمَسْتَ أَوْ غَمَزْتَ
"நீங்கள் அந்தப் பெண்ணைத் தொட்டிருக்கலாம் அல்லது அவளுக்குக் கண் சிமிட்டியிருக்கலாம் என்பது மட்டுமே இருக்க முடியாதா?"
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ يَعْلَى بْنَ حَكِيمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا أَتَى مَاعِزُ بْنُ مَالِكٍ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ ‏"‏ لَعَلَّكَ قَبَّلْتَ أَوْ غَمَزْتَ أَوْ نَظَرْتَ ‏"‏‏.‏ قَالَ لاَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ أَنِكْتَهَا ‏"‏‏.‏ لاَ يَكْنِي‏.‏ قَالَ فَعِنْدَ ذَلِكَ أَمَرَ بِرَجْمِهِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்:

மாஇஸ் பின் மாலிக் (ரழி) (ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதற்காக) நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "ஒருவேளை நீர் (அப்பெண்ணை) முத்தமிட்டிருக்கலாம், அல்லது கண் சிமிட்டியிருக்கலாம், அல்லது அவளைப் பார்த்திருக்கலாம்?" என்று கூறினார்கள். அவர் கூறினார்கள், "இல்லை, அல்லாஹ்வின் தூதரே (ஸல்)!" நபி (ஸல்) அவர்கள், எந்தவிதமான நயமான வார்த்தைகளையும் பயன்படுத்தாமல், "நீர் அவளுடன் தாம்பத்திய உறவு கொண்டீரா?" என்று கூறினார்கள். அறிவிப்பாளர் மேலும் கூறினார்கள்: அதன் பிறகு, (அதாவது, அவரது ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகு) நபி (ஸல்) அவர்கள் அவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب سُؤَالِ الإِمَامِ الْمُقِرَّ هَلْ أَحْصَنْتَ
"நீங்கள் திருமணமானவரா?" என்று ஒப்புதல் அளித்த நபரிடம் ஆட்சியாளர் கேட்டார்.
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ مِنَ النَّاسِ وَهْوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ‏.‏ يُرِيدُ نَفْسَهُ، فَأَعْرَضَ عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَنَحَّى لِشِقِّ وَجْهِهِ الَّذِي أَعْرَضَ قِبَلَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ‏.‏ فَأَعْرَضَ عَنْهُ، فَجَاءَ لِشِقِّ وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّذِي أَعْرَضَ عَنْهُ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ دَعَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ أَبِكَ جُنُونٌ ‏"‏‏.‏ قَالَ لاَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ فَقَالَ ‏"‏ أَحْصَنْتَ ‏"‏‏.‏ قَالَ نَعَمْ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ اذْهَبُوا فَارْجُمُوهُ ‏"‏‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي مَنْ، سَمِعَ جَابِرًا، قَالَ فَكُنْتُ فِيمَنْ رَجَمَهُ، فَرَجَمْنَاهُ بِالْمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ جَمَزَ حَتَّى أَدْرَكْنَاهُ بِالْحَرَّةِ فَرَجَمْنَاهُ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மக்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! நான் சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடமிருந்து தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அந்த மனிதர் நபி (ஸல்) அவர்கள் தம் முகத்தைத் திருப்பியிருந்த பக்கத்திற்கு வந்து, "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! நான் சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் முகத்தை மறுபக்கத்திற்குத் திருப்பிக் கொண்டார்கள், அந்த மனிதர் அந்தப் பக்கத்திற்கு வந்தார், அவர் நான்கு முறை ஒப்புக்கொண்டபோது, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, "உனக்குப் பைத்தியமா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை, அல்லாஹ்வின் தூதரே (ஸல்)!" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உனக்குத் திருமணமாகிவிட்டதா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம், அல்லாஹ்வின் தூதரே (ஸல்)" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்), "இவரை அழைத்துச் சென்று கல்லெறிந்து கொல்லுங்கள்" என்று கூறினார்கள்.

இப்னு ஷிஹாப் அவர்கள் மேலும் கூறினார்கள்: "ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுவதைக் கேட்ட ஒருவர் எனக்கு அறிவித்தார்; ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அந்த மனிதரைக் கல்லெறிந்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன், நாங்கள் அவரை முஸல்லாவில் (தொழும் இடத்தில்) கல்லெறிந்தோம், கற்கள் அவரைத் துன்புறுத்தியபோது, அவர் வேகமாகத் துள்ளிக் குதித்து ஓடிவிட்டார், ஆனால் நாங்கள் அவரை அல்-ஹர்ராவில் பிடித்து (அங்கே) அவரைக் கல்லெறிந்து கொன்றோம்.'"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الاِعْتِرَافِ بِالزِّنَا
சட்டவிரோதமான தாம்பத்திய உறவின் குற்றத்தை ஒப்புக்கொள்வது
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْنَاهُ مِنْ فِي الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ وَزَيْدَ بْنَ خَالِدٍ قَالاَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ رَجُلٌ فَقَالَ أَنْشُدُكَ اللَّهَ إِلاَّ قَضَيْتَ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ‏.‏ فَقَامَ خَصْمُهُ ـ وَكَانَ أَفْقَهَ مِنْهُ ـ فَقَالَ اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ وَأْذَنْ لِي‏.‏ قَالَ ‏"‏ قُلْ ‏"‏‏.‏ قَالَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، فَزَنَى بِامْرَأَتِهِ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَخَادِمٍ، ثُمَّ سَأَلْتُ رِجَالاً مِنْ أَهْلِ الْعِلْمِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ، وَعَلَى امْرَأَتِهِ الرَّجْمَ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ جَلَّ ذِكْرُهُ، الْمِائَةُ شَاةٍ وَالْخَادِمُ رَدٌّ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَاغْدُ يَا أُنَيْسُ عَلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا ‏"‏‏.‏ فَغَدَا عَلَيْهَا فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا‏.‏ قُلْتُ لِسُفْيَانَ لَمْ يَقُلْ فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ‏.‏ فَقَالَ أَشُكُّ فِيهَا مِنَ الزُّهْرِيِّ، فَرُبَّمَا قُلْتُهَا وَرُبَّمَا سَكَتُّ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் ஸைத் இப்னு காலித் (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, ஒரு மனிதர் எழுந்து நின்று (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் அல்லாஹ்வின் சட்டங்களின்படி எங்களுக்குத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டுகிறேன்" என்று கூறினார். பிறகு, அவரை விட புத்திசாலியாக இருந்த அந்த மனிதரின் எதிர்வாதி எழுந்து (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் சட்டத்தின்படி எங்களுக்குத் தீர்ப்பளியுங்கள், மேலும் தயவுசெய்து என்னை (பேச) அனுமதியுங்கள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "'பேசுங்கள்'" என்று கூறினார்கள். அவர் கூறினார், "என் மகன் இந்த மனிதரிடம் கூலியாளாக வேலை செய்து வந்தான், மேலும் அவன் அவரது மனைவியுடன் முறையற்ற தாம்பத்திய உறவு கொண்டான். என் மகனின் பாவம் தீர நான் நூறு ஆடுகளையும் ஓர் அடிமையையும் பரிகாரமாகக் கொடுத்தேன். பிறகு நான் இந்த வழக்கைப்பற்றி ஒரு அறிஞரிடம் கேட்டேன், அவர் என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும், ஓராண்டுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும், அந்த மனிதரின் மனைவி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்றும் எனக்குத் தெரிவித்தார்." நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, நான் அல்லாஹ்வின் சட்டங்களின்படி உங்களுக்குத் தீர்ப்பளிப்பேன். உங்களுடைய நூறு ஆடுகளும் அடிமையும் உங்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும், உங்கள் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கப்பட்டு, ஓராண்டுக்கு நாடு கடத்தப்பட வேண்டும். உனைஸ் (ரழி) அவர்களே! இந்த மனிதரின் மனைவியிடம் செல்லுங்கள், அவள் ஒப்புக்கொண்டால், அவளைக் கல்லெறிந்து கொல்லுங்கள்." உனைஸ் (ரழி) அவர்கள் அவளிடம் சென்றார்கள், அவள் ஒப்புக்கொண்டாள். பிறகு அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ عُمَرُ لَقَدْ خَشِيتُ أَنْ يَطُولَ بِالنَّاسِ زَمَانٌ حَتَّى يَقُولَ قَائِلٌ لاَ نَجِدُ الرَّجْمَ فِي كِتَابِ اللَّهِ‏.‏ فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللَّهُ، أَلاَ وَإِنَّ الرَّجْمَ حَقٌّ عَلَى مَنْ زَنَى، وَقَدْ أَحْصَنَ، إِذَا قَامَتِ الْبَيِّنَةُ، أَوْ كَانَ الْحَمْلُ أَوْ الاِعْتِرَافُ ـ قَالَ سُفْيَانُ كَذَا حَفِظْتُ ـ أَلاَ وَقَدْ رَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَرَجَمْنَا بَعْدَهُ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள், "நெடுங்காலம் கழிந்த பின்னர், மக்கள், "திருமறையில் ரஜம் (கல்லெறிந்து கொல்லுதல்) பற்றிய வசனங்களை நாங்கள் காணவில்லை" என்று கூறக்கூடும் என்றும், அதன் விளைவாக அல்லாஹ் வஹீ (இறைச்செய்தி)யாக அருளிய ஒரு கடமையை கைவிடுவதன் மூலம் அவர்கள் வழிதவறிச் சென்றுவிடுவார்களோ என்றும் நான் அஞ்சுகிறேன். கவனியுங்கள்! திருமணமான ஒருவர் சட்டவிரோத தாம்பத்திய உறவு கொண்டு, அக்குற்றம் சாட்சிகள் மூலமாகவோ, கர்ப்பம் மூலமாகவோ அல்லது ஒப்புதல் வாக்குமூலம் மூலமாகவோ நிரூபிக்கப்பட்டால், அவர் மீது ரஜம் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்." சுஃப்யான் அவர்கள் மேலும் கூறினார்கள், "நான் இந்த அறிவிப்பை இவ்வாறே மனனம் செய்துள்ளேன்." உமர் (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள், "நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரஜம் தண்டனையை நிறைவேற்றினார்கள், அவர்களுக்குப் பிறகு நாங்களும் அவ்வாறே செய்தோம்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب رَجْمِ الْحُبْلَى مِنَ الزِّنَا إِذَا أَحْصَنَتْ
திருமணமான பெண் ஒருவர் தடைசெய்யப்பட்ட தாம்பத்திய உறவின் மூலம் கர்ப்பமடைந்து ரஜம் செய்யப்படுதல்
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ أُقْرِئُ رِجَالاً مِنَ الْمُهَاجِرِينَ مِنْهُمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، فَبَيْنَمَا أَنَا فِي مَنْزِلِهِ بِمِنًى، وَهْوَ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي آخِرِ حَجَّةٍ حَجَّهَا، إِذْ رَجَعَ إِلَىَّ عَبْدُ الرَّحْمَنِ فَقَالَ لَوْ رَأَيْتَ رَجُلاً أَتَى أَمِيرَ الْمُؤْمِنِينَ الْيَوْمَ فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَلْ لَكَ فِي فُلاَنٍ يَقُولُ لَوْ قَدْ مَاتَ عُمَرُ لَقَدْ بَايَعْتُ فُلاَنًا، فَوَاللَّهِ مَا كَانَتْ بَيْعَةُ أَبِي بَكْرٍ إِلاَّ فَلْتَةً، فَتَمَّتْ‏.‏ فَغَضِبَ عُمَرُ ثُمَّ قَالَ إِنِّي إِنْ شَاءَ اللَّهُ لَقَائِمٌ الْعَشِيَّةَ فِي النَّاسِ، فَمُحَذِّرُهُمْ هَؤُلاَءِ الَّذِينَ يُرِيدُونَ أَنْ يَغْصِبُوهُمْ أُمُورَهُمْ‏.‏ قَالَ عَبْدُ الرَّحْمَنِ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ لاَ تَفْعَلْ فَإِنَّ الْمَوْسِمَ يَجْمَعُ رَعَاعَ النَّاسِ وَغَوْغَاءَهُمْ، فَإِنَّهُمْ هُمُ الَّذِينَ يَغْلِبُونَ عَلَى قُرْبِكَ حِينَ تَقُومُ فِي النَّاسِ، وَأَنَا أَخْشَى أَنْ تَقُومَ فَتَقُولَ مَقَالَةً يُطَيِّرُهَا عَنْكَ كُلُّ مُطَيِّرٍ، وَأَنْ لاَ يَعُوهَا، وَأَنْ لاَ يَضَعُوهَا عَلَى مَوَاضِعِهَا، فَأَمْهِلْ حَتَّى تَقْدَمَ الْمَدِينَةَ فَإِنَّهَا دَارُ الْهِجْرَةِ وَالسُّنَّةِ، فَتَخْلُصَ بِأَهْلِ الْفِقْهِ وَأَشْرَافِ النَّاسِ، فَتَقُولَ مَا قُلْتَ مُتَمَكِّنًا، فَيَعِي أَهْلُ الْعِلْمِ مَقَالَتَكَ، وَيَضَعُونَهَا عَلَى مَوَاضِعِهَا‏.‏ فَقَالَ عُمَرُ أَمَا وَاللَّهِ إِنْ شَاءَ اللَّهُ لأَقُومَنَّ بِذَلِكَ أَوَّلَ مَقَامٍ أَقُومُهُ بِالْمَدِينَةِ‏.‏ قَالَ ابْنُ عَبَّاسٍ فَقَدِمْنَا الْمَدِينَةَ فِي عَقِبِ ذِي الْحَجَّةِ، فَلَمَّا كَانَ يَوْمُ الْجُمُعَةِ عَجَّلْنَا الرَّوَاحَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، حَتَّى أَجِدَ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ جَالِسًا إِلَى رُكْنِ الْمِنْبَرِ، فَجَلَسْتُ حَوْلَهُ تَمَسُّ رُكْبَتِي رُكْبَتَهُ، فَلَمْ أَنْشَبْ أَنْ خَرَجَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَلَمَّا رَأَيْتُهُ مُقْبِلاً قُلْتُ لِسَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، لَيَقُولَنَّ الْعَشِيَّةَ مَقَالَةً لَمْ يَقُلْهَا مُنْذُ اسْتُخْلِفَ، فَأَنْكَرَ عَلَىَّ وَقَالَ مَا عَسَيْتَ أَنْ يَقُولَ مَا لَمْ يَقُلْ‏.‏ قَبْلَهُ فَجَلَسَ عُمَرُ عَلَى الْمِنْبَرِ، فَلَمَّا سَكَتَ الْمُؤَذِّنُونَ قَامَ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ قَالَ أَمَّا بَعْدُ فَإِنِّي قَائِلٌ لَكُمْ مَقَالَةً قَدْ قُدِّرَ لِي أَنْ أَقُولَهَا، لاَ أَدْرِي لَعَلَّهَا بَيْنَ يَدَىْ أَجَلِي، فَمَنْ عَقَلَهَا وَوَعَاهَا فَلْيُحَدِّثْ بِهَا حَيْثُ انْتَهَتْ بِهِ رَاحِلَتُهُ، وَمَنْ خَشِيَ أَنْ لاَ يَعْقِلَهَا فَلاَ أُحِلُّ لأَحَدٍ أَنْ يَكْذِبَ عَلَىَّ، إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ فَكَانَ مِمَّا أَنْزَلَ اللَّهُ آيَةُ الرَّجْمِ، فَقَرَأْنَاهَا وَعَقَلْنَاهَا وَوَعَيْنَاهَا، رَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَرَجَمْنَا بَعْدَهُ، فَأَخْشَى إِنْ طَالَ بِالنَّاسِ زَمَانٌ أَنْ يَقُولَ قَائِلٌ وَاللَّهِ مَا نَجِدُ آيَةَ الرَّجْمِ فِي كِتَابِ اللَّهِ، فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللَّهُ، وَالرَّجْمُ فِي كِتَابِ اللَّهِ حَقٌّ عَلَى مَنْ زَنَى إِذَا أُحْصِنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ، إِذَا قَامَتِ الْبَيِّنَةُ أَوْ كَانَ الْحَبَلُ أَوْ الاِعْتِرَافُ، ثُمَّ إِنَّا كُنَّا نَقْرَأُ فِيمَا نَقْرَأُ مِنْ كِتَابِ اللَّهِ أَنْ لاَ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، فَإِنَّهُ كُفْرٌ بِكُمْ أَنْ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، أَوْ إِنَّ كُفْرًا بِكُمْ أَنْ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، أَلاَ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ تُطْرُونِي كَمَا أُطْرِيَ عِيسَى ابْنُ مَرْيَمَ وَقُولُوا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ‏ ‏‏.‏ ثُمَّ إِنَّهُ بَلَغَنِي أَنَّ قَائِلاً مِنْكُمْ يَقُولُ وَاللَّهِ لَوْ مَاتَ عُمَرُ بَايَعْتُ فُلاَنًا‏.‏ فَلاَ يَغْتَرَّنَّ امْرُؤٌ أَنْ يَقُولَ إِنَّمَا كَانَتْ بَيْعَةُ أَبِي بَكْرٍ فَلْتَةً وَتَمَّتْ أَلاَ وَإِنَّهَا قَدْ كَانَتْ كَذَلِكَ وَلَكِنَّ اللَّهَ وَقَى شَرَّهَا، وَلَيْسَ مِنْكُمْ مَنْ تُقْطَعُ الأَعْنَاقُ إِلَيْهِ مِثْلُ أَبِي بَكْرٍ، مَنْ بَايَعَ رَجُلاً عَنْ غَيْرِ مَشُورَةٍ مِنَ الْمُسْلِمِينَ فَلاَ يُبَايَعُ هُوَ وَلاَ الَّذِي بَايَعَهُ تَغِرَّةً أَنْ يُقْتَلاَ، وَإِنَّهُ قَدْ كَانَ مِنْ خَبَرِنَا حِينَ تَوَفَّى اللَّهُ نَبِيَّهُ صلى الله عليه وسلم إِلاَّ أَنَّ الأَنْصَارَ خَالَفُونَا وَاجْتَمَعُوا بِأَسْرِهِمْ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، وَخَالَفَ عَنَّا عَلِيٌّ وَالزُّبَيْرُ وَمَنْ مَعَهُمَا، وَاجْتَمَعَ الْمُهَاجِرُونَ إِلَى أَبِي بَكْرٍ فَقُلْتُ لأَبِي بَكْرٍ يَا أَبَا بَكْرٍ انْطَلِقْ بِنَا إِلَى إِخْوَانِنَا هَؤُلاَءِ مِنَ الأَنْصَارِ‏.‏ فَانْطَلَقْنَا نُرِيدُهُمْ فَلَمَّا دَنَوْنَا مِنْهُمْ لَقِيَنَا مِنْهُمْ رَجُلاَنِ صَالِحَانِ، فَذَكَرَا مَا تَمَالَى عَلَيْهِ الْقَوْمُ فَقَالاَ أَيْنَ تُرِيدُونَ يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ فَقُلْنَا نُرِيدُ إِخْوَانَنَا هَؤُلاَءِ مِنَ الأَنْصَارِ‏.‏ فَقَالاَ لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَقْرَبُوهُمُ اقْضُوا أَمْرَكُمْ‏.‏ فَقُلْتُ وَاللَّهِ لَنَأْتِيَنَّهُمْ‏.‏ فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَاهُمْ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، فَإِذَا رَجُلٌ مُزَمَّلٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا هَذَا سَعْدُ بْنُ عُبَادَةَ‏.‏ فَقُلْتُ مَا لَهُ قَالُوا يُوعَكُ‏.‏ فَلَمَّا جَلَسْنَا قَلِيلاً تَشَهَّدَ خَطِيبُهُمْ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ فَنَحْنُ أَنْصَارُ اللَّهِ وَكَتِيبَةُ الإِسْلاَمِ، وَأَنْتُمْ مَعْشَرَ الْمُهَاجِرِينَ رَهْطٌ، وَقَدْ دَفَّتْ دَافَّةٌ مِنْ قَوْمِكُمْ، فَإِذَا هُمْ يُرِيدُونَ أَنْ يَخْتَزِلُونَا مِنْ أَصْلِنَا وَأَنْ يَحْضُنُونَا مِنَ الأَمْرِ‏.‏ فَلَمَّا سَكَتَ أَرَدْتُ أَنْ أَتَكَلَّمَ وَكُنْتُ زَوَّرْتُ مَقَالَةً أَعْجَبَتْنِي أُرِيدُ أَنْ أُقَدِّمَهَا بَيْنَ يَدَىْ أَبِي بَكْرٍ، وَكُنْتُ أُدَارِي مِنْهُ بَعْضَ الْحَدِّ، فَلَمَّا أَرَدْتُ أَنْ أَتَكَلَّمَ قَالَ أَبُو بَكْرٍ عَلَى رِسْلِكَ‏.‏ فَكَرِهْتُ أَنْ أُغْضِبَهُ، فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَكَانَ هُوَ أَحْلَمَ مِنِّي وَأَوْقَرَ، وَاللَّهِ مَا تَرَكَ مِنْ كَلِمَةٍ أَعْجَبَتْنِي فِي تَزْوِيرِي إِلاَّ قَالَ فِي بَدِيهَتِهِ مِثْلَهَا أَوْ أَفْضَلَ مِنْهَا حَتَّى سَكَتَ فَقَالَ مَا ذَكَرْتُمْ فِيكُمْ مِنْ خَيْرٍ فَأَنْتُمْ لَهُ أَهْلٌ، وَلَنْ يُعْرَفَ هَذَا الأَمْرُ إِلاَّ لِهَذَا الْحَىِّ مِنْ قُرَيْشٍ، هُمْ أَوْسَطُ الْعَرَبِ نَسَبًا وَدَارًا، وَقَدْ رَضِيتُ لَكُمْ أَحَدَ هَذَيْنِ الرَّجُلَيْنِ، فَبَايِعُوا أَيَّهُمَا شِئْتُمْ‏.‏ فَأَخَذَ بِيَدِي وَبِيَدِ أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ وَهْوَ جَالِسٌ بَيْنَنَا، فَلَمْ أَكْرَهْ مِمَّا قَالَ غَيْرَهَا، كَانَ وَاللَّهِ أَنْ أُقَدَّمَ فَتُضْرَبَ عُنُقِي لاَ يُقَرِّبُنِي ذَلِكَ مِنْ إِثْمٍ، أَحَبَّ إِلَىَّ مِنْ أَنْ أَتَأَمَّرَ عَلَى قَوْمٍ فِيهِمْ أَبُو بَكْرٍ، اللَّهُمَّ إِلاَّ أَنْ تُسَوِّلَ إِلَىَّ نَفْسِي عِنْدَ الْمَوْتِ شَيْئًا لاَ أَجِدُهُ الآنَ‏.‏ فَقَالَ قَائِلٌ مِنَ الأَنْصَارِ أَنَا جُذَيْلُهَا الْمُحَكَّكُ، وَعُذَيْقُهَا الْمُرَجَّبُ، مِنَّا أَمِيرٌ، وَمِنْكُمْ أَمِيرٌ، يَا مَعْشَرَ قُرَيْشٍ‏.‏ فَكَثُرَ اللَّغَطُ، وَارْتَفَعَتِ الأَصْوَاتُ حَتَّى فَرِقْتُ مِنَ الاِخْتِلاَفِ‏.‏ فَقُلْتُ ابْسُطْ يَدَكَ يَا أَبَا بَكْرٍ‏.‏ فَبَسَطَ يَدَهُ فَبَايَعْتُهُ، وَبَايَعَهُ الْمُهَاجِرُونَ، ثُمَّ بَايَعَتْهُ الأَنْصَارُ، وَنَزَوْنَا عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ قَائِلٌ مِنْهُمْ قَتَلْتُمْ سَعْدَ بْنَ عُبَادَةَ‏.‏ فَقُلْتُ قَتَلَ اللَّهُ سَعْدَ بْنَ عُبَادَةَ‏.‏ قَالَ عُمَرُ وَإِنَّا وَاللَّهِ مَا وَجَدْنَا فِيمَا حَضَرْنَا مِنْ أَمْرٍ أَقْوَى مِنْ مُبَايَعَةِ أَبِي بَكْرٍ خَشِينَا إِنْ فَارَقْنَا الْقَوْمَ وَلَمْ تَكُنْ بَيْعَةٌ أَنْ يُبَايِعُوا رَجُلاً مِنْهُمْ بَعْدَنَا، فَإِمَّا بَايَعْنَاهُمْ عَلَى مَا لاَ نَرْضَى، وَإِمَّا نُخَالِفُهُمْ فَيَكُونُ فَسَادٌ، فَمَنْ بَايَعَ رَجُلاً عَلَى غَيْرِ مَشُورَةٍ مِنَ الْمُسْلِمِينَ فَلاَ يُتَابَعُ هُوَ وَلاَ الَّذِي بَايَعَهُ تَغِرَّةً أَنْ يُقْتَلاَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் முஹாஜிரீன் (புலம்பெயர்ந்தவர்கள்) சிலருக்கு (குர்ஆனை) கற்றுக் கொடுப்பது வழக்கம், அவர்களில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் இருந்தார்கள். நான் மினாவில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோதும், அவர் உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்களுடன் உமர் (ரழி) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது இருந்தபோதும், அப்துர்-ரஹ்மான் (ரழி) அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள், "இன்று விசுவாசிகளின் தலைவர் (உமர் (ரழி) அவர்களிடம்) வந்த அந்த மனிதரை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே! அவர், 'ஓ விசுவாசிகளின் தலைவரே! இன்னார் கூறுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், 'உமர் (ரழி) அவர்கள் இறந்துவிட்டால், நான் இன்னாருக்கு விசுவாசப் பிரமாணம் செய்வேன், அல்லாஹ்வின் மீது ஆணையாக, அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு அளிக்கப்பட்ட விசுவாசப் பிரமாணம் என்பது திடீரென அவசரமாக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கைதான், அது பின்னர் நிலைநிறுத்தப்பட்டது.' என்று அவர் கூறுகிறார்.'" உமர் (ரழி) அவர்கள் கோபமடைந்து பின்னர் கூறினார்கள், 'அல்லாஹ் நாடினால், இன்று இரவு நான் மக்களின் முன் நின்று, மற்றவர்களின் உரிமைகளை (ஆட்சிப் பொறுப்பு என்ற கேள்வி) பறிக்க விரும்பும் அந்த மக்களுக்கு எதிராக எச்சரிக்கை செய்வேன்.' அப்துர்-ரஹ்மான் (ரழி) அவர்கள் கூறினார்கள், "நான் சொன்னேன், 'ஓ விசுவாசிகளின் தலைவரே! அப்படிச் செய்யாதீர்கள், ஏனெனில் ஹஜ் காலம் கழிசடைகளையும் குப்பைகளையும் ஒன்று சேர்க்கிறது, நீங்கள் மக்களிடம் உரையாற்ற நிற்கும்போது அவர்களே உங்களைச் சுற்றி கூடுவார்கள். மேலும், நீங்கள் எழுந்து ஏதேனும் கூறி, சிலர் உங்கள் கூற்றைப் பரப்பி, நீங்கள் உண்மையில் சொன்னதைச் சொல்லாமலும், அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமலும், தவறாகப் பொருள் கொள்ளக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன், எனவே நீங்கள் மதீனாவை அடையும் வரை காத்திருக்க வேண்டும், ஏனெனில் அது புலம்பெயர்ந்த இடமாகவும், நபியின் பாரம்பரியங்களின் இடமாகவும் இருக்கிறது, அங்கு நீங்கள் கற்றறிந்த மற்றும் உன்னதமான மக்களைத் தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை நம்பிக்கையுடன் அவர்களிடம் கூறலாம்; கற்றறிந்த மக்கள் உங்கள் கூற்றைப் புரிந்து கொண்டு அதை அதன் சரியான இடத்தில் வைப்பார்கள்.' அதற்கு, உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் நாடினால், மதீனாவில் நான் மக்களுக்கு ஆற்றும் முதல் உரையிலேயே இதைச் செய்வேன்.'"

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள்: நாங்கள் துல்-ஹஜ்ஜா மாதத்தின் இறுதியில் மதீனாவை அடைந்தோம், வெள்ளிக்கிழமை வந்ததும், சூரியன் சாய்ந்தவுடன் நாங்கள் விரைவாக (பள்ளிவாசலுக்கு) சென்றோம், சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரழி) அவர்கள் மிம்பரின் மூலையில் அமர்ந்திருப்பதை நான் கண்டேன், நானும் அவருக்கு அருகில் என் முழங்கால் அவரது முழங்காலைத் தொடும் அளவுக்கு அமர்ந்தேன், சிறிது நேரத்திற்குப் பிறகு உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் வெளியே வந்தார்கள், அவர்கள் எங்களை நோக்கி வருவதைக் கண்டதும், நான் சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரழி) அவர்களிடம், "இன்று உமர் (ரழி) அவர்கள் கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இதுவரை சொல்லாத ஒரு விஷயத்தைச் சொல்லப் போகிறார்கள்" என்று கூறினேன். சயீத் (ரழி) அவர்கள் ஆச்சரியத்துடன் என் கூற்றை மறுத்து, "உமர் (ரழி) அவர்கள் இதற்கு முன் ஒருபோதும் சொல்லாதது போன்ற எந்த விஷயத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். இதற்கிடையில், உமர் (ரழி) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள், தொழுகைக்கான அழைப்பாளர்கள் தங்கள் அழைப்பை முடித்ததும், உமர் (ரழி) அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குரியவாறு மகிமைப்படுத்தி புகழ்ந்துவிட்டு கூறினார்கள், "இப்போது, நான் உங்களுக்குச் சொல்ல அல்லாஹ் எனக்கு எழுதியுள்ள ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். எனக்குத் தெரியாது; ஒருவேளை அது என் மரணத்தை முன்னறிவிக்கலாம், எனவே எவர் அதைப் புரிந்துகொண்டு நினைவில் கொள்கிறாரோ, அவர் தனது வாகனம் அவரை எங்கு அழைத்துச் சென்றாலும் மற்றவர்களுக்கு அதை விவரிக்க வேண்டும், ஆனால் யாராவது தனக்குப் புரியவில்லை என்று பயந்தால், என்னைப் பற்றி பொய் சொல்வது அவருக்கு சட்டவிரோதமானது. அல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களை சத்தியத்துடன் அனுப்பினான், மேலும் அவருக்கு புனித வேதத்தை வஹீ (இறைச்செய்தி)யாக அருளினான், மேலும் அல்லாஹ் வஹீ (இறைச்செய்தி)யாக அருளியவற்றில், ரஜம் வசனமும் (சட்டவிரோத தாம்பத்திய உறவு கொள்ளும் திருமணமான ஆண் மற்றும் பெண்ணுக்கு கல்லெறிதல்) இருந்தது, நாங்கள் இந்த வசனத்தை ஓதினோம், புரிந்துகொண்டோம், மனனம் செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறியும் தண்டனையை நிறைவேற்றினார்கள், அவர்களுக்குப் பிறகு நாங்களும் அவ்வாறே செய்தோம். நீண்ட காலம் கடந்த பிறகு, யாராவது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் வேதத்தில் ரஜம் வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறுவார்கள் என்றும், அதனால் அல்லாஹ் வஹீ (இறைச்செய்தி)யாக அருளிய ஒரு கடமையை விட்டுவிடுவதன் மூலம் அவர்கள் வழிதவறிவிடுவார்கள் என்றும் நான் அஞ்சுகிறேன். மேலும் ரஜம் தண்டனையானது, சட்டவிரோத தாம்பத்திய உறவு கொள்ளும் எந்தவொரு திருமணமான நபருக்கும் (ஆண் மற்றும் பெண்), தேவையான சான்றுகள் கிடைத்தால் அல்லது கருத்தரிப்பு அல்லது ஒப்புதல் வாக்குமூலம் இருந்தால் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர் நாங்கள் அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள வசனங்களில் ஓதுவது வழக்கம்: 'ஓ மக்களே! உங்கள் தந்தையரைத் தவிர மற்றவர்களின் சந்ததியினர் என்று உரிமை கோராதீர்கள், ஏனெனில் உங்கள் உண்மையான தந்தையைத் தவிர மற்றவர்களின் சந்ததியினர் என்று நீங்கள் உரிமை கோருவது உங்கள் பங்கில் இறைமறுப்பு (நன்றிகெட்டத்தனம்) ஆகும்.' பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்கள் புகழப்பட்டது போல் என்னை மிகையாகப் புகழாதீர்கள், ஆனால் என்னை அல்லாஹ்வின் அடிமை மற்றும் அவனுடைய தூதர் என்று அழையுங்கள்.' (ஓ மக்களே!) உங்களில் ஒரு பேச்சாளர், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, உமர் (ரழி) அவர்கள் இறந்துவிட்டால், நான் இன்னாருக்கு விசுவாசப் பிரமாணம் செய்வேன்' என்று கூறுவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு அளிக்கப்பட்ட விசுவாசப் பிரமாணம் திடீரென்று அளிக்கப்பட்டது, அது வெற்றிகரமாக இருந்தது என்று கூறி யாரும் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. சந்தேகமில்லை, அது அப்படித்தான் இருந்தது, ஆனால் அல்லாஹ் (மக்களை) அதன் தீமையிலிருந்து காப்பாற்றினான், உங்களில் அபூபக்கர் (ரழி) அவர்களின் குணங்களைக் கொண்டவர் யாரும் இல்லை. மற்ற முஸ்லிம்களுடன் கலந்தாலோசிக்காமல் உங்களில் எவரேனும் ஒருவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்தால், அந்த நபரோ, விசுவாசப் பிரமாணம் செய்யப்பட்ட நபரோ ஆதரிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் இருவரும் கொல்லப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு, அன்சாரிகள் எங்களுடன் உடன்படவில்லை என்றும், பனீ சாஇதாவின் கொட்டகையில் கூடினார்கள் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அலீ (ரழி) அவர்களும், சுபைர் (ரழி) அவர்களும், அவர்களுடன் இருந்தவர்களும் எங்களை எதிர்த்தார்கள், அதே நேரத்தில் முஹாஜிரீன்கள் அபூபக்கர் (ரழி) அவர்களுடன் கூடினார்கள். நான் அபூபக்கர் (ரழி) அவர்களிடம், 'நம்முடைய இந்த அன்சாரி சகோதரர்களிடம் செல்வோம்' என்று கூறினேன். ஆகவே, நாங்கள் அவர்களைத் தேடிப் புறப்பட்டோம், நாங்கள் அவர்களை நெருங்கியபோது, அவர்களில் இரண்டு பக்தியுள்ள மனிதர்கள் எங்களைச் சந்தித்து, அன்சாரிகளின் இறுதி முடிவை எங்களுக்குத் தெரிவித்து, 'ஓ முஹாஜிரீன் (புலம்பெயர்ந்தவர்கள்) கூட்டமே! நீங்கள் எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நாங்கள் பதிலளித்தோம், 'நாங்கள் நம்முடைய இந்த அன்சாரி சகோதரர்களிடம் செல்கிறோம்.' அவர்கள் எங்களிடம், 'நீங்கள் அவர்களை நெருங்கக்கூடாது. நாங்கள் ஏற்கனவே முடிவு செய்ததை நிறைவேற்றுங்கள்' என்று கூறினார்கள். நான் கூறினேன், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் அவர்களிடம் செல்வோம்.' அவ்வாறே நாங்கள் பனீ சாஇதாவின் கொட்டகையில் அவர்களை அடையும் வரை முன்னேறினோம். இதோ! அவர்களிடையே ஒரு மனிதர் ஏதோ ஒன்றில் போர்த்தப்பட்டு அமர்ந்திருந்தார். நான் கேட்டேன், 'அந்த மனிதர் யார்?' அவர்கள் கூறினார்கள், 'அவர் சஅத் பின் உபாதா (ரழி) அவர்கள்.' நான் கேட்டேன், 'அவருக்கு என்ன ஆயிற்று?' அவர்கள் கூறினார்கள், 'அவர் நோயுற்றிருக்கிறார்.' நாங்கள் சிறிது நேரம் அமர்ந்த பிறகு, அன்சாரிகளின் பேச்சாளர், 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை' என்று கூறி, அல்லாஹ்வை அவனுக்குரியவாறு புகழ்ந்துவிட்டு, மேலும் கூறினார், 'தொடர்ந்து சொல்வதானால், நாங்கள் அல்லாஹ்வின் அன்சாரிகள் (உதவியாளர்கள்) மற்றும் முஸ்லிம் இராணுவத்தின் பெரும்பான்மையினர், அதே நேரத்தில் நீங்கள், புலம்பெயர்ந்தவர்கள், ஒரு சிறிய குழுவினர், உங்களில் சிலர் இந்த விஷயத்தை (கிலாஃபத்) நாங்கள் நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் மற்றும் அதை எங்களிடமிருந்து பறிக்கும் நோக்கத்துடன் வந்தீர்கள்.' பேச்சாளர் பேசி முடித்ததும், நான் விரும்பியதும், அபூபக்கர் (ரழி) அவர்களின் முன்னிலையில் வழங்க விரும்பியதும் ஆன ஒரு உரையை நான் தயாரித்திருந்ததால் பேச விரும்பினேன், நான் அவரைத் தூண்டிவிடுவதைத் தவிர்ப்பது வழக்கம். எனவே, நான் பேச விரும்பியபோது, அபூபக்கர் (ரழி) அவர்கள், 'சிறிது நேரம் பொறுங்கள்' என்று கூறினார்கள். அவரைக் கோபப்படுத்த நான் விரும்பவில்லை. எனவே அபூபக்கர் (ரழி) அவர்களே ஒரு உரை நிகழ்த்தினார்கள், அவர் என்னை விட ஞானமுள்ளவராகவும் பொறுமையுள்ளவராகவும் இருந்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் தயாரித்திருந்த என் சொந்த உரையில் நான் விரும்பிய ஒரு வாக்கியத்தைக் கூட அவர் தவறவிடவில்லை, ஆனால் அவர் அதைப் போன்றோ அல்லது அதைவிடச் சிறந்ததாகவோ இயல்பாகக் கூறினார். ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் கூறினார், 'ஓ அன்சாரிகளே! நீங்கள் உங்களுக்கு நீங்களே காரணம் காட்டிய அனைத்து (பண்புகளுக்கும்) தகுதியானவர்கள், ஆனால் இந்த (கிலாஃபத்) கேள்வி குறைஷிகளுக்கு மட்டுமே உரியது, ஏனெனில் அவர்கள் வம்சாவளி மற்றும் இருப்பிடம் ஆகியவற்றைப் பொறுத்தவரை அரேபியர்களில் சிறந்தவர்கள், இந்த இரண்டு மனிதர்களில் ஒருவரை நீங்கள் தேர்வு செய்யுமாறு பரிந்துரைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், எனவே நீங்கள் விரும்பியபடி அவர்களில் ஒருவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்.' பின்னர் அபூபக்கர் (ரழி) அவர்கள் என் கையையும், எங்களிடையே அமர்ந்திருந்த அபூ உபைதா பின் அல்-ஜர்ராஹ் (ரழி) அவர்களின் கையையும் பிடித்தார்கள். அவர் கூறியவற்றில் அந்தப் பிரேரணையைத் தவிர வேறு எதையும் நான் வெறுக்கவில்லை, ஏனெனில் அல்லாஹ்வின் மீது ஆணையாக, அபூபக்கர் (ரழி) அவர்கள் உறுப்பினராக இருக்கும் ஒரு தேசத்தின் ஆட்சியாளராவதை விட, ஒரு பாவத்திற்கான பரிகாரமாக என் கழுத்து துண்டிக்கப்படுவதை நான் விரும்புவேன், என் மரணத்தின் போது என் சுயமே தற்போது நான் உணராத ஒன்றை பரிந்துரைத்தால் தவிர.' பின்னர் அன்சாரிகளில் ஒருவர் கூறினார், 'நான் தோல் வியாதி (கரப்பான்) உள்ள ஒட்டகம் அரிப்பைத் தீர்க்க தன்னைத் தேய்த்துக் கொள்ளும் தூண் (அதாவது, நான் ஒரு மேன்மகன்), மேலும் நான் ஒரு உயர்தர பனை மரம் போன்றவன்! ஓ குறைஷிகளே. எங்களில் இருந்து ஒரு ஆட்சியாளரும், உங்களில் இருந்து ஒரு ஆட்சியாளரும் இருக்க வேண்டும்.' பின்னர் கூட்டத்தினரிடையே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது, அவர்களுடைய குரல்கள் உயர்ந்தன, அதனால் பெரும் கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்று நான் பயந்தேன், எனவே நான், 'ஓ அபூபக்கர் (ரழி) அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள்' என்று கூறினேன். அவர் தனது கையை நீட்டினார், நான் அவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்தேன், பின்னர் அனைத்து முஹாஜிரீன்களும் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள், அதன்பிறகு அன்சாரிகளும் அவ்வாறே செய்தார்கள். அவ்வாறே நாங்கள் சஅத் பின் உபாதா (ரழி) அவர்களை (அன்சாரிகள் ஆட்சியாளராக்க விரும்பியவர்) வெற்றி கொண்டோம். அன்சாரிகளில் ஒருவர், 'நீங்கள் சஅத் பின் உபாதா (ரழி) அவர்களைக் கொன்றுவிட்டீர்கள்' என்று கூறினார். நான் பதிலளித்தேன், 'அல்லாஹ் சஅத் பின் உபாதா (ரழி) அவர்களைக் கொன்றான்.' உமர் (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக, எங்களுக்கு நேர்ந்த பெரும் துயரத்தைத் தவிர (அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணம்), அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு அளிக்கப்பட்ட விசுவாசப் பிரமாணத்தை விட பெரிய பிரச்சினை எதுவும் இல்லை, ஏனென்றால் நாங்கள் மக்களை விட்டுச் சென்றால், அவர்கள் எங்களுக்குப் பிறகு தங்கள் மனிதர்களில் ஒருவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்துவிடுவார்களோ என்று நாங்கள் பயந்தோம், அவ்வாறு நடந்தால், எங்கள் உண்மையான விருப்பத்திற்கு எதிரான ஒன்றுக்கு நாங்கள் எங்கள் சம்மதத்தைக் கொடுத்திருப்போம், அல்லது அவர்களை எதிர்த்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருப்போம். எனவே, எந்தவொரு நபரும் மற்ற முஸ்லிம்களுடன் கலந்தாலோசிக்காமல் யாருக்காவது (கலீஃபாவாக ஆக) விசுவாசப் பிரமாணம் செய்தால், அவர் தேர்ந்தெடுத்தவருக்கு விசுவாசப் பிரமாணம் வழங்கப்படக்கூடாது, அவர்கள் இருவரும் கொல்லப்படலாம்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْبِكْرَانِ يُجْلَدَانِ وَيُنْفَيَانِ
திருமணமாகாதவர்கள் சாட்டையால் அடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டும்
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَأْمُرُ فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصَنْ جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي عُرْوَةَ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، غَرَّبَ، ثُمَّ لَمْ تَزَلْ تِلْكَ السُّنَّةَ‏.‏
ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள், சட்டவிரோதமான தாம்பத்திய உறவில் குற்றவாளியான திருமணம் ஆகாத ஒருவருக்கு நூறு கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும், ஒரு வருடத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடுவதை நான் செவியுற்றேன். உமர் இப்னு அல்-கத்தாப் (ரழி) அவர்களும் அத்தகைய நபரை நாடு கடத்தினார்கள், மேலும் இந்த நடைமுறை இன்றும் செல்லுபடியாகும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصَنْ بِنَفْىِ عَامٍ بِإِقَامَةِ الْحَدِّ عَلَيْهِ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சட்டவிரோதமான தாம்பத்திய உறவில் ஈடுபட்ட திருமணம் ஆகாத நபர் ஓராண்டுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும், சட்டப்படியான தண்டனையை (அதாவது, நூறு கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும்) பெற வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب نَفْىِ أَهْلِ الْمَعَاصِي وَالْمُخَنَّثِينَ
பாவிகளையும் பெண்தன்மை கொண்ட ஆண்களையும் நாடு கடத்துதல்
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالْمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ، وَقَالَ ‏ ‏ أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ ‏ ‏‏.‏ وَأَخْرَجَ فُلاَنًا، وَأَخْرَجَ عُمَرُ فُلاَنًا‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஆண்களில் பெண்களைப் போன்று நடந்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போன்று நடந்துகொள்பவர்களையும் சபித்தார்கள். மேலும் அவர்கள், "அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்" என்றும் கூறினார்கள். அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள், மேலும் உமர் (ரழி) அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَنْ أَمَرَ غَيْرَ الإِمَامِ بِإِقَامَةِ الْحَدِّ غَائِبًا عَنْهُ
ஆட்சியாளர் இல்லாத நிலையில் சட்டப்பூர்வமான தண்டனையை நிறைவேற்றுவது
حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، أَنَّ رَجُلاً، مِنَ الأَعْرَابِ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ جَالِسٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ اقْضِ بِكِتَابِ اللَّهِ‏.‏ فَقَامَ خَصْمُهُ فَقَالَ صَدَقَ اقْضِ لَهُ يَا رَسُولَ اللَّهِ بِكِتَابِ اللَّهِ، إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا فَزَنَى بِامْرَأَتِهِ فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ بِمِائَةٍ مِنَ الْغَنَمِ وَوَلِيدَةٍ، ثُمَّ سَأَلْتُ أَهْلَ الْعِلْمِ، فَزَعَمُوا أَنَّ مَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ‏.‏ فَقَالَ ‏ ‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، أَمَّا الْغَنَمُ وَالْوَلِيدَةُ فَرَدٌّ عَلَيْكَ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَأَمَّا أَنْتَ يَا أُنَيْسُ فَاغْدُ عَلَى امْرَأَةِ هَذَا فَارْجُمْهَا ‏ ‏‏.‏ فَغَدَا أُنَيْسٌ فَرَجَمَهَا‏.‏
அபூ ஹுரைரா (ரழி) மற்றும் ஸைத் இப்னு காலித் (ரழி) ஆகியோர் அறிவித்தார்கள்:

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! (எங்கள் வழக்கில்) அல்லாஹ்வின் சட்டங்களின்படி உங்கள் தீர்ப்பை வழங்குங்கள்" என்று கூறினார். பிறகு அவரது எதிர்வாதி எழுந்து, "அவர் உண்மையைச் சொல்லியிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! அல்லாஹ்வின் சட்டங்களின்படி அவரது வழக்கை முடிவு செய்யுங்கள். என் மகன் இந்த நபரிடம் கூலியாளாக வேலை செய்து வந்தான், மேலும் அவன், இவருடைய மனைவியுடன் முறையற்ற தாம்பத்திய உறவு கொண்டான். என் மகனுக்கு கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்று மக்கள் என்னிடம் கூறினார்கள், ஆனால் நான் அவனுக்காக நூறு ஆடுகளையும் ஒரு அடிமைப் பெண்ணையும் பிணைத்தொகையாக வழங்கினேன். பிறகு நான் மார்க்க அறிஞர்களிடம் கேட்டேன், அவர்கள் என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஒரு வருடத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் என்னிடம் கூறினார்கள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் சட்டங்களின்படி தீர்ப்பளிப்பேன். ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உன்னிடம் திருப்பிக் கொடுக்கப்படும், உன் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கப்படும், மேலும் ஒரு வருடத்திற்கு நாடு கடத்தப்படுவான். ஓ உனைஸ்! இந்த மனிதரின் மனைவிடம் செல்லுங்கள், (அவள் ஒப்புக்கொண்டால்) அவளைக் கல்லெறிந்து கொல்லுங்கள்." அவ்வாறே உனைஸ் (ரழி) காலையில் சென்றார்கள், (அவள் ஒப்புக்கொண்ட பிறகு) அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
بَابُ إِذَا زَنَتِ الأَمَةُ
ஒரு பெண் அடிமை விபச்சாரம் செய்தால்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ عَنِ الأَمَةِ إِذَا زَنَتْ وَلَمْ تُحْصَنْ قَالَ ‏ ‏ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ بِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ ‏ ‏‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ لاَ أَدْرِي بَعْدَ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் ஸைத் இப்னு காலித் (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்:
சட்டவிரோத தாம்பத்திய உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக திருமணமாகாத அடிமைப் பெண் ஒருத்தியைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்பு கோரப்பட்டது. அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், "அவள் சட்டவிரோத தாம்பத்திய உறவில் ஈடுபட்டால், அவளுக்கு (ஐம்பது) கசையடி கொடுங்கள்; அவள் (அதற்குப் பிறகு இரண்டாவது முறையாக) சட்டவிரோத தாம்பத்திய உறவில் ஈடுபட்டால், அவளுக்கு (ஐம்பது) கசையடி கொடுங்கள்; அவள் (மூன்றாவது முறையாக) சட்டவிரோத தாம்பத்திய உறவில் ஈடுபட்டால், அவளுக்கு (ஐம்பது) கசையடி கொடுங்கள், மேலும் அவளை ஒரு மயிரிழை கயிற்றுக்காகவேனும் விற்றுவிடுங்கள்." இப்னு ஷிஹாப் கூறினார்கள், "நபி (ஸல்) அவர்கள், அவள் மூன்றாவது அல்லது நான்காவது முறை சட்டவிரோத தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு விற்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்களா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب لاَ يُثَرَّبُ عَلَى الأَمَةِ إِذَا زَنَتْ وَلاَ تُنْفَى
ஒரு பெண் அடிமை சட்டவிரோதமான தாம்பத்திய உறவில் ஈடுபட்டால், அவளை கண்டிக்கவோ நாடு கடத்தவோ கூடாது
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ إِذَا زَنَتِ الأَمَةُ فَتَبَيَّنَ زِنَاهَا فَلْيَجْلِدْهَا وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتْ فَلْيَجْلِدْهَا وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتِ الثَّالِثَةَ فَلْيَبِعْهَا وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعَرٍ ‏ ‏‏.‏ تَابَعَهُ إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு அடிமைப் பெண் சட்டவிரோதமான தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, அவள் சட்டவிரோதமான தாம்பத்திய உறவில் ஈடுபட்ட குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அப்போது அவள் கசையடிக்கப்பட வேண்டும் (ஐம்பது அடிகள்); ஆனால் அவள் கண்டிக்கப்படக் கூடாது; மேலும் அவள் மீண்டும் சட்டவிரோதமான தாம்பத்திய உறவில் ஈடுபட்டால், அப்போது அவள் மீண்டும் கசையடிக்கப்பட வேண்டும்; ஆனால் அவள் கண்டிக்கப்படக் கூடாது; மேலும் அவள் மூன்றாவது முறையாக சட்டவிரோதமான தாம்பத்திய உறவில் ஈடுபட்டால், அப்போது அவள் ஒரு மயிரிழைக் கயிற்றுக்குக் கூட விற்கப்பட வேண்டும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب أَحْكَامِ أَهْلِ الذِّمَّةِ وَإِحْصَانِهِمْ إِذَا زَنَوْا وَرُفِعُوا إِلَى الإِمَامِ
முஸ்லிம் அரசின் பாதுகாப்பில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கான சட்ட ஒழுங்குமுறை
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى عَنِ الرَّجْمِ، فَقَالَ رَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏ فَقُلْتُ أَقَبْلَ النُّورِ أَمْ بَعْدَهُ قَالَ لاَ أَدْرِي‏.‏ تَابَعَهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ وَالْمُحَارِبِيُّ وَعَبِيدَةُ بْنُ حُمَيْدٍ عَنِ الشَّيْبَانِيِّ‏.‏ وَقَالَ بَعْضُهُمُ الْمَائِدَةُ‏.‏ وَالأَوَّلُ أَصَحُّ‏.‏
அஷ்-ஷைபானி அறிவித்தார்கள்:
நான் `அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரழி) அவர்களிடம் ரஜம் (சட்டவிரோதமான தாம்பத்திய உறவில் ஈடுபட்டதற்காக ஒருவரைக் கல்லெறிந்து கொல்லுதல்) பற்றிக் கேட்டேன். அவர்கள் பதிலளித்தார்கள், "நபி (ஸல்) அவர்கள் ரஜம் தண்டனையை நிறைவேற்றினார்கள்," நான் கேட்டேன், "அது சூரத்துந் நூர் வஹீ (இறைச்செய்தி) அருளப்படுவதற்கு முன்னரா அல்லது பின்னரா?" அவர்கள் பதிலளித்தார்கள், "எனக்குத் தெரியாது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ إِنَّ الْيَهُودَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلاً مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ ‏ ‏‏.‏ فَقَالُوا نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ‏.‏ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا‏.‏ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ ارْفَعْ يَدَكَ‏.‏ فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ‏.‏ قَالُوا صَدَقَ يَا مُحَمَّدُ فِيهَا آيَةُ الرَّجْمِ‏.‏ فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَا، فَرَأَيْتُ الرَّجُلَ يَحْنِي عَلَى الْمَرْأَةِ يَقِيهَا الْحِجَارَةَ‏.‏
`அப்துல்லாஹ் பின் `உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொண்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களிடம், "ரஜம் குறித்து தௌராத்தில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அவர்கள், "நாங்கள் அவர்களை அவமானப்படுத்தி, சாட்டையால் அடிப்போம்" என்று பதிலளித்தார்கள். `அப்துல்லாஹ் பின் சலாம் (ரழி) அவர்கள் அவர்களிடம், 'நீங்கள் பொய் சொல்லிவிட்டீர்கள், ரஜமின் தண்டனை தௌராத்தில் உள்ளது' என்று கூறினார்கள். அவர்கள் தௌராத்தைக் கொண்டு வந்து அதைத் திறந்தார்கள். அவர்களில் ஒருவன் ரஜம் வசனத்தின் மீது தனது கையை வைத்து, அதற்கு முன்னும் பின்னும் உள்ளதை வாசித்தான். `அப்துல்லாஹ் பின் சலாம் (ரழி) அவர்கள் அவனிடம், "உன் கையை எடு" என்று கூறினார்கள். அவன் அதை எடுத்தபோது அங்கே ரஜம் வசனம் வெளிப்பட்டது. ஆகவே அவர்கள், "ஓ முஹம்மத் (ஸல்)! அவர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார், ரஜம் வசனம் அதில் (தௌராத்தில்) உள்ளது" என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சட்டவிரோதமான தாம்பத்திய உறவில் ஈடுபட்ட) அந்த இரண்டு நபர்களையும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள், அதன்படி அவர்கள் கல்லெறியப்பட்டார்கள், அந்த ஆண் அந்தப் பெண்ணின் மீது குனிந்து கற்களிலிருந்து அவளைப் பாதுகாப்பதற்காக நிற்பதை நான் பார்த்தேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
بَابُ إِذَا رَمَى امْرَأَتَهُ أَوِ امْرَأَةَ غَيْرِهِ بِالزِّنَا عِنْدَ الْحَاكِمِ وَالنَّاسِ، هَلْ عَلَى الْحَاكِمِ أَنْ يَبْعَثَ إِلَيْهَا فَيَسْأَلَهَا عَمَّا رُمِيَتْ بِهِ
யாரேனும் தனது மனைவியை அல்லது மற்றொருவரின் மனைவியை தடைசெய்யப்பட்ட தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினால்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ، أَنَّهُمَا أَخْبَرَاهُ أَنَّ رَجُلَيْنِ اخْتَصَمَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَحَدُهُمَا اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ‏.‏ وَقَالَ الآخَرُ وَهْوَ أَفْقَهُهُمَا أَجَلْ يَا رَسُولَ اللَّهِ فَاقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، وَأْذَنْ لِي أَنْ أَتَكَلَّمَ‏.‏ قَالَ ‏"‏ تَكَلَّمْ ‏"‏‏.‏ قَالَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا ـ قَالَ مَالِكٌ وَالْعَسِيفُ الأَجِيرُ ـ فَزَنَى بِامْرَأَتِهِ، فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَبِجَارِيَةٍ لِي، ثُمَّ إِنِّي سَأَلْتُ أَهْلَ الْعِلْمِ فَأَخْبَرُونِي أَنَّ مَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَإِنَّمَا الرَّجْمُ عَلَى امْرَأَتِهِ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، أَمَّا غَنَمُكَ وَجَارِيَتُكَ فَرَدٌّ عَلَيْكَ ‏"‏‏.‏ وَجَلَدَ ابْنَهُ مِائَةً وَغَرَّبَهُ عَامًا، وَأَمَرَ أُنَيْسًا الأَسْلَمِيَّ أَنْ يَأْتِيَ امْرَأَةَ الآخَرِ، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا، فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் ஸைத் பின் காலித் (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் இரண்டு மனிதர்களுக்கு இடையே ஒரு தகராறு ஏற்பட்டது. அவர்களில் ஒருவர், "அல்லாஹ்வின் சட்டங்களின்படி எங்களுக்குத் தீர்ப்பளியுங்கள்" என்று கூறினார். அதிக விவேகமுள்ளவரான மற்றவர், "ஆம், அல்லாஹ்வின் தூதரே (ஸல்), அல்லாஹ்வின் சட்டங்களின்படி எங்களுக்குத் தீர்ப்பளியுங்கள், மேலும் நான் (முதலில்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'பேசு" என்று கூறினார்கள். அவர் கூறினார், "என் மகன் இந்த மனிதரிடம் ஒரு தொழிலாளியாக இருந்தான், மேலும் அவன் இவருடைய மனைவியுடன் முறையற்ற தாம்பத்திய உறவு கொண்டான், மேலும் மக்கள் என்னிடம் என் மகனுக்கு கல்லெறிந்து மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள், ஆனால் நான் என் மகனின் பாவத்திற்குப் பரிகாரமாக (ஈடாக) நூறு ஆடுகளையும் ஒரு அடிமைப் பெண்ணையும் கொடுத்திருக்கிறேன். பிறகு நான் மார்க்க அறிஞர்களிடம் (அதுபற்றிக்) கேட்டேன், மேலும் அவர்கள் என்னிடம் என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஓராண்டுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும், மேலும் இந்த மனிதரின் மனைவிக்கு மட்டுமே கல்லெறிந்து மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்கள்." அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, நான் அல்லாஹ்வின் சட்டங்களின்படி உங்களுக்குத் தீர்ப்பளிப்பேன்: ஓ மனிதரே, உங்கள் ஆடுகள் மற்றும் அடிமைப் பெண்ணைப் பொறுத்தவரை, அவை உங்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்." பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரின் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கச் செய்தார்கள் மேலும் ஓராண்டுக்கு நாடு கடத்தச் செய்தார்கள், மேலும் உனைஸ் அல்-அஸ்லமீ (ரழி) அவர்களுக்கு மற்ற மனிதரின் மனைவியிடம் செல்லும்படியும், அவள் ஒப்புக்கொண்டால், அவளுக்கு கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றும்படியும் கட்டளையிட்டார்கள். அவள் ஒப்புக்கொண்டாள் மேலும் கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
بَابُ مَنْ أَدَّبَ أَهْلَهُ أَوْ غَيْرَهُ دُونَ السُّلْطَانِ
யார் தனது குடும்பத்தினருக்கோ அல்லது மற்றவர்களுக்கோ நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறாரோ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَ أَبُو بَكْرِ ـ رضى الله عنه ـ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي فَقَالَ حَبَسْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ‏.‏ فَعَاتَبَنِي، وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي، وَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلاَّ مَكَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ‏.‏
`ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தொடையில் தலையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தபோது அபூபக்ர் (ரழி) என்னிடம் வந்தார்கள். அபூபக்ர் (ரழி) (என்னிடம்) கூறினார்கள், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் மக்களையும் தடுத்து நிறுத்திவிட்டீர்கள், மேலும் இந்த இடத்தில் தண்ணீர் இல்லை." ஆகவே, அவர்கள் என்னைக் கண்டித்தார்கள் மேலும் அவர்களின் கையால் என் விலாப் புறங்களில் அடித்தார்கள், மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தொடையில்) சாய்ந்திருந்ததைத் தவிர வேறு எதுவும் என்னை அசைவதிலிருந்து தடுக்கவில்லை, பின்னர் அல்லாஹ் தயம்மம் பற்றிய இறை வசனத்தை வஹீ (இறைச்செய்தி) ஆக அருளினான்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَقْبَلَ أَبُو بَكْرٍ فَلَكَزَنِي لَكْزَةً شَدِيدَةً وَقَالَ حَبَسْتِ النَّاسَ فِي قِلاَدَةٍ‏.‏ فَبِي الْمَوْتُ لِمَكَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ أَوْجَعَنِي‏.‏ نَحْوَهُ‏.‏ لَكَزَ وَوَكَزَ وَاحِدٌ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அபூபக்கர் (ரழி) அவர்கள் என்னிடம் வந்து, அவர்களது முஷ்டியால் என்னை வன்மையாக அடித்து, “உங்களுடைய கழுத்து மாலையின் காரணமாக நீங்கள் மக்களைத் தடுத்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள். ஆனால், அந்த அடி மிகவும் வலி மிகுந்ததாக இருந்தபோதிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் எழுப்பிவிடுவேனோ என்று அஞ்சி, நான் இறந்துவிட்டவளைப் போல அசையாமல் இருந்தேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَنْ رَأَى مَعَ امْرَأَتِهِ رَجُلاً فَقَتَلَهُ
யார் தனது மனைவியை வேறொரு ஆணுடன் கண்டு அவனைக் கொன்றாரோ
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ وَرَّادٍ، كَاتِبِ الْمُغِيرَةِ عَنِ الْمُغِيرَةِ، قَالَ قَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ لَوْ رَأَيْتُ رَجُلاً مَعَ امْرَأَتِي لَضَرَبْتُهُ بِالسَّيْفِ غَيْرَ مُصْفَحٍ‏.‏ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ أَتَعْجَبُونَ مِنْ غَيْرَةِ سَعْدٍ، لأَنَا أَغْيَرُ مِنْهُ، وَاللَّهُ أَغْيَرُ مِنِّي ‏ ‏‏.‏
அல்-முகீரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஸஅத் பின் உபாதா (ரழி) அவர்கள் கூறினார்கள், "நான் என் மனைவியுடன் ஒரு мужчиனையக் கண்டால், என் வாளின் கூர்மையான முனையால் அவனைக் கொன்றுவிடுவேன்." நபி (ஸல்) அவர்கள் அதைக் கேட்டபோது, அவர்கள் கூறினார்கள், "ஸஅத்தின் கீரா (தன்மானம்) உணர்வைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நிச்சயமாக, நான் ஸஅத்தை விட அதிக கீரா (தன்மானம்) உடையவன், மேலும், அல்லாஹ் என்னை விட அதிக கீரா (தன்மானம்) உடையவன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَا جَاءَ فِي التَّعْرِيضِ
அத்-தஃரீள்
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ غُلاَمًا أَسْوَدَ‏.‏ فَقَالَ ‏"‏ هَلْ لَكَ مِنْ إِبِلٍ ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ مَا أَلْوَانُهَا ‏"‏‏.‏ قَالَ حُمْرٌ‏.‏ قَالَ ‏"‏ فِيهَا مِنْ أَوْرَقَ ‏"‏‏.‏ قَالَ نَعَمْ‏.‏ قَالَ ‏"‏ فَأَنَّى كَانَ ذَلِكَ ‏"‏‏.‏ قَالَ أُرَاهُ عِرْقٌ نَزَعَهُ‏.‏ قَالَ ‏"‏ فَلَعَلَّ ابْنَكَ هَذَا نَزَعَهُ عِرْقٌ ‏"‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் மனைவி ஒரு கறுப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளாள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "அவை என்ன நிறத்தில் இருக்கின்றன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அவை சிவப்பு நிறத்தில் இருக்கின்றன" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் மேலும், "அவற்றில் ஏதேனும் சாம்பல் நிறத்தில் இருக்கின்றனவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "அந்தச் சாம்பல் நிறம் எங்கிருந்து வந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அது ஒட்டகத்தின் மூதாதையரிடமிருந்து வந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என்றார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), "ஆகவே, உன்னுடைய இந்தக் குழந்தையும் பெரும்பாலும் அவனுடைய மூதாதையரிடமிருந்து அந்த நிறத்தைப் பெற்றிருக்கக்கூடும்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب كَمِ التَّعْزِيرُ وَالأَدَبُ
அவர்கள் மீண்டும் அதே பாவத்தை செய்யாமல் இருக்க அல்லது நல்ல நடத்தையை கற்றுக்கொள்ள, அந்த நபருக்கு என்ன தண்டனை வழங்கப்படலாம்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ لاَ يُجْلَدُ فَوْقَ عَشْرِ جَلَدَاتٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ‏ ‏‏.‏
அபூ புர்தா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்வினால் சட்டப்பூர்வ தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றத்தில் குற்றவாளியானவர் தவிர, வேறு எவரும் பத்து கசையடிகளுக்கு மேல் கசையடிக்கப்படலாகாது.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَابِرٍ، عَمَّنْ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ عُقُوبَةَ فَوْقَ عَشْرِ ضَرَبَاتٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ‏ ‏‏.‏
அப்துர்-ரஹ்மான் பின் ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

மற்றவர்கள் வாயிலாக, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வினால் சட்டபூர்வமான தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றத்தில் ஒருவர் குற்றவாளியாக இருந்தாலன்றி, எந்தத் தண்டனையும் பத்து கசையடிகளை விட அதிகமாகாது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ قَالَ بَيْنَمَا أَنَا جَالِسٌ، عِنْدَ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ إِذْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَابِرٍ فَحَدَّثَ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا سُلَيْمَانُ بْنُ يَسَارٍ فَقَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَابِرٍ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا بُرْدَةَ الأَنْصَارِيَّ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ لاَ تَجْلِدُوا فَوْقَ عَشْرَةِ أَسْوَاطٍ إِلاَّ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ‏ ‏‏.‏
அபூ புர்தா அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன், "அல்லாஹ்வினால் விதிக்கப்படும் ஹத் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்தவரைத் தவிர, வேறு எவரையும் பத்துக் கசையடிகளுக்கு மேல் அடிக்காதீர்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْوِصَالِ فَقَالَ لَهُ رِجَالٌ مِنَ الْمُسْلِمِينَ فَإِنَّكَ يَا رَسُولَ اللَّهِ تُوَاصِلُ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَيُّكُمْ مِثْلِي إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ ‏"‏‏.‏ فَلَمَّا أَبَوْا أَنْ يَنْتَهُوا عَنِ الْوِصَالِ وَاصَلَ بِهِمْ يَوْمًا ثُمَّ يَوْمًا ثُمَّ رَأَوُا الْهِلاَلَ فَقَالَ ‏"‏ لَوْ تَأَخَّرَ لَزِدْتُكُمْ ‏"‏‏.‏ كَالْمُنَكِّلِ بِهِمْ حِينَ أَبَوْا‏.‏ تَابَعَهُ شُعَيْبٌ وَيَحْيَى بْنُ سَعِيدٍ وَيُونُسُ عَنِ الزُّهْرِيِّ‏.‏ وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்-விஸால் (எந்த உணவும் உட்கொள்ளாமல் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்பது)-ஐ தடுத்தார்கள்.

முஸ்லிம்களில் ஒருவர், "ஆனால் தாங்கள் அல்-விஸால் செய்கிறீர்களே, அல்லாஹ்வின் தூதரே (ஸல்)!" என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் என்னைப் போன்றவர் யார்?

நான் உறங்குகிறேன், என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் செய்கிறான்."

மக்கள் அல்-விஸாலை கைவிட மறுத்தபோது, நபி (ஸல்) அவர்கள் அவர்களுடன் ஒரு நாள் நோன்பு நோற்றார்கள், மேலும் தங்கள் நோன்பை முறிக்காமல் மற்றொரு நாளும் நோன்பைத் தொடர்ந்தார்கள். பிறையை அவர்கள் கண்டபோது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "பிறை தென்படாமல் இருந்திருந்தால், நான் உங்களை (மூன்றாவது நாளாக) நோன்பைத் தொடரச் செய்திருப்பேன்," அவர்கள் அல்-விஸாலை கைவிட மறுத்ததற்காக அவர்களைத் தண்டிக்கும் விதமாக.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنِي عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُمْ كَانُوا يُضْرَبُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اشْتَرَوْا طَعَامًا جِزَافًا أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِمْ حَتَّى يُئْوُوهُ إِلَى رِحَالِهِمْ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில், தோராயமாக (எடைபோடாமலோ அல்லது அளக்காமலோ) உணவுப் பொருட்களை வாங்கும் மக்கள், தாங்கள் வாங்கிய இடத்திலேயே அவற்றை விற்றால், தங்கள் இருப்பிடங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்லும் வரை (அவ்வாறு விற்றதற்காக) அவர்கள் அடிக்கப்பட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِنَفْسِهِ فِي شَىْءٍ يُؤْتَى إِلَيْهِ حَتَّى تُنْتَهَكَ مِنْ حُرُمَاتِ اللَّهِ فَيَنْتَقِمَ لِلَّهِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்மிடம் கொண்டுவரப்பட்ட எந்தவொரு விஷயத்திலும், அல்லாஹ்வின் வரம்புகள் மீறப்படும்வரை தமக்காக ஒருபோதும் பழிவாங்கமாட்டார்கள். (வரம்புகள்) மீறப்பட்டாலோ, அல்லாஹ்வுக்காக பழிவாங்குவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَنْ أَظْهَرَ الْفَاحِشَةَ وَاللَّطْخَ وَالتُّهَمَةَ بِغَيْرِ بَيِّنَةٍ
சந்தேகத்திற்கிடமான மற்றும் நேர்மையற்ற முறையில் நடந்துகொள்வது; மற்றும் ஆதாரமின்றி மற்றவர்களைக் குற்றம் சாட்டுவது
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ شَهِدْتُ الْمُتَلاَعِنَيْنِ وَأَنَا ابْنُ خَمْسَ، عَشْرَةَ، فَرَّقَ بَيْنَهُمَا فَقَالَ زَوْجُهَا كَذَبْتُ عَلَيْهَا إِنْ أَمْسَكْتُهَا‏.‏ قَالَ فَحَفِظْتُ ذَاكَ مِنَ الزُّهْرِيِّ ‏ ‏ إِنْ جَاءَتْ بِهِ كَذَا وَكَذَا فَهْوَ، وَإِنْ جَاءَتْ بِهِ كَذَا وَكَذَا كَأَنَّهُ وَحَرَةٌ فَهُوَ ‏ ‏‏.‏ وَسَمِعْتُ الزُّهْرِيَّ يَقُولُ جَاءَتْ بِهِ لِلَّذِي يُكْرَهُ
ஸஹ்ல் பின் ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் பதினைந்து வயதாக இருந்தபோது, லிஆன் வழக்கை (ஒரு கணவன் தன் மனைவியின் மீது சட்டவிரோத தாம்பத்திய உறவு கொண்டதாக குற்றம் சாட்டும் வழக்கு) கண்டேன். நபி (ஸல்) அவர்கள் அவர்கள் விவாகரத்து செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார்கள், மேலும் கணவன், "நான் அவளை வைத்திருந்தால், நான் ஒரு பொய்யனாகி விடுவேன்" என்று கூறினார். அஸ்-ஸுபைர் (ரழி) அவர்களும், "(கூறப்பட்டது) அந்தப் பெண் இன்னின்ன வர்ணனையுடன் குழந்தையைப் பெற்றெடுத்தால், அவளுடைய கணவன் உண்மையாளன் என்று நிரூபிக்கப்படுவான், ஆனால் அவள் வஹ்ரா (ஒரு சிவப்பு பூச்சி) போன்று இன்னின்ன வர்ணனையுடன் அதைப் பெற்றெடுத்தால், அவன் பொய்யன் என்று நிரூபிக்கப்படுவான்" என்று கூறினார்கள் என எனக்கு நினைவிருக்கிறது. அஸ்-ஸுபைர் (ரழி) அவர்கள், "இறுதியாக அவள் தன் கணவன் விரும்பாத வர்ணனையுடன் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்" என்று கூறுவதையும் நான் கேட்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، قَالَ ذَكَرَ ابْنُ عَبَّاسٍ الْمُتَلاَعِنَيْنِ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ هِيَ الَّتِي قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لَوْ كُنْتُ رَاجِمًا امْرَأَةً عَنْ غَيْرِ بَيِّنَةٍ ‏ ‏‏.‏ قَالَ لاَ، تِلْكَ امْرَأَةٌ أَعْلَنَتْ‏.‏
அல்-காஸிம் பின் முஹம்மது அவர்கள் அறிவித்தார்கள்:

இப்னு `அப்பாஸ் (ரழி) அவர்கள் லிஆன் சத்தியம் செய்த தம்பதியினரைக் குறிப்பிட்டார்கள். `அப்துல்லாஹ் பின் ஷத்தாத் அவர்கள் (அவரிடம்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'நான் எப்போதாவது எந்தப் பெண்ணையாவது சாட்சிகள் இல்லாமல் கல்லெறிந்து கொல்ல நேரிட்டால் (அந்தப் பெண்ணைக் கல்லெறிந்து கொன்றிருப்பேன்)' என்று எந்தப் பெண்ணைக் குறித்துக் கூறினார்களோ அந்தப் பெண்தானா இவள்?" என்று கேட்டார்கள். இப்னு `அப்பாஸ் (ரழி) அவர்கள், "இல்லை, அந்தப் பெண்மணி (தனது சந்தேகத்திற்கிடமான நடத்தையால்) தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்" என்று பதிலளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ ذُكِرَ التَّلاَعُنُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ عَاصِمُ بْنُ عَدِيٍّ فِي ذَلِكَ قَوْلاً، ثُمَّ انْصَرَفَ وَأَتَاهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ يَشْكُو أَنَّهُ وَجَدَ مَعَ أَهْلِهِ فَقَالَ عَاصِمٌ مَا ابْتُلِيتُ بِهَذَا إِلاَّ لِقَوْلِي فَذَهَبَ بِهِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ بِالَّذِي وَجَدَ عَلَيْهِ امْرَأَتَهُ، وَكَانَ ذَلِكَ الرَّجُلُ مُصْفَرًّا، قَلِيلَ اللَّحْمِ، سَبِطَ الشَّعَرِ، وَكَانَ الَّذِي ادَّعَى عَلَيْهِ أَنَّهُ وَجَدَهُ عِنْدَ أَهْلِهِ آدَمَ، خَدْلاً، كَثِيرَ اللَّحْمِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ اللَّهُمَّ بَيِّنْ ‏"‏‏.‏ فَوَضَعَتْ شَبِيهًا بِالرَّجُلِ الَّذِي ذَكَرَ زَوْجُهَا أَنَّهُ وَجَدَهُ عِنْدَهَا فَلاَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُمَا فَقَالَ رَجُلٌ لاِبْنِ عَبَّاسٍ فِي الْمَجْلِسِ هِيَ الَّتِي قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ لَوْ رَجَمْتُ أَحَدًا بِغَيْرِ بَيِّنَةٍ رَجَمْتُ هَذِهِ ‏"‏‏.‏ فَقَالَ لاَ، تِلْكَ امْرَأَةٌ كَانَتْ تُظْهِرُ فِي الإِسْلاَمِ السُّوءَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் லியான் பற்றிக் குறிப்பிடப்பட்டது. ஆஸிம் பின் அதீ (ரழி) அவர்கள் அது குறித்து ஒரு கருத்தைக் கூறினார்கள். அவர்கள் சென்றதும், அவர்களுடைய கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் வந்து, தாம் தம் மனைவியுடன் ஓர் ஆடவரைக் கண்டதாக முறையிட்டார். ஆஸிம் (ரழி) அவர்கள், "என்னுடைய கூற்றின் காரணமாகவே நான் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன்" என்று கூறினார்கள். எனவே அவர் அந்த மனிதரை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார். அந்த மனிதரும் அவர்களிடம் அந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறினார். அந்த மனிதர் (கணவர்) மஞ்சள் நிறத்தவராகவும், மெலிந்தவராகவும், ஒட்டிய முடியுடையவராகவும் இருந்தார். அதே சமயம், தம் மனைவியுடன் இருந்ததாக அவர் குற்றம் சாட்டிய மனிதரோ, சிவந்த பழுப்பு நிறத்தவராகவும், தடித்த கொழுத்த கால்களையும், பருத்த உடலையும் உடையவராக இருந்தார். நபி (ஸல்) அவர்கள், "யா அல்லாஹ்! உண்மையை வெளிப்படுத்துவாயாக" என்று கூறினார்கள். பின்னர், அந்தப் பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்; அது, கணவர் தம்முடன் இருந்ததாகக் குற்றம் சாட்டிய அந்த மனிதரைப் போலவே இருந்தது. எனவே நபி (ஸல்) அவர்கள் அவர்களை லியான் சத்தியம் செய்ய வைத்தார்கள்.

சபையில் ஒருவர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள், 'சாட்சிகள் இல்லாமல் எந்தப் பெண்ணையாவது (சட்டவிரோத தாம்பத்திய உறவு கொண்டதற்காக) நான் கல்லெறிந்து கொல்ல நேர்ந்தால், இந்தப் பெண்ணை நான் கல்லெறிந்து கொன்றிருப்பேன்' என்று கூறினார்களே, அந்தப் பெண்மணி இவர்தானா?" என்று கேட்டார். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், "இல்லை, அவர் வேறு ஒரு பெண்மணி. அவர் முஸ்லிம்களிடையே சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வார், அதனால் ஒருவர் அவர் மீது சட்டவிரோத தாம்பத்திய உறவு கொண்டதாகக் குற்றம் சாட்டக்கூடும்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب رَمْىِ الْمُحْصَنَاتِ
கற்புள்ள பெண்களைப் பழிசுமத்துவது
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ ‏"‏‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ ‏"‏ الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلاَتِ ‏"‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஏழு பெரும் அழித்தொழிக்கும் பாவங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்." அவர்கள் (மக்கள்!) கேட்டார்கள், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! அவை யாவை?" அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது; சூனியம் செய்வது; அல்லாஹ் தடைசெய்த உயிரை நியாயமான காரணமின்றி (இஸ்லாமிய சட்டத்தின்படி) கொலை செய்வது; வட்டியை (ரிபா) உண்பது, அனாதையின் சொத்தை உண்பது; போரின்போது போர்க்களத்திலிருந்து எதிரிக்கு முதுகைக் காட்டி ஓடுவது மற்றும் கற்பைப் பாதிக்கும் எதையும் ஒருபோதும் நினைக்காத, நல்ல நம்பிக்கையுள்ள கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب قَذْفِ الْعَبِيدِ
அடிமைகளைப் பழித்துரைத்தல்
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ أَبَا الْقَاسِمِ، صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ مَنْ قَذَفَ مَمْلُوكَهُ وَهْوَ بَرِيءٌ مِمَّا قَالَ، جُلِدَ يَوْمَ الْقِيَامَةِ، إِلاَّ أَنْ يَكُونَ كَمَا قَالَ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபுல்-காசிம் (நபி (ஸல்)) அவர்கள் கூற நான் கேட்டேன்: "யாரேனும் ஒருவர் தம்முடைய அடிமையின் மீது அவதூறு கூறி, அந்த அடிமை அவர் கூறிய அவதூறிலிருந்து குற்றமற்றவராக இருந்தால், அவர் (அவதூறு கூறியவர்) மறுமை நாளில் கசையடி கொடுக்கப்படுவார்; அந்த அடிமை அவர் விவரித்தவாறே உண்மையில் இருந்தாலன்றி."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب هَلْ يَأْمُرُ الإِمَامُ رَجُلاً فَيَضْرِبُ الْحَدَّ غَائِبًا عَنْهُ
ஒரு ஆட்சியாளர் தானே நேரில் இல்லாமல் ஒருவருக்கு சட்டப்பூர்வமான தண்டனையை உத்தரவிட முடியுமா?
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالاَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَنْشُدُكَ اللَّهَ إِلاَّ قَضَيْتَ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ‏.‏ فَقَامَ خَصْمُهُ وَكَانَ أَفْقَهَ مِنْهُ فَقَالَ صَدَقَ، اقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، وَأْذَنْ لِي يَا رَسُولَ اللَّهِ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ قُلْ ‏"‏‏.‏ فَقَالَ إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا فِي أَهْلِ، هَذَا فَزَنَى بِامْرَأَتِهِ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ وَخَادِمٍ وَإِنِّي سَأَلْتُ رِجَالاً مِنْ أَهْلِ الْعِلْمِ فَأَخْبَرُونِي أَنَّ عَلَى ابْنِي جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ، وَأَنَّ عَلَى امْرَأَةِ هَذَا الرَّجْمَ‏.‏ فَقَالَ ‏"‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، الْمِائَةُ وَالْخَادِمُ رَدٌّ عَلَيْكَ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَيَا أُنَيْسُ اغْدُ عَلَى امْرَأَةِ هَذَا فَسَلْهَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا ‏"‏‏.‏ فَاعْتَرَفَتْ فَرَجَمَهَا‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் சட்டங்களின்படி எங்களுக்குத் தீர்ப்பளிக்குமாறு நான் உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்" என்று கூறினார். பிறகு, அவரை விட புத்திசாலியாக இருந்த அவருடைய எதிர்வாதி எழுந்து நின்று, "அவர் உண்மையைத்தான் பேசியிருக்கிறார். ஆகவே, அல்லாஹ்வின் சட்டங்களின்படி எங்களுக்குத் தீர்ப்பளியுங்கள், மேலும் தயவுசெய்து என்னை (பேச) அனுமதியுங்கள், அல்லாஹ்வின் தூதரே (ஸல்) அவர்களே" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "பேசுங்கள்" என்று கூறினார்கள். அவர் கூறினார், "என் மகன் இந்த மனிதரின் குடும்பத்தில் ஒரு தொழிலாளியாக இருந்தான், மேலும் அவன் இவருடைய மனைவியுடன் சட்டவிரோதமான தாம்பத்திய உறவு கொண்டான். நான் (என் மகனுக்காக) நூறு ஆடுகளையும் ஒரு அடிமையையும் ஈட்டுத்தொகையாகக் கொடுத்தேன். ஆனால் நான் மார்க்க அறிஞர்களிடம் (இந்த வழக்கில்) கேட்டேன், அவர்கள் என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும், ஓராண்டுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவி கல்லெறியப்பட வேண்டும் (மரணம் அடையும்வரை) என்றும் எனக்குத் தெரிவித்தார்கள்." நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நான் உங்களுக்கு (இந்த வழக்கில்) அல்லாஹ்வின் சட்டங்களின்படி தீர்ப்பளிப்பேன். அந்த நூறு (ஆடுகள்) மற்றும் அடிமையும் உங்களிடமே திருப்பிக் கொடுக்கப்படும், மேலும் உங்கள் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கப்படும், மேலும் ஓராண்டுக்கு நாடு கடத்தப்படுவான். மேலும் உனைஸே (ரழி)! காலையில் இந்த மனிதரின் மனைவியிடம் செல்லுங்கள், அவளிடம் கேளுங்கள், அவள் ஒப்புக்கொண்டால், அவளைக் கல்லெறிந்து கொல்லுங்கள்." அவள் ஒப்புக்கொண்டாள், மேலும் அவர் (உனைஸ் (ரழி) அவர்கள்) அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح