صحيح البخاري

8. كتاب الصلاة

ஸஹீஹுல் புகாரி

8. தொழுகைகள் (ஸலாத்)

باب كَيْفَ فُرِضَتِ الصَّلاَةُ فِي الإِسْرَاءِ
பாடம்: அல்-இஸ்ரா (இரவுப் பயணத்)தின் போது தொழுகை எவ்வாறு விதிக்கப்பட்டது?
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ أَبُو ذَرٍّ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ فُرِجَ عَنْ سَقْفِ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهُ فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَلَمَّا جِئْتُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ جِبْرِيلُ لِخَازِنِ السَّمَاءِ افْتَحْ‏.‏ قَالَ مَنْ هَذَا قَالَ هَذَا جِبْرِيلُ‏.‏ قَالَ هَلْ مَعَكَ أَحَدٌ قَالَ نَعَمْ مَعِي مُحَمَّدٌ صلى الله عليه وسلم‏.‏ فَقَالَ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ‏.‏ فَلَمَّا فَتَحَ عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا، فَإِذَا رَجُلٌ قَاعِدٌ عَلَى يَمِينِهِ أَسْوِدَةٌ وَعَلَى يَسَارِهِ أَسْوِدَةٌ، إِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ يَسَارِهِ بَكَى، فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالاِبْنِ الصَّالِحِ‏.‏ قُلْتُ لِجِبْرِيلَ مَنْ هَذَا قَالَ هَذَا آدَمُ‏.‏ وَهَذِهِ الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ نَسَمُ بَنِيهِ، فَأَهْلُ الْيَمِينِ مِنْهُمْ أَهْلُ الْجَنَّةِ، وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ عَنْ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى، حَتَّى عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ فَقَالَ لِخَازِنِهَا افْتَحْ‏.‏ فَقَالَ لَهُ خَازِنُهَا مِثْلَ مَا قَالَ الأَوَّلُ فَفَتَحَ ‏"‏‏.‏ قَالَ أَنَسٌ فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَوَاتِ آدَمَ وَإِدْرِيسَ وَمُوسَى وَعِيسَى وَإِبْرَاهِيمَ ـ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ ـ وَلَمْ يُثْبِتْ كَيْفَ مَنَازِلُهُمْ، غَيْرَ أَنَّهُ ذَكَرَ أَنَّهُ وَجَدَ آدَمَ فِي السَّمَاءِ الدُّنْيَا، وَإِبْرَاهِيمَ فِي السَّمَاءِ السَّادِسَةِ‏.‏ قَالَ أَنَسٌ فَلَمَّا مَرَّ جِبْرِيلُ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم بِإِدْرِيسَ قَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ‏.‏ فَقُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِدْرِيسُ‏.‏ ثُمَّ مَرَرْتُ بِمُوسَى فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ‏.‏ قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا مُوسَى‏.‏ ثُمَّ مَرَرْتُ بِعِيسَى فَقَالَ مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ‏.‏ قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا عِيسَى‏.‏ ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالاِبْنِ الصَّالِحِ‏.‏ قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِبْرَاهِيمُ صلى الله عليه وسلم ‏"‏‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ أَنَّ ابْنَ عَبَّاسٍ وَأَبَا حَبَّةَ الأَنْصَارِيَّ كَانَا يَقُولاَنِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ ثُمَّ عُرِجَ بِي حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوًى أَسْمَعُ فِيهِ صَرِيفَ الأَقْلاَمِ ‏"‏‏.‏ قَالَ ابْنُ حَزْمٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ فَفَرَضَ اللَّهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى مَرَرْتُ عَلَى مُوسَى فَقَالَ مَا فَرَضَ اللَّهُ لَكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ فَرَضَ خَمْسِينَ صَلاَةً‏.‏ قَالَ فَارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ‏.‏ فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى قُلْتُ وَضَعَ شَطْرَهَا‏.‏ فَقَالَ رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ، فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُهُ‏.‏ فَقَالَ هِيَ خَمْسٌ وَهْىَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ‏.‏ فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ رَاجِعْ رَبَّكَ‏.‏ فَقُلْتُ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي‏.‏ ثُمَّ انْطَلَقَ بِي حَتَّى انْتَهَى بِي إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى، وَغَشِيَهَا أَلْوَانٌ لاَ أَدْرِي مَا هِيَ، ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ، فَإِذَا فِيهَا حَبَايِلُ اللُّؤْلُؤِ، وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ ‏"‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அபூ தர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி வந்து, என் நெஞ்சைப் பிளந்து, அதை ஜம்ஜம் நீரால் கழுவினார்கள். பிறகு, ஞானமும் இறைநம்பிக்கையும் (ஈமான்) நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டுவந்து, அதை என் நெஞ்சில் கொட்டி, பிறகு அதை மூடினார்கள். பிறகு அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு என்னுடன் முதல் வானத்திற்கு ஏறினார்கள். நான் முதல் வானத்தை அடைந்தபோது, ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தின் காவலரிடம், 'திறப்பீராக' என்று கூறினார்கள். காவலர், 'யார் அது?' என்று கேட்டார். 'ஜிப்ரீல்' என்று அவர்கள் பதிலளித்தார்கள். அவர், 'உங்களுடன் யாராவது இருக்கிறார்களா?' என்று கேட்டார். ஜிப்ரீல் (அலை), 'ஆம், முஹம்மது (ஸல்) அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்' என்று பதிலளித்தார்கள். அவர், 'அவர் அழைக்கப்பட்டுள்ளாரா?' என்று கேட்டார். 'ஆம்' என்று ஜிப்ரீல் கூறினார்கள்.

வானம் திறக்கப்பட்டதும் நாங்கள் முதல் வானத்திற்குச் சென்றோம். அங்கே ஒரு மனிதர் அமர்ந்திருப்பதைக் கண்டோம். அவருக்கு வலதுபுறம் மக்கள் கூட்டங்களும் (உருவங்களும்), அவருக்கு இடதுபுறம் மக்கள் கூட்டங்களும் இருந்தன. அவர் தன் வலதுபுறம் பார்த்தபோது சிரித்தார்; இடதுபுறம் பார்த்தபோது அழுதார். அவர் (எங்களைப் பார்த்து), 'சாலிஹான (நல்ல) நபியே! சாலிஹான மகனே! வருக!' என்று வரவேற்றார். நான் ஜிப்ரீலிடம், 'இவர் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'இவர்தான் ஆதம் (அலை). அவருக்கு வலதுபுறமும் இடதுபுறமும் இருப்பவர்கள் அவருடைய சந்ததியினரின் ஆன்மாக்கள். வலதுபுறம் இருப்பவர்கள் சொர்க்கவாசிகள்; இடதுபுறம் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் அவர் தன் வலதுபுறம் பார்க்கும்போது சிரிக்கிறார்; இடதுபுறம் பார்க்கும்போது அழுகிறார்' என்று பதிலளித்தார்கள்.

பிறகு ஜிப்ரீல் (அலை) என்னுடன் இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதன் காவலரிடம், 'திறப்பீராக' என்று கூறினார்கள். முதல் வானத்தின் காவலர் கூறியதையே இவரும் கூறி, (வாசலைத்) திறந்தார்."

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அபூ தர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) மற்றும் இப்ராஹிம் (அலை) ஆகியோரைச் சந்தித்ததாகக் கூறினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த வானங்களில் இருந்தார்கள் என்பதை (அபூ தர்) உறுதியாகக் குறிப்பிடவில்லை. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை முதல் வானத்திலும், இப்ராஹிம் (அலை) அவர்களை ஆறாவது வானத்திலும் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்."

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, இத்ரீஸ் (அலை), 'சாலிஹான நபியே! சாலிஹான சகோதரரே! வருக!' என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை), 'இவர்தான் இத்ரீஸ்' என்றார்கள். பிறகு நான் மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், 'சாலிஹான நபியே! சாலிஹான சகோதரரே! வருக!' என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை), 'இவர்தான் மூஸா' என்றார்கள். பிறகு நான் ஈஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், 'சாலிஹான சகோதரரே! சாலிஹான நபியே! வருக!' என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை), 'இவர்தான் ஈஸா' என்றார்கள். பிறகு நான் இப்ராஹிம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், 'சாலிஹான நபியே! சாலிஹான மகனே! வருக!' என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை), 'இவர்தான் இப்ராஹிம் (அலை)' என்று கூறினார்கள்."

இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இப்னு ஹஸ்ம் (ரஹ்) எனக்கு அறிவித்தார்கள்; இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் அபூ ஹப்பா அல்-அன்சாரி (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறினார்கள்: "பிறகு நான் (விதி எழுதப்படும்) எழுதுகோல்களின் சப்தத்தை நான் கேட்கும் அளவிற்கு ஒரு உயரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்."

இப்னு ஹஸ்ம் (ரஹ்) மற்றும் அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோர் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அப்போது அல்லாஹ் என் சமுதாயத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான். அந்தக் கட்டளையுடன் நான் திரும்பியபோது, மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், 'அல்லாஹ் உங்கள் சமுதாயத்திற்கு எதைக் கடமையாக்கினான்?' என்று கேட்டார்கள். நான், 'ஐம்பது நேரத் தொழுகைகளை அவர்கத் மீது கடமையாக்கியுள்ளான்' என்றேன். மூஸா (அலை), 'உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்; ஏனெனில் உங்கள் சமுதாயத்தினர் இதற்குச் சக்தி பெறமாட்டார்கள்' என்றார்கள். நான் திரும்பச் சென்று (இறைவனிடம்) முறையிட்டேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்து, 'ஒரு பகுதியைக் குறைத்துவிட்டான்' என்று கூறினேன். அவர்கள், 'உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்; ஏனெனில் உங்கள் சமுதாயத்தினர் இதற்குச் சக்தி பெறமாட்டார்கள்' என்றார்கள். நான் திரும்பச் சென்று (இறைவனிடம்) முறையிட்டேன். அவன் அதில் (மேலும்) ஒரு பகுதியைக் குறைத்தான். நான் அவரிடம் திரும்பியபோது, 'உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்; ஏனெனில் உங்கள் சமுதாயத்தினர் இதற்குச் சக்தி பெறமாட்டார்கள்' என்றார்கள். நான் (மீண்டும்) அவனிடம் முறையிட்டேன். அப்போது அவன், 'இவை ஐந்து (நேரத் தொழுகைகள்) ஆகும்; (நற்கூலியில்) இவை ஐம்பது ஆகும். என்னிடம் என் வாக்கு மாற்றப்படுவதில்லை' என்று கூறினான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பினேன். அவர்கள், 'உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்' என்றார்கள். நான், '(மீண்டும் கேட்பதற்கு) என் இறைவனிடம் நான் வெட்கப்படுகிறேன்' என்று கூறினேன். பிறகு ஜிப்ரீல் (அலை) என்னை 'ஸித்ரத்துல் முன்தஹா' (எனும் இலந்தை மரத்)திற்கு அழைத்துச் சென்றார்கள். எனக்குத் தெரியாத பல வண்ணங்கள் அதைப் போர்த்தியிருந்தன. பிறகு நான் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டேன். அங்கே முத்துக்களால் ஆன சரங்களைக் கண்டேன். அதன் மண் கஸ்தூரியாக இருந்தது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ ‏ ‏ فَرَضَ اللَّهُ الصَّلاَةَ حِينَ فَرَضَهَا رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ، فَأُقِرَّتْ صَلاَةُ السَّفَرِ، وَزِيدَ فِي صَلاَةِ الْحَضَرِ ‏ ‏‏.‏
முஃமின்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது, ஊரில் தங்கியிருக்கும்போதும் பயணத்திலும் இரண்டு ரக்அத்களாகவே (அது) இருந்தது. பின்னர் பயணத் தொழுகை (அப்படியே) உறுதிப்படுத்தப்பட்டது; ஊரில் தொழும் தொழுகையில் (ரக்அத்கள்) அதிகரிக்கப்பட்டன.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب وُجُوبِ الصَّلاَةِ فِي الثِّيَابِ
பாடம்: ஆடைகள் அணிந்து தொழுவது கட்டாயமாகும்
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أُمِرْنَا أَنْ نُخْرِجَ، الْحُيَّضَ يَوْمَ الْعِيدَيْنِ وَذَوَاتِ الْخُدُورِ، فَيَشْهَدْنَ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَدَعْوَتَهُمْ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ عَنْ مُصَلاَّهُنَّ‏.‏ قَالَتِ امْرَأَةٌ يَا رَسُولَ اللَّهِ، إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ‏.‏ قَالَ ‏ ‏ لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا ‏ ‏‏.‏ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ حَدَّثَنَا عِمْرَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِهَذَا‏.‏
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"இரு பெருநாட்களிலும் மாதவிடாய் ஏற்பட்டுள்ளவர்களையும், திரைக்குள்ளிருக்கும் கன்னிப் பெண்களையும் வெளியே அழைத்து வருமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். அவர்கள் முஸ்லிம்களின் ஜமாஅத்திலும் (கூட்டத்திலும்), அவர்களின் பிரார்த்தனையிலும் கலந்து கொள்வார்கள். ஆனால், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுமிடத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்."

(அப்போது) ஒரு பெண், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவரிடம் மேலாடை (ஜில்பாப்) இல்லையென்றால் (என்ன செய்வது?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவளுடைய தோழி தன்னிடமுள்ள மேலாடையிலிருந்து இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب عَقْدِ الإِزَارِ عَلَى الْقَفَا فِي الصَّلاَةِ
தொழுகையில் இஸாரைப் பிடரியில் (கழுத்துக்குப் பின்புறமாக) கட்டிக்கொள்வது
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ صَلَّى جَابِرٌ فِي إِزَارٍ قَدْ عَقَدَهُ مِنْ قِبَلِ قَفَاهُ، وَثِيَابُهُ مَوْضُوعَةٌ عَلَى الْمِشْجَبِ قَالَ لَهُ قَائِلٌ تُصَلِّي فِي إِزَارٍ وَاحِدٍ فَقَالَ إِنَّمَا صَنَعْتُ ذَلِكَ لِيَرَانِي أَحْمَقُ مِثْلُكَ، وَأَيُّنَا كَانَ لَهُ ثَوْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم
ஜாபிர் (ரழி) அவர்கள், தமது ஆடைகள் ஓர் ஆடை தாங்கியில் வைக்கப்பட்டிருக்க, தமது இசாரைத் தம் கழுத்துக்குப் பின்னால் முடிச்சிட்ட நிலையில் தொழுதார்கள்.

ஒருவர் அவரிடம், "நீங்கள் ஒரேயொரு இசாருடன் தொழுகின்றீர்களா?" என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், "உங்களைப் போன்ற ஒரு முட்டாளுக்குக் காட்டுவதற்காகவே நான் அவ்வாறு செய்தேன். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எங்களில் எவருக்காவது இரண்டு ஆடைகள் இருந்தனவா?" என்று பதிலளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُطَرِّفٌ أَبُو مُصْعَبٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ وَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ‏.‏
முஹம்மத் பின் அல் முன்கதிர் அறிவித்தார்கள்:

நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்களை ஒரேயொரு ஆடை அணிந்து தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்தேன். மேலும் அவர்கள், தாம் நபி (ஸல்) அவர்களை ஒரேயொரு ஆடை அணிந்து தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ مُلْتَحِفًا بِهِ
உடலைச் சுற்றி ஒரே ஆடையுடன் தொழுகையை நிறைவேற்றுவது
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ‏.‏
உமர் பின் அபீ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆடையை அணிந்து, அதன் இரு ஓரங்களையும் மாற்றிப் போட்டிருந்த நிலையில் தொழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ، قَدْ أَلْقَى طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ‏.‏
உமர் பின் அபீ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான், உம்மு ஸலமா (ரழி) அவர்களின் இல்லத்தில் நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை உடுத்தி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்கள்மீது மாற்றிப் போட்டிருந்த நிலையில் தொழுததை கண்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَهُ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلاً بِهِ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ، وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ‏.‏
உமர் பின் அபீ ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உம்மு ஸலமா (ரழி) அவர்களின் வீட்டில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையைத் தம் உடலைச் சுற்றிப் போர்த்தி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்களின் மீது மாற்றிப் போட்டிருந்த நிலையில் தொழுவதை நான் பார்த்தேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ، وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ قَالَتْ فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ ‏"‏ مَنْ هَذِهِ ‏"‏‏.‏ فَقُلْتُ أَنَا أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ‏.‏ فَقَالَ ‏"‏ مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ ‏"‏‏.‏ فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ، قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، فَلَمَّا انْصَرَفَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، زَعَمَ ابْنُ أُمِّي أَنَّهُ قَاتِلٌ رَجُلاً قَدْ أَجَرْتُهُ فُلاَنَ بْنَ هُبَيْرَةَ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ ‏"‏‏.‏ قَالَتْ أُمُّ هَانِئٍ وَذَاكَ ضُحًى‏.‏
உம் ஹானி பின்த் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"நான் மக்கா வெற்றியின் ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதையும், அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்குத் திரை மறைத்துக் கொண்டிருப்பதையும் கண்டேன். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், 'யார் இது?' என்று கேட்டார்கள். நான், 'நான் உம் ஹானி பின்த் அபீ தாலிப்' என்று பதிலளித்தேன். அவர்கள், 'உம் ஹானிக்கு நல்வரவு!' என்று கூறினார்கள்.

அவர்கள் குளித்து முடித்ததும் எழுந்து, ஒரே ஆடையைப் போர்த்திக்கொண்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்கள் தொழுது முடித்ததும் நான், 'அல்லாஹ்வின் தூதரே! நான் அடைக்கலம் கொடுத்துள்ள ஒருவரை—அவர் ஹுபைராவின் மகன் இன்னார் ஆவார்—என் தாயின் வயிற்றுச் சகோதரர் (அலீ) கொன்றுவிடுவதாகக் கூறுகிறார்' என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'உம் ஹானியே! நீ யாருக்கு அடைக்கலம் அளித்தாயோ, அவருக்கு நாமும் அடைக்கலம் அளித்துவிட்டோம்' என்று கூறினார்கள்."

உம் ஹானி (ரலி) அவர்கள் மேலும் கூறும்போது, "அது ளுஹா (முற்பகல்) நேரமாக இருந்தது" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ سَائِلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّلاَةِ فِي ثَوْبٍ وَاحِدٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أَوَلِكُلِّكُمْ ثَوْبَانِ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒருவர், ஓர் ஆடை அணிந்து தொழுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா?" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا صَلَّى فِي الثَّوْبِ الْوَاحِدِ فَلْيَجْعَلْ عَلَى عَاتِقَيْهِ
பாடம்: ஒருவர் ஒற்றை ஆடையில் தொழுதால், அவர் தனது தோள்களின் மீது போட்டுக்கொள்ள வேண்டும்.
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ، لَيْسَ عَلَى عَاتِقَيْهِ شَىْءٌ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் எவரும் தோள்களை மூடாத ஒரே ஆடையை அணிந்து தொழ வேண்டாம்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ سَمِعْتُهُ ـ أَوْ، كُنْتُ سَأَلْتُهُ ـ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ مَنْ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ، فَلْيُخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யாரேனும் ஒரே ஆடை அணிந்து தொழுதால், அதன் இரு ஓரங்களையும் (தோள்களின் மீது) மாற்றிக் கொள்ள வேண்டும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا كَانَ الثَّوْبُ ضَيِّقًا
ஆடை (உடலின் மீது) இறுக்கமாக இருந்தால்
حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ، قَالَ سَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ الصَّلاَةِ، فِي الثَّوْبِ الْوَاحِدِ فَقَالَ خَرَجْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ، فَجِئْتُ لَيْلَةً لِبَعْضِ أَمْرِي، فَوَجَدْتُهُ يُصَلِّي وَعَلَىَّ ثَوْبٌ وَاحِدٌ، فَاشْتَمَلْتُ بِهِ وَصَلَّيْتُ إِلَى جَانِبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ مَا السُّرَى يَا جَابِرُ ‏"‏‏.‏ فَأَخْبَرْتُهُ بِحَاجَتِي، فَلَمَّا فَرَغْتُ قَالَ ‏"‏ مَا هَذَا الاِشْتِمَالُ الَّذِي رَأَيْتُ ‏"‏‏.‏ قُلْتُ كَانَ ثَوْبٌ‏.‏ يَعْنِي ضَاقَ‏.‏ قَالَ ‏"‏ فَإِنْ كَانَ وَاسِعًا فَالْتَحِفْ بِهِ، وَإِنْ كَانَ ضَيِّقًا فَاتَّزِرْ بِهِ ‏"‏‏.‏
சயீத் பின் அல்-ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் ஒரே ஆடை அணிந்து தொழுவது பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

"நான் நபி (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய பயணங்களில் ஒன்றில் சென்றிருந்தேன். ஓர் இரவில் ஒரு தேவைக்காக நான் அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தொழுது கொண்டிருப்பதைக் கண்டேன். என் மீது ஒரேயொரு ஆடை இருந்தது. நான் அதனால் (என் உடலைச்) சுற்றிக்கொண்டு அவர்கள் அருகே தொழுதேன். அவர்கள் (தொழுகையை முடித்துத்) திரும்பியதும், 'ஜாபிரே! இந்த இரவில் என்ன வருகை?' என்று கேட்டார்கள். நான் என் தேவையை அவர்களிடம் தெரிவித்தேன். நான் (பேசி) முடித்ததும், 'நான் பார்த்தேனே, அது என்னவிதமான ஆடை சுற்றும் முறை?' என்று கேட்டார்கள். நான், 'அது (ஒரேயொரு) ஆடைதான்' என்றேன். (அதாவது அந்த ஆடை சிறியதாக இருந்தது). அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அந்த ஆடை விசாலமானதாக இருந்தால், அதை (உடல் முழுவதையும் மறைக்கும் வகையில்) போர்த்திக்கொள்! அதுவே சிறியதாக (இறுக்கமாக) இருந்தால், அதை இடுப்பில் கட்டிக்கொள்!' என்று கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَاقِدِي أُزْرِهِمْ عَلَى أَعْنَاقِهِمْ كَهَيْئَةِ الصِّبْيَانِ، وَقَالَ لِلنِّسَاءِ لاَ تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا‏.‏
ஸஹ்ல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஆண்கள், சிறுவர்களைப் போன்று தங்கள் ஈஸார்களைத் தங்கள் கழுத்துகளில் கட்டிக்கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுது வந்தார்கள். மேலும், “ஆண்கள் (தொழுகையில்) நிமிர்ந்து உட்காரும் வரை பெண்கள் தங்கள் தலைகளை உயர்த்த வேண்டாம்” என்று பெண்களுக்குக் கூறப்பட்டது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ فِي الْجُبَّةِ الشَّأْمِيَّةِ
பாடம்: சிரிய நாட்டு மேலங்கியில் தொழுதல்
حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ مُغِيرَةَ بْنِ شُعْبَةَ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ فَقَالَ ‏ ‏ يَا مُغِيرَةُ، خُذِ الإِدَاوَةَ ‏ ‏‏.‏ فَأَخَذْتُهَا فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى تَوَارَى عَنِّي فَقَضَى حَاجَتَهُ، وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَذَهَبَ لِيُخْرِجَ يَدَهُ مِنْ كُمِّهَا فَضَاقَتْ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ أَسْفَلِهَا، فَصَبَبْتُ عَلَيْهِ فَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ صَلَّى‏.‏
முகீரா பின் ஷுஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருமுறை நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது, அவர்கள், "முகீராவே! இந்தத் தண்ணீர்க் குடுவையை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். நான் அதை எடுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் பார்வையை விட்டு மறையும் வரை வெகுதூரம் சென்றார்கள். அவர்கள் தமது இயற்கை தேவையை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் சிரிய நாட்டு மேலங்கி ஒன்றை அணிந்திருந்தார்கள். அதன் கையிலிருந்து தமது கைகளை வெளியே எடுக்க முயன்றார்கள். ஆனால், அது மிகவும் இறுக்கமாக இருந்ததால், தமது கைகளை அதன் கீழிருந்து வெளியே எடுத்தார்கள். நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். பின்னர் தமது 'குஃப்' (கனமான துணி அல்லது தோலால் செய்யப்பட்ட காலுறைகள்) மீது மஸ்ஹு செய்துவிட்டு, தொழுதார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب كَرَاهِيَةِ التَّعَرِّي فِي الصَّلاَةِ وَغَيْرِهَا
தொழுகையிலும் மற்ற நேரங்களிலும் நிர்வாணமாக இருப்பது வெறுக்கத்தக்கதாகும்
حَدَّثَنَا مَطَرُ بْنُ الْفَضْلِ، قَالَ حَدَّثَنَا رَوْحٌ، قَالَ حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَنْقُلُ مَعَهُمُ الْحِجَارَةَ لِلْكَعْبَةِ وَعَلَيْهِ إِزَارُهُ‏.‏ فَقَالَ لَهُ الْعَبَّاسُ عَمُّهُ يَا ابْنَ أَخِي، لَوْ حَلَلْتَ إِزَارَكَ فَجَعَلْتَ عَلَى مَنْكِبَيْكَ دُونَ الْحِجَارَةِ‏.‏ قَالَ فَحَلَّهُ فَجَعَلَهُ عَلَى مَنْكِبَيْهِ، فَسَقَطَ مَغْشِيًّا عَلَيْهِ، فَمَا رُئِيَ بَعْدَ ذَلِكَ عُرْيَانًا صلى الله عليه وسلم‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவாசிகளுடன் கஃபாவின் (கட்டடப் பணிக்காக) கற்களைச் சுமந்துகொண்டிருந்தபோது ஓர் இசாரை (கீழாடையை) அணிந்திருந்தார்கள். அவர்களின் மாமா அல்-அப்பாஸ் (ரழி) அவர்கள் அவர்களிடம், "என் சகோதரர் மகனே! நீங்கள் உங்கள் இசாரைக் கழற்றி உங்கள் தோள்கள் மீது போட்டுக்கொண்டு அதன் மீது கற்களை வைத்தால் (நன்றாக இருக்குமே)" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் தம் இசாரைக் கழற்றி அதைத் தம் தோள்கள் மீது போட்டுக்கொண்டார்கள். ஆனால், அவர்கள் மூர்ச்சையுற்று விழுந்துவிட்டார்கள். அன்றிலிருந்து அவர்கள் ஒருபோதும் நிர்வாணமாகக் காணப்படவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ فِي الْقَمِيصِ وَالسَّرَاوِيلِ وَالتُّبَّانِ وَالْقَبَاءِ
பாடம்: சட்டை, கால்சட்டை, துப்பான் மற்றும் கபா அணிந்து தொழுவது.
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنِ الصَّلاَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ فَقَالَ ‏ ‏ أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ ‏ ‏‏.‏ ثُمَّ سَأَلَ رَجُلٌ عُمَرَ فَقَالَ إِذَا وَسَّعَ اللَّهُ فَأَوْسِعُوا، جَمَعَ رَجُلٌ عَلَيْهِ ثِيَابَهُ، صَلَّى رَجُلٌ فِي إِزَارٍ وَرِدَاءٍ، فِي إِزَارٍ وَقَمِيصٍ، فِي إِزَارٍ وَقَبَاءٍ، فِي سَرَاوِيلَ وَرِدَاءٍ، فِي سَرَاوِيلَ وَقَمِيصٍ، فِي سَرَاوِيلَ وَقَبَاءٍ، فِي تُبَّانٍ وَقَبَاءٍ، فِي تُبَّانٍ وَقَمِيصٍ ـ قَالَ وَأَحْسِبُهُ قَالَ ـ فِي تُبَّانٍ وَرِدَاءٍ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் எழுந்து நின்று, ஒரே ஆடையில் தொழுவது பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் ஒவ்வொருவரிடமும் இரண்டு ஆடைகளா இருக்கின்றன?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

பிறகு ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் (இதே கேள்வியைக்) கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உங்களுக்கு வசதியை வழங்கினால், நீங்களும் (ஆடை விஷயத்தில்) தாராளமாக நடந்துகொள்ளுங்கள். ஒரு மனிதர் தன் மீது ஆடைகளைச் சேர்த்து அணிந்துகொள்ளட்டும். (அதாவது) ஒருவர் ஓர் இஸார் மற்றும் ஒரு ரிதாவுடனும், இஸார் மற்றும் ஒரு சட்டையுடனும், இஸார் மற்றும் ஒரு கபாவுடனும், கால்சட்டை மற்றும் ஒரு ரிதாவுடனும், கால்சட்டை மற்றும் ஒரு சட்டையுடனும், கால்சட்டை மற்றும் ஒரு கபாவுடனும், துப்பான் மற்றும் ஒரு கபாவுடனும், துப்பான் மற்றும் ஒரு சட்டையுடனும் (தொழலாம்)" என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர் கூறினார்: "துப்பான் மற்றும் ஒரு ரிதா என்றும் அவர் கூறியதாக நான் கருதுகிறேன்.")

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَا يَلْبَسُ الْمُحْرِمُ فَقَالَ ‏ ‏ لاَ يَلْبَسُ الْقَمِيصَ وَلاَ السَّرَاوِيلَ وَلاَ الْبُرْنُسَ وَلاَ ثَوْبًا مَسَّهُ الزَّعْفَرَانُ وَلاَ وَرْسٌ، فَمَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ ‏ ‏‏.‏ وَعَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "ஒரு முஹ்ரிம் எதை அணியலாம்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அவர் சட்டையையோ, கால்சட்டையையோ, 'புர்னுஸ்' (தலையை மூடும் மேலாடை) உடையையோ, குங்குமப்பூ அல்லது 'வர்ஸ்' வாசனை பட்ட ஆடையையோ அணியக் கூடாது. செருப்புகள் கிடைக்காதவர் காலுறைகளை (குஃப்) அணிந்துகொள்ளட்டும்; ஆயினும் கணுக்கால்களுக்குக் கீழே இருக்குமாறு அவற்றை வெட்டிக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَا يَسْتُرُ مِنَ الْعَوْرَةِ
பாடம்: மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளை (அவ்ராவை) மறைப்பது
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ، لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَىْءٌ‏.‏
அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இஷ்திமால் அஸ்-ஸம்மா' (கைகளை வெளியே எடுக்க முடியாதவாறு ஆடையால் உடலைச் சுற்றிக்கொள்வது) எனும் முறைக்குத் தடை விதித்தார்கள். மேலும், ஒருவர் ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, தமது அந்தரங்க உறுப்பின் மீது ஆடையின் எப்பகுதியும் இல்லாத நிலையில் 'இஹ்திபா' (கால்களை மடித்துக் கட்டிக்கொண்டு உட்காரும்) செய்வதற்கும் தடை விதித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعَتَيْنِ عَنِ اللِّمَاسِ وَالنِّبَاذِ، وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இரண்டு வகையான விற்பனைகளை, அதாவது அல்-லிமாஸ் மற்றும் அன்-நிபாத் (முதலாவது என்பது, வாங்குபவர் ஒரு பொருளைச் சரியாகப் பார்க்காமலோ அல்லது சோதித்துப் பார்க்காமலோ தொட்ட மாத்திரத்தில் வியாபாரம் முடிந்துவிடும் ஒரு வகை விற்பனையாகும்; பிந்தையது என்பது, விற்பவர் ஒரு பொருளை வாங்குபவர் பக்கம் எறிந்ததும், அதை வாங்குபவர் பார்க்கவோ, தொடவோ அல்லது சோதித்துப் பார்க்கவோ வாய்ப்பளிக்கப்படாமல் வியாபாரம் முடிந்துவிடும் ஒரு வகை விற்பனையாகும்) ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும் (நபி (ஸல்) அவர்கள்) இஷ்திமால்-அஸ்-ஸம்மா மற்றும் அல்-இஹ்திபா ஆகியவற்றை ஒரே ஆடை அணிந்து செய்வதையும் தடை செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَعَثَنِي أَبُو بَكْرٍ فِي تِلْكَ الْحَجَّةِ فِي مُؤَذِّنِينَ يَوْمَ النَّحْرِ نُؤَذِّنُ بِمِنًى أَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ‏.‏ قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ثُمَّ أَرْدَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيًّا، فَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ بِبَرَاءَةَ قَالَ أَبُو هُرَيْرَةَ فَأَذَّنَ مَعَنَا عَلِيٌّ فِي أَهْلِ مِنًى يَوْمَ النَّحْرِ لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அந்த ஹஜ்ஜின்போது, நஹ்ர் (துல்ஹஜ் 10ஆம்) நாளன்று மினாவில் அறிவிப்புச் செய்பவர்களுடன் அபூ பக்ர் (ரலி) அவர்கள் என்னையும் அனுப்பினார்கள். (நாங்கள்), 'இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பாளர் (முஷ்ரிக்) யாரும் ஹஜ் செய்யக் கூடாது; மேலும், நிர்வாணமானவர் யாரும் கஅபாவைத் தவாஃப் செய்யக் கூடாது' என்று அறிவித்தோம்."

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களை (அபூ பக்ர் (ரலி) அவர்களைப்) பின்தொடரச் செய்து, 'பராஅத்' (சூரா அத்-தவ்பா) குறித்து அறிவிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்."

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"ஆகவே, நஹ்ர் நாளன்று மினாவில் தங்கியிருந்த மக்களிடத்தில் அலீ (ரலி) அவர்கள் எங்களுடன் சேர்ந்து, 'இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பாளர் யாரும் ஹஜ் செய்யக் கூடாது; மேலும், நிர்வாணமானவர் யாரும் கஅபாவைத் தவாஃப் செய்யக் கூடாது' என்று அறிவிப்புச் செய்தார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ بِغَيْرِ رِدَاءٍ
ரிதா இல்லாமல் தொழுவது
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي الْمَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ دَخَلْتُ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَهُوَ يُصَلِّي فِي ثَوْبٍ مُلْتَحِفًا بِهِ وَرِدَاؤُهُ مَوْضُوعٌ، فَلَمَّا انْصَرَفَ قُلْنَا يَا أَبَا عَبْدِ اللَّهِ تُصَلِّي وَرِدَاؤُكَ مَوْضُوعٌ قَالَ نَعَمْ، أَحْبَبْتُ أَنْ يَرَانِي الْجُهَّالُ مِثْلُكُمْ، رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي هَكَذَا‏.‏
முஹம்மத் பின் அல்-முன்கதிர் அறிவித்தார்கள்:

நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு ஆடையால் தம்மைப் போர்த்திக்கொண்டு தொழுது கொண்டிருந்தார்கள். அவர்களின் ரிதா (மேலாடை) (தனியே) வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தொழுகையை முடித்தபோது நாங்கள், "ஓ அபூ அப்துல்லாஹ்! உங்கள் ரிதா (மேலாடை) வைக்கப்பட்டிருக்கும்போது நீங்கள் (ஒரே ஆடையுடன்) தொழுகிறீர்களே?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "ஆம், உங்களைப் போன்ற அறியாதவர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக நான் (இவ்வாறு செய்ய) விரும்பினேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுவதை நான் கண்டேன்" என்று பதிலளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَا يُذْكَرُ فِي الْفَخِذِ
தொடை பற்றி என்ன கூறப்பட்டுள்ளது
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَزَا خَيْبَرَ، فَصَلَّيْنَا عِنْدَهَا صَلاَةَ الْغَدَاةِ بِغَلَسٍ، فَرَكِبَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم وَرَكِبَ أَبُو طَلْحَةَ، وَأَنَا رَدِيفُ أَبِي طَلْحَةَ، فَأَجْرَى نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم فِي زُقَاقِ خَيْبَرَ، وَإِنَّ رُكْبَتِي لَتَمَسُّ فَخِذَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ حَسَرَ الإِزَارَ عَنْ فَخِذِهِ حَتَّى إِنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ فَخِذِ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم، فَلَمَّا دَخَلَ الْقَرْيَةَ قَالَ ‏"‏ اللَّهُ أَكْبَرُ، خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ ‏"‏‏.‏ قَالَهَا ثَلاَثًا‏.‏ قَالَ وَخَرَجَ الْقَوْمُ إِلَى أَعْمَالِهِمْ فَقَالُوا مُحَمَّدٌ ـ قَالَ عَبْدُ الْعَزِيزِ وَقَالَ بَعْضُ أَصْحَابِنَا ـ وَالْخَمِيسُ‏.‏ يَعْنِي الْجَيْشَ، قَالَ فَأَصَبْنَاهَا عَنْوَةً، فَجُمِعَ السَّبْىُ، فَجَاءَ دِحْيَةُ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ، أَعْطِنِي جَارِيَةً مِنَ السَّبْىِ‏.‏ قَالَ ‏"‏ اذْهَبْ فَخُذْ جَارِيَةً ‏"‏‏.‏ فَأَخَذَ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ، فَجَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ، أَعْطَيْتَ دِحْيَةَ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ سَيِّدَةَ قُرَيْظَةَ وَالنَّضِيرِ، لاَ تَصْلُحُ إِلاَّ لَكَ‏.‏ قَالَ ‏"‏ ادْعُوهُ بِهَا ‏"‏‏.‏ فَجَاءَ بِهَا، فَلَمَّا نَظَرَ إِلَيْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ خُذْ جَارِيَةً مِنَ السَّبْىِ غَيْرَهَا ‏"‏‏.‏ قَالَ فَأَعْتَقَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَتَزَوَّجَهَا‏.‏ فَقَالَ لَهُ ثَابِتٌ يَا أَبَا حَمْزَةَ، مَا أَصْدَقَهَا قَالَ نَفْسَهَا، أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، حَتَّى إِذَا كَانَ بِالطَّرِيقِ جَهَّزَتْهَا لَهُ أُمُّ سُلَيْمٍ فَأَهْدَتْهَا لَهُ مِنَ اللَّيْلِ، فَأَصْبَحَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَرُوسًا فَقَالَ ‏"‏ مَنْ كَانَ عِنْدَهُ شَىْءٌ فَلْيَجِئْ بِهِ ‏"‏‏.‏ وَبَسَطَ نِطَعًا، فَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالتَّمْرِ، وَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالسَّمْنِ ـ قَالَ وَأَحْسِبُهُ قَدْ ذَكَرَ السَّوِيقَ ـ قَالَ فَحَاسُوا حَيْسًا، فَكَانَتْ وَلِيمَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது படையெடுத்தார்கள். நாங்கள் அங்கு ஃபஜ்ர் தொழுகையை வைகறை இருளிலேயே தொழுதோம். பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறினார்கள்; அபூ தல்ஹா (ரலி) அவர்களும் ஏறினார்கள். நான் அபூ தல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்ந்துகொண்டேன். நபி (ஸல்) அவர்கள் கைபரின் சந்துகளில் (வாகனத்தை) வேகமாகச் செலுத்தினார்கள். (அப்போது) என் முழங்கால் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டுக்கொண்டிருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்களின் தொடையிலிருந்து வேட்டி விலகியது; எந்த அளவிற்கென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை நான் பார்க்கும் அளவிற்கு (அது விலகியது).

அவர்கள் ஊருக்குள் நுழைந்தபோது, 'அல்லாஹு அக்பர்! கைபர் பாழானது! நாம் ஒரு சமூகத்தாரின் களத்தில் இறங்கினால், எச்சரிக்கப்பட்ட அவர்களின் காலைப் பொழுது மிகக் கெட்டதாக அமையும்' என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை கூறினார்கள்.

மக்கள் தங்கள் வேலைகளுக்காக வெளியே வந்தார்கள். அவர்கள், 'முஹம்மதும் (அவரது) பெரும்படையும் (வந்துவிட்டன)' என்று கூறினர். நாங்கள் கைபரை பலவந்தமாக வெற்றி கொண்டோம்; கைதிகள் ஒன்று திரட்டப்பட்டனர். அப்போது திஹ்யா (அல்கல்பீ) அவர்கள் வந்து, 'அல்லாஹ்வின் இறைத்தூதரே! கைதிகளிலிருந்து எனக்கு ஒரு அடிமைப் பெண்ணைத் தாருங்கள்' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'சென்று, ஓர் அடிமைப் பெண்ணை எடுத்துக்கொள்' என்றார்கள். அவர் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களை எடுத்துக்கொண்டார்.

அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்குக் கொடுத்துவிட்டீர்களா? அவர் குறைளா மற்றும் அந்நளீர் குலங்களின் தலைவியாவார். அவர் தங்களைத் தவிர வேறு யாருக்கும் தகுதியானவர் அல்லர்' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், 'அவளுடன் அவரை அழைத்து வாருங்கள்' என்றார்கள். திஹ்யா, அப்பெண்ணுடன் வந்தார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணைப் பார்த்தபோது, (திஹ்யாவிடம்) 'கைதிகளிலிருந்து இவரைத் தவிர வேறு அடிமைப் பெண்ணை எடுத்துக்கொள்' என்று கூறினார்கள்."

அனஸ் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்: "பிறகு நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை விடுதலை செய்து, அவரையே மணமுடித்துக் கொண்டார்கள்."

தாபித் (அல்பினானீ) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், "ஏ அபா ஹம்ஸா! நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்கு (மஹ்ராக) என்ன கொடுத்தார்கள்?" என்று கேட்டார். அதற்கு அனஸ் (ரலி), "அப்பெண்ணையே (அப்பெண்ணின் விடுதலையையே) மஹ்ராக ஆக்கினார்கள்; அவரை விடுதலை செய்து, அவரையே மணந்து கொண்டார்கள்" என்று பதிலளித்தார்.

அனஸ் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: "(பயண) வழியில் உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ஸஃபிய்யாவைத் (திருமணத்திற்காக) தயார் செய்து, இரவில் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் புதுமண மாப்பிள்ளையாக விடிந்தெழுந்தார்கள். அப்போது அவர்கள், 'யாரிடமேனும் ஏதேனும் (உணவுப்) பொருள் இருந்தால் அதைக் கொண்டு வாருங்கள்' என்று கூறினார்கள். மேலும், (உணவுக்காக) ஒரு தோல் விரிப்பை விரித்தார்கள். சிலர் பேரீச்சம்பழங்களையும், சிலர் நெய்யையும் கொண்டு வரலாயினர். (அறிவிப்பாளர் அப்துல் அஸீஸ் கூறுகிறார்: அனஸ் (ரலி) அவர்கள் 'சத்துமாவையும்' குறிப்பிட்டார்கள் என்று நான் எண்ணுகிறேன்). பிறகு அவர்கள் 'ஹைஸ்' (எனும் பலகாரப்) பிசைந்தார்கள். அதுவே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (திருமண) விருந்தாக (வலீமாவாக) அமைந்தது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب فِي كَمْ تُصَلِّي الْمَرْأَةُ فِي الثِّيَابِ
பாடம்: ஒரு பெண் எத்தனை ஆடைகளில் தொழ வேண்டும்?
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْفَجْرَ، فَيَشْهَدُ مَعَهُ نِسَاءٌ مِنَ الْمُؤْمِنَاتِ مُتَلَفِّعَاتٍ فِي مُرُوطِهِنَّ ثُمَّ يَرْجِعْنَ إِلَى بُيُوتِهِنَّ مَا يَعْرِفُهُنَّ أَحَدٌ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். அப்போது ஈமான் கொண்ட பெண்கள் தங்கள் போர்வைகளால் போர்த்திக்கொண்டு அவர்களுடன் (அத்தொழுகையில்) கலந்து கொள்வார்கள். பின்னர் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள்; அவர்களை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا صَلَّى فِي ثَوْبٍ لَهُ أَعْلاَمٌ وَنَظَرَ إِلَى عَلَمِهَا
பாடம்: வேலைப்பாடுகள் உள்ள ஆடையில் தொழுது, அதன் வேலைப்பாடுகளைப் பார்த்தால்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا نَظْرَةً، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَائْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي ‏"‏‏.‏ وَقَالَ هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ كُنْتُ أَنْظُرُ إِلَى عَلَمِهَا وَأَنَا فِي الصَّلاَةِ فَأَخَافُ أَنْ تَفْتِنَنِي ‏"‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடுகள் (கரைகள்) கொண்ட ஒரு 'கமீஸா'வை (சதுர ஆடை) அணிந்து தொழுதார்கள். (தொழுகையின் போது) அதன் வேலைப்பாடுகளை ஒருமுறை பார்த்தார்கள். தொழுகையை முடித்ததும், "என்னுடைய இந்த கமீஸாவை அபூ ஜஹ்மிடம் எடுத்துச் சென்று, அபூ ஜஹ்மின் 'அன்பிஜானிய்யா'வை (வேலைப்பாடுகள் இல்லாத கம்பளி ஆடை) என்னிடம் கொண்டு வாருங்கள். ஏனெனில், சற்று முன் அது தொழுகையிலிருந்து என் கவனத்தைத் திருப்பிவிட்டது" என்று கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள், "நான் தொழுகையில் இருந்தபோது அதன் வேலைப்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது (என் கவனத்தை திசைதிருப்பி) என்னைச் சோதனையில் ஆழ்த்திவிடுமோ என்று நான் அஞ்சினேன்" எனக் கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
بَابُ إِنْ صَلَّى فِي ثَوْبٍ مُصَلَّبٍ أَوْ تَصَاوِيرَ هَلْ تَفْسُدُ صَلاَتُهُ وَمَا يُنْهَى عَنْ ذَلِكَ
சிலுவை அல்லது படம் கொண்ட ஆடையில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றினால், அவரது தொழுகை செல்லுபடியாகுமா? மேலும் அதில் தடை செய்யப்பட்டவை என்ன?
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، كَانَ قِرَامٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ أَمِيطِي عَنَّا قِرَامَكِ هَذَا، فَإِنَّهُ لاَ تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ فِي صَلاَتِي ‏ ‏‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஆயிஷா (ரழி) அவர்கள் ஒரு 'கிராம்' (மெல்லிய, படங்கள் வரையப்பட்ட கம்பளித் திரைச்சீலை) வைத்திருந்தார்கள். அதைக் கொண்டு அவர்கள் தமது வீட்டின் ஒரு பக்கத்தை மறைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உன்னுடைய இந்த 'கிராம்'ஐ அகற்றிவிடு. ஏனெனில், நான் தொழும்போது அதன் படங்கள் என் முன்னே இன்னமும் தென்படுகின்றன (அதாவது, அவை என் தொழுகையிலிருந்து என் கவனத்தைத் திசை திருப்புகின்றன)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَنْ صَلَّى فِي فَرُّوجِ حَرِيرٍ ثُمَّ نَزَعَهُ
யார் பட்டு ஃபர்ரூஜ் (பின்புறம் திறந்த வெளி ஆடை) அணிந்து தொழுகையை நிறைவேற்றி பின்னர் அதை கழற்றினாரோ.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ أُهْدِيَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرُّوجُ حَرِيرٍ، فَلَبِسَهُ فَصَلَّى فِيهِ، ثُمَّ انْصَرَفَ فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ وَقَالَ ‏ ‏ لاَ يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ ‏ ‏‏.‏
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பட்டு ‘ஃபர்ரூஜ்’ (மேலங்கி) அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் அதை அணிந்து தொழுதார்கள். பிறகு (தொழுது) திரும்பியதும், அதை வெறுப்பவர் போன்று வன்மையாகக் கழற்றிவிட்டு, “இது இறையச்சமுடையவர்களுக்குத் தகாது” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ فِي الثَّوْبِ الأَحْمَرِ
பாடம்: சிவப்பு ஆடையில் தொழுதல்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ، وَرَأَيْتُ بِلاَلاً أَخَذَ وَضُوءَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَأَيْتُ النَّاسَ يَبْتَدِرُونَ ذَاكَ الْوَضُوءَ، فَمَنْ أَصَابَ مِنْهُ شَيْئًا تَمَسَّحَ بِهِ، وَمَنْ لَمْ يُصِبْ مِنْهُ شَيْئًا أَخَذَ مِنْ بَلَلِ يَدِ صَاحِبِهِ، ثُمَّ رَأَيْتُ بِلاَلاً أَخَذَ عَنَزَةً فَرَكَزَهَا، وَخَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حُلَّةٍ حَمْرَاءَ مُشَمِّرًا، صَلَّى إِلَى الْعَنَزَةِ بِالنَّاسِ رَكْعَتَيْنِ، وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ مِنْ بَيْنِ يَدَىِ الْعَنَزَةِ‏.‏
அபூ ஜுஹைஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, (பதனிடப்பட்ட) தோலினாலான ஒரு சிவப்பு நிறக் கூடாரத்தில் கண்டேன். பிலால் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த (மீதமுள்ள) தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்ததைக் கண்டேன். மக்கள் அந்தத் தண்ணீரைப் பெறுவதற்காக முண்டியடித்துக் கொண்டு விரைவதைக் கண்டேன். அதிலிருந்து ஏதேனும் கிடைத்தவர் அதைத் (தம் உடலில்) பூசிக் கொண்டார். (தண்ணீர்) எதுவும் கிடைக்காதவர், தம் தோழருடைய கையில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டார். பின்னர் பிலால் (ரழி) ஒரு கை ஈட்டியை எடுத்து அதை (தரையில்) நாட்டியதைக் கண்டேன். நபி (ஸல்) அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்தவர்களாக, (ஆடையை) உயர்த்திக் கட்டியவாறு வெளியே வந்து, அந்த ஈட்டியை நோக்கி மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அந்த ஈட்டிக்கு அப்பால் மனிதர்களும் விலங்குகளும் கடந்து செல்வதை நான் கண்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ فِي السُّطُوحِ وَالْمِنْبَرِ وَالْخَشَبِ
பாடம்: கூரைகள், மிம்பர் மற்றும் மரக்கட்டைகள் மீது தொழுவது
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا أَبُو حَازِمٍ، قَالَ سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ مِنْ أَىِّ شَىْءٍ الْمِنْبَرُ فَقَالَ مَا بَقِيَ بِالنَّاسِ أَعْلَمُ مِنِّي هُوَ مِنْ أَثْلِ الْغَابَةِ، عَمِلَهُ فُلاَنٌ مَوْلَى فُلاَنَةَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ عُمِلَ، وَوُضِعَ، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ كَبَّرَ وَقَامَ النَّاسُ خَلْفَهُ، فَقَرَأَ وَرَكَعَ وَرَكَعَ النَّاسُ خَلْفَهُ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى، فَسَجَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ عَادَ إِلَى الْمِنْبَرِ، ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى حَتَّى سَجَدَ بِالأَرْضِ، فَهَذَا شَأْنُهُ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ سَأَلَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ـ رَحِمَهُ اللَّهُ ـ عَنْ هَذَا الْحَدِيثِ، قَالَ فَإِنَّمَا أَرَدْتُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ أَعْلَى مِنَ النَّاسِ، فَلاَ بَأْسَ أَنْ يَكُونَ الإِمَامُ أَعْلَى مِنَ النَّاسِ بِهَذَا الْحَدِيثِ‏.‏ قَالَ فَقُلْتُ إِنَّ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ كَانَ يُسْأَلُ عَنْ هَذَا كَثِيرًا فَلَمْ تَسْمَعْهُ مِنْهُ قَالَ لاَ‏.‏
ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்களிடம், "மிம்பர் (சொற்பொழிவு மேடை) எதனால் செய்யப்பட்டது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

"மக்களில் அதைப்பற்றி என்னைவிட நன்கறிந்தவர் (இன்று) யாரும் மீதமில்லை; அது 'அல்காபா' (எனும் காட்டில் வளரும்) 'அத்ல்' மரத்தால் செய்யப்பட்டது. இன்ன பெண்ணின் அடிமையான இன்னார் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்தார். அது செய்யப்பட்டு (பள்ளிவாசலில்) வைக்கப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் மீது ஏறினார்கள். கிப்லாவை முன்னோக்கி 'அல்லாஹு அக்பர்' கூறினார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். பிறகு ஓதினார்கள், ருகூஃ செய்தார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் (ருகூஃ) செய்தார்கள். பிறகு (ருகூஃவிலிருந்து) தமது தலையை உயர்த்தினார்கள். பிறகு புறங்காட்டாமல் பின்னால் நகர்ந்து (கீழே இறங்கி) தரையில் ஸஜ்தா செய்தார்கள். பிறகு மீண்டும் மிம்பருக்குத் திரும்பினார்கள். பிறகு ஓதினார்கள்; பிறகு ருகூஃ செய்தார்கள்; பிறகு (ருகூஃவிலிருந்து) தமது தலையை உயர்த்தினார்கள். பிறகு புறங்காட்டாமல் பின்னால் நகர்ந்து, தரையில் ஸஜ்தா செய்தார்கள். இதுதான் அந்த மிம்பரின் விஷயமாகும்."

(இந்த ஹதீஸை அறிவிக்கும்) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் குறித்து என்னிடம் கேட்டார்கள். மேலும், 'நபி (ஸல்) அவர்கள் மக்களைவிட உயரமான இடத்தில் இருந்தார்கள் என்பதையே நான் (இதன் மூலம்) நாடினேன். ஆகவே, இந்த ஹதீஸின் அடிப்படையில் இமாம் மக்களைவிட உயரமான இடத்தில் இருப்பதில் தவறில்லை' என்று (அஹ்மத் பின் ஹன்பல்) கூறினார்கள். நான் (அஹ்மத் பின் ஹன்பலிடம்), 'சுஃப்யான் பின் உயைனா அவர்களிடம் இதுபற்றி அதிகமாகக் கேட்கப்படுமே! அவரிடமிருந்து இதை நீங்கள் செவியுறவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'இல்லை' என்று பதிலளித்தார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَقَطَ عَنْ فَرَسِهِ، فَجُحِشَتْ سَاقُهُ أَوْ كَتِفُهُ، وَآلَى مِنْ نِسَائِهِ شَهْرًا، فَجَلَسَ فِي مَشْرُبَةٍ لَهُ، دَرَجَتُهَا مِنْ جُذُوعٍ، فَأَتَاهُ أَصْحَابُهُ يَعُودُونَهُ، فَصَلَّى بِهِمْ جَالِسًا، وَهُمْ قِيَامٌ فَلَمَّا سَلَّمَ قَالَ ‏"‏ إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا ‏"‏‏.‏ وَنَزَلَ لِتِسْعٍ وَعِشْرِينَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ آلَيْتَ شَهْرًا فَقَالَ ‏"‏ إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ ‏"‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து கீழே விழுந்தார்கள்; அதனால் அவர்களின் காலிலோ அல்லது தோள்பட்டையிலோ காயம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு மாத காலத்திற்குத் தங்கள் மனைவியரிடம் செல்லமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். மேலும் பேரீச்சை மரத்தின் அடிமரத்தினால் செய்யப்பட்ட படிகளையுடைய ஒரு 'மஷ்ரூபா' (மேல்மாடி அறை) ஒன்றில் தங்கினார்கள். ஆகவே, அவர்களின் தோழர்கள் (ரழி) அவர்களை நலம் விசாரிக்க வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அமர்ந்த நிலையில் அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்; அதேசமயம் அவர்களின் தோழர்கள் (ரழி) நின்றுகொண்டிருந்தார்கள். சலாம் கொடுத்ததும், அவர்கள் (ஸல்) கூறினார்கள்: "இமாம் பின்பற்றப்பட வேண்டியவர் ஆவார். எனவே, அவர் 'அல்லாஹு அக்பர்' என்று கூறினால், நீங்களும் 'அல்லாஹு அக்பர்' என்று கூறுங்கள்; அவர் ருகூஃ செய்தால், நீங்களும் ருகூஃ செய்யுங்கள்; அவர் ஸஜ்தா செய்தால், நீங்களும் ஸஜ்தா செய்யுங்கள்; அவர் நின்று தொழுதால், நீங்களும் நின்று தொழுங்கள்." இருபத்தொன்பது நாட்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி வந்ததும், மக்கள் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! தாங்கள் ஒரு மாத காலத்திற்குச் சத்தியம் செய்தீர்களே!" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (ஸல்) "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகும்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا أَصَابَ ثَوْبُ الْمُصَلِّي امْرَأَتَهُ إِذَا سَجَدَ
பாடம்: தொழுபவர் சஜ்தாச் செய்யும்போது அவரது ஆடை அவரது மனைவி மீது பட்டால்
حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ مَيْمُونَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي وَأَنَا حِذَاءَهُ وَأَنَا حَائِضٌ وَرُبَّمَا أَصَابَنِي ثَوْبُهُ إِذَا سَجَدَ‏.‏ قَالَتْ وَكَانَ يُصَلِّي عَلَى الْخُمْرَةِ‏.‏
மைமூனா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நான் மாதவிடாயுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நேர் எதிரே இருந்த நிலையில், அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது சில சமயங்களில் அவர்களின் ஆடை என் மீது படும்.”

மைமூனா (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள்: “அவர்கள் ஒரு ஃகும்ராவின் மீது (தொழுகையில் ஸஜ்தா செய்யும்போது முகம் மற்றும் கைகளுக்கு மட்டும் போதுமான ஒரு சிறிய விரிப்பு) தொழுதார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ عَلَى الْحَصِيرِ
பாடம்: ஹசீர் (பாய்) மீது தொழுவது
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ، مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ ‏ ‏ قُومُوا فَلأُصَلِّ لَكُمْ ‏ ‏‏.‏ قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَفَفْتُ وَالْيَتِيمَ وَرَاءَهُ، وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"என்னுடைய பாட்டி முலைக்கா (ரழி) அவர்கள், தாங்கள் தயாரித்திருந்த ஓர் உணவை உண்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து சாப்பிட்டுவிட்டு, 'எழுந்திருங்கள்! நான் உங்களுக்குத் தொழுகை நடத்துவேன்' என்று கூறினார்கள்."

மேலும் அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் எங்களுடைய பாயை (ஹஸீரை) நோக்கிச் சென்றேன்; அது நீண்டகால பயன்பாட்டினால் கறுத்துப் போயிருந்தது. எனவே அதன் மீது நான் தண்ணீரைத் தெளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் மீது நின்றார்கள். நானும் அந்த அநாதையும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் நின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்திவிட்டுப் பின்னர் சென்றார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ عَلَى الْخُمْرَةِ
பாடம்: ‘கும்ரா’ (சிறிய பாய்) மீது தொழுவது
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ مَيْمُونَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى الْخُمْرَةِ‏.‏
மைமூனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கும்ராவின் மீது தொழுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ عَلَى الْفِرَاشِ
பாடம்: படுக்கையில் தொழுவது
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرِجْلاَىَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَىَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا‏.‏ قَالَتْ وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ‏.‏
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் உறங்கிக் கொண்டிருப்பேன்; என்னுடைய கால்கள் அவர்களுடைய கிப்லாவின் திசையில் இருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது என்னை (மெதுவாக) குத்துவார்கள்; நான் என் கால்களை மடக்கிக்கொள்வேன். அவர்கள் நின்றதும், நான் அவற்றை நீட்டிக் கொள்வேன்.” மேலும் அவர்கள், “அக்காலத்தில் வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை” என்றும் கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَهْىَ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ، اعْتِرَاضَ الْجَنَازَةِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் அவர்களுடைய குடும்பப் படுக்கையில் அவர்களுக்கும் கிப்லாவிற்கும் இடையில் ஒரு ஜனாஸா (சடலம்) குறுக்காகக் கிடத்தப்படுவதைப் போன்று படுத்திருக்கும் நிலையில் தொழுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ عِرَاكٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَعَائِشَةُ مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى الْفِرَاشِ الَّذِي يَنَامَانِ عَلَيْهِ‏.‏
உர்வா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள்; அப்போது ஆயிஷா (ரழி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையில், அவர்கள் இருவரும் உறங்கும் படுக்கையின் மீது குறுக்காகப் படுத்திருப்பார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب السُّجُودِ عَلَى الثَّوْبِ فِي شِدَّةِ الْحَرِّ
கடுமையான வெப்பத்தில் ஆடையின் மீது சஜ்தா செய்வது
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالَ حَدَّثَنِي غَالِبٌ الْقَطَّانُ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَضَعُ أَحَدُنَا طَرَفَ الثَّوْبِ مِنْ شِدَّةِ الْحَرِّ فِي مَكَانِ السُّجُودِ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுவோம். அப்போது எங்களில் ஒருவர், கடுமையான வெப்பத்தின் காரணமாகத் தமது ஆடையின் ஓரத்தை ஸஜ்தாச் செய்யும் இடத்தில் வைப்பார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ فِي النِّعَالِ
பாடம்: காலணிகளுடன் தொழுவது
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنَا أَبُو مَسْلَمَةَ، سَعِيدُ بْنُ يَزِيدَ الأَزْدِيُّ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي نَعْلَيْهِ قَالَ نَعَمْ‏.‏
ஸயீத் பின் யஸீத் அல்-அஸ்தீ அவர்கள் கூறினார்கள்:
நான் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் தமது காலணிகளுடன் தொழுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ فِي الْخِفَافِ
காலுறைகள் (கஃப்) அணிந்து தொழுகையை நிறைவேற்றுவது
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ بَالَ ثُمَّ تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَامَ فَصَلَّى، فَسُئِلَ فَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم صَنَعَ مِثْلَ هَذَا‏.‏ قَالَ إِبْرَاهِيمُ فَكَانَ يُعْجِبُهُمْ، لأَنَّ جَرِيرًا كَانَ مِنْ آخِرِ مَنْ أَسْلَمَ‏.‏
ஹம்மாம் பின் அல்-ஹாரிஸ் கூறினார்கள்:
"ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் சிறுநீர் கழிப்பதை நான் பார்த்தேன். பிறகு அவர்கள் உளூச் செய்து, தங்கள் குஃப்ஃபைன் (கனமான துணி அல்லது தோலால் செய்யப்பட்ட காலுறைகள்) மீது மஸ்ஹு செய்து, எழுந்து நின்று தொழுதார்கள். அவர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்வதை நான் பார்த்தேன்' என்று கூறினார்கள்."

இப்ராஹீம் கூறினார்கள்: "ஜரீர் (ரழி) அவர்கள் இறுதியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவராக இருந்ததால், இது அவர்களுக்கு (அறிஞர்களுக்கு) விருப்பமானதாக இருந்தது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ وَضَّأْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَصَلَّى‏.‏
அல்-முஃகீரா பின் ஷுஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நான் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்கு உதவினேன். அப்போது அவர்கள் தமது குஃப்களின் மீது தடவி, தொழுதார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا لَمْ يُتِمَّ السُّجُودَ
பாடம்: சஜ்தாவை முழுமையாகச் செய்யாவிட்டால்
أَخْبَرَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا مَهْدِيٌّ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، رَأَى رَجُلاً لاَ يُتِمُّ رُكُوعَهُ وَلاَ سُجُودَهُ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ مَا صَلَّيْتَ ـ قَالَ وَأَحْسِبُهُ قَالَ ـ لَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم‏.‏
ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் ருகூவையும் ஸஜ்தாவையும் முழுமையற்ற முறையில் செய்வதை அவர்கள் கண்டார்கள். அவர் தனது ஸலாத்தை முடித்தபோது, ஹுதைஃபா (ரழி) அவர்கள் அவரிடம், "நீர் தொழவில்லை" என்று கூறினார்கள்.
மேலும் அறிவிப்பாளர் கூறுகிறார், ஹுதைஃபா (ரழி) அவர்கள் இவ்வாறு கூறியதாகவும் நான் நினைக்கிறேன்: "நீர் மரணித்தால் முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னா (மார்க்க வழி) அல்லாத ஒன்றின் மீது மரணிப்பீர்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب يُبْدِي ضَبْعَيْهِ وَيُجَافِي فِي السُّجُودِ
பாடம்: சஜ்தாவின் போது அக்குள்கள் தெரியுமாறு செய்வதும், (கைகளை உடலிலிருந்து) விலக்கி வைப்பதும்
أَخْبَرَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ جَعْفَرٍ، عَنِ ابْنِ هُرْمُزَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ‏.‏ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ نَحْوَهُ‏.‏
அப்துல்லாஹ் பின் மாலிக் பின் புஹைனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"நபி (ஸல்) அவர்கள் தொழும்போது, தமது அக்குள்களின் வெண்மை தெரியும் அளவுக்குத் தமது கைகளை (உடலிலிருந்து) அகற்றி வைப்பார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب فَضْلِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ
கிப்லாவை முன்னோக்குவதன் சிறப்பு
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْمَهْدِيِّ، قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ سَعْدٍ، عَنْ مَيْمُونِ بْنِ سِيَاهٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ صَلَّى صَلاَتَنَا، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَذَلِكَ الْمُسْلِمُ الَّذِي لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ، فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ ‏ ‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் நமது தொழுகையைத் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுக்கும் பிராணிகளை உண்கிறாரோ அவரே அந்த முஸ்லிம். அவருக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பும், அவனது தூதரின் பாதுகாப்பும் உண்டு. எனவே, அல்லாஹ்வின் பாதுகாப்பு விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வுக்குத் துரோகம் செய்யாதீர்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا نُعَيْمٌ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ فَإِذَا قَالُوهَا وَصَلَّوْا صَلاَتَنَا، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَذَبَحُوا ذَبِيحَتَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ إِلاَّ بِحَقِّهَا، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ ‏ ‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மக்கள் 'லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை) என்று கூறும் வரை அவர்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் அதைச் சொல்லி, நமது தொழுகையைத் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போன்று அறுத்தால், அவர்களின் இரத்தங்களும் அவர்களின் உடைமைகளும் நமக்குத் தடைசெய்யப்பட்டுவிட்டன; (இஸ்லாத்தின்) உரிமையைக் கொண்டே தவிர. மேலும் அவர்களின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
قَالَ ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى، حَدَّثَنَا حُمَيْدٌ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ وَقَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ قَالَ سَأَلَ مَيْمُونُ بْنُ سِيَاهٍ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ يَا أَبَا حَمْزَةَ، مَا يُحَرِّمُ دَمَ الْعَبْدِ وَمَالَهُ فَقَالَ مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَصَلَّى صَلاَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَهُوَ الْمُسْلِمُ، لَهُ مَا لِلْمُسْلِمِ، وَعَلَيْهِ مَا عَلَى الْمُسْلِمِ‏.‏
மைமூன் பின் சியாஹ் அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம், "ஓ அபூ ஹம்ஸா! ஓர் அடியாரின் உயிரையும், அவரது செல்வத்தையும் புனிதமாக்குவது எது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "யார் 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாருமில்லை' என்று சாட்சி பகர்ந்து, எங்கள் கிப்லாவை முன்னோக்கி, எங்கள் தொழுகையைத் தொழுது, நாங்கள் அறுத்த பிராணியை உண்கிறாரோ அவரே முஸ்லிம் ஆவார். முஸ்லிமுக்குரிய (உரிமைகள்) அவருக்கும் உண்டு; முஸ்லிமின் மீதுள்ள (கடமைகள்) அவர் மீதும் உண்டு" என்று பதிலளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب قِبْلَةِ أَهْلِ الْمَدِينَةِ وَأَهْلِ الشَّأْمِ وَالْمَشْرِقِ
அல்-மதீனா, ஷாம் மற்றும் கிழக்கு பகுதி மக்களின் கிப்லா.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلاَ تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ وَلاَ تَسْتَدْبِرُوهَا، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا ‏ ‏‏.‏ قَالَ أَبُو أَيُّوبَ فَقَدِمْنَا الشَّأْمَ فَوَجَدْنَا مَرَاحِيضَ بُنِيَتْ قِبَلَ الْقِبْلَةِ، فَنَنْحَرِفُ وَنَسْتَغْفِرُ اللَّهَ تَعَالَى‏.‏ وَعَنِ الزُّهْرِيِّ عَنْ عَطَاءٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ‏.‏
அபூ அய்யூப் அல்-அன்சாரி (ரழி) அறிவித்தார்கள்:

நபி (ஸல்) கூறினார்கள், "மலஜலம் கழிக்கும்போது, கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம், கிப்லாவைப் புறமுதுகு காட்டவும் வேண்டாம், மாறாக கிழக்கையோ மேற்கையோ முன்னோக்குங்கள்."

அபூ அய்யூப் (ரழி) மேலும் கூறினார்கள். "நாங்கள் ஷாம் நாட்டிற்கு வந்தபோது, கிப்லாவை முன்னோக்கியிருந்த சில கழிவறைகளை நாங்கள் கண்டோம்; ஆகவே, நாங்கள் அவற்றைப் பயன்படுத்தும்போது (கிப்லாவிலிருந்து) எங்களைத் திருப்பிக்கொண்டோம் மேலும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினோம்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى}
பாடம்: அல்லாஹ் கூறுவதாவது: "{வத்தகிலூ மின் மகாம இப்ராஹீம முஸல்லா}" ("இப்ராஹீம் (அலை) நிற்குமிடத்தை நீங்கள் தொழுமிடமாக எடுத்துக் கொள்ளுங்கள்")
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَأَلْنَا ابْنَ عُمَرَ عَنْ رَجُلٍ، طَافَ بِالْبَيْتِ الْعُمْرَةَ، وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، أَيَأْتِي امْرَأَتَهُ فَقَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ‏.‏ وَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَقَالَ لاَ يَقْرَبَنَّهَا حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ‏.‏
அம்ர் பின் தீனார் கூறியதாவது:

நாங்கள் இப்னு உமர் (ரழி) அவர்களிடம், "உம்ராவிற்காகக் கஃபாவைத் தவாஃப் செய்துவிட்டு, ஆனால் ஸஃபா மற்றும் மர்வாவிற்கு இடையே சுற்றாத ஒருவர், தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளலாமா?" என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு) வந்தார்கள்; கஃபாவை ஏழு முறை தவாஃப் செய்தார்கள். 'மகாமு இப்ராஹீம்' இடத்திற்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஸஃபா மற்றும் மர்வாவிற்கு இடையே சுற்றினார்கள். 'ல கத் கான லகும் ஃபீ ரசூலில்லாஹி உஸ்வதுன் ஹஸனா' (நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது)" என்று விடையளித்தார்கள்.

மேலும் நாங்கள் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடமும் கேட்டோம். அதற்கு அவர்கள், "அவர் ஸஃபா மற்றும் மர்வாவிற்கு இடையே சுற்றும் வரை அவளை (தம் மனைவியை) நெருங்கக் கூடாது" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سَيْفٍ، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، قَالَ أُتِيَ ابْنُ عُمَرَ فَقِيلَ لَهُ هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْكَعْبَةَ‏.‏ فَقَالَ ابْنُ عُمَرَ فَأَقْبَلْتُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ خَرَجَ، وَأَجِدُ بِلاَلاً قَائِمًا بَيْنَ الْبَابَيْنِ، فَسَأَلْتُ بِلاَلاً فَقُلْتُ أَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْكَعْبَةِ قَالَ نَعَمْ رَكْعَتَيْنِ بَيْنَ السَّارِيَتَيْنِ اللَّتَيْنِ عَلَى يَسَارِهِ إِذَا دَخَلْتَ، ثُمَّ خَرَجَ فَصَلَّى فِي وَجْهِ الْكَعْبَةِ رَكْعَتَيْنِ‏.‏
முஜாஹித் அவர்கள் அறிவித்தார்கள்:

இப்னு `உமர் (ரழி) அவர்களிடம் ஒருவர் வந்து, "இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் க`பாவிற்குள் நுழைந்துள்ளார்கள்" என்று கூறினார். இப்னு `உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் (அங்கு) சென்றேன்; ஆனால் நபி (ஸல்) அவர்கள் வெளியேறிவிட்டார்கள். மேலும் நான் பிலால் (ரழி) அவர்கள் (அதன்) இரு கதவுகளுக்கு இடையில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். நான் பிலால் (ரழி) அவர்களிடம், 'நபி (ஸல்) அவர்கள் க`பாவிற்குள் தொழுதார்களா?' என்று கேட்டேன். (அதற்கு) அவர், 'ஆம், நீங்கள் நுழையும்போது உங்கள் இடதுபுறத்தில் இருக்கும் இரண்டு தூண்களுக்கு இடையில் இரண்டு ரக்அத்துகள் (தொழுதார்கள்)' என்று கூறினார். பிறகு (நபி (ஸல்) அவர்கள்) வெளியே வந்து க`பாவை முன்னோக்கி இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ لَمَّا دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا، وَلَمْ يُصَلِّ حَتَّى خَرَجَ مِنْهُ، فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قُبُلِ الْكَعْبَةِ وَقَالَ ‏ ‏ هَذِهِ الْقِبْلَةُ ‏ ‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கஃபாவிற்குள் நுழைந்தபோது, அதன் எல்லாப் பக்கங்களிலும் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள்; மேலும், அதிலிருந்து வெளியே வரும் வரை (அதில்) தொழாமல், வெளியே வந்ததும் கஃபாவை முன்னோக்கி இரண்டு ரக்அத்கள் தொழுது, "இதுதான் கிப்லா" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب التَّوَجُّهِ نَحْوَ الْقِبْلَةِ حَيْثُ كَانَ
பாடம்: எங்கிருந்தாலும் கிப்லாவை முன்னோக்குவது
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الْكَعْبَةِ، فَأَنْزَلَ اللَّهُ ‏{‏قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ‏}‏ فَتَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ، وَقَالَ السُّفَهَاءُ مِنَ النَّاسِ ـ وَهُمُ الْيَهُودُ ـ مَا وَلاَّهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا ‏{‏قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ‏}‏ فَصَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ ثُمَّ خَرَجَ بَعْدَ مَا صَلَّى، فَمَرَّ عَلَى قَوْمٍ مِنَ الأَنْصَارِ فِي صَلاَةِ الْعَصْرِ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ فَقَالَ هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَأَنَّهُ تَوَجَّهَ نَحْوَ الْكَعْبَةِ‏.‏ فَتَحَرَّفَ الْقَوْمُ حَتَّى تَوَجَّهُوا نَحْوَ الْكَعْبَةِ‏.‏
பராஃ பின் ஆஸிப் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை முன்னோக்கித் தொழுதார்கள். ஆனால் அவர்கள் கஃபாவை முன்னோக்க விரும்பினார்கள். ஆகவே அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) அருளினான்:

**"கத் நரா தகல்லுப வஜ்ஹிக்க ஃபிஸ்ஸமா..."**

(பொருள்: "நிச்சயமாக, உம்முடைய முகம் வானத்தை நோக்கித் திரும்புவதை நாம் கண்டோம்!").

எனவே, அவர்கள் கஃபாவை முன்னோக்கினார்கள். மக்களில் உள்ள அறிவீனர்கள் - அதாவது யூதர்கள் - கூறினார்கள்: "அவர்கள் முன்னர் கடைப்பிடித்து வந்த அவர்களின் கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பியது எது?"

(அதற்கு பதிலாக அல்லாஹ் அருளினான்):

**"குல் லில்லாஹில் மஷ்ரிக்கு வல் மஃரிபு யஹ்தீ மன் யஷாகு இலா ஸிராதிம் முஸ்தகீம்."**

(பொருள்: "(நபியே!) நீர் கூறுவீராக: 'கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் தான் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்'.").

ஒருவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். பிறகு அவர் தொழுது முடித்த பின் வெளியேறினார். அவர் அன்சாரிகளில் ஒரு கூட்டத்தினர் அஸர் தொழுகையில் பைத்துல் முகத்தஸை முன்னோக்கித் தொழுது கொண்டிருப்பதைக் கடந்து சென்றார். அவர் கூறினார்: "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதேன் என்றும், அவர்கள் கஃபாவை முன்னோக்கினார்கள் என்றும் சாட்சி கூறுகிறேன்." உடனே அந்தக் கூட்டத்தினர் கஃபாவை முன்னோக்கும் வரை (தொழுகையிலேயே) திரும்பிக் கொண்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُسْلِمٌ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ، فَإِذَا أَرَادَ الْفَرِيضَةَ نَزَلَ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்முடைய வாகனம் (ராஹிலா) எந்தப் பக்கம் திரும்பினாலும், அதன் மீது சவாரி செய்துகொண்டிருக்கும்போதே (கூடுதலான, கடமையல்லாத தொழுகையை) தொழுவார்கள். மேலும், அவர்கள் கடமையான தொழுகையை தொழ நாடியபோதெல்லாம், (வாகனத்திலிருந்து) இறங்கி கிப்லாவை முன்னோக்கி தொழுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم ـ قَالَ إِبْرَاهِيمُ لاَ أَدْرِي زَادَ أَوْ نَقَصَ ـ فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ يَا رَسُولَ اللَّهِ، أَحَدَثَ فِي الصَّلاَةِ شَىْءٌ قَالَ ‏"‏ وَمَا ذَاكَ ‏"‏‏.‏ قَالُوا صَلَّيْتَ كَذَا وَكَذَا‏.‏ فَثَنَى رِجْلَيْهِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ، فَلَمَّا أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ قَالَ ‏"‏ إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلاَةِ شَىْءٌ لَنَبَّأْتُكُمْ بِهِ، وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ، أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي، وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ فَلْيَتَحَرَّى الصَّوَابَ، فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ يُسَلِّمْ، ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيْنِ ‏"‏‏.‏
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். (இதன் அறிவிப்பாளர்) இப்ராஹீம் கூறினார்: "அவர்கள் (தொழுகையில்) அதிகப்படுத்தினார்களா அல்லது குறைத்தார்களா என்று எனக்குத் தெரியாது." நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும், அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் புதிதாக ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அது என்ன?" என்று கேட்டார்கள். மக்கள், "நீங்கள் இவ்வளவு இவ்வளவு தொழுதுவிட்டீர்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் தங்கள் கால்களை மடித்து, கிப்லாவை முன்னோக்கி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்து, பிறகு ஸலாம் கொடுத்தார்கள். பிறகு அவர்கள் தங்கள் முகத்தை எங்களை நோக்கித் திருப்பிக் கூறினார்கள்: "தொழுகையில் புதிதாக ஏதேனும் ஏற்பட்டிருந்தால், நிச்சயமாக அதை நான் உங்களுக்கு அறிவித்திருப்பேன். ஆனால், நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; நீங்கள் மறப்பதைப் போன்றே நானும் மறக்கிறேன். எனவே, நான் மறந்துவிட்டால் எனக்கு நினைவூட்டுங்கள். உங்களில் ஒருவர் தன் தொழுகையில் சந்தேகப்பட்டால், எது சரியானது என்பதைத் தீர்மானித்து, அதனடிப்படையில் (தொழுகையை) பூர்த்தி செய்யட்டும்; பிறகு ஸலாம் கொடுக்கட்டும்; பிறகு இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
بَابُ مَا جَاءَ فِي الْقِبْلَةِ، وَمَنْ لاَ يَرَى الإِعَادَةَ عَلَى مَنْ سَهَا فَصَلَّى إِلَى غَيْرِ الْقِبْلَةِ
கிப்லா பற்றியும், கிப்லா அல்லாத வேறு திசையை நோக்கித் தவறுதலாகத் தொழுதவர் (அத்தொழுகையை) மீண்டும் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று கருதுபவர் பற்றியும் (கூறப்பட்டுள்ளவை).
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ رَبِّي فِي ثَلاَثٍ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى فَنَزَلَتْ ‏{‏وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى‏}‏ وَآيَةُ الْحِجَابِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ، فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ الْبَرُّ وَالْفَاجِرُ‏.‏ فَنَزَلَتْ آيَةُ الْحِجَابِ، وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغَيْرَةِ عَلَيْهِ فَقُلْتُ لَهُنَّ عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ‏.‏ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ‏.‏
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூன்று விஷயங்களில் என் இறைவனுடன் நான் ஒன்றுபட்டேன்.

(முதலாவது), நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மகாமு இப்ராஹீமை நாம் தொழுமிடமாக ஆக்கிக்கொண்டால் (நன்றாக இருக்குமே?)" என்று கூறினேன். அப்போது, **'வத்தகிதூ மின் மகாம இப்ராஹீம முஸல்லா'** (இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.

(இரண்டாவது), ஹிஜாப் (திரையிடுதல்) பற்றிய விஷயம். நான், "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மனைவியரைத் திரையிட்டுக்கொள்ளும்படி தாங்கள் உத்தரவிட வேண்டும். ஏனெனில், நல்லவர்களும் கெட்டவர்களும் அவர்களுடன் பேசுகின்றனர்" என்று கூறினேன். உடனே ஹிஜாப் பற்றிய வசனம் அருளப்பெற்றது.

(மூன்றாவது), நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அவர்மீது பொறாமை கொள்வதில் ஒன்று சேர்ந்தனர். அப்போது நான் அவர்களிடம், **'அஸா ரப்பூஹு இன் தல்லககுன்ன அன் யுபத்திலஹு அஸ்வாஜன் கைரன் மின்குன்ன'** (அவர் உங்களை விவாகரத்து செய்துவிட்டால், உங்களைவிடச் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்குப் பதிலாகத் தரக்கூடும்) என்று கூறினேன். உடனே (நான் கூறியவாறே) இந்த வசனம் அருளப்பெற்றது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ حَدَّثَنِي حُمَيْدٌ، قَالَ سَمِعْتُ أَنَسًا، بِهَذَا‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

மேற்கண்டவாறே (395).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ، فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

மக்கள் குபாவில் ஃபஜ்ர் தொழுகையில் இருந்தபோது, ஒருவர் அவர்களிடம் வந்து, “நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இன்றிரவு குர்ஆன் அருளப்பட்டுள்ளது; அவர்கள் கஅபாவை முன்னோக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளார்கள். எனவே நீங்களும் அதையே முன்னோக்குங்கள்” என்று கூறினார். (அப்போது) அவர்களின் முகங்கள் ஷாம் (திசை) நோக்கியிருந்தன; உடனே அவர்கள் கஅபாவின் பக்கம் திரும்பினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ خَمْسًا فَقَالُوا أَزِيدَ فِي الصَّلاَةِ قَالَ ‏ ‏ وَمَا ذَاكَ ‏ ‏‏.‏ قَالُوا صَلَّيْتَ خَمْسًا‏.‏ فَثَنَى رِجْلَيْهِ وَسَجَدَ سَجْدَتَيْنِ‏.‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களிடம், “தொழுகை(யின் ரக்அத்கள்) அதிகரிக்கப்பட்டு விட்டனவா?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அது என்ன?” என்று கூறினார்கள். அவர்கள், “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர்கள்” என்று கூறினார்கள். எனவே, அவர்கள் தம் கால்களை மடித்து ஸஹ்வுடைய இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب حَكِّ الْبُزَاقِ بِالْيَدِ مِنَ الْمَسْجِدِ
பாடம்: பள்ளிவாசலில் உள்ள சளியைக் கையால் சுரண்டி எடுப்பது
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ، فَشَقَّ ذَلِكَ عَلَيْهِ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، فَقَامَ فَحَكَّهُ بِيَدِهِ فَقَالَ ‏"‏ إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ ـ أَوْ إِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ ـ فَلاَ يَبْزُقَنَّ أَحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمَيْهِ ‏"‏‏.‏ ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ فَبَصَقَ فِيهِ، ثُمَّ رَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، فَقَالَ ‏"‏ أَوْ يَفْعَلْ هَكَذَا ‏"‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கிப்லாவின் திசையில் (சுவரில்) சளியைக் கண்டார்கள். அது அவர்களுக்கு வருத்தத்தை அளித்தது. எந்த அளவிற்கென்றால் (அதன் அதிருப்தி) அவர்களின் முகத்தில் காணப்பட்டது. எனவே அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டிவிட்டு, "உங்களில் எவரேனும் தொழுகைக்காக நின்றால், அவர் தம் இறைவனுடன் தனிமையில் பேசுகிறார்; அல்லது அவரின் இறைவன் அவருக்கும் கிப்லாவுக்கும் இடையில் இருக்கிறான். ஆகவே, உங்களில் எவரும் கிப்லாவின் திசையில் உமிழ வேண்டாம். மாறாக, தம் இடதுபுறமாகவோ அல்லது தம் பாதங்களுக்குக் கீழேயோ உமிழ்ந்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள். பின்னர் தம் மேலாடையின் ஓரத்தை எடுத்து, அதில் உமிழ்ந்து, அதன் ஒரு பகுதியை மறு பகுதியோடு கசக்கிவிட்டு, "அல்லது இவ்வாறு செய்யலாம்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ،‏.‏ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ فَحَكَّهُ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ ‏ ‏ إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي، فَلاَ يَبْصُقْ قِبَلَ وَجْهِهِ، فَإِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லாத் திசைச் சுவரில் எச்சிலைக் கண்டு, அதைச் சுரண்டி எடுத்தார்கள்.

பிறகு அவர்கள் மக்களை நோக்கி, "உங்களில் எவரேனும் தொழுது கொண்டிருக்கும்போது, அவர் தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம்; ஏனெனில், தொழுகையில் அல்லாஹ் அவருக்கு முன்னால் இருக்கிறான்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى فِي جِدَارِ الْقِبْلَةِ مُخَاطًا أَوْ بُصَاقًا أَوْ نُخَامَةً فَحَكَّهُ‏.‏
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லா (திசை) சுவரில் மூக்குச்சளி, அல்லது எச்சில், அல்லது சளியைக் கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி அகற்றினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب حَكِّ الْمُخَاطِ بِالْحَصَى مِنَ الْمَسْجِدِ
மசூதியிலிருந்து மூக்குச் சளியை சரளைக் கற்களால் சுரண்டி அகற்றுதல்
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا، سَعِيدٍ حَدَّثَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي جِدَارِ الْمَسْجِدِ، فَتَنَاوَلَ حَصَاةً فَحَكَّهَا فَقَالَ ‏ ‏ إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمَنَّ قِبَلَ وَجْهِهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் அபூ ஸயீத் (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதின் சுவரில் சளியைக் கண்டார்கள். உடனே ஒரு சிறுகல்லை எடுத்து அதைச் சுரண்டி நீக்கிவிட்டு, "உங்களில் ஒருவர் துப்ப நேரிட்டால், அவர் தமக்கு முன்னாலோ அல்லது தமது வலப்புறத்திலோ துப்ப வேண்டாம்; மாறாக, அவர் தமது இடப்புறத்திலோ அல்லது தமது இடது பாதத்திற்கு அடியிலோ துப்பிக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب لاَ يَبْصُقْ عَنْ يَمِينِهِ، فِي الصَّلاَةِ
பாடம்: தொழுகையில் தனது வலது பக்கம் உமிழக் கூடாது
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، وَأَبَا، سَعِيدٍ أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي حَائِطِ الْمَسْجِدِ، فَتَنَاوَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَصَاةً فَحَتَّهَا ثُمَّ قَالَ ‏ ‏ إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمْ قِبَلَ وَجْهِهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் அபூ ஸயீத் (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவரில் சளியைக் கண்டார்கள். உடனே ஒரு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டி நீக்கினார்கள். பிறகு, "உங்களில் ஒருவர் உமிழ்ந்தால், அவர் தமக்கு முன்னாலோ அல்லது தமது வலது புறத்திலோ உமிழ வேண்டாம்; மாறாக, தமது இடது புறத்திலோ அல்லது தமது இடது பாதத்தின் கீழோ உமிழ்ந்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسًا، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ لاَ يَتْفِلَنَّ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ رِجْلِهِ ‏ ‏‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் எவரும் தனக்கு முன்னாலோ அல்லது தனது வலதுபுறத்திலோ துப்ப வேண்டாம். மாறாக, தனது இடதுபுறத்திலோ அல்லது தனது பாதத்திற்கு அடியிலோ அவர் துப்பிக்கொள்ளலாம்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب لِيَبْزُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى
இடது பக்கம் அல்லது இடது காலின் கீழ் துப்ப வேண்டும்
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ إِنَّ الْمُؤْمِنَ إِذَا كَانَ فِي الصَّلاَةِ فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ، فَلاَ يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ ‏ ‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக இறைநம்பிக்கையாளர் ஒருவர் தொழுகையில் இருக்கும்போது, தம் இறைவனுடன் தனிமையில் உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்னாலோ அல்லது தமது வலது பக்கத்திலோ உமிழக் கூடாது. மாறாக, தமது இடது பக்கத்திலோ அல்லது தமது பாதத்திற்கு அடியிலோ (உமிழ்ந்து கொள்ளட்டும்)."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي سَعِيدٍ،‏.‏ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَبْصَرَ نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا بِحَصَاةٍ، ثُمَّ نَهَى أَنْ يَبْزُقَ الرَّجُلُ بَيْنَ يَدَيْهِ أَوْ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى‏.‏ وَعَنِ الزُّهْرِيِّ سَمِعَ حُمَيْدًا عَنْ أَبِي سَعِيدٍ نَحْوَهُ‏.‏
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் கிப்லாவின் திசையிலுள்ள சுவரில் சளி இருந்ததைக் கண்டார்கள். அதனை ஒரு சிறு கல்லால் சுரண்டி அகற்றினார்கள்.

பின்னர் அவர்கள் முன்புறமாகவோ அல்லது வலப்புறமாகவோ உமிழ்வதைத் தடுத்தார்கள், ஆனால் ஒருவரின் இடப்புறமாகவோ அல்லது அவரின் இடது காலுக்குக் கீழேயோ உமிழ்வதை அனுமதித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب كَفَّارَةِ الْبُزَاقِ فِي الْمَسْجِدِ
பாடம்: மசூதியில் துப்புவதற்கான பரிகாரம்
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ، وَكَفَّارَتُهَا دَفْنُهَا ‏ ‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "பள்ளிவாசலில் உமிழ்வது ஒரு பாவமாகும், அதன் பரிகாரம் அதனைப் புதைப்பதாகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب دَفْنِ النُّخَامَةِ فِي الْمَسْجِدِ
பள்ளிவாசலில் சளியைப் புதைத்தல்
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلاَةِ فَلاَ يَبْصُقْ أَمَامَهُ، فَإِنَّمَا يُنَاجِي اللَّهَ مَا دَامَ فِي مُصَلاَّهُ، وَلاَ عَنْ يَمِينِهِ، فَإِنَّ عَنْ يَمِينِهِ مَلَكًا، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ، فَيَدْفِنُهَا ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவர் தொழுகைக்காக நின்றால், அவர் தமக்கு முன்புறமாக உமிழ வேண்டாம்; ஏனெனில் அவர் தமது தொழுகை இடத்தில் இருக்கும் போதெல்லாம் அல்லாஹ்வுடன் தனிமையில் உரையாடுகிறார். மேலும் அவர் தமது வலது புறத்திலும் உமிழ வேண்டாம்; ஏனெனில் அவரது வலது புறத்தில் ஒரு வானவர் இருக்கிறார். ஆனால், அவர் தமது இடது புறத்திலோ அல்லது தமது பாதத்திற்கு அடியிலோ உமிழ்ந்து, அதைப் புதைத்துவிடட்டும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا بَدَرَهُ الْبُزَاقُ فَلْيَأْخُذْ بِطَرَفِ ثَوْبِهِ
பாடம்: ஒருவருக்குத் திடீரென எச்சில் வந்தால், அவர் தமது ஆடையின் ஓரத்தை எடுத்துக்கொள்ளட்டும்.
حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ فَحَكَّهَا بِيَدِهِ، وَرُئِيَ مِنْهُ كَرَاهِيَةٌ ـ أَوْ رُئِيَ كَرَاهِيَتُهُ لِذَلِكَ وَشِدَّتُهُ عَلَيْهِ ـ وَقَالَ ‏"‏ إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ ـ أَوْ رَبُّهُ بَيْنَهُ وَبَيْنَ قِبْلَتِهِ ـ فَلاَ يَبْزُقَنَّ فِي قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ ‏"‏‏.‏ ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ فَبَزَقَ فِيهِ، وَرَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، قَالَ ‏"‏ أَوْ يَفْعَلُ هَكَذَا ‏"‏‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிப்லாவின் திசையில் (சுவரில்) சளியைக் கண்டார்கள்; அதைத் தம் கையால் சுரண்டி அகற்றினார்கள். அவர்களிடம் வெறுப்பும், (அதனால் ஏற்பட்ட) சிரமமும் காணப்பட்டது. அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றால், அவர் தம் இறைவனுடன் தனிமையில் பேசுகிறார் - அல்லது அவரின் இறைவன் அவருக்கும் அவரின் கிப்லாவுக்கும் இடையில் இருக்கிறான். எனவே, அவர் தம் கிப்லாவின் திசையில் உமிழ வேண்டாம். மாறாக, அவர் தம் இடதுபுறமோ அல்லது தம் பாதத்தின் கீழோ உமிழ்ந்து கொள்ளட்டும்." பின்னர் அவர்கள் தம் மேலங்கியின் ஓர் ஓரத்தைப் பிடித்து, அதில் உமிழ்ந்து, அதன் ஒரு பகுதியை மறு பகுதியோடு கசக்கினார்கள். "அல்லது இவ்வாறு செய்யுங்கள்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب عِظَةِ الإِمَامِ النَّاسَ فِي إِتْمَامِ الصَّلاَةِ، وَذِكْرِ الْقِبْلَةِ
ஸலாத் (தொழுகை) சரியாக நிறைவேற்றுவது மற்றும் கிப்லா (மக்காவில் உள்ள கஃபா) பற்றி மக்களுக்கு இமாம் அவர்களின் போதனை
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا فَوَاللَّهِ مَا يَخْفَى عَلَىَّ خُشُوعُكُمْ وَلاَ رُكُوعُكُمْ، إِنِّي لأَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனது கிப்லா இங்கே இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களின் உள்ளச்சமோ, உங்களின் ருகூவோ எனக்கு மறைந்திருக்கவில்லை. நிச்சயமாக நான் உங்களை என் முதுகுக்குப் பின்னாலும் பார்க்கிறேன்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةً ثُمَّ رَقِيَ الْمِنْبَرَ، فَقَالَ فِي الصَّلاَةِ وَفِي الرُّكُوعِ ‏ ‏ إِنِّي لأَرَاكُمْ مِنْ وَرَائِي كَمَا أَرَاكُمْ ‏ ‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் மிம்பரின் மீது ஏறி, தொழுகை மற்றும் ருகூவு குறித்து(ப் பேசுகையில்), "நிச்சயமாக நான் உங்களை (எனக்கு முன்னால்) பார்ப்பதைப் போலவே, எனக்குப் பின்னாலிருந்தும் பார்க்கிறேன்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب هَلْ يُقَالُ مَسْجِدُ بَنِي فُلاَنٍ
பனூ இன்னாரின் மஸ்ஜித் (பள்ளிவாசல்) என்று சொல்வது அனுமதிக்கப்பட்டதா?
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي أُضْمِرَتْ مِنَ الْحَفْيَاءِ، وَأَمَدُهَا ثَنِيَّةُ الْوَدَاعِ، وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ، وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ فِيمَنْ سَابَقَ بِهَا‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பயிற்சி அளிக்கப்பட்ட குதிரைகளுக்கு இடையே ‘அல்-ஹஃப்யா’விலிருந்து ‘தனிய்யத்துல் வதா’ வரையிலும், பயிற்சி அளிக்கப்படாத குதிரைகளுக்கு இடையே ‘தனிய்யா’விலிருந்து ‘பனீ ஸுரைக்’ பள்ளிவாசல் வரையிலும் பந்தயம் நடத்தினார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்களும் அப்பந்தயத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவராக இருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْقِسْمَةِ وَتَعْلِيقِ الْقِنْوِ فِي الْمَسْجِدِ
பாடம்: மசூதியில் பங்கிடுதலும், பேரீச்சம்பழக் குலையைத் தொங்கவிடுதலும்.
وَقَالَ إِبْرَاهِيمُ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَالٍ مِنَ الْبَحْرَيْنِ فَقَالَ ‏"‏ انْثُرُوهُ فِي الْمَسْجِدِ ‏"‏‏.‏ وَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الصَّلاَةِ، وَلَمْ يَلْتَفِتْ إِلَيْهِ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ جَاءَ فَجَلَسَ إِلَيْهِ، فَمَا كَانَ يَرَى أَحَدًا إِلاَّ أَعْطَاهُ، إِذْ جَاءَهُ الْعَبَّاسُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي فَإِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلاً، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ خُذْ ‏"‏‏.‏ فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَسْتَطِعْ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أُؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعُهُ إِلَىَّ‏.‏ قَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ قَالَ فَارْفَعْهُ أَنْتَ عَلَىَّ‏.‏ قَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أُؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَىَّ‏.‏ قَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ قَالَ فَارْفَعْهُ أَنْتَ عَلَىَّ‏.‏ قَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ فَنَثَرَ مِنْهُ، ثُمَّ احْتَمَلَهُ فَأَلْقَاهُ عَلَى كَاهِلِهِ ثُمَّ انْطَلَقَ، فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُتْبِعُهُ بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا، عَجَبًا مِنْ حِرْصِهِ، فَمَا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (பெரும்) செல்வம் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அதை பள்ளிவாசலில் கொட்டி வையுங்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட செல்வங்களிலேயே அதுதான் அதிகமானதாக இருந்தது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காகச் சென்றார்கள்; அதன் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தொழுகையை முடித்ததும் வந்து, அச்செல்வத்திற்கு அருகே அமர்ந்தார்கள். தாம் பார்த்த எவருக்கும் அதிலிருந்து கொடுக்காமல் அவர்கள் இருக்கவில்லை.

அப்போது அல்-அப்பாஸ் (ரழி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கொடுங்கள். ஏனெனில் நான் (பத்ருப் போரில்) எனக்காகவும் அகீலுக்காகவும் பிணைத்தொகை செலுத்தியுள்ளேன்" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எடுத்துக்கொள்" என்றார்கள். அவர் (அச்செல்வத்தை) தமது ஆடைக்குள் அள்ளிப் போட்டுக்கொண்டார். பிறகு அதைத் தூக்க முயன்றார்; அவரால் (தூக்க) முடியவில்லை. உடனே அவர், "அல்லாஹ்வின் தூதரே! இதை என் மீது தூக்கிவிட அவர்களில் (தோழர்களில்) ஒருவருக்குக் கட்டளையிடுங்கள்" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "மாட்டேன்" என்றார்கள். "அப்படியென்றால் நீங்களாவது இதை என் மீது தூக்கி விடுங்கள்" என்று கேட்டார். அதற்கும் அவர்கள் "மாட்டேன்" என்றார்கள்.

பிறகு அதிலிருந்து சிறிது குறைத்துவிட்டு (மீண்டும்) அதைத் தூக்க முயன்றார். (முடியாததால்) "அல்லாஹ்வின் தூதரே! இதை என் மீது தூக்கிவிட அவர்களில் ஒருவருக்குக் கட்டளையிடுங்கள்" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "மாட்டேன்" என்றார்கள். "அப்படியென்றால் நீங்களாவது இதை என் மீது தூக்கி விடுங்கள்" என்று கேட்டார். அதற்கும் அவர்கள் "மாட்டேன்" என்றார்கள்.

பிறகு அதிலிருந்து (மேலும்) சிறிது குறைத்துவிட்டு, அதைச் சுமந்து தமது தோள் மீது வைத்துக்கொண்டு நடக்கலானார்கள். அல்-அப்பாஸ் (ரழி) அவர்களின் பேராசையைக் கண்டு வியப்புற்றவர்களாக, அவர் நம் பார்வையை விட்டு மறையும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அச்செல்வத்திலிருந்து ஒரு திர்ஹம் எஞ்சியிருக்கும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَنْ دَعَا لِطَعَامٍ فِي الْمَسْجِدِ وَمَنْ أَجَابَ فِيهِ
மசூதியில் உணவுக்கு அழைப்பு விடுத்தலும், அங்கு அதை ஏற்றுக்கொள்வதும்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، سَمِعَ أَنَسًا، قَالَ وَجَدْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ مَعَهُ نَاسٌ فَقُمْتُ، فَقَالَ لِي ‏"‏ آرْسَلَكَ أَبُو طَلْحَةَ ‏"‏ قُلْتُ نَعَمْ‏.‏ فَقَالَ ‏"‏ لِطَعَامٍ ‏"‏‏.‏ قُلْتُ نَعَمْ‏.‏ فَقَالَ لِمَنْ حَوْلَهُ ‏"‏ قُومُوا ‏"‏‏.‏ فَانْطَلَقَ وَانْطَلَقْتُ بَيْنَ أَيْدِيهِمْ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன்; அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் (அவர்கள் அருகில்) நின்றேன். அவர்கள் என்னிடம், "அபூதல்ஹா உன்னை அனுப்பினாரா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அவர்கள், "உணவுக்காகவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். பிறகு அவர்கள் தம்மைச் சுற்றியிருந்தவர்களிடம், "எழுந்திருங்கள்" என்று கூறினார்கள். அவர்கள் புறப்பட்டார்கள்; நான் அவர்களுக்கு முன்னால் சென்றேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْقَضَاءِ وَاللِّعَانِ فِي الْمَسْجِدِ بَيْنَ الرِّجَالِ وَالنِّسَاءِ
மசூதியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சட்டத் தீர்ப்புகளை வழங்குவதும், அல்-லிஆன் (சாபப் பிரமாணம்) செய்வதும்
حَدَّثَنَا يَحْيَى، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رَجُلاً وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَتَلاَعَنَا فِي الْمَسْجِدِ وَأَنَا شَاهِدٌ‏.‏
சஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தம் மனைவியுடன் (வேறொரு) ஆணைக் கண்டால், அவரைக் கொன்றுவிடலாமா?" என்று கேட்டார். பின்னர் அவ்விருவரும் பள்ளிவாசலில் 'லிஆன்' செய்தனர்; அப்போது நான் சாட்சியாக இருந்தேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا دَخَلَ بَيْتًا يُصَلِّي حَيْثُ شَاءَ، أَوْ حَيْثُ أُمِرَ، وَلاَ يَتَجَسَّسُ
பாடம்: ஒருவர் ஒரு வீட்டிற்குள் நுழைந்தால், அவர் விரும்பிய இடத்தில் அல்லது அவருக்குக் கட்டளையிடப்பட்ட இடத்தில் தொழுவார்; மேலும் அவர் உளவு பார்க்கக் கூடாது.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، عَنْ عِتْبَانَ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَتَاهُ فِي مَنْزِلِهِ فَقَالَ ‏ ‏ أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ لَكَ مِنْ بَيْتِكَ ‏ ‏‏.‏ قَالَ فَأَشَرْتُ لَهُ إِلَى مَكَانٍ، فَكَبَّرَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَصَفَفْنَا خَلْفَهُ، فَصَلَّى رَكْعَتَيْنِ‏.‏
இத்பான் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்து, "நான் எங்கே தொழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கூறினார்கள். நான் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டினேன். பின்னர் நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹு அக்பர்" என்று கூறினார்கள், நாங்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம், மேலும் அவர்கள் இரண்டு ரக்அத் தொழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْمَسَاجِدِ فِي الْبُيُوتِ
வீடுகளில் பள்ளிவாசல்களை (அமைத்துக் கொள்வது) பற்றி
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ الأَنْصَارِيُّ، أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ ـ وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِمَّنْ شَهِدَ بَدْرًا مِنَ الأَنْصَارِ ـ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، قَدْ أَنْكَرْتُ بَصَرِي، وَأَنَا أُصَلِّي لِقَوْمِي، فَإِذَا كَانَتِ الأَمْطَارُ سَالَ الْوَادِي الَّذِي بَيْنِي وَبَيْنَهُمْ، لَمْ أَسْتَطِعْ أَنْ آتِيَ مَسْجِدَهُمْ فَأُصَلِّيَ بِهِمْ، وَوَدِدْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَّكَ تَأْتِينِي فَتُصَلِّيَ فِي بَيْتِي، فَأَتَّخِذَهُ مُصَلًّى‏.‏ قَالَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ سَأَفْعَلُ إِنْ شَاءَ اللَّهُ ‏"‏‏.‏ قَالَ عِتْبَانُ فَغَدَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ حِينَ ارْتَفَعَ النَّهَارُ، فَاسْتَأْذَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَذِنْتُ لَهُ، فَلَمْ يَجْلِسْ حَتَّى دَخَلَ الْبَيْتَ ثُمَّ قَالَ ‏"‏ أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ ‏"‏‏.‏ قَالَ فَأَشَرْتُ لَهُ إِلَى نَاحِيَةٍ مِنَ الْبَيْتِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَكَبَّرَ، فَقُمْنَا فَصَفَّنَا، فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، قَالَ وَحَبَسْنَاهُ عَلَى خَزِيرَةٍ صَنَعْنَاهَا لَهُ‏.‏ قَالَ فَثَابَ فِي الْبَيْتِ رِجَالٌ مِنْ أَهْلِ الدَّارِ ذَوُو عَدَدٍ فَاجْتَمَعُوا، فَقَالَ قَائِلٌ مِنْهُمْ أَيْنَ مَالِكُ بْنُ الدُّخَيْشِنِ أَوِ ابْنُ الدُّخْشُنِ فَقَالَ بَعْضُهُمْ ذَلِكَ مُنَافِقٌ لاَ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لاَ تَقُلْ ذَلِكَ، أَلاَ تَرَاهُ قَدْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ يُرِيدُ بِذَلِكَ وَجْهَ اللَّهِ ‏"‏‏.‏ قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ‏.‏ قَالَ فَإِنَّا نَرَى وَجْهَهُ وَنَصِيحَتَهُ إِلَى الْمُنَافِقِينَ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ ‏"‏‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ ثُمَّ سَأَلْتُ الْحُصَيْنَ بْنَ مُحَمَّدٍ الأَنْصَارِيَّ ـ وَهْوَ أَحَدُ بَنِي سَالِمٍ وَهُوَ مِنْ سَرَاتِهِمْ ـ عَنْ حَدِيثِ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، فَصَدَّقَهُ بِذَلِكَ‏.‏
பத்ருப் போரில் கலந்து கொண்ட அன்சாரிகளில் ஒருவரான இவ்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! என் கண்பார்வை மங்கிவிட்டது. நான் என் சமூகத்தாருக்குத் தொழுகை நடத்தி வருகிறேன். மழைக் காலங்களில் எனக்கும் அவர்களுக்குமிடையே உள்ள ஓடையில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்குத் தொழுகை நடத்த என்னால் முடிவதில்லை. அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என் வீட்டிற்கு வந்து (ஓரிடத்தில்) தொழுதால், அந்த இடத்தை நான் தொழுமிடமாக (முஸல்லாவாக) ஆக்கிக்கொள்வேன் என விரும்புகிறேன்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் நாடினால் அவ்வாறே செய்வேன்" என்று கூறினார்கள்.

இத்பான் (ரலி) அவர்கள் தொடர்ந்தார்கள்: (மறுநாள்) பொழுது நன்கு உயர்ந்த பின், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (என் வீட்டிற்கு) வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். நான் அனுமதி அளித்தேன். வீட்டிற்குள் நுழைந்ததும் அவர்கள் அமரவில்லை; "உம்முடைய வீட்டில் நான் எங்கே தொழ வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள். நான் வீட்டின் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) நின்று தக்பீர் கூறினார்கள். நாங்களும் எழுந்து அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். அவர்களுக்காக நாங்கள் தயாரித்திருந்த 'கஸீரா' எனும் உணவை (உண்ணச் செய்வதற்காக) அவர்களைத் தடுத்து இருத்தினோம்.

(இதையறிந்து) அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளிலிருந்து ஏராளமான ஆண்கள் (என்) வீட்டில் திரண்டனர். அவர்களில் ஒருவர், "மாலிக் இப்னு துகைஷன் அல்லது இப்னு துக்ஷுன் எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவர்களில் ஒருவர், "அவன் ஒரு நயவஞ்சகன்; அவன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பதில்லை" என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறு சொல்லாதீர்! அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை) என்று அவர் கூறியதை நீர் பார்க்கவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்; ஆனால், நாங்கள் அவருடைய கவனமும் நற்போதனையும் நயவஞ்சகர்களின் பால் இருப்பதைத்தான் பார்க்கிறோம்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்பவர் மீது நரக நெருப்பை அல்லாஹ் நிச்சயமாகத் தடுத்துவிட்டான்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب التَّيَمُّنِ فِي دُخُولِ الْمَسْجِدِ وَغَيْرِهِ
பள்ளிவாசல் மற்றும் பிற இடங்களில் நுழையும்போது வலதுபுறத்தை முற்படுத்துதல்
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِهِ كُلِّهِ فِي طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் தங்களின் அங்கசுத்தி செய்வதிலும், தலை வாருவதிலும், காலணிகள் அணிவதிலும் மற்றும் தங்களின் எல்லா காரியங்களிலும் இயன்றவரை வலது புறத்திலிருந்தே துவங்குவதை விரும்புவார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
بَابُ هَلْ تُنْبَشُ قُبُورُ مُشْرِكِي الْجَاهِلِيَّةِ، وَيُتَّخَذُ مَكَانَهَا مَسَاجِدَ
பாடம்: அறியாமைக் காலத்து இணைவைப்பாளர்களின் கப்றுகளைத் தோண்டி, அவ்விடங்களை மஸ்ஜிதுகளாக ஆக்கலாமா?
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உம் ஹபீபா (ரழி) அவர்களும் உம் ஸலமா (ரழி) அவர்களும் எத்தியோப்பியாவில் தாங்கள் கண்ட, உருவப்படங்கள் இருந்த ஒரு தேவாலயத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

"அம்மக்களில் ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டால், அவர்கள் அவரது அடக்கஸ்தலத்தின் மீது ஒரு வழிபாட்டுத் தலத்தைக் கட்டி, அதில் இந்த உருவப்படங்களையும் வரைந்துவிடுவார்கள்.

அல்லாஹ்வின் பார்வையில் மறுமை நாளில் அவர்கள் மிக மோசமான படைப்பினங்களாக இருப்பார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ فَنَزَلَ أَعْلَى الْمَدِينَةِ، فِي حَىٍّ يُقَالُ لَهُمْ بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ‏.‏ فَأَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَرْسَلَ إِلَى بَنِي النَّجَّارِ فَجَاءُوا مُتَقَلِّدِي السُّيُوفِ، كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى رَاحِلَتِهِ، وَأَبُو بَكْرٍ رِدْفُهُ، وَمَلأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ، حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ، وَكَانَ يُحِبُّ أَنْ يُصَلِّيَ حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلاَةُ، وَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ، وَأَنَّهُ أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ، فَأَرْسَلَ إِلَى مَلإٍ مِنْ بَنِي النَّجَّارِ فَقَالَ ‏"‏ يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا ‏"‏‏.‏ قَالُوا لاَ وَاللَّهِ، لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلاَّ إِلَى اللَّهِ‏.‏ فَقَالَ أَنَسٌ فَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ، قُبُورُ الْمُشْرِكِينَ، وَفِيهِ خَرِبٌ، وَفِيهِ نَخْلٌ، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ، ثُمَّ بِالْخَرِبِ فَسُوِّيَتْ، وَبِالنَّخْلِ فَقُطِعَ، فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ، وَجَعَلُوا عِضَادَتَيْهِ الْحِجَارَةَ، وَجَعَلُوا يَنْقُلُونَ الصَّخْرَ، وَهُمْ يَرْتَجِزُونَ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مَعَهُمْ وَهُوَ يَقُولُ ‏"‏ اللَّهُمَّ لاَ خَيْرَ إِلاَّ خَيْرُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ ‏"‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, மதீனாவின் மேற்பகுதியில் 'பனூ அம்ர் பின் அவ்ஃப்' என்றழைக்கப்படும் ஒரு கோத்திரத்தினர் மத்தியில் இறங்கினார்கள். அவர்கள் அங்கே பதினான்கு இரவுகள் தங்கினார்கள். பிறகு அவர்கள் 'பனூ அந்-நஜ்ஜார்' கோத்திரத்தினருக்கு ஆளனுப்பினார்கள்; அவர்கள் தங்கள் வாள்களைத் தொங்கவிட்டவர்களாக வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தங்களது வாகனத்தின் மீது அமர்ந்திருக்க, அபூபக்கர் (ரழி) அவர்கள் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்க, பனூ அந்-நஜ்ஜார் கோத்திரத்தார் அவர்களைச் சூழ்ந்திருக்க, அபூ அய்யூப் (ரழி) அவர்களின் வீட்டின் முற்றத்தில் அவர்கள் இறங்கும் வரை நான் (இப்போது) பார்ப்பது போல இருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் எவ்விடத்திலும் தொழுவார்கள்; ஆட்டுத் தொழுவங்களில்கூட தொழுவதை விரும்புபவர்களாக இருந்தார்கள்.

பின்னர் அவர்கள் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, பனூ அந்-நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த சிலரை அழைத்து வரச்செய்து, "ஓ பனூ அந்-நஜ்ஜார் அவர்களே! உங்களுடைய இந்தத் தோட்டத்தின் விலையை எனக்குக் கூறுங்கள்" என்று கேட்டார்கள். அவர்கள், "இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் அல்லாஹ்விடமிருந்து தவிர வேறு யாரிடமிருந்தும் இதன் விலையைக் கோர மாட்டோம்" என்று பதிலளித்தார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள்: அந்த இடத்தில் நான் உங்களுக்குச் சொல்பவை இருந்தன: இணைவைப்பவர்களின் மண்ணறைகள் (கப்றுகள்), பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் பேரீச்சை மரங்கள் இருந்தன.

நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவே, இணைவைப்பவர்களின் மண்ணறைகள் தோண்டி எடுக்கப்பட்டன; பாழடைந்த கட்டிடங்கள் இடித்து சமப்படுத்தப்பட்டன; பேரீச்சை மரங்கள் வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட இந்தப் பேரீச்சை மரங்களை பள்ளிவாசலின் கிப்லாவை நோக்கி வரிசைப்படுத்தினார்கள். மேலும் அதன் (வாசலின்) இரு மருங்கிலும் கற்களை அமைத்தார்கள்.

அவர்கள் (நபித்தோழர்கள்) கவிதைகளை ஓதிக்கொண்டே பாறாங்கற்களைச் சுமந்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்தார்கள். மேலும் அவர்கள்,

**"அல்லாஹும்ம லா கைர இல்லா கைருல் ஆகிரா, ஃபக்ஃபிர் லில் அன்சாரி வல் முஹாஜிரா"**

(யா அல்லாஹ்! மறுமையின் நன்மையைத்தவிர வேறு எந்த நன்மையும் இல்லை! எனவே அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் மன்னிப்பாயாக)

என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ فِي مَرَابِضِ الْغَنَمِ
ஆட்டுத் தொழுவத்தில் தொழுகையை நிறைவேற்றுவது
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ، ثُمَّ سَمِعْتُهُ بَعْدُ يَقُولُ كَانَ يُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ قَبْلَ أَنْ يُبْنَى الْمَسْجِدُ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நபி (ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுதார்கள்."
பிறகு, "மஸ்ஜித் கட்டப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுதார்கள்" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ فِي مَوَاضِعِ الإِبِلِ
ஒட்டகங்கள் நிறுத்தப்படும் இடங்களில் (ஒட்டக முற்றங்களில்) தொழுகையை நிறைவேற்றுவது
حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، قَالَ أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يُصَلِّي إِلَى بَعِيرِهِ وَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ‏.‏
நாஃபி` (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

"இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்தை நோக்கித் தொழுவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் அதைச் செய்வதை நான் கண்டேன்' என்று கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَنْ صَلَّى وَقُدَّامَهُ تَنُّورٌ أَوْ نَارٌ أَوْ شَىْءٌ مِمَّا يُعْبَدُ، فَأَرَادَ بِهِ اللَّهَ
பாடம்: அடுப்பு, நெருப்பு அல்லது வணங்கப்படும் பொருட்களில் ஏதேனும் ஒன்று தமக்கு முன்னால் இருக்க, அல்லாஹ்வை நாடித் தொழுபவர்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ انْخَسَفَتِ الشَّمْسُ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ ‏ ‏ أُرِيتُ النَّارَ، فَلَمْ أَرَ مَنْظَرًا كَالْيَوْمِ قَطُّ أَفْظَعَ ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையைத் தொழுதுவிட்டு கூறினார்கள், "(இப்போது) எனக்கு நரகம் காட்டப்பட்டது. நான் இன்று கண்ட காட்சியை விட மோசமான மற்றும் கொடூரமான காட்சியை ஒருபோதும் கண்டதில்லை."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب كَرَاهِيَةِ الصَّلاَةِ فِي الْمَقَابِرِ
கப்ருஸ்தான்களில் தொழுகையை நிறைவேற்றுவது வெறுக்கத்தக்கதாகும்
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ، وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களின் சில தொழுகைகளை (நவாஃபில்) வீட்டில் தொழுங்கள், மேலும் உங்களின் வீடுகளை கப்ருகளாக ஆக்காதீர்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ فِي مَوَاضِعِ الْخَسْفِ وَالْعَذَابِ
பூமி உள்வாங்கப்பட்ட மற்றும் அல்லாஹ்வின் தண்டனை விழுந்த இடங்களில் தொழுகை நிறைவேற்றுவது (பற்றி கூறப்படுவது)
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ تَدْخُلُوا عَلَى هَؤُلاَءِ الْمُعَذَّبِينَ إِلاَّ أَنْ تَكُونُوا بَاكِينَ، فَإِنْ لَمْ تَكُونُوا بَاكِينَ فَلاَ تَدْخُلُوا عَلَيْهِمْ، لاَ يُصِيبُكُمْ مَا أَصَابَهُمْ ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வேதனை செய்யப்பட்ட இவர்களிடம் நீங்கள் அழுதவர்களாக அன்றி நுழையாதீர்கள். நீங்கள் அழவில்லையெனில், அவர்களிடம் நுழையாதீர்கள். அவர்களுக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேர்ந்துவிடக் கூடும்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ فِي الْبِيعَةِ
தேவாலயத்தில் தொழுவது
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ سَلَمَةَ، ذَكَرَتْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَنِيسَةً رَأَتْهَا بِأَرْضِ الْحَبَشَةِ يُقَالُ لَهَا مَارِيَةُ، فَذَكَرَتْ لَهُ مَا رَأَتْ فِيهَا مِنَ الصُّوَرِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أُولَئِكَ قَوْمٌ إِذَا مَاتَ فِيهِمُ الْعَبْدُ الصَّالِحُ ـ أَوِ الرَّجُلُ الصَّالِحُ ـ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ ‏ ‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

உம்மு ஸலமா (ரழி) அவர்கள், அபிசீனியாவில் (எத்தியோப்பியா) தாம் கண்ட 'மாரியா' என்று அழைக்கப்படும் ஒரு தேவாலயம் குறித்தும், அதில் தாம் கண்ட சித்திரங்கள் குறித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அவர்கள் எத்தகையோர் என்றால், அவர்களில் ஒரு நல்லடியார் - அல்லது ஒரு நல்ல மனிதர் - இறந்துவிட்டால், அவருடைய கப்ரின் மீது ஒரு வணக்கஸ்தலத்தைக் கட்டி, அதில் அந்தச் சித்திரங்களையும் அமைத்து விடுவார்கள். அல்லாஹ்விடம் படைப்பினங்களிலேயே மிகவும் கெட்டவர்கள் அவர்களே."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهْوَ كَذَلِكَ ‏ ‏ لَعْنَةُ اللَّهِ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ ‏ ‏‏.‏ يُحَذِّرُ مَا صَنَعُوا‏.‏
ஆயிஷா (ரழி) அவர்களும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வின் இறுதித் தருணம் வந்தபோது, அவர்கள் தங்களின் 'கமீஸா' எனும் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடலானார்கள். அவர்களுக்கு வெப்பமாகவும் மூச்சுத் திணறவும் ஏற்பட்டபோது, அதைத் தங்களின் முகத்திலிருந்து விலக்கினார்கள். அவர்கள் அந்நிலியில் இருக்கும்போதே, "யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்களின் கப்றுகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டார்கள்" என்று கூறினார்கள். அவர்கள் (யூதர்களும் கிறிஸ்தவர்களும்) செய்ததைப் போன்று (செய்வதை விட்டும்) அவர்கள் எச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் யூதர்களைச் சபிப்பானாக! அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ جُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا ‏"‏
"பூமி எனக்கு மஸ்ஜிதாகவும் (தொழுகைக்கான இடமாகவும்) சுத்தப்படுத்தும் பொருளாகவும் (தயம்மும் செய்வதற்காகவும்) ஆக்கப்பட்டுள்ளது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ حَدَّثَنَا سَيَّارٌ ـ هُوَ أَبُو الْحَكَمِ ـ قَالَ حَدَّثَنَا يَزِيدُ الْفَقِيرُ، قَالَ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ مِنَ الأَنْبِيَاءِ قَبْلِي، نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، وَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً، وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ ‏ ‏‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எனக்கு முன்னர் எந்த நபிமார்களுக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. அவையாவன:
1. ஒரு மாத பயண தூரத்திற்கு (என் எதிரிகளின் உள்ளங்களில்) அச்சத்தை ஏற்படுத்தியதன் மூலம் அல்லாஹ் எனக்கு வெற்றியளித்தான்.
2. பூமி எனக்கும் (என் சமூகத்தாருக்கும்) தொழும் இடமாகவும், தயம்மும் செய்வதற்கான (தூய்மைப்படுத்தும்) பொருளாகவும் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, என் சமூகத்தார் தொழுகையின் நேரம் வந்தடைந்த எந்த இடத்திலும் தொழுதுகொள்ளலாம்.
3. போர்ச்செல்வம் எனக்கு ஹலாலாக (அனுமதிக்கப்பட்டதாக) ஆக்கப்பட்டுள்ளது. (எனக்கு முன்னர் வேறு எவருக்கும் அது அவ்வாறு ஆக்கப்படவில்லை).
4. ஒவ்வொரு நபியும் தமது சமூகத்தாருக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். ஆனால் நானோ முழு மனித இனத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளேன்.
5. (மறுமை நாளில்) பரிந்துரை செய்யும் உரிமை எனக்கு வழங்கப்பட்டுள்ளது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب نَوْمِ الْمَرْأَةِ فِي الْمَسْجِدِ
பள்ளிவாசலில் ஒரு பெண் தூங்குவது (மற்றும் அங்கு தங்குவது)
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ وَلِيدَةً، كَانَتْ سَوْدَاءَ لِحَىٍّ مِنَ الْعَرَبِ، فَأَعْتَقُوهَا، فَكَانَتْ مَعَهُمْ قَالَتْ فَخَرَجَتْ صَبِيَّةٌ لَهُمْ عَلَيْهَا وِشَاحٌ أَحْمَرُ مِنْ سُيُورٍ قَالَتْ فَوَضَعَتْهُ أَوْ وَقَعَ مِنْهَا، فَمَرَّتْ بِهِ حُدَيَّاةٌ وَهْوَ مُلْقًى، فَحَسِبَتْهُ لَحْمًا فَخَطَفَتْهُ قَالَتْ فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ قَالَتْ فَاتَّهَمُونِي بِهِ قَالَتْ فَطَفِقُوا يُفَتِّشُونَ حَتَّى فَتَّشُوا قُبُلَهَا قَالَتْ وَاللَّهِ إِنِّي لَقَائِمَةٌ مَعَهُمْ، إِذْ مَرَّتِ الْحُدَيَّاةُ فَأَلْقَتْهُ قَالَتْ فَوَقَعَ بَيْنَهُمْ قَالَتْ فَقُلْتُ هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ ـ زَعَمْتُمْ ـ وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ، وَهُوَ ذَا هُوَ قَالَتْ فَجَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَسْلَمَتْ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَكَانَ لَهَا خِبَاءٌ فِي الْمَسْجِدِ أَوْ حِفْشٌ قَالَتْ فَكَانَتْ تَأْتِينِي فَتَحَدَّثُ عِنْدِي قَالَتْ فَلاَ تَجْلِسُ عِنْدِي مَجْلِسًا إِلاَّ قَالَتْ وَيَوْمَ الْوِشَاحِ مِنْ أَعَاجِيبِ رَبِّنَا أَلاَ إِنَّهُ مِنْ بَلْدَةِ الْكُفْرِ أَنْجَانِي قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لَهَا مَا شَأْنُكِ لاَ تَقْعُدِينَ مَعِي مَقْعَدًا إِلاَّ قُلْتِ هَذَا قَالَتْ فَحَدَّثَتْنِي بِهَذَا الْحَدِيثِ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அரபுக் குலத்தார் ஒருவரிடம் கறுப்பின அடிமைப் பெண் ஒருவர் இருந்தார். அவர்கள் அவரை விடுதலை செய்துவிட்டனர். இருப்பினும் அவர் அவர்களுடனேயே தங்கிவிட்டார்.

அந்தப் பெண் கூறினார்: "(ஒருமுறை) அக்குலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி வெளியே வந்தாள். அவள் மீது தோலால் ஆன சிவப்பு நிற ஆரம் (விஷாஹ்) ஒன்று இருந்தது. அவள் அதை (ஓரிடத்தில்) கழற்றி வைத்தாள்; அல்லது அது அவளிடமிருந்து கீழே விழுந்துவிட்டது. அப்போது அவ்வழியாகச் சென்ற ஒரு பருந்து, அது கீழே கிடப்பதைப் பார்த்து, அதை இறைச்சித் துண்டு என்று எண்ணி கவ்விச் சென்றுவிட்டது.

அவர்கள் அதைத் தேடினார்கள். ஆனால் அது அவர்களுக்குக் கிடைக்கவில்லை. உடனே அவர்கள் என்மீது பழி சுமத்தினார்கள். அவர்கள் (எந்த அளவிற்கென்றால்) என்னுடைய மர்ம உறுப்பைச் சோதிக்கும் அளவுக்கு என்னைத் துருவித் துருவிச் சோதனையிட்டார்கள்."

அப்பெண் கூறினார்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அவர்களுடன் நின்று கொண்டிருந்தபோது, அந்தப் பருந்து (மீண்டும்) அவ்வழியாகச் சென்று அதை (மேலிருந்து) கீழே போட்டது. அது அவர்களுக்கு இடையே வந்து விழுந்தது. நான் சொன்னேன்: 'இதற்காகத்தான் நீங்கள் என் மீது பழி சுமத்தினீர்கள் - (என்று) நீங்கள் வாதிட்டீர்கள்; (ஆனால்) நான் நிரபராதி; இதோ அது (கிடைத்துவிட்டது)!'"

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பிறகு அப்பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தைத் தழுவினார். பள்ளிவாசலில் அவருக்கென ஒரு கூடாரம் அல்லது சிறிய அறை இருந்தது. அவர் என்னிடம் வந்து பேசுவார். என்னிடம் வந்து அமரும்போதெல்லாம்,

"அந்த ஆபரணத்தின் நாள் எங்கள் இறைவனின் அற்புதங்களில் ஒன்றாகும்;
நிச்சயமாக அவன், இறைமறுப்பு (குஃப்ர்) எனும் ஊரிலிருந்து என்னைக் காப்பாற்றினான்"

என்று கூறாமல் இருந்ததில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நான் அவரிடம், 'உனக்கு என்ன நேர்ந்தது? என்னிடம் அமரும் போதெல்லாம் இதைச் சொல்லாமல் இருப்பதில்லையே?' என்று கேட்டேன். அதற்கு அவர் இந்தச் செய்தியை எனக்கு அறிவித்தார்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب نَوْمِ الرِّجَالِ فِي الْمَسْجِدِ
பாடம்: மசூதியில் ஆண்கள் தூங்குவது
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ، أَنَّهُ كَانَ يَنَامُ وَهْوَ شَابٌّ أَعْزَبُ لاَ أَهْلَ لَهُ فِي مَسْجِدِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நான் இளைஞனாகவும், திருமணமாகாதவனாகவும், குடும்பம் ஏதுமில்லாதவனாகவும் இருந்தபோது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் உறங்குவது வழக்கம்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتَ فَاطِمَةَ، فَلَمْ يَجِدْ عَلِيًّا فِي الْبَيْتِ فَقَالَ ‏"‏ أَيْنَ ابْنُ عَمِّكِ ‏"‏‏.‏ قَالَتْ كَانَ بَيْنِي وَبَيْنَهُ شَىْءٌ، فَغَاضَبَنِي فَخَرَجَ فَلَمْ يَقِلْ عِنْدِي‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لإِنْسَانٍ ‏"‏ انْظُرْ أَيْنَ هُوَ ‏"‏‏.‏ فَجَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هُوَ فِي الْمَسْجِدِ رَاقِدٌ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ مُضْطَجِعٌ، قَدْ سَقَطَ رِدَاؤُهُ عَنْ شِقِّهِ، وَأَصَابَهُ تُرَابٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُهُ عَنْهُ وَيَقُولُ ‏"‏ قُمْ أَبَا تُرَابٍ، قُمْ أَبَا تُرَابٍ ‏"‏‏.‏
சஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரழி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள், ஆனால் அங்கே அலீ (ரழி) அவர்களைக் காணவில்லை. எனவே, அவர்கள், "உன் சிறிய தந்தை மகன் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு ஃபாத்திமா (ரழி) அவர்கள், "எங்களுக்குள் ஏதோ (மனஸ்தாபம்) இருந்தது, அவர் (அலீ (ரழி)) என் மீது கோபம் கொண்டு வெளியே சென்றுவிட்டார்கள். அவர் (அலீ (ரழி)) வீட்டில் (பகல் நேர) உறக்கம் கொள்ளவில்லை" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரழி) அவர்களைத் தேடிப் பார்க்கும்படி ஒருவரிடம் கூறினார்கள். அந்த நபர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர் (அலீ (ரழி)) பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு சென்றார்கள், அலீ (ரழி) அவர்கள் படுத்திருந்தார்கள். அவர்களுடைய மேலாடை அவர்களுடைய உடலின் ஒரு பக்கமாக நழுவி விழுந்திருந்தது, மேலும், அவர்கள் மீது புழுதி படிந்திருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரழி) அவர்களிடமிருந்து புழுதியைத் துடைக்க ஆரம்பித்தார்கள், "எழுந்திருங்கள்! ஓ அபூ துராப். எழுந்திருங்கள்! ஓ அபூ துராப் (இதன் நேரடிப் பொருள்: புழுதியின் தந்தையே)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ رَأَيْتُ سَبْعِينَ مِنْ أَصْحَابِ الصُّفَّةِ، مَا مِنْهُمْ رَجُلٌ عَلَيْهِ رِدَاءٌ، إِمَّا إِزَارٌ وَإِمَّا كِسَاءٌ، قَدْ رَبَطُوا فِي أَعْنَاقِهِمْ، فَمِنْهَا مَا يَبْلُغُ نِصْفَ السَّاقَيْنِ، وَمِنْهَا مَا يَبْلُغُ الْكَعْبَيْنِ، فَيَجْمَعُهُ بِيَدِهِ، كَرَاهِيَةَ أَنْ تُرَى عَوْرَتُهُ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அஸ்-ஸுஃப்பா தோழர்களில் எழுபது பேரைக் கண்டேன். அவர்களில் எவரிடமும் ரிதாஃ (உடலின் மேற்பகுதியை மூடும் ஆடை) இருக்கவில்லை. அவர்களிடம் ஒன்று இஸார்கள் (மட்டும்) இருந்தன, அல்லது தங்கள் கழுத்தைச் சுற்றிக் கட்டிய துணிகளோ இருந்தன. அந்தத் துணிகளில் சில, அவர்களுடைய கால்களின் நடுப்பகுதி வரையிலும், சில அவர்களுடைய கணுக்கால்கள் வரையிலும் நீண்டிருந்தன. மேலும், அவர்களுடைய மறைவுறுப்புகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவற்றை அவர்கள் தங்கள் கைகளால் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ
பயணத்திலிருந்து திரும்பும்போது தொழுகையை நிறைவேற்றுவது
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ، قَالَ حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ ـ قَالَ مِسْعَرٌ أُرَاهُ قَالَ ضُحًى ـ فَقَالَ ‏ ‏ صَلِّ رَكْعَتَيْنِ ‏ ‏‏.‏ وَكَانَ لِي عَلَيْهِ دَيْنٌ فَقَضَانِي وَزَادَنِي‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். – (அறிவிப்பாளர் மஸ்அர் அவர்கள், ஜாபிர் "முற்பகலில்" என்று கூறியதாகத் தான் கருதுவதாகக் கூறினார்). – நபி (ஸல்) அவர்கள், "இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!" என்று கூறினார்கள். அவர்கள் எனக்குத் தரவேண்டிய கடன் இருந்தது. அதை அவர்கள் எனக்குத் திருப்பித் தந்தார்கள்; மேலும், அதிகமாகவும் தந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا دَخَلَ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ
பாடம்: மசூதிக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழ வேண்டும்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ ‏ ‏‏.‏
அபூ கதாதா அஸ்-சலமீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், அவர் அமர்வதற்கு முன்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْحَدَثِ فِي الْمَسْجِدِ
மசூதியில் அல்-ஹதத் (காற்று வெளியேறுதல்)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الْمَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلاَّهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، تَقُولُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்தில் (முஸல்லாவில்) இருக்கும் வரையிலும், அவருக்கு உளூ முறியாமல் (ஹதஸ் ஏற்படாமல்) இருக்கும் வரையிலும் வானவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள், **'அல்லாஹும்மக்ஃபிர் லஹு, அல்லாஹும்மர்ஹம்ஹு'** (யா அல்லாஹ்! இவரை மன்னித்தருள்வாயாக! யா அல்லாஹ்! இவருக்குக் கருணை புரிவாயாக!) என்று கூறுகிறார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب بُنْيَانِ الْمَسْجِدِ
(நபி ﷺ அவர்களின்) பள்ளிவாசலின் கட்டுமானம்
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، قَالَ حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ الْمَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَبْنِيًّا بِاللَّبِنِ، وَسَقْفُهُ الْجَرِيدُ، وَعُمُدُهُ خَشَبُ النَّخْلِ، فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ شَيْئًا، وَزَادَ فِيهِ عُمَرُ وَبَنَاهُ عَلَى بُنْيَانِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّبِنِ وَالْجَرِيدِ، وَأَعَادَ عُمُدَهُ خَشَبًا، ثُمَّ غَيَّرَهُ عُثْمَانُ، فَزَادَ فِيهِ زِيَادَةً كَثِيرَةً، وَبَنَى جِدَارَهُ بِالْحِجَارَةِ الْمَنْقُوشَةِ وَالْقَصَّةِ، وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ، وَسَقَفَهُ بِالسَّاجِ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல் மண் கட்டிகளாலும், அதன் கூரை பேரீச்சை ஓலைகளாலும், அதன் தூண்கள் பேரீச்சை மரத்தாலும் அமைந்திருந்தன. அபூபக்ர் (ரழி) அவர்கள் அதில் எதையும் அதிகப்படுத்தவில்லை. உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த அதே கட்டுமான முறைப்படி மண் கட்டிகளாலும் பேரீச்சை ஓலைகளாலும் (கட்டி) அதில் விரிவாக்கம் செய்தார்கள்; அதன் தூண்களை மரத்தால் மீண்டும் அமைத்தார்கள். பின்னர் உஸ்மான் (ரழி) அவர்கள் அதை மாற்றி, அதில் அதிகமான விரிவாக்கத்தைச் செய்தார்கள். அதன் சுவர்களைச் செதுக்கப்பட்ட கற்களாலும் சுண்ணாம்பினாலும் கட்டினார்கள்; அதன் தூண்களைச் செதுக்கப்பட்ட கற்களாலும், அதன் கூரையைத் தேக்கு மரத்தாலும் அமைத்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب التَّعَاوُنِ فِي بِنَاءِ الْمَسْجِدِ
பள்ளிவாசல் கட்டுவதில் ஒத்துழைத்தல்
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُخْتَارٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، قَالَ لِي ابْنُ عَبَّاسٍ وَلاِبْنِهِ عَلِيٍّ انْطَلِقَا إِلَى أَبِي سَعِيدٍ فَاسْمَعَا مِنْ حَدِيثِهِ‏.‏ فَانْطَلَقْنَا فَإِذَا هُوَ فِي حَائِطٍ يُصْلِحُهُ، فَأَخَذَ رِدَاءَهُ فَاحْتَبَى، ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُنَا حَتَّى أَتَى ذِكْرُ بِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ كُنَّا نَحْمِلُ لَبِنَةً لَبِنَةً، وَعَمَّارٌ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ، فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَنْفُضُ التُّرَابَ عَنْهُ وَيَقُولُ ‏ ‏ وَيْحَ عَمَّارٍ تَقْتُلُهُ الْفِئَةُ الْبَاغِيَةُ، يَدْعُوهُمْ إِلَى الْجَنَّةِ، وَيَدْعُونَهُ إِلَى النَّارِ ‏ ‏‏.‏ قَالَ يَقُولُ عَمَّارٌ أَعُوذُ بِاللَّهِ مِنَ الْفِتَنِ‏.‏
இக்ரிமா அவர்கள் அறிவித்தார்கள்:

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் என்னிடமும் தம் மகன் அலியிடமும், "நீங்கள் இருவரும் அபூ சயீத் (ரழி) அவர்களிடம் சென்று அவர் அறிவிப்பவற்றைக் கேளுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம். அவர் ஒரு தோட்டத்தில் அதைச் சீரமைத்துக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம். அவர் தமது மேலாடையை எடுத்து, (உடலைச் சுற்றிப் போர்த்திக்கொண்டு) கால்களை மடித்து வைத்து அமர்ந்து, எங்களிடம் அறிவிக்கத் தொடங்கினார்கள். பள்ளிவாசல் கட்டப்படுவது பற்றிய செய்தி வந்தபோது அவர் கூறினார்கள்: "நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமந்து கொண்டிருந்தோம்; ஆனால் அம்மார் (ரழி) இரண்டு இரண்டு செங்கற்களாகச் சுமந்து கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டு, அவர் மீதிருந்த மண்ணைத் தட்டிவிட்டவாறே, 'அம்மார் (ரழி) அவர்கள் மீது அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவரை ஒரு கலகக்காரக் கூட்டம் கொல்லும். அவர் அவர்களைச் சொர்க்கத்திற்கு அழைக்கிறார்; அவர்களோ அவரை நரகத்திற்கு அழைக்கிறார்கள்' என்று கூறினார்கள்." அம்மார் (ரழி) அவர்கள், "**அஊது பில்லாஹி மினல் ஃபிதன்**" (குழப்பங்களிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறலானார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الاِسْتِعَانَةِ بِالنَّجَّارِ وَالصُّنَّاعِ فِي أَعْوَادِ الْمِنْبَرِ وَالْمَسْجِدِ
மிம்பர் (மேடை) மற்றும் மசூதியின் மரவேலைகளுக்காகத் தச்சரையும் கைவினைஞர்களையும் உதவிக்கு நாடுதல்.
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى امْرَأَةٍ أَنْ مُرِي غُلاَمَكِ النَّجَّارَ يَعْمَلْ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ‏.‏
சஹ்ல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணிடம் ஒருவரை அனுப்பி, "நான் அமர்வதற்காக உன்னுடைய தச்சரான அடிமைக்கு ஒரு மரத்தாலான சொற்பொழிவு மேடையை (மிம்பர்) செய்யும்படி கட்டளையிடு" என்று அவளிடம் கூறச் சொன்னார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا خَلاَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ امْرَأَةً، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، أَلاَ أَجْعَلُ لَكَ شَيْئًا تَقْعُدُ عَلَيْهِ، فَإِنَّ لِي غُلاَمًا نَجَّارًا قَالَ ‏ ‏ إِنْ شِئْتِ ‏ ‏‏.‏ فَعَمِلَتِ الْمِنْبَرَ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு பெண்மணி, "அல்லாஹ்வின் தூதரே (ஸல்) அவர்களே! என்னிடம் தச்சு வேலை செய்யும் ஓர் அடிமை இருக்கிறார். தாங்கள் அமர்வதற்காக நான் தங்களுக்கு ஏதாவது செய்து தரட்டுமா?" என்று கூறினார். அதற்கு அவர்கள் (ஸல்), "ஆம், நீர் விரும்பினால் (அவ்வாறே செய்யலாம்)" என்று பதிலளித்தார்கள். எனவே, அந்தப் பெண்மணி அந்த மிம்பரை (மேடையை) கட்டுவித்தார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَنْ بَنَى مَسْجِدًا
பாடம்: பள்ளிவாசலைக் கட்டியவர்
حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ عُبَيْدَ اللَّهِ الْخَوْلاَنِيَّ، أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صلى الله عليه وسلم إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ مَنْ بَنَى مَسْجِدًا ـ قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ ـ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ، بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ ‏ ‏‏.‏
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலைத் தாம் கட்டியபோது மக்கள் தம்மைப் பற்றி (விமர்சனமாகப்) பேசிய சமயத்தில், "நீங்கள் அதிகமாகப் பேசிவிட்டீர்கள்! நான் நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டுள்ளேன்: 'யார் ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ—(அறிவிப்பாளர்) புக்கைர் கூறுகிறார்: 'அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி' என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறியதாக நான் கருதுகிறேன்—அல்லாஹ் அவருக்காகச் சொர்க்கத்தில் அது போன்ற ஒன்றைக்கட்டுவான்.'"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب يَأْخُذُ بِنُصُولِ النَّبْلِ إِذَا مَرَّ فِي الْمَسْجِدِ
பாடம்: பள்ளிவாசலின் வழியாகச் செல்லும்போது அம்பு முனைகளைப் பிடித்துக் கொள்வது
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قُلْتُ لِعَمْرٍو أَسَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ مَرَّ رَجُلٌ فِي الْمَسْجِدِ وَمَعَهُ سِهَامٌ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أَمْسِكْ بِنِصَالِهَا ‏ ‏‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"ஒருவர் அம்புகளுடன் பள்ளிவாசல் வழியாகச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், 'அவற்றின் முனைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْمُرُورِ فِي الْمَسْجِدِ
பாடம்: பள்ளிவாசல் வழியாகச் செல்லுதல்
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَنْ مَرَّ فِي شَىْءٍ مِنْ مَسَاجِدِنَا أَوْ أَسْوَاقِنَا بِنَبْلٍ، فَلْيَأْخُذْ عَلَى نِصَالِهَا، لاَ يَعْقِرْ بِكَفِّهِ مُسْلِمًا ‏ ‏‏.‏
அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவரேனும் அம்புகளுடன் நமது பள்ளிவாசல்கள் வழியாகவோ அல்லது நமது கடைவீதிகள் வழியாகவோ சென்றால், அவர் அவற்றின் முனைகளைப் பிடித்துக்கொள்ளட்டும். (அதன் மூலம்) தம் கையால் எந்த முஸ்லிமையும் அவர் காயப்படுத்திவிட வேண்டாம்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الشِّعْرِ فِي الْمَسْجِدِ
பாடம்: மசூதியில் கவிதை பாடுவது
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ، يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ أَنْشُدُكَ اللَّهَ هَلْ سَمِعْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ يَا حَسَّانُ، أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ الْقُدُسِ ‏ ‏‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ‏.‏
ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அல்அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் அபூ ஹுரைரா (ரழி) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீது ஆணையாக (உங்களைக் கேட்கிறேன்)! 'யா ஹஸ்ஸான்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சார்பாகப் பதிலளியுங்கள். **அல்லாஹும்ம அய்யித்ஹு பிரூஹில் குதுஸ்** (இறைவா! ரூஹுல் குத்ஸ் மூலம் இவருக்கு உதவியருள்வாயாக)' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை தாங்கள் செவியுற்றீர்களா?" என்று சாட்சியம் கோரினேன். அதற்கு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், "ஆம்" என்றார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب أَصْحَابِ الْحِرَابِ فِي الْمَسْجِدِ
மசூதியில் ஈட்டிக்காரர்கள் (அவர்களின் ஈட்டிகளுடன்) இருப்பது (அனுமதிக்கப்பட்டதாகும்)
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا عَلَى باب حُجْرَتِي، وَالْحَبَشَةُ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتُرُنِي بِرِدَائِهِ، أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ‏.‏ زَادَ إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு நாள், அபிசீனியர்கள் பள்ளிவாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டின் வாசலில் இருப்பதை நான் கண்டேன். நான் அவர்களின் விளையாட்டைப் பார்க்கும் வகையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களது ரிதாஃவால் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள்.

(மற்றொரு அறிவிப்பில், "நான் நபி (ஸல்) அவர்களைக் கண்டேன்; அப்போது அபிசீனியர்கள் தங்கள் ஈட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள்" என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்.)

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب ذِكْرِ الْبَيْعِ وَالشِّرَاءِ عَلَى الْمِنْبَرِ فِي الْمَسْجِدِ
மஸ்ஜிதின் மிம்பரில் விற்பனை மற்றும் கொள்முதல் பற்றி குறிப்பிடுவது
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَتَتْهَا بَرِيرَةُ تَسْأَلُهَا فِي كِتَابَتِهَا فَقَالَتْ إِنْ شِئْتِ أَعْطَيْتُ أَهْلَكِ وَيَكُونُ الْوَلاَءُ لِي‏.‏ وَقَالَ أَهْلُهَا إِنْ شِئْتِ أَعْطَيْتِهَا مَا بَقِيَ ـ وَقَالَ سُفْيَانُ مَرَّةً إِنْ شِئْتِ أَعْتَقْتِهَا وَيَكُونُ الْوَلاَءُ لَنَا ـ فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَّرَتْهُ ذَلِكَ فَقَالَ ‏"‏ ابْتَاعِيهَا فَأَعْتِقِيهَا، فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ ‏"‏‏.‏ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ ـ وَقَالَ سُفْيَانُ مَرَّةً فَصَعِدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ ـ فَقَالَ ‏"‏ مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ مَرَّةٍ ‏"‏‏.‏ قَالَ عَلِيٌّ قَالَ يَحْيَى وَعَبْدُ الْوَهَّابِ عَنْ يَحْيَى عَنْ عَمْرَةَ‏.‏ وَقَالَ جَعْفَرُ بْنُ عَوْنٍ عَنْ يَحْيَى قَالَ سَمِعْتُ عَمْرَةَ قَالَتْ سَمِعْتُ عَائِشَةَ‏.‏ رَوَاهُ مَالِكٌ عَنْ يَحْيَى عَنْ عَمْرَةَ أَنَّ بَرِيرَةَ‏.‏ وَلَمْ يَذْكُرْ صَعِدَ الْمِنْبَرَ‏.‏
ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:

பரீரா அவர்கள் தனது விடுதலை சம்பந்தமாக என்னுடைய உதவியை நாடி வந்தார்கள். நான் அவரிடம், "நீர் விரும்பினால், உமது எஜமானர்களுக்கு உமது விலையை நான் செலுத்தி விடுவேன், ஆனால் உமது வலாஃ (உரிமை) எனக்குரியதாக இருக்கும்" என்று கூறினேன். அவளுடைய எஜமானர்கள், "நீர் விரும்பினால், (அவளுடைய விடுதலை விலையில்) மீதமுள்ளதை நீர் செலுத்தலாம், (துணை அறிவிப்பாளர் சுஃப்யான் ஒருமுறை கூறியதாக) அல்லது நீர் விரும்பினால் அவளை விடுதலை செய்யலாம், ஆனால் அவளுடைய (வாரிசுரிமை) அல்-வலாஃ எங்களுக்கே உரியதாகும்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தபோது, நான் அவர்களிடம் இதுபற்றிக் கூறினேன். அவர்கள், "அவளை வாங்கி விடுதலை செய்துவிடுங்கள். சந்தேகமின்றி, அல்-வலாஃ விடுதலை செய்தவருக்கே உரியது" என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் (சொற்பொழிவு மேடை) மீது நின்றார்கள் (அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் மீது ஏறினார்கள் என சுஃப்யான் ஒருமுறை கூறியதாக), மேலும் கூறினார்கள்: "அல்லாஹ்வின் வேதத்தில் (சட்டங்களில்) இல்லாத நிபந்தனைகளை விதிக்கிற சிலரின் நிலை என்ன? எவரேனும் அல்லாஹ்வின் வேதத்தில் (சட்டங்களில்) இல்லாத நிபந்தனைகளை விதித்தால், அவருடைய நிபந்தனைகள் செல்லாதவையாகும்; அவர் அவற்றை நூறு முறை விதித்தாலும் சரியே."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب التَّقَاضِي وَالْمُلاَزَمَةِ فِي الْمَسْجِدِ
பள்ளிவாசலில் கடன் கேட்பதும், கடனாளியைப் பற்றிக்கொள்வதும்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ كَعْبٍ، أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ فَنَادَى ‏"‏ يَا كَعْبُ ‏"‏‏.‏ قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا ‏"‏‏.‏ وَأَوْمَأَ إِلَيْهِ أَىِ الشَّطْرَ قَالَ لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ قُمْ فَاقْضِهِ ‏"‏‏.‏
கஅப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

பள்ளிவாசலில் நான் இப்னு அபீ ஹத்ரத் (ரழி) அவர்களிடம், அவர் எனக்குத் தர வேண்டிய கடனைத் திருப்பித் தருமாறு கேட்டேன். அப்போது எங்கள் குரல்கள் உயர்ந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே அதைச் செவியுற்றார்கள். உடனே அவர்கள் தங்கள் அறையின் திரையை விலக்கி வெளியே வந்து, "ஓ கஅப்!" என்று அழைத்தார்கள். நான், "லப்பைக் (இதோ வந்துவிட்டேன்), அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தேன். அவர்கள், "உமது கடனில் இவ்வளவு தொகையைத் தள்ளுபடி செய்வீராக" என்று கூறி, (பாதியைக் குறைக்குமாறு) சைகை செய்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்துவிட்டேன்" என்றேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இப்னு அபீ ஹத்ரத் அவர்களிடம்), "நீர் எழுந்து அவருக்குக் கடனைத் திருப்பிச் செலுத்துவீராக" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب كَنْسِ الْمَسْجِدِ وَالْتِقَاطِ الْخِرَقِ وَالْقَذَى وَالْعِيدَانِ
பாடம்: பள்ளிவாசலைப் பெருக்குவதும், அதிலிருந்து துணித் துண்டுகள், துரும்புகள் மற்றும் குச்சிகளைப் பொறுக்கி அகற்றுவதும்
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلاً، أَسْوَدَ ـ أَوِ امْرَأَةً سَوْدَاءَ ـ كَانَ يَقُمُّ الْمَسْجِدَ، فَمَاتَ، فَسَأَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْهُ فَقَالُوا مَاتَ‏.‏ قَالَ ‏ ‏ أَفَلاَ كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ دُلُّونِي عَلَى قَبْرِهِ ‏ ‏‏.‏ ـ أَوْ قَالَ قَبْرِهَا ـ فَأَتَى قَبْرَهُ فَصَلَّى عَلَيْهِ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு கறுப்பு நிற ஆணோ அல்லது ஒரு கறுப்பு நிறப் பெண்ணோ பள்ளிவாசலைப் பெருக்கி வந்தார். அவர் இறந்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி விசாரித்தார்கள். அவர் இறந்துவிட்டதாக அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் ஏன் எனக்கு அறிவிக்கவில்லை? அவருடைய கப்ரைக் காட்டுங்கள்" (அல்லது 'அவளுடைய கப்ரைக் காட்டுங்கள்') என்று கூறினார்கள். பிறகு அவரின் கப்ருக்குச் சென்று, அவருக்காகத் தொழுதார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب تَحْرِيمِ تِجَارَةِ الْخَمْرِ فِي الْمَسْجِدِ
பாடம்: பள்ளிவாசலில் மதுபான வியாபாரம் செய்வதற்கான தடை
حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا أُنْزِلَ الآيَاتُ مِنْ سُورَةِ الْبَقَرَةِ فِي الرِّبَا، خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الْمَسْجِدِ، فَقَرَأَهُنَّ عَلَى النَّاسِ، ثُمَّ حَرَّمَ تِجَارَةَ الْخَمْرِ‏.‏
`ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:`

`சூரத் "அல்-பகரா"-வின் ரிபா (வட்டி) பற்றிய வசனங்கள் வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று, அவற்றை மக்களுக்கு ஓதிக் காட்டினார்கள், பின்னர் மதுபான வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.`
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْخَدَمِ لِلْمَسْجِدِ
மசூதிக்கான பணியாளர்கள்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ وَاقِدٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ امْرَأَةً ـ أَوْ رَجُلاً ـ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ ـ وَلاَ أُرَاهُ إِلاَّ امْرَأَةً ـ فَذَكَرَ حَدِيثَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى عَلَى قَبْرِهِ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"ஒரு பெண்ணோ அல்லது ஓர் ஆணோ பள்ளிவாசலைச் சுத்தம் செய்து வந்தார்." (அறிவிப்பாளர் கூறுகிறார்: "அவர் ஒரு பெண் என்றே நான் கருதுகிறேன்.") பிறகு நபி (ஸல்) அவர்கள், அவரது கப்ரின் மீது தொழுத செய்தியை அவர் குறிப்பிட்டார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الأَسِيرِ أَوِ الْغَرِيمِ يُرْبَطُ فِي الْمَسْجِدِ
பள்ளிவாசலில் ஒரு கைதியை அல்லது கடனாளியைக் கட்டி வைப்பது
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنَا رَوْحٌ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِنَّ عِفْرِيتًا مِنَ الْجِنِّ تَفَلَّتَ عَلَىَّ الْبَارِحَةَ ـ أَوْ كَلِمَةً نَحْوَهَا ـ لِيَقْطَعَ عَلَىَّ الصَّلاَةَ، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، فَأَرَدْتُ أَنْ أَرْبِطَهُ إِلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، حَتَّى تُصْبِحُوا وَتَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ، فَذَكَرْتُ قَوْلَ أَخِي سُلَيْمَانَ رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لأَحَدٍ مِنْ بَعْدِي ‏ ‏‏.‏ قَالَ رَوْحٌ فَرَدَّهُ خَاسِئًا‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நேற்றிரவு ஜின்களில் உள்ள ஓர் இஃப்ரீத் (கட்டுக்கடங்காதவன்), என் தொழுகையைத் துண்டிப்பதற்காகத் திடீரென என்மீது பாய்ந்தான் (அல்லது அது போன்ற ஒரு வார்த்தையை நபியவர்கள் கூறினார்கள்). ஆனால் அல்லாஹ் அவனை வசப்படுத்தும் ஆற்றலை எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அவனைப் பார்க்கும் விதமாக, பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவனைக் கட்டிவைக்க விரும்பினேன். அப்போது என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்களின் கூற்றை நான் நினைவுகூர்ந்தேன்:

**‘ரப்பி ஹப் லீ முல்கன் லா யம்பகீ லிஅஹதின் மின் பஅதீ’**

(பொருள்: என் இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் கிடைக்காத ஒரு ராஜ்ஜியத்தை எனக்கு வழங்குவாயாக).’

(அறிவிப்பாளர்) ரவ்ஹ் கூறினார்: ‘எனவே, அவன் (அந்த ஜின்) இழிவுபடுத்தப்பட்டு விரட்டப்பட்டான்.’”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
بَابُ الاِغْتِسَالِ إِذَا أَسْلَمَ، وَرَبْطِ الأَسِيرِ أَيْضًا فِي الْمَسْجِدِ
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்போது குளிப்பது மற்றும் கைதியை பள்ளிவாசலில் கட்டி வைப்பது
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ ‏ أَطْلِقُوا ثُمَامَةَ ‏ ‏‏.‏ فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنَ الْمَسْجِدِ، فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களை நஜ்த் பகுதிக்கு அனுப்பினார்கள். அவர்கள் பனீ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த துமாமா பின் உதால் என்ற ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அவரைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, "துமாமாவை விடுவியுங்கள்" என்று கூறினார்கள். அவர் பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த ஒரு பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று, குளித்துவிட்டு, பிறகு பள்ளிவாசலுக்குள் நுழைந்து, "அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ், வ அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) என்று கூறினார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْخَيْمَةِ فِي الْمَسْجِدِ لِلْمَرْضَى وَغَيْرِهِمْ
மஸ்ஜிதில் நோயாளிகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் கூடாரம் அமைத்தல்
حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أُصِيبَ سَعْدٌ يَوْمَ الْخَنْدَقِ فِي الأَكْحَلِ، فَضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْمَةً فِي الْمَسْجِدِ لِيَعُودَهُ مِنْ قَرِيبٍ، فَلَمْ يَرُعْهُمْ ـ وَفِي الْمَسْجِدِ خَيْمَةٌ مِنْ بَنِي غِفَارٍ ـ إِلاَّ الدَّمُ يَسِيلُ إِلَيْهِمْ فَقَالُوا يَا أَهْلَ الْخَيْمَةِ، مَا هَذَا الَّذِي يَأْتِينَا مِنْ قِبَلِكُمْ فَإِذَا سَعْدٌ يَغْذُو جُرْحُهُ دَمًا، فَمَاتَ فِيهَا‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அகழ் (கந்தக்) போரின்போது ஸஃது (ரலி) அவர்களின் கையில் உள்ள நடு நரம்பில் காயம் ஏற்பட்டது. அவரை அண்மையிலிருந்து நலம் விசாரிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ஒரு கூடாரத்தை அமைத்தார்கள். பள்ளிவாசலில் பனூ ஃகிஃபார் குலத்தாரின் கூடாரமும் ஒன்று இருந்தது. அவர்களை நோக்கி இரத்தம் வழிந்தோடியதைக் கண்டே அவர்கள் திடுக்கிட்டார்கள். அவர்கள், “கூடாரவாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களுக்கு வருகின்ற இது என்ன?” என்று கேட்டார்கள். அங்கு ஸஃது (ரலி) அவர்களின் காயத்திலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அக்கூடாரத்திலேயே அவர் இறந்துவிட்டார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِدْخَالِ الْبَعِيرِ فِي الْمَسْجِدِ لِلْعِلَّةِ
தேவைப்பட்டால் ஒட்டகத்தை பள்ளிவாசலுக்குள் கொண்டு செல்ல
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنِّي أَشْتَكِي‏.‏ قَالَ ‏ ‏ طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ ‏ ‏‏.‏ فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ، يَقْرَأُ بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ‏.‏
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் உடல்நலமின்றி இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அவர்கள் எனக்கு மக்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்தவாறு தவாஃப் செய்யுமாறு கூறினார்கள். அவ்வாறே நான் செய்தேன், மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற்கு அருகில் தொழுதுகொண்டிருந்தார்கள் மற்றும் "வத்-தூர் வ கிதாபின் மஸ்தூர்." என்று தொடங்கும் சூராவை ஓதிக்கொண்டிருந்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ رَجُلَيْنِ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ، وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ يُضِيآنِ بَيْنَ أَيْدِيهِمَا، فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் ஓர் இருண்ட இரவில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் இரண்டு விளக்குகளைப் போன்ற (ஒளி) அவர்களுக்கு முன்னால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் பிரிந்தபோது, அவர்கள் ஒவ்வொருவருடனும் (அதில்) ஒன்று, அவர் தம் இல்லத்தை அடையும் வரை சென்றது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْخَوْخَةِ وَالْمَمَرِّ فِي الْمَسْجِدِ
பாடம்: பள்ளிவாசலில் உள்ள திட்டிவாசலும், பாதையும்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحٌ، قَالَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ خَطَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ إِنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ، فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ ‏"‏‏.‏ فَبَكَى أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فَقُلْتُ فِي نَفْسِي مَا يُبْكِي هَذَا الشَّيْخَ إِنْ يَكُنِ اللَّهُ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هُوَ الْعَبْدَ، وَكَانَ أَبُو بَكْرٍ أَعْلَمَنَا‏.‏ قَالَ ‏"‏ يَا أَبَا بَكْرٍ لاَ تَبْكِ، إِنَّ أَمَنَّ النَّاسِ عَلَىَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلاً مِنْ أُمَّتِي لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ، وَلَكِنْ أُخُوَّةُ الإِسْلاَمِ وَمَوَدَّتُهُ، لاَ يَبْقَيَنَّ فِي الْمَسْجِدِ باب إِلاَّ سُدَّ إِلاَّ باب أَبِي بَكْرٍ ‏"‏‏.‏
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, "நிச்சயமாக அல்லாஹ் ஓர் அடியாருக்கு, இவ்வுலகத்திற்கும் தன்னிடமுள்ளவற்றிற்கும் இடையே (ஏதேனும் ஒன்றை) தேர்வு செய்துகொள்ள வாய்ப்பளித்தான். அந்த அடியாரோ அல்லாஹ்விடம் உள்ளவற்றையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்" என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) அபூபக்கர் (ரலி) அவர்கள் அழுதார்கள்.

"அல்லாஹ் ஓர் அடியாருக்கு, இவ்வுலகத்திற்கும் தன்னிடமுள்ளவற்றிற்கும் இடையே தேர்வு செய்ய வாய்ப்பளித்து, அவர் அல்லாஹ்விடம் உள்ளதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கு, இந்த முதியவர் ஏன் அழுகிறார்?" என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அந்த அடியாராக இருந்தார்கள். எங்கள் அனைவரையும் விட அபூபக்கர் (ரலி) அவர்களே அதிகம் அறிந்திருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அபூபக்கரே! அழ வேண்டாம். மக்களில் தம் தோழமையாலும் தம் பொருளாலும் எனக்கு மிக அதிகமாக வாரி வழங்கியவர் அபூபக்கர் ஆவார். என் உம்மத்திலிருந்து (சமுதாயத்திலிருந்து) ஒருவரை நான் 'கலீலாக' (உற்ற நண்பராக) ஆக்கிக்கொள்வதென்றால், அபூபக்கரைத்தான் ஆக்கிக்கொண்டிருப்பேன். எனினும் இஸ்லாமிய சகோதரத்துவமும் அதன் நேசமுமே (நமக்கிடையே) உள்ளது. பள்ளிவாசலில் அபூபக்கருடைய வாசலைத் தவிர, (வேறு எந்த வாசலும் திறந்திருக்க வேண்டாம்); அனைத்தும் அடைக்கப்பட வேண்டும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْجُعْفِيُّ، قَالَ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ يَعْلَى بْنَ حَكِيمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ عَاصِبٌ رَأْسَهُ بِخِرْقَةٍ، فَقَعَدَ عَلَى الْمِنْبَرِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ ‏ ‏ إِنَّهُ لَيْسَ مِنَ النَّاسِ أَحَدٌ أَمَنَّ عَلَىَّ فِي نَفْسِهِ وَمَالِهِ مِنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي قُحَافَةَ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنَ النَّاسِ خَلِيلاً لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلاً، وَلَكِنْ خُلَّةُ الإِسْلاَمِ أَفْضَلُ، سُدُّوا عَنِّي كُلَّ خَوْخَةٍ فِي هَذَا الْمَسْجِدِ غَيْرَ خَوْخَةِ أَبِي بَكْرٍ ‏ ‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் மரணத்தைத் தழுவிய நோயின்போது, தலையில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு வெளியே வந்து, மிம்பரில் (சொற்பொழிவு மேடையில்) அமர்ந்தார்கள். அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பிறகு அவர்கள் கூறினார்கள்: 'மக்களில் தம் உயிராலும் தம் உடைமைகளாலும் எனக்குப் பேருதவி புரிந்தவர் அபூபக்ர் பின் அபீ குஹாஃபா (ரழி) அவர்களைத் தவிர வேறு யாருமில்லை. மக்களில் ஒருவரை நான் உற்ற நண்பராக (கலீல்) ஆக்கிக்கொள்வதாயிருந்தால், நிச்சயமாக அபூபக்ர் (ரழி) அவர்களையே ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாமியத் தோழமையே சிறந்தது. இந்த மஸ்ஜிதில் உள்ள அனைத்துச் சிறிய வாசல்களையும் எனக்காக அடைத்துவிடுங்கள்; அபூபக்ர் (ரழி) அவர்களின் வாசலைத் தவிர'."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الأَبْوَابِ وَالْغَلَقِ لِلْكَعْبَةِ وَالْمَسَاجِدِ
கஃபா மற்றும் மசூதிகளின் கதவுகளும் பூட்டுகளும்
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، وَقُتَيْبَةُ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدِمَ مَكَّةَ، فَدَعَا عُثْمَانَ بْنَ طَلْحَةَ، فَفَتَحَ الْبَابَ، فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَبِلاَلٌ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، ثُمَّ أُغْلِقَ الْبَابُ، فَلَبِثَ فِيهِ سَاعَةً ثُمَّ خَرَجُوا‏.‏ قَالَ ابْنُ عُمَرَ فَبَدَرْتُ فَسَأَلْتُ بِلاَلاً فَقَالَ صَلَّى فِيهِ‏.‏ فَقُلْتُ فِي أَىٍّ قَالَ بَيْنَ الأُسْطُوَانَتَيْنِ‏.‏ قَالَ ابْنُ عُمَرَ فَذَهَبَ عَلَىَّ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வருகை தந்தார்கள். அவர்கள் உஸ்மான் பின் தல்ஹாவை அழைத்தார்கள். அவர் (கஅபாவின்) கதவைத் திறந்தார். பிறகு நபி (ஸல்) அவர்களும், பிலால், உஸாமா பின் ஸைத் மற்றும் உஸ்மான் பின் தல்ஹா ஆகியோரும் உள்ளே நுழைந்தனர். பிறகு கதவு மூடப்பட்டது. அவர்கள் உள்ளே சிறிது நேரம் தங்கியிருந்துவிட்டுப் பிறகு வெளியே வந்தனர்."

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் விரைந்து சென்று பிலாலிடம் (இது பற்றிக்) கேட்டேன். அவர், 'நபி (ஸல்) அவர்கள் உள்ளே தொழுதார்கள்' என்று கூறினார். 'எங்கே?' என்று நான் கேட்டேன். அவர், 'இரண்டு தூண்களுக்கு இடையில்' என்று பதிலளித்தார்."

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "ஆனால், அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள் என்று அவரிடம் கேட்க எனக்கு மறந்துவிட்டது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب دُخُولِ الْمُشْرِكِ الْمَسْجِدَ
இணைவைப்பாளர் மசூதியில் நுழைதல்
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْلاً قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்து பகுதிக்கு சில குதிரை வீரர்களை அனுப்பினார்கள், மேலும் அவர்கள் பனீ ஹனீஃபா கூட்டத்தைச் சேர்ந்த துமாமா பின் உதால் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதரை அழைத்து வந்தார்கள். அவர்கள் அவரை பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب رَفْعِ الصَّوْتِ فِي الْمَسَاجِدِ
மசூதியில் குரல் உயர்த்துதல்
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا الْجُعَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ كُنْتُ قَائِمًا فِي الْمَسْجِدِ فَحَصَبَنِي رَجُلٌ، فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ اذْهَبْ فَأْتِنِي بِهَذَيْنِ‏.‏ فَجِئْتُهُ بِهِمَا‏.‏ قَالَ مَنْ أَنْتُمَا ـ أَوْ مِنْ أَيْنَ أَنْتُمَا قَالاَ مِنْ أَهْلِ الطَّائِفِ‏.‏ قَالَ لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ الْبَلَدِ لأَوْجَعْتُكُمَا، تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
அல்-ஸாஇப் பின் யஸீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் மஸ்ஜிதில் (பள்ளிவாசலில்) நின்று கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் என் மீது ஒரு சிறு கல்லை எறிந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது, அவர் உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் என்பதைக் கண்டேன். அவர்கள் என்னிடம், "அந்த இரண்டு மனிதர்களையும் என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். நான் அவர்களை அழைத்து வந்தபோது, அவர்கள் அந்த இருவரிடமும், "நீங்கள் யார்? (அல்லது) நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அவர்கள், "நாங்கள் தாயிஃபிலிருந்து வந்திருக்கிறோம்" என்று பதிலளித்தார்கள். உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள், "நீங்கள் இந்த நகரத்தைச் (மதீனாவைச்) சேர்ந்தவர்களாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மஸ்ஜிதில் (பள்ளிவாசலில்) உங்கள் குரல்களை உயர்த்தியதற்காக நான் உங்களைத் தண்டித்திருப்பேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ، أَخْبَرَهُ أَنَّهُ، تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا لَهُ عَلَيْهِ، فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ وَنَادَى ‏"‏ يَا كَعْبُ بْنَ مَالِكٍ، يَا كَعْبُ ‏"‏‏.‏ قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ مِنْ دَيْنِكَ‏.‏ قَالَ كَعْبٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ قُمْ فَاقْضِهِ ‏"‏‏.‏
கஃப் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில், நான் இப்னு அபீ ஹத்ரத் (ரழி) அவர்களிடம், அவர் எனக்குத் தர வேண்டிய ஒரு கடனைத் திருப்பிச் செலுத்தும்படி பள்ளிவாசலில் கேட்டேன். எங்கள் குரல்கள் உயர்ந்தன; எதுவரையென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் இருந்தபோதே அதைச் செவியுற்றார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறையின் திரையை விலக்கிக் கொண்டு எங்களை நோக்கி வெளியே வந்தார்கள். "ஓ கஃப் பின் மாலிக்! ஓ கஃப்!" என்று அழைத்தார்கள். நான், "லப்பைக், அல்லாஹ்வின் தூதரே (ஸல்)" என்று பதிலளித்தேன். கடனைப் பாதியாகக் குறைக்கும்படி அவர்கள் தமது கையால் சைகை செய்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே (ஸல்), நான் செய்துவிட்டேன்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இப்னு அபீ ஹத்ரத் (ரழி) அவர்களிடம்), "எழுந்து அதைச் செலுத்துங்கள்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْحِلَقِ وَالْجُلُوسِ فِي الْمَسْجِدِ
பாடம்: மசூதியில் வட்டமாக அமர்வதும், உட்காருவதும்
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ عَلَى الْمِنْبَرِ مَا تَرَى فِي صَلاَةِ اللَّيْلِ قَالَ ‏ ‏ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ الصُّبْحَ صَلَّى وَاحِدَةً، فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى ‏ ‏‏.‏ وَإِنَّهُ كَانَ يَقُولُ اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ وِتْرًا، فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِهِ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது இருந்தபோது, ஒரு மனிதர் அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(அது) ஈரிரண்டு ரக்அத்களாகும். விடியலை (ஃபஜ்ரு நேரம் வருவதை) அஞ்சினால், ஒரு ரக்அத் தொழட்டும்; அது அவர் தொழுததை அவருக்கு வித்ராக ஆக்கிவிடும்’ என்று கூறினார்கள்." மேலும் இப்னு உமர் (ரழி) அவர்கள், "உங்களது தொழுகையின் இறுதியை வித்ராக ஆக்கிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கட்டளையிட்டார்கள்" என்று கூறுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ يَخْطُبُ فَقَالَ كَيْفَ صَلاَةُ اللَّيْلِ فَقَالَ ‏ ‏ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ، تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْتَ ‏ ‏‏.‏ قَالَ الْوَلِيدُ بْنُ كَثِيرٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ ابْنَ عُمَرَ حَدَّثَهُمْ أَنَّ رَجُلاً نَادَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ فِي الْمَسْجِدِ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, "இரவுத் தொழுகை எவ்வாறு?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஈரிரண்டு (ரக்அத்துகளாகும்). சுப்ஹு (நேரம் வருவதை) நீங்கள் அஞ்சினால், ஒரு ரக்அத் தொழுது (வித்ரு ஆக்கிக்) கொள்ளுங்கள். அது நீங்கள் தொழுதவற்றை உங்களுக்கு வித்ராக ஆக்கிவிடும்" என்று கூறினார்கள்.

உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரழி) அவர்கள் எங்களிடம் அறிவித்தார்கள்; நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இருந்தபோது ஒரு மனிதர் அவர்களை அழைத்(துக் கேட்)டார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ فَأَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ، فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فَجَلَسَ، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ أَلاَ أُخْبِرُكُمْ عَنِ الثَّلاَثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ، فَآوَاهُ اللَّهُ، وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا، فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ، فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ ‏ ‏‏.‏
அபூ வாக்கித் அல்-லைசி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (மக்களுடன்) இருந்தபோது மூன்று நபர்கள் (அங்கு) வந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர்; ஒருவர் சென்றுவிட்டார். (வந்த) அவ்விருவரில் ஒருவர் (சபையில்) இடைவெளியைக் கண்டு அதில் அமர்ந்தார். மற்றொருவர் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேச்சை) முடித்ததும், 'இம்மூவர் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்விடம் புகலிடம் தேடினார்; அல்லாஹ் அவருக்குப் புகலிடம் அளித்தான். மற்றொருவர் வெட்கப்பட்டார்; ஆகவே அல்லாஹ்வும் (அவரைத் தண்டிக்க) வெட்கப்பட்டான். இன்னொருவர் புறக்கணித்துச் சென்றார்; ஆகவே அல்லாஹ்வும் அவரைப் புறக்கணித்தான்' என்று கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الاِسْتِلْقَاءِ فِي الْمَسْجِدِ وَمَدِّ الرِّجْلِ
மசூதியில் மல்லாந்து படுத்துக் கொள்வதும், காலை நீட்டுவதும்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُسْتَلْقِيًا فِي الْمَسْجِدِ، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى‏.‏ وَعَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ كَانَ عُمَرُ وَعُثْمَانُ يَفْعَلاَنِ ذَلِكَ‏.‏
அப்பாத் பின் தமீம் அவர்கள் அறிவித்தார்கள்:

அவர்களுடைய மாமா (ரழி) அவர்கள் கூறினார்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ஒரு காலை மற்றொரு காலின் மீது போட்டவாறு மல்லாந்து படுத்திருந்ததை கண்டேன்.”

ஸயீத் பின் அல்-முஸைய்யப் அவர்கள், உமர் (ரழி) அவர்களும் உஸ்மான் (ரழி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள் என்று அறிவித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْمَسْجِدِ يَكُونُ فِي الطَّرِيقِ مِنْ غَيْرِ ضَرَرٍ بِالنَّاسِ
பாடம்: மக்களுக்குத் தீங்கிழைக்காத வகையில் சாலையில் மசூதி அமைவது
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً، ثُمَّ بَدَا لأَبِي بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، فَكَانَ يُصَلِّي فِيهِ وَيَقْرَأُ الْقُرْآنَ، فَيَقِفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ، وَأَبْنَاؤُهُمْ يَعْجَبُونَ مِنْهُ وَيَنْظُرُونَ إِلَيْهِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً لاَ يَمْلِكُ عَيْنَيْهِ إِذَا قَرَأَ الْقُرْآنَ، فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ‏.‏
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து என் பெற்றோர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களாகவே அன்றி நான் பார்த்ததில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் எனப் பகலின் இரு வேளைகளிலும் எங்களிடம் வராமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. பின்னர் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு (ஒரு யோசனை) தோன்றியது; ஆகவே, தமது வீட்டின் முற்றத்தில் ஒரு பள்ளிவாசலை அமைத்துக்கொண்டார்கள். அதில் அவர் தொழவும் குர்ஆன் ஓதவும்லானார். இணைவைப்போரின் பெண்களும் அவர்களின் குழந்தைகளும் அங்கு நின்று வியப்புடன் அவரைப் பார்ப்பார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள் குர்ஆனை ஓதும்போது தம் கண்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் அழக்கூடியவராக இருந்தார்கள். இது இணைவைப்பாளர்களான குறைஷிக் குலத் தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ فِي مَسْجِدِ السُّوقِ
பாடம்: சந்தைப் பள்ளிவாசலில் தொழுவது
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ صَلاَةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَصَلاَتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ، لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ، لَمْ يَخْطُ خُطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ خَطِيئَةً، حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ، وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ، وَتُصَلِّي ـ يَعْنِي عَلَيْهِ ـ الْمَلاَئِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கூட்டுத் தொழுகையானது, ஒருவர் தமது வீட்டிலோ அல்லது கடைவீதியிலோ (தனியாகத்) தொழுவதை விட இருபத்தைந்து தகுதிகள் (பதவிகள்) மேலானதாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் வுழு செய்து, அதை அழகிய முறையில் செய்துவிட்டு, தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் வரை, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் அவருக்கு ஒரு பதவியை உயர்த்தாமல் இருப்பதில்லை; ஒரு பாவத்தை அவரை விட்டும் நீக்காமல் இருப்பதில்லை. பள்ளிவாசலுக்குள் அவர் நுழைந்துவிட்டால், தொழுகை அவரைத் தடுத்து வைத்திருக்கும் காலமெல்லாம் அவர் தொழுகையிலேயே இருப்பவராகக் கருதப்படுவார். அவர் தொழுத இடத்தில் அமர்ந்திருக்கும் காலமெல்லாம், அவருக்கு வுழு முறியாத வரை வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள்: **'அல்லாஹும்ம இக்ஃபிர் லஹு, அல்லாஹும்மர்ஹம்ஹு'** (இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! இவர் மீது கருணை காட்டுவாயாக!) என்று கூறுகின்றனர்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب تَشْبِيكِ الأَصَابِعِ فِي الْمَسْجِدِ وَغَيْرِهِ
பாடம்: மசூதியிலும் மற்றும் பிற இடங்களிலும் விரல்களைக் கோர்த்துக் கொள்வது
حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ، عَنْ بِشْرٍ، حَدَّثَنَا عَاصِمٌ، حَدَّثَنَا وَاقِدٌ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ، أَوِ ابْنِ عَمْرٍو شَبَّكَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَصَابِعَهُ‏.‏
இப்னு உமர் (ரழி) அல்லது இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களைக் கோத்துக்கொண்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَقَالَ عَاصِمُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، سَمِعْتُ هَذَا الْحَدِيثَ، مِنْ أَبِي فَلَمْ أَحْفَظْهُ، فَقَوَّمَهُ لِي وَاقِدٌ عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبِي وَهُوَ، يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، كَيْفَ بِكَ إِذَا بَقِيتَ فِي حُثَالَةٍ مِنَ النَّاسِ بِهَذَا ‏ ‏‏.‏
`அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:`

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓ அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களே! (மிக மோசமான) மக்களின் கசடுகளுக்கிடையே, இவ்வாறு நீர் எஞ்சியிருக்கும்போது உமது நிலை எவ்வாறு இருக்கும்?"

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِنَّ الْمُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ، يَشُدُّ بَعْضُهُ بَعْضًا ‏ ‏‏.‏ وَشَبَّكَ أَصَابِعَهُ‏.‏
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறைநம்பிக்கையாளருக்கு ஒரு கட்டிடத்தைப் போன்றவர் ஆவார்; அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை வலுவூட்டுகின்றது." அவ்வாறு கூறும்போது நபி (ஸல்) அவர்கள் தம் விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காட்டினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا ابْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِحْدَى صَلاَتَىِ الْعَشِيِّ ـ قَالَ ابْنُ سِيرِينَ سَمَّاهَا أَبُو هُرَيْرَةَ وَلَكِنْ نَسِيتُ أَنَا ـ قَالَ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، فَقَامَ إِلَى خَشَبَةٍ مَعْرُوضَةٍ فِي الْمَسْجِدِ فَاتَّكَأَ عَلَيْهَا، كَأَنَّهُ غَضْبَانُ، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى، وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ، وَوَضَعَ خَدَّهُ الأَيْمَنَ عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى، وَخَرَجَتِ السَّرَعَانُ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ فَقَالُوا قَصُرَتِ الصَّلاَةُ‏.‏ وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَفِي الْقَوْمِ رَجُلٌ فِي يَدَيْهِ طُولٌ يُقَالُ لَهُ ذُو الْيَدَيْنِ قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَنَسِيتَ أَمْ قَصُرَتِ الصَّلاَةُ قَالَ ‏"‏ لَمْ أَنْسَ، وَلَمْ تُقْصَرْ ‏"‏‏.‏ فَقَالَ ‏"‏ أَكَمَا يَقُولُ ذُو الْيَدَيْنِ ‏"‏‏.‏ فَقَالُوا نَعَمْ‏.‏ فَتَقَدَّمَ فَصَلَّى مَا تَرَكَ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ‏.‏ فَرُبَّمَا سَأَلُوهُ ثُمَّ سَلَّمَ فَيَقُولُ نُبِّئْتُ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ قَالَ ثُمَّ سَلَّمَ‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றைத் தொழுவித்தார்கள். (அறிவிப்பாளர் இப்னு சீரீன் கூறுகிறார்: 'அபூஹுரைரா (ரழி) அவர்கள் அந்தத் தொழுகையின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; ஆனால் நான் அதை மறந்துவிட்டேன்.') நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்த பின் ஸலாம் கொடுத்தார்கள். பிறகு பள்ளிவாசலில் குறுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு மரக்கட்டையை நோக்கி எழுந்து சென்று, கோபமானவர் போன்று அதன் மீது சாய்ந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள்; விரல்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டார்கள்; வலது கன்னத்தை இடது உள்ளங்கையின் பின்புறம் வைத்தார்கள். (தொழுகை முடிந்துவிட்டதென எண்ணி) அவசரக்காரர்கள் பள்ளிவாசலின் வாயில்கள் வழியாக வெளியேறிச் சென்றனர். அவர்கள், 'தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது' என்று பேசிக்கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரும் இருந்தனர். ஆயினும், நபி (ஸல்) அவர்களிடம் (அது பற்றிக்) பேச அவர்கள் அஞ்சினர். அந்தக் கூட்டத்தில் நீண்ட கைகளையுடைய ஒருவர் இருந்தார்; அவர் 'துல்-யதைன்' என்று அழைக்கப்பட்டார். அவர், 'அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மறந்துவிட்டீர்களா? அல்லது தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நான் மறக்கவுமில்லை; தொழுகை குறைக்கப்படவுமில்லை' என்று பதிலளித்தார்கள். பிறகு (மக்களிடம்), 'துல்-யதைன் கூறுவது உண்மைதானா?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். உடனே (தொழுமிடத்திற்கு) முன்னே சென்று, விடுபட்டதைத் தொழுதார்கள். பிறகு ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் ('அல்லாஹு அக்பர்') கூறி, (வழமையாகச்) செய்யும் ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்ட நேரமோ ஸஜ்தா செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி தக்பீர் ('அல்லாஹு அக்பர்') கூறினார்கள். பிறகு மீண்டும் தக்பீர் ('அல்லாஹு அக்பர்') கூறி, (வழமையாகச்) செய்யும் ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்ட நேரமோ ஸஜ்தா செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி தக்பீர் ('அல்லாஹு அக்பர்') கூறினார்கள்."

(அறிவிப்பாளர் கூறுகிறார்: மக்கள் இப்னு சீரீனிடம்), "பிறகு ஸலாம் கொடுத்தார்களா?" என்று கேட்டிருக்கலாம். அதற்கு அவர், "இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள், 'பிறகு நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தார்கள்' என்று கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது" என்று பதிலளித்தார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
بَابُ الْمَسَاجِدِ الَّتِي عَلَى طُرُقِ الْمَدِينَةِ
பாடம்: மதீனாவின் பாதைகளில் உள்ள பள்ளிவாசல்கள்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ رَأَيْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ يَتَحَرَّى أَمَاكِنَ مِنَ الطَّرِيقِ فَيُصَلِّي فِيهَا، وَيُحَدِّثُ أَنَّ أَبَاهُ كَانَ يُصَلِّي فِيهَا، وَأَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ‏.‏ وَحَدَّثَنِي نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ‏.‏ وَسَأَلْتُ سَالِمًا، فَلاَ أَعْلَمُهُ إِلاَّ وَافَقَ نَافِعًا فِي الأَمْكِنَةِ كُلِّهَا إِلاَّ أَنَّهُمَا اخْتَلَفَا فِي مَسْجِدٍ بِشَرَفِ الرَّوْحَاءِ‏.‏
மூஸா பின் உக்பா அவர்கள் கூறினார்கள்:

“ஸாலிம் பின் அப்துல்லாஹ் அவர்கள் (பயண) வழியில் சில இடங்களைத் தேடித் தேர்ந்தெடுத்துத் தொழுவதை நான் கண்டேன். மேலும், ‘தம் தந்தை (அப்துல்லாஹ் பின் உமர்) அவ்விடங்களில் தொழுவது வழக்கம்’ என்றும், ‘நபி (ஸல்) அவர்கள் அந்த இடங்களில் தொழுவதை அவர் (தம் தந்தை) பார்த்தார்கள்’ என்றும் ஸாலிம் அறிவித்தார்.

நாஃபிஉ அவர்கள் இப்னு உமர் (ரழி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவிக்கும்போது, ‘இப்னு உமர் (ரழி) அவர்கள் அந்த இடங்களில் தொழுவது வழக்கம்’ என்றே கூறினார்கள்.

நான் ஸாலிம் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். ‘ஷரஃபுர் ரவ்ஹா’ எனும் இடத்தில் உள்ள பள்ளிவாசலைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் ஸாலிம் அவர்கள் நாஃபிஉ அவர்களுடன் ஒத்திருந்ததையே நான் அறிவேன்; (அந்த ஒரு இடத்தில் மட்டும்) அவர்கள் இருவரும் கருத்து வேறுபடுகின்றனர்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ بِذِي الْحُلَيْفَةِ حِينَ يَعْتَمِرُ، وَفِي حَجَّتِهِ حِينَ حَجَّ، تَحْتَ سَمُرَةٍ فِي مَوْضِعِ الْمَسْجِدِ الَّذِي بِذِي الْحُلَيْفَةِ، وَكَانَ إِذَا رَجَعَ مِنْ غَزْوٍ كَانَ فِي تِلْكَ الطَّرِيقِ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ هَبَطَ مِنْ بَطْنِ وَادٍ، فَإِذَا ظَهَرَ مِنْ بَطْنِ وَادٍ أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي عَلَى شَفِيرِ الْوَادِي الشَّرْقِيَّةِ، فَعَرَّسَ ثَمَّ حَتَّى يُصْبِحَ، لَيْسَ عِنْدَ الْمَسْجِدِ الَّذِي بِحِجَارَةٍ، وَلاَ عَلَى الأَكَمَةِ الَّتِي عَلَيْهَا الْمَسْجِدُ، كَانَ ثَمَّ خَلِيجٌ يُصَلِّي عَبْدُ اللَّهِ عِنْدَهُ، فِي بَطْنِهِ كُثُبٌ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَمَّ يُصَلِّي، فَدَحَا السَّيْلُ فِيهِ بِالْبَطْحَاءِ حَتَّى دَفَنَ ذَلِكَ الْمَكَانَ الَّذِي كَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي فِيهِ‏.‏
அப்துல்லாஹ் (பின் உமர்) (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘உம்ரா’ செய்யும்போதும், ஹஜ்ஜுக்காகச் செல்லும்போதும் ‘துல்ஹுலைஃபா’வில் உள்ள பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தில் ஒரு ‘ஸமுரா’ மரத்தடியில் தங்குவார்கள். அப்பாதை வழியாக ஒரு போரிலிருந்தோ அல்லது ஹஜ்ஜிலிருந்தோ அல்லது உம்ராவிலிருந்தோ திரும்பும்போது, (துல்ஹுலைஃபா) ஓடையின் அடிப்பகுதியில் இறங்கி, அங்கிருந்து மேலேறி, கிழக்குத் திசையிலுள்ள ஓடையின் கரைக்கருகே கூழாங்கற்கள் நிறைந்த (பத்ஹா) விசாலமான இடத்தில் (தம் ஒட்டகத்தை) படுக்க வைத்து, விடியும் வரை அங்கேயே தங்குவார்கள்.

அவ்விடம், கற்கள் நிறைந்த பள்ளிவாசல் இருக்குமிடத்திலோ அல்லது பள்ளிவாசல் அமைந்திருக்கும் மேட்டின் மீதோ இல்லை. மாறாக அங்கு ஒரு கால்வாய் இருந்தது; அதன் அருகே அப்துல்லாஹ் (பின் உமர்) தொழுவார். அதன் உள்ளே மணல் குவியல்கள் இருந்தன. அங்குதான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர் வெள்ளம் கூழாங்கற்களை அடித்துக்கொண்டு வந்து, அப்துல்லாஹ் (பின் உமர்) தொழுது கொண்டிருந்த அந்த இடத்தையே மூடிவிட்டது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى حَيْثُ الْمَسْجِدُ الصَّغِيرُ الَّذِي دُونَ الْمَسْجِدِ الَّذِي بِشَرَفِ الرَّوْحَاءِ، وَقَدْ كَانَ عَبْدُ اللَّهِ يَعْلَمُ الْمَكَانَ الَّذِي كَانَ صَلَّى فِيهِ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ ثَمَّ عَنْ يَمِينِكَ حِينَ تَقُومُ فِي الْمَسْجِدِ تُصَلِّي، وَذَلِكَ الْمَسْجِدُ عَلَى حَافَةِ الطَّرِيقِ الْيُمْنَى، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ، بَيْنَهُ وَبَيْنَ الْمَسْجِدِ الأَكْبَرِ رَمْيَةٌ بِحَجَرٍ أَوْ نَحْوُ ذَلِكَ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘அர்ரவ்ஹா’வின் மேட்டுப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்குக் கீழே இருக்கும் சிறிய பள்ளிவாசல் உள்ள இடத்தில் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுத அந்த இடத்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிந்திருந்தார்கள். (அடையாளம் காட்டும்போது,) "நீங்கள் அந்தப் பள்ளிவாசலில் தொழுகைக்காக நிற்கும்போது உங்களுக்கு வலப்பக்கத்தில் அவ்விடம் அமையும்" என்று அவர்கள் கூறுவார்கள். அந்தப் பள்ளிவாசல், நீங்கள் மக்காவிற்குச் செல்லும்போது சாலையின் வலது ஓரத்தில் உள்ளது. அதற்கும் பெரிய பள்ளிவாசலுக்கும் இடையே ஒரு கல் எறியும் தூரமோ அல்லது அதைப் போன்றதோதான் (இடைவெளி) இருக்கும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَأَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُصَلِّي إِلَى الْعِرْقِ الَّذِي عِنْدَ مُنْصَرَفِ الرَّوْحَاءِ، وَذَلِكَ الْعِرْقُ انْتِهَاءُ طَرَفِهِ عَلَى حَافَةِ الطَّرِيقِ، دُونَ الْمَسْجِدِ الَّذِي بَيْنَهُ وَبَيْنَ الْمُنْصَرَفِ، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ‏.‏ وَقَدِ ابْتُنِيَ ثَمَّ مَسْجِدٌ، فَلَمْ يَكُنْ عَبْدُ اللَّهِ يُصَلِّي فِي ذَلِكَ الْمَسْجِدِ، كَانَ يَتْرُكُهُ عَنْ يَسَارِهِ وَوَرَاءَهُ، وَيُصَلِّي أَمَامَهُ إِلَى الْعِرْقِ نَفْسِهِ، وَكَانَ عَبْدُ اللَّهِ يَرُوحُ مِنَ الرَّوْحَاءِ، فَلاَ يُصَلِّي الظُّهْرَ حَتَّى يَأْتِيَ ذَلِكَ الْمَكَانَ فَيُصَلِّي فِيهِ الظُّهْرَ، وَإِذَا أَقْبَلَ مِنْ مَكَّةَ فَإِنْ مَرَّ بِهِ قَبْلَ الصُّبْحِ بِسَاعَةٍ أَوْ مِنْ آخِرِ السَّحَرِ عَرَّسَ حَتَّى يُصَلِّيَ بِهَا الصُّبْحَ‏.‏
மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள், அர்-ரவ்ஹா முடிவடையும் இடத்தில் உள்ள ‘இர்க்’ (சிறிய குன்று) அருகே தொழுபவர்களாக இருந்தார்கள். மக்காவை நோக்கிச் செல்லும்போது சாலை ஓரத்தில் அந்த ‘இர்க்’கின் முனை அமைந்துள்ளது. (ரவ்ஹா) முடியும் இடத்திற்கும் அந்த இடத்திற்கும் இடையே உள்ள பள்ளிவாசலுக்குக் குறுக்கே அது உள்ளது. அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அப்துல்லாஹ் (இப்னு உமர்) அந்தப் பள்ளிவாசலில் தொழமாட்டார்கள். அதைத் தமக்கு இடப்புறத்திலும், பின்புறத்திலும் விட்டுவிட்டு, அதற்கு முன்பாக அந்த ‘இர்க்’கை நோக்கியே தொழுவார்கள். அப்துல்லாஹ் (இப்னு உமர்) அர்-ரவ்ஹாவிலிருந்து புறப்படும்போது, அந்த இடத்தை அடையும் வரை லுஹர் தொழமாட்டார்கள்; அங்கு சென்றடைந்த பின்னரே அதில் லுஹர் தொழுவார்கள். மக்காவிலிருந்து திரும்பும்போது, சுபுஹு தொழுகை நேரத்திற்கு சற்று முன்பாகவோ அல்லது ஸஹர் நேரத்தின் இறுதியிலோ அந்த இடத்தைக் கடக்க நேரிட்டால், அங்கு (தங்கி) இளைப்பாறிவிட்டு, அங்கு சுபுஹு தொழுத பின்னரே செல்வார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَأَنَّ عَبْدَ اللَّهِ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ تَحْتَ سَرْحَةٍ ضَخْمَةٍ دُونَ الرُّوَيْثَةِ عَنْ يَمِينِ الطَّرِيقِ، وَوِجَاهَ الطَّرِيقِ فِي مَكَانٍ بَطْحٍ سَهْلٍ، حَتَّى يُفْضِيَ مِنْ أَكَمَةٍ دُوَيْنَ بَرِيدِ الرُّوَيْثَةِ بِمِيلَيْنِ، وَقَدِ انْكَسَرَ أَعْلاَهَا، فَانْثَنَى فِي جَوْفِهَا، وَهِيَ قَائِمَةٌ عَلَى سَاقٍ، وَفِي سَاقِهَا كُثُبٌ كَثِيرَةٌ‏.‏
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ‘ருவைதா’ எனும் இடத்திற்குச் சற்று முன்பாக, பாதையின் வலப்பக்கத்தில் இருந்த ஒரு பெரிய ‘சர்ஹா’ மரத்திற்குக் கீழே இறங்கித் தங்குவார்கள். அந்த இடம் சாலைக்கு எதிரே, மென்மையான பரந்த சமவெளியில் இருந்தது. ருவைதா தபால் நிலையத்திலிருந்து (பரீத்) சுமார் இரண்டு மைல்களுக்கு முன்புள்ள குன்றிலிருந்து வெளியேறும் வழியில் அது அமைந்திருந்தது. அந்த மரத்தின் உச்சி உடைந்து, அதன் உட்புறத்தில் வளைந்திருந்தது. அது (ஒரே) தண்டுடன் நின்றது; அதன் தண்டுப் பகுதியில் பல மணல் குன்றுகள் இருந்தன.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي طَرَفِ تَلْعَةٍ مِنْ وَرَاءِ الْعَرْجِ وَأَنْتَ ذَاهِبٌ إِلَى هَضْبَةٍ عِنْدَ ذَلِكَ الْمَسْجِدِ قَبْرَانِ أَوْ ثَلاَثَةٌ، عَلَى الْقُبُورِ رَضْمٌ مِنْ حِجَارَةٍ عَنْ يَمِينِ الطَّرِيقِ، عِنْدَ سَلِمَاتِ الطَّرِيقِ، بَيْنَ أُولَئِكَ السَّلِمَاتِ كَانَ عَبْدُ اللَّهِ يَرُوحُ مِنَ الْعَرْجِ بَعْدَ أَنْ تَمِيلَ الشَّمْسُ بِالْهَاجِرَةِ، فَيُصَلِّي الظُّهْرَ فِي ذَلِكَ الْمَسْجِدِ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் 'அல்அர்ஜ்' எனும் இடத்திற்குப் பின்புறமுள்ள ஓடையின் (தல்ஆ) ஓரத்தில் தொழுதார்கள். நீங்கள் (அல்அர்ஜிலிருந்து) ஒரு குன்றை (ஹத்பா) நோக்கிச் செல்லும்போது (இது தென்படும்). அந்தப் பள்ளிவாசலுக்கு அருகில் இரண்டு அல்லது மூன்று கப்றுகள் உள்ளன. பாதையின் வலப்பக்கம் அமைந்துள்ள அந்தக் கப்றுகள் மீது கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பாதையில் உள்ள கருவேல மரங்களுக்கு (சலமாத்) அருகில், அந்த மரங்களுக்கு இடையே அப்பள்ளிவாசல் அமைந்துள்ளது. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் நண்பகல் நேரத்தில் 'அல்அர்ஜ்' எனும் இடத்திலிருந்து புறப்பட்டுச் செல்பவராகவும், அந்தப் பள்ளிவாசலில் ளுஹ்ர் தொழுபவராகவும் இருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَزَلَ عِنْدَ سَرَحَاتٍ عَنْ يَسَارِ الطَّرِيقِ، فِي مَسِيلٍ دُونَ هَرْشَى، ذَلِكَ الْمَسِيلُ لاَصِقٌ بِكُرَاعِ هَرْشَى، بَيْنَهُ وَبَيْنَ الطَّرِيقِ قَرِيبٌ مِنْ غَلْوَةٍ، وَكَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي إِلَى سَرْحَةٍ، هِيَ أَقْرَبُ السَّرَحَاتِ إِلَى الطَّرِيقِ وَهْىَ أَطْوَلُهُنَّ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாதையின் இடது புறத்திலுள்ள ‘ஸரஹாத்’ எனும் (பெரிய) மரங்களுக்கு அருகே, ‘ஹர்ஷா’ (எனும் மலைப் பாதை)க்குக் கீழே உள்ள ஒரு ஓடையில் தங்கினார்கள். அந்த ஓடை ஹர்ஷா மலையின் அடிவாரத்தை ஒட்டியுள்ளது. அதற்கும் பாதைக்கும் இடையே ஏறத்தாழ ஒரு அம்பு எறியும் தூரமுள்ளது. அப்துல்லாஹ் (பின் உமர்) அவர்கள் (அங்குள்ள) ஒரு ‘ஸர்ஹா’ மரத்தை முன்னோக்கித் தொழுவார்கள். அம்மரம் பாதைக்கு மிக அருகில் உள்ள மரமாகவும், அம்மரங்களிலேயே மிகவும் உயரமானதாகவும் இருந்தது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ فِي الْمَسِيلِ الَّذِي فِي أَدْنَى مَرِّ الظَّهْرَانِ، قِبَلَ الْمَدِينَةِ حِينَ يَهْبِطُ مِنَ الصَّفْرَاوَاتِ يَنْزِلُ فِي بَطْنِ ذَلِكَ الْمَسِيلِ عَنْ يَسَارِ الطَّرِيقِ، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ، لَيْسَ بَيْنَ مَنْزِلِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ الطَّرِيقِ إِلاَّ رَمْيَةٌ بِحَجَرٍ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மதீனா திசையில் உள்ள) 'அஸ்ஸஃப்ராவாத்' கணவாயிலிருந்து இறங்கும்போது, 'மர்ருல் லஹ்ரான்' பள்ளத்தாக்கின் அருகில் உள்ள ஓடையில் தங்குவார்கள். நீங்கள் மக்கா நோக்கிச் செல்லும்போது பாதையின் இடது புறத்தில் இருக்கும் அந்த ஓடையின் மையப்பகுதியில் அவர்கள் இறங்குவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்கும் இடத்திற்கும், பாதைக்கும் இடையே ஒரு கல்லெறியும் தூரம் மட்டுமே இடைவெளியாக இருக்கும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَنْزِلُ بِذِي طُوًى وَيَبِيتُ حَتَّى يُصْبِحَ، يُصَلِّي الصُّبْحَ حِينَ يَقْدَمُ مَكَّةَ، وَمُصَلَّى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ذَلِكَ عَلَى أَكَمَةٍ غَلِيظَةٍ، لَيْسَ فِي الْمَسْجِدِ الَّذِي بُنِيَ ثَمَّ، وَلَكِنْ أَسْفَلَ مِنْ ذَلِكَ عَلَى أَكَمَةٍ غَلِيظَةٍ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வரும்போது 'தூ துவா' என்னுமிடத்தில் இறங்கி, இரவு தங்கி காலையானதும் அங்கு சுப்ஹுத் தொழுவார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுத அந்த இடம் ஒரு கரடுமுரடான மேல்திட்டையின் மீது இருந்தது. அது அங்கு கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலில் இல்லை; மாறாக, அதற்குக் கீழே உள்ள கரடுமுரடான ஒரு மேல்திட்டையின் மீதே அது இருந்தது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
وَأَنَّ عَبْدَ اللَّهِ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَقْبَلَ فُرْضَتَىِ الْجَبَلِ الَّذِي بَيْنَهُ وَبَيْنَ الْجَبَلِ الطَّوِيلِ نَحْوَ الْكَعْبَةِ، فَجَعَلَ الْمَسْجِدَ الَّذِي بُنِيَ ثَمَّ يَسَارَ الْمَسْجِدِ بِطَرَفِ الأَكَمَةِ، وَمُصَلَّى النَّبِيِّ صلى الله عليه وسلم أَسْفَلَ مِنْهُ عَلَى الأَكَمَةِ السَّوْدَاءِ، تَدَعُ مِنَ الأَكَمَةِ عَشَرَةَ أَذْرُعٍ أَوْ نَحْوَهَا، ثُمَّ تُصَلِّي مُسْتَقْبِلَ الْفُرْضَتَيْنِ مِنَ الْجَبَلِ الَّذِي بَيْنَكَ وَبَيْنَ الْكَعْبَةِ‏.‏
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கி, தமக்கும் அந்த உயரமான மலைக்கும் இடையே இருந்த மலையின் இரு கணவாய்களையும் முன்னோக்கினார்கள். அங்கு கட்டப்பட்டிருந்த பள்ளிவாசலை, குன்றின் ஓரத்தில் (தமது) இடது புறமாக ஆக்கிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுத இடம், அந்தக் கறுப்பு நிறக் குன்றின் மீது அதற்குக் கீழே இருந்தது. அந்தக் குன்றிலிருந்து பத்து முழங்கள் அல்லது அதையொட்டிய அளவை நீர் விட்டுவிட்டு, உமக்கும் கஅபாவிற்கும் இடையிலுள்ள மலையின் இரு கணவாய்களையும் முன்னோக்கித் தொழுவீராக!

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب سُتْرَةُ الإِمَامِ سُتْرَةُ مَنْ خَلْفَهُ
பாடம்: இமாமின் சுத்ரா அவருக்குப் பின்னால் இருப்பவர்களுக்கும் சுத்ராவாகும்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الاِحْتِلاَمَ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَىْ بَعْضِ الصَّفِّ، فَنَزَلْتُ وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، وَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَىَّ أَحَدٌ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு பெண் கழுதையின் மீது சவாரி செய்துகொண்டு வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் (தமக்கு முன்னால்) சுவர் ஏதுமில்லாத நிலையில் மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நான் வரிசையின் ஒரு பகுதிக்கு முன்னால் கடந்து சென்று, கீழே இறங்கி, அந்தப் பெண் கழுதையை மேய்வதற்காக விட்டுவிட்டு வரிசையில் நுழைந்தேன். (நான் இவ்வாறு செய்ததை) எவரும் என்னிடம் ஆட்சேபிக்கவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ يَوْمَ الْعِيدِ أَمَرَ بِالْحَرْبَةِ فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ، فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ وَرَاءَهُ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ، فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الأُمَرَاءُ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈத் பெருநாள் அன்று வெளியே வரும்போது, தங்களுக்கு முன்னால் ஒரு 'ஹர்பா'வை (சிறிய ஈட்டியை) நட்டுவைக்குமாறு கட்டளையிடுவார்கள். பிறகு அதை முன்னோக்கி அவர்கள் தொழுவார்கள்; மக்கள் அவர்களுக்குப் பின்னால் (அணிவகுத்து) நிற்பார்கள். பயணத்தின்போதும் அவர்கள் அவ்வாறே செய்வார்கள். இதனால்தான் ஆட்சியாளர்கள் இந்த நடைமுறையைக் கடைப்பிடித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، قَالَ سَمِعْتُ أَبِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمْ بِالْبَطْحَاءِ ـ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ ـ الظُّهْرَ رَكْعَتَيْنِ، وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، تَمُرُّ بَيْنَ يَدَيْهِ الْمَرْأَةُ وَالْحِمَارُ‏.‏
அவ்ன் பின் அபீ ஜுஹைஃபா அவர்கள் அறிவித்தார்கள்:

என் தந்தை (அபூ ஜுஹைஃபா (ரழி) அவர்கள்) கூற நான் கேட்டேன்: "நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இமாமத் செய்து, 'அல்-பத்ஹா' என்னுமிடத்தில் தங்களுக்கு முன்னால் ஒரு குட்டையான ஈட்டியை (சுத்ராவாக) நட்டு வைத்துக்கொண்டு லுஹர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகவும், அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகவும் தொழுதார்கள். அப்போது (அந்த ஈட்டிக்கு அப்பால்) பெண்கள் மற்றும் கழுதைகள் தங்களுக்கு முன்னால் கடந்து சென்றுகொண்டிருந்தன."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب قَدْرِ كَمْ يَنْبَغِي أَنْ يَكُونَ بَيْنَ الْمُصَلِّي وَالسُّتْرَةِ
தொழுபவருக்கும் சுத்ராவுக்கும் இடையில் இருக்க வேண்டிய இடைவெளியின் அளவு
حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ‏.‏
ஸஹ்ல் (பின் ஸஅத்) (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முஸல்லாவிற்கும் சுவருக்கும் இடையே இருந்த தூரம், ஓர் ஆடு கடந்துசெல்லும் அளவே இருந்தது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا الْمَكِّيُّ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ كَانَ جِدَارُ الْمَسْجِدِ عِنْدَ الْمِنْبَرِ مَا كَادَتِ الشَّاةُ تَجُوزُهَا‏.‏
ஸலமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
மஸ்ஜிதின் சுவருக்கும் மிம்பருக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கே இடைவெளி இருந்தது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ إِلَى الْحَرْبَةِ
ஹர்பா (ஒரு குட்டை ஈட்டி)வை நோக்கித் தொழுதல்
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُرْكَزُ لَهُ الْحَرْبَةُ فَيُصَلِّي إِلَيْهَا‏.‏
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு 'ஹர்பா' (சிறிய ஈட்டி) நடப்படும்; அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ إِلَى الْعَنَزَةِ
பாடம்: ‘அனஸா’ (ஈட்டி முனை கொண்ட குச்சி)வை நோக்கித் தொழுவது
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا عَوْنُ بْنُ أَبِي جُحَيْفَةَ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ، فَأُتِيَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ فَصَلَّى بِنَا الظُّهْرَ وَالْعَصْرَ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ، وَالْمَرْأَةُ وَالْحِمَارُ يَمُرُّونَ مِنْ وَرَائِهَا‏.‏
அபூ ஜுஹைஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகலில் எங்களிடம் வந்தார்கள். அவர்களின் உளூவுக்காக தண்ணீர் கொண்டுவரப்பட்டது; அவர்கள் உளூச் செய்தார்கள். பிறகு தங்களுக்கு முன்னால் ஒரு ஈட்டி நடப்பட்டிருக்க, எங்களுக்கு லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளை நடத்தினார்கள். ஒரு பெண்ணும் கழுதையும் அதற்கப்பால் கடந்து சென்றுகொண்டிருந்தன."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيعٍ، قَالَ حَدَّثَنَا شَاذَانُ، عَنْ شُعْبَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ لِحَاجَتِهِ تَبِعْتُهُ أَنَا وَغُلاَمٌ وَمَعَنَا عُكَّازَةٌ أَوْ عَصًا أَوْ عَنَزَةٌ وَمَعَنَا إِدَاوَةٌ، فَإِذَا فَرَغَ مِنْ حَاجَتِهِ نَاوَلْنَاهُ الإِدَاوَةَ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் இயற்கைக்கடனை நிறைவேற்றச் செல்லும்போதெல்லாம், நானும் இன்னொரு சிறுவனும் கைத்தடி அல்லது குச்சி அல்லது சிறிய ஈட்டியுடனும், ஒரு தண்ணீர் பாத்திரத்துடனும் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம். அவர்கள் இயற்கைக்கடனை நிறைவேற்றி முடித்ததும் நாங்கள் அந்தத் தண்ணீர் பாத்திரத்தை அவர்களிடம் கொடுப்போம்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب السُّتْرَةِ بِمَكَّةَ وَغَيْرِهَا
பாடம்: மக்காவிலும் மற்ற இடங்களிலும் சுத்ரா
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْهَاجِرَةِ فَصَلَّى بِالْبَطْحَاءِ الظُّهْرَ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ، وَنَصَبَ بَيْنَ يَدَيْهِ عَنَزَةً، وَتَوَضَّأَ، فَجَعَلَ النَّاسُ يَتَمَسَّحُونَ بِوَضُوئِهِ‏.‏
அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் வெளியே வந்து, அல்-பத்ஹாவில் லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். தமக்கு முன்னால் ஒரு சிறிய ஈட்டியை (தடுப்பாக) நட்டு வைத்தார்கள். அவர்கள் உளூச் செய்தார்கள்; மக்கள் அவர்கள் உளூச் செய்த (நீரைப் பெற்று), அதைக் கொண்டு தங்கள் உடல்களைத் தடவிக் கொள்ளலானார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ إِلَى الأُسْطُوَانَةِ
ஒரு தூணை நோக்கி அஸ்-ஸலாத் (தொழுகை) நிறைவேற்றுவது
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، قَالَ كُنْتُ آتِي مَعَ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ فَيُصَلِّي عِنْدَ الأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ الْمُصْحَفِ‏.‏ فَقُلْتُ يَا أَبَا مُسْلِمٍ أَرَاكَ تَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَ هَذِهِ الأُسْطُوَانَةِ‏.‏ قَالَ فَإِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَهَا‏.‏
யஸீத் பின் அபீ உபைது அவர்கள் கூறினார்கள்:
நான் ஸலமா பின் அல்-அக்வஃ (ரலி) அவர்களுடன் வருவது வழக்கம். அவர்கள் குர்ஆன் பிரதி (முஸ்ஹஃப்) வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலிருந்த தூணுக்குப் பக்கத்தில் தொழுவார்கள். நான், "ஓ அபூ முஸ்லிம் அவர்களே! நீங்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழ நாடுவதை நான் காண்கிறேனே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் அந்தத் தூணிற்கு அருகில் தொழ நாடுவதை நான் கண்டேன்" என்று பதிலளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، عَنْ أَنَسٍ، قَالَ لَقَدْ رَأَيْتُ كِبَارَ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَبْتَدِرُونَ السَّوَارِيَ عِنْدَ الْمَغْرِبِ‏.‏ وَزَادَ شُعْبَةُ عَنْ عَمْرٍو عَنْ أَنَسٍ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மஃக்ரிப் நேரத்தின்போது, நபி (ஸல்) அவர்கள் (தொழுகைக்காகப்) புறப்பட்டு வரும் வரை, நபி (ஸல்) அவர்களின் மூத்த தோழர்கள் தூண்களை நோக்கி விரைந்து செல்வதை நான் கண்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ بَيْنَ السَّوَارِي فِي غَيْرِ جَمَاعَةٍ
தூண்களுக்கு இடையில் தனிப்பட்ட முறையில் அஸ்-ஸலாத் (தொழுகைகள்) நிறைவேற்றுவது
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْبَيْتَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ وَبِلاَلٌ، فَأَطَالَ ثُمَّ خَرَجَ، وَكُنْتُ أَوَّلَ النَّاسِ دَخَلَ عَلَى أَثَرِهِ فَسَأَلْتُ بِلاَلاً أَيْنَ صَلَّى قَالَ بَيْنَ الْعَمُودَيْنِ الْمُقَدَّمَيْنِ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் உஸாமா பின் ஸைத் (ரழி), உஸ்மான் பின் தல்ஹா (ரழி) மற்றும் பிலால் (ரழி) ஆகியோருடன் கஅபாவிற்குள் நுழைந்து, அங்கு நீண்ட நேரம் தங்கியிருந்தார்கள்.

அவர்கள் வெளியே வந்தபோது, கஅபாவிற்குள் நுழைந்த முதல் ஆளாக நான் இருந்தேன்.

நான் பிலால் (ரழி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?" என்று கேட்டேன்.

பிலால் (ரழி) அவர்கள், "முன்பக்க இரண்டு தூண்களுக்கு இடையில்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ الْكَعْبَةَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَبِلاَلٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ فَأَغْلَقَهَا عَلَيْهِ وَمَكَثَ فِيهَا، فَسَأَلْتُ بِلاَلاً حِينَ خَرَجَ مَا صَنَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ، وَعَمُودًا عَنْ يَمِينِهِ، وَثَلاَثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ، وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ، ثُمَّ صَلَّى‏.‏ وَقَالَ لَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ وَقَالَ عَمُودَيْنِ عَنْ يَمِينِهِ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி) மற்றும் உஸ்மான் பின் தல்ஹா அல்-ஹஜபீ (ரலி) ஆகியோருடன் கஅபாவிற்குள் நுழைந்து, (கதவை) மூடிக்கொண்டு அதனுள் (சிறிது நேரம்) தங்கினார்கள். பிலால் (ரலி) அவர்கள் வெளியே வந்தபோது, ‘நபி (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்?’ என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அவர்கள் ஒரு தூணைத் தங்களின் இடதுபுறத்திலும், ஒரு தூணைத் தங்களின் வலதுபுறத்திலும், மூன்று தூண்களைத் தங்களுக்குப் பின்னாலும் ஆக்கிக்கொண்டார்கள். அந்நாட்களில் கஅபா ஆறு தூண்களைக் கொண்டிருந்தது. பிறகு (அங்கே) தொழுதார்கள்’ என்று பதிலளித்தார்கள்.”

இஸ்மாயீல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “மாலிக் (ரஹ்) அவர்கள் (இதை அறிவிக்கையில்), ‘அவரது வலது பக்கத்தில் இரண்டு தூண்கள் (இருந்தன)’ என்று கூறினார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، كَانَ إِذَا دَخَلَ الْكَعْبَةَ مَشَى قِبَلَ وَجْهِهِ حِينَ يَدْخُلُ، وَجَعَلَ الْبَابَ قِبَلَ ظَهْرِهِ، فَمَشَى حَتَّى يَكُونَ بَيْنَهُ وَبَيْنَ الْجِدَارِ الَّذِي قِبَلَ وَجْهِهِ قَرِيبًا مِنْ ثَلاَثَةِ أَذْرُعٍ، صَلَّى يَتَوَخَّى الْمَكَانَ الَّذِي أَخْبَرَهُ بِهِ بِلاَلٌ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِيهِ‏.‏ قَالَ وَلَيْسَ عَلَى أَحَدِنَا بَأْسٌ إِنْ صَلَّى فِي أَىِّ نَوَاحِي الْبَيْتِ شَاءَ‏.‏
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கஅபாவிற்குள் நுழையும்போது, நுழைந்தவுடன் தம் முகத்திற்கு நேராக நடந்து செல்வார்கள்; வாசலைத் தங்களுக்குப் பின்னால் ஆக்கிக்கொள்வார்கள். தமக்கும் தமக்கு எதிரே உள்ள சுவருக்குமிடையே ஏறத்தாழ மூன்று முழம் இருக்கும் வரை நடந்து சென்று, நபி (ஸல்) அவர்கள் தொழுததாக பிலால் (ரலி) அவர்கள் தமக்குத் தெரிவித்த அந்த இடத்தைத் தேடி அங்கே தொழுவார்கள். மேலும், "கஅபாவின் எப்பகுதியில் விரும்பினாலும் நம்மில் ஒருவர் தொழுவதில் குற்றமில்லை" என்றும் அவர்கள் கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ إِلَى الرَّاحِلَةِ وَالْبَعِيرِ وَالشَّجَرِ وَالرَّحْلِ
பாடம்: ரஹிலா (வாகன ஒட்டகம்), ஒட்டகம், மரம் மற்றும் சேணம் ஆகியவற்றை நோக்கித் தொழுவது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُعَرِّضُ رَاحِلَتَهُ فَيُصَلِّي إِلَيْهَا‏.‏ قُلْتُ أَفَرَأَيْتَ إِذَا هَبَّتِ الرِّكَابُ‏.‏ قَالَ كَانَ يَأْخُذُ هَذَا الرَّحْلَ فَيُعَدِّلُهُ فَيُصَلِّي إِلَى آخِرَتِهِ ـ أَوْ قَالَ مُؤَخَّرِهِ ـ وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنه ـ يَفْعَلُهُ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ அவர்கள் அறிவித்தார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தைக் குறுக்காக (அமரச் செய்து), அதனை முன்னோக்கித் தொழுவார்கள்.” நான் கேட்டேன், “அந்த ஒட்டகம் (நகர) எத்தனித்தால் என்ன செய்வது?” அதற்கு அவர் கூறினார், “நபி (ஸல்) அவர்கள் அந்தச் சேணத்தை எடுத்து, அதைச் சரிசெய்து, அதன் பின்பகுதியை முன்னோக்கித் தொழுவார்கள்.” இப்னு உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்து வந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ إِلَى السَّرِيرِ
பாடம்: படுக்கையை நோக்கித் தொழுதல்
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَعَدَلْتُمُونَا بِالْكَلْبِ وَالْحِمَارِ لَقَدْ رَأَيْتُنِي مُضْطَجِعَةً عَلَى السَّرِيرِ، فَيَجِيءُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَتَوَسَّطُ السَّرِيرَ فَيُصَلِّي، فَأَكْرَهُ أَنْ أُسَنِّحَهُ فَأَنْسَلُّ مِنْ قِبَلِ رِجْلَىِ السَّرِيرِ حَتَّى أَنْسَلَّ مِنْ لِحَافِي‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"நீங்கள் எங்களை (பெண்களை) நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக ஆக்குகிறீர்களா? நான் (கட்டிலில்) படுத்திருக்கும்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து அக்கட்டிலின் நடுப்பகுதியை நோக்கியவாறு தொழுவார்கள். (அச்சமயம்) அவர்களுக்கு முன்னால் நான் (குறுக்காக) இருப்பதை வெறுத்து, கட்டிலின் கால்மாட்டு வழியாக மெதுவாக நழுவி, என் போர்வையிலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவேன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب يَرُدُّ الْمُصَلِّي مَنْ مَرَّ بَيْنَ يَدَيْهِ
பாடம்: தொழுபவர் தமக்கு முன்னால் கடந்து செல்பவரைத் தடுப்பது
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا يُونُسُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي صَالِحٍ، أَنَّ أَبَا سَعِيدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَحَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ قَالَ حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ الْعَدَوِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو صَالِحٍ السَّمَّانُ قَالَ رَأَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فِي يَوْمِ جُمُعَةٍ يُصَلِّي إِلَى شَىْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ، فَأَرَادَ شَابٌّ مِنْ بَنِي أَبِي مُعَيْطٍ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَدَفَعَ أَبُو سَعِيدٍ فِي صَدْرِهِ، فَنَظَرَ الشَّابُّ فَلَمْ يَجِدْ مَسَاغًا إِلاَّ بَيْنَ يَدَيْهِ، فَعَادَ لِيَجْتَازَ فَدَفَعَهُ أَبُو سَعِيدٍ أَشَدَّ مِنَ الأُولَى، فَنَالَ مِنْ أَبِي سَعِيدٍ، ثُمَّ دَخَلَ عَلَى مَرْوَانَ فَشَكَا إِلَيْهِ مَا لَقِيَ مِنْ أَبِي سَعِيدٍ، وَدَخَلَ أَبُو سَعِيدٍ خَلْفَهُ عَلَى مَرْوَانَ فَقَالَ مَا لَكَ وَلاِبْنِ أَخِيكَ يَا أَبَا سَعِيدٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَىْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ، فَأَرَادَ أَحَدٌ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ فَلْيَدْفَعْهُ، فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ ‏ ‏‏.‏
அபூ ஸாலிஹ் அஸ்ஸம்மான் அவர்கள் கூறியதாவது:

நான் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களை ஒரு வெள்ளிக்கிழமை அன்று, மக்கள் நடமாட்டத்திலிருந்து மறைக்கும் எதனையாவது (தடுப்பை) முன்னோக்கித் தொழுது கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது பனூ அபீ முஐத் குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் அவருக்கு முன்பாகக் கடந்து செல்ல விரும்பினார். அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் கையை வைத்துத் தடுத்தார்கள். அந்த இளைஞர் (செல்ல வேறு வழியுண்டா எனப்) பார்த்தார்; அவருக்கு முன்பாகத் தவிர வேறு செல்வழி எதுவும் அவருக்குத் தென்படவில்லை. எனவே மீண்டும் (அவர் முன்பே) கடக்க முயன்றார். அபூ ஸயீத் (ரலி) அவர்கள் முதல் முறையை விடக் கடுமையாக அவரைத் தடுத்தார்கள்.

அந்த இளைஞர் அபூ ஸயீத் (ரலி) அவர்களைக் குறைகூறிவிட்டு, மர்வான் என்பவரிடம் சென்று, அபூ ஸயீத் (ரலி) அவர்களால் தமக்கு நேர்ந்ததை முறையிட்டார். அபூ ஸயீத் (ரலி) அவர்களும் அந்த இளைஞரைப் பின்தொடர்ந்து மர்வானிடம் சென்றார்கள். மர்வான், "அபூ ஸயீத் அவர்களே! உமக்கும் உம் சகோதரரின் மகனுக்கும் இடையில் என்ன நடந்தது?" என்று கேட்டார்.

அதற்கு அபூ ஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்ல நான் கேட்டுள்ளேன்:
"உங்களில் ஒருவர் தம்மையும் மக்களையும் பிரிக்கும் ஒரு தடுப்பை (ஸுத்ராவை) முன்னோக்கித் தொழுது கொண்டிருக்கும்போது, அவருக்கு முன்னால் யாரேனும் கடக்க முயன்றால் அவரைத் தடுக்கட்டும். அவர் (விலக) மறுத்தால் அவருடன் சண்டையிடட்டும்! ஏனெனில், நிச்சயமாக அவன் ஒரு ஷைத்தான்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِثْمِ الْمَارِّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي
சலாத் தொழுது கொண்டிருக்கும் ஒருவரின் முன்னால் கடந்து செல்பவரின் பாவம்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ، أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ مَاذَا سَمِعَ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْمَارِّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي فَقَالَ أَبُو جُهَيْمٍ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ ‏ ‏‏.‏ قَالَ أَبُو النَّضْرِ لاَ أَدْرِي أَقَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً‏.‏
புஸ்ர் பின் ஸஈத் அவர்கள் கூறியதாவது:
தொழுதுகொண்டிருக்கும் ஒருவருக்குக் குறுக்கே செல்பவர் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றார்கள் என்று அபூ ஜுஹைம் (ரழி) அவர்களிடம் கேட்டு வருமாறு ஸைத் பின் காலித் (ரழி) அவர்கள் என்னை அனுப்பினார்கள்.

அதற்கு அபூ ஜுஹைம் (ரழி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தொழுதுகொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர், (அதனால்) தம்மீதுள்ள (பாவச்) சுமையை அறிவாராயின், அவருக்கு முன்னால் குறுக்கே செல்வதைவிட நாற்பது (காலம்) அங்கேயே நின்று கொண்டிருப்பது அவருக்குச் சிறந்ததாகும்."

(அறிவிப்பாளர்) அபூ அந்-நள்ர் அவர்கள் கூறினார்கள்: "நாற்பது நாட்களா, மாதங்களா அல்லது ஆண்டுகளா என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب اسْتِقْبَالِ الرَّجُلِ صَاحِبَهُ أَوْ غَيْرَهُ فِي صَلاَتِهِ وَهُوَ يُصَلِّي
பாடம்: ஒரு மனிதர் தொழுகையில் தனது தோழரையோ அல்லது மற்றவரையோ முன்னோக்குவது
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ ـ يَعْنِي ابْنَ صُبَيْحٍ ـ عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهُ ذُكِرَ عِنْدَهَا مَا يَقْطَعُ الصَّلاَةَ فَقَالُوا يَقْطَعُهَا الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ‏.‏ قَالَتْ قَدْ جَعَلْتُمُونَا كِلاَبًا، لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ يُصَلِّي، وَإِنِّي لَبَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ، وَأَنَا مُضْطَجِعَةٌ عَلَى السَّرِيرِ، فَتَكُونُ لِي الْحَاجَةُ، فَأَكْرَهُ أَنْ أَسْتَقْبِلَهُ فَأَنْسَلُّ انْسِلاَلاً‏.‏ وَعَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ نَحْوَهُ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

என் முன்னிலையில் தொழுகையை முறிக்கும் விஷயங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அப்போது அவர்கள், “நாய், கழுதை மற்றும் பெண் ஆகியவை தொழுகையை முறித்துவிடும்” என்று கூறினார்கள். அதற்கு நான், “நீங்கள் எங்களை நாய்களாக்கிவிட்டீர்களே! நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருப்பார்கள்; நான் அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையில் கட்டிலின் மீது படுத்துக்கொண்டிருப்பேன். எனக்கு ஏதேனும் தேவை ஏற்படும்போது, அவர்களுக்கு நேராக இருப்பதை நான் வெறுத்து, மெதுவாக நழுவிச் சென்றுவிடுவேன்” என்று கூறினேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الصَّلاَةِ خَلْفَ النَّائِمِ
பாடம்: தூங்கும் நபருக்குப் பின்னால் தொழுவது
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي وَأَنَا رَاقِدَةٌ مُعْتَرِضَةٌ عَلَى فِرَاشِهِ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأَوْتَرْتُ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களின் படுக்கையில் குறுக்காக உறங்கிக் கொண்டிருக்கும் போது, நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். அவர்கள் வித்ர் தொழ நாடினால் என்னை எழுப்புவார்கள்; நானும் வித்ர் தொழுவேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب التَّطَوُّعِ خَلْفَ الْمَرْأَةِ
பெண்ணுக்குப் பின்னால் நவாஃபில் (கடமையல்லாத தொழுகைகள்) தொழுவது
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرِجْلاَىَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَقَبَضْتُ رِجْلَىَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا‏.‏ قَالَتْ وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ‏.‏
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியான `ஆயிஷா (ரழி)` அவர்கள் அறிவித்தார்கள்: "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் உறங்கிக் கொண்டிருப்பேன்; என் கால்கள் அவர்களின் கிப்லாவின் திசையில் இருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது என்னைத் தொடுவார்கள்; நான் என் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் நின்றதும், நான் அவற்றை நீட்டிக் கொள்வேன்." `ஆயிஷா (ரழி)` அவர்கள் மேலும் கூறினார்கள்: "அந்த நாட்களில் வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب مَنْ قَالَ لاَ يَقْطَعُ الصَّلاَةَ شَىْءٌ
பாடம்: “எதுவும் தொழுகையை முறிக்காது” என்று கூறுபவர்.
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ،‏.‏ قَالَ الأَعْمَشُ وَحَدَّثَنِي مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، ذُكِرَ عِنْدَهَا مَا يَقْطَعُ الصَّلاَةَ الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ فَقَالَتْ شَبَّهْتُمُونَا بِالْحُمُرِ وَالْكِلاَبِ، وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي، وَإِنِّي عَلَى السَّرِيرِ ـ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ ـ مُضْطَجِعَةً فَتَبْدُو لِي الْحَاجَةُ، فَأَكْرَهُ أَنْ أَجْلِسَ فَأُوذِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَنْسَلُّ مِنْ عِنْدِ رِجْلَيْهِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
தொழுகையை முறிக்கும் காரியங்கள் எனக்கு முன்னால் குறிப்பிடப்பட்டன (அவை): ஒரு நாய், ஒரு கழுதை மற்றும் ஒரு பெண். நான் கூறினேன், “நீங்கள் எங்களை (பெண்களை) கழுதைகளோடும் நாய்களோடும் ஒப்பிட்டுள்ளீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, நான் என்னுடைய படுக்கையில் அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையில் படுத்திருந்தேன். எனக்கு ஏதேனும் தேவை ஏற்படும்போதெல்லாம், நான் எழுந்து அமர்ந்து நபி (ஸல்) அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதை விரும்பவில்லை. ஆகவே, நான் அவர்களுடைய கால்களின் ஓரமாக நழுவிச் சென்று விடுவேன்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، أَنَّهُ سَأَلَ عَمَّهُ عَنِ الصَّلاَةِ، يَقْطَعُهَا شَىْءٌ فَقَالَ لاَ يَقْطَعُهَا شَىْءٌ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُومُ فَيُصَلِّي مِنَ اللَّيْلِ، وَإِنِّي لَمُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

(நபியவர்களின் மனைவி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து தொழுவார்கள். அப்போது நான் அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையில் அவர்களுடைய குடும்பப் படுக்கையில் குறுக்காகப் படுத்திருப்பேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا حَمَلَ جَارِيَةً صَغِيرَةً عَلَى عُنُقِهِ فِي الصَّلاَةِ
தொழுகையின் போது ஒரு சிறு பெண் குழந்தை தோளில் சுமக்கப்பட்டால்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَهْوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلأَبِي الْعَاصِ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ، فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ حَمَلَهَا‏.‏
அபூ கதாதா அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகளான ஸைனப் (ரழி) அவர்களின் மகளும், அபுல் ஆஸ் இப்னு ரபீஆ இப்னு அப்த் ஷம்ஸ் அவர்களின் மகளுமான உமாமாவைச் சுமந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது அவளைக் கீழே வைத்துவிடுவார்கள்; அவர்கள் நிலைக்கு வரும்போது அவளைத் தூக்கிக் கொள்வார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب إِذَا صَلَّى إِلَى فِرَاشٍ فِيهِ حَائِضٌ
மாதவிடாய் பெண் படுத்திருக்கும் படுக்கையை நோக்கி தொழுகை நிறைவேற்றுவது
حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ، قَالَ أَخْبَرَتْنِي خَالَتِي، مَيْمُونَةُ بِنْتُ الْحَارِثِ قَالَتْ كَانَ فِرَاشِي حِيَالَ مُصَلَّى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرُبَّمَا وَقَعَ ثَوْبُهُ عَلَىَّ وَأَنَا عَلَى فِرَاشِي‏.‏
மைமூனா பின்த் அல்-ஹாரித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"என் படுக்கை நபி (ஸல்) அவர்களின் தொழும் இடத்திற்கு (முஸல்லா) நேராக இருந்தது. நான் என் படுக்கையில் இருக்கும்போது சில சமயங்களில் அவர்களுடைய ஆடை என் மீது விழுவதுண்டு."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، سُلَيْمَانُ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ مَيْمُونَةَ، تَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي وَأَنَا إِلَى جَنْبِهِ نَائِمَةٌ، فَإِذَا سَجَدَ أَصَابَنِي ثَوْبُهُ، وَأَنَا حَائِضٌ‏.‏ وَزَادَ مُسَدَّدٌ عَنْ خَالِدٍ قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، وَأَنَا حَائِضٌ‏.‏
மைமூனா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்; அப்போது நான் அவர்களுக்குப் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது அவர்களுடைய ஆடை என்மீது படும்; அப்போது நான் மாதவிடாய் நிலையில் இருப்பேன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب هَلْ يَغْمِزُ الرَّجُلُ امْرَأَتَهُ عِنْدَ السُّجُودِ لِكَىْ يَسْجُدَ
பாடம்: ஸஜ்தாச் செய்வதற்காக, ஸஜ்தாவின்போது கணவன் தன் மனைவியைத் தொட்டுச் சைகை செய்யலாமா?
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنَا الْقَاسِمُ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ بِئْسَمَا عَدَلْتُمُونَا بِالْكَلْبِ وَالْحِمَارِ، لَقَدْ رَأَيْتُنِي وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي، وَأَنَا مُضْطَجِعَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ، فَإِذَا أَرَادَ أَنْ يَسْجُدَ غَمَزَ رِجْلَىَّ فَقَبَضْتُهُمَا‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"நீங்கள் எங்களை (பெண்களை) நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக ஆக்கியிருப்பது மிகக் கெட்டது! நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது நான் அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையில் படுத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஸஜ்தா செய்ய நாடியபோது, என் கால்களைத் தொடுவார்கள்; உடனே நான் அவற்றை மடக்கிக்கொள்வேன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
باب الْمَرْأَةِ تَطْرَحُ عَنِ الْمُصَلِّي، شَيْئًا مِنَ الأَذَى
தொழுகையில் (ஸலாத்தில்) இருக்கும் ஒரு நபரிடமிருந்து தொந்தரவு அல்லது அவமரியாதை தரும் பொருட்களை ஒரு பெண்ணால் அகற்ற முடியும்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ السُّرْمَارِيُّ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي عِنْدَ الْكَعْبَةِ، وَجَمْعُ قُرَيْشٍ فِي مَجَالِسِهِمْ إِذْ قَالَ قَائِلٌ مِنْهُمْ أَلاَ تَنْظُرُونَ إِلَى هَذَا الْمُرَائِي أَيُّكُمْ يَقُومُ إِلَى جَزُورِ آلِ فُلاَنٍ، فَيَعْمِدُ إِلَى فَرْثِهَا وَدَمِهَا وَسَلاَهَا فَيَجِيءُ بِهِ، ثُمَّ يُمْهِلُهُ حَتَّى إِذَا سَجَدَ وَضَعَهُ بَيْنَ كَتِفَيْهِ فَانْبَعَثَ أَشْقَاهُمْ، فَلَمَّا سَجَدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَضَعَهُ بَيْنَ كَتِفَيْهِ، وَثَبَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَاجِدًا، فَضَحِكُوا حَتَّى مَالَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ مِنَ الضَّحِكِ، فَانْطَلَقَ مُنْطَلِقٌ إِلَى فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ وَهْىَ جُوَيْرِيَةٌ، فَأَقْبَلَتْ تَسْعَى وَثَبَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَاجِدًا حَتَّى أَلْقَتْهُ عَنْهُ، وَأَقْبَلَتْ عَلَيْهِمْ تَسُبُّهُمْ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الصَّلاَةَ قَالَ ‏"‏ اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ ـ ثُمَّ سَمَّى ـ اللَّهُمَّ عَلَيْكَ بِعَمْرِو بْنِ هِشَامٍ، وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ، وَعُمَارَةَ بْنِ الْوَلِيدِ ‏"‏‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ فَوَاللَّهِ لَقَدْ رَأَيْتُهُمْ صَرْعَى يَوْمَ بَدْرٍ، ثُمَّ سُحِبُوا إِلَى الْقَلِيبِ قَلِيبِ بَدْرٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَأُتْبِعَ أَصْحَابُ الْقَلِيبِ لَعْنَةً ‏"‏‏.‏
அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற்கு அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். குறைஷிகள் தங்கள் சபைகளில் (அமர்ந்து) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர், 'இந்த முகஸ்துதிக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா? உங்களில் யார் சென்று, இன்னார் குடும்பத்தினர் அறுத்த ஒட்டகத்தின் நஞ்சுக்கொடி (சவ்வு), இரத்தம் மற்றும் குடலைக் கொண்டுவந்து, பின்னர் இவர் சஜ்தா செய்யும் வரை தாமதித்து, (சஜ்தா செய்ததும்) அதை இவரது இரு தோள்களுக்கு மத்தியில் வைப்பார்?' என்று கேட்டான்.

அவர்களிலேயே மாபெரும் துர்பாக்கியசாலி (அதற்கு) எழுந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தா செய்தபோது, அதை அவர்களின் இரு தோள்களுக்கு மத்தியில் அவன் வைத்தான். நபி (ஸல்) அவர்கள் சஜ்தாவிலேயே நிலைத்திருந்தார்கள். அவர்கள் சிரித்தார்கள்; (சிரிப்பின் மிகுதியால்) ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தனர்.

(இதைக்கண்ட) ஒருவர் ஃபாத்திமா (அலை) அவர்களிடம் சென்றார் - அப்போது ஃபாத்திமா ஒரு சிறுமியாக இருந்தார். அவர் ஓடி வந்தார். நபி (ஸல்) அவர்கள் சஜ்தாவிலேயே நிலைத்திருந்தார்கள். (ஃபாத்திமா) அதை அவர்களிடமிருந்து அகற்றினார். பிறகு அவர்களை (குறைஷிகளை) நோக்கித் திட்டினார்.

ரசூல் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும், **'அல்லாஹும்ம அலைக்க பிகுரைஷ், அல்லாஹும்ம அலைக்க பிகுரைஷ், அல்லாஹும்ம அலைக்க பிகுரைஷ்'** (யா அல்லாஹ்! குறைஷிகளைப் பிடிப்பது உன் பொறுப்பாகும்) என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு பெயர்களைக் குறிப்பிட்டார்கள்: **'அல்லாஹும்ம அலைக்க பிஅம்ரிப்னி ஹிஷாம், வ உத்பதப்னி ரபீஆ, வ ஷைபதப்னி ரபீஆ, வல்வலீதிப்னி உத்பா, வ உமைய்யதப்னி கலஃப், வ உக்பதப்னி அபீ முஐத், வ உமாரதப்னி வலீத்'**."

அப்துல்லாஹ் (ரழி) கூறினார்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! பத்ரு நாளில் இவர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். பிறகு அவர்கள் பத்ருடைய 'கலீப்' எனும் கிணற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'கிணற்றுவாசிகள் சாபத்தால் பின்தொடரப்பட்டவர்கள்' என்று கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح